...

"வாழ்க வளமுடன்"

18 ஆகஸ்ட், 2011

கொலோசியம், ரோம் ( உலக அதிசயம் )


கொலொசியம் ரோம், இத்தாலி

*

பண்டைய ரோமாபுரியில் அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான கலை அரங்கம் கொலோசியம் (Colosseum) ஆகும். இது கி.பி. 72 - ல் துவங்கி கி.பி. 80 - ல் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 847 - ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வட்ட வடிவம் உடைய கொலோசியத்தின் பாதிப் பகுதி இடிந்து விழுந்தது. தற்போது பாதி அழிந்த நிலையில் வரலாற்றுச் சின்னமாகவும், உலக அதிசயமாகவும் திகழ்கிறது.


கொலோசியம் அரங்கத்தின் மொத்த உயரம் 159 அடி ஆகும். இது பல நுழைவாயில்களைக் கொண்டது. இந்த அரங்கத்திற்குள் நுழைவதற்கு குறைந்தபட்சம் 80 நுழைவாயில்கள் உள்ளன. இதில் நான்கு அடுக்குகள் உள்ளன. பூமிக்கு அடியில் பொறியியல் அமைப்புகளும், கொடிய விலங்குகளுக்கான அறைகளும் உள்ளன. விலங்குகள் அரங்கத்தின் மையத்திலிருந்து வெளிவரும் வண்ணம் பாதை அமைக்கப்பட்டுள்ளது.


இங்கு அடிமைகள், அரசியல் கைதிகள் போன்றோரை கொடிய விலங்குகளுடனும், அவர்களுக்குள்ளாகவும் மோதவிட்டு ரோமானியர் பார்த்து ரசித்தனர். வேதகலாபனை காலங்களில் கிறிஸ்தவர்கள் இங்கு பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.


***
thanks amudmtamil
***






"வாழ்க வளமுடன்"



நாவில் கசப்பா? நாரத்தை இருக்கு!

*
நாம் உண்ணும் உணவில் ருசியில்லை என்றாலும், உணவு சுவையாக இருந்து நாவில் ருசியில்லை என்றாலும் உணவின் மேல் வெறுப்பு உண்டாகிறது. உண்ணும் பொருளின் சுவையை அறியாமல் இருப்பதை அரோசகம் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. வாயில் நீர் ஊறல், ஒருவித கசப்புச்சுவையை நாவில் உணருதல், வாயில் எந்த சுவையும் தெரியாமல் இருத்தல் அல்லது சுவை மாறி காணுதல் போன்ற உபாதைகள் அரோசகத்தின் அறிகுறிகளாகும்.



கடுமையான கிருமித்தொற்றினால் ஏற்பட்ட மூளை நரம்பு மண்டல பாதிப்பு, மருந்து மாத்திரைகளால் சுவை அரும்புகள் முனை மழுங்கிப்போதல், கடுமையான சளித்தொல்லை அல்லது சுரம் இருத்தல், மஞ்சள்காமாலை போன்ற கல்லீரல் சார்ந்த நோய்கள், ரத்தசோகை, உண்ணும் உணவில் நஞ்சு கலந்திருத்தல் அல்லது ஒவ்வாத பொருள் கலந்திருத்தல், செரிமான என்சைம்கள் சரியாக பணிபுரியாமல் இருத்தல், எச்சில் சுரப்பில் அமிலம் கலத்தல் போன்ற காரணங்களினாலும் மனம் சார்ந்த நோயினாலும் ருசியின்மை தோன்றும். சிலருக்கு உண்ணும் உணவானது எப்பொழுதும் துவர்ப்பாக இருத்தல், உண்டபின் கசப்பாகவோ, புளிப்பாகவோ குமட்டல் ஏற்படுதல், வாயில் மாமிசம் கழுவிய நீர் வாடை அடித்தல், எச்சில் சில நேரம் இனித்தல் போன்ற தொந்தரவுகளுடன் ஒருவித மனசோர்வு ஏற்பட்டு உணவு உண்ணாமல் அல்லது உண்ட உணவை குமட்டி வாந்தியெடுத்தல் அல்லது லேசாக உட்கொண்டுவிட்டு உணவு உண்ண மறுத்தல் போன்ற தொல்லைகள் அரோசகத்தில் உண்டாகும்.



இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளை, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். பிரண்டை, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். நாவில் ருசியின்மையால் தோன்றும் பலவித வயிற்றுக் கோளாறுகளை நீக்கி, நாவிற்கு ருசியைத் தருவதுடன், பசியைத் தூண்டி, உண்ட உணவை எளிதில் செரிக்கச் செய்யும் மருத்துவ பழம்தான் நாரத்தை. இந்த பெருஞ்செடிகளின் பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. இவற்றில் உள்ள சிட்ரஸ் பயோபிளேவனாய்டுகள், ஹெஸ்பெரிடின், ரூட்டின், டயோஸ்மின், நருஞ்சின், டான்செரிடின், டயோஸ்மெட்டின், நியோஹெஸ்பெரிடின், குர்சிட்டின் மற்றும் ஏ, பி, சி வைட்டமின்கள் நாவின் சுவை நரம்புகளை தூண்டி, நாவில் படிந்திருக்கும் மாவுப்பொருட்களை நீக்கி நாவிற்கு ருசியை தருவதுடன், செரிமான என்சைம்களை தூண்டுகின்றன. 10 நாரத்தை காய்களை அறுக்காமல் நீரில் போட்டு லேசாக வேகவைத்துக்கொள்ள வேண்டும். வெந்தபின் நீரை வடிகட்டி, நாரத்தையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, 100 கிராம் உப்பு சேர்த்து பிசறி, 2 நாட்கள் வைத்திருந்து அத்துடன் வறுத்து, பொடித்த பெருங்காயம், வெந்தயம், மிளகாய் வற்றல் கலவையை கலந்து, லேசாக மஞ்சள்பொடி சேர்த்து, சூடான நல்லெண்ணெயை ஊற்றி, ஊறுகாய் போல் பக்குவப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சுரம் வந்தபின் நாக்கசப்பு உள்ளவர்கள், நாவில் ருசி தோன்றாதவர்கள் இதனை ஊறுகாய் போல் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை சேர்த்துவரலாம். 10 நாரத்தை காய்களை முழுதாக நீரில் போட்டு லேசாக வேகவைத்து, நீரை நீக்கி, மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசறி, 2 அல்லது 3 நாட்கள் கழித்து நீர் நன்கு உலர்ந்ததும், வெயிலில் நன்கு சக்கையாக வறண்டுபோகும் வரை காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுரம், பசியின்மை, அஜீரணம், குமட்டல், வாந்தி போன்ற நிலைகளில் தோன்றும் நாக்கசப்பு மற்றும் ருசியின்மை நீங்க இதனை நாவில் போட்டு சப்பி வரலாம் அல்லது உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை குறைத்து பயன் படுத்தலாம்.





-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,


***
thanks டாக்டர்
***





"வாழ்க வளமுடன்"

தினமும் 1 முட்டை கொடுப்பதன் மூலம் கற்கும் திறனை அதிகரிக்கலாம் ?

*

நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது.
முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. நாம் சமைக்கும் முட்டையை பொருத்து கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும்.

முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது.

பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது.

காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது


முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது.


இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன

தினம் ஒரு முட்டை

தினமும் குழந்தைகளுக்கு ஒருமுட்டை கொடுப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கிறது. காலை உணவுடன் முட்டை வழங்குவதால் கவனிக்கும் தன்மை அதிகரிப்பதாகவும்,வாசிப்புத் திறன் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் எடையை சீராக வைத்திருக்கும். எடைக்குறைவான குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் சத்துக்கள் கூடுவதோடு உடல் எடை அதிகரிக்கும்.


மூளை வளர்ச்சி அதிகரிக்கும்

வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டல் கண்பார்வையை தெளிவாக்கும்.


குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய கார்ட்க்ராக்ட் பிரச்சினையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்புவளர்ச்சிக்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது.


வாரத்திற்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது 44 சதவிகிதம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.


இதயநோய் பாதிப்பு குறையும்

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.


இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே, இதயநோய் அபாயமும் இல்லை.


முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி. சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்கவேண்டாம்.

1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு. இது போக, 1986 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் தினமும் முட்டை சாப்பிட்டனர்.


அவர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது. அந்த மருத்துவர்களின் கொலஸ்ட்ரால் அளவு, கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவித்தது.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும்.


நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். மருத்துவர்களின் ஆலோசனையின்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்


***
thanks google
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "