...

"வாழ்க வளமுடன்"

20 மார்ச், 2010

வெளிறிய நாக்கு...?

அப்படீன்னா ரத்தசோகை.. உஷார்:

*


ஜாலிக்காக தோழிகளுடன் "ஜங்க் புட்' சாப்பிடலாம்; ஆபீசில் வேலை...வேலை என்று வெறும் கோக் குடித்து பசியை போக்கிக்கொள்ளலாம். ஆனால், சுறுசுறு...வென இருந்த நீங்கள், திடீரென சோர்ந்து போவீர்கள்; டாக்டரிடம் போனால் ரத்த சோகை என்பார்.

*

அப்புறம் தான், சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற "ஞானோதயமே' வரும் உங்களுக்கு. இப்படி உங்களுக்கு மட்டுமல்ல, "டீன் ஏஜில்' உள்ள பல பெண்களுக்கும் உள்ள பிரச்னை தான்

*


நம் உடலுக்கு வைட்டமின், கனிம சத்துக்கள் தேவை; அதற்கான உணவு வகைகளை சாப்பிட்டால் தான், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கும்; அதனால், பல உறுப்புகளுக்கும் போதுமான அளவில் ரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு நீடிக்கும்.

***

ஹிமோகுளோபின் இல்லாட்டி:

*

ரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவு சீராக இருக்க வேண்டும்; அப்போது தான் ரத்தத்தில் முழு ஆக்சிஜன் இருக்கிறது என்று பொருள். உடலில் இரும்புச்சத்து சேர்ந்தால் தான் ஹிமோ குறையாமல் இருக்கும்.உடலில் இரும்பு சத்து சேர வேண்டுமானால், அதற்கான சத்தான உணவுவகைகளை அடிக்கடி சாப்பாட்டு மெனுவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி சேர்த்தால் தான் ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.


***

என்னென்ன உணவுகள் சாப்பிடனும்:

*


முன்பெல்லாம், ஆண்களை விட, பெண்களுக்கு அதிக அளவில் ரத்த சோகை ஏற்பட்டது. ஆனால், இப்போது "ஜங்க் புட்' உணவுப்பழக்கம் வந்ததில் இருந்து, இளம் பருவத்தினர் இருபாலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். பருப்பு கீரை முதல் புதினா வரை கீரை வகைகள், தானிய வகைகள், தண்டு, பீட்ரூட் போன்ற காய்கறிகள், மீன் உணவுபோன்றவற்றில் இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. டானிக்கோ, மாத்திரைகளோ வேண்டாம்; இவற்றை சாப்பிட்டு வந்தாலே "அயர்ன்' உட்பட மினரல் தட்டுப்பாடே வராது.

***

நாக்கை பாருங்க:

*

ஒருவருக்கு ரத்த சோகை இருப்பதாக சந்தேகித்தால் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்; டாக்டர் பரிசோதிக்கும் போது, கண்கள், நகக்கண்களை பார்த்துச் சொல்வர்; ஆனால், அது கூட போதுமான ஆதாரமாக கருத முடியாது என்று நிபுணர்கள் இப்போது கூறுகின்றனர். நாக்கை பார்த்தாலே தெரியும் என்று சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாக்கு மேற்பரப்பு, கருஞ்சிவப்பாக இருந்தால் முழு ஆரோக்கியம் இருக்கிறது; ரத்தத்தில் பழுப்பு நிறம் கலந்து வெளுப்பேறி இருந்தால் ரத்த சோகை ஆரம்பம் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



***

"டீன் ஏஜ்' யுவதிகளே:

*

ஆண்களை விட, இளம் வயது பெண்கள் தான் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு போன்ற பெண்களுக்கே உரிய பிரச்னைகளால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. ரத்த சோகையின் முதல் அறிகுறி சோர்வு தான். அடிக்கடி சோர்ந்து விழுவர். ஆனால், ரத்த சோகை என்றே தெரியாமல், தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருப்பர். டாக்டரிடம் போனால் மட்டுமே பிரச்னை பெரிதாகிவிட்டது புரியும்.


***

"ஙே' என்று இருப்பதேன்:

*

சோமாலியா போன்ற ஏழை நாடுகளில், குழந்தைகள், எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருப்பர்; காரணம், இரும்புச்சத்து அறவே இல்லாமல் இருப்பது தான். சாப்பாட்டுக்கே வழியில்லாத நாட்டில் சத்தில்லாததால் குழந்தைகள் மிகவும் நோஞ்சானாக இருக்கும்.

***


உடலில் உள்ள முதுகுத்தண்டு:

*

வடத்தில் உள்ள எலும்பு மஜ்ஜை தான், ஹிமோக்ளோபின் எனபபடும் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் பகுதி. இரும்புச்சத்து இருந்தால் தான் வலுவான சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய முடியும்.அப்படி இல்லாவிட்டால், சிவப்பு அணுக்களில் சக்தி இருக்காது; அதனால் ரத்தம் வலுவிழந்து இருப்பதால், ஆக்சிஜன் குறைந்து காணப்படுகிறது. போதுமான ஆக்சிஜனுடன் ரத்தம் போகாவிட்டால், அந்தந்த உறுப்புகள் வலிமை குறைந்து சோர்ந்து விடுகின்றன.


***


கண்டபடி சாப்பிடாதீங்க:

*

இப்போது இளைய தலைமுறையினரிடம் உணவுப்பழக்கம் மாறி விட்டது. அதனால், அவர்கள் உடலில் வைட்டமின், இரும்பு, மக்னீசியம் உட்பட கனிம சத்து குறைந்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் தான் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். எப்போதுமே, "ஜங்க் புட்' என்று சாப்பிடாமல், சத்தான காய்கறி, பழங்கள், தானிய வகைள் கலந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும், அனீமியா என்ற ரத்த சோகை எட்டிக்கூட பார்க்காது.

***




இது போல் இருந்தால் நாம் வாழ்வு ( நோய் இன்றி ) சிறக்கும். இப்படத்தில் உள்ளது போல் நம் குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
***
ஹலோ டாக்டர்
http://www.dinamalar.com
***

நன்றி தினமலர்.

***

குங்குமப் பூவைப் பற்றி பொது அறிவு




இன்று குங்குமப்பூவைப் பற்றி சில வரலாற்று தகவல்கள் தரலாம் என்று எண்ணி இதில் இடுகிறேன்.

*

குங்குமப்பூவைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் நம் இந்தியாவிற்க்கு எப்படி வந்தது என்று தெரியுமா?

*

தெரிந்து கொள்வது என்றால் இக்கடலில் குதித்து முத்து எடுக்க வாங்க!
*
என்னடா எப்ப பாரு இப்படி கடலில் குதிக்க சொல்லுராங்க பாக்கரிங்கலா? ஒன்னும் ஆகாது. தாரலமா குதிக்கலாம்!

***

1. 16ம் நூற்றாண்டில் இலக்கியத்தில் இடம் பெற்ற மலர் உணவு வகை குங்குமப்பூ ஆகும்.

*

2. அபுல் ஃபாஸ்ல் கும்குமப்பூவைப் பற்றி எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார்.

*

3. அயினி அக்பரி நூலில் அபுல் ஃபாஸ்ல் குங்குமப்பூவை பற்றி காஷ்மீரில் உள்ள இந்த பூ வயல்கள் சிடு மூஞ்சிகளைச் கூட சிரிக்க வைக்கும் அழகு கொண்டவை என கூறி இருக்கிறார்.

*

4. அக்பரின் மகனான ஜஹாங்கீர் குங்குமப்பூ வயல்களில் இருந்து வீசும் மணம் பற்றி எழுதி உள்ளர். ( இப்படி தான் வரலாற்றில் குறிப்பிட்டு உள்ளது என்று எண்ணுகிறேன். )

*

5. ஜஹாங்கீர் தனது சுயசரிதை நூலான துஜ்க் ஏ ஜஹாங்கிரியில் கும்ங்குமப்பூவைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

*

6. கஷ்மீரில் குங்குமப்பூவை காங்போஷ் என்று குறிப்பிடுகிறார்கள்.

*

7. காஷ்மீரில் தன் குங்குமப்பூ அதிக உற்பத்தி ஆகிறது.

*

8. ஆசியா மைனர் மற்றும் கிரீஸ் தான் இதன் தாயகம் ஆகும்.

*

9. கே.டி. ஆச்சய்யா என்பவர் தான் இப்பூவின் தாயகம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

*

10. இப்பூ காஷ்மீருக்கு பாரசீகர்கள் காஷ்மீரை வெற்றி கொண்டபின் தங்கள் நாட்டில்ருந்து காஷ்மீருக்கு கொண்டு வந்தார்கள்.


*

11. முதன் முதலாகக் இப்பூ கி.மு 500 ஆம் ஆண்டுக்கு முன்பே அறுவடை செய்யப்பட்டது.

*

12. இப்பூ உலகிற்க்கு விற்பனைக்கு வெளி வந்தது கி.மு. 6ம் நூற்றாண்டில் தான்.


*


13. பொனீசியர்கள் தான் இப்பூவை வெளி உலகிற்கு அறிமுகம் படுத்திய வணிகர்கள்.

*

14. 16ம் நூற்றாண்டில்தான் இப்பூ காஷ்மீருக்கு வந்தது என்று வரலாற்று ஆதாரங்கள் சொல்லுகிறது.

*

15. க்வாஜா மசூத் வாலி, ஹஜ்ரத் ஷேக் ஷரிஃபுதீன் என்ற 2 ஸூபிக்கள் தான் இப்பூவை கஷ்மீருக்கு அறிமுகப் படுத்தினர்.

*

16. இந்த 2 துறவிகள் கஷ்மீரில் இருக்கும் போது உடல் நலம் இல்லாமல் போனது. அவர்களை உள்ளூர் தலைவர் மருந்து கொடுத்து குணமாக்கினர். அதனால் அவர்களுக்கு பரிசாக கொடுத்து சென்றனர்.

*

17. இப்பூவை அறுவடையின் போது இந்த 2 துறவிக்கு நன்றி தொரிவிக்கும் விழாவாக காஷ்மீரில் கொண்டாடுகின்றனர்.

*

18. பாம்போர் என்ற இடத்தில் தான் காஷ்மீரில் அதிகம் இப்பூ விளைவிக்கிக்கப்ப படுகிறது.

*

19. இங்குதான் இப்பூவை அறிமுகம் செய்த ஞாநிகளின் நினைவாக அவர்களுக்கு பொற்கோபுரம் அமைத்து இருக்கிறார்கள்.

*

20. ஆயுர்வேதத்தில் இப்பூவின் மருத்துவ குணம் இருப்பதால் இத்துறையில் அதிகம் பயன்ப் படுத்துகிறார்கள்.


*

21. இப்பூ முகப்பரு, மூட்டுவாதம், மூச்சிரைப்பு, குடற்ப்பூச்சி, இருமல், ஈரல் கோளாறுகள், தொண்டைக் கரகரப்பு ஆகிய கோளாறுக்கு மருந்தாக பயன் படுகிறது.

*

22. இப்பூவை கொண்டு தயாரிக்கும் தின்பண்டங்கள் உடலுக்குக் கதகதப்பையும், ஊக்கத்தையும் தரவல்லது.

*

23. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் செய்யப் படுகிறது.

*

24. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் விரும்பி காஷ்மீரில் அதிகம் செய்யப் படுகிறது.


***

குறிப்பு:

*

இவை உங்கள் உணவு உலகம் புத்தகத்தில் கிடைத்த தகவல்.
இதன் ஆசிரியர் : இராம. மெய்யப்பன்.

***

நன்றி திரு. இராம. மெய்யப்பன்.

***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "