...
"வாழ்க வளமுடன்"
22 ஆகஸ்ட், 2011
மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்?
மருத்துவர்களுக்கு நம்மிடையே எப்போதும் தனி மதிப்பு உண்டு.உயிர் காக்கும் கடவுள் அவர்கள்.பேராசையும் சுயநலமும் பெருகி விட்ட இன்றைய சூழலில் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பணம் சம்பாதிக்க என்னென்ன வித்தைகளை கையாளுகிறார்கள்? பத்ம பூஷண் விருது பெற்ற பேராசிரிய புகழ்பெற்றர் பி.எம்.ஹெக்டேவின் பகிர்வை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.
மருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன் சாட் செய்து தான் அறிந்து கொண்ட்தை தருகிறார்.
1. பரிசோதனைகளில் 40-60 சதவீத கமிஷன்.
உடல்நிலை சரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும் மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்கு சென்றுவிடும்.இதில் அவசியமானதும் உண்டு,சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாத டெஸ்டுகளும் இருக்கும்.
2. பரிந்துரை செய்வதில் 30-40 சதவீதம்.
சில நேரங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.உதாரணமாக தைராய்டு தொடர்பான நோயென்றால் அதற்கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்து சேர்ந்துவிடும்.
3. மருத்துவமனை கட்டணத்தில் 30-40 சதவீதம்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும் கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.
4. நெஞ்சுவலி என்று போனால்,
சாதாரண வலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது.நான்கு நாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.
மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத ,விஷயம் தெரியாத பத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.குறைந்த சம்பள்த்திற்கு பணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது, சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,விளம்பரம் கொடுத்து காஸ்மெடிக் சர்ஜரி செய்வது,பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்றவை மற்ற வழிகள்.
மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது. சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இப்போது படித்து முடித்து வந்தவுடன் நிறைய கடன்வாங்கி நர்சிங்ஹோம் கட்டி விடுகிறார்கள்.கடனை அடைக்க அப்பாவிகள் கிடைத்து விடுகிறார்கள்.ஊழலில் எத்தனையோ வகை இருக்கிறது .அதில் இது ஒரு வகை.
இருபது ரூபாய்க்கு,முப்பது ரூபாய்க்கு கிராமங்களில் சென்று மருத்துவம் செய்யும் எளிய மருத்துவர்களும் இருக்கிறார்கள்.நல்ல டாக்டர்கள் கிடைத்துவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி!
***
thanks cfa
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
படித்ததில் பிடித்தது,
வேதனை
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனிக்க
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் இந்தியாவில் பெண்களுக்குத்தான் முதலிடம். 100க்கு 1 என்ற விகிதத்தில் கூட ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வருவதில்லை.
இது ஒருபுறமிருக்க, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது உடல் எடை உயர்வு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் வந்ததும், உணவுப் பழக்கமும் காரணங்களாக இருந்தாலும், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் முக்கியக் காரணம் என்கிறது மருத்துவம்.
குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது.
குடும்பப் பெண்கள் பலரும், குழந்தையும், கணவரும் மீதம் வைத்த உணவையும், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும், வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் இருப்பதும், டிவி பார்த்துக் கொண்டு நொறுக்குத் தீனி சாப்பிடுவதும், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் என்று சொல்லி 2 அல்லது 3 மணி நேரங்கள் தூங்குவதும் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாகப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.
எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.
சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காகக் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவர். இந்த மாத்திரைகளால் கர்ப்பத்திற்கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்கப்படும். இந்த மாத்திரைகளை அனைவரும் எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக கால் வீக்கம், பித்தப்பையில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
சில பெண்கள் பரிசோதனை செய்து கொள்ளாமலேயே காப்பர்-டி பொருத்திக் கொள்கிறார்கள். பின்னர் ரத்தப்போக்கு அதிகமாகி அவதிப்படுகின்றனர். எனவே, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே காப்பர்-டி பொருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்தம் எளிதில் உறைதல், வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள் கண்டிப்பாக காப்பர்-டி பொருத்திக் கொள்ளக் கூடாது. அதேபோல் அதிகபட்சமாக 5 வருடங்கள் மட்டுமே காப்பர்-டியைப் பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.
நாம் சாப்பிடும் கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியாக சுரக்காமல் போவதைக் கவனத்தில் கொண்டு, அதற்கு முன்பு சாப்பிட்டு வந்த அதிகப்படியான கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை பராமரிக்க உதவும்.
***
நன்றி வெப்துனியா
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
பெண்கள் நலன்,
மருத்துவ ஆலோசனைகள்
குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?
குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?(WEANING/COMPLEMENTARY FEEDING)
பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் .தண்ணீர் கூட தர தேவை இல்லை .
இதற்க்கு EXCLUSIVE BREAST FEEDING என்று பெயர் .கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை .ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது .
இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING என்று பெயர் .
WEANING : the systematic introduction of suitable food at the right time in addition to mothers milk in order to provide needed nutrients to the baby (UNICEF)
WEANING என்றால் முற்றிலும் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு உணவு ஆரம்பித்தல் என்று பலர் தவறாக கருதுவதால் தற்போது COMPLEMENTARY FEEDING என்ற சொல்லே பரவலாக பயன்படுத்த படுகிறது .
நான்கு மாதங்களுக்கு பிறகே குழந்தைகள் அறைதிட (SEMISOLID ) உணவை செரிக்க கூடிய சக்தியை அடைகின்றன .
தலை நன்கு நிமிர்ந்து நிற்கும் சக்தியை அடைவதும் 4 மாதத்திற்கு பிறகே
குழந்தையின் எடை 5 மாதத்தில் பிறந்ததை போல் இரு மடங்காக அதிகரிப்பதால் அதன் உணவு தேவை அதிகரிக்கும் . மேலும் உடலில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்து சேமிப்புகள் குறைய தொடங்கும் .
குடலில்உள்ள செரிமான நொதிகள் (INTESTINAL ENZYMES ) நன்கு சுரக்க ஆரம்பிப்பதும் 4 -5 மாதங்களில்தான் .
எனவே 5 வது மாத முடிவிலோ அல்லது 6 மாத ஆரம்பத்திலோ இணை உணவுகளை ஆரம்பிப்பது நல்லது .
முதலில் ஏதேனும் ஒரு தானியத்தை கொடுக்கவேண்டும் (அரிசி ,கோதுமை ,ராகி ) அது பழகிய பிறகே இரண்டு அல்லது மூன்று தானிய கலவைகளை சேர்த்து அரைத்து தர வேண்டும் .
அரிசி சாதம் மிகவும் எளுதில் ஆரம்பிக்க சிறந்தது .ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மட்டும் தரவேண்டும் .படிப்படியாக இந்த அளவை அதிகரிக்க வேண்டும் .
தானியங்கள் ஒத்துகொண்ட பிறகே பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும் .
ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையை போல் நூறு மடங்கு கலோரி தேவை . அதாவது 6 கிலோ குழந்தைக்கு 600 கிலோ கலோரி நாள் ஒன்றுக்கு தேவை .எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சிறிது சிறிதாக பாலும் இணை உணவும் தரவேண்டும் .
ஐஸ் போடாத வீட்டில் செய்த பழச்சாறு 6 மாதம் முதல் தரலாம் . ஆரஞ்சு , ஆப்பிள் சிறந்தது .
நெய் ,எண்ணெய் முதலியவற்றை 5 -6 மாதம் முதல் தரலாம்
முட்டை - 7 -9 மாதங்களில் தரலாம் . முதலில் மஞ்சள் கருவும் பின்பே வெள்ளை கரு தரவேண்டும் . ஏனெனில் வெள்ளை கரு சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் .
6 -8 மாதங்களில் மசித்த உருளை கிழங்கு , மசித்த பருப்பு ஆகியவற்றை தரலாம் .
மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை (சப்பாத்தி ) 9 -12 மாதங்களில் தரவேண்டும் .
ஒரு வயது ஆகும்போது வீட்டில் செய்யும் எல்லா உணவுகளையும் தரலாம் .
அசைவ உணவை ஒரு வயதுக்கு பின்பே ஆரம்பிப்பது நல்லது .(முட்டை சைவம் தானே ?!!)
ஒரு வயதுடைய குழந்தை அம்மா சாப்பிடும் அளவில் பாதி அளவு உணவு சாப்பிடவேண்டும் .(மூன்று வயதில் அப்பா சாப்பிடும் அளவில் பாதி )
ஒரு வயதில் உள்ள குழந்தைக்கு தினமும் 1000 கிலோ கலோரி அளவு சக்தி தேவை .
தாய்ப்பாலை மேலே சொன்ன உணவுடன் சேர்த்தே தரவேண்டும் .இரண்டு வயது வரை தருவது கட்டாயம் .அதற்க்கு மேல் கொடுப்பது தனிப்பட்ட விருப்பம் .,( அப்துல் கலாம் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவர் )
http://doctorrajmohan.blogspot.com/2011/03/weaningcomplementary-feeding.html
***
thanks டாக்டர் ராஜமோகன்
***
"வாழ்க வளமுடன்"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "