...

"வாழ்க வளமுடன்"

11 பிப்ரவரி, 2011

வர்மக்கலை பற்றி தெரிந்துக் கொள்ளுவோம் :)


“தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்

சந்திப்பு:அசுரன்


ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு நிகழ்வைச் சொன்னார். அதாவது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராகப் பணி நியமனம் பெற்று குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவரிடம் மருத்துவம் பெறச்சென்ற நோயாளிகளில் பலரும் தம் நோய் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கும் நோக்கில், “பத்து வருசத்துக்கு முன்னுக்கு ஈரக்கொலைக்கிட்ட அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்”, “நாலு வருசத்துக்கு முன்னுக்கு முதுகில அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்” என்னும் விதமாகச் சொல்லியுள்ளனர்.

அவர் நமது நண்பரிடம் அது குறித்து விசாரித்துள்ளார், “என்னங்க ஒங்க ஊருல என்ன நோய்க்கி மருந்து வாங்க வந்தாலும் வர்மம், வர்மம்ணு சொல்லி மருந்து கேக்குறாங்க” என்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் சரளமாகப் புழங்கும் வர்மம், வர்மக்கலை போன்ற சொற்கள் ஒரு படித்த ஆயுர்வேத மருத்துவருக்கே புரியாத நிலையில், பாமர மக்களின் நிலை என்ன?. இந்தியன் போன்ற திரைப்படங்களிலும் கதைகளிலும்தான் அவர்கள் வர்மக்கலை பற்றி கேள்விப்பட்டிருக்க முடியும். அவர்களுக்கு வர்மக்கலை குறித்த விரிவான செய்திகளைத் தெரிவிக்க நாம் விரும்பியபோது, வர்ம மருத்துவத்தையே முதன்மையாக நடத்திவரும் மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் அவர்களை சந்தித்தோம்.

ஹோமியோபதியில் முதுநிலை (M.D.) பட்டம் பெற்ற, பரமபரை சித்த மருத்துவரான இவர் நாகர்கோவிலில் இருந்து அரைமணிநேர பயணத்தொலைவில் உள்ள தக்கலைக்கு அருகிலுள்ள மூலச்சல் என்ற கிராமத்தில் இராஜேந்திரா மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவருகிறார். இங்கு இவர் அனைத்து நோய்களுக்கும் சித்த மருந்துகளை மட்டுமே பயன்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடனான உரையாடலின் ஒருபகுதி இது.


ஹோமியோபதி மருத்துவ முறையில் முதுநிலை பட்டம் பெற்ற நீங்கள் சித்த மருத்துவத்தை மேற்கொள்வது ஏன்?

இயல்பாகவே சித்த மருத்துவம் தழைத்தோங்கிய ஒரு சூழலில் பிறந்தவன் நான். சிறிய வயதிலேயே தற்காப்புக்கலையில் ஆர்வம் கொண்ட நான் களரி கற்றேன். அப்போது அதன் ஒருபகுதியாக மருத்துவமும் இருந்ததால், அது மிக எளிதாக நோய்களைத் தீர்க்கும் மூலிகை மருத்துவமாகவும் இருந்ததால் என்னுடைய ஆர்வம் அதிகமானது. பல சித்த மருத்துவ ஆசான்மாரை நான் தேடிச்சென்று கற்றேன். மிக இள‹ வயதிலேயே, அதாவது 12ஆம் வகுப்பு படிக்கும்போதே எலும்புமுறிவு கட்டுதல், தீராதென கருதப்பட்ட வாத நோய்களுக்கு மருந்தளித்தல் என நான் கற்ற மருத்துவத்தை பயன்படுத்தினேன். இவ்வாறாக சித்த மருத்துவம் என்பது என் இரத்தத்தோடும் சதையோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துவிட்டதால் நான் எந்தவொரு நோய்க்கு மருந்து தேடினாலும் அது இயல்பாகவே சித்த மருந்தாகவே அமைந்துவிடுகிறது.


சித்த மருத்துவம் பயின்ற நீங்கள் எதற்காக ஹோமியோபதி படித்தீர்கள்?

கல்லூரியில் இளநிலை வேதியியல் பயின்ற நான் அதன்பின்னர் ஹோமியோபதியில் பட்டயம் பெற்றேன். பின்னர் பெங்களூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிலும் சேர்ந்தேன். அது நான் மருத்துவத்தில் வளர்ந்துவரும் நேரமாகவும், நான் மருத்துவம் செய்தது ஆங்கில மருத்துவத்தால் இயலாதென கைவிடப்பட்ட நோய்களாகவும் இருந்ததால் நான் மருத்துவத்தைக் கைவிடாமல் தொடர்வதே சிறந்தது என எனது பேராசிரியர்கள் அறிவுறுத்தியதால் அப்படிப்பைக் கைவிட்டேன்.

முன்னரே அறிவியல்பூர்வமானதாக, மிக வளர்ந்ததாக இருந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும் நவீன மருத்துவ அறிவும் பெற்றிருந்தால் அது இரண்டையும் இன்றைய சூழலில் பொருத்திப் பார்க்க உதவும் என்றதாலேயே நான் நவீன மருத்துவம் என்று கருதப்படும் மருத்துவமுறைகளையும் கற்றேன்; கற்க விரும்புகிறேன்.


ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட எத்தகைய நோய்களுக்கு நீங்கள் மருந்தளித்துள்ளீர்கள்?

பெருமூளைச்சுருக்கம் (Cerebral atrophy), சிறுமூளைச் சுருக்கம் (Cerebeller atrophy), பக்கவாதம் (Hemiplegia), அரைகீழ்வாதம் (Paraplegia), கழுத்தெலும்பு உடைவால் ஏற்படும் Quatriplegia, முதுகெலும்பில் ஏற்படும் Traumatic Paraplegia, முதுகெலும்பு தட்டில் ஏற்படும் புறந்தள்ளல் (Disc Prolapse), வீக்கம் (Bulging), எலும்பு தேய்வுகள் (Spondylosis), குழந்தைகளின் எலும்பு தானாகவே சிதைவது (Osteomimylitis), குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் எலும்பு முறிவு, முதுகெலும்பில் ஏற்படும் காசநோய், நரம்புநோய்கள் என ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல கடுமையான நோய்களை நாங்கள் குணப்படுத்தினோம். இதனால், நமது மருத்துவம் சிறந்தது, இதில் எல்லா நோய்களுக்கும் மருந்து இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நமது மருத்துவத்தில் உலகின் அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது. நவீன மருத்துவ அறிவும் சித்த மருந்துகளும் சேர்ந்தால் அளவிடற்கரிய சாதனைகளைச் செய்யமுடியும். குறிப்பாக, மிக சிக்கலானதாகக் கருதப்படும் Degenerative disease எனப்படும் நோய்களுக்கு நமது வர்ம மருத்துவத்தில் சிறந்த மூலிகை மருந்துகள் உள்ளன.


திரைப்படங்களில் பார்க்கும்போது வர்மக்கலை என்பது மர்மமான முறையில் எதிரிகளைத் தீர்த்துக்கட்ட பயன்படும் கொலைகருவி என்றே தோன்றுகிறது. வர்மக்கலை என்பது அதுதானா?

வர்மக்கலை என்பது முழுக்க முழுக்க தற்காப்பும் மருத்துவமும் சேர்ந்த கலையே. பழங்காலத்தில் அது மருத்துவத்திற்கும் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்பட்டதால் ஆபத்தான கலையாக கருதப்படுகிறது. அடிப்படையில் மனித உடலின் மிகமுக்கியமான, ஆபத்தான இடங்கள் வர்மத்தில் குறிக்கப்படுவதால் வர்மக்கலையைக் கற்ற யாரும் அந்த இடங்களைத் தாக்கி செயலிழக்கச்செய்ய, பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை உணர்ந்ததால் பழங்காலத்தில் ஆசான்மார் கட்டுப்பாடுடைய சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே, இதன் மருத்துவ பகுதியும்கூட முழுமையாக மக்களை எட்டவில்லை.

இந்த வர்ம மருத்துவப் பகுதியில் தீர்க்க முடியாத, விபத்துகளால் ஏற்பட்ட பல்வேறு நோய்கள், பின்விளைவுகளான (Post complications) காக்கைவலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, காயவாதம் (Traumatic arthritis), பேசமுடியாமை (Disarchria) போன்றவை வராமலேயே தடுக்கக்கூடிய எண்ணற்ற மருந்துகள் உள்ளன.

இதன் மற்றொரு பகுதியான தற்காப்புப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தைத் தாக்கி மயக்கமுறச் செய்தல், உறுப்புகளைச் செயலிழக்கச் செய்தல், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகளாக 64 இடங்கள் தற்காப்பிற்காக குறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இடங்களில் தாக்கப்பட்டோரை எழுப்ப அடங்கல்கள் என்ற முக்கியமான 108 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தைப் பொறுத்தளவில் ஏராளமானோருக்கு சாதாரணமாகத் தெரிந்த விசயம் இது.


வர்மக்கலை எங்கே தோன்றியிருக்கவேண்டும்?

வடஇந்தியாவைச் சேர்ந்த சுஸ்ருதர், வார்படர், சரகர் போன்றோரின் மருத்துவ நூல்களிலும் வர்மக்கலை பற்றிய குறிப்புகள் உள்ளன. எனினும் அவற்றில் குமரி மாவட்ட ஏட்டுச்சுவடிகளில் காணப்படுவதுபோல ஆபத்தான புள்ளிகள், அடங்கல்கள், இளக்குமுறை, மருத்துவம், தடவுமுறை என முழுமையான செய்திகள் இல்லை.

மேலும் தென்தமிழகத்தில் உள்ள பார்த்திபகேசரம் என்ற இடத்தில் வர்ம மருத்துவத்தையும், தற்காப்புக் கலையையும் கற்றுத் தருவதற்கு என தனி பல்கலைக்கழகமே செயல்பட்டு வந்துள்ளது. இங்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்றுள்ளனர். இங்கு பயின்றோரை மன்னர்கள் மெய்க்காப்பாளர்களாக வைத்துள்ளனர்.

பழங்காலத்தில் மனித வள௱ச்சிப்போக்கில் உருவான இக்கலை பல ஆசான்களால் செம்மைப்படுத்தப்பட்டு, சித்தர்களால் செவிவழிச்செய்திகளாகப் பாதுகாக்கப்பட்டு, பிற்காலத்தில் மரம் ஏறுதலைத் தொழிலாகக் கொண்டவர்களால் பயன்படுத்தப்பட்டது. அவர்களிடமே இதுதொடர்பான சுவடிகள் ஏராளமாக உள்ளன. இன்றும் இங்கு ஆசான் என்று அழைக்கப்படும் வர்ம வல்லுநர்களால் குரு-சீடர் முறைப்படி வர்மக்கலை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

ஆக, இப்போதிருக்கும் ஆதாரங்களின்படி வர்மக்கலைக்கு மனித இனம் முதன்முதலாகத் தோன்றியதாகக் கருதப்படும் குமரிக்கண்டம், மற்றும் அதன் இன்றைய எச்சமுனையான குமரி மாவட்டமே தாயகமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.


சித்த மருத்துவ முறையின் எதிர்மறை அம்சங்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

* சித்த மருத்துவ அறிவியலானது பரவலாக புரிந்துகொள்ளப்படவில்லை, பரப்பப்படவில்லை. மாறாக மறைக்கப்பட்டது. ஆனால் ஆங்கில மருத்துவமானது எளிமையாக பலருக்கும் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் சித்த மருத்துவ மாணவர்களுக்கே தம் மருத்துவம் மீது முழுமையான நம்பிக்கை இல்லை.

* சித்த மருத்துவர்கள் தங்கள் சக மருத்துவர்களை சமமாக மதிக்காத போக்கு

* பல மருத்துவர்கள் தமக்கு அனுபவரீதியாக நன்கு தெரிந்த ஓரிரு மருந்துகளைத் தவிர தமது துறைதொடர்பாக விரிவாக அறிந்துகொள்ள விரும்பாமல் இருப்பது

* சித்த மருத்துவ நூல்கள் முழுமையாக தொகுக்கப்பட்டு சீர்செய்யப்படாமல் இருப்பது

* மருத்துவம் கற்றுக்கொடுக்கும் ஆசான்மாரும், பேராசிரியர்களும் மாணவர்களின் ஆய்வுக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்காதது

* வளர்ச்சியுற்ற நவீன மருத்துவ அறிவியலோடு முழுமையாக ஒப்புமைப்படுத்தப்படாத கல்வி, முறைப்படுத்தப்படாத மிகப்பழைய பாடத்திட்டம்

என பலவற்றை நாம் குறிப்பிடலாம். இத்தகைய தடைகள் அனைத்தையும் தாண்டி நமது மருத்துவம் வள௱ந்துவருகிறது என்பதுதான் உண்மை. நமது தங்க பற்பம், வெள்ளி பற்பம் முதலானவை சிறுநீரகத்தை கேடடையச்செய்துவிடும் என்று ஆங்கில மருத்துவர்களும், விஞ்ஞான மேதைகளும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், இன்று அயல்நாடுகளில் Ash method என்ற முறையில் தங்கமும், வெள்ளியும் பற்பமாக்கப்பட்டு ஆங்கில மருந்துக் கடைகளிலேயே விற்பனைக்கு வந்துள்ளன. அங்குள்ள ஆங்கில மருத்துவர்களும் இவற்றைப் பரிந்துரைத்து வருகிறார்கள்.

எனவே, தங்க பற்பம் போன்ற உலோகக்கலவை மருந்துகளை சரியாகச்செய்து முடித்த பின்னர் அதன் அளவுகளை மிகச் சரியாக நிர்ணயித்து மருத்துவம் செய்ய வேண்டுவது நம் மருத்துவர்களின் முக்கிய கடமையாகும்.

நமது சித்த மருத்துவம் என்பது முழு வளர்ச்சியடைந்த மருத்துவ அறிவியல். இனி புதிதாகவரும் நோய்களுக்கான மருந்துகளும் இதில் உள்ளன. இன்றைய தேவை ஆய்வு நோக்கில், அறிவியலின் வெளிச்சத்தில் சித்த மருந்துகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் உட்கொள்ளும் அளவுகள் தௌ¤வாக்கப்பட்டு எல்லோருக்கும் பயன்படும்வண்ணம் செய்யப்படவேண்டும்.


வர்ம மருத்துவ முறைப்படியான எலும்பு முறிவு சிகிச்சை பற்றி...

சித்த - வர்ம மருத்துவத்தில் எலும்பு முறிவு என்பது மிகவும் சாதாரண மருத்துவம். எந்த வகையான உள் மருந்துகளும் அளிக்கப்படாமல், மூலிகை, வெளிப்பிரயோக மருந்துகள் மூலம், எவ்விதத் தழும்புகளோ அடையாளங்களோ இல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் எலும்புமுறிவுகளை குணப்படுத்த இயலும். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர்களில் 80% பேருக்கு எலும்பு முறிவு மருத்துவம் என்பது மிகவும் சாதாரண விசயம். குமரியில் இதற்கு அக மருந்துகளே அளிக்கப்படுவதில்லை.

மிக எளிய முறையில் அடங்கல்களைத் தட்டி எழுப்புவதன் மூலம் ஆபத்து உயிர்காப்பு மருத்துவத்தை மேற்கொண்டுவந்தவர்கள் சித்த மருத்துவர்கள். உயிர்காப்பு மருத்துவத்திற்கு கண்டூசம் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. எலும்பு முறிவு, மூட்டு விலகல்களை சரிசெய்வது போன்றவை மிகவும் சாதாரணமாக செய்யப்பட்டுவந்தன. எங்கள் மருத்துவமனையிலேயே இதுவரை இத்தகைய ஆயிரக்கணக்கான நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்தும் குணமாகாதவை, பல மாதங்களாகியும் சரியாகாதவை போன்ற எலும்பு முறிவுகளும் வர்ம முறைப்படி எளிதில் குணமாக்கப்படுகின்றன. இதில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விசயம் என்னவென்றால் எத்தகைய எலும்பு முறிவாக இருந்தாலும், அறுவைச் சிகிச்சை இன்றி குறைந்த செலவில் வர்ம முறைப்படி குணப்படுத்தலாம்.


இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.


வர்மக்கலைக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?

வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விசயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தௌ¤வாக விளக்கப்பட்டுள்ளன. சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும். குமரி மாவட்ட சித்த மருத்துவர்களில் மிகப் பெரும்பாலானோருக்கு வர்மக்கலை என்பதும் இயல்பாகவே கைவந்த கலையே.

சித்த மருத்துவம் மருந்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது. அதில், வேதி பொருட்கள், உலோகங்கள் முதலானவை மிகச்சிறந்த மருந்துகளாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை, குமரி மாவட்டத்திலுள்ள வர்மச் சுவடிகளில் பெரும்பாலும் மூலிகை மருந்துகளே குறிப்பிடப்பட்டுள்ளன, பயன்படுத்தப்பட்டுவருகின்றன.


நீங்கள் சொல்லும் தடவு முறைக்கும் ஆங்கில மருத்துவ அடிப்படையிலான பிசியோதெரபிக்கும் என்ன வேறுபாடு?

நமது உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஏற்ப உடல் உறுப்புகளை அசைத்து சீர்செய்வது மேற்கத்திய மருத்துவ முறையின் தற்கால வள௱ச்சியில் ஒன்றாகும். ஆனால், நமது வர்ம மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகாலமாகவே பல்வேறுவிதமான தடவு முறைகள், உடல் இயக்க முறைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. வெவ்வேறு நோய்களுக்கான தடவு முறைகள், மருந்துகள், தூண்டப்படவேண்டிய ஆற்றல் புள்ளிகள் போன்றவை வர்ம மருத்துவச் சுவடிகளில் உள்ளன, அவற்றை நாங்கள் அனுபவரீதியாகப் பயன்படுத்திவருகிறோம்.


வர்மக்கலை இனியும் மர்மமாகத்தான் இருக்க வேண்டுமா?

தவறானவர்களால் பயன்படுத்தப்பட்டுவிடும் என்ற நேர்மையான அச்சத்தால் இனியும் இதனை மூடி மறைத்தால் நமக்கு மிக எளிதாக, மலிவாகக் கிடைக்கவிருக்கிற மருத்துவ பயனையும் இழந்துவிடுவோமோ என்று தோன்றுகிறது. இன்னும் நான்கு பேருக்கு தெரிந்துவிட்டால் நமக்கு தொழில் நடக்காதோ என்பது போன்ற எதிர்மறையான அணுகுமுறை, அச்சம் இனியும் தேவையில்லை. இம்மருத்துவம் வெளிப்படுத்தப்பட்டால் பல்லாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்படும் என்ற உயர் மனிதநேய சிந்தனையே இப்போது நமக்குத் தேவை. குறிப்பாக, இதன்மூலம் ஏழை மக்களுக்கு நாம் பெருந்தொண்டு செய்ய முடியும்.


இத்துறையின் வள௱ச்சிக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

குடிமக்கள் நலனே முக்கியம் என்று எண்ணம் அரசுக்கு வரவேண்டும். நம் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு என்று தனி பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படாதது மிகப்பெரிய குறை. அதுபோல நவீன அறிவியல் வெளிச்சத்தில் சித்த மருந்துகளை ஆய்வு செய்வதற்கென்று தனிச்சிறப்பான ஆய்வு மையங்கள் உருவாக்கப்படவேண்டும்.

சித்த மருத்துவ பாடத்திட்டங்கள் மேலும் சீராக்கப்பட்டு நம் தாய் மருத்துவத்தின் சிறப்புகளும் பயன்களும் சாதாரண மக்கள் முதல் படித்த மேதைகள் வரை தௌ¤வாக உணரும்வண்ணம் அரசு நடைமுறைப்படுத்தவேண்டும்.

அயல் நாடுகளில் நம் மருத்துவத்துறைகள் வளர்க்கப்பட்டு, இதன் பெருமைகள் பறைசாற்றப்படவேண்டும். நம் மருத்துவத்தின் உயர்ந்த மருந்துகள் சித்தர்களால் எத்தனை சிறப்பாக கையாளப்பட்டனவோ அத்தனை சிறப்போடு ஆய்வு செய்து அதனால் உலகின் பல பகுதி மக்களும் உணர்ந்துகொள்ள௩ செய்வது அரசு மற்றும் துறை பயிலும் அறிஞர்கன் கடமையாக இருக்கவேண்டும்.

தமிழகத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்டு, ஜெர்மனி போன்ற நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பல இலட்சக்கணக்கான சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள், நூல்கள் போன்றவற்றை தமிழகம் கொண்டுவருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பல மாணவர்கள் என்னிடம் குருகுலம் போல உடனே தங்கியிருந்து மருத்துவம் கற்றுள்ளார்கள். தற்போது எங்களது இராஜேந்திரா சமுதாயக் கல்லூரியின் மூலம் பல்கலைக்கழக சான்றிதழுடன் வர்ம தடவுமுறை, மூலிகை மருத்துவம் போன்றவை குறித்த பட்டயப் படிப்புகளை நடத்தி வருகிறோம். மாதந்தோறும் சித்த வைத்தியர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம்.


(இந்நேர்காணல் தமிழக சட்டக்கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டுவரும் விழிப்புணர்வு மாத இதழில் வெளியானது.)


மருத்துவர் த. இராஜேந்திரனுடன் தொடர்பு கொள்ள...

செல்பேசி: 94431 65034

தொலைபேசி: 04651 250343, 252243


***
thanks த.இராஜேந்திரன்
***


"வாழ்க வளமுடன்"

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்


நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்...

‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.

இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...

மற்றபடி உடல்நிலை சரியில்லை என்ற சீரியஸான ஒரு நிலையில், இந்த வைத்தியத்தை நாமே செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...

சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்!








***
thanks kumutham
***

"வாழ்க வளமுடன்"

சூரியனின் முழுப் முப்பரிமாண தோற்றம்: அதிசய படங்கள் & வீடியோ


மனித வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் 360 பாகை அதாவது முழுப் முப்பரிமாண தோற்றத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவினால் கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்டீரியோ எனப்படும் இரட்டை விண்வெளி ஓடங்கள் சூரியனுக்கு நேர் எதிராகப் பயணித்து இம் முப்பரிமாண படங்களை பதிவு செய்துள்ளன.




இம் முப்பரிமாண தோற்றமானது விஞ்ஞானிகளுக்கு சூரியனைப் பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

*
வீடியோ பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=qLB5ma2Yz1I&feature=player_embedded


***
நன்றி வீரகேசரி
***


"வாழ்க வளமுடன்"

வயிற்றுக்குள் டிராபிக் ஜாம்..! மூல நோய் ஏன்?



மூல நோய் என்று எதனை சொல்கிறீர்கள்....?

நமது உடம்பில் உள்ள கீழ் குடலிலிருந்து ஆசன வாய் வரையிலும் உள்ள குடலின் ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ வீக்கம் ஏற்பட்டு ஆசன வாயில் எரிச்சல், அரிப்பு, நமச்சல் ஆகிய அறிகுறி தென்படும். அடுத்து மலமானது இறுகிப்போய்.... சாதாரணமாக வெளி யேற முடியாமல் தடுக்கும். அச்சமயத்தில் அதனை முக்கி வெளியேற்ற முயலும் போது மலத்துடன் குருதியும் வெளிவரும். இதுவே மூலநோய் என்று சித்த மருத்துவத்தில் விளக்கப்படுகிறது.

*

யாருக்கு வந்தாலும் ஒரே மாதிரிதான் மூல பாதிப்பு இருக்குமா?

யூகி முனிவர் சொல்லியிருப்பதை பார்த்தால் 21 வகையான மூல பாதிப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றில் நீர்முளை, செண்டு முளை, எருவாய் முளை, சிறுமுளை, வறன் முளை, குருதி முளை, சீழ்முளை, ஆதி முளை, தமரகமுளை, மழி முளை, கழல் முளை, ஐய முளை, முக்குற்றமுளை, வினை முளை, மேக முளை, குதமுளை என்பவை குறிப்பிட்ட சில மூல வகைகள் ஆகும். இந்த பெயர்கள் எல்லாம் புரியாதது போல இருக்கும். ஆனால் நமது சித்த பெருமக்கள் ஒருநோயின் பல அறிகுறிகளை வைத்து அவற்றை எவ்வாறெல்லாம் வகைப்படுத்தி வைத்துள்ளனர் என்பதை விளக்கவே இதனை குறிப்பிடுகிறேன்.

*

மூல நோயின் அறிகுறி எவ்வாறு இருக்கும்?

மூலநோய் உடையவர்களுக்கு மலம் இறுகி வெளியேறாமை, காற்று வெளியேறாமை, வயிறு இரைதல், அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு நொந்து மலம் கழித்தல், பசியின்மை, உண்ட உணவு செரியாமை, புளிச்ச ஏப்பம், பானமாக ஏதாவது அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கின்ற விருப்பம், உடல் மெலிந்து கொண்டே வருதல், போன்றவை எல்லாம் மூல நோயின் அறிகுறிகளாகும்.

*

யாருக்கெல்லாம் மூலநோய் வரலாம்?

கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிக அளவில் மிளகு, மிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு எல்லாம் மூல பாதிப்பானது வருவதற்கு வாய்ப்புள்ளது. இது தவிர எப்பொழுதும் உட்கார்ந்த நிலையிலேயே பணிபுரிபவர்களுக்கும், உடல் பருமனானவர்களுக்கும், உஷ்ணமான உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வரலாம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூல நோய் ஏற்படலாம். ஆனால் கர்ப்பக் கால மூல நோயானது பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலும் எந்த தொந்தரவும் இல்லாமல் தானாகவே குணமாகிவிடலாம். சில பெண் களுக்கு மட்டும் இதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.

*

காரம் அதிகம் சாப்பிட்டால் மூலநோய் வருமா?

நம் சித்தர்கள் உணவுப் பழக்கத்தின் காரணமாக என்னென்ன உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குறித்து வைத்துள்ளனர். அதன்படி பார்த்தால் - உடம்பில் சூடு அதிகம் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் தொடர்ந்து கார உணவினை சாப்பிடுவதுடன், எந்த உடற் பயிற்சியும் செய்யாமல், ஓரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு எல்லாம் மூலநோய் வர நிறைய வாய்ப்புள்ளது.

*

மலச்சிக்கல் இருந்தால் மூல நோய் வந்து விடுமா.... என்ன?

உடம்பிற்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கமற்றவர்கள், கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவினை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள், நார்சத்து உள்ள காய்கள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள், உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அற்றவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். இதனால் மலக்குடல் சுருங்கி அதில் வீக்கம் ஏற்பட்டு மலம் இறுகி அதனால் புண், அரிப்பு ஏற்படும். மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச்சிக்கல்தான்.

*

தண்ணீர் அதிகம் குடிக்காதவர்களுக்கு மூல நோய் வரும் என்பது உண்மையா?

போதுமான அளவிற்கு தண்ணீர் குடிக்காதவர்களுக்கு மூலநோய் வரும் என்று கட்டாயமாக சொல்ல முடியாது. ஆனால் போதுமான அளவிற்கு தண்ணீர் குடிக்காததுடன், அவர்கள் வாதமும், பித்தமும் கலந்த உடம்புக்காரர்களாக இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக மூல நோய் வருவதை எவராலும் தடுக்க இயலாது.

*

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு மூலநோய் வருவது எதனால்?

பெண்கள் கருத்தரித்துள்ளபோது வயிறு பெருகப் பெருக கீழ்க்குடல் அழுத்தப்படும். அப்போது மலக்குடல் இறுகும். இதனால் மூலநோய் வருவதுண்டு. அந்த சமயம் உணவில் கீரை வகைகள், காய்கறிகள், பழவகைகள் சேர்த்து கொண்டால் இதில் இருந்து விடுபடலாம்.

*

உட்கார்ந்த நிலையில் வெப்பமான இடத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் இந்த பாதிப்பு அதிகம் வருவது எதனால்?

உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு அசுத்த காற்று வெளியேறாமல் தடைபடுவதால் மூலாதாரத்தில் அணல் எழும்பி மலக்கட்டு உண்டாகும். இவர்களுக்கு மூல நோய் வர வாய்ப்புண்டு. வெப்பமான இடத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் உடல் சூட்டை குறைக்கும் பழங்கள், காய்கறிகள் இவற்றை உண்பதால் சூடு தணிந்து மூல நோய் வராமல் உடலை பார்த்து கொள்ளலாம் அப்படி அல்லாமல் உடல் உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், சிக்கன் மற்றும் பாஸ்ட்புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டு விடும்.

*

மூலநோய் வராமல் இருக்க என்ன ஆலோசனை தருகிறீர்கள், டாக்டர்?

நார்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், குறிப்பாக வெண்டைக்காய், அவரைக்காய், வாழைப்பூ, வாழைத் தண்டு, கீரை வகைகள், போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்சத்து சேர்ந்தாலே மலச்சிக்கல் இல்லாமல் போகும். மலச்சிக்கல் இல்லையென்றால் மூல நோய் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. எண்ணெயில் பொரித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காரவகை உணவுகள், குறிப்பாக உணவு தயாரிக்கின்ற போது மிளகாயினை குறைவாகத் தான் சேர்க்க வேண்டும். அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீராவது தினம் குடிக்க வேண்டும். இது மலச்சிக்கலை சேர விடாமல் தடுக்கும். பித்தம் கலந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். ஒரு மனிதனின் உடலில் பித்தநாடி அதிக அளவில் காணப்பட்டால் அவர்களுக்கு மூல பாதிப்பு வர அதிகம் வாய்ப்புள்ளது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும். கருணைகிழங்கிற்கு மூல நோயின் பாதிப்பினை குறைக்கும் ஆற்றல் உண்டு. எனவே கருணைக்கிழங்கினை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

*

மூல நோய்க்கு சித்த மருத்துவத்தில் என்ன சிகிச்சை?

இந்நோயின் மருத்துவத்தில் மூலக்கனலை தன்னிலை படுத்தக்கூடிய மருந்துகளை கொடுக்க வேண்டும். மலச்சிக்கலை போக்கி, வலி, எரிச்சல் முதலியவைகளை போக்குவதற்கான வெளிப்பிரயோகம் மற்றும் உள்ளுக்கு சாப்பிட மருந்துகளை கொடுக்க வேண்டும். சித்த வைத்திய முறையில் கருணைகிழங்கு இலேகியம், உடற்சூட்டை குறைக்கக் கூடிய மருந்துகளும். வெளி மூலத்தில் உள்ள கருப்பு முடிச்சு போன்ற கட்டியை கரைக்கக் கூடிய தைலம், உள் மருந்து கொடுத்து குணப்படுத்தப்படுகிறது.


***
thanks Dr. ஜே. ஜான்சன் BSMS
***


"வாழ்க வளமுடன்"


யோகா, உடற்பயிற்சி வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் !



உடற்பயிற்சி (Exercise) மற்றும் யோகா இரண்டுமே உடல் நலத்திற்காக அமைந்தது என்றாலும் இரண்டிற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது. முக்கிய வேறுபாடுகளை கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


உடற்பயிற்சி (Exercise)யோகா (Yoga) உடல் சக்தி அதிக அளவு விரயமாகும் உடல் சக்தி விரயம் மிக மிக குறைவு. சக்தியை சேமிக்கும் அதிக சக்தி விரயத்தால் அதிக உணவு சக்தி உடலுக்கு தேவை சாதாரண உணவு போதுமானது செய்யும் போது தளர்ச்சியை கொடுக்கும் எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும் அதிக நேரம் செய்ய வேண்டும் குறைந்தது 5 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை போதுமானது.


அதிக நேரம் செய்தாலும் சில பயிற்சிகளை செய்ய அதற்கான கருவிகள் , அதற்கான இடம் தேவைப்படும் பிரத்யேகமாக எந்த கருவியும் தேவையில்லை அதிகமாக வெளித்தசையை மட்டும் பலப்படுத்தும் உள் உறுப்புகளையும் பலப்படுத்தும் உடல் கடினத்தன்மை பெறும் உடல் வளையும் தன்மையும் உறுதியும் பெறும் செல்கள் வளர்வதை கூட்டி வயதை சீக்கிரம் அதிகமாக காட்டும் இளமையாக காட்டும் முரட்டுத்தன்மை அதிகமாகி அது பழகிவிட்டதால் நாளாக நாளாக குறையத்துவங்கும்.


போட்டி குணம் பெருகும் உள்ளம் அமைதியாகி எந்நிலையையும் ஏற்கும் பக்குவம் பெறும். சாந்த குணம் வளரும் அதிக வியர்வை வெளியாகும். வியர்வை வராது. அதனால் குளித்து விட்டும் செய்யலாம். உடல் உள் நோய்களை தடுக்கும் சக்தி அதிகமாக கிடையாது யோகா தேவையான எல்லா ஹார்மோன்களையும் தேவைக்கேற்ப சுரக்க வைப்பதால்
நோய்தடுப்பு மருந்தாக விளங்குகிறது இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் இரத்த அழுத்தத்தை சமச்சீராக்கும் கடினமாக செய்ய வேண்டும் எளிதாக செய்தே அதிக பலன் பெறலாம் தொடர்ந்து செய்ய வேண்டும். இல்லையேல் கொழுப்பு அதிகரிக்கும்.


ஆண்களுக்கு தொந்தி வரும் எந்த கெடுதலும் இல்லை வேறு கருவிகள் தேவைப்படுவதால் பணச்செலவு ஆகும் எவ்வாறு செய்வது என்பதை அறிந்து விட்டால் எந்த செலவும் இல்லை உடல் திறன் மட்டும் பெருகும் உடல் திறனுடன் அறிவுத்திறன் மற்றும் ஞாபக சத்தி பெருகும் மனதிற்கான பயிற்சி கிடையாது மனதிற்கான பயிற்சி உண்டு வெளிநாட்டு வரவு இந்திய ஆதிகால பயிற்சி

***

ஒற்றுமைகள்:


வேறுபாடுகளை பார்த்தது போல சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்


இரண்டு பயிற்சிகளுமே உடல் நலத்திற்கானது சில குறிப்பிட்ட பயிற்சிகளை தக்க ஆசிரியரிடம் கற்காமல் செய்வது ஆபத்தானது

வெற்று வயிற்றுடன் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடன் செய்யக்கூடாது. அல்லது 4 மணி நேரம் கழித்தே செய்ய வேண்டும்

காலையும் மாலையும் இப்பயிற்சிகள் செய்ய உகந்த நேரம்

பயிற்சி செய்யும் போது எளிமையான உடை அவசியம்

நல்ல காற்றோட்டமான இடம் நல்லது

கர்ப்பிணி தாய்மார்கள் 3 மாதத்திற்கு பிறகு இப்பயிற்சிகளை செய்யக்கூடாது.

அல்லது மிகமிக எளிமையானவற்றை மட்டும் மருத்துவர் ஆலோசனை படி செய்யவேண்டும்


***
thanks வினோத்

***


"வாழ்க வளமுடன்"


யோகாசனத்தினால் நேக்கு தீர்வும் பலன்களும் :)


சிறுநீர் கல் அடைப்பு தொந்தரவு நீங்க:


தரை விரிப்பின் மீது அமர்ந்து கொள்ளுங்கள். பிறகு இரு கைகளையும் முன்புற மாக நீட்டி, இரண்டு கால்களையும் பின்புறம் மடித்திடுங்கள்.

இப்போது வலது காலின் குதிங்கால் வலது தொடைச் சந்திப்பிலும்,
இடது காலின் குதிங்கால் இடது தொடைச் சந்திப்பிலும் ஒட்டும்படியாக மடித்துக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் இரு உள்ளங்கால்களும் எதிரெதிராக அமைந்திருப்பதைக் காணலாம்.

பிறகு இடது கையால் உங்களுடைய இடது உள்ளங்காலையும்,
வலது கையால் வலது உள்ளங்காலையும் நன்றாக அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தலையை நன்கு குனிந்து கால்களின் முன்னால் தரையில் தலையை வைக்கப் பழகுங்கள். ஆரம்பத்தில் இப்படி குனிவது சிரமம்தான்.

ஆனாலும் பிற ஆசனங்களை பழகப் பழக தலையும் நன்கு குனிய வரும்.
பின்பு எளிதாக தலையை உள்ளங்கால்கள் மீதே வைக்கப் பழகி விட முடியும். இந்த ஆசனத்தை செய்யும் போது பின்புறம் மேலே எழும்பி வரக்கூடும். அதை மேலே தூக்காமல் இருககப் பழக வேண்டும். ஆசனம் செய்யும் போது சாதாரண மூச்சே போதுமானது. அதிகம் இழுத்து மூச்சு விட வேண்டாம்.

பலன்கள்

இந்த ஆசனம் மூலம் சிறுநீரகத்தின் கோளாறு எதுவாக இருந்தாலும் சரியாகி விடும். அதன் உள்ளே உள்ள சுத்திகரிப்பு சக்தி கூடி வரும்.
இரத்த ஓட்டம் சீராகி வரும். எந்தக் கடுமையான இருமலும் இந்த ஆசனத்தால் போய் விடும். அதுவே ஆசனத்தின் சிறப்பு.

சிலருக்கு மூத்திரக் கடுப்பு, பிருஷ்ட பாகத்தில் எரிச்சல் போன்ற தொல்லைகள் இருக்கலாம். அவர்கள் ஒழுங்காக இந்த ஆசனத்தை செய்து வந்தால் வலியும், எரிச்சலும் காணாமல் போய் விடும். சிறுநீரகத்தில் கல் அடைப்பு இடைஞ்சலும் நீங்கும்.

*

இந்த ஆசனம் பெண்களுக்கு அதிக பலன்களை தரும். முக்கியமாக மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு வரும் வலி, பிற கோளாறுகள் இதனால் மறைந்து விடும். கர்ப்பப்பை நல்ல திடகாத்திரமாக அமையும். பிரசவம் எளிதாக இருக்கும்.


ஆபரேஷன் கருவிகளை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.
குழந்தையும் பலமுடன் பிறக்கும். கர்ப்பிணி பெண்கள் முதல் ஒரு மாதம் மட்டும் இந்த ஆசனத்தை செய்யலாம். இரண்டாம் மாதத்தில் இருந்து கண்டிப்பாக செய்யக் கூடாது.


***

சில யோசனைகள்:

குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டு இருக்க வேண்டும்.
காலையில் மனம் அமைதியாக இருக்கிறது. மாலை வேளைகளில் பல வேலைகள் காரணமாக மனம் அல்லல் படுவதால் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என நினைக்கின்றனர்.

யோகாசிரமங்களில் காலை - மாலை இரு வேளைகளும் பயிற்சி நடைபெறுகிறது. மாலையில் காலையை விட அதிகமாக உடல் வளைந்து கொடுக்கிறது. காரணம் நாம் பல வேலைகளைச் செய்வதால். மாலையில் ஆசனங்களைச் செய்வது காலையை விட இலகுவாக இருக்கிறது.

உடற்பயிற்சி போல் வேகமாக ஆசனங்களைச் செய்யக் கூடாது.
எவ்வளவு மெதுவாக மனதை ஒரு நிலைப்படுத்தி மூச்சை இழுத்து விட்டு பயிற்சியில் ஈடுபடுகிறோமோ அது அந்த அளவு அதிக பலனைத் தருகிறது.

மனதை ஒரு நிலைப்படுத்த முடியாதவர்கள், மெடிடேசன் இசையொன்றை கேட்டவாறு யோகாசனப் பயிற்சியில் ஈடுபடலாம்.

பலர் உடற் பயிற்சிகளைச் செய்யும் போது தண்ணீர் குடிப்பதுண்டு.
என்னைப் பொறுத்த வரை அது தவறு. யோகாசனம் செய்யும் போது கட்டாயமாக எதுவும் பருகக் கூடாது.

ஆசனங்களைத் தொடங்க 15 - 20 நிடத்துக்கு முன் அல்லது முடிந்து 15 - 20 நிமிடத்துக்கு பின் தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை பருகலாம்.

இப்படியான நேரங்களில் தாகம் ஏற்படுமானால் யோகாசனங்களை குறைத்து செய்வதே நல்லது. கொஞ்சம் காலத்தில் உடலும் - மனமும் பழகிவிடும்.
அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம்.

வேக உலகத்தில் காலையில் சூரியநமஸ்காரம் செய்வது இலகுவானது.
அடுத்த ஆசனங்களை காலையில் முடியாவிடில் மாலையில் செய்யலாம்

*

யோகாசன குரு சுத்தரம் அவர்களின்
புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பாருங்கள்.
அவை பலருக்கு பயன் தரும்.

http://www.girinathyoga.com/
http://www.girinathyoga.com/books.asp


***
நன்றி: தினகரன்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "