...

"வாழ்க வளமுடன்"

20 நவம்பர், 2010

வேண்டாத பழக்கங்களால் விபரீதம்!



விரல் சூப்புதல், காதை குடைதல், பற்களை குத்துதல், மூக்கை துழாவுதல் என்று பலருக்கு இந்தப் பழக்கங்கள் தொட்டில் பழக்கமாய் தொடரும். குழந்தையாக இருக்கும் போது இந்த பழக்கம் இருந்தால், `அதெல்லாம் சரியாகி விடும்’ என்று ஆரம்பத்தில் மெத்தனமாக விட்டுவிடுவோம்.

ஆனால், இது போன்ற பழக்கங்கள், உடலில் பல பிரச்சினைகளுக்கு வழி வகுத்து விடும்.





தொடக்கத்தில், காதை குடைந்தால் ஏதோ ஒன்று சரியாகிவிடும் என்ற மனோபாவத்தில் அதை தொடருவார்கள். இதனால் காதுக்குள் புண், செவிக்குள் இருக்கும் ஜவ்வு கிழிந்து காது கேட்காத சூழ்நிலை ஏற்படும். மூக்கை துழாவுதலும் இப்படித்தான். மூக்கினுள் இருக்கும் ரத்த ஓட்டங்கள் நிறைந்த பகுதி பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் காற்றில் இருக்கும் தூசுகளை அகற்ற உதவும் ரோமங்கள் உதிர்ந்து, அசுத்தம் கலந்த காற்று ரையீரலுக்குச் செல்ல வழி வகுக்கும்.



சில குழந்தைகள் மூக்கை அடிக்கடி உறிஞ்சிக் கொண்டே இருப்பார்கள். இதனால் மூளையில் உள்ள சிறு நரம்புகள் பாதிக்கப்படலாம். இதனால் குழந்தைப் பருவத்திலேயே மூக்கை சிந்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். விரல் சூப்பும் பழக்கம் தொடர்ந்தால் வாயினால் சுவாசிப்பார்கள். இதனால் பற்கள் மேல் நோக்கி வளரும். குழந்தைகள் பாதுகாப்பின்மை காரணமாக, மனதளவில் ஒரு துணைக்காக விரலை சூப்புகின்றனர்.


***
thanks இணையம்
***



"வாழ்க வளமுடன்"

காது குடையும் பழக்கம் ஆபத்தானதா?




நம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம், காது குடைவது. சிலர் காது குடைவதில் அலாதி சுகம் காண்கின்றனர். இந்த பழக்கம் நல்லதா? அல்லது இதனால் ஏதேனும் கேடு ஏற்படுமா? ஐம்புலன்களில் ஒன்று செவிப்புலன்.



காது மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாகும். காதின் உள்ளே செல்லும் குழாயில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் மெழுகு போன்ற திரவம் தான் காதிற்குள் தூசி, அழுக்கு செல்லாமல் பாதுகாக்கிறது. காதின் நடுவில் மெல்லிய ஜவ்வு போன்ற தடுப்பு உள்ளது. இது செவிப்பறையாகும்.



இது தான் காற்றில் வரும் ஒலி அதிர்வுகளை வாங்கி உள்ளே அனுப்புகிறது. சிலர் காதிற்குள் ஹேர்ப்பின், தீப்பெட்டிக் குச்சி போன்றவற்றால் குடைவார்கள். இது செவிப்பறையில் பட்டால், ஜவ்வில் ஓட்டை விழுந்து கிழிந்து விட வாய்ப்புள்ளது.



எனவே இத்தகைய பழக்கம் காதுக்கு ஆபத்தாக முடியும். காது ஒரு மெல்லிய உறுப்பு. இதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.


***
thanks இணையம்
***




"வாழ்க வளமுடன்"

சர்க்கரை நோயில் பயன்படும் மூலிகைகள் !

"பொன் குறண்டி" எனவும் வழங்கப்படும் இம் மூலிகை சமீபகாலமாக சர்க்கரை நோய்க்கான ஆய்வுகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகிறது.



அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இம் மூலிகை ரத்த சர்க்கரை அளவை 29 சதவீதம் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நாம் உண்ணும் உணவு குளுகோஸாக மாறும் வேகத்தைக் குறைப்பதாகவும் அதனால் நோயர்களுக்கு இன்சுலின் தேவை குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

*

சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய் மற்றும் அதன் பிற அறிகுறிகளான உடல்வலி, தசைவலி ஆகியவற்றுக்காக "கடலழிஞ்சில்" நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆவாரை:-

ஆவாரையின் இலை, பூ, பட்டை, வேர் என ஐந்து உறுப்புகளுமே நீரிழிவில் பயன்படுகின்றன. அதிக அளவில், அடிக்கடி சிறுநீர் போவதைக் குறைப்பதால், காவிரி நீரையும், கடல் நீரையும் வற்றச் செய்யும் எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுகளில் ஆவாரை சர்க்கரை, அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதால் இதயத்தை பாதுகாப்பதாகவும், ஹீமோ குளோபின் அளவு, தரம் ஆகியவற்றை அதிகரிப்பதாகவும் நிரூபித்துள்ளனர்.

***

சிறுகுறிஞ்சான்:-

"சர்க்கரைக் கொல்லி"யாகிய சிறுகுறிஞ்சான் கணையத்துக்கு மறுவாழ்வு அளிக்கிறது. ஆம் - இது கணையத்தில் இன்சுலின் சுரப்பிக்கும் பீட்டா செல்களைப் புதுப்பித்து அவற்றின் எண்ணிக்கையை இரு மடங்காக்குவதாக தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பு அதிகமாவதாலும், குடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைப்பதாலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான H.D.L. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. மாரடைப்புக்குக் காரணமாகும் ரத்தக் குழாய் கொழுப்புப் படிவைத் தடுக்கிறது.

***

சீந்தில்:-

நலவாழ்வை நீட்டிக்கும் காய கற்ப மூலிகை, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்திக்குக் காரணமான "இம்யூனோகுளோபுலின் - ஜி" - ன் அளவை, அதிகப்படுத்துகிறது. கொலஸ்டிராலைக் குறைக்கிறது. சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் எடைக் குறைவைத் தடுக்கிறது.

***

பாகல்:-

பாகல் இலை, காய், விதைகளில் "தாவர இன்சுலின்" என்ற புரதச் சத்து உள்ளது. சோதனைகளில், இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயர்களுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைப்பதாகவும் தெரிகிறது.

***

வெந்தயம்:-

இதில் காணப்படும் "ட்ரைகோனெல்லின்" அதிகரித்த ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, கொலஸ்டிராலையும் 25% அளவு குறைக்கிறது. தீமைதரும் கொழுப்பாகிய LdL, VLDL ஆகியவற்றைக் குறைத்து, நன்மை தரும் HDL- ஐ அதிகரிக்கிறது. எனவே மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது. குடலில் சர்க்கரை ஊறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்கிறது.

***

வில்வம்:-

சிவனுக்குரிய மூலிகையாகக் கருதப்படும் வில்வம் அனைத்து நோய்களையும் தடுக்கும் மாமருந்தாக நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. வில்வ இலையிலிருந்து கிடைக்கும் பாஸ்பேட் சர்க்கரை நோயைக் குறைப்பதோடு, நோயர்களின் திசுக்களுக்கு அதிக பிராணவாயு கிடைக்கச் செய்வதன் மூலம் சோர்வடையாமல் காக்கிறது. சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் இதய ரத்தக் குழாய் அடைப்பைத் தடுப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

***

நாவல்:-

நாவலின் பட்டை, பழம், விதை ஆகிய மூன்றும் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நாவல் விதை மற்றும் விதையின் மேல்தோல் ஆகியவை இன்சுலின் அளவை அதிகரிப்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மேலும் சர்க்கரை நோயில் உண்டாகும் சிறுநீரக, கல்லீரல் மாற்றங்களை நாவல் விதை சரி செய்கிறது.

***

மஞ்சள்:-

தன்னிடம் இல்லாத மருத்துவக் குணமே இல்லை என்னும் அளவுக்கு, எண்ணற்ற சோதனைகள் மூலம் நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதாகவும், கிருமி நாசினியாகவும், உடல் தேற்றியாகவும், ஜலதோஷம், காய்ச்சல் முதல் புற்று நோய் வரை அனைத்து நோய்களிலும் பயனளிப்பதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள மஞ்சள் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக நெல்லிவற்றலுடன் சேர்ந்து வழங்கும்போது சர்க்கரை நோயில் அதிக பலன் அளிப்பதுடன், நீண்ட கால பின் விளைவுகளைத் தடுத்து சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்தக் கொழுப்பு ஆகியவற்றையும் தடுக்கிறது.

மேலும் வேம்பு, வேங்கை, கொன்றை, மருது, கறிவேப்பிலை, கடுகு ரோகிணி ஆகிய மூலிகைகளும் சர்க்கரை நோயில் பலன் அளிப்பதை தற்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இத்தகைய சிறப்புகள் உடைய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வில்வம் மாத்திரை, சீந்தில் மாத்திரை, கடலழிஞ்சில் மாத்திரை, நாவல்மாத்திரை, நீரிழிவு சூரணம், ஆவாரை, குடிநீர், திரிபலா கற்பம், சிறுகுறிஞ்சான் சூரணம் போன்ற பல மருந்துகளில் நோயர்களுக்கு ஏற்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்து வரலாம். மூலிகை மருந்துகள், உணவுச் சீரமைப்பு, தக்க உடற்பயிற்சி, ஆகிய மும்மூர்த்திகள் உதவியுடன் சர்க்கரை நோயை வெல்ல நிச்சயம் முடியும்.



***
thanks தமிழ்
***




"வாழ்க வளமுடன்"

தமிழ் மூலிகை அருஞ்சொற்பொருள் !

தமிழ் மூலிகை அருஞ்சொற்பொருள்/TAMIL HERB GLOSSARY




*A - வரிசை


ABELMOSCHUS ESCULENTUS - வெண்டை


ABELMOSCHUS MOSCHATUS - கந்துகஸ்தூரி


ABIES WEEBBIANA - தாலிசப்பத்திரி


ABRUS FRUITILOCULUS - வெண்குந்திரி, விடதரி


ABRUS PRECATORIUS - குண்றிமணி


ABULITUM INDICUM - துத்தி


ACACIA ARABICA - கருவெல்லம்


ACACIA CONCUNA - சீக்காய், சீயக்காய்


ACACIA PENNATA - காட்டுசிகை, இந்து


ACACIA POLYACANTHAPOLYCANTHA - சிலையுஞ்சில்


ACALYPHA INDICA - குப்பைமேனி


ACALYPHA PANICULATA - குப்பைமேனி


ACHYRANTHES ASPERA - நாயுருவி


ACORUS CALAMUS - வசம்பு


ADATHODA TRANQUEBARIENSIS - தவசு முருங்கை


ADENAN THERA PAVONIA - மஞ்சாடி, ஆனைக்குன்றுமணி


AEGLE MARMELOS - வில்வம்


AGAVE AMERICANA - ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை


AGAVE SISALANA - கதலை


AILANTHUS EXCELSA - பெருமரம், நாரு


ALANGIUM LAMARCKII - அழிஞ்சில்


ALANGIUM SALVIIFOLIUM - அழிஞ்சில்


ALBIZIA LEBBECK - வாகை


ALBIZIA ODORATISSIMA - கருவாகை


ALFALFA - குதிரைமசால்


ALOE BARBADENSIS - சீமை மூசம்பரம்


ALOE LITTORACIS - மூசம்பரம்


ALOE VERA - சோத்துக் கற்றாழை


ALONITUM HETEROPHYLLUM - அதிவிடயம்


ALTERNANTHERA SESSILIS - பொன்னாங்கண்ணி


ALPINIA GALANGA - அரத்தை


AMARANTHUS SPINOSUS - முள்ளுக்கீரை


AMARANTHUS TRICOLOUR - அரைக்கீரை


AMMNIA VESICATORIUS - நீர்மேல் நெருப்பு


AMOMUM SUBLATUM - பெரிய ஏலக்கி


AMORPHOPHALLUS SYLVATICUS - காட்டுச்சேனை


ANACORDIUM OCCIDENTALE - முந்திரி


ANETHUM SOWA - சதகுப்பை


ANIMATED OATS - (காட்டுக்) காடைக்கண்ணி


ANISOCHILUS CARNOSUM - கர்ப்பூரவள்ளி


ANISOMELES MALABARICA - பேய்மிரட்டி


ANNONA SQUAMOSA - சீத்தா


APONOGETON NATANS - கொட்டிக்கிழங்கு


AQUILARIA AGALLOCHA - அகில், காகதுண்டம்


ARISTIDA SETACEA - துடைப்பம்


ARISTOLOCHIA BRACTIATA - ஆடுதீண்டாப்பாளை


ARUM LYRATUM - கொண்டை ராகிசு


ARUM OOLOCASIA - சேம்பு


ASPARAGUS RACEMOSUS - தண்ணீர்விட்டான் கிழங்கு


ASYSTASIS GANGETICA - நறுஞ்சுவைக் கீரை


ATALANTIA MONOPHYLLA - காட்டு எலுமிச்சை


AVENA SATIVA - (சீமைக்) காடைக்கண்ணி


AVENA STERILLIS - (காட்டுக்) காடைக்கண்ணி


AUDIOGRAPHUS PANICULATA - நிலவேம்பு


AZADIRACTA INDICA - வெம்பு


AZIMA TETRACANTHA - முட்சங்கான்

***

*B - வரிசை*


BAMBUSA ARUNDINACEA - மூங்கிலிரிசி


BARINGTONIA ACUTANGULA - செங்கதப்பு


BARINGTONIA RACEMOSA - சமுத்திரப் பழம்


BARLENIA PRIONTIS - செம்முல்லி, காட்டுகானா


BARLERIA CRISTATA - செம்முள்ளி


BASELLA ALBA - பசளைக் கீரை


BASELLA RUBRA - கொடிப்பசளைக் கீரை


BAUHINIA TOMENTOSA - இறுவாட்சி


BERBERIS ARISTATA - மரமஞ்சள்


BIXA ORELLANA - வருகமஞ்சள், மந்திரவஞ்சி


BLUMEA LACERA - காட்டுமுள்ளங்கி


BOERHAVIA DIFFUSA - மூக்குரட்டை


BORASSUS FLABELLIFER - பனை


BOVERHEAVIA REPEN - மூக்கரத்தைக் கீரை


BROYONIA LACINIOSA - ஐவிரலி


BUCHANANIA AXILLARIS - புளிமா


BULLETWOOD - மகிலா மரம்


BUREA FRONDOSA - பலசு

***

*C - வரிசை*


CAESALINA PULCHERRIMA - மயில்கொன்றை


CALABA FRUITCOSA - விழுந்தி


CALAMUS ROTANG - பிறப்பான் கிழங்கு


CALCULUS BOVIS - கோரோசனை


CALOTROPIS GIGANTEA - எருக்கன், அருக்கன், ஆள்மிரட்டி


CAMMELINA BENGHALENSIS - கானாம்வாழை


CANNABIS SATIVA - கஞ்சா, ஆநந்தமூலம்


CANTHIUM PARVIFOLIUM - சிறுக்காரை


CAPPARIS BREVISPINA - ஆதந்தை


CAPPARIS HORRIDA - ஆதொண்டை


CAPPARIS ZEYLANICA - சுடுத்தொரட்டி


CAPSIUM ANNUM - மிளகாய்


CAPSIUM MINIMUM ROCH. - சீமை மிளகாய்


CARALLUMMA UMBELLATA - கல்முளையான்


CARDIOSPERMUM HALICACABUM - முடக்கற்றான்


CARMONA RETUSA - குரங்கு வெற்றிலை, குருவிச்சிப்பழம்


CARRISSA CARANDAS - களா, கிளா


CARRISSA SPINARUM - சிறுக்களா


CARUM ROXBURGHIANUM - ஓமம்


CASSIA ALATA - சீமையகத்தி


CASSIA ANCEOLATA - நிலாவாரை


CASSIA AUGUSTIFOLIA - நாட்டு நிலவாகை


CASSIA AURICULATA - ஆவாரை


CASSIA FISTULA - சிறுக்கொன்றை


CASSIA TORA - தகரை


CATHARANTHUS ROSEUS - நித்தியகல்யாணி


CENTELLA ASIATICA - வல்லாரை


CEPPARIS ZEYLANICA - ஆதொண்டை


CHESTNUT - கஷ்கொட்டை


CINNAMOMIUM MACROCARPUM - பெரிய லவங்கப்பட்டை


CISSUS QUADRANGULARIS - பிரண்டை


CISSUS REPENS - செம்பிரண்டை


CITRON - கடார நாரத்தை


CITRUS ACIDA - எளிமிச்சை


CITRUS MEDICA - கடார நாரத்தை


CITRULLUS COLOCYNTHIS - ஆற்றுத்தும்மட்டி


CLEMONE GYRANDRA - நிலவேளை


CLEMONE VISCOVA - வேளை


CLEOME VISCOZA - நாய்க்கடுகு


CLERODENDRON INERME - சங்கம் குப்பி


CLERODENDRON PHLOMOIDES - தழுதாரை


CLERODENDRON SERRATUM - கண்டுபரங்கி


CLERODENDRON PHLOMOIDES - தழுதாரை


CLIMBING YLANG YLANG - கருமுகை


CLOVER - சீமை மசால்


CLITORIA TERTATEA - கண்ணிக்கொடி


COCCINIA GRANDIS - கோவை


COCCULUS HIRSUTUS - காட்டுக்கொடி


COCUS NUCIFERA - தென்னை


COLEUS AROMATICOS - கற்பூரவல்லி


COLEUS FORSKOHLII - மருந்துகூர்க்கன்


COLOCASIA HIMALENSIS - சாமைக்கிழங்கு


COPORIS ZEYLANICA - ஆதண்டம்


CORDIA DICHOTOMA - நறுவிலி, மூக்குச்சளிப் பழம்


COROLLO CARTUS - ஆகாயக் கருடன்


CORYPHA - குடைப்பனை


CUCUMIS MELO UTILISSIMUS - முள்வெள்ளரி


CUCUMIS MELO VAR. MELO - சுக்கங்காய்


CURCULIGO ORCHIODES - குறத்தி நிலப்பனை


CURCUMA AROMATICA - கஸ்தூரி மஞ்சள், கத்தூரி மஞ்சள்


CURCUMA LONGA - மஞ்சள்


CUSCUTTA - கஷ்கொட்டை


CYCLOMEN EUROPEUM - சீமை மீன்கொல்லி


CYMBOPOGON CITRATUS - எலுமிச்சைப்புல்


CYNODON DACTYLON - அருகம்புல்


CYPERUS ROTUNDUS - கோரைக்கிழங்கு

***

*D - வரிசை*


DANDELION - சீமைக் காட்டுமுள்ளங்கி


DATURA METEL - ஊமத்தை


DECALEPIS HAMILTONII - மாகாளிக்கிழங்கு


DELONIX ELATA - வாத நாராயணன்


DESMODIUM GANGETICUM - மூவிலை


DIASCOREA PURPUREA - செவ்வள்ளிக் கொடி


DITA BARK - எழிலைப்படை


DIOSPYROS EBENUM - கருங்காலி


DIOSPYROS EMBRYOPYERIS - தும்பிலிக்காய்


DIOSPYROS FERREA - இறும்பிலி


DIOSPYROS MELANOXYLON - தும்பிலி


DIOSPYROS PEREGRINA - பனிச்சை


DOG MUSTARD - வேளை

***

*E - வரிசை*


ECLIPTA PROSTRATA ROXB. - கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசாலை


ELUESIN CORORANA GAERTH - கேழ்வரகு


EMBELIA RIBES BURN. - வாய்விலங்கம்


ERYTHRINA INDICA - கல்யாண முருங்கை


EUGENIA JAMBOLANA - நாவல்கொட்டை


EULOPPIA CAMPESTRIS WALL - சாலமிசிரி


EUPHORBIA HETROPHYLLA - பால்பெருக்கி


EUPHORBIA HIRTA - சித்திரப்பாலாடை


EUPHORBIA LIGULARIA ROXB. - இலைக்கள்ளி


EUPHORBIA NIVULLIA LAM. - மண்செவிக்கள்ளி


EUPHORBIA THYMEFOLIA - அம்மன் பச்சரிசி


EUPHORBIA TIRUCALLI LINN. - கள்ளி


EVOLVOLUS ALSINODES - விஷ்னுக்கிரந்தி


EXECALIA AGALLICHA LINN. - தில்லி

***

*F - வரிசை *


FEVER NUT - சலிச்சிகை


FICUS BENGHALENSIS - ஆலம்


FICUS ELASTICA - சீமையால்


FICUS RACEMOSA - அத்தி


FLACOURTIA INDICA - சொத்தைக்களா


FLUGGEA VIROSA - வெட்புலா

***

*G - வரிசை *


GALENIA ASIATICA - உகாய்


GARDENIA RESINIFERA - கும்பிலி


GARNICIA CAMBOGIA - கொறுக்காய்ப்புளி


GARNICIA GUMMI-GUTTA - பனம்புளி


GARNICIA INDICA - முருகல்


GARNICIA SPINATA - கோகொட்டை


GARUGA PINNATA - ஆறுநெல்லி, கருவெம்பு


GAUZUMA ULMIFOLIA - தேங்காய்


GELORIUM ANGUSTIFLORA - வரித்தோல்


GENDURASA VULGARIS - கருநொச்சி


GINSENG - குணசிங்கி


GISEKIA PHARNACEOIDES - நாவமல்லிக் கீரை, மணலக் கீரை


GLOREOSA SUPERBA - கலப்பைக்கிழங்கு, கண்வலிக்கிழங்கு


GLYCOSMIS MAURITANIA - கொஞ்சி


GOTU KOTA - வல்லாரை


GOVERNOR'S PLUM - சொத்தைக்களா


GUM BENZOINE - தூபவர்க்கம்


GYMNEMA SYLVESTRE - அமுதுபுஷ்பம், சிறுகுறிஞ்சான்

***

*H - வரிசை *


HIBISCUS - செம்பருத்தி


HALARRHENA ANTIDYSENTERIA - குளப்பாலை, குடசப்பாலை


HEDYCHIUM SPICATUM - பூலங்கிழங்கு


HELICLERIS ISORA - வலம்பிரி


HELIOTROPIUM INDICUM - தேள் கொடுக்கி


HELIOTROPIUM KERALENSE - தேள் கட்டை


HEMIDESMUS INDICUS - நன்னாரி


HIBISCUS SURATTENSIS - புளிச்சைக்கீரை, காட்டுப்புளிச்சை


HIBISCUS VITIFOLIUS - மணித்துத்தி


HOLOSTEMMA ADA-KODIEN - பலைக்கீரை


HYBANTHUS ENNEASPERMUS - ஓரிதழ் தாமரை


HYDNOCARPUS ALPINA - ஆத்து சங்கலை


HYGROPHYLIA AURICULATA - நீர்முள்ளி

***

*I - வரிசை *


IMPALIENS BALASAMINE - காசித்துப்பை


INTERMEDLAR TREE - மகிலா மரம்


IODINIUM SUFFRUTICOSIUM - ஓரிதழ்த் தாமரை, சூரியகாந்தி


IPOMEA CARNEA - நெய்வேலி காட்டாமணக்கு


IPOMEA QUAMOCLIT - மயிர் மாணிக்கம்


IPOMEA SEPIARIA - தாலிக்கீரை

***

*J - வரிசை *


JANAKIA ARAYALPATHRA - அமிர்தபலா


JATROPHA GOSSIPIPHOLIA - முள்கத்திரி

***

*K - வரிசை *


KAEMPFERIA GALANGA - கச்சோளம்


KINGIODENDRON PINNATUM - மடையன் சாம்பிராணி


KIRAGANELIA LINEATA - நீர்ப்பாளை


KIRAGANELIA RETICULATA - புல்லந்தி


KNEMA ATTENUATA - சோரப் பத்திரி, சூரியப் பத்திரி

***

*L - வரிசை *


LAMPRACHAENIUM MICROCEPHALUM - பிரம்மதந்தி


LANTANA CAMARA - உன்னிச்செடி


LAWSONIA INERMIS - மருதாணி


LEMONGRASS - எலுமிச்சைப்புல்


LEPISANTHES TETRAPHYLLA - குகமதி


LEUCAS ASPERA - தும்பை


LIPPIA NODIFLORA - பொட்டுத்தலை


LONG LEAVED BARLERIA - கோல்மிதி


LOVE VINE - கஷ்கொட்டை


LUFFA ACUTANGULA - பெருபீர்க்கம்

***

*M - வரிசை*


MADHUCA LONGIFOLIA - நாட்டிலுப்பை


MADHUCA NERIIFOLIA - ஆத்து இலுப்பை


MALABAR GLORY LILY - கலப்பைக் கிழங்கு


MANILKARA HEXANDRA - கணுப்பலா, காட்டுப்பலா


MARSILIA - நீராரை


MARSILIA QUADRIFIDA - ஆரை


MEMECYLON TINCTORIUM - காயா


MEMECYLON UMBELLATUM - காசன்


MICHELIA CHAMPALA - செண்பகம்


MICHELIA NILAGIRICA - காட்டுச் செண்பகம், நீலகிரி செண்பகம்


MILLINGTONIA HORTENSIS - மர மல்லிகை


MIMUSOPS ELENGI - மகிழம்பூ


MORINDA LINCTOSA - நுணா, நுணவு


MORINGA CONCANENSIS - காட்டு முருங்கை


MUCUNA PRURIENS - பூனைக்காலி


MUKIA MADERASPATANA - முசுமுசுக்கை


MURRAYA KOENIGII - கருவேப்பிலை


MUSA SAPIENTUM - நவரை


MYRISTICA DACTYLOIDES - காட்டு ஜாதிக்காய், காக்காய் மூஞ்சி


MYRISTICA MALABARICA - பத்திரி


MYROXYLON BALSAMUM - சாம்பிராணி


MYRRH - வெள்ளைப்போளம்

***

*N - வரிசை*


NARDOSTATHYS GRANDIFLORA - ஜாதமாசி, ஜாதமஞ்சி


NERVILIA ARAGOANA - ஓரிலைத் தாமரை


NELUMBO NUCIFERA - தாமரை


NIGELLA SATIVA - கருஞ்சீரகம்


NILGIRIATHUS CILIATUS - சின்னக் குறிஞ்சி


NUX VOMICA - எட்டிமரம்


NOTHAPODYTES NIMMIONANA - அரளி, பெரும்புளகி


NYCTANTHES ARBOR-TRISTIS - பவழமல்லிகை

***

*O - வரிசை*


OATS - காடைக்கண்ணி


OCHREINAUCLEA MISSIONIS - ஆத்து வஞ்சி, நீர் வஞ்சி


OCIMUM BASILICUM - திருநீற்றுப் பச்சிலை


OCIMUM TENUIFLORUM - துளசி


OPERCULINA TURPETHUM - சிவதை, பகந்திரை


OPUNTIA STRICTA VAR. DILLENII - சப்பாத்திக்கள்ளி


ORCHUS MASOULA - சாலாமிசிரி


ORMOCARPUM SENNOIDES - எலும்பொத்தி


OROXYLUM INDICUM - அச்சி


OXALIS CORNICULATA - புளியாரை

***

*P - வரிசை*


PALAQUIN ELLIPTICUM - காட்டிலுப்பை


PANDALUS ADORATTISIMUS - தாழை


PANICUM MILIACUM - பணிவரகு


PANICUM MILLIARE - சாமை


PAVETTA INDICA - பாவட்டை


PEARL MILLET - கம்பு


PEDALIUM MUREX - பெரு நெருஞ்சில், யானை நெருஞ்சில்


PERSEA MACRANTHA - கூலமாவு, கோலமாவு


PHOENIX LOUREIRII - சிறு ஈச்சன்


PHOENIX PUSSILA - தரை ஈச்சன்


PHYLANTHUS AMARUS - கீழாநெல்லி


PHYLANTHUS EMBLICA - நெல்லி


PHYLANTHUS FRATERNUS - கீழாநெல்லி


PHYLANTHUS RETINUS - மெலநெல்லி


PHYLANTHUS VIROSA - இருபுலை


PIAMELOMANIA AROMATICA - தீர்க்கந்தை


PIPER BARBERI - காட்டு மிளகு


PIPER LONGUM - ஆதிமருந்து, திப்பிலி


PIPER MULLESUA - காட்டுத் திப்பிலி


PIPER NIGRUM - குறுமிளகு


PITHECELLOBIUM DULCE - கொடுக்கப்புளி


PONGA PINNIATA - புங்கை


PONTEDERIA VAGINDIS - குவளை


PREMNA CORYMBOSA - கூழாமணிக்கீரை, முன்னை


PREMONTHES SONCHIFOLIA - சுவர்முள்ளங்கி


PSEUDARTHRIA VETTIVEROIDES - கறுவேர்


PSEUDARTHRIA VISCIDA - மூவிலை பச்சிலை


PSORALIA CORYLIFOLIA - கார்போக அரிசி


PTEROCARPUS SANTALINUS - செங்குங்குமம், சிவப்பு சந்தனம், சந்தன வெங்கை


PUERARIA TUBEROSA - கரிக்கும்மடி


PUNCTURE PLANT - நெறிஞ்சி


PURPLE MALLOW - ஒட்டத்தி

***

*R - வரிசை*


RAUVOLFIA SERPENTIA - சர்பகந்தி


RHAPHIDOPHORA PERTUSA - ஆனைப்பிரண்டை


RHUS SUCCEDENEA - கர்க்கடசிங்கி


RIBBER GOURD - பெருபீர்க்கம்


ROSARY PEA - குண்றிமணி


RYE - புல்லரிசி

***

*S - வரிசை*


SAGITTARIA OBTUSIBOLIA - குதிரைக் குளம்படி


SALACIA OBLONGA - பொங்கொரந்தி


SALVADORA PERSICA - உகாய்


SANTALUM ALBUM - சந்தனம்


SAPIUM INSIGNE - கருப்புச்சுடை


SARACA ASOKA - அசோக மரம்


SARACA DINDICA - அசோகம்


SARAVASTA ARISTAM - சடாமஞ்சில்


SARCOSTEMMA INTERMEDIUM - கொடிக்கள்ளி


SAUSUREA COSTUS - கொட்டம்


SAW PAMETTO - சீமைக்கதலை


SCINDAPUS OFFICINALIS - யானைத்திப்பிலி


SCOPARIA DULCIS - சர்க்கரை வெம்பு


SECALE CEREALE - புல்லரிசி


SECURINEGA LEUCOPYRUS - மட்புலந்தி, வெள்ளைப்புலா


SECURINEGA OBOVETA - வேப்புலந்தி


SECURINEGA VIROSA - புலா


SEHREBERA SWIENTENOIDES - மகாலிங்க மரம்


SEMECARPUS TRAVANCORICA - காட்டுச்செங்கொட்டை


SENNA AURICULATA - ஆவாரை


SESBANIA GRANDIFLORA - அகத்தி


SHOREA TUMBUGGAIA - தம்பகம்


SIDA ACUTA - வட்டத்திரிப்பி


SIRIS TREE - வாகை


SMILAX ZEYLANICA - காட்டுக்கொடி


SOLANUM ERIANTHUM - யானை சுண்டைக்காய்


SOLANUM INDICUM - முள்கத்திரி


SOLANUM NIGRUM - மனத்தக்காளி


SOLANUM TORVUM - சுண்டை(க்காய்)


SOLANUM TRILOBATHUM - தூதுவளை


SPREADING HOG WEED - மூக்கரத்தைக் கீரை


SPIRANTHES CALVA - ஆங்காரவள்ளி


SPONDIAS PINNATA - நரிமங்கை


SUREGADA ANGUSTIFLORA - படபட்டை


SWEET FLAG - வசம்பு


SWERTIA CHIRAYITA - சிரத்தைக்குச்சி


SWERTIA CORYMBOSA - சிரத்தை


STERCULIA FOETIDA - குதிரைப்பிடுக்கான்


STREBLUS ASPER - குட்டிப்பலா


STYRAX BENZOIN - மலக்காச் சாம்பிராணி


SWEET BROOM - சர்க்கரை வெம்பு


SYMPLOCOS RACEMOSA - வெள்ளிலாதி


SYZEGIUM CUMINA - நாவல்


SYZYGIUM JAMBOLANUM - நாவல் கொட்டை

***

*T - வரிசை*


TAMARANDUS INDICA - புளி(யான்)


TAXUS BUCATA - தாலிசபத்திரி


TERMINALIA ARJUNA - மருதமரம்


TERMINALIA BELERICA - தான்றிக்காய்


TERMINALIA CHEBULA - கடுக்காய்


THICK-LEAVED LAVENDER - கர்ப்பூரவள்ளி


TINOSPORA CARDIFOLIA - சீந்தில் கொடி


TINOSPORA SINENSIS - பேய் அமுது


TOOTHBRUSH TREE - உகாய்


TRAGIA BICOLOR - மலைச் செந்தத்தி


TRAGIA CANNABINA - தூரலோபம்


TRAGIA INVOLUCRATA - தூரப்பரிகம்


TRAGIA PLUKENETTI - சிறுகாஞ்சொரி


TRIANTHEMA ECANDRA - சத்திச்சாரணை


TREWIA NUDIFLORA - அத்தரசு, நாய்க்குமுளி


TRIANTHEMA ECANDRA - சத்திச்சாரணை


TRIANTHEMA PENTANDRA - சாரணை


TRIBULLUS TERRESTRIS - நெறிஞ்சி


TRICHOPUS ZEYLANICUS - ஆரோக்கியப் பச்சை


TRIGONELLA FOENUM - வெந்தையம்


TRIUMFETTA RHOMBOIDA - காட்டுவெண்டை

***

*U - வரிசை*


ULTERIA SALICIFOLIA - உத்லீர்


URENA LOBATA - ஒட்டத்தி

***

*V - வரிசை*


VATERIA INDICA - வெள்ளைக் குந்திரிகம்


VATERIA MACROCARPA - வெள்ளைப் பயின்


VERBACIFOLIUM SOLANUM - சுண்டை


VIGINEA INDICA - காட்டுவெங்காயம்


VITEX NEGUNDO - நொச்சி


VITIS LANATA - நரளை

***

*W - வரிசை*


WATER HYACINTH - ஆகாயத் தாமரை


WATER SHAMROCK - நீராரை


WATTAKARA VOLUBILIS - குரிஞ்சான்


WEDELIA CALENDULACEA - பொன்னிரைச்சி


WEDELIA CHINENSIS - மஞ்சள் கரிசாலி


WESTINDIAN LEMONGRASS - வாசனைப்புல்


WILD ASPARAGUS - சதவலி


WINTER CHERRY - அமுக்கரா


WITHANIA SOMNIFERA - அமுக்கரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி


WOODFORDIA FRUTICOSA - வேலக்காய்

***

*X - வரிசை*


XYLIA AMERICANA - கலை, கடலிரஞ்சி


XYLIA XYLOCARPA - இருள்

***

*Y - வரிசை*


YELLOW SPIDER FLOWER - நாய்க்கடுகு


YLANG YLANG - மனோரஞ்சிதம்

***

*Z - வரிசை*


ZIZIPHUS JUJUBA - இலந்தை


ZIZIPHUS MAURITANIA - பல்லவப்பருனிச்செடி, முன்னதிமது


ZIZIPHUS NUMMULARIA - நரியிலந்தை, கொர்கொடி


ZIZIPHUS OENOPLIA - சூரைமுள்ளு


ZIZIPHUS RUGOSA - சூசை


ZIZIPHUS XYLOPHYRUS - முள்ளுத்துப்பை, கடல்சிரை


ZIZYPHUS RUGOSA LAM - துடரி


ZORNIA DIPHYLLA - சிறுபலதை



***
thanks அன்புடன்
***


"வாழ்க வளமுடன்"

சிறுகுறிஞ்சான் மருத்துவ குணங்கள் !

உடலை வலிமையாக்கும் சிறு குறிஞ்சான்!



எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளை உடையது சிறு குறிஞ்சான். இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக்கொடி இனம் இது. முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக்கூடிய விதைகளைக் கொண்டது. இலை, வேர், மருத்துவக் குணம் உடையது. இலை பித்தம் பெருக்கும். தும்மலை உண்டாக்கும். மேலும் வாந்தி உண்டாக்கி நஞ்சை முறிக்கும் குணம் உடையது. தமிழ்நாடெங்கும் சிறு காடுகளில் தானாகவே வளர்கின்றது.


வேறு பெயர்கள்: அயகம், அமுதடிசுப்பம், ஆதிகம், குறிஞ்சான், குரித்தை.

வகை: பெருங்குறிஞ்சான்.

ஆங்கிலப் பெயர்: Gymnema sylvestre; R.Br.Anclepiadaceqe.

***


சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான்:



மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.

"கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே''

அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.

நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது.


பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.


இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.

**

மருத்துவக் குணங்கள்:

சிறு குறிஞ்சானைக் கொடி இலையுடன் 50 கிராம் எடுத்து, திரிகடுகு வகைக்கு 10 கிராம் எடுத்து, ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 10 மில்லியளவு 10 நிமிடத்திற்கு ஒரு முறை குடித்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.

சிறு குறிஞ்சான் கொடி இலையுடன் 10 கிராம், களா இலை 20 கிராம் சேர்த்து அரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட தாமதமாக வருகின்ற மாதவிலக்குப் பிரச்சினை, இரத்தப் போக்கு, கற்பாயாசக் கோளாறுகள் குணமாகும்

சிறு குறிஞ்சான் இலை ஒரு கைப்பிடி அளவும், தென்னம்பூ இரண்டு கைப்பிடி அளவும் எடுத்துச் சேர்த்து அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து எடுத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.

சிறு குறிஞ்சான் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து திரிகடுகு சூரணம் 1 சிட்டிகையுடன் கலந்து வெந்நீரில் இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர கபம் வெளியேறி இரைப்பிருமல் (ஆஸ்துமா) மூச்சுத்திணறல் குணமாகும்.

சிறு குறிஞ்சான் வேரை நன்கு நசுக்கியது 40 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு எடுத்து 3 வேளை குடித்து வரக் காய்ச்சல், இருமல், காசம் குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலையைப் பிட்டவியலாய் அவித்து சாறு எடுத்து 200 மில்லியளவு, உள்ளி, சுக்கு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் வகைக்கு 30 கிராம் எடுத்து வெதுப்பிப் பொடி செய்து இரண்டையும் கலந்து, 3 நாள்கள் காலையில் கொடுத்து வர குடல்வாதம் நீங்கும்.

சிறுகுறிஞ்சானின் பட்டையைப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கூட்டி, ஒரு தேக்கரண்டியளவு இரண்டு வேளை சாப்பிட்டு வர, உடம்பிலுள்ள காணாத வியாதிகள் நீங்கும். உடலுக்கு வலிமை உண்டாகும்.

சிறுகுறிஞ்சான் வேரை அல்லது உலர்ந்த இலையைப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வாந்தியாகும்.


இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும்.


மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.


சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.


சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது.

இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.



***
நன்றி இணையம்
நன்றி - தாகம்
***



"வாழ்க வளமுடன்"

மசாஜ் சிகிச்சையின் நன்மைகள்



1. மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது.

*

2. மென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும்.

*

3. கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.

*

4.முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.

*

5. தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

*

6. மசாஜால் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

***

மசாஜ் செய்யும் முறை :

கை கால்களிலிருந்து மசாஜை துவங்கவேண்டும். அடுத்து நெஞ்சு, கீழ்வயிறு, பின்புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்யவேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்ய துணியைப் பயன்படுத்தலாம். மசாஜøக்குப் பின் குளிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் நனைந்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.


உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்கவேண்டும்.

***

எப்போது மசாஜை தவிர்க்க வேண்டும்?

காய்ச்சலின் போது, கர்ப்பகாலத்தில் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, கட்டிகள் இருந்தால் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. தோல்வியாதிகள் உள்ளவருக்கு மசாஜ் ஏற்றதல்ல.

***

அரசு மருத்துவமனையில் மசாஜ்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவில் நோயாளிகளுக்கு எளிய மற்றும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்தூர் மருத்துவமனைகளின் சித்தா பிரிவில் நடைபயிற்சி எந்திரம், நீராவி குளியல் எந்திரம், சைக்கிளிங் எந்திரம், ஆகியவையும் உடல் மசாஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


*

இது குறித்து மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் Dr. அருணாசலம் கூறியிருப்பது :


1. மனித உடலிலுள்ள நாடி நரம்புகள் தூண்டப்பட்டு புத்துயிர் ஊட்டுவதற்காக நவீன முறையில் தற்போது மசாஜ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மசாஜ் செய்வதின் மூலம் உடம்பிலுள்ள கழிவுகள் வெளியேறும்.

*

2. வெளிநோயாளிகளுக்கு நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் பயிற்சியும் உள்நோயாளிகளுக்கு நீராவி குளியல் சிகிச்சையும் அளிக்கப்படும்.

*

3. நடை மற்றும் சைக்கிளிங் பயிற்சி குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்யவேண்டும். மேலும் கால், கை, மூட்டு தலை போன்ற வலிகளுக்கும் நவீனமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


***


மசாஜ் கிளப்புகள் நடத்தத் தடையில்லை

உயர்நீதி மன்றம் தீர்ப்பு

இன்புளூவன்ஸ் லைப் ஸ்டைல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நரேஷ்குமார் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஹோட்டலுக்கு அருகே இன்புளூயன்ஸ் ஸ்பா என்ற பெயரில் நாங்கள் மசாஜ் கிளப் நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று இருபாலருக்கும் மசாஜ் செய்யப்படுகிறது. இது சட்டவிரோதமான செயலில்லை. உலகம் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. முக்கியமான மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மசாஜ் செய்யப்படுகிறது. எனவே எங்கள் நிறுவனத்தைத் தொடர்ந்து அமைதியாக நடத்துவதில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த மனுவுக்குப் பதிலளித்து காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவில், மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கு காவல்துறையினரிடம் சட்டப்படி உரிமம் பெறவேண்டும். பொதுநலனைக் கருத்தில் கொண்டும், சமூக ஒழுக்கத்திற்காகவும், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவும் மசாஜ் மையங்களுக்குச் சில கட்டுப்பாடுகள் அவசியம். மனுதாரர் தன் மசாஜ் கிளப்பில் டீன் ஏஜ் பெண்களை வைத்து மசாஜ் செய்தால் அங்கு வரும் நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடலாம். இதுபோன்ற மசாஜ் பார்லர்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.


இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதி கே. சந்துரு அளித்த தீர்ப்பில் ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்யும் ஹெல்த் கிளப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டம் ஏதுமில்லை. சென்னை மாநகர காவல்துறை சட்டத்திலும் இதுபோன்ற மசாஜ் மையங்கள் செயல்படுவதைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.


இதிலிருந்து மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுக்கக் காவல்துறைக்கு சட்டப்பூர்வமான உரிமையில்லை என்பது தெளிவாகிறது. இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் மசாஜ் பார்லர் நடத்தலாம். அதே நேரத்தில் அந்த மசாஜ் மையங்களை ஆய்வு செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மசாஜ் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எந்தத் தடையுமில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.



***
thanks மா.மருத்துவம்
***




"வாழ்க வளமுடன்"

‌சிறு‌நீரக‌க் க‌ற்களு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்

‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் த‌‌ற்போது இளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌ம் கூட தோ‌ன்று‌கிறது. இத‌ற்கு பல காரண‌ம் இரு‌ந்தாலு‌ம், இதனை ச‌ரிபடு‌த்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம்.



கடுமையான வ‌லி, ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் போ‌ன்றவ‌ற்றை இது ஏ‌ற்படு‌த்த‌க் கூடு‌ம்.

*

இத‌ற்கு, ‌சில எ‌ளிய வை‌த்‌திய முறைக‌ள் உ‌ள்ளன. ஆயு‌‌ர்வேத‌த்‌தி‌ல் இவை கூற‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதாவது, வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை அதாவது செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி என வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். இ‌ந்த ‌கிழமைக‌ளி‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெ‌ய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து லேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி, அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

*

அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கருவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌ம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெது‌ப்பான ‌நீரை‌ப் பருகுத‌‌ல் ந‌ல்லது.

*

மேலு‌ம், ‌காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது.

*

‌வீ‌ட்டு வேலைகளையு‌ம் சு‌றுசுறு‌ப்புட‌ன் செ‌ய்து வருவது உடலு‌க்கு ந‌ல்ல உட‌ற்ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

*

இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.


***
thanks இணையம்
***



"வாழ்க வளமுடன்"

ஹெட்போன்ஸ் உபயோகித்தால் வரும் பக்க விளைவுகள்!

செவிப்புலனை குறுகிய காலத்தில் நிரந்தரமாக இழக்க வைக்கக்கூடிய ஹெட்போன்ஸ்


தினமும் எல்லோரும் பெரும்பாலும் Headphones பாவிக்கின்றோம். iPod தொடக்கம் கணணி வரை பல்வேறு கருவிகளில இந்த Headphonesஐ நாங்கள் பயன்படுத்தவேண்டி இருக்கின்றது.

*

முக்கியமாக மற்றவர்களை இரைச்சல் மூலம் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதற்கும், இசையை நாங்கள் மட்டும் கேட்டு மகிழ்வதற்கும் இதை பாவிக்கின்றோம். பல்வேறு வடிவங்களில், வகைகளில், விலைகளில் Headphones இருக்கின்றன.

*

கலைஞர்கள் பாடல்களை கலைக்கூடங்களில் ஒலிப்பதிவு செய்யும்போது.. அது தமிழ் சினிமா பாடலாக இருக்கட்டும்.. அல்லது Hollywoodல் உருவாக்கப்படும் ஓர் இசைAlbumமாக இருக்கட்டும்.. குறிப்பிட்ட பாடலை - இசையை கேட்பதற்கு சில அடிப்படை தரம் உள்ள கேட்கும் கருவிகளை ரசிகர்கள் பயன்படுத்தவேண்டும் என்று அவற்றை உருவாக்கும் கலைஞர்கள் எதிர்பார்ப்பார்கள்.

*

அவர்களின் இசையை முழுமையாக அனுபவிப்பதற்கு - இசையில் வருகின்ற ஒவ்வொரு சிறு ஒலியையும்.. இசையில் வருகின்ற பல்வேறு விதமான effectsஐயும் உணர்வதற்கு தரமான Headphones ஐ நாங்கள் பயன்படுத்துவது முக்கியம். தரமற்ற Speakers, Headphonesஐ நாங்கள் பயன்படுத்தினால் நல்ல ஓர் இசை அனுபவத்தை பெறமுடியாது.

*

ஆனால்.. Headphones மூலம் ஒலியை கேட்கும்போது.. Volumeஐ அளவுடன் வைத்து இருக்கவேண்டும். நீண்டநேரம் அதிகVolumeஇல் Headphonesஐ பாவிக்கும்போது நாங்கள் எங்கள் செவிப்புலனை விரைவிலேயே நிரந்தரமாக இழக்கவேண்டிவரலாம். குறிப்பாக நாங்கள் வாகனத்தில் போகும்போது, பயணம் செய்யும்போது.. வெளி இரைச்சல்களையும் மேவி எங்களுக்கு காதினுள் இசை கேட்கும்படி Headphonesஇன் Volumeஐ அதிகரிக்கின்றோம். இது எமது செவிகளிற்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.



நீங்கள் நல்ல தரமான Headphonesஐ பயன்படுத்தி நல்லதொரு இசை அனுபவத்தை பெறுகின்ற அதேநேரம் அதன் Volumeஐ அளவுடன் பயன்படுத்தி உங்கள் இனிய செவிப்புலனை உங்கள் ஆயுட்காலம் முழுவதும் நல்லநிலையில் பேணிக்காத்து கொள்ளுங்கள்.


***
thanks இணையம்
***





"வாழ்க வளமுடன்"

ஏன் ஸ்கேன் செய்யவேண்டும்?

உலகமே கணிணிமயமாகிவிட்டது. மருத்துவத்துறையும் எண்ணிலடங்காதளவு வளர்ச்சிகளை எட்டியுள்ளது.



நோய்களையும் அவற்றின் தன்மைகளையும், வளர்ச்சிப் போக்குகளையும் கண்டறிவதில் எண்ணற்ற கருவிகளும் வழிமுறைகளும் வந்து நிறைந்துவிட்டன. அவைகளுள் மருத்துவர்களுக்கு மிக உதவிகரமாக இருப்பது மருத்துவ ஸ்கேனிங் முறை.


*

ஸ்கேனில் உள்ள வகைகள்:

1. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

2. சி.டி. ஸ்கேன்

3. எம்.ஆர்.ஐ. ஸ்கேன்.

*

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கண்ணுக்குத் தெரியாத, காதுகளுக்குக் கேட்காத நுண் ஒலி அலைகளின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து திரையில் பார்த்து நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது.

*

C.T. ஸ்கேன் (Computerised Tomography) என்பது X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது. M.R.I. ஸ்கேன் (Magnetic Resonance Imaging) என்பது சக்தி வாய்ந்த காந்தத்தின் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் திரையில் காண்பது. இவைகளில் குறைந்த செலவில் பார்க்கக்கூடியது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகும்.

*

இந்த அல்ட்ரா சவுண்ட் எனப்படும் ஸ்கேன் முறையில் கெடுதலோ, பக்கவிளைவுகளோ, பின் விளைவுகளோ இல்லை என்று கூறப்படுகிறது. பொதுவில் ஸ்கேன் செய்து நோயினை கண்டறிவதன் மூலம் அது அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயா அல்லது மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கக்கூடிய நோயா என்பதை ஆங்கில மருத்துவமானாலும் சரி, மாற்றுமருத்துவங்களானாலும் அவரவர் வரைமுறைகளுக்கேற்ப தீர்மானிக்க உதவுகிறது.

*

அக்குப்பங்சர், சித்தா, ஆயுர்வேதம் போன்ற மாற்றுமருத்துவ முறைகளின் பூர்வீக அணுகுமுறை என்பது நாடிபார்த்தல் ஆகும். ஹோமியோபதி, பாச் மலர் மருத்துவ முறைகளின் அணுகுமுறை நோய்க்குறிகளை, நோயாளியின் மனநிலையை ஆராய்தல் ஆகும்.

*

ஆயினும் இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில் விதவிதமான நவீன சிக்கலான நோய்கள் உற்பத்தியாகின்றன. சற்றே கவனப்பிசகாக, நோய் நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டாலும், தவறுகள் நேர்ந்தாலும் பெரும்பாதிப்புகளையும் மரணத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

*

வலதுபக்க வயிற்றுப் பகுதியில் வலிகள் தோன்றும் போது சிறுநீரகக் கல்லால் அவதியா குடல்வால் நோயால் அவதியா அல்லது வேறு பிரச்சனையா என்பதை சரியாகக் கண்டறிய வேண்டும். சிறுநீரகக்கல் நோய் என்றால் கற்களின் எண்ணிக்கை, கற்களின் இருக்குமிடம், அளவு போன்றவை ஸ்கேன் மூலம் அறியமுடியும். யூக அடிப்படையிலான சிகிச்சை பயன்தராது.

*

வயிறு, கழுத்து (தைராய்டு), கணையம், கர்ப்பப்பை போன்ற திண்மனான எந்த உறுப்பையும் ஸ்கேன் செய்யமுடிகிறது. அல்ட்ரா ஸ்கேன் மூலம் கல்லீரல், மண்ணீரல், பித்தப்பையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அறிய முடியும். பித்தப்பையில் கல், பித்தப்பையில் புற்று, கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள், சுருக்கங்கள், சிறுநீரக பாதிப்பு போன்றவைகளை எளிதில் கண்டறியலாம்.

*

அனைத்துக்கும் மேலாக கர்ப்பகாலத்தில் அதிகளவு பயன்படுகிறது. தாயின் வயிற்றில் 7ontentpane">வது வாரத்திலேயே (அல்லது 45 நாட்களில்) குழந்தை இருதயத் துடிப்பைப் பெற்று வளர ஆரம்பிக்கிறது. 3 மாதத்தில் குழந்தையின் எல்லா உறுப்புகளும் முழுமையாக வளர்ந்து விடுகிறது. இந்த நேரத்தில் ஸ்கேன் செய்து குழந்தையின் உடலில் உள்ள ஊனம், மூளை வளர்ச்சி ஆகியவற்றைக் கண்டறிய முடியும்.

*

சில பெண்களுக்கு கரு கர்ப்பப்பைக்குள் வளராமல் கர்ப்பப்பைக் குழாயில் தங்கி வளரக்கூடும். இதனால் தாய் அபாயகரமான நிலையைச் சந்திக்க நேரிடும். எனவேதான் கர்ப்பிணிகள் 5 மாத காலத்திற்குள் ஒருமுறையாவது ஸ்கேன் செய்வது தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது.

*

கர்ப்பம் தரித்து 45 நாளிலேயே ஸ்கேனில் இரட்டைக் குழந்தைகளைக் கண்டறிந்தால் அவற்றின் வளர்ச்சியைத் தனித்தனியாகக் கண்காணித்து ஆரோக்கியமாக பிறக்கச் செய்வதற்கு மருத்துவ உதவிகள் செய்ய முடியும்.

*

குழந்தை இல்லாத பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியை பாலிக்குலர் ஸ்டடி மூலம் அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கர்ப்பப்பையில் கட்டிகளோ, இதர வளர்ச்சிகளோ, சினைப் பையில் நீர்மக் கட்டிகளோ இருப்பதால் பெண்களின் மாதவிடாய் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படுகிறது. இவற்றை உரிய காலத்திலேயே ஸ்கேன் மூலம் கண்டறிவதும் சிகிச்சை அளிப்பதும் அவசியம். புற்றுக்கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.

*

மஞ்சள் காமாலை நோய் என்பது வைரஸ் தாக்கத்தினால் அல்லது பித்தப்பையில் கல் அடைப்பு ஏற்படுவதால் தோன்றுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் யூக சிகிச்சையை ரத்தப் பரிசோதனை மற்றும் தவிர்க்க வேண்டும். ஸ்கேன் செய்தல் மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துள்ள நிலையில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு காமாலை வந்திருக்குமானால் மாற்று மருத்துவ முறைகளில் எளிதில் குணப்படுத்த முடியும்.

*

ஆனால் பித்தப்பைக் கல்லால் மஞ்சள் காமாலை வந்திருந்தால் அதற்கும் சேர்த்து தீவிர மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும். கல் அடைப்பை சரிசெய்ய அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

*

இதனை அறியாமல் மஞ்சள் காமாலைக்கு தாயத்து கட்டுதல், வேர்கட்டுதல் என செயல்பட்டால் ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும்.

*

பொதுவாக கர்ப்பப்பை சம்பந்தமான ஸ்கேன் எடுக்கும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வயிறு நீரால் நிறைந்திருந்தால் நீர் ஊடகமாக செயல்பட்டு அதன் அடியிலுள்ள கர்ப்பப்பை தெளிவாகத் தெரிய உதவுகிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் இணைக்கப்பட்டிருக்கும் Probe எனப்படும் இணைப்புக் கருவியை வயிறு, மார்பு, கழுத்து போன்றவற்றைச் சோதிப்பதற்குத் தகுந்தவாறு மாற்றி அமைத்து உபயோகிக்கப்படுகிறது. இன்றைக்கு அலோபதிக்கு மட்டுமல்ல இதர மாற்று மருத்துவ முறைகளுக்கும் ஸ்கேன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

*

C.T. ஸ்கேன், M.R.I. ஸ்கேன் உதவியுடன் மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய்களின் தன்மைகளை கண்டறியமுடியும். ஆனால் அடிக்கடி இந்தச் சோதனைகள் செய்தால் பாதிப்பு ஏற்படும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் பக்க விளைவுகள் இல்லை.


***
thanks மா.மருத்துவம்
***



"வாழ்க வளமுடன்"

அக்குபங்சர் சிகிச்சையில் சில எச்சரிக்கைக் குறிப்புகள்

அக்குபங்சர் மருத்துவம் மிக எளிமையானது, பக்க விளைவில்லாதது, பாதுகாப்பானது தான், என்றாலும் உயிரோடு தொடர்புடைய ஒரு பணி என்பதால் நாம் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது.



இக்கண்ணோட்டத்தின் அடிப்படையிலே உலக சுகாதார நிறுவனம் அக்குபஞ்சர் பயிற்சியை பாதுகாப்பாக மேற்கொள்வது பற்றிய சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

**

அவை பின்வருமாறு:


ஒவ்வொரு அக்குபங்சர் பயிற்சியாளரும் கீழ்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் அவசியம்.

1. பணிச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல்

2. கைகளை தூய்மையாக வைத்திருத்தல்

3. குத்தப்போகும் அக்கு புள்ளியை ஸ்பிரிட் கொண்டு தயார் படுத்துதல்.

4. உரிய வகையில் பாதுகாக்கப்பட்ட குறைபாடில்லாத ஊசி மற்றும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.


5. பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் பஞ்சு ஆகிய கழிவுகளை கவனமாய் துப்புரவு படுத்த வேண்டும்.


6. கர்ப்பமுற்ற பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சையளித்தலை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.


7. மருந்து சார்ந்த முதலுதவி மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் அவசர நேரங்களில்
அக்குபங்சர் சிகிச்சையளித்தல் பலனளிக்காது.


8. புற்று கட்டிகள் மற்றும் கேடு விளைவிக்கும் அழுகிய கட்டிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை தனித்து உதவாது. மேலும் அத்தகைய கட்டியுள்ள பகுதிகளில் உள்ள அக்கு புள்ளிகளில் ஊசி செருகுதலை தவிர்க்க வேண்டும்.


9. கடும் இரத்தப்போக்கு, இரத்தத் தேக்கம் உள்ள நோயாளிகள், இரத்த உறைவை உருவாக்கும் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் மற்றும் இரத்த உறைவு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஊசி குத்துதலை தவிர்க்க வேண்டும்.


10. துருப்பிடிக்காத இரும்பு அல்லது வேறு வகையான உலோகங்கள் என எதில் தயாரிக்கப் பட்ட ஊசியினாலும் அதனை பயன்படுத்தும் முன் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.


11. வளைந்த ஊசி, கொக்கி போன்ற முனையுடைய ஊசி, முனை மழுங்கிய ஊசி, சேத மடைந்த ஊசி போன்றவை கேடு விளைவிப்பவை. அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும்.


12. ஊசி ஏற்றுவதற்கு முன் நோயாளியை அவருக்கு வசதியானவாறு இருக்கச்செய்ய வேண் டும். சிகிச்சையளிக்கும் போது இருக்கும் நிலையை துயரர் மாற்றிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


13. முதல் முறையாக அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளியை கிடை நிலையில் மென்மையாகவும், திறமையாகவும் கையாள வேண்டும். சில நேரங்களில் மயக்க உணர்வு ஏற்படலாம் என்பதை முன்னதாகவே தெரிவித்திட வேண்டும்.


14. ஊசி ஏற்றிய பின் ஏற்படும் மாற்றங்களை உற்று கவனித்து வர வேண்டும். நாடி பரிசோதனை அடிக்கடி செய்து வர வேண்டும்.


15. ஊசியேற்றும் போது மயக்கம், கிறுகிறுப்பு, அசௌகரியம். பலவீனம், பசி, வாந்தி, குமட்டல், படபடப்பு, குளிர், குளிர்ந்த வியர்வை போன்றவை ஏற்பட்டால் அவை எச்சரிக்கை குறிகளாகும். எச்சரிக்கை குறிகள் ஏற்பட்டால் உடனடியாக ஊசியை நீக்கி விட்டு கால் நீட்டி கிடைநிலையில் படுக்க வைக்க வேண்டும்.


16. சமநிலைக்கு சற்று தலையை தாழ்த்தி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் வெதுவெதுப்பான இனிப்பு பானங்கள் அருந்தச்செய்யலாம். அவசியமெனில் சூழலுக்கேற்ப CV6, P6, DU20 ஆகிய புள்ளிகளை கையாளலாம்.


17. அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் அனைத்தும் நோயாளிகளிடமும் வலிப்பு வந்ததுண்டா என விசாரித்தறிய வேண்டும். ஊசி ஏற்றும் போது வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக வேறு மருத்துவ முறைக்கு மாற்றிட வேண்டும்.


18. திறமையான ஊசியேற்றலில் பெரும்பாலும் நோயாளிகள் வலியை உணர்வதில்லை. ஊசி யேற்றிய புள்ளியில் லேசான வலி, கூச்சம் மதமதப்பு கனத்த உணர்வு ஏற்பட்டால் ஆற்றல் தூண்டப்பட்டு நன்கு வினைபுரிகிறது என பொருள். ஊசியேற்றிய பின் கடு கடுக்கும் ஊசியை நீக்கிவிட்டு சரியான புள்ளியில் குத்த வேண்டும். ஊசியை நீக்கிய பின், புள்ளிகளில் லேசாக அழுத்துதல் அவசியம்.



19. அக்குபங்சர் என்பது ஊசியேற்றுதல் மட்டமல்ல.
அக்குபங்சர் - எலக்ட்ரோ - அக்குபங்சர், லேசர் அக்குபங்சர், மாக்ஸிபஸன், கப்பிங், ஸ்கிராபிங் மற்றும் காந்த சிகிச்சை ஆகியவையும் அடங்கும்.


20. குழந்தைகளின் உச்சிகுழி, புற பிறப்பு உறுப்புகள், மார்பு காம்பு, தொப்புள் மற்றும் கண்மணிகளில் கண்டிப்பாக ஊசியேற்றக் கூடாது.


*

இந்த எச்சரிக்கை குறிப்புகளையும், அக்குபங்சர் நிபுணர்களின் அனுபவ ஆலோசனை களையும் கவனத்தில் கொண்டு செயல்படும் அக்குபங்சர் பயிற்சியாளருக்கு தோல்வி என்பதே இல்லை.



***
thanks மா.மருத்துவம்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "