...

"வாழ்க வளமுடன்"

14 ஜூலை, 2011

அறிந்த விஷயமும் அறியாத செய்தியும்.......



வீரர்கள் மலையேற்றத்தின் போது முன்பக்கம் வளைந்தவாறு ஏறுவதும் இறங்குகையில் பின் பக்கம் சாய்ந்தவாறு இறங்குவதும் ஏன்?


நாம் நேராக நிற்கையில் (நிமிர்ந்து) புவி ஈர்ப்பு மையம் நமது இரு கால்களுக்கிடையே அமைந்து சரியான சமநிலையில் நிற்க முடிகிறது. சமதளத் தரையின் மீது நடக்கத் தொடங்கும்போது, புவி ஈர்ப்பு மையமும் நடக்கும் திசை நோக்கி நகர்கிறது.



இருப்பினும் அதன் சமநிலையில் மாற்றம் ஏதும் உண்டாவதில்லை. ஆனால், மலையேறும்போது புவி ஈர்ப்பு மையம் முன்னோக்கி இடம்பெயர்வதுடன் அதன் சமநிலையிலும் ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இதனைச் சமன்செய்யும் பொருட்டு உடலை முன்னே சாய்த்து மலையின் மீது ஏறுகின்றனர்.



இதேபோன்று மலை மேலிருந்து கீழே இறங்கும்போது புவி ஈர்ப்பு மையமும் பின்பக்கம் இடம்பெயர்கிறது. சமநிலையிலும் வேறுபாடு நிகழ்கிறது. சரியான சமநிலைக்குக் கொணரும் பொருட்டு, பின்னோக்கிச் சாய்ந்தவாறு கீழிறங்கி வரவேண்டியுள்ளது.


***


தீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்படி?


தீயணைப்புப் படையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உடையே பயன்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதை நாம் அறிவோம். இதே ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) கொண்டுதான் தீயணைப்பு வீரர்களின் உடை தயாரிக்கப்படுகிறது.



இவ்வுடையின் மேல் சில்வர் பூச்சுக் கொடுக்கப்படுவதால் தகிக்கும் வெப்பம், ‘தீ’ எதிரொளிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. இப்படியாக பெரும் தீக்குள் எந்தவிதத் தடுப்புமில்லாமல் சென்று ஆபத்தில் உள்ளோரைக் காக்க முடிகிறது.



தீ சூழும்போது ஆக்சிஜன் குறைந்து இணி2 அதிகரிப்பதால் மூச்சு விட சிரமம் ஏற்படும். இதனால் இம்மாதிரி உடைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டரும் தயாரிக்கப்படுகிறது.



***


மழை பெய்யும் போது சில வேளைகளில் மழைத்துளிகளோடு, ஐஸ் கட்டிகளும் விழுகின்றதே, ஏன்?


ஆங்கிலத்தில் ‘ஹெயில் ஸ்டோன்ஸ்’ என இந்த ஆலங்கட்டி மழையை அழைப்பார்கள். மழைத்துளிகள் ஈர நைப்பான மேக அடுக்குகளில் மேல் நோக்கி உந்தப்படும்போது, இப்படி ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.மழைத்துளிகளாக உருவாகி கீழே விழும் நிலையில் கீழே விழாமல் தொடர்ந்து, இவற்றை மேல் நோக்கித் தள்ளப்படும்போது, இத்துளிகளைச் சுற்றி புதிய ஈரம் (நைப்பு) மூடிக்கொள்ள இது கெட்டியாகி விடுகிறது.



பெரிய ஆலங்கட்டியை இரண்டாகப் பிளந்து ஆராய்ந்தால் பல அடுக்குகளைக் காணலாம். ஆலங்கட்டிகள் உருண்டையாகத்தான் இருக்கும். பனித்துகள் (ஸ்ரோஃப்ளேக்ஸ்) எப்போதும் அறுகோணப் படிகங்களாகக் காணப்படும். மாரிகாலத்தில் பனிமழை பெய்யும். ஆனால் ஆலங்கட்டி மழை வருஷத்தில் எந்தப் பருவத்திலும் பெய்யலாம்.



***


ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் ஓசை பாலத்தைக் கடக்கும்போது மாறுபடுவது ஏன்?


ஒரு ரயில் அதன் பாதையில் செல்லும்போது மூன்று காரணங்களால் ஓசை உண்டாகிறது. முதலாவது தண்டவாளத்துக்கும் ரயிலின் சக்கரத்துக்கும் உள்ள உராய்வு.



இரண்டாவது இரண்டு தண்டவாளத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் சக்கரத்தினால் ஏற்படும் விளைவு.தண்டவாளத்தில் உள்ள ஸ்வீப்பர் கட்டைகள் ஜல்லிக் கற்களின் மீது நன்கு பதிக்கப்பட்டிருப்பதால் அதன் அதிர்வுகள் குறைகின்றன. அதன் ஓசையும் பூமியினுள் உறிஞ்சப்பட்டு விடுகின்றன.



ஆனால் பாலத்தின் மீது ரயில் செல்லும்போது இந்த ஸ்வீப்பர் கட்டைகளும் அதைத் தாங்குகிற தூண்களும் பூமியின் மீது பதிக்கப்படாததால் அதன் அதிர்வுகள் அதிகமாகி ஓசையும் அதிகரிக்கிறது.



உள்ளீடற்ற தன்மையாலும் அதிர்வு ஓசை தரையிலும் நீரிலும் எதிரொலிக் கப்படுவதாலும் ஓசை இன்னும் அதிகரிக்கிறது.


***


படித்ததில் பிடித்தது

***




"வாழ்க வளமுடன்"

டெபிட் கார்டு - அன்லிமிடேட் அவஸ்தைகள்!



சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பிரபல நகைக் கடைக்குச் சென்றிருந்தார். சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை வாங்க வேண்டும் என்பது அவரது திட்டம். கையில் சுமார் எழுபதாயிரம் ரொக்கம் இருந்தது. மீதியை டெபிட் கார்டு மூலம் 'ஸ்வைப்’ செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்.


நகையைத் தேர்வு செய்து, பில் போட்டு, கையிலிருந்த பணத்தோடு, மீதிப் பணத்துக்கு டெபிட் கார்டை எடுத்து நீட்ட, கடைக்காரரோ கார்டிலிருந்து வெறும் 25,000 ரூபாய் மட்டுமே 'ஸ்வைப்’ செய்ய முடியும் என்று சொல்ல, நண்பர் டென்ஷனாகி விட்டார். சரி பக்கத்திலிருக்கும் ஏ.டி.எம். சென்டரிலிருந்து பணமாக எடுத்து பில் செட்டில் செய்துவிடலாம் என்ற யோசனையோடு அங்கு சென்றால், அந்த மெஷின் அவுட் ஆப் ஆர்டர்... பிறகென்ன நல்ல நேரத்தில் நகை வாங்கலாம் என வந்த குடும்பத்தினரோடு, அவர் மல்லுகட்டிய அவஸ்தை தனிக் கதை..


உள்ளபடி பார்த்தால், டெபிட் கார்டுகளின் வசதிகள், சௌகர்யங்கள் என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பது தவிர, வேறு வகைகளில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? என்கிற விஷயங்கள் பலருக்குத் தெரிவதில்லை. இதனால்தான் மேற்சொன்னதுபோல பல குழப்பங்கள் நடக்கின்றன.உங்கள் டெபிட் கார்டு பற்றி அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்..



ஏ.டி.எம். பரிவர்த்தனைகள்!

கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் அல்லாமல் மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்தில் ஐந்து முறைதான் பணமெடுக்கலாம். அதன்பிறகு நடக்கும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.


மினி ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் என்கொயரி மற்றும் பின்நம்பர் மாற்றுவது போன்ற பணமல்லாத பரிவர்த்தனைக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது என்றுதான் இதுநாள்வரை இருந்தது. ஆனால், கடந்த ஒன்றாம் தேதி முதல் பிற வங்கி ஏ.டி.எம்.களில் பண பரிவர்த்தனை மட்டுமின்றி நிதியல்லா பரிவர்த்தனையும் சேர்த்து மொத்தம் ஐந்து முறைக்கு மேல் சென்றால் இனி கட்டணம் வசூலித்து விடுவார்கள். ரிசர்வ் வங்கியின் புதிய ஆணை இது.


இருப்பினும், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க சில வங்கிகள் சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. குறிப்பாக இதர வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஐந்து முறைக்கு மேல் செய்யப்படும் நிதியல்லா பரிவர்த்தனைகளுக்கு இருபது ரூபாய்க்குப் பதில் 8.50 ரூபாய் மட்டுமே கட்டணம் என சில வங்கிகள் அறிவித்துள்ளன.




ஏழு நாட்களில் திரும்பக் கிடைக்கும்!


சில இடங்களில் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது பணம் வராமல் போய்விடும். ஆனால், நமது கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டிருக்கும். இது சம்பந்தமாக புகார் கொடுத்தால் பன்னிரண்டு நாட்களுக்குள் அந்த தொகையை வாடிக்கையாளருக்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால்,



பன்னிரண்டு நாட்கள் என்பதை புகார் வந்த ஏழு நாட்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், அதற்குமேல் தாமதமாகும் ஒவ்வொரு நாட்களுக்கும் 100 ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் ஆர்.பி.ஐ. சில மாதங்களுக்குமுன் கூறியிருக்கிறது. எனவே, இனி பணம் திரும்ப கைக்கு கிடைக்க தாமதமானால் வட்டியும் கிடைக்கும்.




எவ்வளவு பணம் எடுக்கலாம்?

சம்பளக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கை வைத்திருப் பவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை ஏ.டி.எம்.-மிலிருந்து பணம் எடுக்கலாம். சில வங்கிகள் 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கின்றன. அதுவும், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் மட்டுமே இந்த அளவுக்கு எடுக்க முடியும்.



மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். மையம் எனில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதனால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதை வங்கி அதிகாரிகளைச் சந்தித்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.




ஷாப்பிங் செய்யும்போது...

ஒரு நாளைக்கு ஏ.டி.எம்.-மில் எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ, அதே மதிப்பிலான தொகைக்கு மட்டுமே ஷாப்பிங்கில் 'ஸ்வைப்’ செய்ய முடியும். சில வங்கிகள் உங்களது பேலன்ஸ் தொகைக்கு ஏற்ப ஷாப்பிங் செய்யும் லிமிட்டை வரையறுத்துள்ளன.



சம்பளக் கணக்கு எனில் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை மட்டுமே ஒரு நாளைக்கு ஷாப்பிங்கின்போது 'ஸ்வைப்’ செய்ய முடியும். ஐந்து லட்சம் ரூபாய் வரை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், நாளன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம், அதுபோல ஷாப்பிங் செய்யவும் முடியும்.


டெபிட் கார்டு தொலைந்தாலோ, அல்லது திருடு போய்விட்டது என்றாலோ அதனால் நமக்கு பெரிய அளவில் பாதிப்புகள் வராமல் தடுக்கவே இது மாதிரியான கட்டுப்பாடுகளை வங்கிகள் வைத்துள்ளன. ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டைப் பயன்படுத்துவது பற்றி ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொருவிதமான நடைமுறையைப் பின்பற்றுகிறது.



அனைத்து வங்கிகளும் ஒரே நடைமுறையைக் கொண்டுவந்தால் பெரும்பாலான சிக்கல்கள் தீரும். ஷாப்பிங் மையங்களில் டெபிட் கார்டை ஸ்வைப் செய்யும்போதும், பின் நம்பரையும் சேர்த்தே பயன்படுத்துவதாக இருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும். சில வங்கிகளின் ஸ்வைப் மெஷினில் இந்த வசதிகள் உள்ளன.



ஆன்லைன் ஷாப்பிங்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு பொருட்களை வாங்கலாம். ஆன்லைனில் ஷாப்பிங் எனில் உங்கள் டெபிட் கார்டின் ரகசிய குறியீடு எண் கொடுக்க வேண்டியிருக்கும். இதிலும் எச்சரிக்கை தேவை.ஷாப்பிங் போவதே ஒரு ஜாலி அனுபவம்தான்.


டெபிட் கார்டு இருக்கே என்று ஹாயாகப் போகிறவர்கள் உங்கள் லிமிட் எவ்வளவு எனத் தெரிந்து கொண்டு போனால் தேவையில்லாத அவஸ்தைகளைத் தவிர்க்கலாம்!





மொத்தமாக எடுப்பதில் ஆபத்தா?



ஏ.டி.எம். குறித்து ஜோக்குகளுக்கு மட்டுமல்ல, பரபரப்பு செய்திகளுக்கும் எப்போதும் பஞ்சமிருப்பதில்லை. லேட்டஸ்ட் பரபரப்பு நூறு ரூபாய் நோட்டுகளாக வந்தால் அதில் ஒரு சிக்கல் ஏற்படும் என்பதுதான்! உதாரணமாக அதிக தொகை எடுக்கும்போது எல்லாமே நூறு ரூபாயாக வரும்பட்சத்தில் பாதிப் பணம் வராமலே போய்விடும் என்ற பரபரப்பு செய்திதான் அது.


''ஆனால் இது உண்மை கிடையாது. இப்படி ஒரு குறைபாட்டுடன் யாராவது ஏ.டி.எம். வைப்பார்களா என்ன?! பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் உள்ள இயந்திரங்களின் வாய்ப்பகுதி, அதிகளவிலான நோட்டுகளைத் தரும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது.



அப்படி இல்லாதபட்சத்தில், அந்த ஏ.டி.எம். மெஷினே நூறு ரூபாய் நோட்டுக்குப் பதில் ஐந்நூறு ரூபாய் வேண்டுமா, ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக வேண்டுமா என்பதில் ஆரம்பித்து இவ்வளவு தொகையை ஒரே தடவையில் தரமுடியாது என்பது வரை தெரிவித்து விடும். அதனால் பிரச்னை எழுவதற்கே வாய்ப்பில்லை'' என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!





***
thanks vikatan
***




"வாழ்க வளமுடன்"

பூமியின் புலம்பல்……( படித்ததில் பிடித்தது )



நான்
பல உயிர்களையும்
பல பொருட்களையும்
என் மடியில்
சுமக்கிறேன்
சுகமாக…..


ஆனால் மனிதனால்
படைக்கப்பட்ட
பாலிதீன் பொருட்கள்


மட்டும் என்றும்
மக்குவது இல்லை
மறைவதும் இல்லை


எரித்தாலும் சுற்றுசூழல்
மாசுபடுகிறது






ஓசோன் மண்டலத்தில்
ஓட்டை ஏற்படுகிறது


மனிதர்களுக்கு சுவாசகோளாறு
கேன்சர், குழந்தை பேரின்மை
இன்னும் என்னன்னவோ
கொடுமைகள் !


என்னையும்,
உங்களையும்(மனிதர்கள்)
காப்பாற்றும் சிறிய முயற்சியாக



நமது நகராட்சி
பாலிதீன் பைகளை
தடை விதித்துள்ளது


இதற்க்கு நிங்களும்
எனக்கு உதவுவிர்களா?




***
thanks manalagan
***




"வாழ்க வளமுடன்"

உணவு கலப்பட தடை சட்டம் 1954 படிவங்கள் டவுன்லோட் செய்ய



படிவங்கள் உங்கள் பார்வைக்கு (பார்வையிட லிங்கை அழுத்தவும்)

1) படிவம் 6

http://foodsafetynews.files.wordpress.com/2008/06/foodsampleformat_vi.doc





2) படிவம் 7 மற்றும் ஸ்பெசிமன் படிவம்

http://foodsafetynews.files.wordpress.com/2008/06/foodsampleformatfor_viispecimanseal.doc




3) ஸ்தல சுகாதார அதிகாரிக்கு ஒப்படைப்புமற்றும் ஒப்புகை சீட்டு படிவம

http://foodsafetynews.files.wordpress.com/2008/06/lha_intimationack-form.doc




4) ரசீது வாங்கும் படிவம


http://foodsafetynews.files.wordpress.com/2008/06/bill_format.doc




5) படிவம்16 (ஒட்டும் சீலிப்)

http://foodsafetynews.files.wordpress.com/2008/06/foodsampleslip_format16.doc



6) உணவு கலப்பட தடைச்சட்டத்தின் கீழ்
இணைஇயக்குனருக்கு அனுப்பும் படிவம்(PROFORMA)


http://foodsafetynews.files.wordpress.com/2008/06/foodsampleproforma.doc



7) நீதிமன்றத்தில் அளிக்க வேண்டிய CHARGESHEET


http://foodsafetynews.files.wordpress.com/2008/06/foodsample_chargesheetforms.doc




**


மேலும் பல முக்கிய கடிதங்கள் மற்றும் அனைத்து படிவங்களும்ஒருங்கே பெற இங்கே அழுத்தவும்

http://foodsafetynews.files.wordpress.com/2008/06/foodsample_forms_all.doc

*

உங்கள் மேலான கருத்துகளை இமெயில் செய்ய
senthil.fso@gmail.com




***
thanks senthilfso
***






"வாழ்க வளமுடன்"

சாலையோர உணவகங்கள் ( உணவு ) நல்லதா,கெட்டதா!



பாரம்பர்ய உணவா? அப்படின்னா இன்னாதுப்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் அளவிற்கு அந்நிய உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.



இந்த ஆதிக்கப்பிடியில் சிக்கித் தவிப்பது ஸ்டார் ஹோட்டல்கள் + ஹைக்ளாஸ் ஃபேமிலிகள் மட்டுமல்ல. சாலையோர நடைபாதை உணவகங்களும் அதை நம்பிச் சாப்பிடும் கஸ்டமர்களும் தான். இப்போதெல்லாம் உணவுகள் வேகவைக்கப்படுவதைப் பார்ப்பதற்கே அரிதாக இருக்கிறது.



உணவுகளை வாணலியில் போட்டு வறுத்து பாதியை கீழே கொட்டி மீதியை ப்ளேட்டில் கொட்டி ஃபாஸ்ட்டாக கொடுக்கப்படும் உணவுகளுக்கு ஏக போக வரவேற்பு. ஆகவே சாதாரண மக்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட வேண்டுமெனில் தங்கள் சொத்தையே எழுதி வைத்துவிட்டுத்தான் வரவேண்டும்.



எனவேதான் விலை குறைந்த சாலையோர உணவுகளை பலர் விரும்பியும், விரும்பாமலும் சாப்பிடுவதன் காரணம். வெளியூரிலிருந்து வேலை தேடி வந்திருக்கும் பேச்சுலர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் கேஸ் சிலிண்டர் கிடைக்கப் பெறாமல் நடைபாதைக் கடைகளை நோக்கி நடை போடுவதும் இன்னொரு காரணம்.




சரி, எது எப்படியோ சாலையோர உணவகங்கள் ஏழைகளின் அக்க்ஷய பாத்திரமாகவும், பேச்சுலர்களின் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலாகவும் மாறிப் போனாலும் இதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம்.




ஏனெனில் சுகாதாரமற்ற குடிநீர், தரம் குறைந்த உணவு வகைகள், சுத்தமில்லாத பாதுகாப்பு, சுவை கூட்ட உடலுக்குத் தீங்கைக் கொண்டு வரும் எசன்ஸ் கலப்பது என தரமற்ற உணவுகளால் பலவிதமான நோய்களும் பிரச்சினைகளும் நம்மை தாக்கி மரணப்படுகுழியில் தள்ள பல் இளித்து நிற்கின்றன சாலையோரங்களில்.




சாலையோர உணவக ஓனர்களின் வயிற்றில் அடிக்கும் விஷயமாக இருந்தாலும், பல்லாயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும் ஓர் விழிப்புணர்வு விஷயமாகும்.



எனவேதான் தரமற்ற உணவுகளால் என்னமாதிரியான பிரச்சினைகளும் நோய்களும் ஏற்படும்? இதைத் தடுக்க என்ன வழி? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? என பல கேள்விகள் மூளையைச் சீண்ட ஆரம்பித்திருக்கின்றன.




சாலையோரக் கடைகளில் சுத்தமான தண்ணீர் கிடையாது. சமையல் அறை அவுங்களுக்குத் தனியா இல்லை. இதனால் ஏற்படுகிற ஆரோக்கியக் கேடுகள் அவங்களுக்குத் தெரியாமலேயே இருக்கு. இதை அறியாமைன்னு கூடச் சொல்லலாம்.




99 சதவீதம் கையை சுத்தமா கழுவுறதுமில்ல, கையுறை (க்ளவுஸ்) அணியறதுமில்ல. இதனால அவங்க உடம்புல இருக்குற கொக்கிப்புழு சாப்பிடுறவங்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கு. சமைக்கிறவங்க சுத்தமா இருந்தாலும் சமையல் முறைகளிலும் சத்தம் தேவை. சமைச்ச உணவுகள் சரியா மூடி வைக்காம வாகனங்களின் மாசு நிறைந்த காற்று பட்டு நச்சுக்கிருமிகள் உள்ளே புக வாய்ப்பு இருக்கு.




அதுவும் பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ்னு எல்லாத்திலேயுமே கலர் பவுடர், எசன்ஸ் எல்லாம் கலக்குறாங்க. இதனால நிச்சயமா உடம்புல பாதிப்பு ஏற்படும். தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு போனப்போ, சாலையோர உணவுகளை அவ்வளவு சுத்தமாக கையுறை அணிந்து உணவு பரிமாறுவதைப் பார்த்து அதிசயித்துப் போனேன்.




ஆனா நம்ம ஊர்ல அப்படியில்லைன்னு நெனைக்கும் போது கொஞ்சம் வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கு. இதுக்கு அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான் சரியான பயிற்சிகளைக் கொடுத்து சாலையோர உணவகங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முன் வரணும்.




நுகர்வோர்களை(வாங்கிச் சாப்பிடும்)யும் பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்கணும். சமீபத்துல சாலையோர கடைகளில் மாமிசம் டேஸ்ட்டா இருக்கவும், நல்லா வேகணும்ங்கிறதுக்காகவும் பேராசிட்டமல் மாத்திரையை கலக்கிறாங்கங்கிறது தெரிய வந்திருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயம்.




இப்படி ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளில் கலப்படமோ, தரம் குன்றியதாக சுகாதாரம் அற்றதாக இருந்தால் உங்களின் நகராட்சி, அல்லது மாநகராட்சி, சுகாதார அலுவலரிடம் புகார் கொடுக்கலாம்.




அதுவே கிராமப்புறமாக இருந்தால், சுகாதார நோய்த்தடுப்பு மற்றும் உணவு ஆய்வாளர் அல்லது மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுத் தலைவரிடம் புகார் கொடுத்தால் 1954 உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.




இப்போ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் வந்துடுச்சு. தொடர்ந்து உணவுக் கலப்படம், தரமற்ற உணவுகளைத் தயாரித்து விற்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றுக் கோளாறோ அல்லது உடல் ரீதியான பாதிப்புகளோ ஏற்பட்டால் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களில் புகார் செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதோடு நஷ்டஈடும் வழங்கப்படும்.



அதேபோல சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலம் பதிவு பெற்ற உணவகங்களில் சாப்பிடுவது நுகர்வோருக்குப் பாதுகாப்பானது. பாதிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக புகார் செய்யத் தயங்க வேண்டாம் என்கிறார் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் க.ராஜாராமன், ஐ.ஏ.எஸ்.



இதனால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் நோய்கள் குறித்து குடல் இரைப்பை மற்றும் லேபரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. சதீஷிடம் கேட்டோம் இதில் சிந்தித்துச் செயல்பட வேண்டியது மூன்று விஷயங்கள் இருக்கின்றன.



அதாவது உணவு சுகாதாரம், என்ன இருக்கிறது?

எந்த மாதிரியான சமையல் முறை? என்பதை கவனிக்க வேண்டும்.


உணவை சூடாகச் சாப்பிட்டால் நுண்ணுயிர்க் கிருமிகள் உணவில் இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் எதில் வைத்து சாப்பிடுகிறோமோ அதிலும் பாதிப்பு இருக்கக்கூடும்.


சுத்தமில்லாத பாத்திரமாக இருந்தால் பாக்டீரியா, வைரஸ், அமீபா போன்ற கிருமிகள் உணவு வழியாக நமக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். ஆக, உணவு, பாத்திரம், தண்ணீர், மூன்றும் முக்கியம்.
உணவு சுகாதாரம், இல்லை என்றால் பாக்டீரியா மூலம் டைஃபாய்டு போன்ற வியாதிகள் வந்து இம்சிக்கக்கூடும்.



வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டால் மஞ்சள் காமாலை நோய் (ஹெப்படைட்டிஸ் ஏ,இ) வர வாய்ப்பிருக்கிறது. அதுவே அமீபா என்றால் வயிற்றுப் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதெல்லாம் சுகாதாரமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள்.



இதுவே உணவில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் தரமான அரிசியா? தேவையான அளவு காரமா? உப்பு, எண்ணெய், தரமானதுதானா? அளவு சரியா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் நெஞ்செரிச்சல், அல்சர், கேஸ் ப்ராப்ளம் எல்லாம் ஏற்படும்.



அடுத்து சமையல் முறை. உணவு நன்கு வேகவைக்கப்பட்டதாக இருந்தால் பிரச்சினை இல்லை. சரியாக வேகாமல் பாதி அளவு வெந்திருக்கும் ஃப்ரைடு ரைஸ், பிரியாணிகளால் அஜீரணக் கோளாறு, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், எல்லாம் ஏற்படக்கூடும். அதே போல் எண்ணெயை திரும்பத் திரும்ப (ரீ யூஸ்) பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, கேஸ் ப்ராப்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுபோற குறிப்பிட்ட பல பிரச்சினைகள் சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதால் ஏற்படுகின்றன.



இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்வதால் அல்சர் போன்ற பிரச்சினைகள் வருவதோடு இரைப்பை மற்றும் சிறுகுடலில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே, ஏற்கெனவே அசிடிட்டி, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் இதுபோன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் குடல் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துதான் காப்பாற்றும் சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்.



சாலையோர உணவகங்கள் என்பது லிவீஸ்மீறீஹ் ஷ்ஷீஷீபீ அதாவது சுய வேலைவாய்ப்பு. வேலைக்கு ஆள் சேர்க்கத் தேவையில்லை. ஏழை எளியவர்கள் அனைவரும் (பணக்காரர்கள் விரும்பினால்) சாப்பிட முடியும். ஏனென்றால் உடனுக்குடன் கேட்டதும் சூடாக அதே நேரத்தில் விலை கம்மியாகவும் கிடைக்கும்.



எனவே பலர் சாலையோர கடைகளை விரும்பிச் செல்கிறார்கள். இதுக்கு சட்டம் போட்டு இவர்களை ஒடுக்குவதை விட ட்ராஃபிக் பாதிக்காதவாறு, சுத்தமாக, சுகாதாரமாக உணவுகளைத் தயாரித்து விற்க அரசாங்கத்தின் மூலம் திட்டம்தான் போட வேண்டும். அதற்கான சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். அந்தந்த ஏரியாவுக்கு இத்தனை கடைகள் என்று பிரித்து சரியான இடத்தைக் கொடுத்து அருகில் சுத்தமான குடிநீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.



விலைக்கு ஏற்ப அங்கு சாப்பிடும் உணவுகள் கலப்படம் நிறைந்தவையாகவும், எண்ணெய், காய்கறிகள், சிக்கன், மட்டன்களில் தரம் குறைந்ததாகவும் இருக்கும்.


இவற்றையெல்லாம் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். வெயில் காலம் வேறு ஆரம்பித்துவிட்டதால் உணவு கெட்டுப் போயிருந்தால் கூட தெரியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிறார் சிட்டிஸன் கன்சியூமர் சிவிக் ஆக்ஷன் குரூப் துணை இயக்குனர் ஷோபா ஐயர்.



கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இண்டியாவின் இயக்குனர் சந்தானராஜ் கூறும்போது, சாலையோரக் கடைகளில் சரியான தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை. வாகனப் புகைகள் உணவில் புகும். உணவின் குவாலிட்டியும் குறைவு. போண்டா, பஜ்ஜிகளை பேப்பரில் வைத்துக் கொடுப்பார்கள். அந்த பேப்பரில் உள்ள எழுத்து அச்சு நம் உடலுக்குள் சென்றால் இரத்த சோகை வியாதி ஏற்படும்.



சிலர் உணவில் சுவை கூட்டவும், மணமூட்டவும் அஜினமோட்டோ கலக்குறாங்க. இதனால் எந்த நன்மையுமில்லை. கேன்சர் மாதிரியான பிரச்சினைகள் வரும். ப்ளாஸ்டிக் கவரில் வைத்துச் சாப்பிடுவதாலும் கேன்சர் போன்ற பிரச்சினைகள் வரும். எல்லாப் பொருட்களாலுமே கலப்படும் வந்துவிட்டது.



பார்த்துப் பார்த்து வாங்கி சமைக்கும் உணவுகளிலேயே பாதிப்புகள் இருக்கின்றன. சம்பாதிக்கும் நோக்கத்தோடு யாரோ சாப்பிட்டு என்ன ஆனால் நமக்கென்ன என்ன? என்று அலட்சியத்தோடு வாங்கி சமைக்கும் போது எந்த மாதிரி பிரச்சினைகள் வருகிறது என்பதை சொல்லித் தானா தெரிய வேண்டும்.



டாக்டர். ஜெயந்தி (டயட்டீஷியன்) இதுபற்றி கூறும் போது,

சுவைகூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. வீட்டில் இயற்கையான பூண்டு, இஞ்சி, மசாலா செய்து சாப்பிடுவதற்கும் வெளியில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எண்ணெயை 1000சி சூடேற்றிய பிறகு திரும்பவும் அளவுக்கு மீறி சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.



மசாலா + கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் குடலை அரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தரமற்ற பிரியாணிகளாலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பிரியாணிக்கு வெங்காயப்பச்சடியை தயிரோடு கலந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி கிடைக்கிறது.



கத்திரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் பிரியாணியிலுள்ள கொழுப்பை உடலில் சேர்க்காமல் இருக்கும். வேளா வேளைக்கு வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே தள்ளக்கூடாது. ஒரு சராசரி மனிதன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி சாப்பிடலாம். அதுக்குக் கூட சரியான உடற்பயிற்சி தேவை.



முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் கண் பிரச்சினை, இடுப்பு வலி, மூட்டு வலியெல்லாம் வரும். இப்போது உணவில் கெமிக்கல் இருப்பதால் 20 வயசிலேயே எல்லாப் பிரச்சினையும் வர ஆரம்பித்துவிட்டது.



எண்ணெய், மசாலாக்கள் அதிகரிப்பால் கேன்சர், உணவுக்குழாய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எல்லா கேட்டரிங் சென்டர்களிலும் உணவு தயாரிக்கும் முறைகளை (பிகிசிசிறி) கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு தேவை என்கிறார்.



இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். எஸ்.கிருஷ்ணாவிடம் பேசினோம்.

222 ஆஃப் தி முன்சிபல் ஆக்ட் படி சாலையோரங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. ஆனால், சாலையோரங்களில் பலர் கடைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஏழை, எளிய மக்களிடம் வரவேற்பும் பெற்றுள்ளது.



அதற்காக சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. முக்கியமாக சுத்தமில்லாத தண்ணீரால் ஈக்கோலை, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். 500 எம்.எல். தண்ணீரில் ஆயிரக்கணக்கான கிருமிகள் அடங்கியிருக்கிறது. சில உணவுகளை ஃபிரிஜ்ஜில் வைத்து வெளியே வைக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரித்துவிடும்/. இதற்கு கியீறீஷீஷீவீஸீ விஷத்தன்மை என்பார்கள்.



சிலர் உணவுகளில் மாத்திரைகள் கலப்பது அதிகரித்து விட்டது. இதனால் தலைவலி, உடம்பு வலி என பல பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தடுக்க ரெயில்வே ஸ்டேஷன் உணவகங்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது போல் சாலையோர உணவகங்களுக்கும் லைசன்ஸ் கொடுத்து முறைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


ம்… சொல்லவேண்டியதை சொல்லியாச்சு!


***


இந்த பதிவு சில வாருங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டு இருந்தாது..... படித்ததில் இப்போது அரசு அதிகாரிகள் மாறி இருக்கலாம் ....

*

நல்ல உபயோகமான பதிவு அதனால் ஆழ்கடலில் படித்தேன் ....



***
thanks senthilfso
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "