...

"வாழ்க வளமுடன்"

21 செப்டம்பர், 2010

குழந்தைகளை அழாமல் சாப்பிட வைப்பது எப்படி?


குழந்தைகள் சாப்பிடுவது இல்லை. அதுவும் பள்ளிக்கு சென்றுவிட்டால் "லஞ்ச் பாக்ஸை" திறக்காமல் அப்படியே கொண்டு வந்து விடுகிறார்கள்.


காலையில் கிளம்பும் அவசரத்தில் சரியாக சாப்பிடுவது இல்லை" என பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் கவலை ஏராளம்.


சில பெற்றோர் பள்ளி ஆசிரியையிடம் "மதியம் சாப்பிடறானா என்று பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அன்பு கட்டளையிடுவதை பார்த்திருக்கிறோம்.


பள்ளிச் செல்லும் குழந்தைகள் எந்த மாதிரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்?


1. காலையில் சாப்பிடாமல் குழந்தைகள் பள்ளிக்கு செல்லக்கூடாது.

2. காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் அருந்த செய்ய வேண்டும்.

3. சிறிது நேரம் கழித்து ஒரு கப் பால் தர வேண்டும்.

4. ஒரு அவித்த அல்லது ஆம்லேட் செய்த முட்டை சாப்பிடலாம்.

5. வேறு எதாவது டிபன் எடுத்துக்கொள்ள வேண்டும்.


***


மதியம் எந்த மாதிரியான உணவை கொடுத்து அனுப்ப வேண்டும்?


1. நூடில்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகள் விரும்புகின்றனவே....

2. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அவசரம் காரணமாக அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று பார்க்காமல் எதையாவது ஒரு உணவை திணித்து அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

3. நூடில்ஸ் போன்றவற்றை மதியம் தருவதை விட எப்போதாவது சாப்பிடலாம்.


4. என்ன உணவு தந்தாலும் அவசியம் காய்கறி சாலட் கொடுத்தனுப்ப வேண்டும்.

5. காரட், பீன்ஸ், முளை கட்டிய தானியம், பெரிய வெங்காயம், தக்காளி போன்றவற்றுடன் உப்பு, மிளகு சேர்த்து சாலட் செய்ய வேண்டும்.

6. சிறிதளவு சீனியும் சேர்க்கலாம்.


***


சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது?


1. ஒவ்வொரு நாளும் ஒருவகை உணவு தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

2. நல்ல சத்துள்ள உணவை விதம் விதமாக தர வேண்டும்.

3. நாம் விரும்பும் உணவை விட அவர்கள் விரும்பும் உணவை தரலாம்.


4. அவர்கள் சாக்லேட்டுகளை தானே விரும்புகிறார்கள்... சாக்லேட்கள் சாப்பிடுவது கெடுதியானது.

5. சிறுகுழந்தையாக இருக்கும் போதே பழகி விட்டால் பள்ளிக்கு செல்லும் போது உணவில் நாட்டமில்லாமல் சாக்லேட் சாப்பிட விரும்பும். அதில் தேவையற்ற கலோரி உள்ளது. சத்து ஏதும் இல்லை.

6. தயிர்சாதம் செய்யும் போது திராட்சை, மாதுளை, ஆரஞ்ச் இதழ்களை அதில் சேர்க்கலாம். கேரட் சேர்க்கலாம்.


7. இவை ஆரோக்கியத்திற்கும் நல்லது. குழந்தைகளை கவரும் விதமாகவும் இருக்கும்.

8. தினமும் ஒரு கப் கீரை தர வேண்டும்.

9. கீரை தனியாக சாப்பிட தயங்கும் குழந்தைகளுக்கு கீரை சப்பாத்தி, கீரை சேர்த்த அடை தோசை, கீரை புலாவ் போன்றவை தரலாம்.


***


பள்ளிக்கு சென்று களைத்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் எந்த மாதிரி உணவு தர வேண்டும்?


1. கடைகளில் கிடைக்கும் பாக்கெட் உணவுகள், வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களை தவிர்க்கலாம்.

2. சுண்டல், பயிறு, அவல் போன்றவை தரலாம்.

3. தேங்காய் துருவல் சேர்த்த அவல் உப்புமா மிக நன்று.

4. ஒரு கப் பால் தரவேண்டும்.

5. பேக்கரி பொருட்களை தினமும் எடுத்துக்கொள்ளக்கூடாது. என்றாவது ஒரு நாள் சாப்பிடலாம்.


***


இரவில் எவ்வகை உணவு தர வேண்டும்?


1. இரவில் சாப்பிடாமல் படுக்க கூடாது.

2. எண்ணெயில் பொரித்த உணவை இரவில் தவிர்க்க வேண்டும்.

3. காபி, டீ குடிக்க கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவினை தரலாம். பால் தரலாம்.


***


இரவில் கண்விழித்து படிக்க டீ, காபி சாப்பிட்டால் தூக்கம் வராது என்பது சரியா?

இது ஒரு மன ரிதியான எண்ணம். அறிவியல்பூர்வமாக அப்படி இல்லை.


***


குழந்தைகள் படிப்பிற்கும் உணவிற்கும் தொடர்பு உண்டா?


1. சரியான உணவு எடுத்துக்கொள்ளாத குழந்தைகள் சரியாக படிக்காது.

2. சரிசம உணவு இல்லையெனில் பார்வை கோளாறு, தோல் நோய்கள், உற்சாகமின்மை ஏற்படும். கீரை, பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.

3. தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

4. குழந்தைகளிடம் "சாப்பிட்டீங்களா" என்று கேட்பது போல் "தண்ணீர் குடித்தீர்களா" என்று கேளுங்கள்.


5. வாயு நிறைந்த குளிர்பானங்களில் உடலுக்கு தேவையற்ற அதிக கலோரி உள்ளது. இதனால் உடல் எடை கூடும்.

6. அவற்றை தவிர்க்க வேண்டும். பழத்தை ஜூசாக்கி குடிப்பதை விட பழமாகவே சாப்பிடுவது நல்லது.


***


அசைவ உணவுகளை சிறியவர்கள் சாப்பிடலாமா?

வளரும் குழந்தைகளுக்கு எல்லா சத்தும் தேவை. மீன், சிக்கன் போன்றவை சாப்பிடலாம்.


***

நமது ஊரின் விருப்ப உணவு இட்லியில் எத்தனை கலோரி உள்ளது?


1. (கலோரி என்பது உணவின் மூலம் கிடைக்கும் சக்தியின் அளவு) 50 கலோரி உள்ளது.

2. அரிசியும் உளுந்தும் சேர்வதால் இட்லி உடலுக்கு நல்லதே.

3. இட்லி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், அதற்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடலாம் என்பது சரியல்ல.

4. சர்க்கரை நோயாளிக்கு சாப்பிடும் அளவு தான் முக்கியம்.


***

நன்றி Sri Lanka News On Paper
***


"வாழ்க வளமுடன்"


பற்களின் பாதுகாப்பு: கேள்வி பதில் வடிவில்...

- Ln. Dr. M.S. சந்திரகுப்தா, BDS., FCIP., DIM PGDHRM., PGDGC.,





பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும் உணவுகளை குண்டூசியால் குத்தி எடுக்கலாமா?

குண்டூசி, ஊசி போன்றவைகளால் குத்தி எடுக்கக் கூடாது. ஒரு நூல் கொண்டு இரண்டு பற்களுக்கிடையில் கொடுத்து எடுக்கலாம்.

குண்டூசி, குச்சி, ஊசி போன்றவற்றால் பல் இடுக்குகளைக் குத்தும்போது ஈறுகள் பாதிக்கப் படுவதோடு, நிறைய சந்துகள் உண்டாகி, கிருமித் தொற்றும் அதன் காரணமாக நோய்த் தொற்றுகள் வருவதற்கான வாய்ப்பும் அதிகா¢க்கின்றன.

***


பற்களில் ஏன் கூச்சம் வருகிறது? எனக்கு இரவில் பற்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பற்கூச்சம் வருமா? மற்ற எந்த வகைகளில் பற்கூச்சம் வருகிறது?

பற்களை அறிந்தோ அல்லது அறியாமலோ கடிப்பதை பல் வெருவுதல் (Bruxism) என்கிறோம். பல் வெருவுதலால் பற்சிப்பி தேய்ந்து பல்லில் கூச்சம் ஏற்படும்.

பற்கூச்சம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்சிப்பி தேய்வதுதான் எல்லாவற்றாலும் வரும் விளைவு.

கா¢த்தூள், படிகாரம், செங்கற் பொடி கொண்டு பல் துலக்குதல், நகம் கடிப்பதால் பற்கள் தேய்தல், பற்களின் வளர்ச்சி நிலையில் தடை ஏற்பட்டு எனாமல் பாதிக்கப்பட்டுத் தேய்தல் (எனாமல் தேய்ந்துவிடுவதால் கறைகளும் படியும்).

பற்களின் உட்புறத்திலுள்ள இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளில் அடிபடுதல், கிருமித் தாக்குதல், பல் சொத்தை ஆழமாதல் போன்றவற்றால் எனாமல் பாதிக்கப்படும்போது கிருமிகள் எளிதில் உள்ளிருக்கும் திசுக்களைத் தாக்குதல். இப்படி பல காரணங்களால் பற்கூச்சம் உண்டாகும்.

***


பற்கூச்சைத்ப் போக்க என்ன செய்வது? என்ன மாதி¡¢யான சிகிச்சைகள் இருக்கின்றன?

எனாமல் தேய்ந்திருந்தால் பற்களின் நிறத்தில் ரெசின் பொருட்களைப் பயன்படுத்தி எனாமலைப் பூசும் முறைகள் நடைமுறையில் உள்ளன.

பாதிப்பின் அளவு மற்றும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சைகள் இருக்கும்.

***


உடலிலேயே மிக உறுதியான பகுதி எது?

கண்டிப்பாக பல்லின் எனாமல்தான் உடலின் உறுதியான பகுதி.

***


எனது பற்களின் மேற்புறத்தில் கறைகள் படிந்து அருவருப்பாக உள்ளது. என்னதான் தேய்த்துத் துலக்கினாலும் போவதில்லை. இவற்றை எப்படிப் போக்குவது?

பற்களில் தோன்றும் கறைகள் வெளியிலிருந்தால் மிகவும் சுலபமாகப் போக்கலாம்.

ப்ளீச் எனப்படும் வெளுப்பூட்டும் முறையில் சுத்தம் செய்து கறைகளை நீக்கலாம்.

உங்கள் பற்களை அச்செடுத்து அதற்கு ஏற்ப உறை செய்து அதில் ப்ளீச் செய்வதற்கு பயன்படும் மருந்தைத் தடவி, பற்களில் பொருத்திவிட்டால் சில நாட்களிலேயே கறைகள் நீங்கிவிடும்.

ரூட்கெனால் எனப்படும் வேர்ச்சிகிச்சை செய்த பற்களுக்கும் ப்ளீச் முறையில் பற்கறைகளை நீக்கலாம்.

***


வெற்றிலை பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகுமா?

கண்டிப்பாக வெற்றிலை, பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகும். இது தவிர, புகைத்தல், மருந்துகள், வாயை சுத்தம் செய்யும் மருந்துகள், ஆஸ்பி¡¢ன், அம்மோனியா, குளோ¡¢ன், வாய்ப்புற்று நோய்க்காக அளிக்கப்படும் ரேடியக் கதிர்வீச்சு ஆகியவற்றாலும் ஈறுகள் பாதிக்கப்படும்.

இதை உடனடியாகக் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால் ஈறுகளில் இரத்த நாளங்கள் வி¡¢வடைந்து இரத்த ஒழுக்கு ஏற்படும்.

நாட்பட்ட நிலையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு ஈறு நீலம் கலந்த சிவப்பாகவும், தொட்டால் வலிக்கும் தன்மை கொண்டதாகவும் மாறும்.

***


என் பற்கள் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. தூய வெண்மையாக மாற என்ன செய்யலாம்? பற்களின் இயல்பான நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?
பற்களின் இயல்பான நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?


பற்களின் இயல்பான நிறமே இளம்-மஞ்சள்தான்; பலர் நினைப்பது போன்ற தூய வெள்ளை நிறமல்ல!

பற்களின் வளர்ச்சி மற்றும் பற்கூழின் தன்மையைப் பொறுத்தே அவற்றின் நிறம் அமைகிறது. பற்களை நன்றாக துலக்கி சீராக வைத்துக்கொண்டால் அவைகளின் இயற்கை நிறத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.

***


பற்களின் நிறம் மாறுவதற்கான காரணங்கள் என்ன? அவற்றை சுயமாக நீக்கிக்கொள்ளலாமா? டாக்டா¢டம் போக வேண்டுமா?

பழக்கங்கள், தொழில்கள் நோய்கள், கர்ப்பக் காலத்தில் தாயார் உட்கொண்ட மருந்து, மாத்திரைகளால் பற்களில் கறை படிவதே ஆகும். இதில் இரண்டு வித கறைகள் உள்ளன.

வெளிக்கறைகள், உட்புறக் கறைகள்.

வெளிக்கறையை துலக்கிகள் மற்றும் வாய்க்கொப்பளிப்பு மருந்துகள் மூலமாகவும் சுலபமாக கரைத்துவிடலாம்.

உட்புறக் கறைகளை நீக்குவதற்கு சிரமம் இருக்கும் இதற்கு பல் மருத்துவா¢ன் உதவி கட்டாயம் தேவைப்படும்.

***


பலவிதமான பழக்கங்கள் மற்றும் நோய்களின் பாதிப்பினால் பற்களின் நிறம் மாறும் என்பது உண்மையா?

உண்மைதான். புகைத்தல் மற்றும் புகையிலைப் பயன்பாடு தவிர, சில பழக்கங்கள் தானாக வரக்கூடியவை.

இவை பற்களில் கறையை உண்டாக்கும் என யாரும் நினைப்பது இல்லை. இதைப் பற்றி நீங்கள் தொ¢ந்துகொள்ள வேண்டும் என்பதால் வி¡¢வாகவே கூறுவிடுகிறேன்.

பழக்கங்கள் :

புகையிலை போடுவது, புகைப்பது ஆகிய பழக்கத்தால் பற்கள் கறுப்பு அல்லது காவி கலந்த கறுப்பு நிறமாக மாறி விடுகிறது. இந்த நிறமாற்றம் பற்களின் மீதும், பற்சிப்பியின் மீதும் பதிந்து அருவருப்பான தோற்றம் தரும். வாயிலும் நிரந்தரமான துர்நாற்றம் வீசும்.

*


தொழில்கள் :

சில குறிப்பிட்ட தொழில் செய்பவர்கள் தொழிற்கருவியை பற்களில் கடித்துக்கொள்வதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இதன் காரணமாக பற்களின் மீது கறைகள் படியும்.

உதாரணமாக,

தச்சுத் தொழிலாளர், செப்பு உலோகத்தொழிலாளர், செம்பாலான இசைக்கருவிகளை இசைப்போர், தையலர்கள் போன்றவர்கள் பெரும்பாலும் தங்கள் பற்களில் கருவிகளைக் கடித்துக்கொள்வதால் பற்களில் பச்சை நிறக் கறை இருப்பதைக் கூறலாம்.

*


மருந்து மாத்திரைகள் :

இரும்புச் சத்துள்ள மருந்துகளால் கருப்பு நிறக் கறையும், மாங்கனீசு கலந்த வாய்க்கொப்பளிப்பு மருந்துகளால் இளங் கருப்பு கறைகளும், ஆஸ்பி¡¢ன் மற்றும் காசநோய் மாத்திரைகளால் மஞ்சள் நிறக் கறைகளும், வெள்ளை நைட்ரைட் திரவம் போன்ற மருந்துகளால் பழுப்பு மற்றும் சிவப்பு நிறமும் தோன்றும்.

ஈயம் கலந்த பற்பொடியால் மஞ்சள் நிறக் கறையும், சாம்பல் உமிக்கா¢யைக் கலந்து பல் துலக்கினால் கருப்பு நிறக்கறையும் தோன்றும்.

*


நோய்கள் :

கிருமிகளால் பற்கூழ் பாதிக்கப்பட்டு அங்குள்ள இரத்தக் குழாய்கள் சிதைந்து அழுகி இறந்துவிடும் போது பற்களுக்குள் கரும்பழுப்பு நிறம் ஏற்படுகிறது.

தந்தினிக் குழல்கள் பாதிக்கப்படும்போது பற்குழியில் மாற்றம் ஏற்பட்டு இரத்தக்குழாய்களும் புரத நார்களும் பெருமளவுக்கு பற்குழியில் நிரம்பிவிடும். இதனால் பல்லின் உட்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் தொ¢யும்.

*


ப்ளூரைடு :

பற்கள் வளரும் பருவத்தில் ப்ளூரைடு கலந்துள்ள நீரைப் பருகுவதால் காவி நிறத்தில் உட்கறை உண்டாகிறது.

*


பாரம்பா¢யம் அல்லது வேறு காரணங்களால் தந்தினி தாறுமாறாக அமைந்து குழிகள் தோன்றி பற்கூழின் இரத்தக் குழாய்கள் சிதைவதால் பல் மஞ்சள், சாம்பல் அல்லது நீல நிறமாக காணப்படும்.

பாரம்பா¢யக் குறைகளால் பற்சிப்பியில் வளர்ச்சியின்மை, பல் முளைத்த பிறகு பற்சிப்பி தேய்ந்து பற்கள் செம்பழுப்பு காவி அல்லது மஞ்சள் நிறத்தில் செம்புள்ளிகள் தோன்றும்.


***

நன்றி மார்டன் தமிழ் வெல்டு.

***

"வாழ்க வளமுடன்"

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்


ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது.


குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.


சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது.

வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள்.

ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை.

ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள்.

***

அதைப்பற்றி அறிந்து கொள்வோம்:


காய்ச்சல்

1. குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும்.

2. வீறிட்டு அழும்.

3. திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும்.

4. இலேசாக இருமிக்கொண்டே இருக்கும். பால் குடிக்காது.

5. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும்.

6. உமிழ்நீர் சூடாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும்.

***

உடலில் அக்கி உண்டானால்:

1. குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும்.

2. அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும்.

3. உதடுகள் வறண்டு காணப்படும்.

***

வயிற்றுப் பொருமல்:

1. குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும்.

2. கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும்.

3. உடல் மிகவும் வாட்டமாக இருக்கும்.

4. பால் குடிக்காது.

5. மலம் வெளியேறாது.

***

காமாலை:

1. குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும்.

2. பசியில்லாமல் இருக்கும். பால் குடிக்காது.

3. சிறுநீர் மஞ்சளாக வெளியேறும். மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.

***

விக்கல்:

1. மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும்.

2. குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும்.

3. திடீரென்று ஏப்பம் விடும்.

***

நாக்கில் பாதிப்பு:


1. உமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும்.

2. நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும்.

3. சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும்.

4. வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

***

மூலம்:

1. மூலமூளை நீண்டிருக்கும்.

2. குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கும்.

3. மலத்துடன் இரத்தம் வெளிப்படும்.

***

தொண்டைப் பிடிப்பு:

1. இலேசான சுரம் இருக்கும்.

2. குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும்.

3. எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.

***

காது பாதிப்பு :

1. கையினால் காதுகளைத் தொடும்.

2. காதுகளை அழுத்தித் தேய்க்கும்.

3. தூக்கமிருக்காது. பால் குடிக்காது.


***

கழுத்தில் பாதிப்பு :

1. குடித்த பால் ஜீரணம் ஆகாது.

2. தொண்டையில் சளி கட்டும். பசி எடுக்காது.

3. காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாக காணப்படும்.

***

வாயில் பாதிப்பு :

1. அதிக உமிழ்நீர் சுரக்கும்.

2. தாய்ப்பால் குடிக்காது.

3. மூச்சு விட திணறும்.

***

வயிற்று வலி:

1. குழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது.

2. நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும்.

3. உடல் குளிர்ந்திருக்கும். முகம் வியர்த்துக் காணப்படும்.

*

இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.


***
நன்றி http://www.z9tech.com/
***

"வாழ்க வளமுடன்"

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை




தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னைகளால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்' என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

*
குடும்ப சுமை, வேலைப்பளு போன்றவற்றால், பெரியவர்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுவதாக கருதப்படுகிறது.

*

ஆனால் இந்த பிரச்னைகளால் தற்போது பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

***


இதுகுறித்து குழந்தைகள் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூ ஹெர்சி கூறியதாவது:

1. தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுகின்றனர்.

*

2. பள்ளியில் நீண்ட நேரம் பாடங்களை கூர்ந்து கவனிக்கின்றனர்.

*

3. மேலும் வீடு திரும்பும் அவர்கள் வீட்டு பாடங்களை முடித்துவிட்டு வெகு நேரம் கழித்து தூங்க செல்கின்றனர்.

*

4. இதுதவிர காலையில் பள்ளிக்கு செல்லும் பதட்டத்தில் அவர்கள் சாப்பிடுவதில்லை.போதிய தண்ணீர் குடிப்பதில்லை.

*

5. இதனால் அவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது.

*

6. ஒற்றை தலைவலி பரம்பரையாக வரக்கூடிய பிரச்னை.அடிக்கடி ஏற்படும் தலைவலியும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.


*


ஹார்மோன்களில் மாற்றம், இரத்த நாளங்களை விரிவடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

*

தற்போது 10 சதவீத குழந்தைகளுக்கும், 28 சதவீத பெரியவர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளது.

*

பெரியவர்களுக்கு 4 மணி நேரமும்,குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட ஒற்றை தலைவலி தொடர்ந்து இருக்கும்.

*

பெரியவர்களுக்கு தலையின் ஒரு பகுதியிலும் குழந்தைகளுக்கு நெற்றியிலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.

*

மூன்று வயது குழந்தைகளுக்கு கூட ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுகிறது.

*

சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களாலும் அவர்களுக்கு தலைவலி பிரச்னை ஏற்படுகிறது.

இவ்வாறு ஆண்ட்ரூ ஹெர்சி கூறினார்.


***

நன்றி http://www.z9tech.com/

***

"வாழ்க வளமுடன்"

நோன்ஸ்டிக் பாத்திர சமையல் குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும்

குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்




உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் எண்ணையின் அளவை குறைப்பதற்காக சமீப காலமாக “நோன்ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்கின்றனர்.

இதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டாது.


எனவே அவற்றில் சமையல் செய்வது ஒரு பாஷனாக கருதப்படுகிறது. ஆனால், அதுவும் ஒருவகையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

“நோன்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்து தயாரிக்கப்படும் உணவை குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





அந்த பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் “பேப்ரிக்குகளும் கொழுப்பு சத்தை உணவில் அதிகரிக்கின்றன.


அந்த உணவை சாப்பிடும் குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. லிபோபுரோட்டீனின் அளவை குறைக்கிறது. இதனால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

நோன்ஸ்டிக் பாத்திரங்களில் உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க “பெர்புலோரோ அல்சைல் திரவம் பூசப்படுகிறது.

இதன் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாக கூறப்படுகிறது.


இந்த ஆய்வை மேற்கு வர்ஜினீயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழு மேற்கொண்டனர்.


***

நன்றி http://www.z9tech.com/

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "