...

"வாழ்க வளமுடன்"

07 செப்டம்பர், 2015

கருணை கிழங்கின் மகத்துவங்கள்!





குண்டு உடலை குறைக்க விரும்புவர்கள் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.


உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

பெண்களுக்கு வெள்ளைப்பாடு நோய்க்கு சிறந்த மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
மூல நோய்க்கு இந்தக் கிழங்கு தான் சிறந்த மருந்தாக உதவுகிறது.


***
fb
***



"வாழ்க வளமுடன்"

கிரீன் டீயை எப்போது எப்ப‍டி அருந்தினால் நல்ல‍து -ஆபத்து?






இன்று க்ரீன் டீயை பலரும் விரும்பி குடித்து வருகிறார்கள். ஆனால் இந்த கிரீன் டீயை

எப்போது எப்ப‍டி அருந்தினால் ஆபத்து? எப்போது எப்ப‍டி அருந்தினால் நல்ல‍து என்பதை எவரும் அறிந்த்தாக தெரியவில்லை.

நாள் ஒன்றுக்கு மூன்று கப் க்ரீன் டீ-க்கு மேல் குடிக்க‍க் கூடாது. இந்த கிரீன் டீயை வெறும்வயிற்றில் அருந்தினா ல், அசிடிட்டியை உண்டாகும் ஆபத்து இருப்ப‍தை நீங்கள் நினைவில் கொள்ள‍ வேண்டும்.

தினமும் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் அதா வது சேட்டிங் டைம் என்பார்களே அப்போது அருந்தலாம். . க்ரீன் டீயில் பால், சர்க்கரை கலந்து சாப்பிடக் கூடாது, அது டீயின் தன்மையை மாற்றிவிடும். வைட்ட மின்-சி, தாது உப்புகள் இருக்கும் இந்தக் டீயை கொதிக்க வைத்தால் அச்சத்துகள் வெளியேறும் என்பதால், கொதிக்க வைத்த தண்ணீரில் தேயிலைத் தூளையோ, பையையோ(டீ பேக்)போட்டு, மூடிவைத்து , சாறு இறங்கியதும் பருகலாம். வைட்டமின்-சி வேண் டுகிறவர்கள், அதனுடன் சிறிதளவு எலுமிச்சைசேர்த்து ம் பருகலாம்.

மொத்தத்தில், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளி கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர் களுக்கான நல்ல பரிந்துரை, க்ரீன் டீ. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட க்கூடிய தாகத்தை குறைக்கும் வல்லமை படைத்தது!’’


***

– கே.அபிநயா.
***


"வாழ்க வளமுடன்"
      

அத்திப்பழம்


Mohandass Samuel's photo.
 
அத்திப்பழம் சீக்கிரம் அழுகிப்போகும் தன்மை உடையதால், பெரும்பாலும் காய்ந்த வடிவத்திலேயே கிடைக்கிறது. இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பைட்டோ நியூட்ரியன்ட்ட...ுகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், தாதுக்களும் அதிகமாக உள்ளன.

 குறிப்பாக உலர் அத்திப்பழத்தில் இன்னும் நிறைய நன்மைகள் நிறைந்திருப்பதோடு, இன்னும் சுவையானதாக இருக்கும். எனவே இந்த பழத்தை அதிகம் உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். காய்ந்த அத்திப்பழங்கள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இதை உண்ணுவதால், வயிற்றுப் பிரச்சனைகள் சீராகிறது. ஒவ்வொரு முன்று கிராம் பழத்திலும் 5 கிராம் நார்சத்து இருப்பது இதன் சிறப்பம்சம்.


 நார்ச்சத்து அதிகமிருக்கும் பழங்களையும், உணவுகளையும் உண்ணுதல் எடை குறைப்புக்கு மிகவும் உதவும். ஆகவே நார்ச்சத்து அதிகமாக உள்ள அத்திப் பழம் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகமுள்ள அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் போது உடலின் உள்ளே உள்ள கொழுப்பை வெளியேற்றுகிறது. தினமும் அத்திப்பழம் சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும். அத்திப்பழத்தில் ஃபீனால் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.


 இவை இயற்கையாகவே இதயத்திற்கு வலுசேர்த்து, இதய நோய்களை தவிர்க்க உதவும் சத்துக்களாகும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தி, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி புற்றுநோயை, குறிப்பாக குடல் புற்றுநோயை தடுக்கிறது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மார்பக புற்றுநோயை தடுக்கிறது.


 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கண்டிப்பாக அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். அத்திப்பழ மரத்தின் இலைகளில் கூட நார்ச்சத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் எதிர்ப்பு சத்துக்கள் நிறைந்த அத்திப்பழ இலைகளை உட்கொள்வதால், இன்சுலின் சுரப்பதை சீராக வைத்துக் கொள்ளலாம்.


அத்திப் பழங்களில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. எனவே அத்திப் பழங்கள் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும். ஜீரணத்திற்கு அத்திப்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. தினமும் அவற்றை உட்கொள்வது சிறப்பான ஜீரணத்திற்கு உதவி செய்து மூலநோயில் இருந்து காக்கிறது. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களோ, சிறுநீரகக் கற்கள் பிரச்சனையோ கொண்டவர்கள் அத்திப்பழத்தை தவிர்ப்பது நல்லது


***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

பாகற்காய் - எப்படி பயன் படுத்தினால் சிறப்பான மருந்தாக மாற்ற முடியும்..?









நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்தான பாகற்காயின் மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முறையும் பார்க்கலாம்.


 பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும்.


பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும்.


இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இலைச் சாற்றில் காசிக் கட்டியை (கத்தைக் காம்பு) உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து விடும்.


ஒரு பிடி கொடுப்பாகற்காயின் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.


பாகற்காயின் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும். அதே இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.


நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை தொடர்ந்து ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.


சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றுடன் சமபங்கு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை கட்டுப்படுத்தலாம்.


நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.


உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.


1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.


2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.


3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.


4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.


5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.


6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.


7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.


8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.


9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.


10. பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. பாகற்காயின் இலையைக் கொதிக்க வைத்து சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.


11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.


12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.


13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.


14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

***
fb
***


"வாழ்க வளமுடன்"

ஆரோக்கியமான அறுசுவை உணவு

Mohandass Samuel's photo.


அறுசுவை உணவை ருசிக்க மட்டும் சமைத்தவர்கள் அல்ல நமது முன்னோர்கள். அதை மருந்தாக உட்கொண்டவர்கள்.



 1 ‪#‎சப்பாத்தி‬ / ‪#‎ரொட்டி‬

 வட இந்திய மக்களின் தினசரி உணவு சப்பாத...்தி, ரொட்டி. எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடப்படும் இந்த உணவு உடல் வலிமைக்கு மிகவும் சிறந்த உணவு. சக்தியை அதிகரிக்க சப்பாத்தி உதவுகிறது. உடல் எடை குறைக்க ஓர் சிறந்த உணவு சப்பாத்தி / ரொட்டி ஆகும்.


 

 2 ‪#‎வெள்ளை‬ ‪#‎சாதம்‬

 சப்பாத்தி எப்படி வட இந்தியர்களுக்கோ, அப்படி தான் சாதம் தென்னிந்தியர்களுக்கு. இது ஒரு பிரதான உணவு. சுட சுட சாப்பிட்டாலும் சரி, நீரூற்றி மறுநாள் நீராகாரமாக சாப்பிட்டாலும் சரி, நிறைய உடல் சக்தியை தரவல்லது சாதம். இதை விட கைக்குத்தல் அரிசி மேலும் ஆரோக்கியமானது.



3 ‪#‎கூட்டு‬ ‪#‎உணவுகள்

பல காய்கறிகளை சேர்த்து சமைக்கும் இந்திய கூட்டு உணவுகள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இவை, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை ஒரே உணவின் மூலமாக தரக்கூடியவை.



4 ‪#‎தயிர்‬

 தயிரில் இருக்கும் கால்சியம் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை சீராக்க உதவுகிறது. அதனால் தான் உணவின் கடைசியில் கட்டாயம் தயிர் சேர்க்கும்படி நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.



5 ‪#‎பயிறு‬ ‪#‎வகை

உணவுகள் பயிறு வகை உணவுகள் பெண்களுக்கு மிகவும் முக்கியமான உணவு. தினசரி பயிறு வகை உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணலாம். பயிறு உணவுகளில் போலேட், வைட்டமின் பி1 மற்றும் மினரல்ஸ் நிறைய இருக்கின்றன.


 6 ‪#‎வரமிளகாய்‬

 சிவப்பு மிளகாய் அல்லது வரமிளகாய். இதில் வைட்டமின் ஏ, பி, சி போன்றவை அதிகம் இருக்கின்றன. வரமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடையை விரைவில் குறைக்க முடியுமாம். அதாவது கொழுப்பு அதிகமாக சேராமலும், உடலில் இருக்கும் கொழுப்பையும் கரைக்க முடியும்.



 7 ‪#‎பன்னீர்‬

 பன்னீரில் கொழுப்பு இருக்கிறது என பலரும் சாப்பிட மறுப்பதுண்டு. இது உண்மை எனிலும் கூட, இந்திய உணவுகளில் ருசியும், ஆரோக்கியமும் அதிகம் இருக்கும் உணவும் பன்னீர் தான். இதில், கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. இது உடல் நலனையும் அதிகரிக்கவும், எலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமலும் இருக்கவும் உதவுகிறது.


 8 ‪#‎இட்லி‬

 உலகின் சிறந்த ஆரோக்கியமான உணவென்று பெயர்பெற்றது இட்லி. கொழுப்புச்சத்து இல்லாத உணவு. இதில் புரதம் இருக்கிறது. செரிமான கோளாறு ஏற்படாமல் இருக்க உதவும் உணவு இட்லி.


 9 ‪#‎கறிவேப்பிலை‬

 சாம்பார் முதல் ரசம் வரை அனைத்து உணவிலும் நாம் சேர்க்கும் உணவுப் பொருள் கறிவேப்பிலை. இதிலுள்ள இரும்புச்சத்து உடல்நலனை அதிகரிக்க, நோய் எதிர்ப்பை வலுவாக்க உதவுகிறது.

***
tu fd
***


"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "