...

"வாழ்க வளமுடன்"

22 ஜனவரி, 2011

அவசர ஊர்தியின் ஒரு அவசர வேண்டுகோள் :(



அருமையான பேரு. அவசரமாய் செல்ல வேண்டி இருப்பதால் அவசர ஊர்தி. நல்ல பேருதான் வைத்துள்ளனர்.


எல்லாவற்றிக்கும் ஆதி அந்தம் அர்த்தம் தெரிந்துள்ள நமது மக்க்ளுக்கு இதன் அர்த்தம் இன்னும் விளங்க வில்லை என்பதுதான் கொடுமை.


அல்லது எப்பவும் போல எவன் செத்தா எனக்கு என்ன அப்படிங்கிற மனப்பான்மையா கூட இருக்கலாம்.


நானும் சென்னையில் பல இடங்களில் உய் உய் உய்ன்னு கத்திக்கிட்டு போற ஆம்புலன்சுன்னு எழுதி இருக்கிற அவசர ஊர்திகளை பார்த்துள்ளேன். ஆனா பாவம், எழுத்தில் மட்டுமே அது அவசரம். மத்தபடி தேமேன்னு மெதுவா ஊர்ந்து போகும்.


அவசரத்த எடுத்துட்டு ஊர்திய மட்டும் வச்சு இது ஊர்ந்து போக கூடியதுதான்னு சென்னை மக்கள் நினைச்சுட்டாங்க போல.


ஆம்புலன்ஸ் மட்டுமே எந்த விதமான சாலை போக்குவரத்து விதிகளுக்கு கட்டுபடாமல் செல்ல கூடியது.


ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அதை ஓட்டும் தினத்தில் யாரிடமாவது திட்டு வாங்குவார் அல்லது திட்டுவார். நமது மக்கள் புரிந்து கொண்டதுபோல் இதுவரை அவசரத்திற்கான அளவுகோலை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பது எனது எண்ணம்.


என்ன காட்டு கத்தலாய் கத்தினாலும் இதற்கு வழிவிடுபவர்கள் குறைவானவர்களே... ஆம்புலன்ஸ் சப்தம் காதுக்குள் ஒலித்தாலும் சரி அதனின் ஓளி கண்ணை கூசசெய்தாலும் சரி எனக்கு என்ன, நான் போறதுதான் எனக்கு முக்கியம் என்று போவோறே மிக அதிகமானோர்.


யாருக்கு என்ன அவசரமோ, என்ன சீரியஸ் மேட்டரோ? என்றாவது சிந்தித்து செயல்பட்டிருப்பார்களா? ஒவ்வொரு தடவை ஆம்புலன்ஸ் பார்க்கும் போதெல்லாம் எனது மனதில் வலி உண்டாகும். கடவுளே இதில் இருக்கும் மனிதரை காப்பாற்று என்று வேண்டிக்கொள்வேன், வழியும் விட்டு ஒதுங்க ஆரம்பித்துவிடுவேன். ஆம்புலன்ஸ் போக வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் சென்றாலே அம்மனிதர் குணமாகிவிடுவார். நான் துபாயில் 2 வருடம் வேலை செய்ததால் அங்கு இருக்கும் சாலை போக்குவரத்து விதிகள் இந்தியாவுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டுள்ளேன். அங்கு ஆம்புலன்சின் உய் உய் உய்ன்னு சப்தம் கேட்டாள், சாலையில் செல்லும் அனைத்து வாகனங்கள் ஏதாவது சந்து பொந்து இடுக்குகளில் டக்கு டக்குன்னு போய் ஒளிந்து கொண்டு ஆம்புலன்சிற்கு வழி விடும், அந்த அளவிற்கு மக்கள் அதன் அர்த்தம் புரிந்து வைத்துள்ளனர், ஆதலால் மிக உடனடியாக அது செல்வதற்கு ஏற்ப வழி ஏற்படுகிறது. துபாயில் வசிப்பவர்கள் 70% பேர் நமது மக்கள்தான், அங்கு பின்பற்றும் விதிகளை இங்கு வந்தவுடன் மறந்து விடுகின்றனர்.


சமிபத்தில் சென்னையின் ஒரு மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் சப்தம் போட்டு கொண்டிருக்கிறது, நான் எதிர் பக்கமாக சென்று கொண்டுருந்தேன், எப்பவும் போல் அந்த மேம்பாலம் அந்த நேரத்தில் மிகவும் அதிப்படியான வாகனங்களாள் ஊர்ந்து கொண்டிருக்க, அந்த ஆம்புலன்சிற்கு வழி விடுவோர் எவருமில்லை... அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் அதன் முன்பு நிற்கும் வாகன ஓட்டிகளிடம் வழி விடும்படி கத்தி கொண்டிருந்தார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரின் கூட இருந்தவர் கண்ணீருடன் கதறி அனைவரிடம் கெஞ்சி கொண்டிருந்தார், வழி விட்டவர் கொஞ்சம்தான்... கொடுமையான விசயம் கேட்டு கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தவர்கள்தான் அதிகம், அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது ஏன் என்றால் முன்பு நிற்கும் வாகனங்கள் வழி கொடுத்தால்தான் அவர்களும் வழி கொடுக்க முடியும்.


இப்படி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் குற்றம் சொல்லும் வழக்கத்தைதான் அதிப்படுத்தி வைத்திருக்கிறோம்.


இங்குதான் ஆம்புலன்ஸ் மான்புமிகு மந்திரிகளுக்ககவும் பெரிய பதவியில் இருக்கும் அரசாங்க ஊழியர்களுக்காவும் வழி விட்டு கொண்டிருக்கிறது.


அதையிம் விட கொடுமை சிக்னல் சிவப்பு விளக்கில் ஆம்புலன்ஸ் இங்கு நிறுத்தபடுகிறது.


நமது மக்கள் இரக்க குணம் மிக்கவர்கள்தான், ஒரு விசயம் தமது குடும்பத்தினற்கும் சுற்றாருக்கும் ஏற்படாதை வரை அவ்விசயத்தில் இரக்கமற்றவர்களாகவே இருப்பார்கள்.


இவ்விசயத்தில் முன்அனுபவம் தேவையா? யாரும் ஆம்புலன்சில் போகவேண்டும் என்று ஆசை படமாட்டார்கள்.


தயவுசெய்து ஆம்புலன்சின் உய் உய் உய்ன்னு சப்தம் கேட்கும்போதும் சரி, அதன் ஒளி நம்மை சென்றடையிம் போதும் சரி, மனதில் இருத்தி கொள்ளுங்கள் நீங்கள் வழிவிடும் போது ஒரு உயிர் காப்பாற்ற படுகிறது. நமக்கு ஏதாவது தேவையின் போது மற்றவர்கள் அதாவது அறியாது தெரியாதவர்கள் உதவும் போது எவ்வளவு சந்தோசம் கிடைக்குமோ அதை விட பல மடங்கு சந்தோசம் மற்றவர்களுக்கு உதவும் போது ஏற்படுகிறது.


இதை படிக்கும் நீங்கள், நீங்களும் மாறி மற்றவர்களும் மாற உதவலாமே? ஒரு உயிர் உங்களாலும் காப்பற்ற படுகிறது என்பது எவ்வளவு சந்தோசமா விசயம்.


வாழும் வாழ்கை கொஞ்சம்தான், மற்றவர்களுக்கு உதவி வாழ்கையை அழகாக ஆக்கிக்கொள்ளலாமே.


***
THANKS Mãstän
***


"வாழ்க வளமுடன்"

இந்தியப் பயணமா? இத முதலில் படியுங்கள் !



இந்தியா சென்று திரும்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் இந்தியா செல்வது ஏறத்தாழ தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கையர் என்றில்லாது,ஒட்டுமொத்தமாக சகல வெளிநாட்டவர்களுக்கும் இவ்வாறான ஒரு தடையை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறியாது பிரயாணம் செய்பவர்கள் இந்திய விமான நிலையத்தை அடைந்தவுடன் புதிய விதி முறைகளுக்கு உட்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என்று அண்மையில் அங்கு விஜயம் செய்து திரும்பிய ஒருவர் மேலும் கூறியதாவது:



அவசர காரியங்களுக்காக இந்தியா செல்லவேண்டுமாயின் அதற்கான காரணத்தை ஆதாரத்துடன் தெரிவித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரிடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கான கட்டணம் உண்டு. அத்துடன் இந்தியா செல்வதற்கான விசா அனுமதி யும் இருத்தல் வேண்டும். ஓரிரு நாட்களில் இவ்விசேட அனுமதியையும் பெரும்பாலும் பெற்றுக் கொள்ளமுடியும்.



இவ்வாறு இரண்டு மாதங்களுக்கிடையில் செல்வோர் இந்திய விமான நிலையங்களைச் சென்றடைந்ததும் ஒரு விசேட பதிவுக்குள்ளாக வேண்டும். அப்பதிவை நமது பாஸ்போர்ட்டைப் பார்த்து, அதிகாரிகளே செய்து கொள்வர்.



இதுவரை எல்லாம் சரி; அதிக பிரச்சினை எதுவுமில்லை.


ஆனால் விசாவும் விசேட அனுமதியும் விமான நிலையப்பதிவும் மட்டும் போதாது. நாம் செல்லுகின்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற மற்றொரு நிபந்தனையும் உண்டு.


இந்த நிபந்தனையை கடவுச்சீட்டில் சீலடித்து விடுகின்றார்கள். இதுதான் மிகத்தொந்தரவான விடயம், அதனால் தான் அவசரமாகச் செல்வோருக்கு அவதானம் தேவை.


காவல் நிலையப் பதிவை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மாவட்ட காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் அது ஒரு நாள் வேலை, இரண்டு, மூன்று நாட்களுக்கும் இருக்கலாம். அங்கு வேலை நடந்தாலும் பயணி தங்கி உள்ள இடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலைய விசாரணைக்குச் செல்ல வேண்டும்.



அவர்கள் நாம் தங்கியுள்ள வீட்டில் வந்து, உறவினர், நண்பர்களை விசாரிக்கும் சந்தர்ப்பமும் உண்டு. இறுதியில் காவல்துறையிடமிருந்து ஒரு நற்சான்றிதழைப் பெறுமுன் போதும் போதும் என்றாகிவிடும்.


தெரியாத்தனமாக வந்து விட்ட உணர்வுதான் ஏற்படும். இந்த வேலைக்கென ஐந்து ஆறு நாட்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். செலவுக்கு இந்திய ரூபாய் ஆயிரத்தை மாற்றி வைத்துக் கொள்வது அவசியம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.



இவ்வளவு சிரமங்கள் உள்ளதைத் தெரிந்து கொண்டு இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுக்கலாம் என்றால் இரண்டு மாத இடைவெளிக்குள் இந்தியா வரலாம். 1983 கலவரங்களின் பின்னர் ஏராளமான இலங்கை வாழ் தமிழர்கள் தமிழகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.



உறவினர்கள் மட்டுமன்றி பல திருமண பந்தங்களும் இருப்பதால் அவசர காரியங்களுக்காக இந்தியா சென்று வரவேண்டிய நிலை உண்டு. இவை எல்லாவற்றையும் விட தமது பாதுகாப்பு தொடர்பான அதீத கவனம் காரணமாகக் கடுமையான குடிவரவு விதிகளை இந்திய அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.




இவை பற்றி முறையிடுவதால் ஏதேனும் பயனுண்டு என்று சொல்ல முடியாது. இலங்கையில் வாழ்கின்ற சகல தமிழர்களும் மைய அரசின் ஐயப்பார்வைக்கு உட்பட்டிருப்பதை எந்தசக்தியும் மாற்ற முடியாது போலத் தோன்றுகின்றது. யார் மீதோ உள்ள ஐயத்தை அப்பாவிப் பயணிகள் மீது பிரயோகித்துப் பார்ப்பது ஒரு வகையான கூட்டுத் தண்டனை என்றே கூற வேண்டும்.



மொத்தத்தில் இரண்டு மாதங்களுக்கிடையிலான அவசரப் பயணங்களை தவிர்த்துக் கொண்டு அடிக்கடி இந்தப் பக்கம் வரப்பார்க்காதீர்கள் என்பது தான் அதிகாரத்தரப்பினரின் ஆலோசனை. இதில் மனிதாபிமான அம்சங்களுக்கு எதுவித இடமில்லை. இலங்கையில் வாழ்ந்து கொண்டு இந்தியர், இந்திய வம்சாவளித் தமிழர் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் அதிகாரத் தரப்பினருக்கு ஒரு பொருட்டாக இல்லை.



***
thanks நண்பன்
***


"வாழ்க வளமுடன்"

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா? ஒரு நிமிடம் !

இதையும் பாருங்களேன் :)






அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

**

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

*


District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்

Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்


பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்


உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து


Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்


**


[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

***


அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

•ரேசன் கார்டு
•குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
•தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
•மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
•கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
•வாக்காளர் அடையாள அட்டை
•வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
•துணைவின் பாஸ்போர்ட்


பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

•1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
•பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
•கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

•10வது மேல் படித்திருந்தால் ECR ( http://www.passport.gov.in/shimla/ecnr_ecr.htm ) முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.


•உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.


•பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.



அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

*

அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு
http://passport.gov.in/cpv/checklist.htm



***

கேள்வி, பதில்கள் :

1. பிறந்த & சொந்த மாநிலம் வேறாக இருப்பின், தற்போது வேலைக்காக இருக்கும் மாநிலத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியுமா ? இப்போது இருக்கும் மாநிலத்தில் இருக்கும் முகவரியில் 2 மாதங்களே வசத்திருக்கும்பட்சத்தில்... ??



@ முயற்ச்சிக்கலாம் என்று நினைக்கிறேன்... ஆனால் குறைந்தது 6 மாதம் தங்கிருக்க வேண்டும்.


**

2. One doubt , how will proof date of birth. I born before 1989 and my educational certificates are missed. I am not interested to apply duplicate certificates. But I have ration card, voter id and Pan. Kindly give the details


@ affidavit is enough, you can get it from notary public, please consider any notary public lawyer.


**

3. நான் கத்தாரில் இருக்கின்றேன். மனைவி, மகன், மகள் ஊரில் உள்ளனர், அவர்களுக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும்..

*ரேஷன் கார்டில் குழந்தைகள் பெயர் அதிகப்படியாக சேர்க்கப்பட்டுள்ளது
* குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் உள்ளது.
* மனைவியிடம் பள்ளிச் சான்றிதழ், வாக்காளர் அடைய அட்டை உள்ளது.
* என் பெயரில் வீட்டு வரி, மின் வரி ரசிது உள்ளது.
* திருமணச் சான்றிதழ் இல்லை

வேறு என்ன தேவைப்படும்? குழந்தைகளுக்கும், மனைவிக்கும் பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

தனித் தனிப் பாஸ்போர்ட்டா?


@ தனித் தனிப் பாஸ்போர்ட் எடுப்பதுதான் மிகவும் நல்லது, தாங்களிடம் இருக்கும் சான்றிதல்களே போதுமானது. உங்கள் மனைவிக்கு இது முதல் பாஸ்போர்ட் என்பதால் திருமண சான்றிதல் தேவையில்லை.

***


பாஸ்போர்ட் அப்ளை செய்த அனைவருக்கும் விரைவில் பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)


*

by Mãstän

***
thanks Mãstän
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "