...

"வாழ்க வளமுடன்"

11 ஏப்ரல், 2010

உரை மருந்து ( குழந்தைகளுக்கு )

குழந்தை பிறந்த 10 - 15 நாட்களிலிருந்து 5 - 7 வயது வரைதொடர்ந்து உரை மருந்து கொடுக்கலாம்.

கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய்,மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள்.

*

நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போதுநெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும்

*

அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்)எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.உரை மருந்து தயார்.


***


கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை.

*

அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு,ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டுஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி2௧5 தடவை உரைத்து வந்த விழுதைத்தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும்.

*

வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு,துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜ்வரம், வாந்தி -இஞ்சிச்சாறு,தேன் என்று மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

*

கடுக்காய் :
*
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும்.புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும்.அஜீரண பேதியைத் தடுக்கும்.குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.

*

சுக்கு :
*
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.

*

சித்தரத்தை :
*
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜ்வரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்திரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.

*

ஜாதிக்காய் :
*
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.

*

மாசிக்காய் :
*
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

*

வசம்பு :
*
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.

*

கார மருந்து என இதற்குப் பெயர். அதனால் உரைத்த மருந்தை சிறுகச்சிறுகச் புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10 - 15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம்.

***

நன்றி தினமணிக்கதிர்.


***

"வாழ்க வளமுடன் "

மாசிக்காய்

‘மேஜிக் நட்’ என்று இதற்கு மறுபெயர். ஜாதிக்காய் பருமன் மாசிக்காய் இருக்கும். ஒரு சிறு துவாரம் இதில் இருப்பதுண்டு. துவாரம் விழுந்தக் காய் மருத்துவ குணம் அதிகம் பெற்றது என்று கூறுவர் வைத்தியர்.

நீல நிறத்தில் சாம்பல் நிறம் (கிரே கலர்) கலந்து கொட்டை காட்சியளிக்கும். உடைத்து உட்பகுதியைப் பார்த்தால் வெண்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை நுண் தூளாக்குவது எளிது. எல்லா மளிகைக் கடைகளிலும் கிடைக்கும்.


*

கிராமப்பகுதி மக்கள் வாய்ப்புண்ணிற்கு இதை வாயில் அடக்கி வைத்துக் கொள்வர். மேல்நாட்டு மருத்துவத்திலும் இதை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

*

நல்ல துவர்ப்புச் சுவையுடையது. இதனால் வாய், தொண்டை, உதடு, பல்லீறு, பெண், ஆண்களின் மெல்லிய சதைகளில் ஏற்படும் புண், மூலிகை விஷங்களால் ஏற்படும் நச்சுத்தன்மையைக் கண்டிக்கும்.


*

சிறுநீரை எளிதாக வெளியேறும் படி செய்யும். மாசிக்காய் தூளை நீர் அல்லது பாலில் குழைத்து தலை மயிரில் தடவி ஊற வைத்துக் குளிக்க மயிர் கருமை நிறமடையும்.

*

மாசிக்காய்த் தூளை வினீகருடன் கலந்து தேமல், படைகளுக்குப் பூசி ஊறவைத்துக் குளிக்க நிவாரணம் கிட்டும். மாசிக்காயை எரித்து எடுத்த சாம்பலை இரத்தக் கசிவுள்ள புண்களில் தூவக் கசிவு குறையும்.

*

உடலில் தூவி குளிக்க வியர்வை நாற்றம் மட்டுப்படும். பிறப்புறுப்பைக் கழுவும் கஷாயமாக வெள்ளைப்படுதல் சிரமத்தைப் பெண்களுக்குக் குறைக்கும். பல்வலி மருந்துகளில் மாசிக்காயும் ஒன்று.


***

மருத்துவ குணங்கள்:

மாசிக்காயானது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஓர் அற்புத மான மருந்தாகும். இக்காய் மற்ற மரங்களின் காயைப் போல் பூவிலிருந்து காயாகாது. இந்த மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிடும் போது கிளையிலிருந்து பால் வடிந்து அது உறைந்து திரண்டு கெட்டிப்படும்.
*
இதுவே மாசிக்காயாகும். பொதுவாக மாசிக் காய்களைச் சேகரிக்கும்போது அதிலுள்ள பூச்சிகள் வெளியே வருவதற்கு முன்பே சேகரிப்பதுதான் சிறந்த மருத்துவப்பயன் உடையதாக இருக்கும்.
*
மாசிக்காயைப் பொடி செய்து வெந்நீரில் போட்டு பத்து நிமிடம் சென்ற பின்னர் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.மாசிக்காயை பொடி செய்து அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டுவர, பெண்களுக்கு மாத விடாயின்போது ஏற்படும். அதிக ரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும்.
*
மாசிக் காயைப் பொடித்து 50 கிராம் எடுத்து 800 மி.லி. நீருடன் கலந்து பத்து நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்தி வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலும், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலி யவைகளும் குணமாகும். பொதுவாக குழந்தைகளுக்கு உரைத்துக் கொடுக்கப்படும் உரை மருந்து வகைகளில் மாசிக்காயும் ஒன்றாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பச்சை பச்சையாக பேதியாகும்.
*
இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப் பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வர பேதி நிற்கும். மயில் துத்தம், பூநீறு உப்பு, சுண்ணாம்பு நீர், அபினி, நாபி, எட்டி முதலியவற்றை அளவுக்கு மீறி உட்கொண்டதால் உண்டான நஞ்சுக்கு சிறந்த முறிவாக மாசிக்காய் பயன்படுகிறது.
*
மாசிக்காயிலிருந்து ஒருவகை மஞ்சளும், வெண்மையும் கலந்த நிறம் உடைய தாய், துவர்ப்புச்சுவை கொண்டதுமான உப்பை எடுக்கிறார்கள். இது சிறந்த துவர்ப்பியாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது. நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிட்டு 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்திவர பலன் கிடைக்கும்.
*
தொண்டைவலி, டான்ஸிலை ட்டிஸ் எனப்படும் தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன் 3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து வாய் கொப்பளித்து வர குணம் தெரியும். மாசிக்காயையோ, மாசிக்காய் மரப்பட்டையையோ நீரில் ஊற வைத்தால் ஊறல் குடிநீராகவும் அல்லது கஷாய மிட்டும் வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
*
30 முதல் 60 மி.லி. வரை அதையே உள்ளுக்கும் அருந்தி வரலாம். இதன் மரப்பட்டையை சாதாரண கழிச்சல், ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், மாதவிலக்கின்போது அதிக ரத்தம் வெளியாதல், மேக நோய், ஈறு களிலிருந்து ரத்தம் வடிதல், சீதக்கழிச்சல் முதலியவைக ளுக்கும் கொடுக்கலாம்.
*
குழந்தை மருத்துவத்தில் மாசிக்காய் பல காலமாக மருந்தாக பயன்படுத்தப் பட்டு வருவதை நமது பாட்டிமார்களை கேட்டுப் பார்த்தால் கதை கதையாக சொல்வார்கள். சித்த மருத்துவத்திலும் மிக முக்கியமான பங்கினை பெறுவ தை அனுபவமிக்க சித்த மருத்துவர்களின் குறிப்புகளை படிக்கும் போது நன்கு உணரலாம்.
*
சித்த மருத்துவத்தில் மாசிக்காய் குடிநீர் ஒரு சிறந்த மருந்தாகும். மகளிர் மருத்துவத்தில் இந்த மாசிக்காய் மருந்து பெரும் நன் மையினை தரக்கூடியதை நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர். விஞ்ஞானம் முன்னேறாத அந்த காலக் கட்டத்தில் மாசிக்காய்தான் பெண்களுக்கு வரும் வெளியே சொல்லக்கூடாத நோய்களுக்கு மருந்தாக இருந்து வந்தது.

*
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
***
நன்றி தமிழ்வாணன்.காம்.
நன்றி சிவாஸ்டார்.
*
புகைப்படத்துக்கும் நன்றி.
***
"வாழ்க வளமுடன் "

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "