...

"வாழ்க வளமுடன்"

29 மார்ச், 2010

நெஞ்செரிச்சல் ஏற்ப்படமா இருக்க சில குறிப்புகள்

ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'நெஞ்செரிச்சல்', ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையில் மிக எளிதாக பலரையும் வாட்டியெடுக்கும்.


பொதுவாக அஜீரணக் கோளாறு காரணமாகவே நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு, நமது உணவு முறையில் கவனம் செலுத்தினாலோ போதுமானது.
*
இந்தப் பாதிப்பு வராமலிருக்க மேற்கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் இதோ...
*
1. கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
*
2. கொழுப்புச் சத்து மிகுதியாகக் காணப்படும் உணவுப் பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.
*
3. புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பின், அதனைத் தவிர்த்தல் வேண்டும்.
*
4. முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது, சரியான நேரத்தில் உணவருந்த வேண்டும்.
*
5. உடல் பருமனாகமால் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*
6. எளிதில் ஜீரணமாகாத பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.
*
7. துரித உணவுகளைத் தவிர்த்தல் நன்மை பயக்கும்.
*
8. எண்ணெயில் வறுத்த பலகாரங்கள், சாக்லெட் மற்றும் குளிர்பானங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
*
9. அதிக அளவில் குடிநீரைப் பருகுதல் சாலச் சிறந்தது.
*
10.நெஞ்செரிச்சல் வந்துவிட்டால், உடனடியாக வாழைப்பழத்தை உட்கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
***
by- எஸ்.சரவணன்.
***

இது போல் செய்து நெஞ்செரிச்சல் ஏற்ப்படமால் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.


***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

ஃபாஸ்ட் ஃபுட் & ஜங்க் ஃபுட்‏

இந்த ஃபாஸ்டான உலகத்துல மக்கள் நாடுவது எல்லாம் குயிக் அண்டு ரெடிமேட் அயிட்டங்கள் தான்.


அது வீடோ,உடையோ இல்லை உணவோ எல்லாம் கை சொடுக்கும் நேரத்துல கிடைக்கனும்.அதுல முதல் இரண்டும் பரவாயில்லை.ஆனால் உணவு விஷயத்தில் அப்படி இருப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதைக் கூட உணர மறந்து ஓடி ஓடி உழைக்கின்றனர்.



*


ஃபாஸ்ட் ஃபுட் என்பது துரிதமாக செய்யப்படும் உணவு வகைகள்.இட்லி, தோசை, பிரட் சாண்ட்விச் , பீஸா இதில் அடக்கம்.



*



ஜங்க் ஃபுட் என்பவை உடம்புக்குத் தேவையில்லாத,எந்தப் பயனும் தராத வயிற்றை மட்டுமே நிரப்பும் உணவுகள்.


*


ஸ்நேக்ஸ்,ஜெல்லி,கேண்டி,சாக்லெட்ஸ்,டெசெர்ட்ஸ்,கார்பனேட்டட் குளிர் பானங்கள்,டிண்டு ஃபுட்,பேக்டு ஃபுட் முதலியவை இதில் அடங்கும்.



*


பல அவசர நேரங்களில் கொஞ்சம் ஸ்நேக்ஸும் ஐஸ்கீரிமோ அல்லது ஸ்நேக்ஸ் வித் காபி அல்லது கோக் என்று துரிதமாக பிரேக்ஃபாஸ்டை/லன்ச்சை முடித்துக் கொண்டு வேலை வேலையென்று ஓடுவோர் பெருகி விட்டனர்.



*


இப்பெல்லாம் புளியோதரை,தயிர்சாதம்,புலாவ் ,குருமா அயிட்டங்கள் எல்லாம் ரெடிமேட் ஆக 'டெட்ரா பேக்கில்' வைத்து கிடைக்கிறது.அப்படியே சூடு பண்ணி சாப்பிட வேண்டியதுதான்.



*


ஜங்க் என்றாலே தேவையற்ற குப்பை மாதிரிதானே.


*



வெறும் கலோரிகளும்,உப்பும் சுகரும்,கொழுப்பும் நிறைந்த இந்த உணவில் எந்த வித நியூட்ரிஷனல் [சத்தான] பொருளும் இல்லை.


*


மாறாக அதிகக் கொழுப்பும்,உப்பும்,சர்க்கரையும் நோய்களுக்கு கட்டியம் கூறி வரவேற்கும்.இதில் சேர்க்கப்படும் இரசாயன பிரெசெர்வேடிவ்கள் ஃபுட் கிரேடு என்றாலும் தொடர்ந்து சேர்ப்பது உடலுக்கு நல்லதல்ல.


*


மிக முக்கியமாக 'கலரிங் ஏஜண்ட்ஸ்' கேன்ஸர் போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.இப்பெல்லாம் நூடுல்ஸ் சாப்பிடுவது ரொம்ப காமன்.


*


ஆனால் சாப்பிடத் பிறகு கொஞ்ச நேரம் எனர்ஜெட்டிக்காக தோன்றினாலும் உடலுக்குத் தேவைப்படும் எந்த சத்தும் இல்லை.அதிக கொழுப்பு 'ஒபிஸ்ட்டி' [குண்டுத்தன்மை] ஏற்படுத்தும்.


*



சாப்பிடவே கூடாது என்பதல்ல.எப்போதாவது சாப்பிடலாம்.ஆனால் அதுவே சாப்பாடாக இருக்கக் கூடாது.


*







சாப்பாட்டுக்கு முக்கியத்துவமா என்பதை விட என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.



*


சில வருடங்களுக்கு முன்பு டாக்டர்.திருமதி.கமலி ஸ்ரீபால் அவர்களின் டி.வி.பேட்டி ஒன்றில் கேட்டது.
***
நம் அன்றாட சாப்பாட்டில் மூன்று நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க‌ வேண்டும்:

*

பச்சை: பச்சைக் காய்கறிகள்,கீரை வகைகள்.

*

மஞ்சள்: எலுமிச்சை,ஆரஞ்சு.சாத்துக்குடி , வாழை,பப்பாயா போன்ற பழங்கள்.

*

சிகப்பு:கேரட்,பீரூட்,தக்காளி ஆப்பிள் போன்றவை.


*

தினசரி உணவில் இந்த மூன்று நிறங்களும் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே ஆரோக்யமான உடல்நலம் இருக்குமாம்.

*

நல்ல ஆரோக்யமான உணவு ஆரோக்யமான உடல் நலத்திற்கும் அதன் மூலம் ஆரோக்யமான மனநலத்திற்கும் தேவை என்பதை உணர்ந்து கடை பிடித்தே ஆக வேண்டும்.

*


அந்தக் காலம் போல கைக்குத்தல் அரிசியும்,பக்குவமான சரிவிகித சாப்பாடும் இனி எங்கே கிடைக்கப் போகிறது.

*


எல்லாவற்றிற்கும் மெஷினை நம்பி நம் வாழ்க்கை மெஷின் மாதிரி ஆகிவிட்டாலும் அதையும் கண்டிஷனாக வைத்திருக்கனும் தானே.

*


கண்டதையும் தின்று வயிறு நிறைவதை விட கொஞ்சமானாலும் சத்துள்ளதாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.




***

http://kouthami.blogspot.com/2007/07/blog-post.html
நன்றி கண்மணி பக்கம்.

****

ஃபாஸ்ட் ஃபுட் அண்டு ஜங்க் ஃபுட் இவைகளை எப்போதாவது எடுத்துக் கொண்டு உடல் நலமுடன் இருங்கள். நன்றி.



***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

*

பூசணியும் அத‌ன் ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள்


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.



கல்யாணப் பூசணி:

*

1. கல்யாணப் பூசணி (Cucurbita moschata) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு செடியாகும்.

*

2. இப்பூசணிக் காய்கள் இனிப்புச் சுவையுடையவை. மஞ்சள் தோலும் செம்மஞ்சள் நிறச் சதையுமுடையவை.

*

3. பழுக்கும்போது கரும் செம்மஞ்சள் நிறமாகும். இது உடல் பருக்க, உடல் சூட்டைக் குறைக்க உதவும்.

***

பூசணிக்காய்:
*
Spaghetti Squash (இசுப்பெகடி) பூசணி


1. பூசணி, சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது.


*


2. தமிழக இறை வழிபாடுகளில், பூசணியைப் பயன் படுத்துவர். குறிப்பாக அமாவாசை அன்று சமைத்து உண்பர். சாம்பல் பூசணி வகையை, இறைவழிபாட்டிற்கு பின், சாலைகளில் போட்டு உடைப்பர்.


*


3. சில நாடுகளில், பூசணிக் கலைப் பொருளாகப் பயன் படுத்துகின்றனர்.(எ.கா)ஆலோவின்.


*


4. பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம்(soup) தயாரிப்பிலும் பயன்படுகிறது. பூசணி விதைகளும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.


*


5. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.


***


ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள்:


*


1. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பு சம்மந்தமான‌ நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.


*


2. உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.


*


3. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.


*



4. மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.



*


5. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.


***


பூசணியை வைத்து மருத்துவம்:


*


1. பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும்.


*



2. நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.



*


3. வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.



*


4. பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும்.



*



5. பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.


*


6. பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.



*


7. பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்.



*



8. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.



***

வெண்பூசணி லேகியம் செய்யும் முறை:


*

1. நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.


*

2. வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

*

3. பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம்.

*

4. இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது.

*

5. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.


*


6. சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

*


7. சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

*

8. பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

*

9. இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

*

10. இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும்.

*

11. வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும்.

*

12. உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.


***

நன்றி - குமுதம் ஹெல்த்து.


***

பூசணிக்காயில் இவ்வளவு சத்துக்களும், மருத்துவ குணங்களும் இருக்கு. அப்ப இனி அங்காடியில் பார்த்தால் வாங்கிடுவிங்க தான.







***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.


*

28 மார்ச், 2010

என் உள்ளம் கவந்த‌ ( 10 ) பெண்கள்

எத்தனையோ சாதனை பெண்கள் இருந்தாலும் என்னை கவந்தவர்களில் சிலர்...


***

நைட்டிங்கேல் அம்மையார் ( தாதியர் )

புளோரன்ஸ் நைட்டிங்கேல் நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியர்.

*

போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார்.

*

விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார்.
*
இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.


***

அன்னிபெசன்ட் அம்மையார் ( ஹோம்ரூல் இயக்கம் )

*

சுதந்திரத்திற்கு முன்பே அயர்லாந்து பெண்மணியான இவர் இந்தியாவால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து இந்தியராகவே வாழ்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.


தனது 46-வது வயதில் இந்தியா வந்த அவர், `ஹோம்ரூல்' இயக்கத்தை தொடங்கியதுடன், ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதுடன், நிர் இந்தியா என்னும் பத்திரிகையையும் நடத்தினார்.


கல்வி, சமூகம், ஆன்மிகம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு சேவைகளையும் செய்துள்ளார்.


***

சகுந்தலா தேவி (மனித கணினி)

*

1980-ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட சோதனையில், எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில் கூறி சாதித்தவர் சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி.


இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு.


மிகப்பெரிய எண்ணின் பெருக்கல் கணக்கீட்டுக்கு வெறும் 28 வினாடிகளில் பதில் கூறி அசத்தினார்.


***

அன்னை திரைசா



அன்பும் கருனையும் மறு வடிவமான அன்னை திரைசா எனக்கு மிகவும் பிடிக்கும். தன்னலம் இல்லதா சேவையும், அன்பை தவிர வெறு ஒன்றும் ( வெறுப்பு, அறுவறுப்பு ) தெரியாத அந்த அன்பு உள்ளம் எனக்கு பிடிக்கும்.


நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் இவர்.


இறந்தும் வாழும் இவர், உலகம் இருக்கும் வரை இவரை நினைக்கத மக்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் அனைவரும் மனதில் இடம் பெற்று விட்டார்.


***
M. S. சுப்புலக்ஷ்மி ( கர்நாடக சங்கீத பாடகி )
.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் குரலும், அவர்களின் லயிப்பும், பாடலின் நடுநடுவே அவர்கள் தட்டும் இசையும் நம்மை உருக வைக்கும் என்பது நிச்சயம்.
இன்றும் இவர் குரலில் ஒளித்த சுப்புரபாதமும், சஷ்டிக் கவசமும் யாராலும் மறக்க முடியாது.
இந்த தலை முறைக்கூட அவர்களின் குரலை கேட்டு மகிழ்க்கிறது என்றால் அது அவர்களின் குரலும், அந்த சாந்த சொருபமான முகமும் தான் என்று சொல்லுவதில் சிறிதும் ஜயம் இல்லை.
இறந்தும் நம் உள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.

***
திருமதி. திலகவதி மேம்
*
நான் கல்லுரியில் படிக்கும் போது எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் திலகவதி மேம். அவர்கள் மிகவும் கண்டிப்பு. ஆனால் அன்புமும், கருணையும், கொண்ட அவர்கள் என்னை மிகவும் கவர்ந்தவர்.
*
விவேகானந்தர் சொன்னதுப் போல் "ஒருவர் செய்யும் செயலை அவர்கள் முதுகில் தட்டிக்கெடுத்து முன்னேற்றுவது தான்:" என்றும் அதையே என் மேம் செய்ததால் அவர் என் கண்ணுக்கு ஒரு பெண் விவேகானந்தராக தான் தெரிந்தார்.
*
அவர்களை போல் வாழ வேண்டும் என்று ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டு முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறேன்.
*
அவர்களை இப்போது நினைத்தாலும் என்னுல் எழும் சுறுசுறுப்பும், ஆர்வமும் என்னை ஊக்குவிக்கும்.
*
நன்றி திருமதி. திலகவதி
***
உமாபலக்குமார் & ரமணிச்சந்திரன் ( எழுத்தாளர்கள் )
*
இருவரும் சிறந்த நாவல் ஆசிரியர்கள். இவர்களுடைய நாவல் கதைகள் குடும்ப நாவல்கள்.
*
நம் குடும்பத்தில் நடப்பது போல் இருக்கும் நிறைய விஷயமும், காதலும், நல் ஆண்மகன் & பெண்கள் நிலையும் எப்படி வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும் என்று எடுத்து கூறும் அளவுக்கு இருக்கும்.
*
படித்து அந்த புத்தகத்தை கீழே வைத்ததும் நம் மனதில் ஏற்ப்படும் அந்த உணர்ச்சி அதிக மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும். நம் வீட்டில் அந்த மகிழ்ச்சி ஏற்ப்பட்டது போல் இருக்கும்.
*
நான் அவர்கள் புத்தக்த்தை படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்கமாட்டேன்.
*
அதனால் இவர்களையும், இவர்கள் எழுத்து நாவல்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
***
பழம்பொரும் நடிகை பானுமதி
பத்மஸ்ரீ டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா .
*
எனக்கு இவருடைய நடிப்பும், அவருடைய கணீர் என்ற குரலும் மிகவும் பிடிக்கும்.
*
இப்போதும் அவர் பாடிய பாடலில் அன்னை படத்தில் " பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூக்காமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று " இந்த பாடலை யாராலும் மற‌க்க முடியாது.
*
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் பானுமதி என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டு பெற்றவர். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்பட பல்வேறு பட்டங்களை பெற்று உள்ளார். 3 முறை தேசிய விருது பெற்றார்.
*
தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார்.
*
இவரது நடிப்பை பாராட்டி ஆந்திர மாநில அரசு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது. நடிப்பு கல்லூரி முதல்வராகவும் இருந்திருக்கிறார்.
*
இவர் தன்னுடைய 80வது வயதில் உயிர் நீத்தார்.
*
இறந்தும் நம் உள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
***
உஷா உதுப் ( பாப் இசை )

எல்லா இடங்களிலும் ( உலகம் முழுவதும் ) பாடும் இந்த பெண்மணி நம் இந்திய கலச்சாரப்படி தலை நிறைய பூவும், பெரிய பொட்டும், பட்டு புடவையும், அந்த கணீர் என்ற குரலும் என்னை மிகவும் கவந்தது.
*
வித்தியாசமான குரலில் பாப் இசையைக் குழைத்துப் பாடிய உஷா உதுப் பல பாடல்களைத் தமிழ்ப் படங்களில் பாடி இருந்தாலும் அவரை முழுமையாகத் தமிழ் உலகம் பயன்படுத்த முன்வரவில்லை.
*
சுமார் 150 பாடல்களுக்கும் மேலாக உஷா பல மொழிகளிலும் பாடியுள்ளார். ஆனால் அவர் பாடிய ஆங்கிலப் பாடல்கள் தமிழ்ப் படங்களில் தனி முத்திரையைப் பதித்து விட்டது.
***
பெண் விமான ஓட்டுனரும், பணிப்பெண்களும்
அடுத்து என்னை கவர்ந்தவர்கள் பெண் விமான ஓட்டுனரும், பனிப்பெண்களும் தான். ஒரு பெண் தனித்து இவ்வளவு துனிச்சலுடன் இருப்பது பெரிய விஷயம். அவர்கள் துணிச்சல் பாறாட்ட வேண்டிய ஒன்று.
*
அவர்களின் அந்த இன்முகமும், சேவையும் என்னை மிகவும் கவந்தது.
*
நான் விமானத்தில் சொல்லும் போது அவர்கள் செய்யும் பணியை பார்த்து வியந்து இருக்கிறேன்.

***
இப்படி ஒரு நல்வாய்ப்பை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
***
இந்த பதிவு உங்களை கவரும் என்று எண்ணுகிறேன். என் மனமர்ந்த நன்றிகள்.



***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.
*

ஆழ்கடல் களஞ்சியத்துக்கு விருது

இந்த தளத்துக்கு விருது வழங்கிய‌ மற்ற இணைய நண்பர்களுக்கும், விருது வழங்க‌ நினைத்த மற்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.




இந்த விருதை எனக்கு அளித்த என் இணைய நண்பர்களான ஆசியா அக்கா, ஜலீலா அக்காவுக்கும், செல்வி அம்மா ஆகியவர்களுக்கு மிக்க நன்றி.


( இந்த விருது வாங்க இந்த ஆழ்கடல் களஞ்சியம் என்ன சாதித்தது என்று தெரியவில்லை. இந்த களஞ்சியம் ஆரம்பித்து 3 மாதம் கூட ஆகலை. )


இருந்தும் நீங்கள் அளித்த விருதை நான் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்ளுகிறோன்.


மிக்க நன்றி ஆசியா அக்கா, ஜலீலா அக்கா செல்வி அம்மா.


இந்த விருதை நான், இது போல் இணையம் ஆரம்பிக்க ஊக்குவித்த நம் அன்பு உள்ளம் கொண்ட இமா அம்மாவுக்கும், அனைத்து நல் உள்ளங்களுக்கும் சமர்ப்பிக்கிறோன்.


***

அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

வல்லாரை மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரையை நம் அனைவருக்கும் தெரிந்தது தான். அது மாத்திரியாகவும் உட்கொள்ளுகிறோம். அது நியாபக சக்தி மட்டும் இல்லாமல் மற்றதுக்கும் ( உடல் நலத்துக்கு ) இது நல்லது.








வல்லாரை (Centella asiatica) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்.



*


பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது.

*




வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.

*

இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. சரசுவதிக் கீரையென்றும் வெறு பெயருடனும் அழைக்கின்றனர்.

***

இக்கீரையின் ச‌த்துக்க‌ள்:

*

1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.

*

2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

*

3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.

*

4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

*

5. சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு.

*

6. வல்லாரையில் இருவகை உண்டு:
*
சமவெளி வல்லாரை - வெளிர் பச்சை நிற இலைகளுடையது.

*

7. மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை:
*
கரும்பச்சை இலைகளுடையது. இதில் மலைப் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு வீரியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.

*

8. எனவே தான், இதனை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்.

***

மருத்துவ குணங்கள்:

*

1. இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
*
2. உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
*
3. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
*
4. மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
*
5. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
*
6. நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
*
7. அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
*
8. கண் மங்கலை சரி செய்யும்.
*
9. சீத பேதியை நிறுத்தும்.
*
10. இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.
*
11. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
*
12. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
*
13. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
*
14. வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.
*
15. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.


***

வல்லாரை சில எளிய வைத்தியங்கள்:

*


a. இரத்த சோகை (Anaemia):
*
1. 1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.

2. பார்வை மங்கல், உடற்சோர்வு, நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு

3. வல்லாரை இலைகளை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் 1/4 தேக்கரண்டி சூரணத்தை தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து அருந்தவும்.

**

b. ஆறாத புண்கள், எக்சிமா, சோரியாசிஸ்:
*
வல்லாரை இலையை பசும் நெய்யோடு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் மேலே தடவும்.


***

c. தூக்கமின்மை:
*
1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.


***


d. ஞாபகமறதி:
*
5 வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்து தினமும் உண்ணவும்.

*
6. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.

*

7. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

*

8. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

*

9. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

*

10. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

*

11. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

*

12. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

***

சமைத்து உண்ணும் முறை:


1. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

*

2. வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.

*

3. இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

*

4. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

*

5. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

*

6. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.

*

7. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

*

8. இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.
*
1. இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை,
*
2. பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
*
3. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.
*
4. சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
*
5. வல்லாரை இலையை பச்சையாக பயன்படுத்தக் கூடாது. இலைகளை ஆய்ந்து பிட்டுபோல அவித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.


***

நன்றி விக்கிபீடியா.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88




***

வல்லாரை பற்றி இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மிக்க நன்றிகள்.




***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.
*

27 மார்ச், 2010

இரத்தம் பற்றிய பொது அறிவு

இரத்தம் பற்றிய நமக்கு எந்த அளவு தெரியும்? வாங்க அதைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும்!




இரத்தம் - உண்மைத் துளிகள்:

*

1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

*

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.

*

ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

***

2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

*
ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

***

3. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

*

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.

***

4. ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?

*
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.

***

5. ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

*
ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

***

6. ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்” அணுக்களின் வேலை என்ன?

*
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்” அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

***

8. பிளாஸ்மா என்றால் என்ன?

*
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

***

9. ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

*
ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.

***

10. ரத்த அழுத்தம் என்றால் என்ன?

*
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

***


11. உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?

*
ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.

***

12. மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

*
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

***

13. உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன?

*
எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

***

14. ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

*
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

***

15. 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?

*
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

***

16. தலசீமியா என்பது தொற்றுநோயா?

*
இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.

***

17. மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

*
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

***

18. ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

*
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.

***

19. ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

*
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

***

20. ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?

*
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும். B ஆன்டிஜன் இருந்தால் B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

***

21. ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

*
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும். இளம்பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக்கூடாது.

***

22. ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

*
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

***

23. கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

*
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.

***


24. ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?

*
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

***

25. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?

*
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.

***

26. தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?

*
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று பெயர்.

***

27. ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

*
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.

***


28. யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

*
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

***

29. மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

*
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்துவிடலாம்.

***

30. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

*
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

***

31. ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

*
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

***

32. ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

*
ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர்பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்கவேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

***

நன்றி தினமணி.

நன்றி கீற்று.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1209:2009-11-13-07-49-08&catid=13:heart&Itemid=93

***


இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்!




***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

*

வயதைக் குறைக்கும் வானவில் உணவுகள்

எல்லா மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் கொடுக்கும் அறிவுரை ‍ உணவில் அதிக காய்கறிகளும், பழங்களும் இடம் பெறவேண்டும் என்று கூறுகிறார்க‌ள்.


அதுவும் வான‌வில்லின் வ‌ண்ண‌ங்க‌ளுடைய ( உணவுகளின் நிறம் ) உணவை உண்பது உடலுக்கு நல்லது என்று வலியுறுத்துகின்றனர்.

*

அமெரிக்காவில் 1992ம் ஆண்டு சத்துணவு நிபுணர் டாக்டர் கேப்ரியல் கஸின்ஸ் என்பவர் " வானவில் உணவுத்திட்டதில் "
எல்லாவித நிறங்களிலும் உள்ள பழங்களும், காய்கறிகளும் உண்டு என்று கூறுகிறார்.


*

இவ்வகை காய்களும், பழம்ங்களும் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கவும், ஆரோகியமாகவும், இளமையாகவும் இருக்க இந்த உணவுத் திட்டம் உதவும் என்றும், இதன் மூலம் 1000 லிருந்து 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமையோடு வாழலாம் என்று கூறுகிறார்.


*


அதை நீங்கள் செயல் படுத்த நினைத்தால் பின்வரும் தகவல்கள் உங்களுக்கு தான்:


காலை:

*

1. காலையில் சிவப்பு நிற உணவுகளான‌ தக்காளி, சிவப்பு முள்ளங்கி, சிவப்பு குடைமிளகாய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் அதிக சத்துக்கள் ( Lycopene, Ellagic acid, Quercetin மற்றும் Hesperidin ) உள்ளன.

*

2. இவைகள் உயர் ரத்த அழுத்தம், ப்ரோஸ்டேட் புற்று நோய், கொலஸ்ட்ரால், free radicals இவற்றை எல்லாம் வராமல் தடுக்கின்றன.


*

3. மேலும் கேரட், பப்பாளி, ஆரஞ்சு, மஞ்சள் வண்ண காய்கறிகள், மற்றும் பழங்கள் பீடா காரோடோன்,Zea Xanthin. flavonoids, லிகோபீன், பொட்டாசியம் மற்றும் விட்டமின் " சி " உள்ளன.

*

4. இவைகளை உண்டால் வயதானால் வரும் அவயச் சிதைவுகள், ப்ரோஸ்டேட் புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் முதலியன குறைத்து, மூட்டுகளை ஆரோகியமாக வைத்து, எலும்புகளை பலப்படுத்துகிறது.


*


5. காலையில் சிவப்பு நிற தக்காளி அல்லது ஆரஞ்சு சாறு 1 கப் குடித்தால் மலச்சிக்கலை போக்கும். இல்லாவிட்டால் ஆப்பிள், வாழப்பழம், அன்னாச்சி பழங்கள் எதேனும் ஒன்று சாப்பிடலாம்.

***

மதியம்:

*



1. ம‌திய‌ம் ப‌ச்சை நிற‌க்காய்க‌ள், கீரைகளும் ஆகும். கீரையில் கால்சிய‌ம், இரும்புச்ச‌த்து, விட்ட‌மின் " சி ", பீடா க‌ரோடீன், ரிபோஃப்ளாவின் ம‌ற்றும் ஃப்போலிக் அமில‌ம் முத‌லின‌ ந‌ம‌க்கு கிடைக்கிற‌து.


என‌வே தின‌மும் 50 கிராம் கீரை க‌ட்டாயம் சாப்பிட்டால் ந‌ல்ல‌து.


*


2. இத‌ர‌ காய்க‌ள் முட்டைக்கோஸ், வெண்டைக்காய், பீன்ஸ், அவ‌ரை, புட‌ல‌ங்காய் ஆகிய‌வ‌ற்றில் ஏதேனும் ஒன்று க‌ட்டாய‌ம் சாப்பிட்டால் உட‌லுக்கு ந‌ல்ல‌து.

*

3. இதில் குளோரேஃபில் ( ப‌ச்ச‌ய‌ம் ), நார்ச்ச‌த்து, லுடின், கால்சிய‌ம், விட்ட‌மின் " சி " , பீடா க‌ரோடீன் இவை கீரை ம‌ற்றும் ப‌ச்சை காய்க‌ளிள் அதிக‌ம் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.


*


4. இவ‌ற்றை த‌வ‌றாம‌ல் உட்கொண்டால் புற்று நோய், கொலஸ்ட்ரால் அதிக‌ரிப்பு ஏற்ப்ப‌டுவ‌தை த‌டுக்கும். உட‌லில் நோய் எதிர்ப்பு ச‌க்தியை அதிக‌ரிக்கும். இதில் இருக்கும் தாதுப் பொருட்க‌ள் உட‌ல் வ‌ள‌ச்சிக்கு உத‌வும்.

*

5. இத‌ய‌ம், பிட்யூட‌ரி சுர‌ப்பி முத‌லிய‌ன‌ சீராக‌ செய‌ல்படும். காய்க‌றிக‌ள் ஜீர‌ண‌ சக்தியை தூண்டி விட்டு நமக்கு உதவுகிறது. க‌ண்களையும் காக்கிறது.


***

இர‌வு:

*

1. இர‌வில் நீல‌ நிற அல்ல‌து க‌ருஞ்சிவ‌ப்பு உணவை உட்க்கொள்ள‌லாம். வெள்ளை நிற உண‌வும் சேர்த்துக் கொள்ள‌லாம். ப‌ழ‌ங்க‌ளில் மாதுள‌ம். காய்க‌றிக‌ளில் கத்த‌ரிக்காய்.

*

2. ம‌ற்றும் இட்லி, பால், த‌யிர் ( நாம் தயிர் இரவில் உண்ணக்கூடாது என்று சொல்லுவோம். இதில் எனக்கு தெரியலை ) போன்ற வெள்ளை உண‌வுக‌ளையும் எடுத்துக் கொள்ள‌லாம்.

*

3. இவ்வ‌கை உண‌வுக‌ள் ந‌ம்ம‌லை அமைதிப்ப‌டுத்த‌வும், ந‌ன்கு தூங்க‌வும் வைக்கும் என்று கூறுகிறார்.

***


குறிப்பு:

*

கூடிய‌ வ‌ரை காய்க‌றிக‌ள் ச‌மைக்கும் போது நீராவியில் வேக‌ வைத்து உண்ண‌லாம். அதில் இருக்கும் ச‌த்துக்க‌ளின் இழ‌ப்பு குறைவாக‌ இருக்கும்.

***


என்ன நண்பர்களே! இவைகளை தொடர்ந்து முயற்ச்சித்தால் கட்டாயம் இளமையாகவும், திடமாகவும் இருக்கலாம் என்று எண்ணி சொயல் படுவோம்!

***


இவை ஆயுர்வேதம் . காம் புத்தகத்தில் இருந்து பார்த்து டைப் செய்தது.

*

இதன் ஆசிரியர்:

செந்தில் குமார்,
B.Sc ( Bot )., D.N.M, R.M.P.,

***


நன்றி டாக்டர்.
நன்றி ஆயிர்வேதம் . காம்.


***

வானவில்லின் வண்ண உணவுகளான காய்கறிகளும், பழங்களும் நல்லது என்று நினைப்பவர்கள் கட்டாயம் சப்பிடவும்.


இல்லை என்னால் அதுப்போல் இருக்க முடியாது என்று கட்டுப்பாடு இல்லாமல் வயிற்றில் தள்ளும் மக்கள் கொஞ்ம் சிந்தித்து செயல் படுங்கள்.

*

ஒரு சிலர் அதை விடுத்து வயிற்றினுல் எப்போதும் உணவு, மற்ற ஸ்னக்ஸ் சாப்பிடும் நபர்களுக்கு மேலோ படத்தில் காட்டி இருக்கும் " வானவில்லின் மாத்திரிகள் தான் " என்று சிந்தித்து பாருங்கள் .

*

கட்டாயம் வானவில்லின் வண்ண உணவுகளான காய்கறிகளும், பழங்களும் எடுத்துக் கொள்ளுவீர்கள்.


***

இதுப் போல் உணவு முறையை பின்பற்றி வாழ்வில் இளமையாக இருக்க வாழ்த்துக்கள் நண்பர்ளே!


26 மார்ச், 2010

சாக்கலேட் பற்றி பொது அறிவு

சாக்லேட்டை விரும்பி சப்பிடாதவர்கள் யாரு இருக்க முடியாது. அதை பற்றி நமக்கு என்ன தெரியும். தெரிந்துக் கொள்ள இக்கடலில் குதியிங்கள்!

சாக்கொலேட் என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்க சொல் ஆகும். பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ் கிரீம்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கொலேட் ஒரு முக்கியமான இடுபொருளாகும். உலகில் மிகவும் விரும்பப்படும் சுவைமணங்களில் சாக்கொலேட்டும் ஒன்றாகும்.

*

சாக்கொலேட் என்ற சொல் மத்திய மெக்சிகோவில் தோன்றிய சிவப்பிந்தியர்களின் நவாட்ல் மொழிச்சொல்லாகும். மாயன் இன மக்கள் காலத்திய பானைகளில் காணப்படும் கொக்கோ படிமங்கள், சுமார் கி.மு 600 ஆம் ஆண்டிலேயே கொக்கோ பருகப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. அஸ்டெக்குகள் சாக்கொலேட்டை தமது இனவிருத்திக் கடவுளான ஸொசிக்வெட்சலுடன் தொடர்புப்படுத்தி வந்தனர்.

*

புதிய உலகத்தில், சாக்கொலேட் வனிலா, மிளகாய் மற்றும் அச்சியோட் சேர்த்து ஸொக்கொட்ல் என்ற பெயருடைய பானமாக பருகப்பட்டு வந்தது. ஸொக்கொட்ல் ஒரு களைப்பு நீக்கி உற்சாக பானமாக கருதப்பட்டது (பெரும்பாலும், அதிலுள்ள தியொப்ரொமினால்). கொலம்பியாவிற்கு முற்பட்ட மத்திய கால அமெரிக்காவில் சாக்கொலேட் ஓர் உயர் மதிப்புள்ள பொருளாகவே கருதப்பட்டு, பண்ட மாற்றுக்குக்கூட பயன்படுத்தப்பட்டது. பிற சாக்கொலேட் பானங்கள் சோளக்கூழ் மற்றும் தேனுடன் பருகப்பட்டு வந்தன.


*

அமெரிக்காவை கண்டுபிடித்த கிரிஸ்டோஃபர் கொலம்பஸ், ஸ்பெயினின் ஆளுனர்களுக்கு காண்பிக்க சிறிது கொக்கோ கொட்டைகளை எடுத்து வந்தார். ஆனால் ஹெர்னான்டோ டி சோடோ தான் இவற்றை பரவலாக ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.

*

பழம் உலகதிற்கான முதல் சாக்கொலேட் பண்டகம் 1585 ஆம் ஆண்டு வெராகுருஸிலிருந்து செவில்லுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது ஒரு பானமாகவே பருகப்பட்டு வந்தது. ஐரோப்பியர்கள் அதில் சர்க்கரை சேர்த்து மிளகாய் நீக்கி பயன்படுத்தினர். 17ஆம் நூற்றாண்டின் போது சாக்கொலேட் ஓர் உயர் பாரம்பரிய பொருளாக கருதப்பட்டது.

*

18ஆம் நூற்றான்டின் இறுதியில், முதல் திட வடிவ சாக்கொலேட் துரின் நகரில் தயாரிக்கப்பட்டது. 1826 முதல் பியர் பால் கஃபரேல் என்பவரால் அதிக அளவில் விற்கப்பட்டது. 1828 ல் கான்ராட் ஜே வான் ஹூட்டென் என்ற டச்சுக்காரர் கொக்கோ கொட்டையிலிருந்து கொக்கோ தூள் மற்றும் கொக்கோ வெண்ணை தயாரிக்கும் முறையை காப்பீடு செய்தார். மேலும் அவர் டச்சு முறை என்றழைக்கப்படும் கொக்கோ தூள் தயாரிப்பு முறையையும் உருவாக்கினார். ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர் தான் 1847 இல் முதல் கனசெவ்வக சாக்கொலேட் கட்டியை வார்த்து உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பின் இது காட்பரி சகோதரர்களல் தொடரப்பட்டது.

*

டேனியல் பீட்டர் என்ற சுவிஸ் மெழுகுவத்தி தயாரிப்பாளர் 1867 இல் பால் கலந்து முதல் பால் சாக்கொலேட்டை உருவாக்கினார். ஹென்றி நெஸ்லே என்ற மழலை உணவுத் தயாரிப்பாளர் இவருக்கு பாலிலிருந்து நீரை நீக்கி, தடித்த பால் உருவாக்க உதவினார். இது பூஞ்சைத் தொல்லையிலிருந்து சாக்கொலேட்டுகளைக் காக்க உதவியது. ருடால்ஃப் லின்ட் என்பவர் சாக்கொலேட் கலவையை சீராக்க, அதனை சூடாக்கி அரைக்கும் கான்ச்சிங் எனப்படும் முறையைக் கண்டு பிடித்தார்.

*

மத்திய அமெரிக்காவில் தோன்றிய கொக்கோ மரத்தின் (Theobroma cacao) கொட்டைகளை நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தி (ferment), வறுத்து, அரைக்கும் போது கிடைக்கும் பொருட்கள் சாக்கொலேட் அல்லது கொக்கோ என்றழைக்கப்படுகின்றன. இவை ஒரு வீரிய சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை.

*

இக்கொட்டைப் பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறாக அழைக்கப்பட்டாலும் அமெரிக்க சாக்கொலேட் தொழில் நிறுவனம் கூறுவது:

*

1. கொக்கோ என்பது கொக்கோ கொட்டையின் திடநிலை பொருட்கள்.

*

2. கொக்கோ வெண்ணை என்பது கொக்கோ கொட்டையின் கொழுப்புப் பாகம்.

*

3. சாக்கொலேட் என்பது இவ்விரு பாகங்களின் தொகுப்பு.

***

சாக்கொலேட் என்று பொதுவாக அழைக்கப்படும் இனிப்புப் பண்டம், கொக்கோ கொட்டையின் திட மற்றும் கொழுப்புப் பாகங்களின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் பிற பல இடுபொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கபடுகிறது.சாக்கொலேட்டைப் பயன்படுத்தி கொக்கோ அல்லது பருகும் சாக்கொலேட் என்று அழைக்கப்படும் பானங்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை மத்திய கால அமெரிக்கர்களாலும் அங்கு வந்த முதல் ஐரோப்பிய பயணிகளாலும் பருகப்பட்டன.

*

சாக்கொலேட் பெரும்பாலும் அச்சுக்களில் வார்க்கப்பட்டு கனசெவ்வக வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. விழாக்காலங்களில் விலங்குகள், மனிதர்கள் என பல வடிவங்களில் வார்த்து தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஈஸ்டர் பண்டிகையின் போது முட்டை அல்லது முயல் வடிவிலும், கிறிஸ்துமஸ் பன்டிகையின் போது புனித நிக்கோலஸ் வடிவிலும், காதலர் தினத்தின் போது இதய வடிவிலும் தயாரிக்கப்படுகின்றன.


***


சாக்கொலேட் வகைகள்:

*


1. இனிப்பூட்டப்படாத சாக்கொலேட்:

*

இது தூய வெளிப்பொருள் கலக்காத சாக்கொலேட் கூழ் ஆகும். கொக்கோ கொட்டைகளை அரைத்துத் தயாரிக்கப்படும் இக்கூழ், கசப்பு அல்லது பேக்கிங் சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஆழமான சாக்கொலேட் சுவைமணம் கொண்ட இக்கூழ், சர்க்கரை சேர்த்து அமெரிக்க-வகை அடுக்குக் கேக்குகள், பிரௌனிக்களுக்கு அடிப்படைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.


**

2. கரும் சாக்கொலேட்:

*

பால் கலக்கப்படாத இவ்வகை சாக்கொலேட், கலப்பிலா சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் இவ்வகை சாக்கொலேடில் 15% சாக்கொலேட் கூழ் இருக்கவேண்டுமென்ற கட்டுப்பாட்டுடன் இதனை இனிப்பு சாக்கொலேட் என்று அழைக்கிறது. ஐரோப்பிய விதிகள் இவ்வகை சாக்கொலேட்டில் குறைந்தது 35% சாக்கொலேட் திடப்பொருட்கள் இருக்க வேண்டுமென வேண்டுகின்றன.


**


3. கூவெர்சர்:

*

இவை அதிக கொக்கோ வெண்ணையுடைய உயர்தர சாக்கொலேட்டுகள் ஆகும். இவ்வகை சாக்கொலேட்டுகள் மிக அதிக வீதத்தில் கொக்கோ கூழ் மற்றும் கொக்கோ வெண்ணை கொண்டனவாயும், உருக்கும்போது நல்ல திரவ நிலையடைவனவாயும் இருக்கும். பொதுவாக இவை மிக உயர்தர சாக்கொலேட் சுவைமணம் கொன்டவையாகக் கருதப்படுகின்றன. இத்தரமிகு சாக்கொலேடுகளில் கசப்பு முதல் இனிப்பு வரை பல்வேறு வகைகள் இருப்பினும் மிகச்சிறு சுவைமண வேறுபாடுகளைத் தெளிவாகக் இனங்காண முடிவதால் இவை இதே பண்புகளுள்ள உயர்தர ஒயின்களுடன் ஒப்பிடப்படுகின்றன. தொழில்முறை சமையலாளர்களால் இனிப்புப் பண்டங்களில் பயன்படுத்தப்படும் மிகப் பிரபலமான தயாரிப்புகள்: வால்ரோனா, லின்ட் & ஸ்ப்ருங்க்லி, கெக்கோ பெர்ரி, எஸ்பிரிட் டெ ஆல்ப்ஸ் மற்றும் கிட்டார்ட்.

**

4. பால் சாக்கொலேட்:

*

இவ்வகை சாக்கொலேட்டுகள் பெயருக்கேற்ப பால் தூள் அல்லது தடித்த பால் கலந்து தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க அரசாங்கம் இவற்றில் 10% சாக்கொலேட் கூழ் இருக்கவேண்டுமென்றும், ஐரோப்பிய விதிகள் குறைந்தது 25% கொக்கோ திடப்பொருட்கள் இருக்க வேண்டுமெனவும் விதிக்கின்றன.

**

5. மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்கொலேட்:

*

இவ்வகை சாக்கொலேட்டுகள் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இவை, பொதுவாக அதிக சர்க்கரை கொண்ட கரும் சாக்கொலேட்டுகளேயாகும். ஆனால் இவற்றில் கரும் சாக்கொலேட்டை விட குறைந்த அளவு கொக்கோவே இருக்கிறது.

**

6. கசப்பு-இனிப்பு சாக்கொலேட்:

*

இது சாக்கொலேட் கூழுடன் சர்க்கரை, கொக்கோ வெண்ணை, லெசித்தின் மற்றும் வனிலா கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மித இனிப்பு வகை சாக்கொலேட்டுகளை விட குறைவான சர்க்கரையும், அதிகமான சாக்கொலேட் கூழும் உடையவை. சுவைக்கேற்ப இவ்விரு வகைகளில் ஒன்றை சமையலில் பயன்படுத்தலாம். உயரிய தரமுள்ள கசப்பினிப்பு சாக்கொலேட்டுகள் கூவெர்சர் வகையாக தயார் செய்யப்பட்டு, அவற்றின் சாக்கொலேட் கூழ் வீதம் பயனீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. எவ்வளவு சாக்கொலேட் கூழ் உள்ளதோ அவ்வளவு கசப்பினிப்புடன் இவற்றின் சுவை இருக்கும்.

**

7. வெள்ளை சாக்கொலேட்:

*

இவை கொக்கோ திடப்பொருட்கள் இல்லாமல் கொக்கோ வெண்ணை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் இனிப்பு பண்டங்களாகும்.

**

8. கொக்கோ தூள்:

*

இரு வகை சுவையூட்டப்படாத பேக்கிங் கொக்கோ தூள்கள் உள்ளன. இயற்கையான கொக்கோ மற்றும் டச்சு-முறை கொக்கோ. இவை இரண்டுமே மிதமாக கொழுப்பு நீக்கிய சாக்கொலேட் கூழை பொடித்து கொக்கோ வெண்ணை நீக்கப்பட்டு தயாராகின்றன. இயற்கையான கொக்கோ வெளிர் நிறமும், சற்றே அமிலத்தன்மையும், மிக அதிக சாக்கொலேட் சுவைமணம் கொண்டதாயும் இருக்கும். பேக்கிங்கின் போது இவ்வகை கொக்கோவுடன் சமையல் சோடா சேர்க்கப்பட வேண்டும். கொக்கோவின் அமிலத்தன்மையும், சோடாவின் காரத்தன்மையும் கலப்பது மாவுக்கலவையை வாயு நிறைத்து மிருதுவாக்கும். டச்சு முறை கொக்கோ தயாரிக்கப்படும் போதே காரம் சேர்க்கப்பட்டு அதன் அமிலத்தன்மை சமனாக்கப் படுகிறது. இவ்வகை கொக்கோ சற்றே குறைந்த சுவைமணமும், ஆழமான நிறமும் கொண்டிருக்கும்.





**

மேலும் புதினா, ஆரஞ்சு அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவைமணங்கள் சாக்கொலேட்டுடன் கலக்கப்படுவதுண்டு. நாம் பொதுவாக சாக்கொலேட் என்று சாப்பிடும் இனிப்பு பண்டம் சாக்கொலேட்டுடன் கடலை, அரிசிப்பொரி, கொட்டைகள் போன்ற மற்ற இடுபொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சாராய வகை பானங்கள் கலந்தும் சாக்கொலேட் தயாரிக்கப்படுகிறது.

***
சாக்கொலேட்டினால் ஏற்ப்படும் விளைவுகள்:
*
உடல்நல பலன்கள்:
*
1. அண்மைய ஆய்வுகளின்படி கொக்கோ அல்லது கரும் சாக்கொலேட்டினால் மனிதர்களுக்கு உடல்நல பலன்கள் விளையக்கூடும் என்று தெரிகிறது.
*

2. கரும் சாக்கொலேட்டில் காணப்படும் எப்பிகேட்டச்சின் மற்றும் கேலிக் அமிலம் எனும் ஃப்ளேவனாய்ட்-கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும், இதயத்தை சீராக வைத்திருக்கவும், புற்று நோயைத்தடுக்கவும் உதவுகின்றன.
*

3. மேலும் சாக்கொலேட் உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால், ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு நிறைந்த உணவுகளான சிகப்பு ஒயின், பசும் மற்றும் கரும் தேனீர், நீலபெர்ரி ஆகியவற்றை விட அதிக அளவில் ஃப்ளேவனாய்ட்-கள் சாக்கொலேட்டில் உள்ளன.
*

4. ஓர் அறிவியல் ஆதாரமற்ற உடல் நல உணவுமுறை கூட மாத்திரை வடிவில் சாக்கொலேட் மற்றும் கொக்கோ தூளை உண்ண பரிந்துரை செய்கிறது. இருப்பினும் பால் சாக்கொலேட்டையோ வெள்ளை சாக்கொலேட்டையோ உண்பது பெரும்பாலும் உடல் நல விளைவுகளை ஏற்படுத்தாது.
*

5. சாக்கொலேட் ஒரு உடற்சக்திப்பொருளும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவாதலால் நாள்தோறும் சாக்கொலேட் சாப்பிடுவது உகந்ததல்ல.
***
இன்னும் இதனுடைய விளைவுகளை தெரிந்துக் கொள்ள இந்த தளத்தை கிளிக் செய்து படிக்கவும்.
***
நன்றி விக்கிபீடியா.
இந்த தகவல் உங்கலுக்கு உபயோகமாக இருந்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி நண்பர்களே! நன்றி.



***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

புற்று நோயை போக்கும் கோதுமை புல் சாறு.

மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான். குறிப்பாக உணவு - உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க ,உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, பயிற்சி, கிரியை என சில சாதாரண காரியங்களில் நாம் கவனம் செலுத்தினாலே 75% நோய்களை நாம் தவிர்க்க முடியும்.


இவைகளில் நாம் கவனம் செலுத்தாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் வர காரணமாகிறோம்.இவைகளில் அதிகமாக தாக்குவதும் அதிக பணச் செலவு வைப்பதும் இரு நோய்கள். 1. இருதய நோய் 2. புற்று நோய்.

***

புற்று நோய் :

*

இன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகையை கொண்டு உணர முடியும்.தங்களின் பெரும் பகுதி சேமிப்பை தற்சமயம் மருத்துவமனைகளில் மேற்கண்ட நோய்களுக்காக செலவிடுகிறார்கள்.நகர மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் ஆரம்ப நிலைகளில் தடுக்கவும், பின் நிலைகளில் தாக்கத்தை குறைக்கவும் கோதுமை புல் சாறு சிறந்த நிவாரணி என நிருபிக்கப்பட்டுள்ளது.

*

இதனை பச்சை ரத்தம் என அழைக்கிறார்கள். எளிதாக இதனை நாமே வளர்த்து தயாரிக்க முடியும்.10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும்.இதனை கொண்டு சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யவேண்டும் அவ்வளவே. தற்சமயம் பெருநகர அங்காடிகளில் கோதுமை புல் கிடைக்கிறது.

*

இதனை தவிர வெண்நுணா (Morinda citrifolia ) என்ற தாவரத்தின்பழச்சாறும் மிகவும் சிறந்தது.இதனை நோனி (Noni)என்ற பெயரில் விற்பனைசெய்கிறார்கள்.இந்திய தாவரம். நாம் இதனை மறந்து விட்டோம்.பசிபிக் பெருங்கடல் அருகேயுள்ள நாடுகள் சிறப்பாக வியாபாரம் செய்கின்றன.


*

வீடியோ காட்சி காண கிளிக்
( http://www.youtube.com/watch?v=jviegr6bqEE )

*

ஆங்கில கட்டுரை படிக்க கிளிக்
( http://www.downtoearth.org.in/full6.asp?foldername=20050531&filename=news&sec_id=4&sid=12 )

மேலும் அறிய கூகிள் தேடுதளத்தை பயன்படுத்துங்கள்.

*


புற்று நோயை எதிர்க்கும் மேலும் சில உணவுகள் பற்றிய விபரங்களை கீழேயுள்ள வலைதளம் விரிவாக கூறுகிறது. படித்து பயன்பெறுவீர்.

*
http://www.cancure.org/cancer_fighting_foods.htm

***

by வின்சென்ட்
நன்றி திரு. வின்சென்ட்.

http://maravalam.blogspot.com/2007/09/blog-post.html

***

திரு. வின்சென்ட் அவர்களால் இந்த தகவல் தெரிந்துக் கொண்டத்தறகு நான் மகிழ்கிறேன். நல்ல தகவல் நன்றி நண்பரே!





***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்

அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் இயற்க்கையின் வரம் ஏறாலம். இனி அதை பற்றி பார்ப்போம்.

நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.

*

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.


*

இவை ஸ்பெயின், துருக்கி, சிரியா, ஈரான் நாடுகளிலும் விளைகிறது. வெண் திட்டுகள், வெண்குட்டம் கண்ட இடத்தில் பூசி ஊற வைத்துக் குளித்து வர வெண்மை மாறி வரும். அதிமதுரத்தை தொடர்ந்தும், அதிகமாகவும் உண்ண உடல் எடை கூடும்.


*

இது ஆற்றங்கரைகளில் வளரும். வெளிநாட்டுக் குண்டுமணிச் செடியின் வேருக்கு அதிமதுரம் எனப் பெயர். ரஷ்யாவிலும், சீனாவிலும் இது விளைகிறது. 24 அடி உயரம் வரை உயர்ந்து வளரும் செடி அதிமதுரம், வேர் வெட்ட வெட்ட அழியாது. பல வருடங்கள் கழித்தும் வெட்டிய வேர் துளிர்க்கும். பல நோய்களை அழிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அதிமதுரம் இனிப்பு சுவையுள்ள வேர். ஸ்பெயினில் நன்கு வளரும்.

*

சுருட்டுப் பருமனில் ஏறத்தாழ அதே நீளத்தில் குச்சி, குச்சியாக சிவப்புச் சாயலுடன் அதிமதுரம் இருக்கும். இதில் ஹைட்ரோ கார்டிகோன் என்ற ஒரு பொருள் இருக்கிறது. நச்சுக் குணம் சிறிதும் இம் மூலிகையில் இல்லை. கொழுப்புப் பொருட்களை நன்கு ஜீரணிக்க உதவும் பண்பு இதற்கு உண்டு.

*

அதிமதுரம் என்றால் அதிக இனிப்புள்ளது என்று பொருள். இதன் வேர்ப்பகுதி தான் அதிமதுரம். இதை வடமொழியில் யஷ்டிமது என்றழைப்பர். இது இமயமலை அடிவாரத்தில் ஏராளமாக வளர்கிறது.


*


பண்டைய காலத்தில் எகிப்து, சீனம், கிரேக்கம் போன்ற நாடுகளில் புகையிலைகளுடன் அதிமதுரம் சேர்த்து புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் புகையினால் ஏற்படும் தீமைகள் தவிர்க்கப்பட்டது. அதிமதுரத்திலிருந்து எடுக்கப்படும் சத்தானது கரும்பின் சர்க்கரையை விட ஐந்து மடங்கு இனிப்பு கொண்டதாகும்.

***

அதிமதுரத்தின் பயன்கள்:

*

1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

*

2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

*

3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.

*

4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.

*

5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.

*

6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

*

7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.

*

8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

*

9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

*

10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.


*


11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.


*


12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.


*

13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

*

14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.


*

15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

*

16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.


*


17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

*

18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

*


19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

*

20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.


*

21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .

*

22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

*

23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

*

24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

*


25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

*

26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

*

27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

*

28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

*

29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

*

30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

***

அதிமதுரத்தில் இவ்வளவு சங்கதி இருக்கு, இனி தேடி பார்த்துனாலும் வாங்கிடுவிங்க இல்லையா. உடலுக்கு நல்லது என்றால் எவ்வளவு வேண்டுமாலும் தேடிப் போகலாம் ( தகவல் அறிய ), வாங்கி பயன்படுத்தலாம்.

***

நன்றி குமுதம் ஹெத்து-july2006
நன்றி விக்கிபீடியா.
நன்றி தமிழ்வாணன்.காம்.

***

உங்களுக்கு இது உபயோகமாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். நன்றிகள்.



***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "