...

"வாழ்க வளமுடன்"

26 பிப்ரவரி, 2010

டாக்டர் மரம் அத்தி


மரங்களில் திருக்குர் ஆன், பைபிள், வேதங்கள் ஆகிய மூன்றிலும் இடம் பெற்ற ஒரே மரம் அத்தியாகும். இந்த மரம் வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.



***

யுனானி மருத்துவர்கள் வெள்ளி கிரக தோஷத்தை நீக்குவதற்காக அத்தி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். அத்தி மரத்தின் அடியில் அமரச் செய்வார்கள்.






***


அரை மணிநேரம் அத்தி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். இதனால் வெள்ளி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நமது உடலில் சென்று நல்ல உடல் நலனைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது.


***



அத்தி மரம் வெள்ளி கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக் கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.





*****



மருத்துவ குணம்;

*

அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.



***



இலை:


*


அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.

***
பட்டை:
*

அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.

***
பழம்:
*

நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.
***
பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.
***
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.
***
பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.
***
அத்தியின் விஞ்ஞான ஆய்வு:
*
ஈரம் 13.6%
புரத வகைகள் 7.4%
கொழுப்பு 5.6%
மாவுப்பொருள் 49.00%
வர்ணப் பொருள் 8.5%
நார்ப்பொருள் 17.9%
சாம்பல் 6.5%
இதில் சிலிகா 0.24%
பாஸ்பாரிக் அமிலம் 0.91% ஆகியவை அடங்கி உள்ளன.
*
இலைகளிலும், பழங்களிலும் குளுயாக்கல், தாவரஸ் பீரால்கள், ஹைட்ரோகார்பன்கள், ஸ்பீரால், ப்ரைடெலின் ஆகிய வேதியியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
***
இப்பழத்தை மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரைச் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் இருமபுச்சத்து அதிகளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப் பழத்தில் இந்தச் சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. வைட்டமின் பி.டி ஆகியவையும் குைற்நத அளவில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
***
அத்திப்பழத்தைப் பொதுவான உடல் பலவீனத்திலும், ஜுரத்திலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப் பழங்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. இதற்கச் “சீமை அத்திப்பழம்” என்று பெயர். இதுதான் இறைவனும், அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ள அத்திப்பழங்கள் ஆகும். அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேவையான அளவிற்கு நம் நாட்டில் இவை “சீமை அத்திப்பழம்” என்ற பெயரில் எளிதில் கிடைக்கின்றது.
***
காட்டு அத்திப்பழம்:
*
நம் நாட்டில் “காட்டு அத்திப்பழம்” என்ற பெயரிலும், “காற்றாடிப்பழம்” என்ற பெயரிலும் ஒரு வகையான அத்திப்பழம் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. இது வெண்குஷ்டத்தைக் குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தைத தினமம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். இதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதைத் தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் “சபூப் பர்ஸ்” என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
******
நன்றி தினமணி.
ந‌ன்றி த‌மிழ்வாண‌ன்.காம்.

இரும்பு, செம்பு, துத்தநாகம் தரும் பயன்கள்.



என்ன‌ங்க‌ ப‌யந்துட்டிங்க‌லா?

***


இந்து மூன்றும் இருந்தால் குண்டூசி முத‌ல் பீர‌ங்கி வ‌ரை செய்ய‌லாம்.






***


அதே போல் உலோக‌ங்க‌ள் ந‌ம்ம‌ உட‌ல் ஆரோகிய‌த்துக்கு தொட‌ர்பு இருக்காம்.




***


ச‌ரி இனி விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம்!


***


இரும்பு:

*


இது நம் உடலிலுள்ள சிவப்பு ரத்த அணுக்களில் ( RedBloodCorpuscles-RBC )ஹீமோகுளோபினாக இரும்பு உள்ளது. 120 நாட்கள் வரைதான் இந்த சிவப்பணுக்கள் உயிரோடு இருக்கும். அதன் ஆயுள் முடிந்தவுடன் அதில் உள்ள இரும்பு பிரிந்து எலும்பு மஜ்ஜைகளுக்கு அனுப்பப்படும். அங்கு புதிய சிவப்பு ரத்த அணுக்களை உற்ப்பதி செய்ய அவை பயன்படுகின்றன.


*



தசைகளில் மையோகுளோபினாக அமர்ந்திருக்கும் இரும்புச் சத்து, செல்களில் ஆக்ஸிஜன் தேவையை உடனடியாக நிறைவேற்றி வைப்பதில் உதவியாக இருக்கிறது. மருந்துப் பொருள்கள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறாமல் தடுப்பது உட்பட இன்னும் பல முகியமான வேலைகளுக்கு இரும்புச் சத்து பின்புலமாகச் செயல்படுகிறது.


*




இரும்புச்சத்து உணவுப் பொருட்கள்:

*

கேழ்வரகு, பச்சிலைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், அத்திப்பழம், பேரிச்சம் பழம், வெல்லம், ஈரல், மீன், மாமிசம், முட்டை.




***************************************


துத்த நாகம்:

*


நாம் உணவின் உர்சியை உணர்ந்து சுவைப்பதற்க்குக் காரணாம் துத்தநாகம் தான். நம் உடலில் இது பரவலாகக் காணப்படுகிறது.நம்து உடலில் இந்தன் மொத்த அளவு 2.3 கிராம்.


***


1. தோல், எலும்புகள், முடி ஆகியவற்றின் ஆரோகியத்திற்கு இவை மிக முக்கியம்.



*



2. அஜீரணம் மற்றும் மூச்சு விடுதலில் பங்கேற்கும் என்சைம்களில் பெரும்பாலானவை இதில் உள்ளது.



*




3. செல்களின் செயல் பாடுகளுக்குப் பக்கபலமாக விளங்கும் இந்த தாது உப்பு உதவுகிறது.




*




4. நமது உடலில் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்துக்கும் தேவைப்படுகிறது.



*



5. இன்சுலின் செயல் பாட்டுக்கும் உதவி செய்கிற துத்தநாகம், நோய் எதிர்ப்புச் சக்தியைத தூண்டுவதிலும் பங்கேற்கிறது.



*



உணவுப் பொருட்கள்:



*


மாமிசம், முழு தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், பால், முட்டை, தயிர் போன்றவற்றிலிருந்து துத்த நாகம் கிடைக்கிறது. பெரியவர்களுக்கு 8 முதல் 15.5 மி.கி வரை ஒரு நாளுக்குத் தேவைப்படுகிறது.



********************************

செம்பு, செலீனியம்,ஃபுளோரின்:

*

இது போன்ற தாது உப்புகளும் நமது உடலுக்கு குறைந்த அளவே தேவைப்படுகிறது.

*

1. பற்கள் சொத்தை ( DentalCaries) போன்றவை ஏற்படாமல் இருக்க ஃபுளோரின் கணிசமான அளவு தேவைப்படுவதாக தெரிய வந்துள்ளது

*

2. ஈரல் செல்களின் ஆரோக்கியத்துக்கு செலீனியம் அவசியம்.

*

3. செம்பானது இரும்புச் சத்து உறிஞ்சப்படுவத‌ற்குத் தேவைப்படுகிறது.

*

4. மேலும் ரத்திதில் உள்ள சிவப்பு செல்களும், நரம்புகளும் சீராக தங்கள் வேலைகளைச் செய்ய துணைபுரிகிறது.

*

5. செலீனியம் பலவிதமான கேன்சர்கள் உண்டாவதைத் தடுக்கும் சக்தியைக் கொண்டதாக ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.


நன்றி தி டயட் ஃபுட்.

படித்ததில் பிடித்த தத்துவங்கள்



When I Asked God for Peace
He Showed Me How to Help Others
God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed.”
- Swami VIVEKANANDA
***
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- விவேகானந்தர்.
***
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
***
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
***
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
***
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
- பில் கேட்ஸ்
***
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
***
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
***
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
***
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
***
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
***
எல்லாம் சில காலமே
- ரமண மகரிஷி
***
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
***
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
***
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
***
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
***
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது.
- பாரதியார்
***
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
***
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
***
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.ஆனால்,
அவைதான்வாழ்வை இனிமையாக மாற்றும்.
***
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
***
ஓர் உண்மை:நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,நீ யாரை விரும்புகிறாயோஅவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!
***
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
***
இதை மெதுவாகப் படியுங்கள்:
LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
*
LIFE IS NO WHERE என்றா?
*
LIFE IS NOW HERE என்றா?
*
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
***
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
*
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "