...

"வாழ்க வளமுடன்"

01 ஆகஸ்ட், 2015

ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

 
 
காலை 6 மணி :
 
 டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.
 
 
 
9 மணி :


 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
 
...
11 மணி :

மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.


மதியம் 1 மணி :


எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.



மாலை 4 மணி :

காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.


மாலை 5.30 மணி :


ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.


இரவு 8 மணி :


காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்.
 
 


***
fb
***



"வாழ்க வளமுடன்"
      

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காதா!?


 
 
நான் இவைகளை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று
பெருமையாகச் சொல்வார்கள். சிலருக்கோ தயிர் இல்லாமல் ஏதுமில்லை.
தயிர் நம் உடலுக்கு ஓர் அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியைத் தருவது தயிர்தான்.


பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து, 32% பால்தான் ஜீரணமாகி இருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.


பாலில் ளாக்டோ இருக்கிறது. தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியைத் தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.


வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.


பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியைக்
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.


அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது

 வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும்.
பாலைத் திரித்து உருவாக்கபடுவதுதான் பனீர். (பனீரைத் தனியாக எடுத்த பிறகு இருப்பத் புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது).


பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளைச் சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.


மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.


தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.


தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.


இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.


2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.


3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.


4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.


5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.


6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.


7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியைப் பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.


தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.



1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.


2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

 (அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)


3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
 
 
8** 
ts  ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். 
***
 
                                                                                                                                                         "வாழ்க வளமுடன்"
      

நீரிழிவு பாதிப்பை வீட்டிலேயே குணப்படுத்த 10 எளிய உணவுகள்..!

இந்தக் காய்கனிகள் நீரிழிவு-ன் தீவிரத்தை குறைக்கும்.


 
 
1. முருங்கைக்காய் கீரை..!
...
முருங்கைக்காய் கீரையில் உள்ள நார்ச் சத்து தெவிட்டான நிலையை அதிகரித்து உணவு உடைபடுவதை குறைக்கச் செய்யும்.
இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.


2. துளசி இலை

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை உதவுகிறது.
துளசி இலையில் விஷத் தன்மையுள்ள அழுத்தத்தை போக்கும் ஆற்றல் மிக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இவை சர்க்கரை நோயில் பல சிக்கல்களை நீக்குகிறது.


3. ஆளி விதைகள்


ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும்.
ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவுக்கு விற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு சுமார் 28% குறையும்.


4. இலவங்கப்பட்டை

உணவில் ஒரு கிராம் அளவில் இலவங்கப் பட்டையை 30 நாள்களுக்கு அதை உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.


5. கிரீன் டீ


கிரீன் டீ –ல் திடமான ஆன்டி - ஆக்சிடன்ட்கள் மற்றும் ஹைபோக்ளைசெமிக் தாக்கங்கள் இருக்கும்.
ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடான அளவில் வெளியேற பாலிஃபீனால் உதவும்.


6. நாவல் பழ கொட்டை

நாவல் பழ கொட்டைகளின் பருப்பு நீரிழிவு பாதிப்பையை கட்டுப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவௌ குறைக்கும்.
நாவல் மர இலைகளை மென்று சாப்பிட்டாலும் ரத்ததில் சர்க்கரை அளவு குறையும்.

நாவல் பழ விதை நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.

மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் இருதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது.



7. பாகற்காய்

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் பாகற்காய் -ல் உள்ளது.
பாகற்காயை குழம்பு, கூட்டு மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம். நீரிழிவு பாதிப்புக்கு சித்த மருந்து சாப்பிடுபவர்கள், பாகற்காய் தவிர்ப்பது நல்லது. அல்லது பாகற்காய் சாப்பிடும் அன்று சித்த மருந்தை தவிர்க்கலாம்.



8. வேப்பம் இலை

நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு வேப்பம் இலை கொழுந்துகளை பயன்படுத்தலாம்.

அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்.


9. கருப்பு சீரகம்

கருப்பு சீரகம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.


10. உடற்பயிற்சி


அடுத்து செலவு இல்லாத மருந்து உடற்பயிற்சி. இது உடல் எடையை குறைக்க உதவும். இதனால் உடல் பருமன் பிரச்னையும் நீங்கும்.
உடற்பயிற்சி என்பது இன்சுலின் உற்பத்தி திறனை அதிகரிக்கும். மேலும் சீரான முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.


ரத்த அழுத்தம் கூட குறையும். சின்ன சின்ன உடற்பயிற்சி செய்தால் கூட நல்ல பயன் கிடைக்கும்.


மேலும் தியானம் மற்றும் யோகாசனம் செய்வதால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறையும். கார்டிசோல், அட்ரினாலின் மற்றும் நோராட்ரினலின் போன்ற சில மன அழுத்த ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தும்.


ட்ரான்ஸ்சென்டென்ட்டல் தியான முறை மூலமாக நரம்பியல் ஹார்மோன்களை குறைத்தால், ரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் குளுகோஸின் அளவு சம நிலையுடன் விளங்கும். மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் சர்க்கரை நோயை நடுநிலையாக்க இது உதவம்.

***
thanks fb
***
 
 
"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "