...

"வாழ்க வளமுடன்"

29 டிசம்பர், 2011

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?














``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''



``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன். "பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?'' "உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.



"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?'' "ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.'' "இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' "இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''



"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''



"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''



"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?'' "18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''



"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?'' "ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி



முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-





1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.



2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.



3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.





"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''



"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''



"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''



"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.





நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''



"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''



"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.



எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''



"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''



"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''



"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''



"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''



"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''



"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.'' 1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.



1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.



1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.





உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?



சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை கல்லீரல் - 18 மணி நேரம் வரை இதயம் - 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை கணையம் - 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும் தோல் - 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.




***
thanks tamilstar
***


"வாழ்க வளமுடன்"

05 நவம்பர், 2011

முதலுதவியளிக்க கற்றுக்கொள்ளுங்கள்!



ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையேடு இருந்தால் போதும். எல் லா சந்தர்ப்பங்களில் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். காரணம், சிகிச்சை முறைகள் நபருக்கு நபர், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும், சில பொதுவான விதிகளை மட்டும் இங்கே தொகுத்துள்ளோம்.


முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:

1. உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
2. நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றி, ஆறுதல் சொல்ல வேண் டும். பயப்படக் கூடாது. தவிரவும், வேறு சில பொறுப்புகளும் உள்ளன.
1. உடனடியாக நிலைமையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். பதற்றப்படக் கூடாது. தகுந்த உதவி கிடைக்க உதவ வேண்டும்.
2. தீ விபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னைப் பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவர். பிறகு, அருகில் இருப்பவர்.
3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டி ருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.
5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத் துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்.
6. மருத்துவ உதவி கிடைக்கும் வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.
7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

தீக்காயம் தீவிர காயம்

சிகிச்சை முறை:

● 10 நிமிடங்களுக்கு ஓடும் நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
● ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
● பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும்.
● பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
● கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி வி டுங்கள்.
● நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.
சிறிய காயங்கள்
சிகிச்சை:
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
தபால் தலை அளவை விட பெரிய அளவில் தீக்காயம் ஏற்பட்டிருந் தால், மருத்துவ உதவிபெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம்.

துணிகளில் தீப்பற்றிக் கொண்டால்

● பதற்றப்பட்டு ஓடவேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும்.
● தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும்.
● தீக்காயம் ஏற்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளைக் க ண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
● பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட் டலாம்.
அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதிமுறைகள்
● ஆயின்மெண்ட், க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது.
● பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது.
● கொப்புளங்களை உடைக்கக் கூடாது.
பெரியவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்ப்பிடிப்பு

வலிப்பு நோய்

காக்கை வலிப்பு என்று பரவலாக அழைக்கப்படும் வலிப்பு நோய் ஏற்படும் போது உடலிலுள்ள பல தசைகள் சுருங்குகின்றன. மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகளின் விளைவு இது. வலிப்பு ஏற்படும் போது, நினைவு தப்பிப் போகும். பாதிக்கப்பட்ட நபர் மூர்ச்சையடைந்து விடுவார்.

வலிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது?

● தலைக் காயத்தினால்
● மூளை பாதிக்கும் நோய்களால்
● மூளையில் பிராணவாயு, குளுக்கோஸ் அளவு குறையும் போது
● விஷம் சாப்பிடுவதால், மது அருந்துவதால்
வலிப்பு நோய் திடீர் என்று தாக்கும். தாக்குவதற்கு முன்னால் சில அறிகுறிகளைக் கண்டுகொள்ளலாம். புதிய சுவை, புதிய வாசத்தை உணர முடியும். வலிப்பு எந்த வகையில் வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி, உடனடியாக சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். முதலில், அவர்களுக்குக் காற்றோட்டம் தேவை. அதை ஏற்படுத்தித் தர வேண்டும். பிறகு, அவரது நாடித் துடிப்பையும் சுவாசத்தையும் சரிபார்க்க வேண்டும். சுற்றியிருக்கும் பொருள்களால் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
கண்டுபிடிப்பது எப்படி?

பொதுவான காரணிகள்

● திடீரென மயக்கமடைதல்
● ஆர்ச் வடிவில் பின்புறம் வளைதல்
● தாக்குப்பிடிக்க முடியாமல் திணறல், வலிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்
● சத்தம் போட்டுக்கொண்டே திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுதல்
● அசைவில்லாமல் இருத்தல்
● சுவாசம் தடைபடுதல்
● திணறல், தாடைகள் இறுகுதல், இரைச்சலுடன் கூடிய சுவாசம், உதட்டையோ நாக்கையோ கடித்தல், கட்டுப்பாட்டை இழந்து விடுவது.
● சில நிமிடங்களில் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புதல். என்ன நடந்தது என்பதையே உணராமல் இருத்தல்.
● சோர்வடைந்து, உடனே தூங்குதல்.


முதலுதவி செய்பவரின் பணி

● காயமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
● நினைவு தப்பிப் போனால், அருகிலுருந்து கவனித்துக் கொள்ளுதல்.
● உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை.
● சம்பந்தப்பட்டவர் கீழே விழ நேர்ந்தால், அவரைத் தாங்கிப் பிடித்தல்.
● காற்றோட்டம் ஏற்படுத்தலாம். கும்பல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல்.
● கூரான பொருள்கள், சூடான பானங்கள் போன்றவை அருகில் இல் லாமல் பார்த்துக் கொள்ளுதல்.
● எப்போது வலிப்பு ஆரம்பித்தது என்று குறித்து வைத்துக்கொள்ளுதல்.
● அவரது தலையைப் பாதுகாக்க வேண்டும். முடிந்தால் தலையணையில் அவரது தலையைச் சாய்த்து வைக்கலாம்.
● கழுத்துப் பகுதியில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தலாம்.
வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?
● காற்றுக் குழாயைத் திறந்து சுவாசம் சீராக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
● சுவாச மீட்பும் மார்பை அழுத்தும் செயலையும் (அடிப்படை உயிர்பாதுகாப்பு முறை) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
● அவர் சீராக சுவாசித்துக் கொண்டிருந்தால் குணமடைவதற்குத் தோதான நிலையில் அவரைச் சாய்த்துப் படுக்க வைக்கவும்.
● நாடித் துடிப்பு, சுவாசம் இரண்டையும் தொடர்ந்து கவனிக்கவும்.
● எத்தனை நேரம் வலிப்பு நீடிக்கிறது என்று குறித்து வைத்துக் கொள்ளவும்.
கவனம்
● நிலைமை மோசமாக இருந்தால் மட்டுமே அவரை வேறொரு பகுதிக்கு அழைத்துச் செ ல்லலாம்.
● அவரது வாயில் எதையும் திணிக்கக் கூடாது.
● பலவந்தப்படுத்தி அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.
எச்சரிக்கை
கீழ்க்கண்ட முறையில் ஏதாவது நடந்தால் உடனடியாக ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
● பத்து நிமிடங்களுக்கு மேல் அவர் பேச்சு மூச்சின்றி இருந்தால்
● ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடர்ந்தால்
● முதல் முறையாக வலிப்பு ஏற்பட்டால், தொடர்ந்து வலிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந் தால்.
● வலிப்பு வந்ததன் காரணத்தை அவர் உணராது போனால்
மயக்கம்
மூளைக்குப் போய்ச் சேர வேண்டிய ரத்தம் போதிய அளவு போகாமல் போனால் மயக்கம் ஏற்படுகிறது. குறுகிய காலம் மட்டுமே இது ஏற்படும்.
மயக்கத்தால் பெரிய ஆபத்து இல்லை என்று சொல்லி விட முடியாது. எதற்காக மயக்கம் ஏற்பட்டது என்பதை உணர முடியாத பட்சத்தில் உடனடி மருத்துவ உதவி பெற வே ண்டியது அவசியம்.
எப்படிச் சமாளிக்கலாம்?
1. பின்புறமாக சாய வைக்கலாம். கால்களை உயர்த்தி விடுவது நல்லது.
2. காற்றுக் குழாயைச் சரிபார்க்கவும். வாந்தி வருகிறதா என்று கவனிக்கவும்.
3. சுவாசம், இருமல் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லையென்றால் சிறிசிஸி ஐத் தொடங்கவும். தகுந்த உதவி வரும் வரை அல்லது பாதிக்கப்பட்டவரின் நிலைமை சீராகும் வரை சிறிசிஸிஐத் தொடரவும்.
4. தலை மட்டத்தை விட உயரமாகக் காலை உயர்த்தவும். இப்படிச் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும், இறுக்கமாக உடைகளைத் தளர்த்துங்கள். ஒரு நிமிடம் அவகாசம் கொடுத்துப் பாருங்கள். விழித்துக் கொள்ளவில்லை என்றால் அவசர சிகிச்சைப் பிரிவை நாடவும்.

அதீத ரத்தப் போக்கு

பாதிக்கப்பட்டவரின் ரத்தப் போக்கை நிறுத்த முயற்சி செய்வதற்கு மு ன்னால் உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்வது நல்லது. முடிந்தால், கையுறை அணிந்து கொள்ளுங்கள். கிருமிகள் தொற்றிக் கொள்வதைத தவிர்க்கலாம். ஏதேனும் பாகங்கள் பிதுங்கி வெளியில் வந்து விட்டால் அவற்றை மீண்டும் உள்ளே தள்ள முயற்சி செய்ய வேண்டாம். கட்டுப்போட்டு மட்டும் வைக்கவும். தவிரவும், கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

1. கீழே படுக்க வைக்கவும். உடலைவிட தலையைச் சற்றுத் தாழ்த்தி வைப்பது நல்லது. கால்களையும் உயர்த்தி வைக்கவும். இப்படிச் செய்தால் ரத்தம் மூளைக்குள் வேகமாகப் பாய்ந்தோடுவதைத் தடுக்கலாம். எந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகுகிறதோ அந்த இடத்தைக் கொஞ்சம் உயர்த்தியது போல் தூக்கி வைத்தால் நல்லது.

2. கையுறை அணிந்து கொண்டபின், காயத்திலுள்ள அழுக்குகளை நீக்கலாம். உள்ளே குத் திக் கிடக்கும் பொருளை பலவந்தமாக இழுக்க முயலக்கூடாது. காயத்தைச் சுத்தப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.
3. ரத்தம் வரும் இடத்தை அழுத்திப் பிடிக்க வேண்டும். கட்டுப்போட்டு நிறுத்தலாம். அல்லது கையுறை அணிந்த கையால் அழுத்திப் பிடிக்கலாம்.
4. ரத்தப் போக்கு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
5. கட்டுப்போட்ட பின்னும் ரத்தப் போக்கு தொடர்ந்தால் கட்டைப் பிரிக்க முயற்சி செய்ய வேண்டாம்.

6. ரத்தப் போக்கு நிற்காத பட்சத்தில் குருதிக் குழாயை (arteries & veins) அழுத்திப் பிடிக்கலாம். முழங்கைக்கும் அக்குளுக்கும் இடைப்பட்ட பகுதியில் கைக்கு உண்டான குருதிக் குழாய் உள்ளது. காலுக்கான குருதிக் குழாய் முட்டிக்கும் இடுப்புக்கும் மத்தியில் உள்ளது. இவற்றை அழு த்திப் பிடிக்கலாம்.
7. ரத்தப்போக்கு நின்றுவிட்டதே என்பதற்காக போட்டு வைத்திருந்த கட்டைப் பிரிப்பது சரியல்ல. உடனடியாக, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
8. உட்புறமாக ரத்தக் கசிவு இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவை அணுகுவது தான் ஒரே வழி.
சில அறிகுறிகள்
● காது, மூக்கு, மலக்குடல், பெண்ணின் கருப்பை, வாய்க்குழாய் போன்ற பகுதிகளிலிருந்து ஏற்படும் ரத்தக் கசிவு.
● இருமும் போது, வாந்தி எடுக்கும் போது ரத்தம் வெளிப்படுதல்.
● கழுத்தில், மார்பில், அடி வயிறு போன்றவற்றில் அடிபட்டால் ரத்தம் கசிதல்.
● மார்பு, வயிறு, மண்டை ஓட்டை ஊடுருவி அடிபட்டால்
● வயிற்றுத் தசைகள் இறுக்கமடைந்தால், சுருங்கினால்
● எலும்பு முறிவு ஏற்பட்டால்
● ஜில்லிடும் தோல் பகுதி, தளர்ச்சி, சோர்வு, அதிர்ச்சி

அதிர்ச்சி

அதிர்ச்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உதாரணமாகச் சொல்லலாம். இழப்பு, அலர்ஜி, தொற்று, இன் னபிற. அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களை இனம் காண சில அடிப்படைகள்.
தோல் ஜில்லிட்டு இருக்கும். வெளுத்துப் போய் காணப்படும்.
நாடித் துடிப்பு குறையும். சுவாசம் சீராக இருக்காது. அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். ரத்த அழுத்த அளவு குறையும்.
கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கும். கண் விழி அகன்று இருக்கும்.
மயக்கமடைந்த நிலையிலோ அல்லது விழிப்புடனோ இருப்பார்கள். விழிப்புடன் இருந்தால், குழப்பத்துடன், வலுவிழந்து காணப்படுவர். பதட்டம் அதிகரிக்கும்.

சில முக்கிய அறிகுறிகள்

● வெளிறிய தன்மை
● ஜில்லிட்ட தேகம்
● அதிகரித்த நாடித் துடிப்பு
● பதற்றம்
● தாகம்
● சுகவீனம்
அடிபட்டதால் அதிர்ச்சியடைந்தவர்களை என்ன செய்ய வேண்டும்?
● மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம்.
● சாய்ந்த நிலையில் படுக்க வைக்கலாம்.

● நாடித் துடிப்பு, இருமல், சுவாசம் இயல்பாக இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என் றால் சிறிசிஸிஐத் தொடங்கவும்.
● தோதான நிலைக்கு அழைத்துச் செல்லவும். இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும். தாகம் என்று கேட்டால் கூடத் தண்ணீர் தர வேண்டாம்.
● ரத்தத்துடன் வாந்தி எடுத்தால், அவரைக் கவனமாக மீட்பு நிலைக்கு எடுத்துச் செல்லவும்.
● காயத்துக்கு மருத்துவ உதவி பெற்றுத் தரவும்.
மூக்கு வழியாக ரத்தம் கசிதல்
பரவலான சங்கதி இது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெ ரும்பாலும் மூக்கின் உட்புறத்திலிருந்துதான் (ஷிமீஜீtuனீ) ரத்தக் கசிவு ஏற்படும்.
வயதானவர்களுக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் கூட மூக்கின் உட்புறத்திலிருந்து ரத்தம் கசியலாம். அதே சமயம், ஆழமான கசிவாகவும் இருக்கலாம். இறுக்கமாகிப் போன ரத்தக் குழாய் காரணமாகவோ அல்லது அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாகவோ கூட இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம். பல சமயங்களில் இந்தக் கசிவை நிறுத்த முடியாது. தேர்ந்த மருத்துவ சிகிச்சை தேவை.
என்ன செய்யலாம்?
● உயர்த்திய நிலையில் இருந்தால் ரத்தக் கசிவு நிற்கலாம்.
● ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு மூக்கைக் கிள்ளுவது போல் அழுத்திப் பிடிக்கலாம். அந்தச் சமயத்தில், வாய் வழியாக சுவாசிக்கலாம்.
● மூக்கைச் சிந்தக் கூடாது. கீழே குனியவும் கூடாது.
உடனடி அவசர சிகிச்சை எப்போது தேவைப்படும்?
● 20 நிமிடங்களுக்கும் அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால்
● மீண்டும் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்பட்டால்
● கீழே விழுந்ததாலோ தலையில் அடிபட்டதாலோ மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டால்.
வெளிப்புறப் பொருள்கள்

காது

வெளிப் பொருள்கள் காதில் சிக்கிக் கொண்டால் வலி அதிகரிக்கும். கேட்கும் திறன் குறையும். ஏதேனும் பொருள் காதில் சிக்கிக் கொண்டால், உடனடியாகக் கண்டுபிடித்து விடலாம். குழந்தைகளால் இது முடியாது.
என்ன செய்யலாம்?
● குச்சி போன்ற பொருள்களால் காதைக் குடைவது தவறு. அப்படிச் செய்தால் சிக்கிக்கொண்ட பொருள் உள்ளே போய்விடக் கூடும்.
● காதில் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரியும்படி இருந்தால். லாவகமாக அதை வெளியில் எடுக்க முயற்சி செய்யலாம்.
● மெதுவாகத் தலையைச் சாய்த்துப் பொருளை கீழே விழ வைக்க முயற்சி செய்யலாம்.
● ஏதேனும் பூச்சி புகுந்துவிட்டால், மினரல் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் காதில் மிதக்க விடலாம். காது மடலால் மெலிதாக அசைத்து அந்தப் பூச்சியை எண்ணெயில் விழ வைக்கலாம். பூச்சி மிதக்க ஆரம்பித்தவுடன் வெளியில் எடுக்க முயற்சி செய்யலாம்.
பூச்சியைத் தவிர பிற பொருள்களை வெளியில் எடுக்க, எண்ணெயைக் காதில் ஊற்றக்கூடாது.
அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால் மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

கண்:

என்ன செய்யலாம்?
● கையைக் கழுவிக்கொள்ளவும்.
● நன்றாக வெளிச்சம் உள்ள பகுதியில் சம்பந்தப்பட்டவரை உட்காரச் சொல்லவும்.
● கண்ணில் சிக்கிக் கொண்ட பொருள் தென்படுகிறதா என்று பார்க்கவும். இமையை கீழ்ப்புறமாக மடக்கி அவரை மேலே பார்க்கச் சொல்லவும். மேல்புற இமையைப் பிடித்துக் கீழப்புறமாக அவரைப் பார்க்கச் சொல்லவும்.
● கண் இமையில் அந்தப் பொருள் சிக்கியிருந்தால் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வெளியில் எடுக்கலாம்.
கவனம்:
● கருவிழியில் சிக்கியிருக்கும் பொருளை வெளியில் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.
● கண்ணை கசக்க வேண்டாம்.
அவசர சிகிச்சை எப்போது பெறலாம்?
● வெளியில் எடுக்க முடியாத பட்சத்தில்
● கரு விழியில் சிக்கிக் கொண்டால்
● பார்வை சரிவரத் தெரியாமல் அவர் அவதிப்பட்டால்
● வலி இருந்தால்
● சிக்கிக் கொண்ட பொருளை வெளியில் எடுத்த பின்னும் எரிச்சல் இருந்தால்

மூக்கு :

வெளிப்புறப் பொருள் மூக்கில் நுழைந்துவிட்டால்
● உபகரணங்களைக் கொண்டோ, பஞ்சைக் கொண்டோ வெளியில் அகற்ற முயல வேண் டாம்.
● மூச்சை உள்ளிழுக்க வேண்டாம். வாய் வழியாக சுவாசிக்கலாம்.
● மெதுவாக மூக்கைச் சிந்துவதன் மூலம் பொருளை வெளியேற்றலாம். கண்ணுக்குத் தெரியும் பொருளாக இருந்தால் Tweezers (கிடுக்கி) கொண்டு வெளியில் அகற்றலாம்.
● முயற்சி தோல்வியடைந்தால், உடனடி மருத்துவ உதவி அவசியம்.
தோல் :
தோலில் ஏதேனும் குத்தி விட்டால், ஜிஷ்மீமீக்ஷ்மீக்ஷீs கொண்டு அகற்றலாம் குத்திய இடத்தை சோப், தண்ணீர் கொண்டு கழுவலாம்.
தோலை ஊடுருவி முழுமையாக உள்ளே சென்றுவிட்டால்?
● சோப், தண்ணீர் விட்டுக் கழுவவும்.
● நெருப்பில் காட்டப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை எடுத்துக் கொள்ளவும்.
● மெலிதாக தோலில் செருகி, குத்திய பொருளை மேல்நோக்கி நகர்த்தலாம்.
● தென்பட்டு விட்டால், பொருளை வெளியில் எடுத்து விடலாம். சில சமயம், பெரிதுபடுத்திக் காட்டும் பூதக் கண்ணாடி தேவைப்படலாம்.
● குத்தப்பட்ட பகுதியைக் கழுவி காயவிடவும். ஆன்டிபயாடிக் களிம்பு தடவலாம்.
● இயலவில்லை என்றால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

மாரடைப்பு

இதயத்துக்கு வந்து சேர வேண்டிய ரத்தமும், பிராண வாயுவும் தடைபட்டால் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பு வந்தால் 15 நிமிடங்களுக்கு நெஞ்சு வலி நீடிக்கும். சில சமயம் எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கும். பெரும்பாலானோருக்குச் சில நாள்கள் அல்லது வாரங்களுக்கு முன்பாகவே அறிகுறிகள் தெரிந்து விடும். பொதுவான ஒரு அறிகுறி, நீடித்த நெஞ்சு வலி.
பிற அறிகுறிகள்
● இதயத்தின் மத்தியில் வலி, அழுத்தம், பிசைவதைப் போன்ற உணர்வு.
● மேற்புற வயிற்றில் நீடித்த வலி.
● நெஞ்சிலிருந்து பரவி, தோள்பட்டை, கழுத்து, தாடை, பற்கள், கைகள் என்று பரவும் வலி.
● குறைந்த சுவாசம்
● மயக்கம், தலை கிறுகிறுத்தல்
● கொட்டும் வியர்வை
என்ன செய்யலாம்?
அவசர சிகிச்சைப் பிரிவை நாடவும்
மயக்கமடைந்தால் சிறிசிமிஐத் தொடங்கவும். அதை மருத்துவரிடம் தெளிவுபடுத்திவிட வேண்டும்.
மிருகங்களால் ஏற்படும் உபாதைகள் கடி, கொட்டு
வீட்டுப் பிராணிகளால் அதிகம் ஏற்படும் உபாதை இது. பூனையை விட நாய் அதிகம் கடிக்கும். ஆனால், பூனைக் கடியும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியதே. தடுப்பூசி போடப்படாத வீட்டுப் பிராணிகளாலும், பழக்கப்படாத பிராணிகள் கடிப்பதாலும் ‘வெறிநாய்க்கடி’ நோய் ஏற்படுகிறது. நாயைவிட வௌவால், நரி போன்ற மிருகங்களால் இந்நோய் அதிகம் பரவும். முயல், அணில் போன்றவை ஆபத்தற்றவை.
என்ன செய்யலாம்?

சிறிய காயம் : தோலை அதிகம் துளைக்காத மெலிதான கடி என்றால் பயப்பட வேண்டாம். காயத்தை சுத் தமாக சோப், தண்ணீர் கொண்டு கழுவலாம். கிருமிநாசினி போடலாம். கட்டு கட்டலாம்.
பெரிய காயம் : தோலைத் துளைத்த கடியாக இருந்தால், ரத்தம் பெருகினால், சுத்தமான துணி கொண்டு ர த்தத்தைக் கட்டுப்படுத்தி உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

பரவும் நோய் :

வீக்கம், சிவப்பதால், அதிக வலி இருந்தால் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும்.
வெறிநாய்க்கடி இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால், அல்லது கடித்த பிராணியைப் பற்றி தெரியாமல் இ ருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டும். பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஜிமீtணீஸீus ஷிலீஷீt பெற்றுக் கொள்வது நல்லது.
மனிதக்கடி
சில சமயங்களில், விலங்குகளை விட மனிதர்கள் கடிப்பதால் ஏற்படும் பாதிப்பு தீவிரமடைந்து விடுகிறது. காரணம் மனிதர்களின் வாயில் உள்ள பாக்டீரியாக்கள்.
என்ன செய்யலாம்?
● ரத்தக் கசிவு இருந்தால் அழுத்திக் கட்டுப்படுத்தவும்
● கிருமி நாசினி உபயோகிக்கவும்
● கட்டு கட்டலாம்
● அவசர மருத்துவ உதவி
பூச்சிக்கடி, கொட்டு
பூச்சிக்கடி, கொட்டு மூலம் தோலில் விஷத் தன்மை பரவும். எரிச்சல், அலர்ஜி ஏற்படும். பல சமயங்களில், இவை பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சில சமயம், காய்ச்சல், மூட்டு வலி ஏற்படலாம். சிலருக்கு ம ட்டுமே தீவிர பாதிப்புகள் (Anaphylaxis
) ஏற்படலாம். அறிகுறிகள் : வீக்கம், அதிர்ச்சி, சுவாசிப்பதில் தடை. தொல்லை தருபவை என்று பார்த்தால் தேனீ, குளவி, நெருப்பு எறும்பு போன்றவை. சிலந்தி, மூட்டைப் பூச்சி, கொசு போன்றவைகளால் பாதிப்பு அதிகமில்லை.

மெல்லிய பாதிப்புகளுக்கு:

● கொட்டு வாங்காமல் இருக்க, பாதுகாப்பான பகுதிக்குச் செல்லவும்.
● கிரெடிட் கார்டு போன்ற தட்டையான பொருளால் கொடுக்கை சீவி விடவும். பிறகு, கடி வாயை சோப் தண்ணீர் போட்டு கழுவிவிடவும். கொடுக்கை பிடுங்கி எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். விஷம் பரவும்.
● வீக்கமும் வலியும் அதிகரிக்காமல் இருக்க ஐஸ் துண்டால் ஒத்தடம் கொடுக்கலாம். தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.
கடுமையான விளைவுகளுக்கு
கீழ்க்கண்ட விளைவுகள் இருந்தால், உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவைத் தொடர்புகொள்ளவும்.
● சுவாசிப்பதில் சிரமம்
● மயக்கம்
● குழப்பம்
● எரிச்சல்
● உதடு, தொண்டை வீக்கம்
● கிறுகிறுப்பு
● அதிகப்படியான இதயத் துடிப்பு
● குமட்டல், வாந்தி
பாதிக்கப்பட்டவருடன் இருக்கும் பட்சத்தில் கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.
● அலர்ஜிக்காக ஏதாவது மருந்தை கையில் வைத்திருக்கிறாரா என்று பார்க்கவும்
● படுக்க வைக்கவும், கால்களைத் தலையைவிட உயர்த்தி வைக்கவும்.
● இறுக்கமான உடைகளைத தளர்த்தவும். போர்வையால் அவரைப் போர்த்தவும். குடிக்க எதுவும் தர வேண்டாம்.
● வாயில் ரத்தக்கசிவு இருந்தால் அல்லது அவர் வாந்தி எடுத்தால், பக்கவாட்டாக அவரைப் படுக்க வைக்கவும். மூச்சுத் திணறாமல் இருக்கும்.
● சுவாசம், இருமல் சீராக இல்லை என்றால், சிறிசிஸிஐத் தொடங்கவும்.
பாம்புக் கடி
பெரும்பாலான பாம்புகள் ஆபத்தற்றவை. ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்
● இந்திய கோப்ரா
● ராஜ நாகம்
● Banded Krait H Slender Coral Snake H Russell
Viper H SawScaled
Viper H Common Krait

பாம்புகளிடம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சீண்டி விடுவதால் மட்டுமே பெரும்பாலான பாம்புகள் கடிக்கின்றன.
பாம்புக் கடி ஏற்பட்டால்
● அமைதியாக இருங்கள்
● பாம்பைப் பிடிக்க முயற்சி செய்ய வேண்டாம்.
● கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க loose splint உபயோகிக்கவும். ரத்த ஓட்டத்தை அது கட்டுப்படுத்தக் கூடாது என்பதால் சற்று தளர்வான நிலையிலேயே இருப்பது நல்லது.
● வீக்கம் பரவாமல் இருக்க நகைகளை உடனடியாக அகற்றுங்கள்.
● காயத்தை வெட்டியெடுக்க வேண்டாம்
● விஷத்தை உறிஞ்சி எடுக்க வேண்டாம்.
● உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
விஷம்
ஒருவருக்கு விஷத்தன்மை பரவியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சில அறிகுறிகள்
● உதட்டில், வாயில் எரிச்சல், சிவப்பாக மாறுதல்
● சுவாசத்தில் இரசாயன நெடி அடித்தல்
● உடலில், உடையில் உள்ள வாசனை, கறை
● காலி மருந்து பாட்டில், சிதறியிருக்கும் மாத்திரைகள்
● வாந்தி, சுவாசத் தடை, குழப்பம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
பி மயக்கம்
பி சுவாசத் தடை
பி வலிப்பு
உதவிக்காகக் காத்திருக்கும் வேளையில்
பி கார்பன் மோனாக்சைட் போன்ற ஆபத்தான வாயுக்களை அவர் சுவாசித்திருந்தால், உடனடியாக அவரை நல்ல காற்றோட்டமான பகுதிக்குக் கொண்டு செல்லவும்.
● வீட்டில் கழுவப் பயன்படுத்தும் இரசாயனத்தையோ அல்லது வேறு இரசாயனத்தையோ அருந்திவிட்டால், அந்த இரசாயன பாட்டிலிலுள்ள லேபிளைப் படிக்கவும். தெரியாமல் அதை அருந்திவிட் டால் என்ன செய்ய வேண்டும் என்று அதில் அச்சிடப்பட்டிருக்கும் அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
● உடையிலோ, கண் அல்லது தோலிலோ விஷம் சிதறியிருந்தால், உடைகளைக் களைந்து விடவும்.கண்ணை, தோலை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
● காலி பாட்டிலையும் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

கவனம் :

வாந்தி வருவதற்காக எதையாவது தர முயற்சி வேண்டாம்.
மின்சாரம் தாக்குதல்
மின்சாரம் தாக்குதலின் விளைவு வோல்டேஜின் அளவுக்கு ஏற்ப மாறுபடும். தவிரவும், மின்சாரம் எந்த வழியாக உடலில் பாய்ந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
● மாரடைப்பு
● மூச்சு விட முடியாத நிலை
● வலிப்பு
● மரத்துப் போதல்
● மயக்கம்
● இதயத் துடிப்பில் மாறுதல் (Arrhythmias)
மருத்துவ உதவி கிடைக்கும் வரை என்ன செய்யலாம்?
● தொட வேண்டாம்
● சுவிட்சை உடனடியாக அணைத்து விடவும். பிளாஸ்டிக், மரப் பொருள்களால் மின்சாரம் தாக்கிய பகுதியை நகர்த்தலாம்.
● சுவாசம், இருமல், அசைவைக் கவனிக்கவும். தேவைக்கு ஏற்ப சிறிசிஸிஐத் தொடங்கவும். கீழே படுக்க வைக்கவும். தலையை விட கால்களை உயர்த்தி வைக்கவும்.
எச்சரிக்கை
● வெறும் கைகளால் அவரைத் தொட வேண்டாம்.
● ஒயர்களிலிருந்து தீப்பொறி காணப்பட்டால், 20 அடிக்குப் பின்னால் நகர்ந்து விடவும்.
● மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இல்லாத பட்சத்தில், அவரை வேறு இடத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டாம்.
வெப்பம் தொடர்பான அறிகுறிகள்
சுளுக்கில் (CRAMPS) ஆரம்பித்து, அயர்ச்சி, வெப்பத்தாக்குதல் என்று பல அறிகுறிகள் உள்ளன.
வெப்பச் சுளுக்கு (CRAMPS) அதிகம் வலிக்கும். போதிய அளவு நீராகாரம் இல்லாததால் ஏற்படலாம்.
என்ன செய்யலாம்?
● ஓய்வு
● பழச்சாறு அருந்தலாம்
● 1 மணி நேரத்துக்கு அதிகமாக நீடித்தால் மருத்துவ உதவி.
வெப்ப அயர்ச்சி
கடினமான பணிகளுக்குப் பிறகு ஏற்படும்
● மயக்கம்
● வாந்தி
● அதிக வியர்வை
● கருத்த மேனி
● குறைந்த ரத்த அழுத்தம்
● குளிர்ந்த தோல்
● மெலிதான காய்ச்சல்
என்ன செய்யலாம்?
● நிழலான பகுதிக்கு நகர்த்திச் செல்லலாம்
● படுக்க வைக்கலாம். கால்களை தலைமாட்டிலிருந்து உயர்த்தி வைக்கலாம்.
● உடைகளைத் தளர்த்தலாம்.
● குளிர்ந்த நீரைப் பருகத் தரலாம்
● விசிறி விடலாம். குளிர்ந்த நீரால் ஒத்தடம் தரலாம்.
● கவனமான கண்காணிப்பு அவசியம். வெப்பத் தாக்குதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 102 டிகிரிக்கு மேலாகக் காய்ச்சல் இருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

வெப்பத் தாக்குதல் :

வெயிலில் கடுமையான வேலைகள் செய்வதால் ஏற்படும். வயதானவர்களுக்கும் வியர்வை வெளியேறாதவர்களுக்கும் அதிகம் ஏற்படும். வெப்பத் தாக்குதல் ஏற்பட்டால் வியர்வை வெளியேறும் ஆற்றலும், சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மறைந்து விடுகின்றன. 104 டிகிரிக்கு மேலே போனால் வெப்பத் தாக்குதல் ஏற்படலாம்.

பிற அறிகுறிகள்

● விரைவான அல்லது குறைச்சலான சுவாசம்
● அதிகரித்த அல்லது குறைந்த ரத்த அழுத்தம்
● வியர்வை நின்று போதல்
● எரிச்சல், குழப்பம், மயக்கம்
என்ன செய்யலாம்?
● நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்லலாம்
● மருத்துவ உதவி பெறலாம்
● தண்ணீர் தெளிக்கலாம். விசிறி விடலாம்.
தலைக் காயம்
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
● தலை அல்லது முகத்திலிருந்த ரத்தக் கசிவு
● சுயநினைவுச் சிக்கல்
● கண்களுக்குக் கீழே காதுக்குப் பின்னால், நிறம் மாற்றம்
● குழப்பம்
● சுவாசத் தடை
● சமனற்ற நிலை
● அயர்ச்சி, கை, கால் முடங்கிப்போதல்
● கண் விழி அளவு மாறுதல்
● தொடர் வாந்தி
● பேசுவதில் தடுமாற்றம்.

தீவிர தலைக் காயம் ஏற்பட்டால்

● படுக்க வைக்கவும். தலை, தோள்பட்டை உயர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
● நேரடியாக இல்லாமல், சுத்தமான துணி மூலம் அழுத்தம் கொடுத்து ரத்தக் கசிவை நிறுத் தலாம்.
● சுவாசத்தில், எச்சரிக்கை உணர்வில் குளறுபடி இருக்கிறதா என்று கவனிக்கவும்.

முதுகுத் தண்டு காயம்

முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரை அசைக்க, நகர்த்த வேண்டாம். மீறினால், இயக்கமே முடங்கிப் போக வாய்ப்புண்டு.
முதுகுத் தண்டு பாதிப்புக்குச் சில அறிகுறிகள்
● தலை காயம், சுய நினைவு இல்லாமை
● கழுத்தில், பின்புறத்தில் பலத்த வலி
● கழுத்தைத் திருப்ப முடியாமல் தவித்தல்
● பலகீனம், உணர்ச்சியற்றுப் போகும் நிலை, முடக்குவாதம்
● கழுத்து வேறு மாதிரியாக திரும்பி இருத்தல்
என்ன செய்யலாம்?
● உடனடி மருத்துவ உதவி
● அதே நிலையில் அவரை வைத்திருத்தல், கழுத்து அசையாமல் இருக்க, கழுத்தைச் சுற்றி போர்வையை வைத்தல்.
● சுவாசம், இருமல், இயக்கம் இவற்றில் பிரச்னை என்றால் சிறிசிஸிஐ தொடங்கவும்.
● வாந்தி எடுத்தால், இரண்டு பேராகச் சேர்ந்து அவரை ஒருக்களித்த நிலையில் படுக்க வைக்கவும்.
எலும்பு முறிவு
விபத்து மூலமாக எலும்பு முறிவு ஏற்பட்டால் அல்லது கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
● செயல்படாத நிலையிலிருந்தால், சுவாசம் தடைப்பட்டால், CPC தொடங்கவும்.
● அதிக ரத்தப் போக்கு
● மெலிதாகத் தொட்டால் கூட அதீத வலி
● உடல் பாகம், மூட்டுத் தோற்றம் மாறுதல்
● அடிபட்ட பகுதியின் நுனி (கை என்றால் விரல் நுனி) நீலமாக மாறுதல்
● கழுத்தில், தலையில், பின்புறத்தில் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால், மருத்துவ உதவி பெறும் வரை கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.
● ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்தவும்
● அடிபட்ட இடத்தைச் செயலற்றதாக மாற்றவும்
● ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கவும்
● சுவாசிப்பதில் தடை இருந்தால், படுக்க வைக்கவும், உடலைவிட தலை தாழ்வாக இருக்கு மாறு பார்த்துக் கொள்ளவும்.
சுளுக்கு
தசைகள் (Ligaments) அளவுக்கு அதிகமாக இழுக்கப்படும் போது, சுளுக்கு ஏற்படுகிறது. கணுக்கால், முழங்கால் பகுதிகளில் அதிகம் சுளுக்கு ஏற்படும். அதிக வலி இருந்தால் சுளுக்கின் தீவிரமும் அதிகம் என்று புரிந்து கொள்ளலாம். சிறிய அளவிலான சுளுக்கு என்றால்,
● சுளுக்கு மேலும் தீவிரமடையாமல் இருக்க Splints, Crutches போன்றவற்றைப் பயன்ப டுத்தலாம்.
● வலிக்கும் பகுதியைத் தவிர பிற பகுதிகளின் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டாம்.
● ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும்.
● எலாஸ்டிக் கொண்டு இறுக்கமாகக் கட்டலாம்.
● வீங்காமல் இருக்க பாகத்தை உயர்த்தி வைக்கலாம்.
எப்போது மருத்துவ உதவியை நாடலாம்?
● எலும்பு முறியும் சத்தம் கேட்டால் அல்லது மூட்டுகள் செயலற்ற நிலையில் இருந்தால்.
● சம்பந்தப்பட்ட பகுதி சிவந்து போதல், காய்ச்சல்
● தீவிரமான வலி இருந்தால்
● 2,3 நாள்களுக்குப் பிறகும், தொடர்ந்தால்.
மூளை வாதம்
மூளைப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் மூளை வாதம் ஏற்படும். ரத்த ஓட்டம் நின்று போகும். மூளை செல்கள் செயலற்றுப் போகும்.
மிக மிக அவசரமாக மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.
விரைவாக செயல்பட்டால் மட்டுமே தீவிர விளைவுகளைத் தவிர்க்க முடியும்.
● அதிக ரத்த அழுத்தம்
● முன்னர் ஏற்பட்ட மூளை வாதம்
● புகை பிடித்தல்
● நீரிழிவு
● இதய நோய்
போன்றவை மூளை வாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். வயதாக வயதாக மூளை வாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையைத் தொடர்புகொள்ளவும்.
● திடீர் பலகீனம், உடலின் ஒரு பகுதி முடமாகிப் போதல்
● கண் பார்வை கோளாறு, பார்வை மங்கலாதல்
● பேச்சில் தடுமாற்றம்
● தீவிர தலைவலி
● திடீர் மயக்கம், தடுமாற்றம்.



***
thanks Mohamed
***





"வாழ்க வளமுடன்"

இடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள உணவு முறைகள்...



காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.


பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.


நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.


எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.


அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால்... அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.


சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.


தினமும் உணவில் 2 டீஸ்பூன் 'கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.


டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.


தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும்.



***
thanks Mohamed
***




"வாழ்க வளமுடன்"

நடனம் ஆடினால் சர்க்கரை நோயையும் விரட்டலாம்!



இன்றைய உலக மனிதர்கள் உடல் ரீதியாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை... சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய். ஒருபுறம் உலக அளவில் இந்த நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க, மறுபுறம் இந்தியாவில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயர்ந்து வருகிறது.

அந்த நோயால் பாதிக்கப்படுவோர் வாழ்நாள் முழுக்க அவதியை அனுபவிக்க நேரிடுகிறது. எப்படியும் வாழலாம் என்ற நிலையில் இருந்து வெளியேற்றப்பட்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற குறுகிய வாழ்க்கை வட்டத்திற்குள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

இதனால், இந்த நோயை தடுக்க ஆய்வாளர்களும் தங்களது பங்குக்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த ஆய்வில் சமீபத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடனம் ஆடினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்பதுதான் அது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா நர்சிங் கல்லூரி பேராசிரியர் டெரி லிப்மன் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். முதல்கட்ட ஆய்வில் வாரத்துக்கு 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நடனம் ஆட அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஒரு மாதம் வரை அவர்கள் இவ்வாறு நடனம் ஆடினர். இதில் அவர்களது நீரிழிவு நோய் பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது தெரிய வந்தது. அதோடு, அவர்களது உடல் எடையும் கணிசமாக குறைந்திருந்தது.

இதுகுறித்து பேராசிரியர் டெரி லிப்மன் கூறுகையில், ``குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது. மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை மெல்லியதாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது'' என்றார்.

***
thanks தினதந்தி
***



"வாழ்க வளமுடன்"

25 அக்டோபர், 2011

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..:)







இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள்



நண்பர்களுக்கும், தோழிகளுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் :)




அனைவரின் இல்லத்திலும் இனிய மகிழ்ச்சி பொங்கட்டும்









:)

***





"வாழ்க வளமுடன்"


ஆ‌ப்‌பி‌ள் ர‌ப்டி - இது வட இ‌ந்‌திய இனிப்பு :)


இது வட இ‌ந்‌திய இ‌னி‌ப்பாகு‌ம்


தேவையானவை

ஆ‌ப்‌பி‌ள் - 2
பா‌ல் - 2 ‌க‌ப்
மு‌ந்‌தி‌ரி - 10
‌பி‌ஸ்தா - 10
பாதா‌ம் - 10
ச‌ர்‌க்கரை - 2 க‌ப்

செ‌ய்யு‌ம் முறை

அடு‌ப்‌பி‌ல் பாலை வை‌த்து சு‌ண்ட‌க் கா‌ய்‌ச்சு‌ங்க‌ள்.

பா‌ல் சு‌ண்டுவத‌ற்கு‌ள் ஆ‌ப்‌பிளை ‌நறு‌க்‌‌கி ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். அ‌ல்லது தே‌ங்கா‌ய் ‌சீவ‌லி‌ல் வை‌த்து ‌‌சீ‌வி‌க் கொ‌ள்ளலா‌ம்.

பா‌‌ல் சு‌ண்டி 1 க‌ப் ஆனது‌ம் அ‌தி‌ல் ச‌ர்‌க்கரையை‌ப் போ‌ட்டு கல‌க்‌கி ‌விடவு‌ம்.

ச‌ர்‌க்கரை ந‌ன்கு கரை‌ந்தது‌ம் ஆ‌ப்‌பிளை‌ப் போ‌ட்டு கல‌க்கவு‌ம்.


பாதா‌மி‌ன் தோலை உ‌ரி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். பாதா‌ம், ‌பி‌ஸ்தா, மு‌ந்‌தி‌ரி ஆ‌கியவ‌ற்றை அரை ம‌ணி நேர‌ம் பா‌லி‌ல் ஊறவை‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் ஒ‌ன்று‌ம் பா‌தியுமாக அரை‌த்து வேகு‌ம் ஆ‌ப்‌பி‌ளி‌ல் சே‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ளவு‌ம்.

‌ஆ‌ப்‌பி‌ள் ர‌ப்டி தயா‌ர். அதனை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் எடு‌த்து ப‌ரிமா‌றி அல‌ங்க‌ரி‌க்கவு‌ம்.


***
thanks Mohamed
***





"வாழ்க வளமுடன்"

முந்திரி பக்கோடா


தேவையானவை


முந்திரி - ஒ‌ன்றரை க‌ப்
கடலைமாவு - 2 க‌ப்
டால்டா - கா‌ல் க‌ப்
பெரிய வெங்காயம் - 4
ப‌ச்சை ‌மிளகா‌ய் - 3
அரிசி மாவு - ஒரு கை‌ப்‌பிடி
கறிவேப்பிலை, இஞ்சி - சிறிது
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

வெ‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய், இ‌ஞ்‌சி, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

கடலைமாவில் டா‌ல்டா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, க‌றிவே‌ப்‌பிலை, உப்பு, முந்திரி பருப்பு, அரிசி மாவு இவற்றை சே‌ர்‌த்து ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு கல‌ந்து கொள்ளவும்.

இந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளிப் போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பகோடா மீது ‌சி‌றிது கறிவேப்பிலையை எ‌ண்ணெ‌யி‌ல் வறுத்து போட்டு சூடாக பரிமாறவும்.


***
thanks Mohamed
***



"வாழ்க வளமுடன்"

13 அக்டோபர், 2011

ஸ்வீட் பழ வடை



தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம்பழம் - 2, பலாச்சுளை - 3, பயத்தம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு





செய்முறை : எல்லா பருப்புகளை யும் ஒன்றாக ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். பழங்களை மிக்ஸியில் தனியே அரைக்கவும். அரைத்த பருப்புக் கலவையுடன், அரைத்த பழவிழுதைச் சேர்த்துக் கலந்த பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் பாகு செய்து, பொரித்த வடைகளை அதில் போட்டு ஊறவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

ஸ்வீட் பழ வடை: பழங்களை அரைப்பதற்குப் பதிலாக பொடியாக நறுக்கிப் போட்டால், வடை இன்னும் க்ரிஸ்பியாக இருக்கும். பலாப்பழம் கிடைக்காத சமயத்தில் தோல், விதை நீக்கிய சப்போட்டா அல்லது சீதாப்பழம் சேர்த்துக் கொள்ளலாம்.





***
thanks gogle
***




"வாழ்க வளமுடன்"

கர்ப்ப கால உணவுகள்... ஆய்வும் - தீர்வும்








'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்காலமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லிவரும் சங்கதி!


''ஆம், அதுதான் உண்மை... அத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், 'டைப் 2 நீரிழிவு, இதய நோய், மன அழுத்தம்’ உள்ளிட்ட பிரச்னைகளும் வருவதில்லை என்பதை எங்கள் ஆராய்ச்சி மூலமாகவும் கண்டறிந்திருக்கிறோம்'' என்று சொல்கிறார்... ஆரம்ப நிலையிலேயே நோய்களைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் சித்தரஞ்சன் யாக்நி.


அந்த ஆராய்ச்சி குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்த டாக்டர், ''தாய் வழி ஊட்டச்சத்து குறித்த ஆய்வுகளை புனே நகரில் 1993-ம் ஆண்டு தொடங்கினோம். என் தலைமையிலான குழு, எண்ணூறுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளைக் கண்காணித்தோம். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே இப்பெண்கள்கண்காணிக்கப்பட்டு வந்தனர். குறைந்த அளவு வைட்டமின் பி-12 மற்றும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்களுடன் இருந்த பெண்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், இன்சுலின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்தோம். இக்குழந்தைகள்... எதிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளாக, கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொண் டோம்.


கர்ப்பிணிகளின் ரத்தத்தில் வைட்டமின் பி-12 அளவை அதிகரித்தும், ஃபோலிக் அமிலத்தின் அளவைக் குறைத்தும் சரிவிகிதத்தில் இருக்கும்படி செய்து பரிசோதித்துப் பார்த்தோம். இந்த ஆராய்ச்சியின் மூலம், குழந்தைகளுக்கு நோய்த் தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறைந்திருப்பதை யும்... நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்ததையும் கண்டறிந்தோம்.


இப்படி, 12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளுக்குப் பின்னர், 'குழந்தை கருவாவதற்கு முன்னரும், கருவான பின்னரும் தாய் எடுத்துக் கொள்ளும் நல்ல ஊட்டச்சத்து உணவுகளே, குழந்தைக்கு எதிர் காலத்தில் நீண்ட கால நோய்கள் பலவும் வராமல் தடுக்கும்!’ என்கிற உண்மையை உறுதிபடுத்திக் கொண்டோம்'' என்று சொன்ன சித்தரஞ்சன் தொடர்ந்தார்...


''தேவைக்கும் குறைவான எடை உள்ள தாய்மார் களுக்குப் பிறக்கும் குழந்தை களின் தோலுக்கு அடியிலும், வயிற்றிலும் கொழுப்பு அதிக அளவு மறைந்திருக் கிறது. இது எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மற்றும் இதயம் தொடர் பான பிரச்னைகள் வரக் காரணமாக இருக்கிறது என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பொதுவாக, இந்தியக் குழந்தைகள் மெலிந்து காணப்பட்டாலும்... கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். வைட்டமின் பி-12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய இரண்டும் சரிவிகித அளவில் இல்லாததுதான் காரணம். கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தை 9 மாதம் வயிற்றில் வளர்வதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்நாள் இறுதி வரை ஆரோக்கியமாக வாழவும் வழிவகுக்கிறது என்பதை உணர்ந்து சரிவிகித உணவில் கவனம் செலுத்த வேண்டும்.


தினமும் 3 கப் பால் அல்லது அதற்கு இணையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது. மேலும் அடர் பச்சை அல்லது மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. 'பால் மூன்று கப் குடித்து விட்டோமே' என்று தண்ணீர் அளவைக் குறைத் துக் கொள்ளக் கூடாது'' என்ற டாக்டர்...



''நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும். டாக்டர் மற்றும் இதற்கென உள்ள ஃபிட்னெஸ் ஆலோசகர்களிடம் கலந்து பேசி என்ன மாதிரி யான பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்த வழி!'' என்றார் அழுத்தமாக!





தவிர்க்க வேண்டிய உணவுகள்!



கர்ப்ப காலத்தில் 2 கப்களுக்கு மேல் காபி குடிக்கக் கூடாது. கார்பனேட்டட் குளிர்பானங்கள், வெளிப்புற உணவுகள், பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், பேக்கிங் சோடா கலந்த உணவுகள், பேக்கரி உணவுகள், அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம்... இதுபோன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.






***


thanks vikatan


***






"வாழ்க வளமுடன்"

பழசுக்கு வருது மவுசு :)

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் விற்கப்படும் "மால்' கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்' கலாசாரம் தவறில்லைதான்; ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் எழுந்த ஆர்கானிக் கோஷம் இப்போது, இந்தியாவில் பரவி வருகிறது. ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது.

எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்

உப்பு: இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்பு தான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இது தான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவை தான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்னை தான்.

(பதிவர் கண்ணோட்டம்: இயற்கை நலவாழ்வியல் முறையில் உப்பு பயன்படுத்துவது தேவையற்றது என்று வலியுருத்துப்படுகிறது. அதனால் கல்லுப்போ அல்லது அயோடின் உப்போ எதுவாகிலும் உப்பு தப்பு தான்.)

ரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப் போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்கு பார்த்தாலும் பாக் கெட் உணவு எண்ணெய் தானே. அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண் ணெய் இன்னமும் சில இடங் களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண் ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இது தான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி: மூன்றுமே கொழுப்பு சார்ந்தது தான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால் தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள் தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு , தானியங்கள் தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்பு தான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

பாலிஷ் அரிசி: அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம் தான் மிக நல்லது என்பது இப்போது தான் பலருக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில் தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி,பழங்கள்: உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக் கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம்; விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல் தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்: பால் உடலுக்கு நல்லது தான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்பு சத்து நீக்கப் பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில் தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ: இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கது தான். அதிலும் , பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள் தான்.
மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை: சர்க்கரைக்கு பதில், வெல்லத்தை பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.

ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம்.

இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.


***
நன்றி: தினமலர்
***


"வாழ்க வளமுடன்"

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க

இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜுஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜுஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.








***


thanks google


***







"வாழ்க வளமுடன்"

உருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்

உருளைக்கிழங்கு என்று சொன்னாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ். நொறுக்குத்தீனிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள், இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் உருளைக்கிழங்கு என்றாலே, `ஐயோ’ என்று அலறுபவர்களும் உண்டு. கேஸ் டிரபிள், உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளை நினைத்து உருளைக்கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், `நீங்கள் நினைப்பது தவறு. உருளைக்கிழங்குக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறனுண்டு’ என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக்கிழங்கு கொடுத்து வந்தனர்.

பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, ரத்தக்கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

பைடோ கெமிக்கல் (Phytochemicals) என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.

உருளைக்கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால், ரத்த கொதிப்பை குறைக்கவல்ல வேதிப்பொருட்களும், பைடோ கெமிக்கல்ஸ்களும் அழிக்கப்பட்டுவிடுகின்றன. எனவே, சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக்கிழங்கின் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு என்பதால், `ம்ம்ம்…. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ என்று நீங்கள் புலம்பவேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன்தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.

இனிமே பிரஷர் குறைய தைரியமா உருளைக்கிழங்கு சாப்பிடலாம்!



***
நன்றி-தினத்தந்தி

***





"வாழ்க வளமுடன்"

வாழைத்தண்டில் இவ்ளோ இருக்கா?

`பாஸ்ட் புட்’ கலாசாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன்விளைவு… சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது.

பொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத்
தோற்றுவிக்கிறது. அதில் ஒன்று… சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது.

அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தேக்கப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. அதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைத்தண்டு மேலும் பல நன்மைகளையும் மனிதனுக்கு தருகின்றது. அவை…

வாழைத்தண்டு நார்ச்சத்து கொண்ட உணவு என்பதால் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

உடலைக் குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு இருப்பதால் கோடை காலத்திலும் இதை உணவாக பயன்படுத்தலாம். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த.



***

thanks vayal

***




"வாழ்க வளமுடன்"

பெண்களின் நோய்கள்… கண்டுபிடிக்கும் வழிகள்…



னிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.

அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.

நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை அடிப்படையாகக் கொண்டவை. சில காந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இயங்குகின்றன. இவைகளை தேவைக்கு தக்கபடி பயன்படுத்தி எல்லாவிதமான நோய்களையும் கண்டறிகிறோம்.

குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது பற்றி முதலில் பார்ப்போம். திருமணமான தம்பதிகள் எந்த வித கருத்தடை முறைகளையும் பின்பற்றாமல் உறவு கொண்டு ஒரு வருடம் ஆகியும் பெண் தாய்மையடையவில்லை என்றால் அந்தப் பெண், குழந்தைப்பேறுக்கான சிகிச்சைக்குரியவர் ஆகிறார். அவர் தாய்மையடைவதற்கு என்ன தடைகள் இருக்கின்றன என்பது முதலில் சோதனை மூலம் கண்டறியப்படவேண்டும். சினைப்பையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, அதில் இருந்து முட்டை முதிர்ந்து வெடித்து இயல்பாக வெளிவருகிறதா, கருப்பையின் அளவு- வளர்ச்சி போன்றவை முழுமையாக இருக்கிறதா, கட்டிகள் இருக்கிறதா என்பதை எல்லாம் `அல்ட்ரா சவுண்ட்’ மூலம் கண்டறியலாம்.

சினைப்பை, கருப்பையில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் சினைமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கருவாகி, நகர்ந்துபோகும் கருக்குழாய்களில் (பேலோபியன் டியூப்) ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவேண்டும். `ஹிஸ்ட்ரோ சால்பிங்கோ கிராம்’ எனப்படும் சோதனையை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் நவீனமுறையில் செலுத்தி, பரிசோதித்து கருக்குழாய் அடைப்புகளை துல்லியமாக கண்டறிந்து விடலாம்.

`அல்ட்ரா சவுண்ட்` மூலம் சினைப்பை, கருப்பை சோதனை செய்யும்போது கட்டிகளோ, புற்றுநோய் பாதிப்போ இருப்பதாக கண்டறிந்தால், அந்த பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது, அந்த கட்டி எந்த வகையை சார்ந்தது என்பதை எல்லாம் துல்லியமாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிந்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து சிகிச்சைக்கு திட்டமிட்டுவிட முடியும்.

பெண் கர்ப்பம் ஆவது சிறுநீர் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பின்பு ஐந்தாவது வாரத்தில் கரு, கருக்குழாயிலே தங்கிவிட்டதா அல்லது கருவாக்கம் நிகழ்ந்து, கருப்பையை அடைந்துவிட்டதா என்பதை கண்டறிவது மிக அவசியமாகும். கருக்குழாயிலே கரு தங்கி வளர்ந்தால் அது ஆபத்தானதாகும். அதை `அல்ட்ரா சவுண்ட்` மூலம் கண்டுபிடித்து விடலாம். கருப்பையில் குழந்தை வளரத் தொடங்கிய பின்பு 12, 13 வாரங்களில் கர்ப்பகாலத்துக்கு தக்கபடி குழந்தையின் வளர்ச்சி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.


கர்ப்பமான 24-28 வது வாரங்களில் தாயின் வயிற்றுக்குள் அம்னியோட்டிக் திரவம் அதிகமாக இருக்கும். அப்போது குழந்தை வயிற்றுக்குள் இருந்து சிரிப்பதையும், கை- கால்களை அசைப் பதையும், கொட்டாவி விடுவதையும், நாக்கை வெளியேதள்ளி அசைப்பதையும் 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கில் பார்க்கலாம். அதைப் பார்க்கும்போது பெற்றோர் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். அவ்வளவு துல்லியமாக இருக்கும். இப்போது அதை பெற்றோர்கள் பதிவு செய்து வாங்கிச் சென்று, பாதுகாத்து தேவைப்படும் போதெல்லாம் போட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள். நாங்கள் மருத்துவரீதியாக இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை துல்லியமாக பார்க்கவே இந்த வகை ஸ்கேனை பயன்படுத்துவோம்.

36-38 வது வாரங்கள் கர்ப்பிணியை பொறுத்தவரையில் மிக முக்கிய காலகட்டமாகும். அந்த நேரத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் அம்னியோடிக் திரவத்தின் அளவு, குழந்தையின் தலை சரியான பாதையில் திரும்பி வருதல், நஞ்சுக்கொடியின் நிலை போன்றவைகளை எல்லாம் ஆராய்ந்து அதற்கு தக்கபடி கர்ப்பிணிக்கு சுக பிரசவமா? சிசேரியனா என்று முடிவு செய்துவிடலாம்.

`டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன்` என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பை தெள்ளத்தெளிவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கருப்பை வாய் புற்றுநோயையும் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வாய்ப்பிருக்கிறது.

மார்பக புற்றுநோய் பெண்களை அச்சப்படுத்தும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக 40 வயதுவாக்கில் இதன் தாக்குதல் ஏற்படுகிறது. மார்பக சுய பரிசோதனை மூலம் பெண்களே கட்டி ஏதாவது இருக்கிறதா என்று கண்டறியலாம். அதை எவ்வாறு செய்துபார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறோம். மார்பக காம்புகளில் இருந்து பச்சை கறுப்பு நிறம் கலந்த திரவம் வந்தாலும், சிவப்பு நிற திரவம் வந்தா லும், காம்புகள் உள் இழுத்த நிலைக்கு சென்றாலும் பெண்கள் உஷாராகிவிட வேண்டும். ஒருவேளை அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

முழு மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ- முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ- வலி தோன்றினாலோ, அக்குளில் நெறிகட்டியது போல் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். எந்தவித தயாரெடுப்பும் இன்றி இயல்பாக வந்து, பத்து நிமிடத்திலே இந்த பரிசோதனையை செய்து முடித்திடலாம்.

மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய `எப்.என்.ஏ.சி` என்கிற நீடில் முறையை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல் எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கின் வழிகாட்டுதல்படி துல்லியாக செய்ய முடிகிறது.

மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதை கடக்கும் பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை டிஜிட்டல் மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை கொடுத்துவிடலாம். 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோபேராசிஸ் என்ற எலும்பு பலகீன நோய் உருவாகிறது. எந்த அளவுக்கு எலும்பு பலகீனமாக இருக்கிறது என்பதை `டெக்ஸ்சா ஸ்கேன்’ மூலம் கண்டறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை கொடுக்கலாம்.

நோய்களை கண்டுபிடிக்க மட்டுமே பயன்பட்டுவந்த ஸ்கேன் முறைகள் தற்போது நோயை கண்டறிவதோடு மட்டுமின்றி சிகிச்சை அளிக்கும் முறையாகவும் மேம்பட்டிருக்கிறது. பெண்ணின் கருப்பையில் கட்டி இருப்பது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் தெரியவந்தால், `ஹை இன்டன்சிட்டி போக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட்’ எனப்படும் நவீன ஸ்கேனிங் கருவி மூலம் சக்திவாய்ந்த ஒலி அலைகளை பாய்ச்சி கட்டியை கரைத்துவிட முடியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் வழிகாட்டுதல்படி இதை செய்ய வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் ரேடியாலஜி எனப்படும் கதிரியக்கத் துறை அதிசயிக்கத்தக்க வளர்ச்சியினை பெற்றுவிடும்.

பெண்கள் இப்போதும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு வரும் குறிப்பிட்ட நோய்களைப் பற்றி வெளியே பேசவும், சிகிச்சை பெறவும் தயங்குகிறார்கள். அதுவே அவர்களது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் எதிரியாக அமைந்துவிடுகிறது. பெண்கள் நோயிடம் விழிப்புடன் இருந்து, தொடக்கத்திலே அதை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்பிருக்கிறது. நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் அதற்கு துணைபுரிகிறது.

விளக்கம்: டாக்டர் பியூலா இம்மானுவேல்

M.B.B.S.,D.M.R.D.,D.N.B.



***


டாக்டர்

thanks

***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "