...

"வாழ்க வளமுடன்"

27 ஏப்ரல், 2011

சர்க்கரை நோயா பெரிய வெங்காயம் சாப்பிடுங்கள்!!



இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.

இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவுஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது.

இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.

இது தவிர கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.


***
thanks PUTHIYATHENRAL
***




"வாழ்க வளமுடன்"

நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?



இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல் இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

முடி என்னமோ எளிதாகக் கொட்டி விடுகிறது. ஆனால் அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து விட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயத்தை பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.


***
thanks PUTHIYATHENRAL
***



"வாழ்க வளமுடன்"

தக்காளிப் பழமு‌ம் சரும‌‌‌ப் பாதுகா‌ப்பு‌ம் :)




தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.

இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.


***
thanks நாழிகை
***




"வாழ்க வளமுடன்"

கேன் வாட்டர் குடிப்பவரா உஷார் !!!



சென்னை:ஏப்ரல் 26, வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.


இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்


***
thanks டாக்டர்
****





"வாழ்க வளமுடன்"


''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!''



பிரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம் ( புகைப் படத்துக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை )

*

'சீனியர் ஜூனியர் ஸ்டார்’ எனப் பட்டம் கொடுக் கலாம் டைட்டிலில். பால்யம் மாறாத சிரிப்பில் சிணுங்குகிறார் பிரியா ஆனந்த். 'புகைப்படம்’ படத்தில் மனசுக்குள் 'ஃப்ளாஷ்’ அடித்தவர், 'வாமனன்’ படத்தில் இன்னும் ஈர்த்தார். '180’ படத்தில் பிஸியோ பிஸியாக இருந்தவரைப் பிடித்தேன்...

''செம ஸ்மார்ட்டா இருக்கீங்களே... ஏகப்பட்ட பயிற்சிகள் பண்ணுவீங்களோ?'' என வியப்புக் காட்டினால், 'ஒன்றுமே இல்லை!’ என்பதுபோல் உதடு பிதுக்குகிறார்.

''சின்ன வயசுலயே யோகா கத்துக்கிட்டேன். வீட்ல ஹெல்த் சம்பந்தமான விஷயங்களில் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. அதனால், சாப்பாடு தொடங்கி உடற்பயிற்சிகள் வரை உடல் மீதான அக்கறை அதிகம். ஆனால், இப்போ நான் உடலுக்காக எந்தப் பயிற்சிகளும் பண்றது கிடையாது. சமீப காலமா யோகாவையும் கைவிட்டுட்டேன். காரணம், இந்த சின்ன வயசுல உடம்பைப் பெரிசா வருத்தாமல் இருக்கிறதே, பெரிய பயிற்சிதான். ஷூட்டிங் நேரங்களில், காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்... இரவு தூங்க எப்படியும் 11 மணி ஆகிடும். ஏதோ மெஷின் மாதிரி உடம்பைப் போட்டு பிழிஞ்சு எடுக்கிறோம். கிடைக்கிற ஓய்வு நேரங்களிலும் வசனங்களைப் பேசிப் பார்க்கிறது, நடிப்புக்கு ஹோம் வொர்க் பண்றதுன்னு பிஸி. இத்தனைக்கு மத்தியில் ஜிம், யோகான்னு உடம்பைப் படுத் தினால், நிச்சயம் உடம்புக்கு எந்த நல்லதும் நடக்காது. அதனால், என் பயிற்சி முறைகளையே முழுக்க மாத்திட்டேன்.

ஃப்ரெண்ட்ஸோட வெளியே கிளம்பி, ஆட்டம் பாட்டம், அரட்டைன்னு பொழுதைக் கழிக்கிறது. பீச்சுல வியர்க்க விறுவிறுக்க விளையாடுறதுன்னு மனசை உற்சாகப்படுத்தும் விஷயங்களையே உடம்புக்குமான பயிற்சிகளாகவும் ஆக்கிக்கிட்டேன். எனக்கென்னவோ வாய்விட்டு சிரிச்சாலே மனசும் உடம்பும் பஞ்சுபோல ஆகிடும்.

யோகாவிலேயே சத்தம் போட்டுச் சிரிக்கிறது ஒரு பயிற்சி. ஒவ்வொரு முறையும் வாய்விட்டுச் சிரிக்கிறப்ப, அடி வயிறு தொடங்கி மூளை நரம்புகள் வரை பலம் பெறும்னு சொல்வாங்க. ஆனால், யார்கிட்டயும் பேசாம, சிரிக்காம, உடம்பை மெஷினா மாத்தி பயிற்சிகளை மட்டும் பண்றோம். பயிற்சிகளை முறையாப் பண்ணினப்பகூட எனக்கு இந்த அளவுக்கு உடலும் மனசும் லேசாகலை. ஆனால், இப்போ காத்துல மிதக்கிற மாதிரி மனசு முழுக்க சந்தோஷம், உடம்பு முழுக்க உற்சாகம்!'' சுலப வழி சொல்லி பிரமிக்கவைக்கிறார் பிரியா ஆனந்த்.

''பீச்சுக்குப் போறப்ப, அங்கே என்னென்ன விளையாட்டுகள் விளையாட முடியுமோ... எல்லாமே விளையாடுவேன். ராட்டினத்தில் சுற்றுவேன், குழந்தைகளைத் தூக்கிட்டு ஓடுவேன். அலையில் கரைக்கு வந்து விளையாடும் நண்டுகளை என்னிக்காவது நீங்க துரத்திப் பிடிச்சு இருக்கீங்களா? மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடினாலும் அதைப் பிடிக்க முடியாது. ரொம்ப ஜாலியா உடலின் அத்தனை பாகங்களுக்கும் வேலை வைக்கும் விளையாட்டு அது!'' குஷியாகச் சிரிக்கிறார் பிரியா.

''சாப்பாடு விஷயம் எப்படி?'' என்று கேட்டால், ''நான் பிரியாணி பிரியை. சென்னையில் இருந்தால், தலப்பாகட்டி... ஹைதராபாத்தில் இருந்தால், பாரடைஸ்னு... ரசிச்சு ருசிச்சு பிரியாணி சாப்பிடுவேன். மூணு வேளையும் பிரியாணி கிடைச்சால்கூட, எனக்கு ஓ.கேதான். இதுதானே நல்லா சாப்பிடுற வயசு. 40 வயசுல நாமே ஆசைப்பட்டாலும், விரும்பியதைச் சாப்பிட முடியுமா? பீச் சுண்டல் தொடங்கி சோளம் வரை எல்லாமே எனக்கு இஷ்டம்தான்.



இவ்வளவுக்குப் பிறகும், நான் இப்படி ஸ்லிம்மா இருக்கக் காரணம்... என் துறுதுறு கேரக்டர். என்னைக் கட்டிப்போட்டு வெச்சாலும், ஒரு இடத்தில் பத்து நிமிஷத்துக்கு மேல் இருக்க மாட்டேன். ஏதாச்சும் ஒரு வேலை செஞ்சுக்கிட்டே இருப்பேன். ஒரு மணி நேரம் உட்காரவெச்சிடுறாங்கன்னு நான் அதிகமா பியூட்டி பார்லருக்குப் போறதே இல்லை. ரொம்ப நேரம் நான் ஒரு இடத்துல உட்கார்ந்திருக்கேன்னா... அது நிச்சயம் தியேட்டராத்தான் இருக்கும்!''

''அழகுக்கு?''

''எப்போதாவது ஃபேஸியல். நிறையத் தண்ணி குடிப்பேன். ஜாலியா டான்ஸ் ஆடுவேன். நிம்மதியாத் தூங்குவேன். எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருப்பேன். நீங்க திட்டுனாக்கூட சிரிப்பேன். அப்புறம் நீங்களும் சிரிச்சிடுவீங்க. அதனால, எல்லோருக்கும் நான் சிரிச்சுக்கிட்டே சொல்றது... சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!''



***
நன்றி ஆனந்த விகடன்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "