...

"வாழ்க வளமுடன்"

16 செப்டம்பர், 2015

மருத்துவத்தில் தேனும் பட்டையும்

தேன் (Honey) + பட்டை(Cinnamon powder) = 100% ஆரோக்கியம்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன.

வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் உலகில் உள்ள பல நாடுகளில் இந்த இரண்டு பொருட்களையும் மருத்துவத்தில் அதிக அளவு உபயோகித்து வந்ததை அறியலாம். பண்டைய மருத்துவ முறைகளான யுனானி மற்றும் ஆயுர்வேதத்தில் இந்த இரண்டுப் பொருட்களையும் உபயோகித்ததை பழயகால ஒலைச் சுவடிகளை பார்த்தால் தெரியவரும்….. இதன் சிறப்பு தன்மையென்றால் இதனால் எந்த ஒவொரு சைடு எஃபெக்டும் இல்லையென்பதுதான்…



1. ( ARTHRITIS ) ஆர்த்தரிடிஸ் எனும் முட்டி வலிகள் :
ஒரு பகுதி தேனுக்கு இரண்டு பகுதி வார்ம் வாட்டர் எடுத்து அதில் ஒரு சிறிய டீஸ்புன் அளவு பட்டை பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி வலியுள்ள பகுதியில் மெதுவாக தேய்த்து வந்தால் இரண்டு நிமிடங்களில் குறையத் தொடங்கும். அல்லது ஆர்த்தரிடிஸ் நோயாளிகள் தினமும் காலையில் ஒரு கப் ஹாட் வாட்டர் எடுத்து அதில் 2 ஸ்பூன் தேன், ஒரு சிறிய டீஸ்பூன் பட்டைப் பொடியை (cinnamon powder) கலந்து தினமும் காலையில் குடித்துவர நாள்பட்ட ஆர்த்தரிடிஸும் குறையத் தொடங்கும். சமிப காலத்தில் Copenhagen University யில் நடந்த ஆராய்ச்சியில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தினசரி காலை உணவிற்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் பட்டை பொடியை கலந்து 200 நோயளிகளுக்கு கொடுத்து வந்ததில் ஒரு வாரத்திற்குள் 73 நோயளிகளுக்கு மொத்தவலியும் குறைந்ததெனவும் ஒரு மாதத்திற்குள் அனைத்து நோயளிகளும் குணமடைந்தனர் என்றும் வலியினால் சிறிதும் நடக்க முடியாமல் இருந்தவர்களும் நடக்கத் தொடங்கினர் என்றும் அறிவித்துள்ளனர்.
2. ( HAIR LOSS ) முடி உதிர்தல் :
முடி உதிர்வர்களும், வழுக்கை தலையுள்ளவர்களும் சிறிதளவு ஹாட் ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பட்டை பவுடர் மூன்றையும் கலந்து பேஸ்டாக கலந்து குளிப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு தேய்த்து அதன் பிறகு வார்ம் வாட்டரில் தலையை கழுவி வரவும். உங்களுக்கு பலன் தெரியவரும்.
3. ( BLADDER INFECTIONS ) மூத்திரப்பை தொற்று வியாதிகள் :
இரண்டு டேபிள் ஸ்பூன் பட்டை பவுடர். ஒரு டீஸ்பூன் தேனை ஒரு க்ளாஸ் வார்ம் வாட்டரில் கலந்து குடித்தால் பையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்
4. ( CHOLESTEROL ) : கொலஸ்டிரால் :
இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், மூன்று டீஸ்பூன் பட்டை பவுடரை 16 அவுன்ஸ் டீத் தண்ணிரில் கலந்து கொலஸ்டிரால் நோயாளிகளுக்கு கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இரத்தத்திலுள்ள கொலஸ்டிரா 10 % குறைந்து விடும். தினசரி மூன்று முறை கொடுத்தால் நாள்பட்ட கொலஸ்டிராவும் குணமாகிவிடும்.
5.( CURE COLD) ஜலதோஷம்:
யாரு மிகவும் ஜலதோஷத்தால் அவதிப்படுகிறார்களோ அவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் வார்ம் தேன், 1/4 டீஸ்பூன் பட்டை பவுடர் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து உட்க்கொண்டு வந்தால் ஜலதோஷம். இருமல், சைனஸ் குணமாகிவிடும்.
6 .( INFERTILITY ) குழந்தையின்மை :
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து ஆயுர்வேதம், யூனானி மருத்துவத்தில் ஆண்மையை பலப்படுத்த( விந்து) தேனை ஒரு மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை தூங்குவதற்கு முன்பு தினசரி எடுத்து கொள்ளுமாறு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். அது போல சீனா, ஜப்பான் மற்றும் அநேக ஆசிய நாடுகளில் கருத்தரிக்காத பெண்களுக்கும், கர்ப்பபை பலவினமான பெண்களுக்கும் தேனும் பட்டை பவுடரையும் பழ மருத்துவர்கள் கொடுத்துவந்துள்ளனர். கருத்தரிக்காத பெண்கள் சிறிதளவு பட்டை பவுடரையும், அரை டீஸ்பூன் தேனையும் ஒரே அடியாக சாப்பிடாமல் வாயில் கம் களுக்கு அடியில் வைத்து சிறிது சிறிதாக உமிழ் நீரோடு கலந்து முழுங்கி வர வேண்டும். இதை ஒவ்வொரு நாளும் பல முறை அடிக்கடி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
7.( STOMACH UPSET) வயிற்றுக்கோளாறு :
தேனுடன் பட்டை பவுடரை கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும். அது போல சரிசம அளவு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் கேஸ் ப்ராபளமும் குணமாகும்.
8. ( IMMUNE SYSTEM ) நோய் எதிர்ப்பு தன்மை :
தினசரி தேனையும் பட்டை பவுடரையும் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு தன்மை கூடி உடம்பை பாக்டீரியா மற்றும் வைரள் அட்டாக்கிலிருந்து காப்பாற்றும். இதில் அதிக் அளவு டிஃபரெண்ட் டைப் வைட்டமின் மற்றும் அயர்னும் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.
9. ( LONGEVITY) நீண்ட வாழ்வு :
நீண்ட கால வாழ்வுக்கு நம் மூதையர்கள் தேனும் பட்டை பவுடரும் கலந்த தேனீர் அருந்தி வந்தனர். 4 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பட்டை பவுடர் மற்றும் 3 கப் சூடான நீருடன் கலந்து தேனீர் தாயரித்து குறைந்தது தினசரி மூன்று வேளை 1/4 கப்பாவது அருந்த வேண்டும். இது உங்கள் தோலை புதுப் பொலிவுடன் வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் முதுமையடைவதை தடுக்கும்.
10.( WEIGHT LOSS) உடல் எடை குறைய :
தினசரி தேனையும் பட்டை பவுடரையும் கொதித்த தண்ணிரில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.அதிக வெயிட் போட்டவர்கள் இதை கடைப்பிடித்து வந்தால் உடல் எடை குறையும். இதை ரெகுலராக குடித்து வந்தால் உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.

***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

சமையல் அறையில் இருக்கு முதலுதவி!

குழந்தைக்குச் சின்னதாகச் சளியோ, இருமலோ இருந்தால், திண்ணையில் இருக்கும் பாட்டி, ஒரு கைவைத்தியத்தைச் சிம்பிளாகச் சொல்லிவிடுவார். குழந்தையும் இரண்டொரு நாட்களில் குணமாகிவிடும். திண்ணைகளும் பாட்டிகளும் இல்லை என்று ஆன பிறகு, கைவைத்திய முறையும் காணாமல் போய்விட்டது. எதற்கெடுத்தாலும் டாக்டர்களின் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, மருத்துவமனை வராந்தாக்களில் காத்திருக்கிறோம். பெரிய பிரச்னைகளுக்கு மருத்துவர்களைத் தேடிப் போவது தவறே இல்லை. சின்னச் சின்ன தொந்தரவுகளை, பாரம்பரிய மருத்துவம் மூலம், நாமே சரிசெய்துகொள்ள முடியும்.

மூச்சுத் திணறல் அதிகம் இருந்தால், 200 மி.லி தேங்காய் எண்ணெயில், 10 கிராம் ஒமத்தைப் பொரித்து வடிகட்டி, இளம் சூட்டோடுக் கற்பூரத்தையும் கரைத்து, முதுகு, நெஞ்சுப் பகுதிகளில் தடவ, மூச்சுத்திணறல் சட்டெனக் குறையும்.

அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரில், மணத்தக்காளி கீரையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சீரகம் கலந்து, மை போல் இருக்கும் பதத்தில் சாப்பிட, அல்சர் புண்கள் குணமாகும்.

பல் வலிக்கு, ஒரு கிராம் தோல் நீக்கிய சுக்கு, ஓர் ஏலக்காயில் உள்ள விதைகள் (ஏல அரிசி), மூலிகைச் சாம்பிராணி ஆகியவற்றை, சம அளவில் எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்த விழுதை, வலி இருக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால், வலி குறையும். மேலும், வலி இருக்கும் இடத்தில் ஒரு மெல்லியத் துணியில் ஐஸ் கட்டியைப் போட்டு ஒத்தடம் கொடுக்க, வலி குறையும்.
சின்ன குழந்தைகளுக்கு, வயிற்றில் சத்தம் வரும். அதைப் பொறுமல் என்பர். இந்தப் பிரச்னையால், குழந்தைகள் சாப்பிடாமல் அழுதபடியே இருக்கும். ஒரு பங்கு ஓமம், கால் பங்கு பெருங்காயம் கலந்து, இட்லி அல்லது மோர் சாதத்தில் உருட்டிக்கொடுக்க, வயிற்றுப் பொறுமல் நீங்கி, குழந்தை நன்றாகத் தூங்கும். இதே பிரச்னை பெரியவர்களுக்கு இருந்தால், ஒரு பங்கு வெள்ளைப் பூண்டுக்கு, கால் பங்கு பெருங்காயம், சுவைக்கு ஏற்ப, கருப்பட்டி கலந்து, ஒரு நெல்லி அளவு உருண்டையாக உருட்டி, சப்புக் கொட்டி சாப்பிட வேண்டும்.

தலைவலி நீங்க நொச்சி இலை அல்லது துளசி இலையை, வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். மருதாணிப் பூ, நொச்சி இலைகளை, தலையணைக்குக் கீழ்வைத்துப் படுத்தாலும், அடிக்கடி வரும் தலைவலி வராது.

தோல் நீக்கிய சுக்குப் பொடியை, எலுமிச்சைச் சாறு அல்லது வெந்நீரில் கலந்து, தலையில் பற்றுப் போட, சைனஸ் தலைவலி குறையும். ஒற்றைத் தலைவலி, அலுப்பு, வெயில், டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் தலைவலிக்கு, மஞ்சளை அடுப்பில் சுட்டு, அந்த புகையைச் சுவாசிக்கலாம்.

தொண்டை சதை வளர்ந்ததால் வரும் வலி, தொண்டை கட்டிக்கொண்டதால் ஏற்படும் வலிகளுக்கு, பூண்டுச் சாறை எடுத்து, தேன் கலந்து, தொண்டையின் உள்பகுதியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து, வெந்நீர் அருந்தலாம். இதனால், தொண்டையில் ஏற்பட்ட தொற்று குறைந்து, வலி நீங்கும். தினமும் மூன்று வேளையும் கல் உப்பு சேர்த்து, வாய் கொப்பளிக்கலாம்.
மாதவிலக்கின்போது ஏற்படும் வலிக்கு, சோம்புப் பொடி, சீரகப் பொடி, பெருங்காயம், கருப்பட்டியைச் சம அளவு எடுத்து, இரண்டு சொட்டு நல்லெண்ணெய் விட்டு, நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையாகப் பிடித்துச் சாப்பிடலாம். அஜீரணத்தால் ஏற்பட்ட வலியைப் போக்க, 15 மி.லி ஒமத் தண்ணீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

குழந்தைகள் மலம் கழிக்காமல், வயிற்று வலியுடன் அழுதுகொண்டே இருந்தால், காய்ந்த கறுப்பு திராட்சை, அத்திப்பழத்தை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, நன்றாக மசிந்ததும் வடிகட்டி, அந்தச் சாற்றை ஐந்து முதல் 10 மி.லி குடிக்கக்கொடுத்தால், மலச்சிக்கல் சரியாகும். இரவில், ஐந்து கிராம் திரிபலா சூரணத்தை, வெந்நீரில் கலந்து சாப்பிட்டுவர, பெரியவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. தினமும் ஒரு செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வரலாம்.

சளியை எப்போதுமே வெளியேற்ற வேண்டும். 50 கிராம் ஆடாதொடை இலையை, அரை லிட்டர் தண்ணீரில் பனங்கற்கண்டு சேர்த்து, பாகுப் பதத்துக்கு வந்ததும், வடிகட்டிச் சாப்பிடலாம். 50 கிராம் ஆடாதொடை இலையுடன், நான்கு மிளகு சேர்த்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, கால் பங்காக சுண்டியதும் அருந்தலாம்.

அல்சரால் வயிற்று வலி, எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்க, சங்கை உரசும்போது வரும் மாவில், இளநீர் அல்லது தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் சேர்த்து, 20 மி.லி அளவில் குடித்துவர, வலி குறைந்து புண்களும் ஆறும்.
மாதுளைச் சாற்றுடன் கற்கண்டைக் கலந்து, அடுப்பில்வைத்துச் சூடாக்கி வடிகட்டி, 15 மி.லி குடிக்க, வாந்தி வருவது நிற்கும்.

இரண்டு கொழுந்து வெற்றிலை, 40 துளசி இலைகள் இரண்டையும், ஒரு லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, 20 மி.லி அளவுக்குச் சுண்ட விட்டுக் குடித்தால், காய்ச்சல் வெகுவாகக் குறையும்.

சாப்பிட்டவுடன் மலம் கழிக்கத் தோன்றுதல், சூடான உணவைச் சாப்பிட்டதும், மலம் வருதல் போன்ற பிரச்னைகளுக்கு, காய்ந்த சுண்டைக்காய், ஓமம், நெல்லி வத்தல், மாங்கொட்டையில் உள்ள பருப்பு, மாசிக்காய், வெந்தயம் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை தேன் அல்லது மோர் கலந்து சாப்பிட, மலம் கழிப்பது ஒழுங்குபடும்.

செரிக்கக் கடினமான உணவைச் சாப்பிட்ட பின் வாந்தி வந்தால், மாதுளைச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து, 15 மி.லி குடிக்க, செரிக்காமல் தொந்தரவு செய்யும் உணர்வும், வாந்தி உணர்வும் நிற்கும்.

***
tu dr
***


"வாழ்க வளமுடன்"
      

மூலிகை இல்லம்! ( இதயத்தை இதமாக்கும் டிரிங்க்)






தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு, முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம். பிறப்பு முதல் இறப்பு வரை ஓயாமல் துடிக்கும் இதயத்தை, ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். நம் உடலுக்கு ஏற்ற உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதாலும் உடற்பயிற்சி செய்வதாலும் இதயநோய் உள்ளிட்ட எந்த ஒரு நோயையும் தடுக்க முடியும்.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க, வந்தாலும் ஆரோக்கியமாக வாழ மூன்று ‘இ’ (Exercise, Eating, Emotional) எப்படி முக்கியமோ, அதுபோல் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் இந்த ‘இ’-க்களை பின்பற்றுவது முக்கியம். ரத்தக்குழாயில் கொழுப்புப் படிவதன் மூலம், ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைப்படும். இதனால், அந்தப் பகுதியில் ரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பைச் சரிசெய்ய எத்தனையோ நவீன சிகிச்சைகள் வந்தாலும், தீவிர சிகிச்சை, அறுவைசிகிச்சை, வலி, அதன் பிறகு மீண்டும் அடைப்பு ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மருந்து என ஒருவர் சுமக்கும் துயரம் சாதாரணமானது அல்ல. வந்த பின் சரிசெய்வதைவிட, வரும் முன் பாதுகாத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.


நாம் உண்ணும் சில வகை உணவுகள், உடலில் கெட்ட கொழுப்புப் படிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்து குறைந்த கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்ளுதல், உடல் உழைப்புக் குறைவு, உடற்பயிற்சி செய்யாமை, உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சோடியம் அளவு அதிகரித்தல், பொட்டாசியம் அளவு குறைதல், தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ் போன்றவை மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன. உணவு, உடற்பயிற்சி என அனைத்தும் நம் கைகளில் உள்ளன. இவற்றை முறையாகப் பராமரித்தால் இதயத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள். இதற்காகப் புதிது புதிதான உணவுப் பழக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டாம். நம்முடைய பாரம்பரிய உணவுகளே இதயத்தைக் காக்கும் திறன்கொண்டவை.



இஞ்சி: உணவுகளில் இஞ்சி, சுவைக்காகவோ, மணத்துக்கோ சேர்க்கப்படுவது இல்லை. செரிமானத்தைச் சீர்படுத்தி, உடலில் கொழுப்பைச் சேரவிடாமல் தவிர்க்கும் வேலையைச் செய்கிறது. அதனால்தான் அசைவ உணவுகளில் பெரும்பாலும் இஞ்சி சேர்த்துச் சமைக்கிறோம். இஞ்சி, உடல் எடையைக் குறைக்கும். செரிமானப் பிரச்னை, ரத்த உறைதல் பிரச்னையைச் சரிசெய்யும். இதயத்துக்குப் போதுமான வலு சேர்ப்பதும் ஆற்றலை அதிகப்படுத்தும் வேலைகளையும் இஞ்சி செய்கிறது.


பூண்டு: ரத்த குழாய்களில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது. ரத்தத்தைச் சுத்திகரித்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. நஞ்சாக உடலில் சேர்ந்திருக்கும் உப்புகளை அகற்றும் பணியைச் சிறப்பாகச் செய்கிறது. இதனுடன் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டி, இதய நோய்க்கு எதிராக உடலைச் செயல்பட ஆயத்தமாக்குகிறது.


எலுமிச்சை: உடல் பருமனைக் குறைத்து, கெட்ட கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. அதிகப்படியான பொட்டாசியம் சத்து இருக்கிறது. இதயப் பிரச்னையை உண்டாக்கும் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயைச் சரிசெய்வதால், எலுமிச்சை நம் இதயத்தைக் காக்கும் நண்பன்.


தேன்: உடலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்கி, புத்துயிர் பெறச் செய்யும் பணியைத் தேன் செய்கிறது. கீரை, பழங்களிலிருந்து கிடைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தேனிலும் கிடைக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் சிறந்த ஊட்டச்சத்து பானம்.


ஆப்பிள் தோல்:இதிலிருந்து எடுக்கப்படும் ஆப்பிள் சிடர் வினிகர், நெஞ்சு எரிச்சலைச் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கும். தூக்கமின்மை, மனக்கவலையைப் போக்கும்.
இதயத்தை இதமாக்கும் டிரிங்க்
 
 
தேவையானவை: இஞ்சி, பூண்டு - தலா அரை கிலோ, எலுமிச்சம் பழம் - 20, தேன் - 300 மி.லி, ஆப்பிள் சிடர் வினிகர் - 50 மி.லி


செய்முறை: இஞ்சி, பூண்டை சுத்தம் செய்து, சிறிதளவு நீர் விட்டு அரைத்து சாறாக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் இந்த சாறை ஊற்றி, அடுப்பை மிதமான நெருப்பில் வைத்து, அரை மணி நேரம் சூடாக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து 20 நிமிடங்கள் அடுப்பில் வைக்க வேண்டும். இஞ்சி, பூண்டுடன் எலுமிச்சை சாறு சேருவதால் திரிய வாய்ப்பு இல்லை. இந்தக் கலவை ஆறியதும், 300 மி.லி தேனும், 50 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.
தினமும் 5 - 10 மி.லி கஷாயத்துடன் சிறிது நீர் கலந்து அருந்தலாம். மூன்று மாதங்கள் வரை இந்த கஷாயத்தைக் குடித்துவந்தால், உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இதயத்தின் ஆற்றல் அதிகரிக்கும். மாரடைப்புக்கான வாய்ப்பு பெருமளவு குறையும்

***
tu dr
***

"வாழ்க வளமுடன்"
      

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?


மாதவிலக்கு கோளாறு காரணமாக
குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
ஊளைச் சதையால் சங்கடப்படுகிறீர்களா?
கல்யாணி சுவாமி சொல்வதை கேளுங்கள்.
கவலையை துரத்துங்கள்!
ப்பல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம்னா, அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு என்னால ஒரு வைத்தியம் சொல்ல முடியும்.
 
 
அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு... இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாள்லருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை யில வெறும் வயித்துல இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.


இன்னொரு வைத்தியமும் இருக்கு! இப்ப பசும் மஞ்சள் கிடைக்கிற சீசன் இல்லையா?! அந்தப் பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்... இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்கள்ல காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.


உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாகறதுல பிரச்னை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாள்லயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.


***
மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி
***


"வாழ்க வளமுடன்"
      

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி

சி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’!

இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிர்ல ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.


 வ ந்தது நிக்கறதுக்கு மருந்து சொன்னேன். வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. எங்க காலத்துல நாள் கிழமை, பண்டிகை சமயத்துல எங்களுக்கு ‘தூரத்துக்கு நாள்’ வந்துட்டா என்ன செய்வோம் தெரியுமா?! இப்போல்லாம் தூரம் தள்ளிப் போக கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கறாங்களே... அந்த ஜோலியே கிடையாது! இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!



தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!


 சி ல சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, கொஞ்சம்போல (ஒரு இணுக்கு) கற்பூரத்தை வெத்திலையில வச்சுத் தின்னாலும், சீக்கிரம் தூரமாகிடலாம். அதுவும் இல்லைன்னா, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் பலன் கிடைக்கும்.

***
மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி 
***


"வாழ்க வளமுடன்"

கைக்குழந்தைக்கு கைகண்ட மருந்து


‘‘இது மார்கழி மாசம். பனி கொட்டுது இல்லையா?
கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும்.
அதை ஓட ஓட விரட்டுறதுக்கு சிம்பிளான வைத்தியம் இருக்கு!
கு ழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. அதுவும், குழந்தைக்கு ஒரு வயசு ஆகறவரை சொல்லவே வேண்டாம்... வயித்து வலிக்கு அழறதா, எறும்பு கடிச்சு அழறதானு தெரியாம நம்ம முழி பிதுங்கிடும்.
அஞ்சு மாசக் குழந்தை வயிறு வலிச்சு அழறதுனு வச்சுக்கோங்க... கடுக்காயை சந்தனம் மாதிரி உரைச்சு குழந்தையோட வயித்துல சதும்பப் பூசி விடணும். ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடணும். ரெண்டே நிமிஷத்துல வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.
சி ல குழந்தைகளுக்கு வாயில மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, அந்த விழுதை குழந்தையோட நாக்குல தடவுனா போதும்... பிரச்னை சரியாகிடும்.
சின்னக் குழந்தை வாந்தி பண்ணினா, வசம்பை சுட்டு பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினா, சட்டுனு குணம் கிடைக்கும். வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’னு பேரே உண்டு!
சூ டு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போச்சுனா கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை தாய்ப்பால்ல ரெண்டு உரை உரைச்சு புகட்டிப் பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூணு வேளை இப்படிக் கொடுத்தா முழுவதுமா குணமாயிடும். ஆனா, ஒரு விஷயம் ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. டோஸ் ஜாஸ்தியாச்சுனா குழந்தைக்கு மயக்கம் வரவும் சான்ஸ் இருக்கு.
பொ துவாவே கைக்குழந்தைக்கு மாந்தம், உப்புசம்லாம் வராம இருக்க, உரை மருந்து கொடுப்போம். அதை எப்படி பண்றதுனு சொல்றேன்...
ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவையுங்க. அப்புறம் அதை எடுத்து வெய்யில்ல சுக்கா காய வச்சுக்கணும். குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டுறப்பல்லாம், இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.
ஆறு மாசக் குழந்தைனா, பத்து நாளுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீர்ல கலந்து, ஒரு பாலாடை அளவு புகட்டினா, குழந்தைக்கு வயித்துல வாயு சேராம இருக்கும்.
பி றந்த குழந்தைக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தை தலையிலயும் உடம்புலயும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வச்சு, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விடுங்க. அது படபடனு கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.
குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். ஆனா, இந்த எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்ச்சு குளிப்பாட்டணும். இப்படி செஞ்சு வந்தா குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராம, மேனி பட்டு போல இருக்கும்.
ப்போ மார்கழி வந்தாச்சு. பனி கொட்டுது! கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்ல, ரெண்டு பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அத்தனையும் மலத்துல வெளியேறிடும்.
இப்பல்லாம் ‘குழந்தைகளுக்கு தொட்டதுக்கெல்லாம் ஆன்ட்டிபயாடிக் கொடுக்கக் கூடாது’னு பேசிக் கறாங்களே... இந்த வைத்தியங்கள்லாம் அப்படி பக்க விளைவு எதுவுமில்லாமலே உடம்பை குணப்படுத்திடும். அதுக்கு நான் கியாரண்டி!

***
மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி
***



"வாழ்க வளமுடன்"

      

மெனோபாஸ் தொல்லைகளை தவிர்க்க...

மெ னோபாஸ் சமயத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் ஆயுர்வேத மருந்துகளும், வீட்டு முறை சிகிச்சைகளும் உண்டு.

மெனோபாஸ் ஆரம்பிக்கும்போதே ‘கல்யாண குலம்’ என்ற ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இது எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தினமும் ஒருவேளை இரவு படுக்கப் போவதற்கு முன் கல்யாண குலம் ஒரு டீஸ்பூன் எடுத்து அதை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது இளஞ்சூட்டில் இருக்கும் பாலிலோ கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் மெனோபாஸ் கஷ்டமான விஷயமாக தோன்றாது.
மெனோபாஸின்போது அதிக உதிரப்போக்கைத் தடுக்க... ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பழுப்பு இலையாகவோ, பூச்சி அரித்ததாகவோ இல்லாமல், சுத்தமான இலைகளாக அவை இருப்பது நல்லது. அவற்றை கழுவி சுத்தம் செய்து, இலைகளின் காம்பு, நரம்பு எல்லாவற்றையும் எடுத்துவிட வேண்டும்.
பிறகு, அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவிட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கி சாறு எடுக்க வேண்டும். அந்த சாற்றுடன் சமபங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன் அருந்த வேண்டும்.
மெனோபாஸ் நேரத்தில் உதிரப்போக்கு வரும் நாட்களில் இந்த மருந்தை உட்கொண்டால் தொல்லை தீரும்.
மெனோபாஸ் சமயத்தில் வரும் தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்க்க ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து இருக்கிறது. அஸ்வகந்தாரிஷ்டம் என்பது அதன் பெயர். இதை, உணவு உட்கொண்ட பிறகு காலை ஒன்பது மணிக்கு ஒரு தடவையும், இரவு ஒன்பது மணிக்கு ஒரு தடவையும் முப்பது மில்லி அருந்தவேண்டும்.
கூடவே, திராக்ஷாதி கஷாயம் என்ற இன்னொரு மருந்தும் அவசியம். இதை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இந்த கஷாயம் பதினைந்து மில்லி எடுத்துக் கொண்டு அறுபது மில்லி சுடுதண்ணீரில் கலந்து காலை ஆறு மணிக்கு ஒரு தடவையும், மாலை ஆறு மணிக்கு இன்னொரு தடவையும் சாப்பிட வேண்டும்.
இந்த அரிஷ்டமும், கஷாயமும் எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
மெனோபாஸ் சமயத்தில் சிலருக்கு உடம்பு சூடாகி உதிரப் போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க ‘நன்னாரி- சீந்தில் கொடி பால் கஷாயம்’ அருந்த வேண்டும்.
இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி ஆகிய இரண்டும் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இவற்றில் தலா பதினைந்து கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நூறு மில்லி பால், நூறு மில்லி தண்ணீர் எடுத்து, இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்ணீரும் சேர்ந்து நூறு மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்கவைத்து எடுக்க வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை, இரவு படுக்கப் போகும் முன்பு சாப்பிட வேண்டும்.
மெனோபாஸ் சமயத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க... மூட்டுகளில் தினமும் நல்லெண்ணெய் தேய்த்து மிருதுவாக மஸாஜ் செய்து விடவேண்டும். தினமும் கொஞ்சம் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும். வேளாவேளைக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்!

***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. கைமேல பலன் கிடைக்கும்!’’


 
‘‘வளர்த்தியில்லாம போய், அதனாலயே
பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா,
வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. கைமேல பலன் கிடைக்கும்!’’                                       
 
 
  பெ ரும்பாலும், இந்த காலத்துல பெண்குழந்தைங்க பத்து வயசிலயே ‘பெரியவ’ளாகிடுதுங்க. போஷாக்கான சாப்பாடுனு ஆரம்பிச்சு இதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதேநேரம், பதினாறு வயசு ஆகியும் ‘பெரியவ’ளாகாம இருக்கறவங்களும் உண்டு.


பதினாறு வயசை தாண்டியும் அந்தப் பொண்ணு வயசுக்கு வரலைன்னா, ஏதோ பிரச்னைனு அர்த்தம். கைவைத்தியமா சில விஷயங்களை முயற்சி பண்ணிப் பார்த்துட்டு, அதுக்கும் பலன் கிடைக்கலேன்னா உடனே மகப்பேறு டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போறதுதான் உசிதம்.


கைவைத்தியம் என்னனு சொல்றேன், கேட்டுக்குங்க!
பெண்குழந்தை வளர்த்தியில்லாம போய், அதன் காரணமா பருவம் அடையாம இருந்தா, வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. உடனே கைமேல பலன் கிடைக்கும். வெந்தய லேகியம் எப்படி பண்றதுனு கேக்கறீங்களா?


ஒரு பிடி வெந்தயத்தை எடுத்து, ராத்திரி கொஞ்சம் தண்ணில ஊறப் போட்டுடுங்க. மறுநாள் காலைல, ஊறின அந்த வெந்தயத்தை அம்மில (அம்மி இல்லேனா மிக்ஸில அரைச்சுக்கலாம். பாதகமில்லே. ஆனா, கூடுமானவரை மிக்ஸியை தவிர்க்கறது நல்லது. மருந்து இடிக்கற சின்ன சைஸ் கல்லுரலை இப்பல்லாம் வண்டில போட்டுக்கிட்டு வந்து விக்கறாங்களே... அதுல ஒண்ணு வாங்கி வச்சிக்கோங்களேன்) அரைச்சு, விழுதா எடுத்துக்கணும். இந்த விழுது எவ்வளவு இருக்கோ... அதே எடையளவுக்கு வெண்ணெயும், தித்திப்புக்கு தகுந்த மாதிரி கல்கண்டும் சேர்த்துப் போட்டு வாணலில வச்சு கிளறுங்க. இதோட கைப்பிடியளவு காய்ந்த திராட்சையும் சேர்த்துக்கணும்.
வெண்ணெய் உருகி, நெய் வாசனை வர்ற சமயத்துல லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வையுங்க. லேகியம் கெட்டியாகி கமகமனு மணமா இருக்கும். ஆறினதும் ஒரு பாட்டில்ல போட்டு வச்சிக்கிட்டு தினமும் காலைல ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டையைச் சாப்பிடக் கொடுத்தா, சீக்கிரமே பொண்ணு புஷ்டியாகி பருவத்துக்கு வந்துடும்.
வத்தலும் தொத்தலுமா இருக்கற பெரியவங்ககூட இந்த வெந்தய லேகியத்தை சாப்பிடலாம். உடம்பு பூரிக்கும்!

***
- ‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி
***


"வாழ்க வளமுடன்"
      

பாட்டி வைத்தியம்


- இன்னும் சொல்றேன்...


பெ ண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக் கிறோமோ, அதுதான் பிற்காலத்துல குழந்தை பிறப்புல ஆரம்பிச்சு மெனோபாஸ் வரை தாக்குப் பிடிப்பதற்கான பலத்தைக் கொடுக்குது. இந்த சமயத்துல முழு உளுந்துல செஞ்ச பலகாரங்களை நிறைய சாப்பிடக் கொடுக்கணும். அவ்வளவும் சக்தி! அதனாலதான் அந்தக் காலத்துல சின்னப் பெண்களுக்கு அப்பப்போ உளுத்தங்களி செஞ்சு கொடுப்பாங்க! இடுப்பெலும்புக்கு பலம் சேர்க்கற அருமையான உணவு இது. சாப்பிடவும் ருசியா இருக்கும்!
சரி, உளுத்தங்களி எப்படி செய்வோம், தெரியுமா?
ஒரு டம்ளர் முழு உளுந்துக்கு கால் டம்ளர் பச்சரிசி எடுத்துக்கணும். முழு உளுந்தை களைஞ்சு உலர வெச்சு, வெறும் வாணலில வாசனை வர வறுத்து வச்சுக்கணும். அரிசியையும் இதேபோல தனியா வறுத்துக்கணும். ரெண்டையும் சேர்த்து மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்கணும் (மிக்ஸில அரைச்சா நல்லா சலிச்சு எடுத்துக்குங்க. அந்தக் காலத்துல நாங்க வீட்டிலயே ‘எந்திரத்துல’ பிடிப்பிடியா போட்டு அரைச்சுப்போம்).
அப்புறம், அரைச்ச இந்த உளுந்து மாவுல திட்டமா தண்ணி கலந்து, வாணலில ஊற்றி, கைவிடாம கிளறணும். இன்னொரு பாத்திரத்துல ஒரு டம்ளர் வெல்லம் போட்டு, பாகு காய்ச்சிக்கணும்.
களி வெந்து வர்ற சமயத்துல தாராளமா ஒரு கை நெய் ஊத்தி, கூடவே, பாகையும் சேர்த்துப் போட்டு கிளறணும். கமகமனு களி வாசனை ஊரைக் கூட்டும். இறக்கி வச்சு சாப்பிடறப்ப இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் ஊத்திக்கிட்டா, அவ்வளவு ருசியா இருக்கும்.

நெய்யைவிட நல்லெண்ணெய் சேர்த்து செஞ்சா இந்த களிக்கு இன்னும் ஊட்டம் அதிகம். அதேபோல வெல்லத்துக்குப் பதிலா கருப்பட்டி சேர்த்துக்கலாம்.
அரைச்சு வந்த இதே உளுந்து மாவுல வெல்லம் தூளாக்கிப் போட்டு, சூடா நெய் விட்டு உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். பெண்குழந்தை வயசுக்கு வந்து ஒரு வருஷம் வரையாவது வாரத்துக்கு மூணு நாள் உளுத்தங்களி சாப்பிட்டா, பின்னால பிரசவ சமயத்துல சிசேரியன் அது இதுங்கற பேச்சே இருக்காது. சுகப்பிரசவம் சுபமா ஆகும்!                                    
***
fb
***



"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "