...

"வாழ்க வளமுடன்"

06 ஆகஸ்ட், 2011

புரோக்கோளியின் மருத்துவ குணங்கள்



நாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்பு கதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரி நிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி.....


என்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா? இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது.



சுத்தமான சைவ உணவு. கண்டுபிடிங்க பார்க்கலாம். ம்ம்ம்ம்ம்ம்ம் மிகச்சரியான பதில். சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே. அதுமட்டும் தான் கோழி இனம் அல்ல. காய்கறி இனம். ஆமாம் புரோக்கோளி (Broccoli) என்பது முட்டைக்கோஸ் குடும்பத்தில் அவதரித்த அடுத்த வாரிசு. அந்தக் குடும்பத்து காலிஃபிளவரும் இதுவும் கலர் மட்டும் கொஞ்சம் மாறுபட்ட டிவின்ஸ்ன்னு சொல்லலாம். இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொஞ்சம்தான் வேறுபாடு இருக்கும். ப்ரோக்கோளி பூ காலிஃப்ளவர் பூ போலவே இருக்கும். ப்ரோக்கோளியி அடர்பச்சை, பிரெளன் இரண்டு நிறத்திலும் இருக்கும்..


இதன் பிறப்பிடம் இத்தாலி என்பதால் இதனை இட்டாலிகா இனம் என்றும் கூறுவர். ப்ரோக்கோளி என்ற பெயரும் Broccolo என்ற இத்தாலிச் சொல்லில் இருந்து பிறந்ததே. இலத்தின் மொழியில் கிளை அல்லது கை என்ற பொருள் தரும் ப்ரோச்சியம் (brachium) என்ற சொல் மருவி ப்ரோக்கோளியாக உருமாறியது என்று இதற்குப் பெயர் வைத்த கதையைச் சொல்லுவார்கள் அந்தக் குழந்தைக்குச் தந்தையர் நாட்டுக்காரர்கள்..


சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலியில் பயிரான ஒரு தாவரம் இது. 1920 வரை அதிகம் மக்களால் பயன்படுத்தப் படாத இத்தாவரம் வழக்கம் போல இங்கிலாந்துக்குப் போய் அங்கிருந்து மீள் அறிமுகம் செய்யப்பட்டது.


ஜெ.டி.ஸ்மித் என்பவரே இதனை எடுத்துச் சென்று உலகத்திற்குக் காட்டினார். இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,


கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம்,
சர்க்கரை 1.7 கிராம்,
நார்ச்சத்து 2.6 கிராம்,
நீர்ச்சத்து 89.30 கிராம்,
கொழுப்புச்சத்து 0.37 கிராம்,
புரதம் 2.82 கிராம,
சுண்ணாம்புச்சத்து 5%,
வைட்டமின் ஏ 3%,
வைட்டமின் சி 149%,
வைட்டமின் ஈ 5%,
இரும்புச்சத்து 6%,
மக்னீசியம் 6%,
பாஸ்பரஸ் 6%,
பொட்டாசியம் 7%,
சிங்க் 4%.
பீடா கரட்டின் 3%,
தயாமின் 5%,
ரிபோஃப்ளோவின் 8%
நியாசின் 4%
பேண்டொதேனிக் 11%
அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்?


***

அது என்னென்ன வேலைகளை நம்ம உடலில் செய்கிறது என்று பாருங்கள்.

புற்றுநோய் என்ற கொடுங்கோல் எமதர்மன் இன்ஃப்லமேஷன், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ், டெடாக்ஸ் என்ற மனித உடலில் நல்லாட்சி புரியும் மூவேந்தர்களை அடிமையாக்குவதன் மூலமாகத் தன் கடுகிய ஆட்சியைப் புரியத் தொடங்குவான். இவர்களைத் தன் படைபலத்தால் காத்தும், புற்று நோய்க் கிராதகனை இவர்களிடம் அண்ட விடாமலும் உடல்நாட்டைக் காக்கும் அருமையான பணியைச் செய்கிறது இந்த புரோக்கோளி.


ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால் உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோய்க் கிருமிகளை வ(ள)ரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.


ஆம், இதுவரை பல கோணங்களில் நடைபெற்ற ஏறத்தாள முந்நூறு ஆய்வுக்ளின் முடிவாக, ப்ரோக்கோளி புற்றுநோயை வராமல் தடுக்கும் மாபெரும் பணியை செய்கிறது என்கின்றனர் ஜெட் பாகே உள்ளிட்ட ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளகள் பலர்.


புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. ப்ரோக்கோளியில் உள்ள பிகாம்ப்ளக்ஸும் வைட்டமின் எ,சி,ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறதாம். உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறதாம்.


தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு ப்ரோக்கோளி மிகச்சிறந்த மருந்தாகும் இதனைப் பச்சையாக தின்று வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்குமாம்.


விழி பாதுகாப்புக்குத் தேவையாக வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியைப் பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறதாம். முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறதாம்.


சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அலஜியையும் தடுக்கிறதாம். உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் சரும நோய்க்கிருமிகளைக் குறைப்பதால் தோல்வியாதி உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்துப் பொருளாகிறது என்கிறது தற்போதைய ஆராய்ச்சி.


இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு.


பத்து கலோரி ப்ரோக்கோளியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும் நல்ல தாவரமாகும். அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப்ப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும் சில தசைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறதாம்.


சிங்கும் வைட்டமின் ஈயும் நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதால் பல நோய்களில் இருந்து காப்பாற்ற இந்த இரு சத்தும் நிறைந்த ப்ரோக்கோளி பயன் படுகிறது.


***

ப்ரோக்கோளியைச் சமைக்கும் முறை. பெரிதாக இல்லை.

காளிஃபிளவரை சமைக்கும் முறை அனைத்தும் ப்ரோக்கோளிக்கும் பொருந்தும். காளிஃப்ளவரைப் போலவே பூவிலிருந்து ஒவ்வொரு இதழாகப் பிரித்து கொள்ளவேண்டும். பெரிய இதழ்களாக (கொண்டைகளாக) இருந்தால் அவற்றைச் சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளலாம்.



அதனை உப்பு போட்டுக் காய்ச்சிய வெந்நீரில் போட்டு கழுவிச் சுத்தம் செய்த பின்பு சமைக்க வேண்டும். காளிஃப்ளவரில் காணப்படுவது போல சிறு புழுக்கள் இதிலும் இருக்க வாய்ப்புள்ளதால். நீரில் வேகவைப்பதை விட ஆவியில் வேகவைப்பது சரியான சமையல் முறை.


சரி.. இத்தனை பயன்பாடுகள் உள்ள இந்தக் கோளி இங்கு கிடைக்குமா என்றால்..... கண்டிப்பாக கிடைக்கிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இந்தக்கோளி விமானத்தில் பயணித்து சென்னை நீல்கிரிஸ், ரிலையன்ஸ் போன்ற கடை வரைக்கும் வந்து விட்டது. பிற இடங்களில் தெரியவில்லை. சென்னை வாசிகளெல்லாம் எப்பொழுதோ சாப்பிடவும் ஆரம்பித்து விட்டார்கள்.


ஒரு முக்கியமான செய்திங்க.. இதை மறந்திடாதீங்க..

இதனை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் வைக்கும் போது நீரில் கழுவிவிட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் நீர் இதனைக் கெட்டுப்போக வைக்கும். அதே போல பிரித்து வைத்த ப்ரோக்கோளியை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.



கறிக்கோழி, முட்டைக்கோழி, வெடக்கோழி கினிக்கோழியெல்லாம் சாப்பிடும் போது இந்தப் ப்ரோக்கோளி மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு.. எத்தனையோ சாப்பிட்டுட்டோம்....இதையும் சாப்பிட்டு வைக்கலாமே.... நாங்க தொடங்கிட்டோம்...... நீங்க??....




***
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்
***


"வாழ்க வளமுடன்"

உணவில் கட்டுப்பாடு எதற்காக?



தற்காலத்தில் யாரை உணவு அருந்தும் படி கேட்டாலும் நாம் உணவுக் கட்டப்பாட்டில் இருக்கிறோம் என்பார்கள். இது எதற்காக அவர்கள் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக தானே.



பத்தியமான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் மட்டும் உடலின் எடை அதிகரிப்பதனை கட்டுப்படுத்த முடியாது.



உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவோரின் உடல் எவ்வாறு பருமனடைகின்றது என்பதனை பற்றி எப்போதாவது சிந்தித்து பார்த்தீர்களா?




உண்மையில் உடல் எடையை குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மட்டும் போதுமானதல்ல. பத்தியமான உணவுகள் என வகையீடுப்படுத்தப்பட்ட பல உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமானது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.




குறிப்பாக சிப்ஸ், கோலா வகைகள் போன்றன உடல் ஆரோக்கியத்திற்கு உசிதமானதல்ல. கட்டுப்பாடான உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதனாலும் உடல் உடை உயர்வடைகின்றது. நாம் அனைவருமே கட்டழகான, எழிலான தோற்றமுடைய உடல் அமைப்பை பெற்றிருக்க வேண்டுமென விரும்புகின்றோம்.



எனினும் வேலைப்பளு, அழுத்தம் மற்றும் வேறும் பொறுப்புக்கள் காணமாக எம்மால் உடற்பயிற்சி செய்வதற்கு போதியளவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடிவதில்லை. இதனால் அநேகமானவர்கள் உணவுக் கட்டுப்பாட்டு பழக்கங்களை பின்பற்றுவதில் அதிக நாட்டம் காட்டுகின்றனர்.


ஒன்றிரண்டு மணித்தியாலங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்வதனை விடவும் வழமையாக உட்கொள்ளும் உணவு வகைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது சுலபமானது. உணவுக் கட்டுப்பாடு தொடர்பான பிழையான கருதுகோள்களினால் முன்பு இருந்ததை விடவும் இவர்கள் அதிகளவு பருமனடைகின்றனர்.


பல்வேறு உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலின் எடையை குறைக்க முடியும் என கருதுகின்றனர். எனினும் அவற்றின் கலோரிப் பெறுமதியை உன்னிப்பாக அவதானித்தால் வழமையாக உட்கொள்ளும் உணவுப் பொருட்களையும் விடவும் அதிகமானவை என்பது புலனாகும்.


உணவுப் பொருட்கள் கலோரி அளவுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பத்திய பானங்கள் Diet Drinks: குறைந்த கலோரியுடைய பானங்களில் இனிப்புச் சுவையூட்டிகளாக பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருட்கள் உங்களின் உடல் எடையை மேலும் அதிகரிக்கக் கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்த பானங்களில் காணப்படும் இனிப்புச் சுவையூட்டிகள் அதிக பசியை ஏற்படுத்தி நீங்கள் அதிகமாக உணவு உட்கொள்ள வழிவகை செய்வதாகத் தெரிவித்துள்ளனர். சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சுத்தமான நீர் மிகவும் உசிதமானது. எனினும் சுவை விரும்பினால் இயற்கையான பழச்சாறுகளை சுத்தமான நீருடன் கலந்து பருக முடியும்.


பழச்சாற்றை விடவும் நீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் கலோரி அளவை வரையறுக்கலாம். தேசிக்காய் சாறு உணவு சமிபாட்டுக்கு உதவியாக அமையும். சிரீயல் பார் காலை உணவு: குறைந்தளவு கலோரிகளைக் கொண்ட சீரியல் பார்கள் காண்போரின் கவனத்தை ஈர்க்ககக் கூடியவை. இவை அநேகமாக 90 கலோரிகளை மட்டுமே கொண்டிருக்கும்.


எனினும் இந்த வகை சீரியல் பார்களை காலை உணவாக உட்கொள்ளும் பழக்கத்தை முடிந்தால் தவிர்க்கவும். இந்த வகை சீரியல் பார்களுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் சீனி போன்றன சேர்க்கப்பட்டிருக்கும். இவை உங்களது உடலுக்கு உடனடி சக்தியை வழங்கும் அதேவேளை, குருதியின் குளுகோஸ் அளவை அதிகரித்துவிடும். இதன் காரணமாக உங்களுக்கு உடல் சோர்வும், பசியும் ஏற்படலாம்.


இந்த சிறிய சீரியல் பார்கள் ஒருவரின் பசியை போக்கக் கூடியதல்ல. கலோரிப் பெறுமதியை வரையறுப்பதற்கு: பொறுபொறுப்பான உணவு வகைகளை விரும்புவராக இருந்தால் நிலக்கடலை போன்ற பருப்பு அல்லது கொட்டை வகைகளை உட்கொள்ள முடியும்.


பருப்பு அல்லது கொட்டை வகைகளை உட்கொள்வதன் மூலம் அதிகளவு புரதச் சத்து கிடைப்பதுடன் ஓர் நிறைவான அனுபவம் ஏற்படுகின்றது. ஓட் கேக்: ஓட் கேக் அல்லது புல் அரிசி கேக் வகைகள் நார்ச் சத்து அதிகமான சிறந்த ஆரோக்கியமான உணவாகும்.


எனினும் அநேகமான ஓட் கேக் வகைகள் ஒவ்வொன்றும் 50 கலோரியைக் கொண்டது. ஆறு துண்டுகளைக் கொண்ட பொதியாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கேக் வகைகள் சுவையானவை என்பதால் முழு பக்கட்டையுமே முடித்து விடத் தோன்றும்.


இவ்வாறு ஆறு ஓட் கேக் துண்டுகளை உட்கொண்டால் 300 கலோரி சக்தியை உடல் பெற்றுக்கொள்ளும். எவ்வாறெனினும் 300 கலோரி சக்தியுடைய கோழி இறைச்சி அல்லது மீன் சன்ட்ஜ்விஜ் ஒன்றை உட்கொள்ளும் திருப்தி கடைக்காது. பீனாட் பட்டர் அல்லது சீஸ் ஆகியவற்றுடன் ஓட் கேக் உட்கொண்டால் கலோரியின் அளவு இரட்டிப்பாக உயர்வடையும்



***
thangs tags
***



"வாழ்க வளமுடன்"

மயக்கம் வந்தால் உடனடிச் சிகிச்சை முறைகள்!


மூளையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாதபோது மயக்கம் உண்டாகும். பயப்படுவதாலும், கெட்ட செய்தியைக் கேட்பதாலும், திடீர் தாக்குதல், விபத்தாலும், பயங்கரமான காட்சியைக் காண்பதாலும், வியாதிகளாலும், களைப்பு, உஷ்ணத்தினாலும், நீண்ட நேரம் நிற்பதினாலும் மயக்கம் ஏற்படும்.


அறிகுறிகள்

1. திடீரென்று உணர்ச்சியற்றுப் போவார். தலை கிறுகிறுக்கும். தடுமாற்றம் ஏற்படும்.


2. முகம் வெளுத்துப் போகும்.


3. தோல் குளிர்ச்சியடைந்து, பிசுபிசுப்பாகும்.


4. நாடித் துடிப்பு பலவீனமாகவும், மெதுவாகவும் இருக்கும்.


5. மூச்சு லேசாக இருக்கும்.


***

உடனடிச் சிகிச்சை முறைகள்:

* ஒருவருக்கு மயக்கம் ஏற்படுவதைப் போலத் தோன்றினால் சீக்கிரமாய் தலையைக் கீழே குனிய வைக்க வேண்டும். குறிப்பிட்ட நபர் உட்கார்ந்திருந்தால் முழங்கால்களுக்கு இடையே தலையைத் தாழ்த்தி வைக்க வேண்டும். அல்லது தாழ்த்திப் படுக்க வைக்க வேண்டும்.


* போதுமான தூய காற்றுப் படும்படி செய்ய வேண்டும்.


* கழுத்திலும், இடுப்பிலும், மார்பிலும் சுற்றியுள்ள ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும்.


* மயக்கம் அடைந்தவர் மறுபடி தன்னிலைக்கு வரும்போது அவரை நிமிர்த்தி தண்­ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை சிறிது சிறிதாகக் கொடுக்க வேண்டும்.



***
thanks tags
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "