...

"வாழ்க வளமுடன்"

12 ஜூன், 2011

தமிழ், ஆங்கில மருத்துவ துணுக்குகள் :)















***

மெயிலில் வந்தது

***




"வாழ்க வளமுடன்"

நாயுருவிச் செடியில் உள்ள மருத்துவப் பயன்கள்



பார்க்கும் இடத்தில் எல்லாம் களைச்செடிபோல சாதாரணமாக முளைத்திருக்கும் நாயுறுவிச் செடியில் பல்வேறு மருத்துவப் பயன்கள் உள்ளன. சாலை ஓரங்கள், பயன்படுத்தாத நிலங்களில் காணப்படும் இந்த தாவரத்தின் உறுப்புகள் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை.

பெயர்க்காரணம்

நாயுறுவி செடிக்கும் நாய்க்கும் நிறைய தொடர்பு உண்டு. இம்மூலிகை நாய்க்கடி விஷத்தை முறிக்கக் கூடியது. இம்மூலிகைக்கு நாய் வணங்கி என்றொரு பெயரும் உண்டு.

நாய் இந்த செடியின் மேல் படுத்து உருளும் பழக்கம் உடையது. அந்த வேளையில் இதன் விதைகள் முள்ளைப் போல் நாயின் உடல் எங்கும் பற்றிக்கொண்டு விடும். இதுவே இம்மூலிகைக்கு இப்பெயர் ஏற்பட காரணமாகும். இந்த செடியின் விதைகள் நம்மேல் பட்டால் சிறிது நேரத்திற்கு நமைச்சல் ஏற்படும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் பிடைனி, அக்கிரான்தைன், ஹென்டிரிஅகோன்டேன், ஒலியனோலிக் அமிலத்தின் குளுகோசைடுகள் உள்ளன. விதைகளில் அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன.

**

மூல நோய்க்கு மருந்து

மூலக்கட்டிகளுக்கு வேரின் பொடி தேனுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது. அரிசி கஞ்சியில் சேர்க்கப்பட்ட விதைகள் மூல நோய் இரத்தப் போக்கிற்கு மருந்தாகிறது. வேரின் கசாயம் வயிற்றுப் போக்கினை தடுக்கிறது. வேரின் பசை கருச்சிதைப்பிற்குப்பின் ஏற்படும் ரத்தப் போக்கினை நிறுத்தும்.

**

சிறுநீராக நோய்

முழுத்தாவரத்தின் கசாயம் சிறுநீர்ப்போக்கினை தூண்டுகிறது. சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது. உலர்ந்த தாவரம் குடல்வலி மற்றும் கோனேரியாவிற்கு மருந்தாகிறது. மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. தண்ணீர் மற்றும் வெல்லத்துடன் கரைந்த தாவரத்தின் சாம்பல், திசுக்கள் மற்றும் தோலுக்கு கீழாகச் சேர்த்த நீர்க் கோர்வையினைப் போக்கும்.

**

நுரையீரல் நோய்க்கு மருந்து

நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

**

விஷக்கடி குணமடையும்

இலையின் பசை விஷ பூச்சிக் கடிக்கு மருந்தாகிறது. நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும். நல்லெண்ணெயில் தாவரத்தின் சாம்பல் சேர்த்து தயாரித்த ‘ அப்பமார்க்’ தைலம் காதுவலிக்கு மருந்தாகிறது.

**

ரத்தச்சிக்கலை நீக்கும்

நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் மூக்கு மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் குணமாகும். மந்தம், அதிசாரம், கபநோய், ரத்தப்போக்கு, குன்மம் முதலியன குணமாகும்.

இதன் இலைச்சாறு வயிற்றுவலி, குன்மம் இவைகட்கு வழங்கப்படும். இதன்வேர் சூரணத்துடன் மிளகுச்சூரணம் அல்லது திப்பிலி சூரணத்துடன் சேர்த்து தேனில் அருந்த இருமல் தீரும். இதன் சமூலத்தைச்சுட்டு சாம்பலாக்கி 5 குன்றி எடை வீதம் வெல்லத்தில் கொடுக்க ரத்தச்சிக்கலை நீக்கும்


***
thanks news
***




"வாழ்க வளமுடன்"

பெண்கள் ஆடை, அணிகலன் அலங்காரம் = part - 3



பொருத்தமான காதணிகளை தேர்வு செய்வது எப்படி?

சில பெண்கள் அழகான உடை உடுத்தி இருப்பார்கள். அருகில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும், அவர்களின் காதுகள் சுத்தமில்லாமல் இருப்பது. தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத்துங்கள். காது அமைப்பில் வித்தியாசம் இருக்கலாம். அதை காதணிகள், மேக்கப்பினால் சரி செய்து கொள்ளலாம்.


நீளக் காது என்றால் ஃபவுண்டேஷன் போட்டு சிறிதாக காட்டலாம். விதவிதமான காதணிகளால் அலங்கரிக்கலாம்.


காதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால் பட்டையாக நிறைய கல் வைத்த பேசரி தோடுகளை போட்டுக் கொள்ளுங்கள்.


சின்ன காது என்றால் காது மடல்களில் 2, 3 துளை போட்டு சின்னச் சின்ன வளையங்களை மாட்டி, காது விளிம்பில் கல் பதித்த சரம் போன்ற தோடு அல்லது தொங்கட்டான் போடலாம்.


குண்டு முகத்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இருக்கும்.


கழுத்தில் மெலிதான செயின் என்றால் காதணியை சற்று பெரிதாக அணிந்து கொள்ளுங்கள்.
காதோரம் குட்டிக் குட்டித் தோடுகள் அழகாக இருக்கும்.


அகலமான முகம் உள்ளவர்கள் நீள தொங்கட்டான்கள், ஒன்றின்கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கிகள், பெரிய வளையங்கள் போடலாம். கழுத்து நீளம் குறைவென்றால் காதணி நீளத்தை குறைக்கவும். காது மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங்கட்டான்கள், வளையங்கள் முக அழகை கூட்டும். விழாக்களுக்கு செல்லும்போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ் போட்டுக்கொண்டு பட்டையை கிளப்புங்க.

***

மூக்கு மற்றும் உதடுகளை அழகாக காட்ட
மூக்கு:


நீண்ட, சப்பை, குடமிளகாய் வடிவங்களில் உள்ளது மூக்கு. அதனை மாற்ற முடியாது என்றாலும் மூக்குத்தி போட்டு ஓரளவு அழகாக்கலாம்.


கல் இல்லாத வெறும் மூக்குத்தி எந்த முகத்துக்கும் அழகாக பொருந்தும்.

சிவப்பாக உள்ளவர்களுக்கு பச்சைக்கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும். மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி, கருப்பு நிறமானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அம்சமாக இருக்கும்.


குறுகிய, நீண்ட முகம் உள்ளவர்களுக்கு ஒரு கல் மூக்குத்தி. அகல முகம் உள்ளவர்களுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்குத்தி பொருந்தும்.

***

உதடு:

மனதின் ஜன்னல் கண்கள் என்றால், உதடு அதன் மேடை என்பார்கள். மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள்.


முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள். வாய் சற்று பெரிதாகத் தெரியும்.


தடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப்ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும்.


மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள்.


மாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

உதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது.


காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள்.


ஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம். டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும்.

வீட்டில் இருக்கும்போது லிப்ஸ்டிக் வேண்டாம். அடிக்கடி உபயோகித்தால் உதடுகள் கருமையாகிவிடும்.
கை, நகம் மற்றும் வளையல்


அழகான கைகளும், நகங்களும் பார்ப்பவர்களை கவரக்கூடியவை. பொதுவாக பெண்கள் முகத்துக்கு காட்டும் அக்கறையை கைகளுக்கு காட்டுவதில்லை.

முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வயதைக் காட்டினாலும் கைகளில் ஏற்படும் சுருக்கங்கள் அதை அதிகப்படுத்திக் காட்டுவதுடன் பெர்சனாலிட்டியையும் குறைத்துக் காட்டும். பாத்திரம் தேய்க்கும் போதும், துணி துவைக்கும் போதும் தண்ணீர், சோப்பால் கைகள் சொரசொரப்பாக மாறிவிடும். கைகளுக்கு அடிக்கடி ஒயிட் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொள்ளுங்கள். கைகள் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


நகத்தால் பாட்டில் திறப்பது, நகத்தை கடிப்பது போன்றவை செய்யாதீர்கள். நகங்களை ஒரே சீராக ஓவல் வடிவில் வெட்டுங்கள்.

சல்வாருடன் மேட்சிங்கான மெல்லிய கண்ணாடி வளையல்கள் (ஆறு அல்லது எட்டு) அணியலாம்.


குண்டு விரல்களாக இருந்தால் அணியும் மோதிரங்கள் மெல்லிய கம்பி போன்று இருப்பதும், சிறுகற்கள் கொண்ட நெளிமோதிரமும் அழகு சேர்க்கும்.


குண்டான கைகளுக்கு மெல்லிய வளையல்கள், மெல்லிய ப்ரேஸ்லெட், மெல்லிய ஸ்டிராப் வைத்த வாட்சுகள் மிகவும் அழகாக இருக்கும்.

***

வர்ண வலையல்களை அணிய விருபுகிறீர்களா?

கலர் கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம்
வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா?


அதை வெள்ளை ரிசூவில் சுற்றி பெட்டியிலே வைத்து பாதுபாதுகாப்பாக வையுங்கள். இதனால் பொருளின்
உபயோகக் காலம் கூடும். மற்றது நாம் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நாம் ஆணியும் வளையல்களைத் தெரிவு செய்யவேண்டும். இன்று சந்தையிலே பலவித வளையல்கள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றது.


உதாரணம், கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடவை அணியும் சந்தர்ப்பங்களில் கை நிறைய வளையல்களை அணியலாம். சுடிதார் அணியும் பெண்கள் அளவாக வளையல் போடலாம்.


ஜீன்ஸ் அணியும் பட்சத்தில் ஓரிரு வளையல்களை போட்டால் எடுப்பாக இருக்கும். நாம் அணியும் ஆடைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ அத்தனை வர்ணத்திலும் ஒவ்வொரு வளையல் தெரிவுசெய்து அணியும்போது அது அழகாகக் காட்சி தரும். வைபவங்களுக்கு அணியும் வளையல்கள் கொஞ்சம் மினுமினுப்பாக இருந்தால் அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளையல்கள் பட்டுச்சேலைக்கு பொருத்தமாய் இருக்கும்.
எப்படியும் ஒற்றை வளையல் அணியும்போது விரல்களுக்கு மோதிரங்களை குறைத்து போடவேண்டும்.

***

காலணிகள் வாங்கும் போது

காலணிகள், இப்போதெல்லாம் ஆடம்பரத் திற்கான அவசியமாக மாறிவருகின்றன. காலுக்கு இதமாக இருக்கவேண்டும் என்பதற் காக வாங்கப்பட்ட காலணிகள் காலமாற்றத்தில் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் மாறியதில் ஆச்சரியமில்லை என்றாலும், ஆடைக்கும், அணிகலன்களுக்கும் கொடுக்கும் அதே முக் கியத்துவத்தை செருப்புக்கும் கொடுத்து வாங்கி அணிந்து மகிழ்கின்றனர் இன் றைய தலைமுறையினர்.


அதனால்தான் ஆடை, அணிகலன்களுக்கு நிகராக காலணிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இப்போதெல்லாம் பல ஆயிரம் ரூபாய் வரை செருப்புகள் விற்கப்படுகின்றன.


கலர்புல் செருப்புகளையும், ஆடைக்கு ஏற்ற மேட்சான செருப்புகளையுமே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் செருப்பு என்பது நமது உள்ளங்காலோடு நெருங்கிய தொடர்பு உடையதால் அதை வயசுக்கு தக்க படியும், தேவைக்கு தக்கபடியும் வாங்குவது முக் கியமானது. ஏனென்றால் உள்ளங்காலுடன் நமது உட லில் உள்ள அனைத்து நரம்புகளும் தொடர்புடையது.


இப்போது திருமணம் போன்ற விசேஷங்களுக்கும், வீடு, சுற்றுலா போன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான செருப்புகளை பெண்கள் அணிகின்றனர். உடலுக்கு தகுந்தபடி செருப்புகளை வாங்குவது நல்லது. பொருத்தமான செருப்புகளை அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பொருத்தமில்லாத செருப்புகளை அணிந்தால் தன்னம்பிக்கை குறையும்.


செருப்புகளை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மூன்று விஷயங்களை கவனித்து வாங்குவது நல்லது. அவை சௌகரியம், அழகு, நிறம் ஆகியவை. கண்ணைப் பறிக்கும் கலர் களைவிட இளநிறமே, மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். முன்பகுதி குறுகி, குதிகால் உயர்ந்து இருப்பதையே இன்றைய இளம்பெண்கள் விரும்பு கின்றனர். செருப்புகளின் முன்பகுதி குறுகி உள்ளதால் விரல்கள் அழுத்தத்திற்கு உள்ளா கின்றன. மேலும் வர்மப் புள்ளிகளும் அழுத்தப்படுவதால், உடலில் பலவித பிரச்சினை களை ஏற்படுத்தும். இதனால் தலைவலி, கண் வலி, சோர்வு, கால்வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.


மேலும் இறுக்கிப் பிடிக்கும் விரல்களில் கொப்பளங்கள் ஏற்படும். இயல்பாக நடக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். இன்றைய பேஷன் விரும்பிகள் அனைவருமே குதிகால் உயர்ந்த செருப்புகளையே அணிகின்றனர். இதன் காரணமாக உடலின் சமன்நிலை பாதிப்பு அடைகிறது. இதனால் முதுகுவலி, குதிகால் வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். கால்கள் மெலிந்து இருப்பவர்கள் பென்ஸி ஹீல்ஸ்' என்ற குதிகால் செருப்புகளை தவிர்க் கவும். குண்டு உடல்வாகு உடையவர்கள் அதிக எடையுள்ள செருப்புகளை அணிய வேண்டாம். இவர்கள் மென்மையான திறந்த வெளி செருப்புகளை அணிவது நல்லது.


பாதம் நீளமாக உள்ளவர்கள், கோடு போட்ட டிசைன்கள் நிறைந்த செருப்புகளை அணிய வேண்டாம். இதனால் பாதம் மேலும் நீளமாக இருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். செருப்புகளை வாங்கும்போது. அதை வலது காலில் போட்டுப் பார்த்து வாங்கவும். உங்களுடைய உடல் அமைப்பு, வேலை, செல்லும் இடத்துக்கு தக்கபடி செருப்புகளை அணியவும்.

பெண்களை பொறுத்தவரை, பெண்களின் உடல் வடிவமைப்பு, எடைக்கு தக்கபடி செருப்புகளை நிதானமாக தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. ஷூக்கள் வாங்கும்போது முன்பக்கம், பின்பக்கம் அழுத்திப் பார்த்து போதுமான இடைவெளி உள்ளதா? என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

***

வண்ண வண்ண பைகள்

நவநாகரிக யுகத்தில் நங்கையர் எல்லாம் அங்கமாக ஜொலிக்க தங்கத்தை அணிந்தார்கள். எல்லா அங்கங்களையும் அழகுபடுத்திக் காட்டினாலும் அத்தியாவசியப் பொருட்களை கைகளில் கொண்டுசென்றால் பாதுகாப்பும் இல்லை அழகும் இல்லை. அதனால் பொருட்களை எல்லாம் வைப்பதற்கு கைப்பைகளை கொண்டு செல்வது வழக்கம்.கைப்பைகள் கூட வண்ணங்களாக மிளிர வேண்டும் என்பதே எல்லோர் எண்ணமும். வண்ண வண்ண கைப்பைகள் வாங்குவதற்கு கடைகளை தேடுபவர்கள் அதிகம்.

கடைகள் இருந்தாலும் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்வதில் குழப்பம் எற்படலாம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்யவே உங்களுக்கு ஒரு குறிப்பு. *கைப்பை வாங்க செல்பவர்களாக இருந்தால் முதலில் நீங்கள் என்ன நிறத்தில் கைப்பையை வாங்கப்போகிறீர்கள் என்று வீட்டிலேயே தீர்மானித்து கொண்டு கடைக்குச் செல்லவேண்டும்


*கடையில் காட்சிக்கு வைக்கப்பட்ட கைப்பைகளை தெரிவு செய்யும் போது அது விலைக்கேற்ற தரமுடையதாக உள்ளதா என பார்க்கவேண்டும்.


* நீங்கள் தெரிவு செய்யும் கைப்பைகள் பொதுவான நிறமுடையதா என பார்க்கவேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது எப்போதும் கண்கவர் வண்ணங்களிலேயே தெரிவு செய்யவேண்டும். *கைப்பைக்குள் சிறிய சிறிய மடிப்புக்கள் உள்ளனவா என பார்க்கவேண்டும். *கைப்பையின் வார்கள் பொதுவாக சிறிதாக இருத்தல் வேண்டும்.


*கைப்பையை மூடும் இடம் எப்பொழுதும் சிப் உள்ளதாக இருக்க வேண்டும். *கைப்பைகளை வாங்கும்போது நீளம் சிறியதாகவும் அகலம் சற்று பெரியதாகவும் இருக்கவேண்டும். எப்போதும் கையில் அணிந்து கொண்டு செல்லும் போது கையின் நடுப்பகுதியில் சரிசமமானஅளவில் இருபக்கமும் கைப்பை தெரியவேண்டும்.

தங்க நகைகளின் உண்மையான பெறுமதி
எட்டிப் பிடிக்கமுடியாதளவுக்கு விலை போனாலும் தங்கம் நம் அத்தியாவசியத் தேவைகளுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகி விட்டது. திருமணங்களில் பெண்ணுக்கு போடப்படும் தங்கத்தின் அளவு தான் திருமணத்தையே தரம் பிரிக்கிறது. இப்படி நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத தங்கத்தை வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டியது கடமை அல்லவா!


நிறத்தையும் பளிச்சென்ற தன்மையையும் பார்த்து ஒருபோதும் தங்கம் வாங்கக்கூடாது. பொலிஷ் மூலம் தங்கத்துக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நிறம் கொடுக்கலாம்.மஞ்சள்நிறம் அதிகம் கொண்ட நகைகள் அதிக பெறுமதிமிக்கவை என்று எண்ணி விடாதீர்கள்.வேலைப்பாடுகள் குறைந்த ஆபரணங்களை வாங்குவதே சிறந்தது. அதற்கு செய்கூலி குறைவு என்பதோடு, விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதிக கழிவும் ஏற்படாது.


தங்க நகைகள் வாங்கும் போது பலர் ரசீதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ரசீது இல்லையென்றால் பணம் கொஞ்சம் குறையலாம் என்று எண்ணி ரசீது வாங்குவதில் ஆர்வம் காட்டாமல் விட்டு விடுகிறார்கள். உண்மையில் ரசீது வாங்கினால்தான் பிற்காலத்தில் விற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் பெரும் உதவியாக இருக்கும். ரசீது வாங்கும் போது நகையின் எடை ,மொடல், போன்றவற்றை தெளிவாக குறிப்பிடச் சொல்ல வேண்டும். கற்கள், முத்துகள் பதித்த நகைகளை வாங்கும் போது அதிக கவனம் காட்ட வேண்டும். சில கடைகளில் கற்களின் எடையையும் தங்கத்தின் எடைபோல கணக்கிட்டு விடுவார்கள். கற்களுக்கு தனி எடையும் தங்கத்துக்கு தனி எடையும் போடுவதே சரியான தொழில் தர்மம்.


தங்க ஆபரணங்களை தனித்தனி பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரே பெட்டியில் ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் பெறுமதி குறைவதோடு நிறமும் மங்கி விடும்.


வழக்கமாக வாங்கும் கடைகளில் தங்கம் வாங்குவது நல்லது. அதனால் நம்பகத்தன்மை கூடும். அதோடு பாதிப்பு ஏதேனும் ஏற்படினும் உடனடி பரிகாரம் காணமுடியும்

***

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

அதிக உடையும் குறைந்த உடையும் பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது. கடைத் தெருவுக்குப் போகும்போதுகடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சூழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.


புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

அலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை
அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.

***

ஒல்லியான பெண்களுக்கு உடைகள்

மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.


**

புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்

பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.


உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

**

கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்

கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்


***
நன்றி administrator
***






"வாழ்க வளமுடன்"

பெண்கள் ஆடை, அணிகலன் அலங்காரம் = part - 2



நகைகள்:

நீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து, காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள். பொதுவாகவே ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும்.


அகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள்.


குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.


குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும்.


மெல்லிய சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும். மெல்லிய, நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும்.


கழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும்.


அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.

***

சிவப்பு நிறம் உள்ளவர்கள்:

ரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.

**

கறுப்பு நிறம் உள்ளவர்கள்:

வைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்!


முத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும்.


அதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு, மெலிதான செயினில் பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல் மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும்.


முத்து செட்டும் அம்சமாக இருக்கும்.
தங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள்.


ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள்.
பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும்.


சிம்பிள் புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம். இது எல்லோருக்குமே பொருந்தும். டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங், அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை வண்ணங்கள்.


கால்களின் கணுக்கால் பகுதி ஒல்லியாக இருந்தால் பட்டையான கொலுசு போடுங்கள்.


குண்டான கால்களுக்கு மெல்லிய ஒரே சலங்கை வைத்த கொலுசு அழகாக இருக்கும்.


நடுத்தரமான கால்களுக்கு மெல்லிய, பட்டையான கொலுசு இரண்டுமே பொருத்தமாக இருக்கும்.


மெல்லிய விரலுக்கு பட்டையான சலங்கை வைத்த மெட்டி அழகாக இருக்கும்.


விரல்கள் கொழுகொழுவென்று இருந்தால் மெல்லிய மெட்டிகள் போடலாம். குறிப்பாக இரண்டாவது விரலில் மெட்டி போட்டால் அழகுக் கூடும்

***

குள்ளமானவர்களுக்கான உடை புடவை:

கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.


டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு.


தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.


காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.


கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
சாய்வான கோடுகள் உள்ள ஆடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.


இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ வயலட், வெளிர் நீலத்தில் வெள்ளைப்பூக்கள்... இதெல்லாம் ஓகே.


ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.


சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.


குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்தவேண்டாம். மேலும் குண்டாக காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும். லோ ஹிப் வேண்டாம்.


ஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர் அழுத்தமான கலர்களில் உடை அணிவதைத் தவிருங்கள். (ஆனால் கருப்பு, மெரூன் போன்றவை யாருக்கும் பொருந்தும்) சின்ன பார்டர் புடவையைத் தேர்ந்தெடுங்கள். கங்கா, யமுனா சேலை போல் ஒரு பக்கம் டிசைன் உள்ள புடவை சற்று பூசினாற்போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூ டிசைன்களை தவிர்த்துவிடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம்.

***

சுடிதார்:

வயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார், சல்வார்-கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது நல்லது.

பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.

நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.


ஜரிகை வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.


குண்டாக இருப்பவர்கள்:


ஸ்லிட்டில் ஜரிகை வைத்து தைக்காதீர்கள். அது சுற்றளவை கூட்டி காண்பிக்கும்.


எந்த டிசைனும் மெல்லியதாக இருக்கட்டும். அடர்த்தி டிசைன்களே வேண்டாம்.


முழுக்கை டாப்ஸ், மிகவும் குறைந்த கையுள்ள டாப்ஸ் உங்களுக்கு பொருந்தாது. நடுத்தர நீளம், முக்கால் கை பொருந்தும்.


ரொம்ப டைட் வேண்டாம். லூசாகவும் வேண்டாம். இடுப்பு மட்டும் சற்று லூசாக இருக்கட்டும். அது மடிப்புகளை மறைக்கும்.


அகலமான சல்வார், பஞ்சாபி பைஜாமா உங்களுக்கு சரிவராது. காலை ஒட்டின, அகலம் குறைவான சல்வார் நன்றாகப் பொருந்தும்.


சுருக்கம் வைத்த பைஜாமா வேண்டாம். இடுப்பு அளவை மேலும் அதிகரித்துக் காட்டும்.


மேல்புறம் சுருக்கம் கொடுத்துத் தைக்காமல், ஒரு ஜாண் பட்டி கொடுத்து அதற்கு கீழிருந்து சல்வார் வரும்படி தைத்து கொள்ளுங்கள். இடுப்பு இளைத்த மாதிரி காட்டும்.


பார்டர் அழுத்தமான டிசைன், திக் லைன் போட்ட மெட்டீரியல் வேண்டவே வேண்டாம்.


காட்டன் லைனிங் கொடுத்து தைக்கக்கூடிய லேஸ், ஷிபான் துணிகள் வேண்டாம். குண்டாக காட்டும். ஜீன்ஸ் அணிவதை தவிர்த்து விடுங்கள். குளிர் பிரதேசங்களுக்கு போனாலும் ஓவர்கோட் இருக்குதே.

***

ஒல்லியாக இருப்பவர்களுக்கான உடை:

இப்போதைய ஃபேஷனான ஷார்ட் டாப்ஸ் உங்களுக்கு நன்றாகப் பொருந்தும். பளீர் நிறமாகத் தேர்ந்தெடுங்கள்.


குட்டை ஸ்லீவ் அல்லது மீடியம் ஸ்லீவ் ஓகே.


ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் உங்களை உயரமாகக் காட்டும்.


லூசான சல்வார், பேன்ட் போன்ற சல்வார், ஜீன்ஸ் உங்களுக்குப் பொருந்தும்.


காட்டன் துப்பட்டா என்றால் ஒரு பக்கமாக, தோள் பட்டைக்கு வெளியில் வராதபடி அணிந்து கொள்ளுங்கள்.


ஷிபான் துப்பட்டாவாக இருந்தால் இரு பக்கமாக மார்பு வரை இறக்கி போடுங்கள்.


ஜீன்ஸ், டி-ஷர்ட் உங்களுக்குப் பிரமாதமாக இருக்கும். டைட் ஜீன்ஸ் என்றால் லூஸ் ஷர்ட் நல்லது. அகலமாகக் காட்டும். லூசான ஜீன்ஸ் என்றால் ஷார்ட் டாப்ஸ் போடலாம்.


**

கண்களை அழகாக காட்ட

சென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக வேலை.... இவற்றால் கருவளையம் வந்து கண் அதன் ஜீவனையே இழந்துவிடும்.


கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள்.


குறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள். பார்வை பாதித்தால் வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல் இருக்காதீர்கள். கண்ணாடியும் அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான சதுர கண்ணாடி பொருந்தும். நீள முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும்.


கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.


பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.


விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.


கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்


முக அழகிற்கு தகுந்த மாதிரி புருவத்தை மாற்ற
முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.
குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.


நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.


ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.


அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.


புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.


சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.


புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.


கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.


வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.


நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.


நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.


வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.


உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.


***



"வாழ்க வளமுடன்"

பெண்கள் ஆடை, அணிகலன் அலங்காரம் :)



ஆள் பாதி... ஆடை பாதி என்பது பழமொழி. இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஒருவரை பார்க்கும்போது அவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே நாம் அவரை மதிப்பிடுகிறோம்.

கோடைகாலம் பிறந்தாச்சு கொண்ட்டாட்டங்களுக்கும் கோயில் திருவிழாக்களுக்கும் குறைவே இல்லை. தங்கள் அழகை எடுப்பாக காட்ட இதுதான் நல்ல சந்தற்பம் என சொப்பிங் செல்லும் பெண்கள் கூட்டம். இதுவே நாட்டு நடப்பகிவிட்டது.

சில பெண்கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும் அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மொடர்ன் உடைகளாக இருந் தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப் பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.

அதாவது கந்தையான ஆடையாக இருந்தாலும் அதை துவைத்து, அயர்ன் செய்து அணிந்தால் அழகாகவே இருக் கும். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத் திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம். ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. முடியை கழுத்துக்கு மேல் தூக்கி முடி அலங்காரம் செய்யவும் கூடாது.

சிறிய போர்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம். சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் போட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம்.

உயரமான ஒல்லியான பெண்கள் கறுப்பு அல்லது மாநிறமாக உள்ளவர்கள் கடும் நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத் தாலும் அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறிமாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ அணியவேண்டும். உயரமானவர்கள் கழுத்தில் நீளமாகத் தொங்கும் ஆபரணங்கள் அணியாமல் கழுத்தை ஒட்டி இருக்கும் சிறிய நெக்லஸ் அணியலாம்.

நல்ல நிறமான சிகப்பாக இருப்பவர்கள், குட்டையாக, ஒல்லியாக இருந்தால் பிளேனாக டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம். கருப்பாக, குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய சரிகை போர்டர் வைத்தோ அல்லது மெல்லிய போர்டருடனோ சேலை அணிய லாம். பெரும்பாலும் போர்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். கடும் நிறத்தில் உள்ள சேலைகளை கறுப்பாக இருப்ப வர்கள் அணிய வேண்டாம்.

அப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும். குண்டாக இருப்பவர்கள் உடலுடன் ஒட்டியவாறு ஆடைகளை அணியக் கூடாது. டொப்பும், பொட்டமும் வெவ் வேறு நிறத்தில் இருக்குமாறு சுடிதார் அணியலாம். துப்பட்டாவை தவிர்க்க லாம். அல்லது கணுக்கால் வரை மிடி அணிந்து நீண்ட கைகளை உடைய டொப்ஸை இன் செய்து அணியலாம்.

மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து அதில் அடி நுனி வரை பூவேலை அமைந்திருந்தால் தோற் றத்தை சிறிது உயரமாகக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும். முடிந்த அளவு உயரமான செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.

குட்டையான கழுத்து இருந்தால், அதை இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும்படியாக அணியலாம். மெல்லிய நீளமான சங்கிலி அணிய லாம். கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில் நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம்.

காதைத் தாண்டி முடியில் மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம். ஒல்லியாக இருப்பவர் கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகத் தெரிவார்கள். இறுகிய உடைகளையும் தவிர்க்க வேண்டும்.

பேண்ட், டீ ஷேர்ட் அணிபவர்கள் டீ ஷேர்ட்டை இன் செய்யாமல் அணியவும். பேண்ட், ஷேர்ட் அணிபவர்கள் ஷேர்ட்டில் டிசைன்கள் இருந்தால் இன்னும் அழகாகக் காணப்படுவார்கள்.

சீசனுக்கு தகுந்த மாதிரி துணிகளை தேர்வு செய்வது எப்படி?
இப்போதெல்லாம் குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி பிரான்டட் ஆடைகளை வாங்குவது வழக்கமாகி விட்டது. அது நல்லதுதான். தரம் இருக்கும். ஆனால் அது சீசனுக்கு ஏற்ற உடையா என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை விற்கும் போது சீசனுக்கு பொருத்தமில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறோம்.

ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்தவரை இரண்டு சீசன்களாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை (மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை (செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) இன்னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த காலம் வரையிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம் வரைக்கும் பொருந்துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்.

***

வெயில் காலம் முதல் வசந்த காலம் வரைக்கும் பொருத்தமானவை:

பிரைட் கலர்களில் பெரிய பிரின்ட் போட்ட டிசைன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்டனில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம்.


காஞ்சி காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க் காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி சுடிதார், சல்வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ளலாம்.


ஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக்கும்.

வெயில் காலங்களில் ஏற்படும் கசகசப்பை மீறி கல்யாண வீடுகளுக்கு, பார்ட்டிகளுக்கு போகும்போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப் புடவையை விட அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.


ஆண்களுக்கு காட்டன் வேட்டி, அரைக்கை சட்டை அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்கு காட்டன் பேன்ட், சட்டை வசதி, கை வைக்காத, ஓப்பன் நெக் பனியன் போடலாம்.


காட்டன் குர்தா, பைஜாமாவும் பொருத்தமாக இருக்கும்.

**

உயரமானவர்களுக்கான உடை அலங்காரங்கள்
புடவை:


பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.


அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.


பெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.

பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.


பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.


பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.

**

பிளவுஸ்:

ஒல்லியானவர்கள் ஹை காலர் நெக் அல்லது பின்புறம் க்ளோஸாக வந்து முன்புறம் பாட் நெக் அல்லது யு-நெக் மாதிரி தைத்துக் கொண்டால் பொருத்தம். பாதி காலர் நெக் என்றால் முன்பக்கம் யு, ப வடிவில் தைத்துக் கொள்ளலாம். ரொம்ப லோ நெக் வேண்டாம். எலும்பு துருத்திக் கொண்டு, மேலும் உங்களை ஒல்லியாகக் காட்டும்.


கை மட்டும் ஒல்லியாக இருப்பவர்கள் கஃப் ஸ்லீவ், பட்டர்ஃப்ளை ஸ்லீவ் வைத்துத் தைத்துக் கொள்ளலாம். கை சற்று குண்டாகக் காண்பிக்கும். கழுத்தின் முன் அல்லது பின்புறம் டிசைன் வைத்த பிளவுஸ் தைத்துக் கொள்ளலாம்.

சற்று சதைப் பிடிப்பு இருப்பவர்களுக்கு லோ நெக் அழகாக இருக்கும். பிளவுஸ் முழுக்கை, முக்கால் கை, நடுத்தர கை எல்லாமே உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். ஸ்லீவ் லெஸ், ஷார்ட் ஸ்லீவ், மெகா ஸ்லீவ் ஓகே. ஷார்ட் ஸ்லீவ் சற்று லூசாக தையுங்கள்.

குச்சி போல கை உள்ளவர்கள் ஷார்ட் ஸ்லீவ் அணிய வேண்டாம். அகல ஜரிகை, ரெட்டை பேட்டு ஜரிகை ஆகியவற்றை நீங்கள் அணிந்து கொள்ளும் உடைக்கேற்ப தைத்துக் கொள்ளலாம்.


ப்ளைய்ன் பிளவுஸூக்கு கையில் மட்டும் லேஸ் வைத்து தையுங்கள். பிளவுஸின் உயரம் உங்கள் புடவையின் உயரத்திலிருந்து 4 இன்ச் வரை இருக்கலாம். டிசைன் பிளவுஸில் ஜரிகை, ஜம்கி, மணி போன்றவை வைத்து தைத்தால் மேலும் அழகூட்டும். சற்றே புடவையை இறக்கிக் கட்டினாலும் அழகாகவே இருக்கும்.

***

உயரமானவர்கள்

சுடிதார் டாப்ஸை சற்று இறக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரத்தை சற்ற குறைத்து காண்பிக்கும்.
லைட் கலரில் திக்கான உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.


நிறைய பூக்கள் வைத்த டாப்ஸ் லைனிங் கொடுத்த லேஸ் கமீஸ், ஜரிகை வைத்து தைத்த பட்டு கமீஸ் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

டாப்ஸின் சைடு டீப் ஸ்லிட் அற்புதமாக பொருந்தும்.


கழுத்து, தோளின் இருபக்கங்களிலும், ஸ்லிட்டின் ஓரத்திலும் லேஸ், ஜரிகை, ஜம்கி எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்து தைக்கலாம்.

முன் பக்கம் அகலமான ஜரிகை, அடர்த்தியான எம்ப்ராய்டரி இடுப்புவரை வருமாறு தைத்து போடலாம்.


நல்ல கான்ட்ராஸ்ட் கலராக பார்த்து அணியலாம். கருப்பு-ஆரஞ்ச், அரக்கு-மஞ்சள் போன்ற பளீர் கலர்கள் எடுப்பாக இருக்கும்.
முழு கை, முக்கால் கை உங்களுக்கு மிக அழகாக இருக்கும்.


டார்க் நிறத்தில் கான்ட்ராஸ்ட் பார்டர், குறுக்கு கோடுகள் உள்ள சல்வார் உங்களுக்கு பொருந்தும்.

*

துப்பட்டா:


ஷிபான் துப்பட்டாவை கழுத்தோடு அல்லது கழுத்தை சுற்றி போட்டு கொள்ளுங்கள்.

ஸ்டார்ச் துப்பட்டாவை ஒரு பக்கமாக தோளுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்படி போட்டுக் கொள்ளலாம்.


***



"வாழ்க வளமுடன்"

கடன் வாங்குவதில் கவனம் தேவை!



ஷேக்ஸ்பியரின் `ஹாம்லட்’ நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான பொலோனியஸ், தனது மகனுக்கு அறிவுரை கூறுவார், “ஒருபோதும் கடன் கொடுப்பவனாகவோ, கடன் பெறுபவனாகவோ இராதே.”

ஆனால் இன்றைய வாழ்க்கையில் இது சாத்தியமில்லை. நாம் கடன் கொடுக்காவிட்டாலும், வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம்.

பல்வேறு கடன்களுடன், `கன்ஸ்யூமர் கிரெடிட்’ எனப்படும் `நுகர்வோர் கடன் முறை’யையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம், பொருட்களையோ, சேவையையோ இன்று பெற்றுக்கொண்டு, வருங்காலத்தில் அதற்கான தொகையைச் செலுத்துகிறோம்.

உதாரணமாக மின்சாரம், குடிநீர் இணைப்பு, போஸ்ட் பெய்டு செல்போன் சேவை போன்றவற்றைக் கூறலாம். இந்த `கிரெடிட்’கள் எல்லாம் பிரச்சினையைத் தராது. ஆனால் வேறு பல நுகர்வோர் `கிரெடிட்’ வாய்ப்புகளில் நாமë கவனமாக இருக்க வேண்டும். அதாவது கிரெடிட் கார்டுகள், கடனில் அல்லது `எளிதான பைனான்ஸ்’ உதவியில் பொருட்கள் வாங்குவது போன்றவை.

`கிரெடிட்’டை சரியாகப் பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும்

`கிரெடிட்’, தேவையான நேரத்தில் மிகப் பெரிய உதவியாக அமையும். ஆனால் அலட்சியமாகப் பயன்படுத்தினால் உங்களின் நிதி நம்பகத்தன்மையைப் பாதிக்கும்.

கடனுக்கு இரண்டு முகங்கள் உண்டு. உற்பத்தித்திறனை அதிகரிக்கக் கடன் வாங்குவது, வசதி அல்லது `சும்மா’ செலவழிக்கும் திருப்தி போன்றவற்றுக்காகக் கடன் வாங்குவது. ஆனால் இதற்குப் பொருளாதாரரீதியாகவும், மனோரீதியாகவும் `விலை’ உண்டு. கடன் வாங்குவதால் ஏற்படும் பலன்கள் அதன் வட்டியைவிட அதிகமாக இருக்கும்போது மட்டும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.

`கிரெடிட்’ வாய்ப்பின் பயன்கள் அனேகம். அதாவது, திடீர் மருத்துவ உதவி, கல்வித் தேவைகள் முதல், அவசரப் பயணங்கள் வரை. இதுபோன்ற சூழ்நிலைகளில் கிரெடிட் கார்டுகள் அவசரத்துக்குக் கைகொடுக்கின்றன.

இன்றைக்கு, விமான, ரெயில் பயணம், ஓட்டல்கள் போன்றவற்றுக்கு முன்பதிவு செய்வதற்கு கிரெடிட் கார்டுகள் உதவுகின்றன. உற்பத்தித் திறனை அதிகரிப்பது, அவசர மருத்துவச் சிகிச்சை, உயர்கல்விக் கட்டணங்கள் போன்றவற்றுக்கு `கிரெடிட்’ உதவும் அதேநேரம், இம்முறையைத் தவறாகப் பயன்படுத்துவது உங்களின் நிதிநிலையைச் சீர்குலைக்கும். உங்களைத் திவாலாக்கி, கடன் பெறுவதற்கான நம்பகத்தன்மையை அழிக்கும்.

கிரெடிட் கார்டுகளின் செலவு `லிமிட்’ அதிகமாக இருப்பதாலேயே பலரும் அதிகமாகச் செலவழிக்கும் உந்துதலுக்கு உள்ளாகிறார்கள். `0′ சதவீத வட்டியில் கிடைக்கிறது என்பதற்காகவே தேவையில்லாத பொருட்களை வாங்குவோரும் இருக்கிறார்கள்.

குறைவான முன்தொகையைச் செலுத்திவிட்டு மீதத் தொகையை தவணையில் செலுத்திக் கொள்ளலாம் என்ற மனோபாவம் பலருக்கு உண்டு. சிறிது காலத்தில் அது சிக்கலில் ஆழ்த்தும்.கடன் விஷயத்தில் கவனமாக நடப்பதன் மூலம் நாம், நம் மீதான நம்பகத்தன்மையை வளர்க்க முடியும். அதன் மகத்துவத்தை நம்மால் சாதாரண நேரங்களில் உணர முடியாது. ஆனால் அவசர காலங்களில் உணரலாம்.

கடன் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிவதன் மூலமும், பணத்தைத் திறமையாக நிர்வகிக்கும் கலையை வளர்த்துக்கொள்வதன் மூலமும், பிற்காலத்தில் பிறர் புத்தி சொல்லும் நிலையைத் தவிர்க்கலாம்.

நீங்கள் இப்போது கடனில் பல பொருட்களைப் பெறலாம், சேவைகளை அனுபவிக்கலாம். அவை, உங்களின் எதிர்கால வருவாயில் ஒரு பகுதியைக் காலி செய்யும், எதிர்கால அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடுமாற வைக்கும் என்பதை உணருங்கள். இன்றைய சொகுசான வாழ்க்கைக்காக எதிர்காலத்தைப் பலி கொடுக்காதீர்கள்.

வாழ்க்கையில் சில விஷயங்களைத் தவிர்க்க முடியாது. அதுபோல கடன் என்பது வாழ்வின் தேவைகளில் ஒன்றாகிவிட்டது என்பது நிதி நிபுணர்கள் கருத்து. எனவே கடனைத் தவிர்க்க முடியாவிட்டாலும், திறமையாக நிர்வகிப்பதன் மூலம் வரும் எதிர்கால நாட்களை நிம்மதியாக அமைத்துக்கொள்ளலாம்.

***

அதற்கு உதவும் சில விதிகள் இதோ…

* கிரெடிட் கார்டு பில் தொகைகளை உரிய காலத்தில் செலுத்துங்கள். அதில் தவறவே தவறாதீர்கள்.

* `கிரெடிட் ஸ்கோர்’ எனப்படும் கடன் நிலைமையில் கவனமாயிருங்கள். உங்களின் கிரெடிட் கார்டு விதிகள் மீறப்பட்டிருப்பதாகத் தோன்றினால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு அதைத் தெரிவியுங்கள்.

* உங்களின் மாதாந்திரத் தவணையை (ஈ.எம்.ஐ.) சரியாகச் செலுத்துங்கள். இதில் தவறுவது, உங்களின் `கிரெடிட் ஸ்கோரை’யும், உங்கள் மீதான நம்பகத்தன்மையையும் பாதிக்கும்.

* ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாதீர்கள்.

* கிரெடிட் கார்டுகளை, எளிதாகச் செலழிக்கும் வாய்ப்பாகக் கருதாதீர்கள். மாதாமாதம் குறைந்தபட்சத் தொகையைத்தான் செலுத்துவது என்பதைக் கொள்கையாக வைத்திருந்தால், செலவழிக்கும் தொகைக்கு வட்டியோடு அதிகத் தொகையைச் செலுத்தப் போகிறீர்கள் என்பதை உணருங்கள்.

* குறைவான மாதாந்திரத் தவணைத் தொகை அல்லது `ஜீரோ’ சதவீத வட்டியில் கிடைக்கிறது என்பதற்காக தேவையில்லாத பொருட்களை வாங்காதீர்கள்.

* கடன்களுக்கான அடிப்படைத் தொகையை அதிகமாகச் செலுத்தப் பாருங்கள். அது, மாதாந்திரத் தவணைத் தொகையானது உங்களின் சேமிப்பை அதிகம் விழுங்காமல் தவிர்க்கும்.

கடைசியாக, கடனானது உங்களின் வாங்கும் திறனை அதிகரிக்காது. அது உங்களின் எதிர்கால வாங்கும் திறனை, இன்றைக்கு கையில் கொண்டுவருகிறது. ஆனால் அது `மாயத் தோற்றமே’ என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

கடன்- அது தவிர்க்கவே முடியாத நிலையில் மட்டும் என்பதில் உறுதியாக இருந்தால் கவலை உங்களுக்கில்லை!


***
thanks vayal
***





"வாழ்க வளமுடன்"

கிழமைகள் ஏற்பட்டது எவ்வாறு?



நாட்களுக்குப் பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனிதனின் வரலாறு ஆரம்பமான காலத்தில், நாட்களுக்குப் பெயர் கிடையாது. அதற்குக் காரணம் என்ன? மனிதன், வாரத்தைக் கண்டுபிடிக்கவில்லையா?

பண்டைய நாட்களில் காலத்தை மாதங்களாகவே பிரித்திருந்தனர். ஒவ்வொரு மாதத்திலும் பல நாட்கள் இருந்தன. அத்தனை நாட்களுக்கும் பெயர் வைப்பதற்குச் சாத்தியப்படவில்லை.

மனிதர்கள் நகரங்களை அமைத்தபிறகு வாணிபம் செய்வதற்கு, அதாவது சந்தை கூடிப் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் தனியாக ஒருநாள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் 10 நாட்களுக்கு 1 நாள் ஒதுக்கினார்கள். சிலசமயங்களில் 7 நாட்களுக்கு 1 நாள் ஒதுக்கப்பட்டது. அதாவது 7-வது நாளே வணிக நாளாக அமைந்தது.

பண்டைக் காலத்துப் பாபிலோனியர் ஒவ்வொரு 7-வது நாளையும் வணிகத்துக்கும், மத விஷயங்களுக்கும் ஒதுக்கினர். அந்த நாட்களில் அவர்கள் இந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்யவில்லை.

யூதர்களும் பாபிலோனியர்களின் உதாரணத்தைப் பின்பற்றினர். ஒவ்வொரு 7-வது நாளையும் மத விஷயங்களுக்கு மட்டுமே அவர்கள் ஒதுக்கினர். இவ்வாறு வாரம் பிறந்தது. வாரம் என்பது இரு வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட காலம். வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் பெயர் வைத்தனர். ஆனால் அந்தப் பெயர்கள் எண்களாகவே அமைந்திருந்தன. சனிக்கிழமைக்குப் பிறகுஅவர்கள் நாட்களை எண்ணிக்கொண்டு வந்து சனிக்கிழமையுடன் முடித்தனர். அவர்களுடைய திட்டப்படி ஞாயிறு முதல் நாளாகவும், சனிக்கிழமை ஏழாவது நாளாகவும் அமைந்தன.

வாரத்துக்கு 7 நாட்கள் என்ற முறையை எகிப்தியர்களும் கடைப்பிடித்தனர். அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. வாரத்தின் நாட்களுக்கு அவர்கள் 5 கிரகங்களின் பெயர்களைச் சூட்டினர்.


எகிப்தியர்கள் வைத்த பெயர்களை ரோமானியர்கள் பின்பற்றினர். சூரியனின் பெயர் ஞாயிறு. சந்திரனின் பெயர் திங்கள். மார்ஸ் அல்லது டியூ, ரோமானியர்களின் போர்த் தெய்வம். அந்தப் பெயர் செவ்வாய்க்கிழமை ஆயிற்று. `மெர்க்குரி’ தெய்வத்தின் மற்றொரு பெயர் (ஓடன்) புதன்கிழமை ஆயிற்று. `தர்’என்பது ரோமானியர்களின் இடித்தெய்வம்.

அது `தர்ஸ்டே’ ஆயிற்று. அதாவது வியாழக்கிழமை. மறுநாள் வெள்ளிக் கிழமை. அந்தப் பெயர் எப்படி வந்தது? `ப்ரிக்’ என்பது ரோமானியர்களின் மற்றொரு தெய்வத்தின் மனைவி. அந்தப் பெயர், `ப்ரைடே’, அதாவது வெள்ளிக்கிழமை ஆயிற்று. சனிக்கிரகத்தின் பெயர் சனிக்கிழமைக்கு வந்தது.


***
thanks vayall
***





"வாழ்க வளமுடன்"

என் தளத்தையும் அறிமுகம் செய்து உள்ள லக்‌ஷ்மி அம்மா நன்றி!!!


http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html

வலைச்சரத்தில் என்னையும் , என் தளத்தையும் அறிமுகம் செய்து உள்ள லக்‌ஷ்மி அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா .....

***


6. ஆழ் கடல் களஞ்சியம்.. பிரபா தாமுவின் வலைப்பூ. அறியாத விஷயங்களை அறிவோம் என்கிறார். தினை மாவு அறியா தகவல்களை அறிவோம்.


நன்றி அம்மா.....

***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "