...

"வாழ்க வளமுடன்"

23 ஜூன், 2011

எடுப்பாக காட்டிக்கொள்வதால் ( ஹை ஹீல்ஸ் ) வரும் தீமைகள் ?



நாகரிக உலகில் பெரும்பாலான பெண்கள், "எடுப்பாக' காட்டிக்கொள்ள பயன்படுத்தும் ஹை ஹீல்ஸ்
வகை செருப்புகள், பல ஆபத்துகளை வரவழைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.


பிரிட்டனில் ஏராளமான பெண்களிடம் இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 2 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்ட போது, அதில் நான்கில் ஒரு பங்கு பேர் தினமும் ஹை ஹீல்ஸ் அணிகின்றனர் என தெரிய வந்தது. ஆராய்ச்சி முடிவில், பிரிட்டனில் மட்டும் 80 லட்சம் பெண்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வகை செருப்புகளை அணிவதால் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. காலில் வலியும் உண்டாகிறது. முழங்காலுக்கும், கணுக்காலுக்கும் இடையே பாதிப்பு உருவாகிறது என்றும் ஆராய்ச்சி யாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு மூட்டுவலி பிரச்னையும் ஏற்படுகிறது. குதிகாலின் உயரம் அதிகமுள்ளதால், முன்னங்கால் களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. பெரும்பாலான நேரங்களில் ஹை ஹீல்ஸ் அணியும் பெண்கள், சாதாரண செருப்பு களை அணிய முடியாமலும் போகிறது.



எப்படி தப்பிப்பதுஹை ஹீல்ஸ் அணியும் அனைத்து வயதினருக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. இதில் வயதானவர்களுக்கு தான் அதிக பிரச்னை என்பது உண்மையல்ல. கால்களுக்கு சரியான அளவில் செருப்பு அணிவது மிக முக்கியம். இதனால் பாதம் மற்றும் கால்களின் இணைப்பு பகுதி பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். 2-3 செ.மீ., (ஒரு இன்ச்)க்கு மேல் உயரமுள்ள செருப்பை அணியக் கூடாது. உங்கள் கால்களிலும் வலி ஏற்பட்டால் துவக்கத்திலேயே டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஹை ஹீல்ஸ் அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



கணுக்கால் காயம் ஹை ஹீல்ஸ் அணிவதால் காலில் பேலன்ஸ் குறைகிறது. எனவே கீழே விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக கணுக்கால் எலும்பு உடையும் ஆபத்து ஏற்படுகிறது.


பெருவிரல் வீக்கம்இறுக்கமான ஷூ அணிவதால் கால் பெருவிரல் எலும்பு பெரிதாக வளர்ந்து விடுகிறது. இதனால் கால்விரலில் வலி உண்டாகிறது.


"ஆச்சில்ஸ்' தசைநார்பாதம் கீழ்நோக்கி போகும் போது, தசையினை எலும்போடு சேர்க்கும் "ஆச்சில்ஸ்' தசைநார் இறுகுகிறது. ஹீல்ஸ் உயர்கிற அதே சமயம் தசைநார் இறுகுகிறது. இதனால் குதிகாலில் வலி ஏற்படுகிறது.
முழங்கால் ஹை ஹீல்ஸ் செப்பல் அணிவதால் முழங்காலுக்கு 26 சதவீத கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.


உடல் அமைப்புஇடுப்பு மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றை முன்னோக்கி தள்ளுகிறது.


அழுத்தம்ஹை ஹீல்ஸ் கால்களை, நீளமானதாக காண்பிக்கிறது. ஆனால் ஹீல்ஸ்சின் உயரம் கூடும்போது கால் பாதத்துக்கு அழுத்தம் அதிகமாகிறது.


எப்போது3 இஞ்ச் ஹீல்ஸ் +76 சதவீதம்2 இஞ்ச் ஹீல்ஸ்+57 சதவீதம்1 இஞ்ச் ஹீல்ஸ் +22 சதவீதம்


நரம்புத்தளர்ச்சிஹீல்ஸ் செப்பல் அணிவதால் காலின் 3வது விரலுக்கும், 4வது விரலுக்கும் இடையே உள்ள நரம்பு பாதிக்கிறது. இதனால் நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு கால் நடுக்கம் ஏற்படுகிறது.


பெருவிரல் முண்டுஇறுக்கமான ஷூ அணிபவர் களுக்கு பெருவிரல் முண்டு ஏற்படுகிறது. காலின் பெருவிரலின் அடியில் உள்ள எலும்பு பாதிக்கப்பட்டு பக்கவாட்டில் வளைகிறது.


***
thanks ஞானமுத்து
***



"வாழ்க வளமுடன்"

மனிதனின் கட்டாயத் தேவையான கொழுப்பு அமிலம்...!



மனிதனின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் சர்க்கரை/மாவுப்பொருள், புரதம் மற்றும் கொழுப்பு தேவை. அதிலும் குழந்தைகளுக்கு புரதமும் கொழுப்பும் அதிகம் தேவை. கொழுப்பில், கிளிசராலின் மூன்று எஸ்டர்களும், கொழுப்பு அமிலங்களும் உள்ளன. வைட்டமின் A ,D , E & K போன்றவை கொழுப்பில்தான் கரையும். நம் உடலின் தோல், முடி போன்றவை நன்றாக இருக்கவும், உடலின் வெப்பநிலையை ஒரே அளவில் சீராக பராமரிக்கவும், செல்கள் நன்கு செயல்படவும், உடலுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கவும், நமக்கு கொழுப்பு கட்டாயம் வேண்டும். மேலும் கொழுப்பு உடலுக்கு வேண்டிய ஆற்றலை சேமித்தும் வைக்கிறது. நீங்கள் விரதம் என்று பட்டினி கிடக்கும்போது, உங்களுக்கு தேவையான சக்தியைத் தருபவர் சேமிக்கப்பட்ட கொழுப்புதான்..! அதிக கலோரி தரும் பொருளும் கொழுப்புதான்..! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் விளைவுதான் கொலஸ்டிரால்..!

இன்றியமையாத கொழுப்பு அமிலம் ஒமேகா 3!

கொழுப்பே இல்லாத உணவை உண்பது என்பது சாத்தியம் அல்ல. அரிசியில் கூட கொஞ்சூண்டு கொழுப்பு உள்ளது. சில கொழுப்பு அமிலங்கள் நம் உடல் செயல்பாட்டுக்கு கட்டாயம் தேவை. நம் உடலால் உற்பத்தி செய்ய முடியாதவைகளையே, உடலுக்குத் தேவையான கட்டாய பொருள்கள் என்கிறோம். அது போல ஒரு முக்கியமான கொழுப்பு அமிலம்தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ( ω−3 fatty acids or omega-3 fatty acids) கடந்த 20 ஆண்டுகளாக, இதன் மகத்துவம், ஆராய்ச்சி மூலம் அறியப்பட்டு, மிகவும் மதிக்கப்படுகிறது. அப்படி என்ன இது செய்கிறது என்கிறீர்களா? இதயப் பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயமாக இதன் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

ஒமேகா-3-கொழுப்பு அமிலம் என்பது ஒரு பூரிதமற்ற கொழுப்பு அமிலம் (poly-unsaturated fatty acid). இந்த அமிலம் பொதுவாக மீன், விதைகள் மற்றும் அதிக பசுமையான அனைத்துப் பொருள்களிலும் முக்கியமாக கீரை வகைகளில் காணப்படுகிறது. இது இதய நோய்கள், வீக்கம், சிலவகை புற்றுநோய்கள், சர்க்கரை நோய், கண் தொடர்பான வியாதிகள் போன்றவற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பு கவசம் தருகிறது. மேலும் சூலுற்ற பெண்ணின் கருப்பையில் வளரும் கருவின், மூளை நன்கு உருவாக ஒமேகா-3-கொழுப்பு அமிலம் அவசியம் தேவைப்படுகிறது. இது வளரும் சிசுக்களின் சரியான மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு செயல்பாடுகளுக்கு மிக முக்கிய தேவையாக இருக்கிறது.

அதனால்தான் குழந்தைகளுக்கான பால் பவுடரில் இது கலக்கப்படுகிறது. அதுதான் டோகொசா ஹெக்சனாயிக் அமிலம்/ஆல்பா லினோலெனிக் அமிலம் ( docosahexaenoic acid (DHA) / α-linolenic acid (ALA) எனப்படுகிறது. இது ஒமேகா-3-கொழுப்பு அமிலத்தின் வழியே உருவாகும் ஒரு வேதிப்பொருள். இது அதிகமுள்ள உணவு, கெட்ட கொழுப்பை(LDL - Low Density Lipid , VLDL - Very Low Density lipid ) குறைக்கிறது; நல்ல கொழுப்பை (HDL -High Density Lipid)அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த தமணிகளின் மேல் படிந்துள்ள கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் குறைப்பதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கு வயதான காலத்தில் ஏற்படும் நினைவு மறதி நோயை (Alzheimer's disease) தடுக்கவும் இது உதவுவதாக, 2005 ம் ஆண்டின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் காணப்படுகிறது. மீனில் மிகக் குறைந்த கொழுப்பே உள்ளது. மேலும் இதில் நமக்குத் தேவையான புரதம், வைட்டமின் A &D உடலின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், ஐயோடின், புளுரின் போன்ற ஏராளமான தாது உப்புக்கள் உள்ளன. இதில் கொஞ்சம் கூட மாவுப்பொருள் கிடையாது. மிக குறைந்த கலோரியே உள்ளது. அமெரிக்க இதய சங்கம் வாரத்திற்கு இருமுறை, மீன் சாப்பிடச் சொல்லி சிபாரிசு செய்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி, நிறைய உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், ரொட்டி, கேக், யோகர்ட் என்னும் இனிப்பான தயிர், குழந்தைகளுக்கான உணவுகள் இவற்றில் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் சேர்க்கின்றன . மீன் தவிர, இது சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றிலும் உள்ளது.

கடல் மீனின் நன்மைகள்..!

நீங்கள் 150 கிராம் கடல் மீன்/கடல் உணவு சாப்பிட்டால், அது உங்களின் ஒரு நாளைய புரத தேவையின் 50 -60%த்தை நிறைவு செய்துவிடும். அனைத்துவித கடல் உணவுகளும், இறால் தவிர, குறைவான கொழுப்பு உள்ளவையே..! கடல் மீனில் 5%கும் குறைவான கெட்ட கொழுப்பே உள்ளது. இவைகளில், அதிக கொழுப்பு இருந்தாலும், அதனை இதிலுள்ள ஒமேகா-3-கொழுப்பு அமிலத்தின் ஆல்பா லினோலினிக் அமிலம் ( DHA - α-linolenic acid (ALA),எபிகோசாபெண்டானாயிக் அமிலம் ( EPA -eicosapentaenoic acid (EPA) ஈடுகட்டிவிடுகின்றன. வாரம் இருமுறை மீன் சாப்பிட்ட மாதவிடாய் நின்று போன சுமார் 3 ,500 பெண்களிடம் ஆய்வு செய்ததில் இவர்களின் கருப்பை புற்றுநோய் விகிதம் குறைந்துள்ளதாம். கருவுற்ற காலத்தில் நிறைய மீன் உண்டதால், குறைமாத குழந்தை பிறப்பும், எடை குறைவான குழந்தை பிறப்பும் குறைந்துள்ளதாம்.

டிமென்ஷியா(Dementia) என்னும் ஞாபக மறதி நோயை 30% கட்டுப்படுத்துகிறது. மிகவும் நாள்பட்ட நோய்களை சரியாக்குகிறது. மேலும் 2009ல் இதய நோய் உள்ளவர்ககுக்கு, மீன் சாப்பிடச் சொல்லி, பல நாடுகள் நடத்திய ஆய்விலும் இதய நோயாளிகளின், இதய நிலைமையில், சீரான நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.

ஒமேகா-3 -கொழுப்பு அமிலத்தின் சிறப்பு நன்மைகள்:

இரத்தக் குழாய் நோய்கள், இதயம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

கெட்ட கொழுப்பைக் குறைத்து, நமக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

ஜியார்டியா பல்கலைக் கழக ஆய்வின்படி, உடல் எடையைக் குறைத்து சீராக்குகிறது.

மார்பகம், பெருங்குடல் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோயைத் தவிர்க்கிறது. மேலும் புற்றுநோய் பாதிப்பு வந்தவர்களுக்கும், மீன் உணவு உதவுகிறது.

மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுவதால், அல்சீமர் மற்றும் மறதி நோயைக் கட்டுப்படுத்துகிறது. சிலருக்கு குணப்படுத்தியும் இருக்கிறது.

மூட்டு வாத நோயையும், வீக்கத்தையும் குணப்படுத்தும்.

கண் பார்வைக்கு பெரிதும் உதவும். மீன் உண்பதால், வயது மூப்பால் ஏற்படும் பார்வை பிரச்சினை தவிர்க்கப்படும்.

தோலை பளபளப்பாக, பளிங்கு மேனியாக வைக்க பணிபுரியும்.

மன அழுத்தம், சோர்வு, மன உளைச்சல் போனவற்றை விரட்டும்.

ஆஸ்துமாவின் நிவாரணி.

புற்றுநோய் வருவதை தவிர்க்கும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

தோலின் சொறி, சிரங்கு வராமல் பாதுகாக்கும்.

ஒற்றைத் தலைவலி, வராமல் விரட்டும்.

உடல் பருமனை வளர விடாது.

மீனை குழம்பில் போட்டு சாப்பிட்டால் மட்டுமே இந்த பலன்கள் கிட்டும். எண்ணெயில் பொரித்தால்....கொலஸ்டிரால் கூடும். கவனம் இதில் தேவை..!



- பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com




***
thanks பேரா.சோ.மோகனா
***





"வாழ்க வளமுடன்"

நண்டு சூப்



தேவையான பொருட்கள்:


நண்டு - அரை கிலோ
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயத் தாள் - 3
கான்ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி
அஜினோ மோட்டோ - கால் தேக்கரண்டி
பால் - கால் கப்

செய்முறை:

நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவேண்டும்.



***
thanks நளன்
***





"வாழ்க வளமுடன்"

வெள்ளரிக்காய் சூப்



தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1
துருவிய வெள்ளரிக்காய் - 1
மைதா மாவு - 1 மேஜைக் கரண்டி
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மில்லி
பாலேடு அல்லது கிரீம் - 2 மேசைக் கரண்டி
வெண்ணெய் - 25 கிராம்
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நறுக்கி 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை அதில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


***
thanks keetru
***




"வாழ்க வளமுடன்"

வெள்ளரிக்காய் ஊறுகாய்



தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் - 3

வினிகர் - 2 தேக்கரண்டி

சோயா ஸாஸ் - 4 தேக்கரண்டி

சர்க்கரை - 1தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி


செய்முறை

வெள்ளரிக்காயை கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில், சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் வெள்ளரித் துண்டுகளின்மேல் உப்பை தூவி முப்பது நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதற்கிடையில் சோயா ஸாஸ், வினிகர், சர்க்கரை இவைகளை ஒன்றாகக் கலந்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வைக்க வேண்டும்.

முப்பது நிமிடம் கழித்து வெள்ளரித்துண்டுகளை உப்பு போக கழுவிவிட வேண்டும். பின் கழுவிய வெள்ளரித்துண்டுகளை தயாராக வைத்திருக்கும் கரைசலில் சேர்க்க வேண்டும். இதனை ஒரு வாரம் வரை ப்ரிஜில் வைத்து பின் எடுத்து உபயோகிக்க வேண்டும்.



***
thanks keetru
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "