...

"வாழ்க வளமுடன்"

20 ஜனவரி, 2011

யோகாவும், கேன்சரும்


மருத்துவமனை...உள்ளே போனால் ""கால்களைத் தொடுங்கள், மூச்சை நீண்டு இழுங்கள்'' என்று குரல் கேட்கிறது.

மருத்துவமனையில் உள்ள கேன்சர் பிரிவு டாக்டர்கள் பல வருடங்களாக கேன்சர் நோயாளிகளுக்கு யோகா சொல்லிக் கொடுக்கிறார்கள்.


ஆனால் யோகாவுக்கும் கேன்சருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று அவர்கள் அதிகம் ஆராய்ந்தது இல்லை. யோகா செய்தபோது நோயாளிகள் நன்றாகத் தூங்கினார்கள். வழக்கமாக தரும் தூக்க மாத்திரைகளைக் குறைத்துக் கொண்டார்கள். யோகாவுக்காக அரசாங்கமோ அல்லது ஆரோக்கிய காப்பீட்டாளர்களோ எந்தப் பணமும் கொடுத்தது இல்லை.


ஆனால் இதற்காக நியூயார்க்கில் உள்ள பெர்த் இஸ்ரேல் மெடிக்கல் மையம் எதற்கும் காத்திருக்காமல் யோகாவை சொல்லிக் கொடுத்து வருகிறது. இது உண்மையில் மிக மோசமான கேன்சர் நோயாளிகளுக்குக்கூட உதவுகிறது என்று தெரிய வருகிறது.



டேவிட் கோல்ட் பெர்க் என்ற 30 வயது கம்ப்யூட்டர் ப்ரொக்ராமருக்குப் புற்று நோய். அவருக்கு யோகா மீது நம்பிக்கையில்லை. எனினும் தமது அறையில் யோகா ஆசிரியருடன் பயிற்சி செய்தார்.


""இப்பொழுது நான் உற்சாகமாக இருக்கிறேன் என் உடம்பின் மீதும் யோகாவின் மீதும் நம்பிக்கை வைக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.


***
thanks தினமணி
***



"வாழ்க வளமுடன்"

கம்ப்யூட்டர் பற்றி சில டிப்ஸ்….



1. வெப் பேஸ்டு இமெயில்

வெப் பேஸ்டு இமெயில் என்பது ஒரு வெப் சர்வரில் உங்களுக்காக நீங்கள் அமைத்துக் கொண்ட இமெயில் வசதி ஆகும். இந்த இமெயில் கணக்கில் வரும் இமெயில்களை ஒரு வெப் பிரவுசர் துணையுடன் அந்த வெப் தளத்தில் நுழைந்து காண வேண்டும். அங்கிருந்தபடி தான் அவற்றைக் கையாள முடியும். கூகுள், விண்டோஸ் லைவ், யாஹூ ஆகியன இந்த வகையைச் சேர்ந்தவையே.

**

2. பைலை அழிக்க…

ஒரு பைலை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

**

3. தேடல் சுலபம்

இணையத் தேடலில் வெப்சைட் முகவரியை முழுவதுமாக டைப் செய்யத்தேவை இல்லை. எடுத்துக்காட்டாக http://www.dinamalar.com/ என இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அட்ரஸ் பாரில் அடிக்க வேண்டுமா? முழுவதும் அடிக்க வேண்டாம். ஜஸ்ட் dinamaar என அடித்து கண்ட்ரோல் அழுத்தி என்டர் தட்டினால் போதும். முழு முகவரியினை எக்ஸ்புளோரர் தொகுப்பு உங்களுக்காக அமைத்திடும். இது .com என முடியும் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

**

4. டீ பக் டூல்

டீ பக்கிங் சாப்ட்வேர் பற்றிக் குறிப்பிடுகையில் இந்த சொல் அடிக்கடி பயன்படுகிறது. புரோகிராம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பிழைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கி செம்மைப் படுத்துவதனை இந்த சொல் குறிக்கிறது. இதனைக் கண்டறியவும் டீ பக் டூல் என அழைக்கப்படும் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன. இந்த டீ பக் டூல் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் கோட் வரிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் காட்டும்.

**

5. டூயல் பூட்

கம்ப்யூட்டர் ஒன்றை இரு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வழியாக பூட் செய்யும் திறனை இது குறிப்பிடுகிறது. லினக்ஸ் பயன்பாடு பெருகிவரும் இந்நாளில் பலரும் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து இயக்குவதனைக் காணலாம்.

**

6. மவுஸ் பாய்ண்ட்டர்

இதுதான் நீங்கள் மவுஸை நகர்த்துகையில் அங்கும் இங்கும் அலையும் பாய்ண்ட்டர். வழக்கமாக மேல் நோக்கி சிறிது சாய்வானதாக இருக்கும். இதனை மாற்றுவதற்கும் வசதிகள் உள்ளன. உரிக்கும் வாழைப்பழம், சிரிக்கும் முகம் என இந்த பாய்ண்ட்டரை மாற்றலாம். ஆனால் இவை அனிமேஷன் வகை என்பதால் ராம் மெமரி தேவையில்லாமல் காலியாகும். மேலும் அம்புக் குறியில் உள்ள தெளிவு, சுட்டிக் காட்டும் தன்மை இவற்றில் இருக்காது.

**

7. ஐ.எஸ்.ஓ., இமேஜ்….

ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்ப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டுமானால் ஐ.எஸ்.ஓ. இமேஜ் வேண்டுமா என உங்கள் சிடி பர்னிங் சாப்ட்வேர் கேட்கும்போது யெஸ் கொடுத்து அந்த பைலை உருவாக்கி அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்துப் பின் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

**

8. கேஷ் மெமரி

கேஷ் மெமரி: அடிக்கடி பயன்படுத்தும் டேட்டாவினைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் மெமரி வகையினை இது குறிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விரைவாக இயங்க முடிகிறது. இதனை இச்ஞிடஞு என ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

**

9. கரண்ட் பேஜ் பிரிண்ட்

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து கிடைக்கும் விண்டோவில் current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக் கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை வைத்துக் கொண்டு பின் Ctrl + P மற்றும் Alt + E அழுத்தவும். அந்தப் பக்கம் மட்டும் பிரிண்ட் ஆகும்.

**

10. ஷிப்ட் கீயின் பயன்பாடுகள்

சில செயல்பாடுகளை ஷிப்ட் கீயுடன் (Shift) மேற்கொண்டால் அது கூடுதல் பயன்களைத் தரும். எடுத்துக்காட்டாகப் பைல் மெனு கிளிக் செய்தால் வழக்கம்போல சில செயல்பாடுகளுக்கான கட்டங்கள் பட்டியலிடப்படும். ஆனால் ஷிப்ட் கீயுடன் அதனைக் கிளிக் செய்தால் Close All, Save All, and Paste Picture என்ற கூடுதல் பயன் பாட்டுக் கட்டங்கள் கிடைக்கும். சில டூல் பட்டன்கள் ஷிப்ட் கீயுடன் இணையும் போது அதன் செயல் பாடுகள் மாறுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டன் டபுள் அன்டர்லைன் கோடு தரும் பட்டனாக மாறும். Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.

**

11. செல்லின் மதிப்பும் தோற்றமும்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள செல்களில் நாம் எண்களை இடுகிறோம். இதனால் அந்த செல்லில் ஒரு மதிப்பு அமைக்கப்படுகிறது. இந்த மதிப்பு மாறாது. எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 1234 என அமைத்தால் அந்த செல்லின் வேல்யு எப்போதும் 1234 தான். ஆனால் இதனை எக்ஸெல் நமக்குக் காட்டுகையில் 1,234 என்று காட்டலாம். அல்லது $1234 எனக் காட்டலாம். இது எப்படி அந்த செல் பார்மட்டை நாம் அமைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே. ஆனால் இதன் வேல்யு எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

**

12. செல் செலக்ஷன்

அதிக எண்ணிக்கையில் செல்களை செலக்ட் செய்திட வேண்டுமா? நீங்கள் திட்டமிடும் Range முதல் செல்லை கிளிக் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் Edit மெனு சென்று Go To தேர்ந்தெடுங்கள். பின் Go To டயலாக் பாக்ஸில் உங்கள் ரேஞ்சில் எதிர்ப்புறமாக உள்ள கடைசி செல்லின் எண்ணை அமைத்துவிட்டு Shift அழுத்தியவாறே ஓகே கொடுங்கள். நீங்கள் செட் செய்திட விரும்பும் அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்.
**

13. எக்ஸெலில் குறிப்பிட்ட செல் செல்ல

உங்களுடைய ஒர்க் ஷீட் பெரிதாக இருந்து மானிட்டர் திரை அளவின் காரணமாக அனைத்து செல்களும் தெரிய வாய்ப்பில்லை. எனவே திரையில் காட்சி அளிக்காத ஒரு செல்லுக்குச் செல்ல என்ன செய்யலாம்? Edit மெனு சென்று அதில் Go To அழுத்தலாம். அல்லது F5 அழுத்தலாம்.

இப்போது Go To டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Reference என்ற சிறிய கட்டத்தில் செல்லின் அடையாள எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல்லுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் பயன்படுத்தும் செல்களை வரிசையாக Go To டயலாக் பாக்ஸ் நினைவில் வைத்திருக்கும். ஒரே செல்லை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் Go To பாக்ஸில் அதன் மீது டபுள் கிளிக் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் அதனை டைப் செய்திட வேண்டியதில்லை.



***
thanks சரண்யா
***



"வாழ்க வளமுடன்"


ஐ-பாட் அதிசயங்கள் மற்றும் அதன் பயன்கள் !

இ-மெயில் பார்க்கலாம்… பேப்பர் படிக்கலாம்… பாடல்களை எளிதான ஒரு சாதனத்திலிருந்து எந்தவிதப் பிரச்னையுமின்றி கேட்க வேண்டும் என்றால் ஐ–பாட் அதற்கு ஒரு சிறந்த சாதனமாகும். தற்போது அனைவரும் வாங்கும் வகையில் பல்வேறு கொள்ளளவில் ஐ–பாட் சாதனங்கள் வந்துள்ளன.




அலுவலகம் செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள் வோர், கல்லூரியில் பயிலும் பெண்கள், அடுத்தவர் தொண தொணப்பிலிருந்து தப்பிக்க வழி தேடுபவர்கள் யாவரும் ஐ–பாட் ஒன்றை கையிலும் அதன் ஹெட்செட்டை காதுகளிலும் வைத்துக் கொண்டு இசையை ரசிப்பதைப் பார்க்கலாம். ஐ–பாட் இயக்கம் குறித்தும் அந்த சாதனத்தைக் கையாள்வது குறித்தும் சில டிப்ஸ்களை இங்கு காணலாம்.


1. அனைவரும் எதிர்நோக்கும் பிரச்னை பேட்டரி பவர். தொடர்ந்து பாடல்களைக் கேட்டு வந்தால் பேட்டரி பவர் குறைந்துவிடும். நம்மை அறியாமல் இசையை ரசிக்கும் நிலையில் அதனை உணர்வதில்லை. இதில் என்ன பிரச்னை என்றால் இப்போது வருகின்ற ஐ–பாட்களை கம்ப்யூட்டரில் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துத்தான் சார்ஜ் செய்திட முடியும். பொதுவாக பேட்டரியை முழுமையாகச் சார்ஜ் செய்தால் எப்படியும் 12 அல்லது 14 மணி நேரம் வரை இயங்கும். நாம் சரியாக சார்ஜ் செய்யாததாலும் அல்லது முழுமையான சார்ஜ் இல்லாததனாலும் ஐ–பாட் இயங்காத நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து ஓரளவிற்குத் தப்பிக்க வழி உள்ளது.



நீங்கள் ஐ–பாடினைப் பயன்படுத்தாத நேரத்தில் ஹோல்ட் பட்டனை லாக்டு நிலையில் வைக்கவும். நமக்குத் தெரியாமல் அந்த பட்டன் விடுபடும் சூழ்நிலையை இது தடுக்கும். அவ்வாறு லாக் செய்யாத நிலையில் நாம் அறியாமலேயே பட்டன் இயங்கி ஐ–பாட் இயங்கத் தொடங்கி தானாக ஒவ்வொரு பாடலாகப் பாடும். நாம் ஹெட்செட் மாட்டாமல் இருந்தால் இது தெரியாது. பேட்டரியின் பவர் நெல்லு மூட்டையில் ஓட்டை வழியே நெல் சிந்துவது போல குறைந்து கொண்டு இருக்கும்.


2. உங்கள் ஐ–பாட் சாதனத்தை அலாரம் கடிகாரமாகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஐ–பாடின் மெயின் மெனு செல்லவும். அதில் Extras என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Clock என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் பிரிவுகளில் Alarm Clock என்பதனை செலக்ட் செய்திடவும். பின் Alarm என்ற பிரிவு உங்களுக்குக் கிடைக்கும். இதனை ஆன் செய்து எந்த நேரத்தில் அலாரம் உங்களுக்கு அடிக்க வேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடலாம். இதில் உங்களுக்குப் பிடித்தமான இசையொலியைக் கூட செட் செய்திடலாம். அல்லது நீங்கள் அடிக்கடி கேட்க விரும்பும் பாடல்கள் அடங்கிய பட்டியலைக் கூட செட் செய்திடலாம். குறிப்பிட்ட நேரத்தில் வரிசையாகப் பாடல்கள் ஒலிக்கும். இதற்கு நீங்கள் ஐ–பாட் சாதனைத்தை ஏதேனும் ஸ்பீக்கரில் இணைத்திருக்க வேண்டும்.



3. உங்கள் ஐ–பாட் மூலம் உங்களுக்கு வந்திருக்கும் இமெயில்களைப் பார்வையிடலாம். எப்படி? இதற்கான புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திருக்க வேண்டும். இதனை கூகுள் மூலம் கண்டறிந்து பதியவும். http://kdeep.com/kpod.htm என்னும் தளத்தில் கிடைக்கிறது. ஐ–பாட் சாதனத்தை உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமுடன் சிங்கரனைஸ் செய்திருக்க வேண்டும். பின் kpod புரோகிராமினை இயக்கி உங்கள் ஐ–பாடில் இமெயில்களைக் காணலாம்.


4. உங்களுக்குப் பிடித்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வேகமாக பிளே லிஸ்ட் தயார் செய்திட வேண்டும் எனில் OntheGo என்னும் ஐ–பாடில் உள்ள வசதியினைப் பயன்படுத்தலாம். இதற்கு பெர்சனல் கம்ப்யூட்டர் எல்லாம் தேவையில்லை. விரும்பும் பாடலைத் தேர்ந்தெடுத்து சிறிது நேரம் Select பட்டனை அழுத்தியபடி இருந்தால் போதும். தேர்ந்தெடுத்த பாடல் ஐ–பாட் திரையில் மின்னத் தொடங்கும் வரை அழுத்த வேண்டும். இப்படியே விரும்பும் பாடல் அனைத்தையும் தேர்ந்தெடுத்து பிளே லிஸ்ட்டினை விரைவாகத் தயாரிக்கலாம்.


5. காலையில் தினசரி செய்தித்தாள் படிக்க முடியவில்லையா? நேரம் இல்லையா? உங்கள் ஐ–பாட் மூலமும் படிக்கலாம். iPodulator என்னும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இந்த புரோகிராம் இணையத்தில் கிடைக்கும் செய்தித்தாள் தகவலை ஐ–பாடில் படிக்கும் வகையில் மாற்றுகிறது. முதலில் ஐ பாடுலேட்டர் புரோகிராமினை இயக்கவும். நீங்கள் விரும்பும் வெப் தளத்தின் முகவரியினை தந்து பெறவும். இந்த தளம் தரும் தகவல்களைப் பெற்றவுடன் iPodulator ல் iPodinate பட்டனை அழுத்தவும். தகவல்கள் அனைத்தும் பைலாக சேமிக்கப்படும். பின் சேமித்த பைலை ஐ–பாடிற்கு மாற்றி பின்னர் தேவைப்படும் போது படிக்கலாம்


***
எனக்கு மெயில் வந்தது
***


"வாழ்க வளமுடன்"

ஒன்றரைச் சதவீதம் பால்? என்றால் என்ன?

கொஞ்ச காலத்துக்கு முன்பு நாலரை சதவீதம் பால் என்று தொலைக் காட்சியில் விளம்பரம் அமளிப்பட்டது நினைவிருக்கலாம். நாலரையைப் போல ஒன்றரை சதவீதப் பால், 3 சதவீதப் பால் என்று பாலில் பல தினுசு உண்டு. இவையெல்லாம் என்ன?



இது குறித்து திண்டுக்கல் வக்கம்பட்டி கால்நடை மருத்துவ மையத் தலைவரும் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநருமான மருத்துவர் கே.கணேசன் கூறியதாவது:-


""பசுவின் மடியில் இருக்கும் வரை பால் தூய்மையானது. கறந்த பாலில் பல நுண்ணுயிர்கள் (பாக்டீரியாக்கள்) கலந்துவிடுகின்றன. பாலில் கலந்து வரும் லாக்டோபேசில்லை என்னும் நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பாலில் உள்ள சர்க்கரைப் பொருளாகிய லக்டோபேசில்லை லாக்டிக் அமிலமாக மாற்றுகிறது. பாலில் லாக்டிக் அமிலம் மிகும்போது பால் புளித்து திரிந்து விடும். இதையே பால் கெட்டுவிட்டது என்கிறோம். சில பால் ரகங்களைப் பார்ப்போம்.

**

குளிரூட்டப்பட்ட பால் (சில்லிங்):

பால் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு முதல்படி குளிரூட்டுதல். நுகர்வோரைச் சென்றடையும் பாலைப் பாதுகாப்பதற்குப் பாலில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பாலை வேகமாகக் குளிரச் செய்து 5 டிகிரி சென்டிகிரேட் அளவில் பாதுகாக்கப்படுகிறது. இந்தக் குளிர் நிலையில் நுண்ணுயிர்கள் இறந்து போகாமல் இருந்தாலும் செயலற்றதாகப் போய்விடும். இதனால் பால் 24 மணி நேரம் வரை கெட்டுப்போகாது.

**

கொழுப்பு நீக்கிய பால் (ஸ்கிம் மில்க்):

பாலில் உள்ள கொழுப்பு இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தக் கொழுப்பை பாலேடு (கிரீம்) என்கிறோம். இந்தப் பாலை கொழுப்பு இல்லாத பால் சாப்பிட விரும்புபவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆடை நீக்கிய பாலைக் காயவைத்து ஆறவைத்து உறை ஊற்றினால் தயிராகும். இது கொழுப்பற்ற தயிர்.

**

பால் பதப்படுத்துதல் (பாஸ்சுரைஸ்ட் பால்):

குளிரூட்டுதல் மூலம் முடக்கி வைத்து நுண்ணுயிர்களை முழுமையாக அழிக்கிறோம். அதே நேரத்தில் பாலில் உள்ள சத்துப் பொருட்கள்ó கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படுகின்றன. பாலை 72 டிகிரி அளவுக்கு சூடேற்றி அதே சூட்டில் 15 நிமிடம் வைத்திருந்து, பின் வேகமாக 5 டிகிரி சென்டிகிரேட் குளிர் நிலைக்கு கொண்டு வரப்படும்.

**

பாலின் விலை:

பசும்பாலில் நாலரை சதவீதம் கொழுப்புச் சத்தும் எருமைப்பாலில் 7 சதவீதம் கொழுப்புச் சத்தும் உள்ளது. பாலில் உள்ள கொழுப்புச் சத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எருமைப் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதற்கு விலை கூடுதலாகிறது. பாலில் புரதம், சர்க்கரை மற்றும் சாம்பல் ஆகியவற்றை கொழுப்பற்ற திடப் பொருட்கள் (SNF) என்கிறோம். பசும்பாலில் 8.5 சதவீதம் எஸ்.என்.எப்-ம், எருமைப்பாலில் 9.5 சதவீதம் எஸ்.என்.எப்-ம் உள்ளது. பசும்பாலில் 87.2 சதவீதம் தண்ணீரும், எருமைப் பாலில் 84.1 தண்ணீரும் உள்ளது.

**

தரப்படுத்தப்பட்ட பால் (ஸ்டாண்டர்டைஸ்ட் பால்):

நமது நாட்டு பால் கலப்பட தடுப்புச் சட்டத்தின்படி தரப்படுத்தப்பட்ட பாலில் 4.5 சதவீதத்திற்கு குறையாமல் கொழுப்பும், 8.5 சதவீதத்திற்கு குறையாமல் கொழுப்பற்ற திடப் பொருளும் இருக்க வேண்டும். நுகர்வோர் இந்தப் பாலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும். பால் பாக்கெட்டில் தரப்படுத்தப்பட்ட பால் என்று அச்சிடப்பட்டிருக்கும்.


**

ஒருநிலைப்படுத்தப்பட்ட பால் (ஹோமோஜனைஸ்ட் பால்) :

பாலில் உள்ள கொழுப்புச் சத்து கொழுப்புத் திவலைகளாகக் கலந்திருக்கின்றன. இதனால் பாலில் கெட்டித் தன்மை இருக்காது. பாலின் கெட்டித் தன்மையைக் கூட்டுவதற்கு இயந்திரத்தின் உதவியோடு பாலில் உள்ள கொழுப்புத் திவலைகள் உடைத்துச் சிறிய துணுக்குகளாக்கப்படுகின்றது. இப்பொழுது கொழுப்பும் பாலுடன் இரண்டறக் கலந்து விடுகிறது. பாலின் கெட்டித் தன்மையும் கூடுகிறது. அதோடு பாலின் தோற்றமும் மணமும் சுவையும் கூடும். பாலில் வெண்ணெய் மிதக்காது. தயிர் மென்மையாக இருக்கும். ஆனால் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுக்க இயலாது.

**

கொழுப்பு குறைந்த பால் (டோன்ட் பால்):

இந்த டோன்ட் பாலில் 3 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருளும் இருக்கும். கொழுப்பு மட்டுமே குறைக்கப்படுகிறது. மற்ற சத்துக்கள் அப்படியே இருக்கும். பால் பற்றாக்குறை காலங்களில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் பால் டோன்ட் செய்யப்படுகிறது. பாலின் விலையைக் குறைக்கவும் டோன்ட் பால் தயாரிக்கப்படுகிறது. டோன்ட் பாலின் விலை குறைவு.


இரட்டைக் கொழுப்பு குறைப்பு (டபுள் டோன்ட் பால்) பாலும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்தப்பாலில் 1.5 சதவீதம் கொழுப்பும் 9 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருளும் இருக்கிறது'' அருஞ்சுவையாக பாலைப் பற்றிச் சொல்லி முடித்தார்.



***
thanks தினமணி
***




"வாழ்க வளமுடன்"

சகல நோய் நிவாரணி பப்பாளி!

இது ஒரு பழந்தரும் மரமாகும். முருங்கை மரத்தைப் போன்று அதிக பலம் இல்லாத மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.



இதன் விளைச்சல் காலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் என சொல்லப்படுகிறது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். விதைகள் கசப்பாக இருக்குமும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.


இது மத்திய அமெரிக்காவிலிருந்து 16ம் நுõற்றாண்டில் டச்சு வணிகர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


மற்றவகை பழங்களைக்காட்டிலும் பப்பாளியில் குறைந்த அளவு கலோரி உள்ளது. மேலும் ஆப்பிள் ஆரஞ்சு பழங்களைவிட அதிகபடியான உயிர்ச்சத்துக்கள் பப்பாளியில் அதிகம் உள்ளது. இருப்பினும் ஏனோ மற்ற பழங்கள் பெறும் மதிப்பை அதிக சத்து இருந்தும், விலை மலிவாக இருந்தும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மதிப்பை பெறாமல் இருக்கிறது.


இதன் கனிகள், காய், விதைகள், இலை ,பால் மருத்துவ பயன் உடையது.

காய், பால் ருது உண்டாக்கி, சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி.

பழம்: உரமாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, மலமிளக்கி.

**

100 கிராம் பப்பாளியில் உள்ள சத்துகள்:

39 கலோரி,
கார்போஹைட்ரேட் 9.81 கிராம்,
சர்க்கரை சத்து 5.90 கிராம்,
நார்சத்து 1.8 கிராம்,
கொழுப்பு 0.14 கிராம்,
புரதச்சத்து 0.61 கிராம்,
விட்டமின் எ 55 மி.கிராம்,
பி.கரோட்டீன் 276 மி.கிராம்,
தையமின் 0.04 மி.கிராம்,
ரிபோப்ளோவின் 0.05 மி.கிராம்,
நியாசின் 0.338 மி.கிராம்,
விட்டமின் பி6 0.1 மி.கிராம்,
கால்சியம் 24 மி.கிராம்,
இரும்பு சத்து 0.10 மி.கிராம்,
மெக்னீசியம் 10 மி.கிராம்,
பாஸ்பரஸ் 5 மி.கிராம்,
பொட்õசியம் 257 மி.கிராம்,
சோடியம் 3 மி.கிராம்.


மேலும் இதில் புரதங்களை சிதைக்கும் நொதி ( என்சைம்கள்) பப்பைன் இருக்கிறது. மாலிக் அமிலும், அஸ்கார்பின் அமிலம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து உயிர்சத்துக்களும் நிறைந்த கொழுப்பு அற்றி உணவுப்பொருளமாகும்.


***

பப்பாளியினால் குணமாகும் நோய்கள்:

செரியாமையை நீக்கும்.

வயிற்றுப் புழுவை அழிக்கும்.

எலும்பு மூட்டுகள் வலியை ( அர்த்ரிட்டிஸ்) குணப்படுத்தும்.

ரத்தம் உறைதலை அகற்றும்.

தீப்பட்ட புண்ணை ஆற்றும்.

ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும்.

மலச்சிக்கலை நீக்கும்.

மன அழுத்த நோயை குணப்படுத்தும்.

வீங்கிய நிணநீர் சுரப்பினை கரைக்கிறது.

கண்நோய்களை நீக்கும்.

பித்தப்பை கல்லை கரைக்கும்.

வாயு தொல்லையை போக்கும்.

ரத்த குழாய் தடிப்பை நீக்கும்.

இதயநோயைத் தடுக்கும்.

மூலநோயை போக்கும்.

தோல் நோயான காளான்சக பபையை குணமாக்கும்.

சுவாச கோளாரை போக்கும். கட்டிகள், புண்கள் குணமாகும்.

சிறுநீர்பை தாபிதம் குணமாகும்.

முகப்பொலிவை உண்டாக்கும்.

உடல்கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்கும்.

***

பப்பாளியும் மருத்துவ குணங்களும்:

பப்பாளியில் விட்டமின் இ இருப்பதால் வயது முதிர்ச்சியினால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுத்து இளமையை தருகிறது.


பப்பாளியின் அதிக அளவு விட்டமின் சி இருப்பதால் மூட்டுவலி, இடுப்புவலி வராமல் தடுக்கிறது.


ப்பாளியின் நார்சத்து அதிகளவு இருப்பதால் தொடர்ந்து 4 வாரம் பப்பாளியை உண்டால் உடலில் மொத்த கொழுப்பில் 19.2 சதவீதத்தைக் குறைத்து அதிக உடல் எடையை குறைக்கிறது.


பப்பாளிச்சாறு கல்லீரல் புற்று நோயை தடுக்கிறது.


பப்பாளியில் நார்ச்சத்து, இரும்பு சத்து, விட்டமின் சி, பி கரோட்டீன், விட்டமின் இ இருப்பதால் புற்று நோய் தடுக்கிறது.


பப்பாளி விதையில் இருந்து எடுக்கப்படும் சத்து சிறுநீரக செயலிழப்பை தடுக்கிறது.


விட்டமின்கள் எ,சி, இ இருப்பதால் இதயநோயை வராமல் தடுக்கும்.


நரம்புகளை பலப்படுத்தி ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.


உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.


பப்பாளியை தொடர்ந்து சாப்பிட நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்கும். எந்த தொற்று நோயும் உடலை தாக்காது.


பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.



பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.

*

by-தேவராஜன்

***
thanks தினமலர்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "