...

"வாழ்க வளமுடன்"

21 ஜூலை, 2015

தண்டு கீரையால் சிறுநீர் நன்கு பிரியும்

இன்றைக்கு என்ன கூட்டு அல்லது பொரியல்? என்ற கேள்விக்கு கீரை என்று பதில் வந்தால், கீரை தானா என்று சலிப்போடு நாமும் பதில் சொல்லுவோம்.

கீரையை மலிவான பதார்த்தம் என்று எண்ணி, தள்ளி விடுவது பழக்கமாகி விட்டது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் நம்மில் பலர், கீரைகளின் அருமை பெருமைகளை அறிந்து வருகிறோம். கீரை வகைகளிலே மிக பெரியதும் உயரமானதுமான, தண்டுக்கீரையைப் பற்றி அறிந்து கொள்வோம்.


தண்டுக்கீரையை மிகச் சரியான பருவத்தில் பறித்தால், அதன் கீரையும் தண்டும் மிகச் சிறந்த காய்கறியாகும். இக்கீரையின் தண்டுகளை, மெல்லியதாக வெட்டி பாசிப்பருப்புடன் சேர்த்து, வேக வைத்து சாம்பாராகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து சாப்பிடலாம்.
கீரையின் இலைகளை முளைக்கீரை போன்றும் சாப்பிடலாம். பித்தம், மிகுதி உள்ளவர்கள் தண்டுக்கீரையை நன்கு பயன்படுத்தலாம். தண்டைச் சாப்பிட்டு வந்தால், உடல் மெலிந்து விடும் என்று பயப்பட வேண்டாம். இதை உண்டால் சிறுநீர் நன்கு போவதால், உடல் எடை குறைந்தது போன்று தெரியும். இதில் நார்ச்சத்து இருப்பதால், ரத்தம் சுத்தி அடையும். மலச்சிக்கல் இல்லாமல் செய்து விடும்.


இக்கீரையை தினமும் உண்டு வரலாம். இதனால், இளமையில் முதுமை தவிர்க்கப்படுகிறது. முதுமையில் ஏற்படும் கால்சியம். இரும்பு விகித வேறுபாட்டை சரி செய்யக்கூடியது.


கருவுற்ற பெண்கள், தினமும் அரை கப் தண்டுக்கீரைச் சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால், மகப்பேறு
எளிதாக நடக்கும். குழந்தையும் நல்ல வளர்ச்சியுடன் காணப்படும். இதில் கால்சியம், 400 மி.கி., உள்ளது. இவ்வளவு அதிகமான கால்
சியம் சத்து முருங்கைக்கீரை, வெந்தயக்கீரையில் மட்டுமே உள்ளது.

***
fb
***


"வாழ்க வளமுடன்"

முருங்கை மகத்துவம்..!

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.
 
முருங்கை வேரின் மருத்துவ குணம்


முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து குறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும்.
...
முருங்கை பட்டை

முருங்கை பட்டையை நன்றாக பொடித்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். சிறுநீரை தெளிய வைக்கும்


முருங்கை இலை காம்பு

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .


முருங்கை விதை

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து லேசாக நெய்யில் வதக்க வேண்டும் , பிறகு அதை பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு குறையும் , ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும் . உடல் வலுவடையும்;


முருங்கை காய்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் மூல நோய்க்கு மிக சிறந்த மருந்தாகவும் . சளியைப் போக்கும் தன்மைகொண்டதாகவும் இருக்கிறது
முருங்கைக்காய் பொதுவாக அதிக சத்துக்களை கொண்டது. முருங்கைக் காய் பொரியல் அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும், தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.


முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது , இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது . எலும்பு மஞ்ஜைகளை வலுபடுத்துகிறது.


முருங்கை பூ

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .


முருங்கை கீரை

முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும்


***
fb
***

"வாழ்க வளமுடன்"
      

மூன்று உணவு பொருட்கள் முந்நூறு பலன்கள்


மைலாஞ்சி ( Mylanchi )'s photo.
 
 
 
 
ஜெர்மனியில் பிரபலமான இந்த பானம் மூன்று உணவு பொருட்களை கொண்டு தயார் செய்கிறார்கள். இயற்கையான இந்த உணவுபொருட்கள் உடலில் ஏராளமான பலன்களை ஏற்படுத்துகின்றன.
 
...
இதய தமனிகளில் அடைப்புகள் ஏற்படாதவாறு தடுக்கின்றது.
இரத்தத்தில் கொழுப்பு விகிதத்தை சரியான அளவில் இருக்குமாறு கட்டுப்படுத்துகிறது.
தொற்றுநோய்களை அகற்றி சளித்தொல்லை ஏற்படாதவாறு செய்கின்றது.
இதை அருந்தும்போது ஈரலிலிருந்து நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகின்றது.
ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கூடுதலாக உள்ளதால் நோய்களை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சரிபடுத்தி முதுமை ஏறபடாதவாறும், கேன்சர் நோய்கள் வராதவாறும் காக்கின்றது.



இப்பொழுது தேவையானவை என்னவென்று பார்பபோம்:

1⃣ முழு பூண்டு - 4
2⃣ தோலுடன் கூடுய எலுமிச்சைப்பழம் - 4
3⃣ இஞ்சி - ஒரு சிறிய துண்டு
4⃣ தண்ணீர் - 2 லிட்டர்


செய்முறை:


எலுமிச்சை பழத்தை கழுவி சிறிதாக நறுக்கவும். பூண்டை உரிக்கவும். இஞ்சியின் தோலை அகற்றி சிறிதாக நறுக்கவும். இவை எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை வேறு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
இதை அடுப்பில் வைத்து சூடாக்கி கொதிக்கும் நிலை வரும் போது அடுப்பை அணைக்கவும். சூடாக்கியதை குளிரவைத்து சல்லடையால் சளித்து கண்ணாடி பாட்டில்களில் நிறைத்துக்கொள்ளவும்.


எவ்வாறு சாப்பிடுவது ?

காலையில் வெறும் வயிற்றில் உணவு சாப்பிடுவதற்க்கு இரண்டு மணிநேரம் முன்பு ஒரு கிளாஸ் குடிக்கவும். ஒவ்வொருமுறையும் குடிப்பதற்க்கு முன் பாட்டிலை நன்றாக குலுக்கி ஒரு கிளாஸில் ஊற்றவும்.
 


"வாழ்க வளமுடன்"
      

குடை மிளகாய் இருக்கிறது உடல் ஆரோக்கியம்!



எந்த வகையில் கற்பனை செய்து பார்த்தாலும் குடைக்கும், மிளகாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு ஏன் குடைமிளகாய் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. பெயர் என்னவாக இருந்தால் என்ன? குடைமிளகாய் பார்க்க கலர் கலராக அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கிறது; அது போதும்.
குடைமிளகாயில் பல நோய்களை போக்கும், மருத்துவ குணம் இருப்பது இன்னும் விசேஷம். குடை மிளகாயின் சுவை, கிராமத்து மக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக, குடை மிளகாய் தென்மாநில சமையல்களில் யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை.

ஆனால் சைனீஸ் வகை உணவுகளில் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக, பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன், சில்லி பிரைடு ஐட்டங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஓட்டல்களில் பல வகை சாலட்கள் குடைமிளகாயில் தயாரிக்கப்படுகின்றன. உணவை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.
குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் உள்ளன. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவை குணமாக பயன்படுகிறது. கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும். அந்நோய்களை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் உள்ளது. குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை, குறைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்தும். இதில், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். குடைமிளகாயில் உள்ள கேயீன் எனும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளை குறைக்கும்.


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடை     மிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து, 4 நிமிடம் வதக்க வேண்டும்.


பின்பு அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெண்ணெய் குடைமிளகாய் சாதம் ரெடியாகி விடும். குடை மிளகாய் சுவை சாப்பிட ஆரம்பத்தில் பிடிக்காது. சாப்பிட்டு பழகினால் அதன் சுவையை விட முடியாது.


***
படித்ததில் பிடித்தது,
***


"வாழ்க வளமுடன்"
      

பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்படி?

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில், ஒரு வீட்டில் ஆறேழு குழந்தைகள் இருப்பார்கள். தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, பெரியக்கா, சின்னக்கா, கடைசித் தம்பி என எல்லோருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைத்தன. மொபைல், தொலைக்காட்சி இல்லை என்பதால், தன்னைவிடவும் பெரிய, சின்ன மற்றும் தன் வயதொத்த குழந்தைகளுடன் கலந்து விளையாட நேரம் இருந்தது. ஆனால், இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளுக்கு விளையாட ஆள் இல்லை. கவனித்துக்கொள்ள தாத்தா, பாட்டியும் இல்லை.

இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பெற்றோருக்கோ நேரமும் இல்லை. அவசர அவசரமாக குழந்தையைத் தயாராக்கி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தானும் கிளம்பிப் போய், மாலை சோர்வாய் வீட்டுக்குத் திரும்பி, இன்று நாள் முழுவதும் குழந்தை என்ன செய்தது, பள்ளியில் என்ன நடந்தது என எதையும் பொறுமையாகக் கேட்க நேரமின்றி, “மதியம் லஞ்ச் சாப்பிட்டியா? ஹோம் வொர்க் செஞ்சியா?” என டெம்ப்ளேட்டாக சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, இரவு உணவைத் தந்துவிட்டு உறங்கி, மறுபடியும் மறுநாள் எழுந்து ஓடும் இயந்திர வாழ்வு. ஒருபுறம் படி… படி… என நச்சரிக்கும் பள்ளிகள். மறுபுறம் இயந்திரகதியில் இயங்கும் பெற்றோர். இதனால், கவனிக்க ஆளின்றி சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு மனஉளைச்சல்.
இப்படி, தனிமையில் உழலும் குழந்தைகளை வளர்ப்பதுதான் எத்தனை பெரிய சவால். பெற்றோர் குரலை உயர்த்திப் பேசினாலே, கோபக் கனல் வீசும் இன்றையக் குழந்தைகளை சமாதானப்படுத்த, ஃப்ரைட் சிக்கன், பீட்சா, நூடுல்ஸ் தொடங்கி ஐபேட், ஸ்மார்ட் போன் வரை கிப்ஃட் என்ற பெயரில் லஞ்சம் தரவும் தயாராக இருக்கின்றனர் பெற்றோர். இது கொதிப்பதற்குப் பயந்து அடுப்பில் குதிப்பதைப் போல மோசமானது. இந்த டிஜிட்டல் பொருட்கள் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் விபரீத விளைவுகள் மிகமிக ஆபத்தானவை.


குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே போய் நல்வழிக்குக் கொண்டுவருவது சாத்தியமா? அடித்தல், திட்டுதல், கேட்டதையெல்லாம் வாங்கித் தருதல் இவையெல்லாம் சரிதானா? எது குழந்தைக்குத் தேவை? எது தேவை இல்லை? பெற்றோர் செய்யும் தவறுதான் என்ன?


குழந்தை வளர்ப்பின் சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டால் போதும். அவர்களின் எதிர்காலம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.



அதீதக் கவனிப்புகளைக் குறையுங்கள்

குழந்தையை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறேன் என, அவர்களைத் தரையில் விளையாடக்கூட விடுவது இல்லை. பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் விளையாடவோ, பழகவோ அனுமதிப்பது இல்லை. அப்படியே அனுப்பினாலும், சின்னக் காயம் ஏற்பட்டால்கூட, அடுத்த முறை விளையாட அனுப்புவது இல்லை. இந்த அதீதக் கவனிப்புதான் குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுகிறது.



பெற்றோரின் நேரமே குழந்தைகளின் பரிசு

அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், குழந்தையுடன் நேரத்தை ஒதுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து, வீடு முழுவதும் நிரப்பிவிடுகின்றனர்.
ஐ-போன், ஐ-பாட், லேப்டாப்பைவிட, குழந்தையுடன் செலவழிக்கும் நேரமே குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவு, புரிதலை மேம்படுத்தும். நேரம் ஒதுக்கி அன்பை வெளிப்படுத்துங்கள். குழந்தைகளின் நண்பராக மாறுங்கள். குழந்தை அழுதால் டி.வி போட்டுவிடுவது, ரைம்ஸ் வீடியோ போடுவது போன்றவை தவறான பழக்கங்கள். குழந்தை தாயின் உதட்டு அசைவைப் பார்த்துதான் பேசப் பழகும்.


ஓடி விளையாடட்டும் பாப்பா

அதிகாலை சூரிய உதயத்தின்போது படிப்பதோ, மாலை சூரியன் மறையும் வேளையில் விளையாடுவதோ சுத்தமாக இல்லை. ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள், கேண்டி க்ரஷ், ஃபார்ம் ஹவுஸ், டெம்பிள் ரன் என மொபைல் கேம்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால், அதீத இயக்கம் (Aggressive behaviour) கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர். அன்பு மறைந்து வன்முறை குடியேறுகிறது. குழந்தைகளின் நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்துங்கள். பாண்டி, கோகோ, ஏழு கல், கபடி, கால்பந்து, டென்னிஸ், கொக்கோ, ரன்னிங் என உடலை உறுதியாக்கும் அனைத்து விளையாட்டுக்களையும் விளையாட ஊக்குவியுங்கள். குழந்தைப் பருவம்தான், மிக முக்கியமான காலகட்டம். அந்தப் பருவத்தில் ஓடியாடி விளையாடும்போது படைப்பாற்றல், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன், குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்றவை மேம்படும். எலும்புகள் வலுப்பெறும். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக்கு உதவும்.      
 


 

தவறுகளை அன்பால் திருத்துங்கள்
குழந்தை சேட்டை செய்து, அதனால் மற்றவர்கள் கடிந்துகொள்வார்களோ என்ற பயத்தில் பக்கத்து வீட்டுக்குகூட குழந்தைகளை அனுப்புவது இல்லை. இந்த வளர்ப்பு முறையை பர்மிசீவ் பேரன்டிங் (Permissive parenting) எனச் சொல்லலாம். குழந்தைகளிடம் கோபப்படுவதோ, திட்டுவதோ, அடிப்பதோ தவறானது. அதற்கு பதிலாக, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அன்போடு திருத்தலாம். நல்லொழுக்கம், நற்பண்புகள் நிறைந்த கதைகளைச் சொல்லி, அவற்றை மனதில் ஆழமாகப் பதிய வைக்கலாம்.

அமைதியான சூழலை உருவாக்குங்கள்

குழந்தை முன் சண்டை போடுவது, பெரியவர்களை அவமதிப்பது, வன்முறை நிறைந்த படங்களைப் பார்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தையின் ஆழ்மனதில் பதியும். சங்கடங்கள், சண்டை, சச்சரவுகளைக் குழந்தை முன்பு கொட்டாதீர்கள். குழந்தைகள் முன் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.




நிஜ உலகில் நீந்தவிடுங்கள்


வெளிமனித அனுபவம் குழந்தைகளுக்கு இருந்தால்தான் சமூகப்பண்பு, மற்றவருடன் பேசும் உறவு, மற்றவர் கருத்தை மதித்தல், சிந்திக்கும் திறன் போன்றவை வளரும். குழந்தையை பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பா எனச் சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் உறவாடவிடுங்கள். சில சமயங்களில் உங்களிடம் சொல்லத் தயங்குவதைகூட, ஒட்டும் உறவுகளிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு உண்டு. இதனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என உங்களுக்குத் தெரியவரும். சுதந்திரமான குழந்தைகளே ஆரோக்கியமான, சுமுகமான சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள்.
 
குழந்தை முன் சண்டை போடுவது, பெரியவர்களை அவமதிப்பது, வன்முறை நிறைந்த படங்களைப் பார்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தையின் ஆழ்மனதில் பதியும்.
 
குழந்தைகள் தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை தூங்க வேண்டும். எனவே, இரவு 9 மணிக்குள் தூங்கச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அப்பாவோ அம்மாவோ வேலையிலிருந்து வர தாமதம் ஆனாலும், அவர்கள் வரும் வரை காத்திருக்காமல், தூங்கச் செல்வது அவசியம். இரவில் டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சீரான தூக்கம் அன்று படித்த பாடங்களைப் பதியவைக்கும். மறுநாளைக்குப் படிக்கவேண்டிய பாடங்களை மனதில் ஏற்க உதவும்.

குழந்தைகளுக்குக் காலை உணவைச் சமச்சீராகச் சாப்பிடக் கொடுங்கள். பிரெட் ஜாம், ஆயத்த பவுடரால் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்துப் பானங்களைத் தரக் கூடாது. புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், நார்ச்சத்து கலந்த காலை உணவே சிறந்தது.

செல்ஃப் ஹைஜீன் என்பது பெற்றோரிடமிருந்து வரும் பழக்கம். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவும் பழக்கத்தைப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். சாப்பிட்டதும் கைகளை டிஷ்யூ, துண்டால் துடைக்கலாமே தவிர, அணிந்திருக்கும் உடையில் துடைப்பது கூடாது. பெற்றோரின் இந்தச் செயலை குழந்தை கவனிக்கிறது என்ற புரிதல் அவசியம்.

வீட்டுக்கு அருகில் இருப்பவரிடம் பேசுங்கள். வணக்கம், குட் மார்னிங், நலம் விசாரிப்பது போன்ற நல்ல பழக்கங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். தன்னைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களை பார்த்துப் பேசிப் பழகட்டும்.


***
fb
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "