...

"வாழ்க வளமுடன்"

21 ஜூலை, 2015

தண்டு கீரையால் சிறுநீர் நன்கு பிரியும்

இன்றைக்கு என்ன கூட்டு அல்லது பொரியல்? என்ற கேள்விக்கு கீரை என்று பதில் வந்தால், கீரை தானா என்று சலிப்போடு நாமும் பதில் சொல்லுவோம்.

கீரையை மலிவான பதார்த்தம் என்று எண்ணி, தள்ளி விடுவது பழக்கமாகி விட்டது. ஆனால், இன்றைய கால கட்டத்தில் நம்மில் பலர், கீரைகளின் அருமை பெருமைகளை அறிந்து வருகிறோம். கீரை வகைகளிலே மிக பெரியதும் உயரமானதுமான, தண்டுக்கீரையைப் பற்றி அறிந்து கொள்வோம்.


தண்டுக்கீரையை மிகச் சரியான பருவத்தில் பறித்தால், அதன் கீரையும் தண்டும் மிகச் சிறந்த காய்கறியாகும். இக்கீரையின் தண்டுகளை, மெல்லியதாக வெட்டி பாசிப்பருப்புடன் சேர்த்து, வேக வைத்து சாம்பாராகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து சாப்பிடலாம்.
கீரையின் இலைகளை முளைக்கீரை போன்றும் சாப்பிடலாம். பித்தம், மிகுதி உள்ளவர்கள் தண்டுக்கீரையை நன்கு பயன்படுத்தலாம். தண்டைச் சாப்பிட்டு வந்தால், உடல் மெலிந்து விடும் என்று பயப்பட வேண்டாம். இதை உண்டால் சிறுநீர் நன்கு போவதால், உடல் எடை குறைந்தது போன்று தெரியும். இதில் நார்ச்சத்து இருப்பதால், ரத்தம் சுத்தி அடையும். மலச்சிக்கல் இல்லாமல் செய்து விடும்.


இக்கீரையை தினமும் உண்டு வரலாம். இதனால், இளமையில் முதுமை தவிர்க்கப்படுகிறது. முதுமையில் ஏற்படும் கால்சியம். இரும்பு விகித வேறுபாட்டை சரி செய்யக்கூடியது.


கருவுற்ற பெண்கள், தினமும் அரை கப் தண்டுக்கீரைச் சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால், மகப்பேறு
எளிதாக நடக்கும். குழந்தையும் நல்ல வளர்ச்சியுடன் காணப்படும். இதில் கால்சியம், 400 மி.கி., உள்ளது. இவ்வளவு அதிகமான கால்
சியம் சத்து முருங்கைக்கீரை, வெந்தயக்கீரையில் மட்டுமே உள்ளது.

***
fb
***


"வாழ்க வளமுடன்"

முருங்கை மகத்துவம்..!

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.
 
முருங்கை வேரின் மருத்துவ குணம்


முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து குறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும்.
...
முருங்கை பட்டை

முருங்கை பட்டையை நன்றாக பொடித்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். சிறுநீரை தெளிய வைக்கும்


முருங்கை இலை காம்பு

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .


முருங்கை விதை

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து லேசாக நெய்யில் வதக்க வேண்டும் , பிறகு அதை பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு குறையும் , ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும் . உடல் வலுவடையும்;


முருங்கை காய்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் மூல நோய்க்கு மிக சிறந்த மருந்தாகவும் . சளியைப் போக்கும் தன்மைகொண்டதாகவும் இருக்கிறது
முருங்கைக்காய் பொதுவாக அதிக சத்துக்களை கொண்டது. முருங்கைக் காய் பொரியல் அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும், தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.


முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது , இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது . எலும்பு மஞ்ஜைகளை வலுபடுத்துகிறது.


முருங்கை பூ

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .


முருங்கை கீரை

முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும்


***
fb
***

"வாழ்க வளமுடன்"
      

மூன்று உணவு பொருட்கள் முந்நூறு பலன்கள்


மைலாஞ்சி ( Mylanchi )'s photo.
 
 
 
 
ஜெர்மனியில் பிரபலமான இந்த பானம் மூன்று உணவு பொருட்களை கொண்டு தயார் செய்கிறார்கள். இயற்கையான இந்த உணவுபொருட்கள் உடலில் ஏராளமான பலன்களை ஏற்படுத்துகின்றன.
 
...
இதய தமனிகளில் அடைப்புகள் ஏற்படாதவாறு தடுக்கின்றது.
இரத்தத்தில் கொழுப்பு விகிதத்தை சரியான அளவில் இருக்குமாறு கட்டுப்படுத்துகிறது.
தொற்றுநோய்களை அகற்றி சளித்தொல்லை ஏற்படாதவாறு செய்கின்றது.
இதை அருந்தும்போது ஈரலிலிருந்து நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகின்றது.
ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கூடுதலாக உள்ளதால் நோய்களை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சரிபடுத்தி முதுமை ஏறபடாதவாறும், கேன்சர் நோய்கள் வராதவாறும் காக்கின்றது.



இப்பொழுது தேவையானவை என்னவென்று பார்பபோம்:

1⃣ முழு பூண்டு - 4
2⃣ தோலுடன் கூடுய எலுமிச்சைப்பழம் - 4
3⃣ இஞ்சி - ஒரு சிறிய துண்டு
4⃣ தண்ணீர் - 2 லிட்டர்


செய்முறை:


எலுமிச்சை பழத்தை கழுவி சிறிதாக நறுக்கவும். பூண்டை உரிக்கவும். இஞ்சியின் தோலை அகற்றி சிறிதாக நறுக்கவும். இவை எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை வேறு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
இதை அடுப்பில் வைத்து சூடாக்கி கொதிக்கும் நிலை வரும் போது அடுப்பை அணைக்கவும். சூடாக்கியதை குளிரவைத்து சல்லடையால் சளித்து கண்ணாடி பாட்டில்களில் நிறைத்துக்கொள்ளவும்.


எவ்வாறு சாப்பிடுவது ?

காலையில் வெறும் வயிற்றில் உணவு சாப்பிடுவதற்க்கு இரண்டு மணிநேரம் முன்பு ஒரு கிளாஸ் குடிக்கவும். ஒவ்வொருமுறையும் குடிப்பதற்க்கு முன் பாட்டிலை நன்றாக குலுக்கி ஒரு கிளாஸில் ஊற்றவும்.
 


"வாழ்க வளமுடன்"
      

குடை மிளகாய் இருக்கிறது உடல் ஆரோக்கியம்!



எந்த வகையில் கற்பனை செய்து பார்த்தாலும் குடைக்கும், மிளகாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு ஏன் குடைமிளகாய் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. பெயர் என்னவாக இருந்தால் என்ன? குடைமிளகாய் பார்க்க கலர் கலராக அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கிறது; அது போதும்.
குடைமிளகாயில் பல நோய்களை போக்கும், மருத்துவ குணம் இருப்பது இன்னும் விசேஷம். குடை மிளகாயின் சுவை, கிராமத்து மக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக, குடை மிளகாய் தென்மாநில சமையல்களில் யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை.

ஆனால் சைனீஸ் வகை உணவுகளில் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக, பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன், சில்லி பிரைடு ஐட்டங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஓட்டல்களில் பல வகை சாலட்கள் குடைமிளகாயில் தயாரிக்கப்படுகின்றன. உணவை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.
குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் உள்ளன. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவை குணமாக பயன்படுகிறது. கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும். அந்நோய்களை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் உள்ளது. குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை, குறைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்தும். இதில், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். குடைமிளகாயில் உள்ள கேயீன் எனும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளை குறைக்கும்.


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடை     மிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து, 4 நிமிடம் வதக்க வேண்டும்.


பின்பு அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான வெண்ணெய் குடைமிளகாய் சாதம் ரெடியாகி விடும். குடை மிளகாய் சுவை சாப்பிட ஆரம்பத்தில் பிடிக்காது. சாப்பிட்டு பழகினால் அதன் சுவையை விட முடியாது.


***
படித்ததில் பிடித்தது,
***


"வாழ்க வளமுடன்"
      

பிடிவாத சுட்டீஸ் டீல் செய்வது எப்படி?

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில், ஒரு வீட்டில் ஆறேழு குழந்தைகள் இருப்பார்கள். தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள, பெரியக்கா, சின்னக்கா, கடைசித் தம்பி என எல்லோருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைத்தன. மொபைல், தொலைக்காட்சி இல்லை என்பதால், தன்னைவிடவும் பெரிய, சின்ன மற்றும் தன் வயதொத்த குழந்தைகளுடன் கலந்து விளையாட நேரம் இருந்தது. ஆனால், இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளுக்கு விளையாட ஆள் இல்லை. கவனித்துக்கொள்ள தாத்தா, பாட்டியும் இல்லை.

இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பெற்றோருக்கோ நேரமும் இல்லை. அவசர அவசரமாக குழந்தையைத் தயாராக்கி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தானும் கிளம்பிப் போய், மாலை சோர்வாய் வீட்டுக்குத் திரும்பி, இன்று நாள் முழுவதும் குழந்தை என்ன செய்தது, பள்ளியில் என்ன நடந்தது என எதையும் பொறுமையாகக் கேட்க நேரமின்றி, “மதியம் லஞ்ச் சாப்பிட்டியா? ஹோம் வொர்க் செஞ்சியா?” என டெம்ப்ளேட்டாக சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, இரவு உணவைத் தந்துவிட்டு உறங்கி, மறுபடியும் மறுநாள் எழுந்து ஓடும் இயந்திர வாழ்வு. ஒருபுறம் படி… படி… என நச்சரிக்கும் பள்ளிகள். மறுபுறம் இயந்திரகதியில் இயங்கும் பெற்றோர். இதனால், கவனிக்க ஆளின்றி சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு மனஉளைச்சல்.
இப்படி, தனிமையில் உழலும் குழந்தைகளை வளர்ப்பதுதான் எத்தனை பெரிய சவால். பெற்றோர் குரலை உயர்த்திப் பேசினாலே, கோபக் கனல் வீசும் இன்றையக் குழந்தைகளை சமாதானப்படுத்த, ஃப்ரைட் சிக்கன், பீட்சா, நூடுல்ஸ் தொடங்கி ஐபேட், ஸ்மார்ட் போன் வரை கிப்ஃட் என்ற பெயரில் லஞ்சம் தரவும் தயாராக இருக்கின்றனர் பெற்றோர். இது கொதிப்பதற்குப் பயந்து அடுப்பில் குதிப்பதைப் போல மோசமானது. இந்த டிஜிட்டல் பொருட்கள் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் விபரீத விளைவுகள் மிகமிக ஆபத்தானவை.


குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே போய் நல்வழிக்குக் கொண்டுவருவது சாத்தியமா? அடித்தல், திட்டுதல், கேட்டதையெல்லாம் வாங்கித் தருதல் இவையெல்லாம் சரிதானா? எது குழந்தைக்குத் தேவை? எது தேவை இல்லை? பெற்றோர் செய்யும் தவறுதான் என்ன?


குழந்தை வளர்ப்பின் சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டால் போதும். அவர்களின் எதிர்காலம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.



அதீதக் கவனிப்புகளைக் குறையுங்கள்

குழந்தையை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறேன் என, அவர்களைத் தரையில் விளையாடக்கூட விடுவது இல்லை. பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் விளையாடவோ, பழகவோ அனுமதிப்பது இல்லை. அப்படியே அனுப்பினாலும், சின்னக் காயம் ஏற்பட்டால்கூட, அடுத்த முறை விளையாட அனுப்புவது இல்லை. இந்த அதீதக் கவனிப்புதான் குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறித்துவிடுகிறது.



பெற்றோரின் நேரமே குழந்தைகளின் பரிசு

அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், குழந்தையுடன் நேரத்தை ஒதுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து, வீடு முழுவதும் நிரப்பிவிடுகின்றனர்.
ஐ-போன், ஐ-பாட், லேப்டாப்பைவிட, குழந்தையுடன் செலவழிக்கும் நேரமே குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவு, புரிதலை மேம்படுத்தும். நேரம் ஒதுக்கி அன்பை வெளிப்படுத்துங்கள். குழந்தைகளின் நண்பராக மாறுங்கள். குழந்தை அழுதால் டி.வி போட்டுவிடுவது, ரைம்ஸ் வீடியோ போடுவது போன்றவை தவறான பழக்கங்கள். குழந்தை தாயின் உதட்டு அசைவைப் பார்த்துதான் பேசப் பழகும்.


ஓடி விளையாடட்டும் பாப்பா

அதிகாலை சூரிய உதயத்தின்போது படிப்பதோ, மாலை சூரியன் மறையும் வேளையில் விளையாடுவதோ சுத்தமாக இல்லை. ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள், கேண்டி க்ரஷ், ஃபார்ம் ஹவுஸ், டெம்பிள் ரன் என மொபைல் கேம்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால், அதீத இயக்கம் (Aggressive behaviour) கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர். அன்பு மறைந்து வன்முறை குடியேறுகிறது. குழந்தைகளின் நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்துங்கள். பாண்டி, கோகோ, ஏழு கல், கபடி, கால்பந்து, டென்னிஸ், கொக்கோ, ரன்னிங் என உடலை உறுதியாக்கும் அனைத்து விளையாட்டுக்களையும் விளையாட ஊக்குவியுங்கள். குழந்தைப் பருவம்தான், மிக முக்கியமான காலகட்டம். அந்தப் பருவத்தில் ஓடியாடி விளையாடும்போது படைப்பாற்றல், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன், குழுவுடன் இணைந்து செயல்படுதல் போன்றவை மேம்படும். எலும்புகள் வலுப்பெறும். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக்கு உதவும்.      
 


 

தவறுகளை அன்பால் திருத்துங்கள்
குழந்தை சேட்டை செய்து, அதனால் மற்றவர்கள் கடிந்துகொள்வார்களோ என்ற பயத்தில் பக்கத்து வீட்டுக்குகூட குழந்தைகளை அனுப்புவது இல்லை. இந்த வளர்ப்பு முறையை பர்மிசீவ் பேரன்டிங் (Permissive parenting) எனச் சொல்லலாம். குழந்தைகளிடம் கோபப்படுவதோ, திட்டுவதோ, அடிப்பதோ தவறானது. அதற்கு பதிலாக, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அன்போடு திருத்தலாம். நல்லொழுக்கம், நற்பண்புகள் நிறைந்த கதைகளைச் சொல்லி, அவற்றை மனதில் ஆழமாகப் பதிய வைக்கலாம்.

அமைதியான சூழலை உருவாக்குங்கள்

குழந்தை முன் சண்டை போடுவது, பெரியவர்களை அவமதிப்பது, வன்முறை நிறைந்த படங்களைப் பார்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தையின் ஆழ்மனதில் பதியும். சங்கடங்கள், சண்டை, சச்சரவுகளைக் குழந்தை முன்பு கொட்டாதீர்கள். குழந்தைகள் முன் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.




நிஜ உலகில் நீந்தவிடுங்கள்


வெளிமனித அனுபவம் குழந்தைகளுக்கு இருந்தால்தான் சமூகப்பண்பு, மற்றவருடன் பேசும் உறவு, மற்றவர் கருத்தை மதித்தல், சிந்திக்கும் திறன் போன்றவை வளரும். குழந்தையை பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பா எனச் சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் உறவாடவிடுங்கள். சில சமயங்களில் உங்களிடம் சொல்லத் தயங்குவதைகூட, ஒட்டும் உறவுகளிடம் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு உண்டு. இதனால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என உங்களுக்குத் தெரியவரும். சுதந்திரமான குழந்தைகளே ஆரோக்கியமான, சுமுகமான சமூகத்தை உருவாக்கும் சிற்பிகள்.
 
குழந்தை முன் சண்டை போடுவது, பெரியவர்களை அவமதிப்பது, வன்முறை நிறைந்த படங்களைப் பார்ப்பது போன்ற விஷயங்கள் குழந்தையின் ஆழ்மனதில் பதியும்.
 
குழந்தைகள் தினமும் 9 முதல் 10 மணி நேரம் வரை தூங்க வேண்டும். எனவே, இரவு 9 மணிக்குள் தூங்கச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அப்பாவோ அம்மாவோ வேலையிலிருந்து வர தாமதம் ஆனாலும், அவர்கள் வரும் வரை காத்திருக்காமல், தூங்கச் செல்வது அவசியம். இரவில் டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சீரான தூக்கம் அன்று படித்த பாடங்களைப் பதியவைக்கும். மறுநாளைக்குப் படிக்கவேண்டிய பாடங்களை மனதில் ஏற்க உதவும்.

குழந்தைகளுக்குக் காலை உணவைச் சமச்சீராகச் சாப்பிடக் கொடுங்கள். பிரெட் ஜாம், ஆயத்த பவுடரால் தயாரிக்கப்படும் ஊட்டச்சத்துப் பானங்களைத் தரக் கூடாது. புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், நார்ச்சத்து கலந்த காலை உணவே சிறந்தது.

செல்ஃப் ஹைஜீன் என்பது பெற்றோரிடமிருந்து வரும் பழக்கம். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவும் பழக்கத்தைப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். சாப்பிட்டதும் கைகளை டிஷ்யூ, துண்டால் துடைக்கலாமே தவிர, அணிந்திருக்கும் உடையில் துடைப்பது கூடாது. பெற்றோரின் இந்தச் செயலை குழந்தை கவனிக்கிறது என்ற புரிதல் அவசியம்.

வீட்டுக்கு அருகில் இருப்பவரிடம் பேசுங்கள். வணக்கம், குட் மார்னிங், நலம் விசாரிப்பது போன்ற நல்ல பழக்கங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். தன்னைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களை பார்த்துப் பேசிப் பழகட்டும்.


***
fb
***

"வாழ்க வளமுடன்"

19 ஜூலை, 2015

சீரான எடைக்கு சத்தான டயட்







டல் எடையும் அதிகரிக்கக் கூடாது. வயிறும் நிரம்ப வேண்டும். அது எப்படி முடியும்? சத்தான உணவுகளை, குறிப்பிட்ட அளவில் உண்டால், சாத்தியமே. அதற்கான டயட் சார்ட் இங்கே...





"வாழ்க வளமுடன்"
      

நோய்க்கு வேண்டாமே பர்த்டே பார்ட்டி!




கேக் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை. கேக்கை பார்த்தவுடனே தான் பிறந்தநாள் மூடே வருகிறது. பலூன், கலர் கலர் தோரணங்கள், வாழ்த்துக்கள் எனத் தொடங்கும் பிறந்த நாள், சாக்லெட், கேக், பரிசு பொருட்களுடன் சந்தோஷத்தின் சிகரத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும்.


ஆனால், கேக் வெட்டுவதற்கு முன்பு அதன் மேல் இருக்கும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் கலாச்சாரத்தால், பல்வேறு நோய்களை நாமே வலிய வரவழைத்துக் கொள்கிறோம் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்!

பணத்தைச் செலவழித்துக் கொண்டாட்டத்தைத் தொடங்குகிறோம். ஆனால் அதனுடன் சேர்த்து வைர‌ஸையும், பாக்டீரியாவையும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குழந்தை தன் வாயால் ஊதி அனைத்த மெழுகுவர்த்திப் பொருந்திய கேக்கின் மேல் பரப்பில், சுமார் 3000 கிருமிகள் உள்ளன என்கிறது ஆஸ்திரேலியா நேஷனல் ஹெல்த் அண்ட் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில். அதில், ஒரு பகுதியாகக் கட் பண்ணும் ஒரு கேக் பீஸில் குறைந்தது 189 கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தும்மல், இருமல் பிரச்னை இருந்தால் எப்படி அது கிருமிகள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவுமோ அதுபோலப் பிறந்தநாள் கேக்கின் மூலமாகவும் பரவுகிறது என்கிறது அந்த ஆராய்ச்சி..

சுவாச வால்வில் தொற்று, வைரஸ், ப்ளூ, நோரோ வைரஸ் போன்றவை சில நிமிடங்களில் மற்ற குழந்தைகளுக்குப் பரவிவிடும். மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு நோய் சட்டெனத் தாக்கும். எனவே, பிறந்தநாளை கேக் வைத்து கொண்டாடும்போது, அதன் மீது மெழுகுவர்த்தி வைத்து ஊதாதீர்கள். 'கட்டாயம் மெழுகுவர்த்திகளை ஊதிதான் கொண்டாடுவேன்' என்றால் அந்தக் கேக்கை மற்றவர்களுக்குச் சாப்பிட கொடுக்காதீர்கள். கப் கேக்குகளை வாங்கி வைத்துக் கொண்டு, அதை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.



- ப்ரீத்தி


"வாழ்க வளமுடன்"
      

பெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல!

குழந்தைகளிடம் நமக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால், குழந்தைகள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்கிற அக்கறையும் கேள்வியும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு எழுவதில்லை என்கிறார் விழியன்.

குழந்தைகள் நலன் குறித்து தொடர்ந்து எழுதி வரும் விழியன், குழந்தைகளுக்கு கதைகள் கூறுவதுடன், அவர்களை பாடபுத்தகம் தாண்டியும் வாசிக்க வைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

கடந்த வருடம் வெளியான இவரின் ‘மாகடிகாரம்’ எனும் சிறுவர் நாவல் புத்தகம், இதுவரை சிறுவர் இலக்கிய விருதுகள் மூன்றினைப் பெற்றுள்ளது.

‘பென்சில்களின் அட்டகாசம்’, ‘டாலும் ழீயும்’, ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’ போன்றவை பரவலாகப் பேசப்படும் இவரின் பிற புத்தகங்கள். இவரின் ‘உச்சி முகர்’ புத்தகம், குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்களை விவரிக்கும் அழகிய பதிவு.

சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கட்டுரைகளையும், தன் மகள் குழலியுடன் நடக்கும் உரையாடல் மூலமாக பகிர்ந்து வருகிறார் விழியன்.

சென்னை, தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியல் வல்லுனராக பணியாற்றி வரும் விழியன், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கருத்தில் வைக்க வேண்டிய முக்கிய நான்கு விஷயங்கள் சொல்கிறார் இங்கு!

அதுவும் தவறு, இதுவும் தவறு

‘‘கணவன், மனைவி என இருவரும் பணிக்குச் செல்லும் வீடுகளில் வேலைச் சுமையால், குழந்தைகளை பணியாள் அல்லது வீட்டுப் பெரியவர்களிடம் மொத்தமாக ஒப்படைத்துவிட்டு, படிப்பு, நண்பர்கள், தோழிகள், பாக்கெட் மணி எவ்வளவு, இன்டர்நெட்டில் என்ன செய்கிறார்கள் என அவர்களைப் பற்றிய தற்காலக் கவலையை மறந்து, அவர்களின் எதிர்காலத்துக்காகச் சேமிக்கும் பெற்றோர் ஒரு வகை. இப்படிக் கட்டுப்பாடற்று வளரும் குழந்தைகளால் சின்னச் சின்னக் கண்டிப்புகளைக் கூட தாங்க முடியாமல் போகிறது.

கண்டிப்பான பெற்றோராக இருக்க எண்ணி, அத்தியாவசிய சுதந்திரத்தைக்கூட அவர்களுக்கு வழங்காமல், குழந்தையின் ஒவ்வொரு விஷயத்தையும் ஏதோ டிடெக்டிவ் ஏஜன்ட் போல கண்காணித்து, இயல்பான குறும்புகளையும் குற்றமாக பாவித்து தண்டனை கொடுக்கும் பெற்றோர் மற்றொரு வகை.

இப்படியான கட்டுப்பாடுகளால் இறுக்கப்படும் குழந்தைகள் அனைவருமே, 'சந்தோஷம்' என்கிற வார்த்தையுடன் 'பெற்றோர்' என்கிற வார்த்தையை எப்போதும் பொருத்திப் பார்க்காக சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எனவே, உங்களின் கண்டிப்பு என்பது, குழந்தைகளை எல்லா விஷயத்திலும் உங்களுக்கு அடங்கிப் போகிறவர்களாக வளைப்பதாக அல்லாமல், அவர்களின் நன்வளர்ச்சிக்கானதாக இருக்கட்டும். அதேபோல, சுதந்திரம் என்பது அவர்களுக்குத் தேவையான அளவுக்கு, தேவையான விஷயங்களுக்கு மட்டுமே வழங்கப்படட்டும்.

குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன?


பரிபூரண அன்பு! அது நிச்சயம் எல்லா பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால், அதனை செலுத்தும் விதத்தில்தான் தவறுகள் நிகழ்கின்றன அல்லது குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை சந்திக்க முடியாமல் போகிறது. குழந்தைகளிடம் நீண்ட நேரம் பேசவேண்டும். அவர்களின் சின்னச் சின்ன வெற்றிகளைப் பாராட்ட வேண்டும், தோல்விகளின்போது தட்டிக்கொடுக்க வேண்டும். அவர்களின் நண்பர்களைப் பற்றி அவர்களாகச் சொல்ல வைக்க வேண்டும். அன்றைய தினத்தின் நிகழ்வுகளை அவர்களாகப் பகிர வைக்க வேண்டும். பெற்றோர்களை ஒரு தோழன், தோழி என குழந்தைகள் பாவிக்க வேண்டும். இது எல்லாம் எப்போது சாத்தியம்?

அவர்களுடன் ‘குவாலிட்டி டைம்’ செலவழிக்கும்போது. குழந்தைகளுக்கு நீண்ட காலம் தன் பயங்களையும் ரகசியங்களையும் பாதுகாக்க முடியாது. தொடர் உரையாடல்கள் மூலம் அந்த பயங்களையும், ரகசியங்களையும் நீக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ‘இதனை நம் பெற்றோரிடம் பகிர்ந்தால், எந்த பிரச்னையும் இருக்காது ’ என்கிற நம்பிகையை அவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு!
குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல!

பெற்றோர்கள், தங்களின் நீட்சியாகவே குழந்தைகளைப் பார்க்கிறார்கள். தாங்கள் சிறுவயதில் தவறவிட்ட விஷயங்களை குழந்தைகள் மீது தங்களுக்கே தெரியாமல் திணிக்கிறார்கள். எந்தத் திணிப்பும் கசப்பாகத்தான் முடியும். குழந்தைகள் பெற்றோரின் அங்கம் அல்ல. அவர்கள் தனி ஜீவன்கள். அவர்களுக்கு என்று ஆசைகள், வெறுப்புகள், கனவுகள் இருக்கும். அதனைப் புரிந்து கொண்டு, அவர்களின் இலக்குகளை அடைய துணை நிற்பதே பெற்றோரின் கடமை.

உங்களின் கனவை அவர்கள் மூலமாக நிறைவேற்றும் எண்ணம், தவறு.

ஜனநாயகக் குடும்பம்!

குடும்பத்தில் அமைதியை குழந்தைகள் விரும்புகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு மத்தியில் நடக்கும் முறையற்ற, தேவையற்ற விவாதங்கள், குழந்தைகளை அச்சுறுத்துகின்றன.

இதைத் தவிர்த்திட வேண்டும். மேலும் குடும்ப முடிவுகளில் அவர்களின் ஆலோசனைகளையும் அவர்கள் கூற விரும்புவார்கள். குறைந்தபட்சம் விவாதங்களில் அவர்களை பங்குகொள்ளவாவது செய்யுங்கள்.

இது ஒரு ஜனநாயகக் குடும்பத்தை நோக்கிய நகர்வு. இதுதான் தற்கால குழந்தைகளின் விருப்பமும் கூட!’’

நிறைவேற்றுவோமா குழந்தைகளின் விருப்பங்களை !

- வே.கிருஷ்ணவேணி



"வாழ்க வளமுடன்"
      

ஆரோக்கியத்துக்கு அவகேடோ!


ரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன.

ஹெல்தி ஹார்ட்

வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.


குறையும் கொழுப்பின் அளவு

பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.

ரத்தக் கொதிப்புக்குப் பை பை

வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.

அதிகரிக்கும் பார்வை திறன்

லுடீன் (lutein) என்ற ஆண்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு அருமருந்து

ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஃபோலிக் அமிலங்கள் அவகேடோ பழத்தில் 23 சதவிகிதம் உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும்.
புற்றுநோயை தடுக்கும் ஆன்டிஆக்சிடன்ட்

ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.

நேசர் மவுத் வாஷ்

இயற்கையான முறையில் வாயை சுத்தம் செய்வதால் இதனை ‘நேசர் மவுத் வாஷ்’ எனச் சொல்லலாம். குடலை சுத்தம் செய்யும் அதோடு நாக்கின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

உடல் எடையைக் கூட்டும்

100 கிராம் பழத்தில் 200 கலோரிகள் உள்ளன. இதனால், உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்போருக்கு அவகேடோ ஒரு சிறந்த உணவு. நல்ல கொழுப்பும், சர்க்கரையும் இதில் அதிக அளவில் உள்ளன.

அழகுக்கும் அவகேடோ

தொடர்ந்து அவகேடோ சாப்பிட்டு வர, சருமம் பளபளப்பாகும். கூந்தலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வறட்சி நீங்கும். எரிச்சல், சிவந்து போகுதல், சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் குணமாகும்.

***
- ப்ரீத்தி

***


"வாழ்க வளமுடன்"
      

கொள்ளு ரசம்:


மைலாஞ்சி ( Mylanchi )'s photo.
 
 
 
 
 
 
 



"வாழ்க வளமுடன்"
      

09 ஜூலை, 2015

உடல் எடையை குறைக்க சூப்

ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.
 
 
 
 
 
 
 

 
 

 
 

 
 
 
 
 
 
 
 

 
 
 

 
பட்டாணி சூப்
 
நீங்கள் தினந்தோறும் பட்டாணியுடன், உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து சூப்பாக குடித்து வந்தால் உடலின் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். புரதங்கள் நிரம்பியதாகவும், குறைவான கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் கொண்டதாகவும் இருக்கும் பட்டாணி சூப் ஆரோக்கியமான தேர்வாகவே இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தக்காளி சூப்
 
எளிமையாக தயாரிக்கவும் மற்றும் சுவையாக இருக்கவும் கூடிய தக்காளி சூப்பினால் எடையைக் குறைக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயமாக தோன்றுகிறதா? இந்த சூப் உங்களுக்குத் தேவையான பொட்டாசியம், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது. குறைவான கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டிருக்கும் இந்த சூப்பில் வைட்டமின் சி உள்ளது.


***

***



"வாழ்க வளமுடன்"

சம்பா ரவை லட்டு

நீரிழிவு நோய் இருப்ப‌வ‌ர்க‌ள் இனிப்பு சாப்பிட‌க்கூடாது என்று சொல்லும் போது நிறைய‌ வீட்டில் பொண்க‌ளுக்கு இது கொஞ்ச‌ம் ச‌ங்க‌ட‌ம்.


ஆம்! எல்ல‌ரும் இனிப்பு சாப்பிடும் போது அவ‌ர்க‌ள் சாப்பிட‌வில்லை என்று வ‌ருத்த‌ம் இருக்கும்.


அவ‌ர்க‌லுக்கா...


நாம் ர‌வா ல‌ட்டு சாப்பிட்டு இருப்போம். அதோ போல் ச‌ம்பா ர‌வையில் சேய்தால் நீரிழிவு நோயாளிக்கு இது நல்லது.


தேவையான‌ பொருட‌கள்:


ச‌ம்பா ர‌வை ( கோதுமை ர‌வை ) - 1 க‌ப்

ஈக்குவ‌ல் - 1/2 டீஸ்ப்பூன் ( உங்கலுக்கு தேவை எனில் சேர்த்துக் கொள்ளவும். )

முந்திரி - 6

நெய் - 1/2 டீஸ்ப்பூன்

பால் - தே. அள‌வு


செய்முறை:


1. க‌டாயில் 1 டீஸ்ப்பூன் நெய் சேர்த்து முந்திரியை வ‌றுக்க‌வும்.


2. முந்திரியை சிவ‌க்க‌ வறுத்த‌தும், அதில் ர‌வையையும் சேர்த்து வ‌றுக்க‌வும்.


3. சிறிது நேர‌த்தில் ர‌வை வ‌றுப‌ட்ட‌தும், அதில் ஈக்குவ‌ல் போட்டு உட‌னே இற‌க்க‌வும்.


4. த‌ட்டில் கொட்டி சூடும் ஆரும் முன்பு பால் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.


5. தட்டில் நெய் தடவி அதில் இந்த உருண்டையை வைத்து ஆரவிடவும்.அதற்க்கு மேல் ஒவ்வேரு முந்திரி வைத்து அழகு படுத்தவும்.


சம்பா ரவை லட்டு ரொடி.



குறிப்பு:


1. இந்த ரவா லட்டை அதிக நாள் வைத்துக் கொள்ள முடியாது.


2. இந்த உணவு சக்கரை நோயாளிகலுக்கு உகந்தது.


3. சம்பா
ரவை என்பது கோதுமை ரவை.

4. கடாயில் ரவையை இறக்கும் போது போடும் ஈக்குவல் பவுடர் போட்டதும் கீழே இறக்கமால் விட்டு விட்டால் ரவை நீர்த்து விடும்.


5. இந்த ரவா லட்டை 2 நாள் மேல் வைத்து இருந்தால் பூர்ணம் பூற்று விடும்.


***
படித்ததில் பிடித்தது,
***

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள் :)

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.


நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.


 இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.


மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!


*



2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!


மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம்.


இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது.



இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.


*


3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!


இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் – அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.


4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!


நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!


5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.


6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.


7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.


8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் – உள்மன ஆய்வு – மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.


9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.


10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

“இது என்னால் முடியுமா? முடியாதா?” என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது – மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?


***
thanks Mohamed
***



"வாழ்க வளமுடன்"

பித்தம் தீர்க்கும் வில்வம்






பித்தம் தீர்க்கும் வில்வம்
சித்த மருத்துவத்தில் பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கிய மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. வில்வம் பித்தத்துக்கு அருமருந்து. பண்டைய நாட்களில் பழங்களின் ராஜா எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணமுடையது.
வில்வம், மஹாவில்வம் என இரண்டு வகை உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது. சர்க்கரை நோய், பேதி, பித்தக் கிறுகிறுப்பு, தலைசுற்றல், ஒவ்வாமை (அலர்ஜி), அஜீரணம், வயிற்று உப்புசம் எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து. நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy) மற்றும் மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில், அரை ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை சாப்பிட்டுவந்தால், படிப்படியாய் நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் துவங்கும்.
ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீர் விட்டுவைத்திருந்து, காலையில் இலைகளை அகற்றிவிட்டு, தண்ணீரை மட்டும் குடிக்கலாம். படிப்படியாக ஒவ்வாமையைக் குறைத்து, அதனால் ஏற்படும் இரைப்பு நீங்கும். 50 கிராம் வில்வ இலைத்தூளுடன், 10 கிராம் மிளகு சேர்த்து, நன்கு பொடி செய்து கலந்துகொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அரை டீஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது, ஈஸ்னோபீலியா என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும் என நவீன அறிவியலால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் இன்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒரு பாரம்பரிய முறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. துவர்ப்புத்தன்மையும் மலமிளக்கித்தன்மையும் பசியை உண்டாக்கும். சித்த மருத்துவத்தில் வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்குக் கொடுக்கலாம் (பெப்டிக் அல்சர்). இதனை நாமே வீட்டில் செய்து கொள்ளலாம். வில்வம் பழச் சதையை 100 கிராமுக்கு 200 மி.லி தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்தில் காய்ச்சி, சிறிது தேன் கலந்துகொள்ளவும். காலையில் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக்கொண்டு செய்யும், வில்வாதி லேகியம் நல்மருந்து.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை. வில்வ இலை வில்வம் பழம் இரண்டும், குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்து. வில்வப் பட்டை, விளாப் பட்டை, நன்னாரி, சிறுபயறு, நெற்பொறி, வெல்லம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு 200 மி.லியாகக் கொதிக்கவைத்து அந்தக் கசாயத்தைக் கொடுத்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல் நீங்கும். வில்வ இலையை நல்லெண்ணையில் காய்ச்சி காது நோய்களுக்கு, காதில் விடும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.
இன்று பெருகிவரும் தொற்றாத வாழ்வியல் நோய்கள், உளவியல் நோய்கள், பத்தில் மூன்று நபருக்கு வருவதாக மருத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உளவியல் நோய்களில் முதலாவதாக மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்பு கூறியதுபோல் ஊறவைத்தோ கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தில் தற்போது ‘சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்திவரலாம்.



***
thanks dr
***



"வாழ்க வளமுடன்"
      

உங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா?





டி.வி, ஏ.சி, மொபைல் போன், லேப்டாப் என வீட்டுக்குத் தேவையானவற்றை அதிக விலை கொடுத்து வாங்கும் வீடுகளில்கூட, சில நூறு ரூபாயில் கிடைக்கும் முதலுதவிப் பெட்டிகள் இருப்பது இல்லை. நமக்கு ஏதும் ஆகாது எனும் அலட்சியம் அல்லது என்றைக்கோ நடக்கும் விஷயத்துக்கு எதுக்கு எனும் மெத்தனம்தான் இதற்குக் காரணம். ஆபத்து, எந்த நொடியிலும் ஏற்படலாம். முதலில், அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருளே முதலுதவிப் பெட்டிதான்.
கிருமிநாசினி
டெட்டால் போன்ற கிருமிநாசினிகள் அவசியம் இருக்க வேண்டும். உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க, சிறிதளவு கிருமிநாசினியால் அடிபட்ட இடத்தைத் துடைக்க வேண்டும். வீடுகளில் ரத்தம் சிந்தியிருந்தாலோ, அசுத்தங்கள் நிறைந்திருந்தாலோ, தண்ணீரில் கிருமிநாசினி கலந்து, அந்த இடத்தில் தெளித்து, நன்றாகத் துடைத்தால் வீட்டுக்குள் கிருமிகள் அண்டாது.
பஞ்சு
காயங்கள் ஏற்பட்டாலோ, தோல் அரிப்பு, சிரங்கு, சீழ் வடிதல் போன்ற பிரச்னை ஏற்பட்டாலோ, பழைய துணிகளால் கட்டுப்போடுவது, அடிபட்ட இடத்தைத் பழைய துணியால் துடைப்பது கூடாது. பஞ்சை வைத்துதான் துடைக்க வேண்டும். பஞ்சைப் பயன்படுத்தியவுடன் உடனடியாகத் குப்பைத் தொட்டியில் எரிந்துவிட வேண்டும். பயன்படுத்திய பஞ்சுகளை, வீட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது. சிறிதளவு கெட்டித்தன்மை கொண்ட தரமான பஞ்சாகப் பார்த்து வாங்கவும்.
பேண்டேஜ்
எதிர்பாராதவிதமாக ஏற்படும் சின்னச்சின்னக் காயங்களுக்கு பேண்டேஜ் போட வேண்டியிருக்கும். சின்னக் காயங்களை நன்றாகக் கிருமிநாசினி வைத்துத் துடைத்த பிறகு, பேண்டேஜ் போடவும். நன்றாகப் புண் ஆறிய பிறகு, முதலுதவி செய்வதில் தேர்ந்தவர்கள் அல்லது மருத்துவர்கள் மூலமாக, பேண்டேஜை அகற்றலாம். வட்ட வடிவிலும், நீள வடிவிலும், சதுர வடிவிலும் பேண்டேஜ்கள் கிடைக்கின்றன. பெரிய காயங்களுக்கு மருத்துவரின் அனுமதி பெற்ற பிறகுதான் பேண்டேஜ் அணிய வேண்டும்.
பாராசிட்டமால்
சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு எப்போதாவது பாராசிட்டமால் பயன்படுத்தலாம். ஓரிரண்டு மாத்திரைக்குள் நிவாரணம் கிடைக்காவிடில் மறுபடியும் பாரசிட்டாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள கூடாது. மருத்துவரை அணுக வேண்டும். அவசரத் தேவைக்கு மட்டுமே பாராசிட்டமால் பயன்படுத்த வேண்டும்.
ஐசார்டில்
மாரடைப்பு ஏற்பட்டால், இதயத் தசைக்கு ரத்தம் செல்வது தடைப்படும். மாரடைப்பு வரும் என உணரும் நொடியில் அல்லது மாரடைப்பு வந்த சில நொடிகளுக்குள் ஐசோசார்பைடு டை நைட்ரேட் (Isosorbide dinitrate)) இருக்கக்கூடிய ஐசார்டில் (Isordil) மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு, மிக விரைவாக மருத்துவமனையை நாடினால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது, ரத்தக்குழாய் அடைப்பைச் சற்று தளர்த்தும். எனவே, உடல் எடை அதிகம் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயதானவர்கள் வசிக்கும் வீடுகளில் கட்டாயம் ஐசார்டில் மாத்திரை இருக்க வேண்டும். இதயநோய் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரையின்பேரில் இந்த மாத்திரையை மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் சாப்பிடலாம்.
தீக்காய மருந்து
தீக்காயம் ஏற்படும்போது, உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, முதலில் குழாய் நீரில் தீக்காயம் ஏற்பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அதன் பிறகு, தண்ணீர் குடிக்க வேண்டும். சில்வர் சல்ஃபாடையாசின் நிறைந்த களிம்புகளைத் தடவ வேண்டும். பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படும்போது, களிம்புகள் தடவக் கூடாது. மிக விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
வலி நிவாரணிகள்
வயிற்று வலி வந்தால், தற்காலிக நிவாரணம் கிடைக்க டைசைக்லமின் (Dicyclomine), டிரோட்டோவெரின் (Drotoverine) உள்ள மாத்திரைகள் (உதாரணம்: பஸ்கோபான்) வாங்கி வைத்துக்கொள்ளவும். திடீர் காது வலி, பல் வலி, மூட்டுவலி ஏற்படும் சமயங்களில் வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படும்.
கையுறை
மருந்துகளைக் கையாளும்போதும், முதலுதவி செய்யும்போதும், தரமான கையுறை அணிந்துகொள்வது நல்லது. கையுறை அணிவதால் கையில் இருக்கும் அழுக்குகள் வழியாகக் கிருமிகள் மற்றவருக்குப் பரவாது. கையுறையைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
கத்திரிக்கோல்
காயம்பட்ட இடத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்்டேஜைக் கத்திரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்திரிக்கோல் தேவையாக இருக்கும். அவ்வப்போது துடைத்து, துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டிட்பிட்ஸ்:
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதலுதவிப் பெட்டியில் இருக்கும் மருந்துப் பொருட்களின் காலாவதித் தேதிகளை சோதித்து, அன்றைய தேதியில் இருந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தள்ளி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வலி நிவாரணி, பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை வாங்கும்போது, 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையாக வாங்க வேண்டும். அப்போது
தான், காலாவதித் தேதியைச் சுலபமாக சோதனை செய்ய முடியும்.
இருமல் மருந்துகள் போன்றவற்றை, முதலுதவிப் பெட்டியில் வைக்க வேண்டாம்.
ஒன்று அல்லது இரண்டு வேளை தலா ஒரு மாத்திரை சாப்பிட்டும் பயனளிக்கவில்லை எனில், மருத்துவரை அணுக வேண்டும். தொடர்ந்து சுயமாக மாத்திரை சாப்பிடக் கூடாது.
முதலுதவிப் பெட்டிகளை, குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியில் உள்ளவற்றை அவசர நேரத்தில் எப்படிப் பயன்படுத்துவது என, வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் பெற்றோர் ் சொல்லித்தர வேண்டும்.
வலிப்பு, ஆஸ்துமா, ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

***
thanks
***



"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "