...

"வாழ்க வளமுடன்"

23 செப்டம்பர், 2011

இதயத்தின் நண்பன் பாதாம் :)


பாதாம் பருப்பினால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைப்பதோடு, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பாதாமில் உள்ள புரதச்சத்து மிகவும் தரம் வாய்ந்தது.

25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் தன்மை கொண்டது. 80 சதவிகிதம் கரையாத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது.


இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. இதனால் பாதாமை ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது. எனவேதான் பாதாம் ஒரு உயர்தர உணவாக கருதப்படுகிறது.


பாதாம் உடலுக்கு வலிமை, வீரியம் இவற்றை தருகின்றது. சத்து நிறைந்த பாதாம் இந்தியாவில் பஞ்சாபிலும், காஷ்மீரிலும் அதிக அளவில் விளைகின்றது. மிகச் சிறந்த பாதாம் பருப்புகள் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் விளைகின்றன. அங்கு பாதாம் பயிரிடுபவர்கள் இணைந்து “கலிஃபோர்னியா பாதாம் போர்டு” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, உலகெங்கும் பாதாம் பருப்பை விற்பனை செய்கின்றன.

செயல்திறன் மிக்க சத்துக்கள்

பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்த மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் உள்ளன. இவை கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் காணப்படுகின்றன.


வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது

பாதாம் எண்ணெய்

பாதாமில் இரண்டு வகை உண்டு. ஒன்று இனிப்பு பாதாம், மற்றொன்று கசப்பு பாதாம் இனிப்பு பாதாமில் பூக்கள் மென்மையாக இருக்கும். கசப்பு பாதாமின் இலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

இனிப்பு பாதாமிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. உடலை மசாஜ் செய்ய பெரும்பாலும் இனிப்பு பாதாம் எண்ணெயே பயன்படுத்தப்படுகின்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பாதாம் எண்ணெயானது தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செரிந்தது. இது அனைத்துவகையான சருமத்திற்கும் ஏற்றது.

பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது.சரும வறட்சி, அரிப்பு, போன்றவைகளுக்கு பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது.

தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது.


செரிமானக் கோளாறுகளை நீக்கும்

நமது பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து உணவு செரிமானத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே செரிமானக்கோளாறு உள்ளவர்கள் பாதம் பருப்பை உண்ணுவதால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் குணமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பவர்கள் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

வயிற்றுக்கு ஏற்ற பாதாம் பால்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாயில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது.

இதயத்தின் நண்பன்

ஓட்ஸ்,சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை கூட்டுவதில்லை என்றால் பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல.

பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது.


தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.



பாதாம் அல்வா



தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 70 பருப்புகள்
சர்க்கரை - 31/2 டம்ளர்
ஜிலேபி பவுடர் - 1/2 ஸ்பூன்
நெய் - 2 டம்ளர்
பால் - 31/2 டம்ளர்
பாதாம் எஸென்ஸ் - 4 துளிகள்
பாதாம் அல்வா மடிக்கும் டிரேஸ் பேப்பர் - 70

செய்முறை:

முதலில் பாதாம் பருப்புகளை வெந்நீரில் ஊறவைத்து, தோல் நீக்கிப் பால் விட்டு சற்று நரநரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அதிலேயே மீதிப்பாலை விட்டு அடுப்பில் வைத்துப் பால் பாதி சுண்டியதும், சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அது நன்றாகக் கரைந்தவுடன் கேச‌ரி பவுடர் சேர்த்து, 1/4 டம்ளர் நெய்யை ஊற்றவும். பாதாம் எஸென்ஸ் சேர்த்து நன்கு கெட்டியாகி அல்வாப் பதத்தில் வரும்போது, இறக்கி வைத்து மீதி நெய்யை சிறிது சிறிதாக விட்டு நன்கு கிளறி ஆறவிடவும்.

சற்றே ஆறியதும், டிரேஸ் பேப்பரில் கலவையை ஒவ்வொரு ஸ்பூனாக வைத்து நான்கு பக்கமும் அழுத்தாமல் மடிக்கவும்.

சுவையான இந்த அல்வா ஒரு மாதம் வரைகூடக் கெடாமல் இருக்கும்!



***
thanks gmu
***



"வாழ்க வளமுடன்"

20 செப்டம்பர், 2011

குழந்தைப் பேறின்மை எதனால்?

*

தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது சித்த மருத்துவம்.

நூற்றுக் கணக்கில் செலவழித்து டானிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:-

குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?

"பாரப்பா பெண்மலடாங் கற்பக் கோளின்
பக்குவத்தைச் சொல்கிறேன் பக்குவமாய்க் கேளு
ஆரப்பா ஆண் மலடே யாகுல்லாமல்
அப்பனே பெண் மலடு யாருமில்லை"

- அகத்தியர் கர்ப்பக் கோள்

என்ற பாடலின்படி கருப்பை சினைப்பை, கருக்குழல், கருவாய் இருந்தால் பெண் மலடு என்ற பேச்சுக்கே சித்த மருத்துவத்தில் இடமில்லை. சித்த வைத்தியம் முடிந்த முடிவான மருந்து. சித்தர்கள் சொன்ன மூலப்பொருளைக் கொண்டு சொல்லிய முறையில் தயாரித்தால் நோய் நீக்குவது மட்டும் அன்றி நோய் வராமலும் தடுக்கலாம்.

பெண்ணை பூமாதேவி என்று அழைக்கிறார்கள். பூமியில் எந்த மண்ணிலும் விதை போட்டு தாவரங்களை வளர்க்கலாம். அதனால் பெண் மலடு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் கடலும் கடல் சார்ந்த இடத்திலும் மலையும் மலைசார்ந்த இடத்திலும் வயலும் வயல் சார்ந்த இடத்திலும் காடும் காடு சார்ந்த இடத்திலும் பாலையும் பாலை சார்ந்த இடத்திலும் செடி, கொடிகளை வளர்க்கலாம். இந்த வகையில் பெண்களுக்கு மலடு என்ற சொல்லே இல்லை.

"இசைந்ததொரு பெண்மலடு எங்குமில்லை
எதனாலே மலடான சேதி கேளு
அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாயுவாலும்
பிசைந்த கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும்
பிணியாலும் மேகி வைசூரியாலும்
துசங்கெட்ட கலவியினால்
துலங்காமல் பிள்ளையில்லை சொல்லிக்கேளே"

பேயாலும் என்பது மனநிலை குன்றிக் காணப்படுவதைக் குறிப்பிடுகின்றனர். சாதாரணமாக (Psychosomatic Disorder, Hysteria) மனநலம் பாதிக்கப்படுவதால் குழந்தை பேறடைய முடிவதில்லை.

பித்தத்தாலும் என்பது நம் உடலில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் மாறுபாடுகளினால் தாய்மை அடைவது தடுக்கப்படுகிறது.

வாயுவாலும் அடிவயிறு நொந்து வரும் வாயுவாலும் என்பது மாதவிடாய், வயிற்று வலி, குதக வாயு, சூதகக்கட்டு மற்றும் அடிவயிற்றில் காணப்படும் உள்உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பையும் குறிப்பிடுவதாகும்.

கர்ப்பப் புழுவாலும்- கர்ப்பப் புழு என்பது கருப்பையில் காணப்படுகின்ற கர்ப்பப் புழுவைக் குறிக்கும். இவை கருப்பையை வந்தடையும் விந்துவை அழித்துவிடுவதால் கருத்தரிப்பதில்லை (Vaginal acidity).

கிரகத்தாலும் பிணியாலும் என்பது சிலருக்கு அடிவயிறு உறுப்புகளில் தொற்றுக் கிருமிகளால் (Infection) ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஏற்படும் விளைவைக் குறிக்கும். அதாவது (Peritonitis Salphingitis) போன்றவையும் ஒரு காரணமாகிறது. இதனால் கருப்பைக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் கருப்பையில் காசநோய்க் கிருமிகள் (Tuberculosis) பாதித்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.

கருத்தரிப்பதற்குத் தடையாக இருக்கும் நோய்கள் எவை?

மேக நோய்: மேக நோயினைத் தொடர்ந்து (Venereal Disease) கிருமிகள் தாக்குதலுக்கு கர்ப்பப் பை ஆளாவதால் நாள்பட்ட நிலையில் (Chronic Pelvic Inflammatory Disease) இது சரியாகக் குணப்படுத்தப்படாமல் இருந்தாலும் குழந்தைப் பேறு பாக்கியம் அடைவதில் தடை ஏற்படுகிறது.

வைசூரி: அம்மை நோய்கள் போன்று வைரஸ் கிருமிகள் உடலில் ஏற்படுத்துகின்ற பாதிப்பு பெண்ணுக்கு குழந்தைப் பேறின்மையை உண்டாக்குகிறது.

அறியாத கலவியினால்...: இது மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டியதாகும். சில தம்பதியர்க்கு தாம்பத்திய உறவு பற்றி தெளிவான அறிவு காணப்படுவதில்லை. தாம்பத்திய உறவைப் பற்றி போதிய அளவுகூடத் தெரியாமல் சிலர் இருக்கின்றனர். குறிப்பிட்ட நாள்கள் முக்கியமானது என்பதும் தெரிந்திருக்கவேண்டும். இதுவும் குழந்தைப் பேறின்மைக்கு ஒரு காரணமாகின்றது.

இவ்வகைக் காரணங்களால் ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைக்குத் தனித்தனியாக சிகிச்சை முறைகளும் மருந்துகளும் தெளிவாகத் தொகுத்துக் கொடுத்துள்ளனர். இதனை நுட்பமாகப் புரிந்து கொண்டு சிகிச்சையளித்தால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைத் தன்மையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

மேலும் சித்த மருத்துவத்தில் கருக்குழாய் அடைப்பு, (Fallopian tube block), சினைப்பை கட்டிகள் (PCOS) கருப்பை சவ்வு அழற்சி (Endometriosis), ஒழுங்கற்ற மாத விலக்கு (Irregular Menstruation), கருப்பைக் கழலை (Fibroid Uterus), பெரும்பாடு (அதிகமாக கட்டி கட்டியான உதிரப்போக்கு), தைராய்டு சுரப்பி கோளாறு (Thyroid Dysfunction), சினை முட்டை சரிவர வளராமை போன்ற காரணங்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பப்பை கோளாறுகளின் அறிகுறிகள் என்ன?

கருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது கணைச் சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெய்யை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்து கொடுக்கப்படுகிறது.

இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச் சூடாக மாறும். இதனால் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோயிற்காக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.

கர்ப்பப் பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்?

நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள்தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்த மாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் "பாஸ்ட் புட்" கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப் பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.

முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும்.தேனும் தினைமாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.

நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவைகள் உருவாகி மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.

சித்த மருத்துவத்தில் நோய் தீர்க்கும் வழிமுறையும் நோய் வராமல் தடுக்கும் முறையும்...: எஸ்.கே.எம். சித்த மருத்துவமனையில் தேரையர் சித்தர் அருளிய நோய் அணுகா விதிகளை பின்பற்றி வருகிறோம். முதலில் உடலைச் சுத்தம் செய்ய வேண்டும். வாரத்துக்கு இருமுறை (செவ்வாய்-வெள்ளி இரு தினங்கள் மருந்து சாப்பிடும் முன்பு) எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் நம் உடல் சூடு, கண் எரிச்சல், உடலில் ஏற்படும் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.

பிறகு ஆண்டுக்கு 2 முறை பேதி மருந்து எடுக்க வேண்டும்.பருவ கால மாற்றத்தால் வரும் நோய்களை வராமல் தடுப்பதற்கு நாங்கள் 3 நாள் பேதி மருந்து கொடுக்கிறோம். நோய்க்குத் தக்கவாறு கலிங்காதி தைலம், மலை வேம்பாதி தைலம், லவணகுணாதி எண்ணெய், சித்தாதி எண்ணெய், அகத்தியர் குழம்பு போன்றவற்றை உடல் நிலைக்கு, நோய்களுக்கு, காலத்துக்குத் தக்கவாறு மருந்துகளை வழங்குகிறோம்.

45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை) செய்கிறோம். மூக்கிற்கும், மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, செக்ஸ் உறவு பற்றிய போதிய விவரம் தெரியாமை போன்ற காரணங்களினால் அதிக உதிரப்போக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை உதிரப்போக்கு,

ஒரு நாள் மட்டும் தீட்டு படுதல், சிறுநீர் கழிக்கும்போது தீட்டு படுதல் போன்ற காரணங்களுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை செய்து எல்லாம் இயல்பாக இருந்த பெண்களுக்கு நசியம் செய்து கொடுத்து மகப்பேறு அடைந்துள்ளனர்.

மாதவிலக்கு உண்டான 3 நாள்கள் மூலிகை கற்கங்களை காலையில் 6 மணிக்கு நீராகாரம் (அல்லது) மோரில் அரைத்துக் கொடுத்து அநேகம் பேர் மகப்பேறு அடைந்துள்ளனர்.

கலிக்கம் (கண்ணில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை): ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கலிக்கம் செய்கிறோம்.

உடலை நோய் வராமல் இருக்கச் செய்யும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உடலே Ovulation-I உணரும் வகையில் செய்யலாம்.

இனப்பெருக்க உறுப்புகள் பலமடைய ஆசனங்கள் உதவுமா?

இதைப் பின்பற்றிப் பலருக்கு குழந்தைச் செல்வம் உண்டாக்கி இருக்கிறோம். காலையில் எழுந்தவுடன் வாசல் தெளித்தால் கிருமிகள் வீட்டில் வராமல் இருக்கும். அதே சமயம் நல்ல பிராண வாயுவை உள்வாங்கி ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து நோய் நிலையைக் குணப்படுத்திவிடும்.

காலையில் எழுந்து குளித்து கோலம் போட்டால் மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாகச் செல்லும். அதனால் தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி உள்பட அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகச் செயல்படும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியன் முறை கழிப்பறையில் மலம் கழிப்பது குக்குடாசனம் என்ற ஆசனம்; வீடு மொழுகுதல்கூட ஆசனம்; பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் நம்மை அறியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு ஆசனம். அது 80 லட்சத்து 20 ஆயிரம் ஆசனம்.

உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன் உள்ள பெண்களுக்கு குழந்தைப் பேறின்மை ஏற்படுகிறது. இதற்குப் பல வைத்திய முறைகள் மேற்கொண்டு பணம் அதிகமாக செலவு செய்து மன உளைச்சல் ஏற்பட்டு வருந்துகிறார்கள்.

குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்து என்னென்ன?

குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் உள்ளன. என்ன காரணத்தில் மகப்பேறின்மை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருந்துகள் கொடுக்கப்படும். வெண் பூசணி லேகியம், கரிசாலைக் கற்ப மாத்திரை, வான்குமரி லேகியம், நரசிங்க லேகியம், குன்ம குடோரி மெழுகு, கர்ப்ப சஞ்சீவி எண்ணய், லவண குணாதி எண்ணெய், அஸ்வகந்தி லேகியம், நிலக்கடம்பு சூரணம், சதாவரி லேகியம், நந்தி மெழுகு, குன்ம உப்பு சூரணம், கர்ப்பப் பை சஞ்சீவி சூரணம், அகத்தியர் குழம்பு, அசோகப்பட்டை சூரணம், அமுக்கரா சூரணம், சித்தாதி எண்ணெய், கலிங்காதி தைலம், மேக ரா- எண்ணெய், பஞ்ச மூலிகை சூரணம், குமரி எண்ணெய், அதிமதுர சூரணம், திரிபலாக்கற்ப சூரணம், கடுக்காய் சூரணம், மலைவேம்பாதி தைலம், சண்டமாருத செந்தூரம், புங்கம்பட்டை தைலம், திரிகடுகு ஆறுமுக செந்தூரம் ஆகிய மருந்துகள் உள்ளன.



by - டாக்டர் பி. பாரதி பரமசிவன், 2008.

***
thanks டாக்டர்
***



"வாழ்க வளமுடன்"

பெண்களே! தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்!

*
ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 விஷயங்கள்...


1. ஆரோக்கியமாக இருங்கள்

முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.


2. சரியான விதத்தில் சாப்பிடுங்கள்

மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.


3. தீய பழக்கங்கள் கூடாது

புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும்உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.


4. சரியான நேரம்

ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும்.


5. பாலியல் அறிவு அவசியம்

படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.


6. உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்

கர்ப்பம் தரிக்கும் பெண் உடல்ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.


***
நன்றி: தமிழ்சோர்ஸ்
***



"வாழ்க வளமுடன்"

16 செப்டம்பர், 2011

இயற்கை முறையிலேயே சில நோய்களுக்கான தீர்வுகள்



நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களிலேயே பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.


1. சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.


2. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.



3. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால் முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.



4. ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.



5. துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.



6. தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.



7. அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்..


***
thanks தை.ஜேசுதாஸ்
***




"வாழ்க வளமுடன்"

குளிருக்கு எதிராக உடம்பின் தற்காப்பு!

*
குளிர் என்பது இயற்கையாகத் தோன்றக்கூடிய ஒரு விளைவு. குளிர் காலத்தில் குளிர் உணர்ச்சி தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்தக் குளிர் தன்மை, தேசத்துக்குத் தேசம் வேறுபட்டிருக்கும்.

ஆண்டு முழுவதும் குளிராக உள்ள பல நாடுகள் உண்டு. அந்த நாடுகளில் குளிர் காலங்களில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். என்றாலும் அந்த நாட்டு மக்கள் குளிரைத் தாங்கும் உடைகளை அணிந்து சூழ்நிலையை எளிதாகச் சமாளித்துவிடு கிறார்கள்.

ஆனால் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்றால் அங்குள்ள கடும் குளிரைச் சமாளிப்பதற்கு அதிகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் பொதுவாக மனிதன் ஒரு வெப்பமண்டலப் பிராணிதான். மனித உடலுக்குப் பொதுவாகக் குளிர் பிடிக்காது.

குளிர் அதிகமாகும்போது உடல் தனது வெப்பநிலையை பராமரிக்கப் பாடுபடுகிறது.

தோலுக்கு அருகில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி அவற்றில் ரத்த ஓட்டம் குறைகிறது. அதன்மூலம், ரத்தத்தில் இருந்து வெப்பம் வெளியேறுவது குறைக்கப்படுகிறது. உடலின் உட்பகுதிகளில் சூடான ரத்தம் தங்கி, அவற்றைச் சேதப்படாமல் காக்கிறது.

பனிப் பிரதேசங்களில் நடமாடும்போது மேல் தோல் உறைந்து `செத்துவிடும்'. அதை `பனிக்கடி' என்கிறார்கள். இது, குளிரால் தோலுக்குப் போதுமான அளவில் ரத்தம் பாயாததால் ஏற்படுகிறது.

ஒரு வகையில் பார்த்தால், குளிரால் உள்ளுறுப்புகள் சேதம் அடையாமல் இருக்க மனிதன் கொடுக்க வேண்டியிருக்கும் விலையாகக் கூட அதைக் கூறலாம்.

குளிரான காலநிலையில் தோலுக்கு அதிக ரத்தம் பாய்ந்தால் உள்ளுறுப்புக்குத் தேவையான வெப்பம் உடலில் இருந்து வெளியே போய்விடும்.

எனவே, சுற்றுப்புறத்தில் குளிர் அதிகமாகிறது என்ற நிலை ஏற்பட்டவுடன் தோலில் உள்ள உணர்வுறுப்புகள் மூளைக்குத் தகவல் அனுப்புகின்றன. உடனே அனிச்சை நரம்பு மண்டலம் துரிதமாகச் செயல்படத் தொடங்குகிறது.

இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது. அட்ரினலின் சுரப்பி அதிக அளவில் சுரக்கத் தொடங்குகிறது. உடலில் வளர்சிதை மாற்றம் துரிதம் அடைந்து வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தத் தூண்டல்கள் எலும்புத் தசையை எட்டிவிடும். தசைகள் தாமாகவே வெடவெடக்கத் தொடங்குகின்றன. அதனால் உடற்செயலியல் மாற்றம் கணிசமாக அதிகமாகிறது. குளிர் மிக அதிகமாகிவிட்டால் உடல் தூக்கித் தூக்கிப் போடும். அப்போது உடலுக்குள் வெப்ப உற்பத்தி நான்கு மடங்காக அதிகரிக்கும்.

இவ்வாறு வெடவெடப்பது மட்டும் போதாது. ஏனெனில் அது புதிதாக வெப்பத்தை உற்பத்தி செய்வதில்லை. எனவே உடனடியாக தகுந்த தற்காப்பு முறைகளை நாம் நாட வேண்டும்.


***
thanks siva
***



"வாழ்க வளமுடன்"

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன.


சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.

இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?

பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.

வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும்.

250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது.

உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.


குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது.

ஒரு கப் காபியில் 70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 – 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள்ளது.

இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன.

இதனால், எலும்பு முறிவு ஏற்பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படுகின்றன.


குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும்.


காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும்.


கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.



***
நன்றி-தினமலர்
***



"வாழ்க வளமுடன்"

15 செப்டம்பர், 2011

கர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய 10 வழிகள்.



1. சமவீத உணவை உட்கொள்ளல்:

பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. போலிக் அமிலம் மாத்திரைகள்:

நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:

மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:

கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.

6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:

உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.

7. டோக்சோ பிளாஸ்மோசிஸ்

இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.

8. பரிசோதனை நேரம்:

கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.

9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:

அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.

10. புகை பிடித்தலை தவிர்த்தல்:

எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.

மேலும் சில துணுக்குகள்:

1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.

3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.

4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.

5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.

*

ஆணின் பங்கு என்ன?

ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

1. நல்ல ஆரோக்கியமான உணவு
2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் - புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.
3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்
4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.


***
thanks medicineinfo
***


"வாழ்க வளமுடன்"

09 செப்டம்பர், 2011

உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?!

*

தேசிய கண்தான இரு வார விழா - ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை

இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வையற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது.


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனுசரிக்கப்படுகிறது.

அன்றைய தினம் கண் தானம் செய்வது புனிதமான மற்றும் அவசியமான செயல் என்று அனைவருக்கும் எடுத்து சொல்லப்படுகிறது. பார்வையின்மையை கட்டுப்படுத்தும் தேசிய வார விழாவாக இது அனுசரிக்கப்படுகிறது.

கண் பார்வை இழப்பு என்பது இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

மதங்களும் ஆதரிக்கின்றன..!

அனைத்து ஜாதிகளும் மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுகின்றன.

இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய கண்கள் தானமாக கொடுக்கப்பட்டால் இறந்த பிறகு அவரின் கண்கள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள்.

எந்த வயதுள்ளவரும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை (காட்ராக்ட்) செய்துக் கொண்டவர்களும் கூட தானம் அளிக்கலாம்.

எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, வெறிநாய்க்கடி, பாம்பு கடி போன்றவற்றால் இறந்தவர்களின் கண்கள் தானமாக பெற மாட்டார்கள்.

இறந்தவரின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்தமாட்டார்கள். கண்ணிலுள்ள கார்னியா என்ற கருவிழியை மட்டும் எடுத்து பார்வையிழந்தவருக்கு பொருத்துகிறார்கள். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது.

எப்படி தானம் செய்வது?

* கண்தானம் செய்வது எளிது. உயிருடன் இருக்கும் போதே இதற்கான உறுதிமொழி படிவத்தை அருகில் உள்ள கண் வங்கியில் கொடுத்து வைத்து விடலாம். இத்தகவலை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து கண் வங்கியின் தொலைபேசி எண்ணையும் கொடுத்து வைத்திருந்தால், இறந்த பிறகு கண் தானம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

* கண்களை ஏற்கனவே உறுதி மொழி கொடுக்காவிட்டாலும் தானம் செய்யலாம். கண்களை விலைக்கு வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம்.

* ஒரு மனிதன் இறந்தபிறகு மட்டும் கண்களை தானம் செய்ய முடியும்.

* இறந்த சுமார் 6 மணி நேரத்திற்குள் இறந்தவரின் கண்களை எடுத்து பாதுகாத்துவிட்டால், பார்வையற்றவருக்கு அதை பொறுத்த முடியும்..

* கண் வங்கி குழுவினர் வந்து இறந்தவர் உடலிருந்து கண்களை எடுக்கும் வரை அந்தக் கண்களை பாதுகாப்பது மிக முக்கியம். கண்களில் சுத்தமான தண்ணீர் விட்டு கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். அல்லது கண்களை மூடி அதன் மீது சுத்தமான ஈரத் துணியை போட்டு மூடி வைக்க வேண்டும்.

* இறந்தவர் உடலிருந்து கண்களை எடுக்க 15-20 நிமிட நேரமே ஆகும்.

* கண்களை எடுப்பதால் எடுத்தற்கான அறிகுறியோ, இறந்தவரின் முகம் விவகாரமாகவோ ஆகாது என்பது உறுதி. தேவைப்பட்டால் செயற்கை கண்களை கூட பொருத்திவிடலாம்.

இலங்கையின் உதவி..!

மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவு. ஆனால், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டிலும் அதற்கான முழு விழிப்புணர்வு வந்து, நாமும் அனைஅவ்வாறு கண் தானம் செய்யும்பட்சத்தில் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்ய முடியும்.

கண் பார்வையை பாதுகாக்க டிப்ஸ்..

* போதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல்

* கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்க கூடாது. தண்ணீரால் கண்களை சுத்தம் செய்யவும்

* கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது டிவி பார்க்கும் போது அடிக்கடி கண்களை மூடி திறக்கவும். அதாவது கண்களை சிமிட்டவும்.

* பால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிடவும்.

* வாகனம் ஓட்டும் போது (கண்ணாடி அணியாதவர்கள்) பவர்லெஸ் கண்ணாடி அணியுங்கள்.

* 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் கண்களை பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்

* நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்யவும்.

இரு யோசனைகள்..!

* நம் நாட்டை பொறுத்த வரையில் பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அப்படி ஏறப்டும் போது இறந்த நபரின் கண்களை பெறும் முயற்சியை மருத்துவமனை மேற்கொள்ளலாம். ஒப்புதல் படிவங்களில் கணவன்/மனைவி/மகன்/மகள் அல்லது பொறுப்பான உறவினரின் கையப்பத்தை பெற்று கண்களை எடுத்து, தேவைப்படுவருக்காக வைத்துக் கொள்ளலாம்.

* உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாராவது திடீரென மரணமடைந்து விட்டால் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, தொலைபேசியில் தகவல் கொடுத்தால் போதும். மருத்துவமனையில் இருந்து நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவார்கள்.

கண் தானம் வீடியோ ரிப்போர்ட்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=U10WN_l99Q4



- சி.சரவணன்


***
thanks யூத்ஃபுல் விகடன்
***



"வாழ்க வளமுடன்"

ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ்: படிப்பைவிட இது முக்கியம்!


''வெளிநாடுகளுக்குப் போய் என்ன படிக்க வேண்டும் என நம்மூர் இளைஞர்களுக்குத் தெரிகிற அளவுக்கு, எந்தெந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் இழப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது தெரிவதில்லை. சில ஆயிரம் ரூபாயைக் கவலைப்படாமல் கட்டினால், பல லட்ச ரூபாய் செலவை எளிதாக தவிர்க்க முடியும்'' என்கிறார் நிதி ஆலோசகரான வி.ஹரிஹரன். எப்படி என்பதையும் அவரே விளக்கிச் சொன்னார்.

''இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள். இந்த மாணவர்களில் வெறும் 10 சதவிகிதத்தினரே ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. மாணவர் மற்றும் பெற்றோர் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே இதற்கு காரணம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில்தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். அப்போதே இந்த இன்ஷூரன்ஸை எடுத்துக் கொண்டால் நல்லது'' என்றவர், வெளிநாடு செல்லும் மாணவர்கள் என்னென்ன இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

டிராவல் இன்ஷூரன்ஸ்!

''வெளிநாட்டுப் பயணத்தின் போது, இந்தியாவிலிருந்து கிளம்பி அங்கு சென்று சேரும் வரை இந்த பாலிசி பயனளிக்கும். விமானப் பயணத்தின்போது ஏற்படும் விபத்து மற்றும் உடல்நிலை பாதிப்பு, லக்கேஜ் காணாமல் போவது, பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ் போன்றவைகள் காணாமல் போவது, தீவிரவாதி களால் விமானம் கடத்திச் செல்லப்படுவது, விமானப் பயணம் காலதாமதமாவது போன்ற காரணங்களுக்கு இந்த பாலிசியில் இழப்பீடு கிடைக்கும்.

60 முதல் 90 நாட்களுக்கான படிப்பு என்றால், போக - வர சேர்த்து டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். வருடக் கணக்கில் சென்று படிக்கப் போகிறார்கள் எனில், போகும்போது தனியாக டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொண்டு, வரும்போது தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ்!

பொதுவாக ஒரு இடத் திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது தட்பவெப்பநிலை காரணமாக உடல்நிலை பாதிப்படையும். இந்தியாவில் ஆகும் மருத்துவச் செலவைவிட வெளிநாடுகளில் பல மடங்கு கூடுதலாகச் செலவாகும். அந்த வகையில் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். ஆக்ஸ்ஃபோர்டு போன்ற பல்கலைக் கழகங்கள் அனைத்துவிதமான அம்சங்களும் அடங்கிய பாலிசியை காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கி, அதற்கான செலவை

கட்டணத்துடன் சேர்த்து விடுகின்றன. சில பல்கலைக் கழகங்களில் இந்த வசதி கிடையாது. அப்படியே இருந்தாலும் பிரீமியம் அதிகமாக இருக்கும். இதை அலசி ஆராய்ந்து பல்கலைக் கழக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதா? அல்லது தனியாக மெடிக்ளைம் பாலிசி எடுப்பது நல்லதா என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

கவனிக்க வேண்டியவை..!

எவ்வளவு காலம் வெளிநாட்டுக்குப் படிக்க போகிறீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி பாலிசியை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே ஏதாவது ஒரு நோய் இருந்தால் அதை பாலிசி எடுக்கும்போது மறக்காமல் குறிப்பிடுங்கள்.

மருத்துவமனை மற்றும் மருத்துவமனை அல்லாத சிகிச்சைகள் என இரண்டு விதமாக கவரேஜ் இருக்கிறது. தேவைக்கேற்ப இதை எடுத்துக் கொள்ளலாம்.

வெளிநாடுகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், பெற்றோர்கள் அங்கு செல்வதற்கும், உடலை இந்தியா கொண்டு வருவதற்கும் ஆகும் செலவுகளைச் சேர்த்து கவரேஜ் கிடைக்கும்படியாக பாலிசி எடுக்கலாம்.

கலவரம், உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் படிப்பு தடையானால் ஏற்படும் இழப்புக்கும் சேர்த்து கவரேஜ் இருக்க வேண்டும்.

கிளைம் எப்படி வாங்குவது?

இங்கிருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து பாலிசியை விற்கின்றன. எனவே, இந்தியாவில் பாலிசி எடுத்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றால், இங்குள்ள நிறுவனம் நீங்கள் எடுத்திருக்கும் பாலிசியின் வெளிநாட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா டெலிபோன் நம்பரை கொடுத்துவிடும். அந்த நம்பரை தொடர்பு கொண்டால் கிளைம் விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் மற்றும் கவரேஜ்!



எல்லாம் சரி, இதற்கு எவ்வளவு பிரீமியம் என்றுதானே கேட்கிறீர்கள். 23 வயதான ஒரு மாணவர், ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கவரேஜ் கிடைக்கும் வகையில் இரண்டு வருட பாலிசிக்கு ஆண்டுக்கு 31,000 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். டிராவல், மெடிக்ளைம் மற்றும் தனிநபர் விபத்து பாலிசிகளை உள்ளடக்கியது இந்த பாலிசி.

மருத்துவச் செலவு - 50,000 டாலர், அசம்பாவிதம் - 1 லட்சம் டாலர், பொதுவான சிகிச்சை - 250 டாலர், பாஸ்போர்ட் காணாமல் போனால்- 200 டாலர், லக்கேஜ் காணாமல் போனால் - 1,000 டாலர், தனிநபர் விபத்து - 10,000 டாலர், படிப்பு இடையில் தடைப்பட்டால் - 7,500 டாலர், தற்செயல் பாதிப்பு - 1 லட்சம் டாலர் போன்ற அம்சங்கள் கவராகும்.

மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒன்று நடந்து கிளைம் கிடைத்தால் அதுபோக மீதி இருக்கும் தொகையைத்தான் மீண்டும் கிளைம் செய்ய முடியும்'' என்று முடித்தார்.

இனியாவது வெளிநாட்டுக்குப் படிக்கப் போகும் மாணவர்கள் இந்த பாலிசியையும் எடுத்துக்கொண்டு பறந்தால் எந்தச் சூழ்நிலையிலும் பதற வேண்டியதிருக்காது.


***
thanks யூத்ஃபுல் விகடன்
***



"வாழ்க வளமுடன்"

ஜிம் செய்யாமலே ஜம் என்ற தோற்றம் வேண்டுமா

*

உடற்பயிற்சி செய்தால் தசைகளுக்கு நல்லது என்று யாருக்குத்தான் தெரியாது?

ஆனால் தினமும் சிறிது நேரம் கூட இதற்காக ஒதுக்க முடியாத நிலை பல பெண்களுக்கு இருக்கலாம். தவிர இன்னும் கூட பல குடும்பங்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதைப் பிறர் கொஞ்சம் கிண்டலாகத்தான் பார்க்கிறார்கள்.

உடற்பயிற்சிக்காகத் தனியாக நேரமும் செலவாகக் கூடாது. நான் செய்யும் பயிற்சிகள் பிறருக்குப் பளிச்சென்று தெரியவும் கூடாது. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பெருமூச்சு விடும் பெண்களுக்கு இதோ சில வியக்கத்தக்க பயிற்சிகள்.

1. கொடுமையான விஷயம் வரிசையில் நிற்பதுதான். எப்படியோ எங்காவது அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது கூட அந்த நேரத்தில் பயனுள்ளதாக கழிக்க முடியும்.

உடலைச் சிறிதும் அசைக்காமல் கழுத்தை வலமும் இடமுமாக முடிந்தவரை அதிக அளவுக்குத் திருப்புங்கள். கழுத்துக்கும் இது நல்ல பயிற்சி. தெரிந்தவர்கள் யாரும் தட்டுப் படுகிறார்களா என்று கவனித்த மாதிரியும் இருக்கும்.

2. இந்தப் பயிற்சிகளைக் கூட வரிசையில் நிற்கும் போது செய்து பயனடையலாம்.

ஏதோ ஒரு சுவரில் சாய்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முட்டிகளை இலோசாக வளைத்தபடி முதுகுப் புறத்தை கொஞ்சம் கீழே கொண்டு வாருங்கள். இதைச் செய்யும் போது உங்கள் முதுகுப் பகுதியும் தலையும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் இருக்க வேண்டும்.

அதே நிலையில் உங்கள் தோள்களைப் பின்புறமாக இழுங்கள். ஏதோ இரண்டு தோள்களும் ஒன்றையொன்று தொட முயற்சிப்பது போல அப்படியே சில நொடிகள் இருந்து விட்டு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்

இப்போது ஆழ்ந்து சுவாசியுங்கள். சுவாசக் காற்றை வெளியேற்றும் போது உங்கள் வயிற்றுத் தசை முதுகெலும்பில் படும்படி இழுத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்படியே சில நொடிகள் இருங்கள். பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு வரலாம்.

3. ஒரு வேளை நீங்கள் உயரம் குறைவானவராக இருக்கலாம். அதனால் நீங்கள் சந்திக்க இருப்பவர் முதல் பார்வையிலேயே குறைவானவராக எடை போட்டு விடுவாரோ என்ற பயம் உங்களுக்குத் தோன்றலாம். இதற்கு நீங்கள் சில சாதாரண உடற்பயிற்சிகள் மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் கூட செய்யலாம்.

நீங்கள் உட்கார்ந்திருந்தாலும் சரி நின்று கொண்டிருந்தாலும் சரி மிக அதிகமான பரப்பளவை அடைத்துக் கொள்ளும்படி இருங்கள். அதாவது உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். தோள்கள் பின்புறம் செல்ல வேண்டும்.

கால்களும், பாதங்களும் ஒன்றுக்கொன்று குறுக்கே வைத்துக் கொள்ளாது இணைகோடுகள் போல தரையில் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவற்றின் மூலம் உங்களுக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுவதோடு உங்களுக்கே சுவாரஸ்யம் ஏற்படும். உங்களுக்கே தோற்றத்தில் உள்ள குறைபாடு தெரியாது.

4. உடலில் கீழ்ப்பகுதியைச் சிறிதும் அசைக்காமல் இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை வலதும் இடதுமாகத் திருப்புங்கள். (பார்ப்பவர்களுக்கு நீங்கள் யாரையோ தேடுவது போலிருக்கும்.).

ஏதாவது கூட்டம் குறைந்த பொது இடத்தில் நிற்கும் போது கூட இதைச் செய்யலாம். தொப்பைப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகி கொழுப்புச் சத்தில் ஒரு பகுதியையாவது காணாமல் போகச் செய்யும் இந்தப் பயிற்சி.

5. மணிக்கட்டுகளுக்கான பயிற்சி இது. இதை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

முஷ்டியை நன்கு இறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொன்றாக எல்லா விரல்களையும் அகலமாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மணிக்கட்டைச் சுழற்றுங்கள். பிறகு மணிக்கட்டை மேலும் கீழுமாக சில முறை உதறுங்கள். பிறகு மொத்த கையுமே தளர்த்தியாக விட்டுக் கொண்டு அசைத்துப் பாருங்கள்.

6. வீட்டில் யாருடனாவது தொலைபேசியில் பேசும் போது ஒரு கைதானே ரிஸ’வரைப் பிடித்துள்ளது. இன்னொரு கையும் உடலின் மற்ற பல பகுதிகளும் ஏன் வேஸ்டாக இருக்க வேண்டும்? இதோ சில பயிற்சிகள்.

ரிசிவரை இடது கையில் வைத்திருந்தால் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வலது கையில் கனமான ஒரு பொருளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். (அதற்காக அம்மிகுழவி லெவலுக்குப் போய் விட வேண்டாம். ஒரு பேப்பர் வெயிட், கனமான புத்தகம் இப்படி இருக்கலாம்.)

இப்போது அந்த எடையை உச்சிக்குத் தூக்குங்கள். ஏதோ மேல் கூரையைத் தொடுமளவிற்கு பிறகு உங்கள் தலைக்குப் பின்புறம் வழியாக அதை நன்கு கீழே கொண்டு வாருங்கள்.

பிறகு அதைப் பக்கவாட்டில் இங்குமங்குமாக ஆட்டுங்கள். அதாவது உங்கள் மார்புப் பகுதியை நோக்கி கொண்டு வருவது போலிருக்க வேண்டும். பிறகு மெதுவாகப் பக்கவாட்டில் இறக்குங்கள். தரையைத் தொடுவது போல முயற்சி. தொடர்ந்து சில தடவைகள் செய்யுங்கள். அடிக்கடி செய்தால் கைகள் வலிமை பெறும்.

7. உட்கார்ந்திருக்கும் போது பின்புறம் உட்காரும் பகுதியில் உள்ள தசைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படியே உங்கள் இரு கால்களையும் நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை நன்கு உள்ளுக்கிழுக்க வேண்டும்.
நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலி அல்லது சோபாவினுள் உங்கள் கையை நுழைத்து அதைத் தூக்குவது போல் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் ஒரு உற்சாகம் வரும். எதிர்மறை எண்ணங்கள் விலகும்.

8. வீட்டில் உங்கள் தொலைபேசியில் பேசும் போதும், சமையலறையில் வேலை செய்து கொண்டே இதைச் செய்யலாம். பாட்டில் வடிவத்தில் உள்ள ஒரு ரப்பர் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும். இலேசாக உடல் தள்ளாடினாலும் பேலன்ஸ் செய்து கொள்ள முடியும் என்றால் ரப்பர் பந்தைப் பயன்படுத்தலாம். ரப்பர் பொருளைக் கீழே வைத்து விட்டு பாதத்தால் உருட்ட வேண்டும்.

இதனால் பாதத்துக்கு மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படுகிறது. கால் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அது மட்டுமல்ல, பல உடல் உறுப்புகளின் நரம்புகள் பாதத்தின் கீழ்ப்பகுதியில் முடிவடைவதால் இப்படி மசாஜ் செய்து கொள்வதன் மூலமும் உடலின் எல்லாப் பகுதிகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

9. வயிற்றுப் பகுதியில் மட்டுமல்ல புருவங்களுக்கு நடுவே கோடுகள் தென்பட்டால் கூட அவை முகப்பொலிவைக் கெடுத்துவிடும்.
நெற்றியில் உள்ள தசைகள் உதவியுடன் புருவங்களை ஒன்றோடு ஒன்று நெருக்கமாகக் கொண்டு வாருங்கள்.

யாரையாவது கோபமாகப் பார்க்கும் போது செய்கிற மாதிரி இருக்கிறதே என்கிறீர்களா? கடுகடு வென்று முகம் அந்த நேரத்தில் காட்சியளிக்கும் என்றாலும் தசைப் பயிற்சிதானே!

பிறகு முடிந்தவரை புருவங்களுக்கு நடுவேயுள்ள தூரத்தை அதிகப்படுத்துங்கள். இதையெல்லாம் செய்வதற்கு கை விரல்களைப் பயன்படுத்த வேண்டாம். நெற்றித் தசைகளைப் பயன்படுத்துங்கள்.

ஒரு கூடுதல் ரகசியம். புருவங்களை விலகச் செய்து மேலெழும்பும் சமயங்களில் கண்களை நன்கு மூடிக் கொள்ளுங்கள். இதன் காரணமாக கண் பகுதியில் உள்ள இரத்தம் ஓட்டம் சிறப்பாக அமையும்.

10. முகம் ஜம்மென்று இருக்க கொட்டாவி விடலாம். அதாவது வெறுமனே கொட்டாவி விடாமல் கொட்டாவி விடும்போதே சில பயிற்சிகளைச் செய்யலாம். எப்படியும் கொட்டாவி விடும் போது கையால் வாய்ப்பகுதியை மறைத்துக் கொள்வோம். அப்போதுதானே அந்தக் கொட்டாவி ஒரு தொற்று வியாதியைப் போல் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும்? தவிர அதுதானே நாகரிகம்?

கொட்டாவி வரும்போது உதடுகளால் பற்களை முடிந்தவரை மடித்து மூடிக் கொள்ளுங்கள். பிறகு மெல்ல கொட்டாவி விடும்போது வலிந்து ஒரு நீளமான புன்னகையை வெளிப்படுத்துவதன் மூலம் வாயின் இரு ஓரங்களுக்கும் அழுத்தம் கொடுங்கள்.

ஒவ்வொரு முறையும் தானாக உதடுகள் விரிவதை விட கொஞ்சம் முயற்சித்து மேலும் அதிகமாக வாயைத் திறக்க வேண்டும். அப்போது கழுத்துத் தசைகள் கூட விரிவடைவதை உணர்வீர்கள்.

இந்தக் கொட்டாவிப் பயிற்சியால் வாய்ப்பகுதியும் கன்னங்களும் தங்கள் தொளதொள தன்மையை இழந்து பொலிவு பெறும். கண்ணுக்குக் கீழேயும் கழுத்திலும் சுருக்கங்கள் ஏற்படுவதையும் இது தடுக்கும்


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

நகங்களும் சுவாசிக்கும் உங்கலுக்கு தெரியுமா?


நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது.




இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.


சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.


சமையல் அறை, கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.


தோட்டங்களில் உரங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தும் போதும் கையுறை அவசியம். இது சருமத்திற்கும் நல்லது.


பசை, தண்­ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.



ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.


நகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகிறது.
ஆனால் அது அப்படியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள்தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே.
நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.


நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்பமாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மைதான்.


வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கியூடிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம்.
எனவே அவை தேவையான ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கியூடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்தஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.



***
thanks google
***



"வாழ்க வளமுடன்"

டீன் ஏச் பெண்களின் தாய்மார்களுக்கான ஆலோசனைகள்

*

பெண்களின் வாழ்க்கையில் ‘டீன் ஏஜ்’ என்பது வசந்தகாலம் போன்றது

பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை ‘டீன் ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த காலகட்டத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால் பெற்றோராகிய நீங்கள் குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதே போல் இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன?

பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில் உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால் இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர்.

எனவே இதுகுறித்து பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

அடுத்து இளம் பெண்களுக்கு , தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித் தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால் உணர்வுப் பூர்வமாக பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும்.

மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்சினைகளால், டீன் ஏஜ் குழந்தைகள் பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால் ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு.

இவற்றை சரிப்படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால் படிப்பில் முன்னேற்றம் வேலையில் சுறுசுறுப்பு ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.



***
thanks vanakkam
***




"வாழ்க வளமுடன்"

06 செப்டம்பர், 2011

குக்கர் பற்றிய சில உண்மைகள் :)


பெரும்பாலும் குக்கர் இல்லாத சமையல் கட்டே இருக்காது எனலாம்.


* சமையலை துரிதமாக முடிக்க உதவும் குக்கரை நாம் சிறியது,மீடியம் சைஸ்,பெரியது என்று 3 அளவு வைத்துக்கொண்டால் மிக வசதி.

* சேஃப்டி வால்வ்,காஸ்கட் ரொம்ப முக்கியமான பகுதி,அதனை அடிக்கடி செக் செய்து கொள்ளவேண்டும்.

அவை சரியாக இருந்தால் குக்கர் ஆயுள் நீளம். சேஃப்டி வால்வ்,காஸ்கட் ,வீட்டில் எப்பவும் எக்ஸ்ட்ராவாக ஒன்னு இருக்கனும்.காஸ்கட் எப்பவும் குக்கருடனே இருப்பது தான் நல்லது.சமைக்கும் முன்பு காஸ்கட் சுத்தம் செய்து இழுத்து போடனும்.

* சமைக்கும் உணவு அளவும் குக்கர் அளவும் ஒத்துப்போகவேண்டும்.அதிகமானா உணவை சிறிய குக்கரில் வைத்து வேக வைக்க முயன்றால் ,ஒரு வேலைக்கு இரண்டு வேலை யாகிவிடும்.

தண்ணீர் அளவில் மிக கவனம் தேவை.குக்கரில் வைக்கும் பொருள் கொதி வந்து மூடி வெய்ட் போட்டால் விரைவில் ஆகிவிடும்.வெய்ட் எப்பவும் ஒரே இடத்தில் வைத்து எடுத்து பழக வேண்டும்,அவசரத்திற்கு தேடத்தேவை இருக்காது.

* ஹேண்டில் மிக முக்கியம்,கொஞ்சம் லூஸானால் உடனே டைட் செய்து விட வேண்டும்.சமையல் கட்டில் ஒரு ஸ்க்ரு ட்ரைவர் வைத்துக்கொள்வது நல்லது.இல்லாவிட்டால் ஆட்டம் கண்டு ஹேண்டில் வீணாகிவிடும்.

* குக்கரில் அடியில் தட்டு போட்டு சமைக்கும் போது எலுமிச்சை தோடை அடியில் போட்டு வைத்தால்,கருப்பாக அல்லது வெள்ளையாக படியாது.ஜூஸ் பிழிந்ததை பயன்படுத்தலாம்.

* குக்கர் க்ளீன் செய்ய அதற்குண்டான மெல்லிய கம்பியை பயன்படுத்தினால் எப்பவும் பளிச்சென்று இருக்கும். குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதும்,சுததமும் கூட.எனவே அதனை சரியான முறையில் உபயோகித்து அதன் பயனை அடைவோம்.


***
thanks ஜாஹீதாபானு
***




"வாழ்க வளமுடன்"

03 செப்டம்பர், 2011

பெண்கள் இதை முக்கியமா தெரிஞ்சுக்கணும்..!



1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள்.

2. உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

3. எப்போதும் சரியான உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

4. பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

5. சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. வீட்டில் சாதம், கூட்டு, பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைப்பது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கின்றன.

6. வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கபடும் நேரங்களில் இசையை ஈடுபாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும்.

7. டி.வி பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அந்த மாதிரியான தொந்தரவுக்கு இடம் கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்து விடுங்கள்.

8. வீட்டில் பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கு இல்லாமல் சிதறிக் கிடந்தால் எரிச்சல் ஏற்படும். இப்படி சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

9. குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்திடுங்கள். கொதிக்க வைத்து ஆறியபின் அதை குடிநீராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் வெப்பத்தால் உண்டான உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.

10. வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்க ளிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளை தெரிந்து வைத்திருங்கள். தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கட்டும்.

11. பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும்.

12. பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்யவேண்டும்.

13. திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அதிக பேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் இன்முகத் தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளின் பாதி பசியை போக்கிவிடும்.

14. புத்தகங்களை படிப்பது போல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்று பதிவுகளையும் படிப்ப தன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம்.

15. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.



***
படித்ததில் பிடித்தது
***



"வாழ்க வளமுடன்"


ஏலக்காயை பற்றிய சில துளிகள் !!!


வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்


***
thanks vayal
***




"வாழ்க வளமுடன்"


பார்சல் சாப்பாட்டில் பல கிருமிகள்-அழிக்க காட்டு ஏலக்காய்




பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன.


பின் இவை, உணவு ஆறும்போதோ அல்லது புளிக்கும் போதோ, பல்கி, பெருகி, உண்பவரின் வயிற்றில், பல கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி சூடான உணவுகளை அடைப்பதால், பாலித்தீன் பைகளிலுள்ள எத்திலீன், வயிற்றில் அழற்சியை ஏற்படுத்துவதுடன், புற்றுநோய் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்குகிறது.


பார்சல் உணவுகளை வாங்குவதற்கு, பிளாஸ்டிக் அல்லாத நம் வீட்டில் அன்றாடம் சுத்தம் செய்யும் பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.

சாதாரணமாக நமது உடலின் உட்பகுதியில், நுண்கிருமிகள் காணப்படுவதில்லை. ஆனால் வாயின் உட்புறம், குடல், தோல் போன்றவற்றில் பல்வேறு வகையான நுண்கிருமிகள் காணப்படுகின்றன. இயற்கையாகவே காணப்படும் சில நுண்கிருமிகள், நன்மை செய்யக்கூடியவை.



ஆனால், பிறரிடமிருந்து தொற்றக்கூடிய அல்லது நோய்களை விளைவிக்கக்கூடிய ஆபத்தான நுண்கிருமிகளும், இந்தப் பகுதிகளில் நுழைந்து விடலாம். இவை பல்வேறு வகையான நோய்களை நமக்கு ஏற்படுத்துகின்றன. இவற்றில், வாய் மற்றும் உள்ளங்கைகளில் காணப்படும் கிருமிகளே, பலவிதமான தொற்றுநோய்களுக்கு காரணங்களாக இருக்கின்றன.

வாய் மற்றும் தொண்டையில் ஸ்டேப்பிலோகாக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், நெய்செரியா, சூடோமோனாஸ், புரோட்டியஸ், ஹூமோபிலஸ், கிளோஸ்டெரிடியம், கார்னிபாக்டீரியம், மைக்ரோபாக்டீரியம், ஆக்டினோமைசிட்டஸ், ஸ்பைரோகேட்ஸ், மைக்கோபிளாஸ்மாஸ் போன்ற பலவகையான பாக்டீரியாக்கள் மற்றும் பல்வேறு வகையான நுண்கிருமிகள், வாய், தொண்டை, மூக்கு போன்ற உணவுப்பாதையில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி கைகளில் விரலின் நக இடுக்கு உட்புறம், நகத்தின் நுனி, உள்ளங்கை, புறங்கை, விரலிடுக்குகள் போன்ற பகுதிகளில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் காணப்படுகின்றன. இவற்றில், விரலின் நக இடுக்குகளில், பிற பகுதிகளை விட, 75 மடங்கு அதிகமான நுண்கிருமிகள் காணப்படுகின்றன. உள்ளங்கையில், 4,200க்கு மேற்பட்ட நுண்கிருமிகள், நிரந்தரமாக குடி கொண்டிருக்கின்றன.

இட்லி மாவை புளிக்கச் செய்தல், உணவை செரிக்கச் செய்தல் போன்றவற்றிற்கு, 150 வகையான கிருமிகள் பயன்பட்டாலும், எஞ்சிய பல கிருமிகள், பல்வேறு வகையான நோய்களை பரப்புவதற்கு உதவுகின்றன. ஆண்களை விட பெண்களின் கையில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. வியர்வை, தோலின் எண்ணெய் சுரப்பு, ஹார்மோன்கள், வெள்ளை அணுக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், நாம் பயன்படுத்தும் சோப்பு, கை கழுவுதல் ஆகியவற்றை பொறுத்து, கிருமிகளின் எண்ணிக்கை, குறையவோ, கூடவோ செய்கிறது. தோலை விட உள்ளங்கை மற்றும் வாயின் உட்புறம் ஏராளமான நுண்கிருமிகள் இருப்பதால், இவற்றின் மூலம் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

காட்டு ஏலக்காய், கிருமிகளை அழிக்க வல்லது. அமோமம் சபுலேட்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜிஞ்ஜி பெரேசியே குடும்பத்தைச் சார்ந்த செடிகளின் உலர்ந்த பழங்களே காட்டு ஏலக்காய். பெரிய ஏலக்காய் அல்லது பேரேலம் என்று அழைக்கப்படுகின்றது.
சால்கோன் என்ற கார்டோமோனின், அல்பினிட்டின், சபுலின் மற்றும் சினியோல் என்ற நறுமணமுள்ள மருந்துசத்து ஆகியன காணப்படுகின்றன.


இவை, வயிற்றில் வளரும் தேவையற்ற நுண்கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, செரிமான சக்தியை தூண்டி, பலவிதமான வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்று வலியை நீக்குகின்றன.

காட்டு ஏலக்காய் – 20 கிராம்,
இலவங்கப்பட்டை – 20 கிராம்,
சிறுநாகப்பூ – 20 கிராம்,
சுக்கு – 20 கிராம்,
மிளகு – 20 கிராம்,
திப்பிலி – 20 கிராம்,
வாய்விடங்கம் – 20 கிராம்,
மல்லிவிதை – 20 கிராம்,

ஆகியவற்றை சுத்தம் செய்து, இளவறுப்பாக வறுத்து, இடித்து, பொடித்து, சலித்து, 120 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டியளவு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு ஏழு நாட்கள் சாப்பிட்டு வர, நுண்கிருமிகளால் ஏற்பட்ட பல்வேறு வகையான வயிற்று உபாதைகள் நீங்கும்.


***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "