...

"வாழ்க வளமுடன்"

25 ஏப்ரல், 2011

உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம் ( அது யோகா தா‌ன் )


நா‌ன் மக‌த்துவமானவ‌‌‌‌ன், எ‌ன்னை ‌விட ‌சிற‌ந்தவ‌ர் வேறு யாருமே இ‌ல்லை. எ‌ன்னா‌ல் தா‌ன் இ‌ந்த உலகமே ‌சிற‌ப்பு‌ப் பெறு‌கிறது. ‌ந‌ம்மா‌ல் தா‌ன் ந‌ம்மை‌ச் சு‌ற்‌றி உ‌ள்ளவ‌ர்களை ம‌கி‌ழ்‌ச்‌சியாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் முத‌லி‌ல் நே‌சி‌க்க வே‌ண்டு‌ம்.


எவ‌ர் ஒருவ‌ர் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் ‌சி‌க்‌கி எ‌ன்னடா வா‌ழ்‌க்கை எ‌ன்று புல‌ம்புவாரோ, அவரா‌ல் அவரை நே‌சி‌க்க இயலாது, நோ‌யி‌னா‌ல் ‌வாடுபவ‌ர்க‌ள், அவ‌ர்களை நொ‌ந்து கொ‌ள்ளவே செ‌ய்வா‌ர்க‌ள்.


எனவே, எவரது மனமு‌ம், உடலு‌ம் ‌‌‌சீராக இரு‌க்‌கிறதோ அ‌ப்போதுதா‌ன் அவ‌ர் த‌ன்னை‌த் தானே நே‌சி‌க்க முடியு‌ம். அ‌வ்வாறு உடலையு‌ம், மனதையு‌ம் ‌சீராக வை‌‌த்து‌க் கொ‌ள்ள ஒரே ஒரு ‌விஷய‌‌த்தை செ‌ய்தா‌ல் போது‌ம் எ‌ன்றா‌ல் அது யோகா தா‌ன்.


உ‌ங்களா‌ல் ம‌ற்றவ‌ர்களை ஆன‌ந்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்றா‌ல், ஏ‌ன் உ‌‌ங்களை ‌நீ‌ங்களே ஆ‌ன‌ந்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியாது? உ‌ங்களை ம‌கி‌ழ்‌ச்‌சியாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். உ‌ங்க‌ள் மனது எத‌ற்காக ஏ‌ங்கு‌கிறது, உ‌ங்க‌ள் உட‌‌லி‌ன் த‌ன்மை எ‌த்தகையது, உ‌ங்க‌ளி‌ன் தேவை எ‌ன்ன, ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் த‌ற்போது செ‌ய்து கொ‌ண்டிரு‌ப்பது எ‌ன்ன எ‌ன்பதை சுய ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம்.


சுய ப‌ரிசோதனை செ‌ய்வ‌தி‌ல் யோகா மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


த‌ன்னுடைய எ‌ண்ண‌ம், செய‌ல், பே‌ச்சு ஆ‌கியவை உ‌ண்மையாகவு‌ம், ந‌ல்லபடியாகவு‌ம் வை‌த்‌திரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌‌ப்படி நா‌ம் இரு‌க்‌கிறோமா எ‌ன்பதை யோகா‌வி‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம்.


நமது எ‌ண்ண‌த்தையு‌ம், செயலையு‌ம், பே‌ச்சையு‌ம் தூ‌ய்மையானதாக மா‌ற்றவு‌ம் யோகா உதவு‌கிறது. யோகா செ‌ய்யு‌ம் போது ஒருவரது உட‌லி‌ல் உ‌ள்ள ‌தீயவைக‌ள் மறை‌ந்து ந‌‌ன்மைக‌ள் ஏ‌ற்படு‌கிறது. சுறுசுறு‌ப்பு தோ‌ன்று‌கிறது. சுறுசுறு‌ப்பாக இரு‌க்கு‌ம் ம‌னித‌ன் எ‌ந்த செயலையு‌ம் எ‌ளிதாக செ‌ய்ய முடியு‌ம். தேவைய‌ற்ற நடவடி‌க்கைக‌ளி‌ல் ஈடுபட‌த் தேவை‌யி‌ல்லை.

தனது கா‌ரிய‌ங்களை ச‌ெ‌ய்து முடி‌த்து‌வி‌ட்டா‌ல் பொ‌ய்யோ, புர‌ட்டோ சொ‌ல்ல‌த் தேவை‌யி‌ல்லை. தெ‌ளிவான, உ‌ண்மையான பே‌ச்‌சினை பேச முடியு‌ம். த‌ன் ‌மீது எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லாத ‌நிலை‌யி‌ல், தவறான எ‌ண்ண‌ங்க‌ள் மன‌தி‌ல் தோ‌ன்றாது. எனவே, யோகா‌வி‌ன் மூல‌ம் நமது மனமு‌ம், உடலு‌ம் ‌நி‌ச்சய‌ம் ‌சீராக இரு‌க்கு‌ம்.

ஆரோ‌க்‌கியமாகவு‌ம், ஆன‌ந்தமாகவு‌ம் வாழு‌ம் ம‌னித‌ன் த‌ன்னை‌த் தானே ‌நே‌சி‌க்காம‌ல் இரு‌க்க முடியுமா எ‌ன்ன?


***
thanks தினசரி
***







"வாழ்க வளமுடன்"

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க சில டிப்ஸ்!



திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?கவலையே வேண்டாம். இந்த சின்ன வைத்தியத்தை செய்து பாருங்கள். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!

அது தான் கட்டிப்பிடி வைத்தியம்.சும்மா இறுக்க அணைத்து ஒரு உம்மா கொடுங்கோ………

கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.

அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்` இருக்குமாம்.

இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!

எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக` பதில் கூறி விட்டனர் அந்த தம்பதியினர்.

அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.

1. கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்` அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.



2. கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்` அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம்.



3. ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம்.



4. மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம்.



5. இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம். அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.



6. மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.

- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள்.



இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.



சரி.சரி.கட்டிப்பிடி வைத்தியத்தை ஆரம்பிங்கப்பா….


***
thanks தினசரி
***




"வாழ்க வளமுடன்"

மருத்துவ ஆலோசனைகள் & வாசகர் கோள்வி பதில் :)


கிரீன் டீ' குடிப்பது உடலுக்கு நல்லதா? எஸ்.சிவானந்தா, மதுரை

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதை தினமும் குடித்தால் பல வழிகளில் உடலுக்கு நன்மை தருகிறது. இது புற்றுநோய் வரும் தன்மையை குறைக்கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இதனால்தான் அதன் நன்மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக்கின்றன.


இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக்கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிறது. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறைகிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

***


எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. சமீபகாலமாக அடிக்கடி தலைச் சுற்றல் வருகிறது. இதற்கு என்ன செய்யலாம்? எல். சாரதா, கோவை



தலைச் சுற்றல் வர பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக ரத்த அழுத்தம் கூடுலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் தலைச் சுற்றல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தின் அளவு சரியாக உள்ளதா என கண்டறிவது முக்கியம். அதற்கேற்ப நீங்கள் எடுக்கும் மாத்திரையின் அளவை கூட்டவோ, குறைக்கவோ வேண்டியது வரும். அடுத்து மூளை, நரம்பு கோளாறுகளாலும் தலைச் சுற்றல் வர வாய்ப்பு உள்ளது. எனவே, ரத்த அழுத்தம் சரியாக இருந்தால் நரம்பு சம்பந்தமான பரிசோதனைகள் தேவைப்படும். இவற்றின் மூலம் எதனால் தலைச் சுற்றல் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை முறையும் அமையும்.


***


எனக்கு கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக நான், 'Glimepride மற்றும் Pioglitazone' மருந்துகளை எடுத்து வருகிறேன். சர்க்கரை நோய் நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது. நான் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். இருந்தாலும் உடல் எடை அதிகரித்து வருகிறது. நான் என்ன செய்வது? கே. ஜவஹர், விருதுநகர்



சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வாழ்க்கை முறை மாற்றம், நடைப் பயிற்சி, மருந்துகள் அத்தியாவசியமானவை. சர்க்கரை நோயாளிகள் எடையை கட்டுப்பாட்டில் வைப்பது மிக முக்கியமானது. உங்களுக்கு எடை கூட காரணம் நீங்கள் எடுக்கும் கடிணிஞ்டூடிtச்த்ணிணஞு' மருந்து ஆகும். எனவே நீங்கள் உங்கள் டாக்டரிடம் கலந்து பேசி, இம்மருந்தை மாற்றிவிட்டு, வேறு மருந்தை பெறுவது அவசியமானது. மேலும் நீங்கள் தைராய்டு பரிசோதனையும் செய்து கொள்வதுநல்லது.


***

எனக்கு ரத்தக்கொதிப்பு உள்ளது. உணவில் கருவாடு, அப்பளம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாதென டாக்டர்கள் கூறுகின்றனர். வேறு வழியே இல்லையா? எஸ். மாடசாமி, ராமநாதபுரம்

நம் இந்திய உணவுப் பழக்கங்களில் மிகக் கொடூரமானது என்னவெனில், எண்ணெயில் பொரித்த உணவை உண்ணும் பழக்கம்தான். பொரித்த உணவு அயிட்டங்களை சாப்பிடுவதால் தான் ரத்தக் குழாய் நோய்களான மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. எனவே, பொரித்த உணவை அறவே தவிர்ப்பது நல்லதாகும். குறிப்பாக வடை, பஜ்ஜி, பூரி, முறுக்கு, அப்பளம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். எண்ணெயை தாளிக்க மட்டும் சிறிதளவு உபயோகிப்பது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மேற்கண்டவற்றை கடுமையாக கடைபிடித்தாக வேண்டும். கருவாடு, அப்பளம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதாலும் அதை தவிர்ப்பது மிக அவசியம்.



டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.


***
thanks தினமலர்
***






"வாழ்க வளமுடன்"

குளிர் பிரதேசங்களில் மாரடைப்பு, திடீர் மரணம் ஏற்படுவது ஏன்?


குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல்நிலை, அதற்கேற்ப மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்தஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது. எந்த வகையான மாற்றம்?



* குளிர், ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.



* குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதேசங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள், பைபர்நோஜன் அதிகரிக்கிறது. கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால், அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது. இதனால், நடு வயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.



* அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு, குளிர் காலங்களில், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, 50 சதவீதம் அதிகரிக்கிறது. இதே நிலை தான், நம் நாட்டில் மலை பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கும் ஏற்படும். மார்பில் அழுத்தம் ஏற்படுவது தான், இதன் முதல் அறிகுறி. குளிர் காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது. ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை, இது போன்ற காலங்களில், மிகவும் பரிதாபம். தாறுமாறான இதயத் துடிப்புள்ள நோயாளிகள், "டீபிப்ரிலேட்டர்' என்ற கருவியை பொருத்திக் கொள்வது வழக்கம். இது, "பேஸ் மேக்கரை'ப் போலத் தான் என்றாலும், "பேஸ் மேக்கர்' குறைந்து போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். "டீபிப்ரிலேட்டர்' கருவி, அதிகரித்துப் போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். இது போன்ற கருவி வைத்திருப்பவர்களும், மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும்.
ஓய்வுக்காக மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே இறங்கி விடும். அப்படி இறங்கி விட்டால், உடல் நடுக்கம் ஏற்பட்டு, நிலை தடுமாறும். இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, மயக்க நிலை மரணம் ஆகியவை ஏற்பட்டு விடும். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். தலைக்கு குல்லா, கை,
கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும். பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்தி விட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும். சம வெளிகளில் கூட, மார்கழி, தை மாதங்களில், இதய நோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபடப்பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப் பையில், "சார்பிட்ரேட்' மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், "ஏசி' அறைகளில், 20 டிகிரி செல்சியசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு. அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், "ஏசி'யை அணைத்து வைக்க வேண்டும். இங்கிலாந்தில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மாரடைப்பு வருகிறது. அவர்களில் 86 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அமெரிக்காவில், குளிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இது போன்ற காலங்களில், 75 முதல் 84 வயதுடையவர்கள், கை, கால்களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.



டாக்டர். சு.அர்த்தநாரி
சென்னை. 98401 60433.


***
thanks தினமலர்
***




"வாழ்க வளமுடன்"

"ரைஸ் நூடூல்ஸ் காம்போஸ்'



சீனா மற்றும் இந்திய சமையலின் கலவையே மலேசியர்களின் சுவைமிகு உணவாக மாறிவிட்டது. இந்த மலேசிய கலவையுடன் தென்னிந்திய சுவையை சேர்த்து "ரைஸ் நூடூல்ஸ் காம்போஸ்' செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் பாலசுப்ரமணியம், சமையல் நிபுணர் எழுவன்.



தேவையானவை :

சைனீஸ் அல்லது எக் நூடூல்ஸ் - 100 கிராம் (கடையில் கிடைக்கும்)
வேக வைத்த சாதம் - 100 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - ஒரு சிட்டிகை
மெட்ராஸ் கறிப் பொடி - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
காலிபிளவர் வறுவல், சாஸ் செய்ய தேவையானவை
காலிபிளவர் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
பூண்டு - இரண்டு பல்
வெங்காயம் - ஒன்று
தக்காளி சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 50 கிராம்
கறிமசாலா பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

நூடூல்ஸை கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் வேகவிட வேண்டும். தண்ணீரை வடித்து குளிர்ந்த நீர் ஊற்றி மீண்டும் வடித்து உதிரியாக விட வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட், முட்டைகோஸ், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கியதில் பாதியை தனியாக எடுத்து வைக்க வேண்டும். மீதியில் கறிப் பொடி, சோயா சாஸ், உப்பு, நூடூல்ஸ் சேர்த்து உதிரியாக வதக்க வேண்டும். இதை தனியாக வைக்க வேண்டும்.


மற்றொரு வாணலியில் மீதமுள்ள காய்கறிகள், கொத்தமல்லி தழை, உப்பு, சாதம் சேர்த்து உதிரியாக வதக்க வேண்டும். சிறிய கிண்ணத்தில் ஒரு கரண்டி நூடூல்ஸ், ஒரு கரண்டி சாதம் என மாற்றி மாற்றி சேர்த்து அதை அப்படியே தட்டில் கொட்டினால் சாதமும், நூடூல்சும் கலந்த கலவை கிடைக்கும். மிக மிக வித்தியாசமான சுவையை அனுபவிக்கலாம்.


காலிபிளவரை கொதிக்கும் தண்ணீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும். தனித் தனி பூவாக உதிர்த்து சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது, பாதியளவு சோளமாவு, உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொரிக்க வேண்டும். சாஸ் செய்வதற்கு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் கறிமசாலா பொடி, தக்காளி சாஸ், சோளமாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டால் கெட்டியான சிவப்பு நிற சாஸ் கிடைக்கும்.


தட்டில் ரைஸ் நூடூல்ஸ், பொரித்த காலிபிளவர் வைத்து அதன் மீது சாஸ் ஊற்றி சாப்பிட்டால்... சுவை ஆஹா தான். குழந்தைகளுக்கு வித்தியாசமான இந்த சமையல் மிகவும் பிடிக்கும். மதிய உணவில் செய்து கொடுத்தால் சந்தோஷமாக சாப்பிடுவர்.

*

சமையல் நேரம்: 30 நிமிடங்கள்



***
thanks தினமலர்
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "