...

"வாழ்க வளமுடன்"

06 அக்டோபர், 2010

சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...( டாக்டர்களின் ஆலோசனை )

சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...


1. நண்பன் குடித்த பாட்டிலை வாங்கி, வாய் வைத்து தண்ணீர் குடிப்பது, ஒரே டம்ளரில் டீ குடிப்பது, ஒருவர் கர்சீப்பை இன்னொருவர் துடைத்துக் கொள்வது, தோழி சுவைத்த சாக்லெட்டை வாங்கி கடிப்பது... இது போன்ற விஷயங் கள் நட்பின் நெருக்கத்தை காட்ட செய்யலாம்.

*

2. ஆனால், அதனால் எந்த அளவுக்கு தொற்றுநோய் பிரச்னை ஏற்படுகிறது என்பது பலருக்கு தெரியாது. சிறிய விஷயமானாலும், கவனமாக இருந்தால், ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது.

*

3. உங்களை பரிசோதிக்கும் டாக்டரை பாருங்கள்; அவர் பரிசோதித்த பின், டெட்டால் திரவத்தை கையில் தடவிக்கொள்வார்; சோப்பினால் கையை கழுவுவார்.

*

4. அப்படியிருக்கும் போது, நாம் கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டாமா? இது பலருக்கு தெரிவதில்லை. சுத்தம் இருந்தால், பாதி உடல் கோளாறுகளை தவிர்க்கலாம்.

*

5. திறந்து வைத்த ஆறிய சாப்பாடு, குழம்பு, கறி வகைகள், ஈ மொய்த்த பண்டங்கள் போன்றவற்றால் தான் பல தொற்றுநோய்கள் வருகின்றன.

*

6. காலை, மாலை குளிப்பது, பல் தேய்ப்பது, கை, கால்களை சுத்தமாக வைத்திருப்பது, வீட்டில் தூசி படியாமல் பார்த்துக்கொள்வது, அதிக வேலை செய்யாமலும், அதே சமயம் சுறுசுறுப்பு குறையாமலும் இருப்பது, வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பது,

*

7. குளிர் பானம் போன்றவற்றை குறைப்பது, முடிந்தவரை வாகனத்தை தவிர்த்து நடப்பது, யோகா போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவது போன்றவை மட்டுமே, உங்களுக்கு நாற்பதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் வழிகள்.டீன் ஏஜில் இருப்பவர்கள் இதை இப்போதே உணர்ந்தால், கண்டிப்பாக எந்த ஆரோக்கிய குறைவுக்கும் ஆளாகமாட்டார்.


*

8. சர்க்கரை, உப்பு இரண்டுமே தொல்லை தான். இரண்டும் மிகவும் சரிசமமாக இருக்கும் வரை பிரச்னையில்லை. இரண்டில் உப்பு தான் மிக ஆபத்தானது. சிலர் சாப்பாட்டில் உப்பு போதவில்லை என்று தனியாக உப்பை சாம்பார், ரசம், பொரியலில் போட்டு சாப்பிடுவர். இது மிகக்கெடுதல் என்கின்றனர் டாக்டர்கள்.முப்பது வயது வரை பரவாயில்லை; ஆனால், அதை தாண்டி உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டால், தினமும் சாப்பாட்டுக்கு ஈடாக மாத்திரைகளை விழுங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

*

9. சாதாரண இருமல், காய்ச்சல், ஜீரணத்துக்கு எல்லாம் விழுங்கும் ஆன்டாசிட்ஸ், லேக்சடிவ்ஸ், ஆஸ்பிரின்ஸ் மாத்திரைகளில் சோடியம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகளில் சோடியம் உள்ளது; போதாக்குறைக்கு டேபிள் சால்ட்டை போட்டுக்கொண்டால் என்னாவது? நீங்கள் எப்படி, உப்பு பிரியராக இருந்தால் கண்டிப்பாக "தடா' போடுங்க!


*

10. பெரும்பாலோருக்கு ஷுகர் இருக்கத்தான் செய்யுது. ஆனால்,வெளியில் தெரியாமல் உள்ளது. குறிப்பிட்ட வயதில் தன் வேலையை ஆரம்பிக்கிறது அது. அதனால், 30 வயதை தாண்டினாலேயே ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்துக்கொள்வது நல்லது. அதிகமாக குடிநீர், திரவ உணவு எடுத்துக்கொள்ளலாம். எந்த மருந்தை சாப்பிட்டாலும், டாக்டரின் ஆலோசனை முக்கியம்.

*

11. சிலருக்கு சாப்பிட்டாலே தலைவலி வரும். அதாவது, குறிப்பிட்ட உணவுகளை, இனிப்புகளை, பழங்களை சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி சாக்லெட், சீஸ், சிட்ரஸ் அடிப்படையிலான பழங்கள், தக்காளி, ப்ரைடு உணவுகள், சில கடலை வகைகள் , குளிர்பானங்கள் ஆகியவை சிலருக்கு அடிக்கடி சாப் பிட்டால், பாதிப்பு வரும். இவற்றில் மோனோசோடியம் க்ளூட்டோமேட் என்ற ரசாயனம் உள்ளது தான் இதற்கு காரணம். இதனால், சிலருக்கு மட்டும் தலைவலி வரும்.


*

12. ஆண், பெண்கள் இரண்டு பேருக்கும் கால்சியம் மிக முக்கியம். எலும்புகள் வலுவாக இருக்க இது இல்லாமல் முடியாது. ஆனால், பெண்களை பொறுத்தவரை, கண்டிப்பாக இதன் தேவை உள்ளது.பெண்கள், வயதான பின் கால்சியம் மாத்திரை விழுங்கலாம், கால்சியம் சத்து உணவுகளை சாப்பிடலாம் என்றால் முடியாது; அப்போது மூட்டு வலி ஆரம்பித்துவிடும்.டீன் ஏஜ் பெண்கள், பால், பால் பொருட்கள், தயிர், ரெய்த்தா, கீர், குல்பி போன்றவற்றை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், 35 வயதுக்குள் இவற்றை சாப்பிட்டு வந்தால் தான் அதன் பின் 50களில் மூட்டு வலி என்று புலம்ப வேண்டாம்.


*

13. கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது, எந்த வித அழுத்தமும், உடலில் எந்த பாகத்துக்கும் தராமல் உட்கார வேண்டும்; வேலை செய்யும் போது, கைகளுக்கோ, இடுப்புக்கோ இறுக்கமோ, அழுத்தமோ இருக்கக்கூடாது. கைகளை , கம்ப்யூட்டர் கீபோர்டில் சமமாக படியும் படி வைத்து பணி செய்ய வேண்டும்; நெடுக்காக வைத்து செய்தால், உள்ளங்கையிலும் வலிக்கும். உடலில், முக்கியமாக கழுத்து வலி தான் கம்ப்யூட்டர் பணியில் அடிக்கடி ஏற்படும்.


இருக்கையில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் மூழ்கி விடக்கூடாது; எந்த வித கழுத்து அழுத்தமும் இல்லாமல் ரிலாக்சாக கம்ப்யூட்டரில் பணி செய்ய வேண்டும். கழுத்தை குனிந்தோ, கம்ப்யூட்டருக்குள்ளேயே தலையை விட்டுக் கொள்வது போலவோ வேலை செய்யக்கூடாது என்பது டாக்டர்களின் ஆலோசனை.

*

14. உடலில் தீக்காயம் பட்டால், உடனே ஆயின்ட் மென்டை தேடாதீங்க. சாதாரண அடுப்பு சூடு பட்ட காயம், தீக்காயம் என்றால், காயம் பட்டவுடனேயே என்ன செய்யணும் தெரியுமா? எவ்வளவோ முறை சொல்லியும் பலரும் ஒரே தவறை செய்வாங்க. அது தான் மருந்து போடறது! அதை செய்யவே கூடாது. காயம் பட்டவுடன், குளிர்ந்த தண்ணீரில் மூழ்க விட வேண்டும்; குறைந்தபட்சம் 10 நிமிடமாவது அப்படியே இருக்க வேண்டும். அதன் பின், பெரிய காயம் என்று நினைத்தால், டாக்டரிடம் காட்டலாம். மற்றபடி வீட்டுவைத்தியம் எதுவும் செய்யக்கூடாது; காயம் தான் அதிகமாகும்!

*

15. குழந்தைக்கு ஒரு வயது, இரண்டு வயதாகும் போதே மீன் உணவை தரலாம். வாயில் சுவைக்கத்தெரிந்தால், எளிதில் விழுங்கும் வகையில் உள்ள மிருதுவான மீன் உணவு தரலாம். குழந்தைகளுக்கு தரும் போது, சோடியம், கொழுப்பு அதிகம் இல்லாத மீனாக பார்த்து வாங்க வேண்டும். அதுபோல, எலும்புகள் இருக்கவே கூடாது.



***
http://www.viparam.com/

***



"வாழ்க வளமுடன்"


கருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்!

கர்ப்பமாக உள்ள பெண்கள் நாளொன்றுக்கு இரண்டு சிறிய கோப்பை அளவுக்கு மேல் காபி அருந்த வேண்டாம் என்றும் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று‌ம் பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.




நாளொன்றுக்கு 200 மி‌ல்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

*

சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் கேள்வித்தாள்க‌ள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதாவது குறிப்பாக இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.

*

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் விவரங்கள் "பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில்" வெளியிடப்படவுள்ளது.

*

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மி‌ல்‌லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் தீய விளைவுகளை வெளி‌யிட்டிருந்தது.

*

கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.


***
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/21124.html

***

"வாழ்க வளமுடன்"

பக்கவாதத்தைக் குணமாக்கும் சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸ் மற்றும் வெள்ளைக் கடலையில் (கொண்டை கடலை அல்லது மூக்கு கடலை) உள்ள சத்துகள் ஸ்டிரோக் (Strokes) எனப்படும் பக்கவாதம் உள்ளிட்ட வாதம் தொடர்புடைய நரம்பியல் நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று தெரிய வந்துள்ளது.





மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இந்த வகை பயறுகளை கொடுப்பதால், அவர்களுக்கு நல்ல குணம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

*

மூளையின் நரம்பு மண்டலத்தில் இரத்தம் பயணிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாலேயே பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு இரத்தம் சென்று வருவதில் ஏற்படும் பாதிப்பினாலேயே இதுபோன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

*

எனவே உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துவோர், பயறு வகைகளுடன் கூடிய சமச்சீர் உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வுக்குத் தலைமை வகித்த ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹங்-ஃபேட் தெரிவித்துள்ளார்.

*

ஐரோப்பிய இதய மருத்துவ இதழில் அவரது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


***
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/17695.html

***

"வாழ்க வளமுடன்"

கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும்

கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.





கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுகிறதா என்று லண்டன் ராயல் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் ஆய்வு நடத்தினார்கள்.

*

1. பாதம் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்கு தீனி ஆகியவற்றை கர்ப்பிணி பெண்களும், பால் கொடுக்கும் பெண்களும் சாப்பிட்டால் அது குழந்தையை கடுமையாக பாதிக்கும் என்று தெரிய வந்தது.

*

2. குழந்தை வயிற்றில் இருக்கும் போதும், பின்னர் அது தாய்ப்பால் குடிக்கும் போதும் தான் உடலில் உள்ள பல உறுப்புகள் ஒருங்கிணைந்து வளர ஆரம்பிக்கின்றன.

*

3. அப்போது தாய் நல்ல சத்தான உணவுகள் சாப்பிட்டால் அதன் மூலம் குழந்தை உறுப்புகளும் நன்றாக வளரும்.

*

4. அதற்கு பதில் நொறுக்கு தீனி, பாடம் செய்யப் பட்ட உணவுகளை சாப்பிடும் போது அது உறுப்பு வளர்ச்சிகளை பாதிக்கிறது.

*

5. இதன் மூலம் குழந்தைகளுக்கு 2-ம் நிலை நீரழிவு நோய் ஏற்பட அதிகமாக வாய்ப்பு இருக்கிறதாம். உறுப்புகளின் செயல்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படுமாம்.

*

6. மனிதனும், எலியும் கிட்டதட்ட ஒரே மாதிரி உணவு பழக்கங்களை கொண்டுள்ளன.

*

எனவே எலிகளுக்கு இந்த உணவுகளை கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்த போது தெரிய வந்தது.

***
http://www.viparam.com


***

"வாழ்க வளமுடன்"

எலு‌ம்புறுக்கி நோயும் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடு!

ஆரோ‌க்‌கியமாக உ‌ள்ள பெரு‌ம்பாலான குழ‌ந்தைக‌ளு‌ம், இளைஞ‌ர்களு‌ம் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடுட‌ன் இரு‌ப்பதாகவு‌ம், ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ‌ரி‌க்க‌ட்‌ஸ் போ‌ன்ற எலு‌ம்பு நோ‌ய்க‌‌ள் தா‌க்காதவ‌ண்ண‌ம் ந‌ம்மை‌ப் பாதுகா‌க்‌கி‌ன்றன. எனவே ‌வி‌ட்ட‌மி‌ன்-டி தேவை இ‌ன்‌றியமையாதது எ‌ன்று‌ ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.




அமெ‌ரி‌க்கா‌வி‌ல் உ‌ள்ள ‌பிலடெ‌ல்ஃ‌பியா மாகாண‌த்தை‌ச் சே‌ர்‌ந்த குழ‌ந்தைக‌ள் மரு‌த்துவமனை மரு‌த்துவ‌ர் பா‌பி‌ட்டி ஜ‌மீ‌ல் தலைமை‌யி‌ல் மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ல் இது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

*


இ‌ந்த ஆ‌‌ய்‌வி‌ல் 6 முத‌ல் 21 வயது‌க்கு உ‌ட்ப‌ட்ட 382 ஆரோ‌க்‌கியமான குழ‌ந்தைக‌ளை ப‌ரிசோதனை செ‌ய்த‌தி‌ல் அவ‌ர்களு‌க்கு ‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைவாக இருப்பது தெ‌ரிய வ‌ந்ததாக ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

*


இ‌ந்த ஆ‌ய்வ‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்ட குழ‌ந்தைக‌ள் சா‌ப்‌பிடு‌ம் உணவு உ‌ள்‌ளி‌ட்ட சா‌ப்பா‌ட்டு வகைக‌ளி‌ல் இரு‌ந்து பெற‌ப்படு‌ம் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ‌யி‌ன் அளவு, உட‌ல் எடை ஆ‌கியவ‌ற்றை சோதனை செ‌ய்து‌ள்ளன‌ர்.

*


இ‌தி‌ல் பா‌தி‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட குழ‌ந்தைக‌ளி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவானது குறை‌ந்து காண‌ப்ப‌ட்டதாகவு‌ம், அதாவது 55 ‌விழு‌க்காடு குழ‌ந்தைக‌ளி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு குறை‌ந்து இரு‌ந்ததாகவு‌ம், ஒ‌ட்டு மொ‌த்த‌‌த்‌தி‌ல் இ‌ந்த ஆ‌‌ய்வு‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்ட 68 ‌விழு‌க்காடு குழ‌ந்தைக‌ள், இளைஞ‌ர்க‌ளி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி‌யி‌ன் அளவு கு‌‌ளி‌ர் கால‌ங்க‌ளி‌‌ல் ‌மிக‌க் குறைவாக இரு‌ப்பது தெ‌ரியவ‌ந்ததாக ஜ‌மீ‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

*


வி‌ட்ட‌மி‌ன்-டி ‌நிலையை‌த் தெ‌ரி‌‌ந்து கொ‌‌ள்வத‌ற்கு ‌சிற‌ந்த வ‌ழி ஒருவ‌ரி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி மூல‌க்கூ‌றி‌ல் ஒ‌ன்றான 25- ஹை‌ட்ரா‌க்‌ஸி ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு மூல‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளவதுதா‌ன் எ‌ளிது.

*


மொ‌த்த‌த்‌தி‌ல் ‌‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடுகளு‌க்கு மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சை முறைக‌ளி‌ல் அ‌வ்வளவாக மு‌க்‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌கூ‌றியு‌ள்ளன‌ர்.

*


அ‌திலு‌ம் கு‌றி‌ப்பாக குழ‌ந்தைகளு‌க்கு இ‌ந்த குறைபாடு எ‌ந்த வகையான ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பது கு‌றி‌த்து இ‌ன்று‌ம் முழுமையாக க‌ண்ட‌றிய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் பா‌பி‌ட்டி ஜ‌மீ‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

*

1. எலு‌ம்பு‌க் கூட்டின் தசை நா‌ர் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌‌ற்கு ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ‌யி‌ன் ப‌ங்குப‌ணி இ‌ன்‌றியமையாதது.
*
2. நமது உடலு‌க்கு‌த் தேவையான ‌வி‌ட்ட‌மி‌ன்-டி பா‌ல் மூல‌ம் ‌கிடை‌க்‌கிறது.

*

3. ஆனா‌ல் ‌வி‌ட்ட‌மி‌ன்-டியை அ‌திக‌ரி‌க்க ‌மிக‌ச் ‌சிற‌ந்த வ‌ழி நமது உட‌லி‌ல் சூ‌ரிய ஒ‌ளி அ‌திக அள‌வி‌ல் படு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌‌ள்வது மூல‌ம்தா‌ன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

*


கடுமையான ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ப‌ற்றா‌க்குறை தசைகளை வலு‌வில‌க்க‌ச் செ‌ய்வதுட‌ன், எலு‌ம்புக‌ளி‌ன் தாது‌க்களை பா‌தி‌ப்படைய‌ச் செ‌ய்வதுட‌ன் எலு‌ம்பு நோ‌ய்களை உருவா‌க்கு‌கினறன. இதனை‌த் த‌‌விர நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு நடைமுறைக‌ளிலு‌ம் இவை மு‌க்‌கிய ப‌ணியா‌ற்று‌கி‌ன்றன.

*


இர‌த்த‌த்‌தி‌ல் ‌வி‌ட்ட‌மி‌ன் அளவு குறை‌ந்தா‌ல் அது இர‌த்த அழு‌த்த‌ம், பு‌ற்றுநோ‌ய், ப‌ன்முக அணும உ‌ள்ள‌ரி‌க் கா‌ழ்‌ப்பு (Multiple selorisis), முத‌ல் வகை ச‌ர்‌க்கரை நோ‌ய் முத‌லிய நோ‌ய்க‌ள் வர காரணமாக அமை‌ந்து‌விடு‌‌ம்.

*

இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு‌க் குறைபாட்டிற்கும், தொ‌ப்பை‌க்கு‌ம் தொட‌ர்பு உ‌ள்ளதாகவு‌ம் ஆய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

*


இது‌தொட‌ர்பாக மேலு‌ம் ஆ‌ய்வுக‌ள் தேவையெ‌ன்று‌ம், குழ‌ந்தைகளு‌க்கு இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு எ‌ந்த அளவு இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது தொட‌ர்பாகவு‌ம், ‌வி‌ட்ட‌மி‌‌ன் உ‌ட்கொ‌ள்ளு‌ம் த‌ற்போதைய ப‌ரி‌ந்துறையை மறுப‌ரி‌சீலனை‌ச் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஜ‌மீ‌ல் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

***
http://www.viparam.com
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "