...

"வாழ்க வளமுடன்"

04 பிப்ரவரி, 2010

பழமொழிகள்

உலகப் பழமொழிகள்


* துன்ப‌ப் பற‌வைக‌ள் உன் த‌லைக்கு மேலே வ‌ந்து வ‌ட்ட‌மிடுவ‌தை நீ த‌விர்க்க‌ முடியாது. ஆனால் அவை உன் கூந்த‌லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம‌ல் த‌டுக்க‌ முடியும்.
- சீன‌ப் ப‌ழ‌மொழி.

* இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.- கொரியா.

* வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.- டச்சுப் பழமொழி.

* தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.-பிரான்ஸ்.

* மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும். -இங்கிலாந்து.


* இதயம் ரோஜா மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும். - ரஷ்யா.


* கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி. -ஜெர்மன்.


* அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.- ஜெர்மனி.


* பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது. -இத்தாலி.


* ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் -யூகோஸ்லோவியா.

*அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம்.

*அடக்கமே பெண்ணுக்கு அழகு.

*அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

*அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம்.

*அழையாத வீட்டுக்கு விருந்தாளி போகாதே.

*அரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது.

*ஆரிய‌க் கூத்தாடினாலும் காரியத்தில் க‌ண்வை.

*ஆப‌த்தும் ச‌ம்ப‌த்தும் யாருக்கும் உண்டு.

* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.

* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.

*தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.

*நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.

* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.

* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.

*கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.

* ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.

* ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.

* நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது.

* திருப்தியான பறவையும் பசி மிகுந்த பறவையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க முடியாது.

* நிலம் சூடாக இருக்கும்போது புழு மண்ணிலேயே இருந்து விடுகிறது.

* மிக மிக வேகமாக ஓடு. நீ இருமுறை ஓடுவாய்.

*மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவனது மன சாட்சி.

* தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம். மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்.

*குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.

*அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!

* நல்ல உரையாடல் நல்ல படுக்கையைவிட மேலானது.

* ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.

* பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம் அவர்கள் விற்பனைக்கு உரிய பொருள்கள்.

* பெண் குழந்தைகள் உன் முழங்கால் அளவிற்கு வளர்ந்து விட்டால் அவர்களின் சீதனப் பெட்டிகள் மார்பு அளவு இருக்க வேண்டும்.

* தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.

*உடல் சிறைபட்டுக் கிடந்தாலும் குறைந்த பட்சம் மனம் சுதந்திரமாக இருக்கிறது.

*மனிதனுக்குச் சிறந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணால் கிடைக்கின்றன.

*முள்ளின் மேலிருந்து பாடினாலும் மலர் மீதிருந்து பாடினாலும் குயில் இன்மையாகவே பாடுகிறது.

* நீ ஒரு நாட்டில் நுழையும்போது அங்கு விலக்கப்பட்டவைகள் என்னவென்று விசாரித்துக்கொள்.

டிப்ஸ் டிப்ஸ்



எனக்கு தெரிந்த நான் செய்யும் டிப்ஸ்!!!!

1. சாவிக் கொத்தில் நாம் அடிக்கடி பயன் படுத்தும் சாவியில் நெயில் பாலிஷ் சிறிது தடவினால் பளிச்சென்று நமக்கு தெரியும். அவசரத்தில் தடுமாற வேண்டாம்.

2. ஊசியில் நூலை கோப்பது பேரும் பாடு. அதை தவிர்க்க நூல் நுனியை சோப்பு கட்டியில் அழுத்தி எடுத்தால் நூல் ஈசியாக ஊசியில் நுழையும். சேய்து பாருங்கோ.

3. நாம் எழுமிச்சை பழத்தை பிழிந்து அந்த தோலை தூக்கி எரியாமல் அதை எடுத்து குளிர் சாதன பெட்டியில் வைத்தால் அதில் ஏற்ப்படும் கெட்ட வாடை நீங்கிவிடும்..

4. மழைக்காலத்தில் ஒரு சில நேரத்தில் பாசி பிடித்து விடும். அதை அக‌ற்ற‌ அந்த‌ இட‌த்தில் சிறிது க‌ல் கோல‌மாவை தூவுங்க‌ள். பிற‌கு பிர‌ஷ்ஷால் தேயித்தால் ப‌ளிச்சுன்னு ஆகிடும்.

5. ரோஜாச் செடியில் வாழைப்ப‌ழ‌த் தோலை ந‌றுக்கிப் போட்டால் செடியும் ந‌ன்றாக‌ வ‌ள‌ரும். பூக்க‌ள் உங்க‌லை பார்த்து சிரித்து உங்க‌லுக்கு ந‌ன்றி சொல்லும்.

6. மிக்ஸியை விட‌ கிரைண்ட‌ரை அதிக‌ம் உபயோகித்தால் க‌ர‌ண்ட்டு மிச்ச‌ம். மிக்ஸியீ அதிக‌ம் க‌ர‌ண்டை ஈழுக்கும்.

7. முருங்கை ம‌ர‌த்தைக் வீட்டின் கொல்லைப் புற‌த்தில் வைப்ப‌தை விட‌ வீட்டில் முன் புற‌ம் வைத்தால் ம‌ர‌ம் செழிப்ப‌க‌ வ‌ள‌ரும். அதிக‌ம் காய்க்கும். ஏனெனில் அங்குதான் வண்டி சொல்லுகிரது. அதனால் ஏற்ப்படும் நில அதிரிவுர் தான் காரணம்.

8. கமலா ஆரஞ்சு பழம் மேல் தோல் சொர சொரப்பாக பார்த்து வாங்கனும்.

9. சாத்துக்குடி தோல் வழுவழுப்பாக இருக்கும்படி பாத்து வாங்கனும்.

10. நாம் கோலம் போட்டு கலர் போடும் முன்பு மைதாவை கஞ்சி போல் ( கன்சி வைத்து ) செய்து கலர் தூவும் இடத்தில் பஞ்சியால் தேய்த்து பின்பு தூவினால் காற்றிலும் பறக்கது. சீக்கிரத்தில் அழியாது.

11. கிருஷ்ண ஜெயந்தில் கண்ணன் கால் போடும் போது தரை வெள்ளையாக இருந்தால் பளிச்சுன்னு தெரியாது. அதனால் அரிசி மாவில் கொஞ்சம் மைதா மாவு, கேசரி பவுடர் போட்டு கலந்து கால் வைத்தால் பளிச்சுன்னும் இருக்கும். அழகு கொஞ்சும். சீக்கிரம் அழியவும் அழியாது.

12. நோயாளிக்குப் பயன்படும் வெந்நீர்ப் பையிலொ சிறிது உப்பு சேர்த்தால் அதிக நேரம் வெந்நீர் சூடு குறையாது.

13. டிஷ்யூ பேப்பரில் மூக்கு கண்ணாடியைத் துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.

14. ஒருசிலர் அஜினோமோட்டோ என்ற உப்பு அதிகம் சேர்க்கின்றனர். அது உடலுக்கு நல்லது இல்லை. அதை சேர்ப்பதால் நரம்பு சம்மதமான நோய்கள் வருகிற‌து என்று கண்டரிய பட்டு உள்ளது. அதனால் குறைவாக உபயோகிக்கவும்.

15. வெள்ளி பாத்திரம் அல்லது ஆபரணம் வைக்கும் கவர் அல்லது பெட்டியில் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி கறுப்பாகாது.

ஆழ்கடல் கள‌ஞ்சியதின் நன்றிகள்.


தமிழிஷ் வெப் த‌ள‌ம் என் த‌ள‌த்தில் இருந்து அனுப்பிய‌
" க‌ல்யாண‌ முருங்கை தோசையையும்" , " மார்ப‌க‌ புற்று நோய்யும் "
ஏற்றத‌ற்க்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி.
இந்த தளத்தில் தொடர்ந்து வந்து பதிவு இடும் அனைவருக்கும் என் நன்றிகள்.

நன்றி இமா அம்மா.

நன்றி அண்ணாமலை அண்ணா.

நன்றி டாக்டர்.

நன்றி சிவா அண்ணா.

நன்றி தமிழன் அண்ணா.

நன்றி ராம்ஜி.

நன்றி வாணி.

நன்றி மேணகா அக்கா.

மற்றும் பதிவு போட முடியாமல் என் பிளகில் இருப்பதை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "