...

"வாழ்க வளமுடன்"

16 ஏப்ரல், 2010

உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை

குழந்தைப்பருவம் வரை, எப்படியாவது பால் குடிக்க வைக்க முடிகிறது; அதை தாண்டி விட்டால்போதும், பள்ளிக்கு போகும் போதே, “எனக்கு ஒரு கோக்’ என்று குரல் வருகிறது. அந்த அளவுக்கு குட்டீஸ் மாற காரணம், பெற்றோர் தான். நாற்பது வயது வரை, பால், தயிர் கண்டிப்பாக தேவை; எந்த கோளாறும் இல்லாத பட்சத்தில் கால்சியம் சத்துக்களை தருவது இவை தான்.


1. ஆறு “சின்ன’ சாப்பாடு:



உண்மையில், ஒரு நாளைக்கு ஆறு பிரிவாக பிரித்துத்தான் சாப்பிட வேண்டும் என்று தான் நிபுணர்கள் கருத்து. நம் வசதிக்காக , எப்போது பார்த்தாலும் “புல் கட்டு’ கட்டி விடுகிறோம். டிபனில் இருந்து சாப்பாடு வரை ஆறு பிரிவாக பிரித்து சாப்பிட்டால், ஜீரணமும் எளிதாகும். இந்த ஆறில், ஜங்க் புட், கூல் டிரிங்ஸ், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களுக்கு இடமில்லை.

*
2. வெள்ளை டேஞ்சர்:


நாற்பது வரை தான் அரிசி சாதம் போட்டு, கண்மண் தெரியாமல் சாப்பிடலாம்; அதற்கு பின் குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதம் எவ்வளவு தான் சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரத்தில் பசிக்க ஆரம்பிக்கும்; ஆனால், சப்பாத்தி சாப்பிட்டுப் பாருங்க; மணிக்கணக்கில் பசிக்காது. சாதத்தில், கார்போஹைட்ரேட் இருக்கிறது. அது அதிகம் சேர்வது நல்லதல்ல; ஆனால், சாதம் இல்லாமலும் இருக்கக் கூடாது. அதில் உள்ள மாவுப்பொருளில் வைட்டமின், கனிம சத்துக்கள் உள்ளன.

*

3. புழுங்கல் நல்லதுங்க:

*
நகரங்களில் பெரும்பாலோர் கண்பசி கொண்டவர்கள். பார்க்க பிடித்தமாக இருந்தால் தான் சோற்றை ருசிப்பர்; புழுங்கல் அரிசி சாதம் என்றாலே இவர்களுக்கு அலர்ஜி; அதனால் தான், பச்சரிசியை கூட பாலிஷ் செய்து சமைக்கின்றனர். ஆனால், புழுங்கல் அரிசி சாதம் சாப்பிட்டு பழகினால், அவ்வளவு ௮. பச்சரிசி பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக்கொள்ளலாம்.

*
4. தண்ணி காட்டுங்க:


மாடு துவண்டு போனால் தண்ணி காட்டுங்க என்று சொல்கிறோம். மனிதனுக்கும் அப்படித்தான்; சாப்பிடுவதற்கு இடையே, உடலில் நீர்ச்சத்து தங்கியிருக்க தேவை கண்டிப்பாக தண்ணீர் தான். லேசான நாக்கு வறட்சியே இதை காட்டிக் கொடுக்கும். ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் தண்ணீர் குடித்துப்பாருங்க; உங்களுக்கு சோர்வு வரவே வராது; தலைவலி போயேபோச்சு.

*


5. ஓவரா கழுவாதீங்க:









அரிசியை களையும் போது, அதிகமாக கழுவி சுத்தம் செய்தால், அதில் உள்ள மாவுச்சத்துக்கள் நீங்கி விடும். அதனால், அதிகமாக கழுவ வேண்டாம். காய்கறிகளில், பழங்களில் உள்ள உரம், பூச்சி மருந்து துகள்கள் நீங்க வேண்டும் என்பதால், அவற்றை சுத்தமாக கழுவித்தான் ஆக வேண்டும். கழுவாமல் சாப்பிடக்கூடாது; சமைக்கக்கூடாது.



*


6. மலச்சிக்கலா:


மலச்சிக்கல் இருக்கிறதா? இரவு நேரத்தில் சாப்பிடும்போது, பப்பாளி பழத்தை சாப்பிட்டுவிட்டு, பால் குடித்து படுக்கைக்கு போங்கள்; காலையில் மலச்சிக்கல் நீங்கி விடும். பப்பாளியும், பாலும் சேர்ந்து சாப்பிட்டால்,பேதி ஏற்படும் என்பது தவறான தகவல் என்பது டாக்டர்கள் கருத்து.



*



7. சாலட் தெரியுமா?:


*


ஓட்டலில் வெஜிடபிள் சாலட் என்று 50 ரூபாய்க்கு வாங்கிச்சாப்பிட்டால் தான் சாலட் என்றால் என்ன என்று பலருக்கு தெரிகிறது. அதையே வீட்டில் செய்து சாப் பிட் டால் எவ்வளவு உடலுக்கு நல்லது என்று பார்ப்பதில்லை. சுத்தம் செய்த கேரட், வெங்காயம், வெள்ளரி, தக்காளி, கோஸ் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி சாப் பிட்டால், உடலில் வைட்டமின், கனிம சத்துக்கள் சேருவது மட்டுமல்ல, பற்கள் சுத்தமாக இருக்கவும் உதவும்.



*

8. ஊறிய பாதாம்:

*

தீபாவளி, பொங்கல் தினங்களில் இனிப்பு வகைகளுடன் இப்போதெல்லாம் உலர்ந்த பழங்கள் பரிசாக கொடுப்பது வழக்கமாகிவிட்டது. இதில், பாதாம் பருப்பு பற்றி பலருக்கும் இப்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது.பாதாம் பருப்பு, சாதா கடைகளில் விற்கப்படுகிறது. பத்துபாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் தோல் நீக்கி கடித்து சாப்பிட்டால் நல்லது. "பிபி' எட்டிப்பார்க்காது.

***

www.dinamalar.com
நன்றி தினமலர்.


***


"வாழ்க வளமுடன் "

ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!

நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெட்ரூம் முதல் பாத்ரூம்வரை ஏ.சி. பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள்கின்றனர்.


அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், கிரீம் மற்றும் மேட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

*

இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!

*

கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

*

பொதுவாக மாலைநேரங்களில்தான் கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கும். அந்தநேரத்தில் கதவு, ஜன்னல்களை பூட்டிவிடுவது வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது.

*

காற்று வர வழியில்லாமல் முற்றிலும் அடைபட்ட நிலையில் உள்ள வீட்டின் அறைகளுக்குள் விளக்குகளை எரிய விடுவது, சமைப்பது, அவைகளுக்கு மத்தியிலேயே வீட்டில் உள்ள அனைவரும் சுவாசிப்பது... போன்றவற்றால் பிராண வாயுவான ஆக்ஸிஜனின் அளவு குறைந்துபோய் விடுகிறது.

*

இந்த சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகுந்துவிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வதால், அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்படுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற்குள் அதிகம் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்துபோய் விடுகிறது.




இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது, அவர்களின் உடலுக்குள்ளும் காற்றின் வழியாக நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது. முன்னறிவிப்பு இன்றி உடலுக்குள் புகுந்த இந்த நச்சுத்தன்மையை விரட்ட உடலானது எதிர்வினை புரிகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜலதோஷம், சளி பிடித்தல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு அலர்ஜி என்கிற ஒவ்வாமையும் இதனால் ஏற்பட்டு விடுகிறது. அத்துடன், மேலும் பல பாதிப்புகளையும் நம் உடல் ஏற்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.
*
கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன் படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.
*
கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.
*
மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.
*

இப்படியெல்லாம் பயமுறுத்தினால், நாங்கள் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்று கேட்கிறீர்களா?
*
அதற்கும் வழி இருக்கிறது. அந்த வழி கொசு வலைக்குள் புகுந்து கொள்வதுதான்!

***
நன்றி மாலைமலர்.

***

"வாழ்க வளமுடன் "

சிறுநீரகத் தொற்று நோய்

இன்நோயால் பாதிக்க‌ ப‌டாத‌வ‌ர் யாரும் இருக்க‌ முடியாது. இத‌ன் வேதனை அனைவரும் அனுப‌வித்து இருப்பிர்க‌ள். அது ஏன் ஏற்ப்ப‌டுகிற‌து? அதுவும் நீரிழிவு நோயாளிக‌ளுக்கு அதிக‌ம் ஏற்ப்ப‌டும் என்று கூறப்ப‌டுகிற‌து.



1.நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு முக்கிய காரணம், நீரிழிவு வெள்ளை அணுக்களின் செயலை முடக்கிவிடுகிறது. அடுத்தது, நீரிழிவால் நரம்பு மண்டலம் பாதிப்பு அடைகிறது. இதனால் சிறுநீர்ப்பை சரிவர இயங்காது. சிறுநீர்த்தேக்கம் சிறுநீர்ப்பையில் ஏற்பட்டு கிருமிகள் உற்பத்தியாகக் காரணமாகிறது.

*

2. தொற்றுக் கிருமிகள் பெண்களைப் பெரும்பாலும் சுலபமாகப் பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பாலியல் உறுப்பின் போதிய சுத்தமின்மை. அடுத்தது, மாதவிடாய் நின்றபிறகு, ஹார்மோன்கள் மாற்றத்தால், பெண்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து தொற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

*

3. ஆண்களைப் பொறுத்தவரையில், இளம் வயதில் சிலபேருக்குத் தவறான உடலுறவால், வி.டி. கிருமிகள், எய்ட்ஸ் போன்றவை தொற்றிக் கொண்டு, சிறுநீரக அழற்சி, சிறுநீர்ப்பாதை அடைப்பு போன்றவை ஏற்படும்.

*

4. நடுவயதினருக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றால் தொற்றுக்கிருமிகள் தாக்கி, சிறுநீர்ப்பாதை அடைப்பு ஏற்படலாம்.

*

5. வயதானவர்களுக்கு புரோஸ்டேட் வீக்கம், இரத்தநாளத் தடிப்பு போன்றவற்றால் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேக்கப்பட்டு தொற்றுக்கிருமிகள் ஏற்படலாம். வயதானவர்களுக்கு நாள்பட்ட நீரிழிவால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிறுநீர்ப்பை சுருக்கிவிரியும் தன்மையை இழந்து சிறுநீர் தேக்கம் ஏற்பட்டு கிருமிகள் வளர ஏதுவாகிவிடுகிறது.

*

6. குழந்தைகளைப் பொறுத்தவரையில், ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் பிரியும் இடத்தில் தோல் அடைப்பு இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பாதைக்கு வந்த சிறுநீர் மீண்டும் ஏதோ காரணத்தால், சிறுநீர்ப்பைக்கே திரும்பிச் செல்லும் காரணத்தால், சிறுநீர்ப்பையில் சிறுநீர்த்தேக்கம் ஏற்பட்டு, கிருமிகள் வளர ஏதுவாகி விடுகிறது. இதற்கு வெஸ்டிகோ யூர்டெரிக் ரிப்லக்ஸ் (Vestico Urteric Reflux) என்று பெயர்.

*

7. பெண் குழந்தைகள் சரியான முறையில் தன் பாலியல் உறுப்புகளைச் சுத்தம் செய்து வைத்திருக்காவிட்டால், நிச்சயம் தொற்றுக்கிருமிகள் சிறுநீரகத்தைத் தாக்கும். பெண் குழந்தைகளின் தாய் இதில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பஸ்திரீகள் கவனமாக இருக்கவேண்டும்.

*

8. பொதுவாக, பாலியல் உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டு, சிறுநீரை தேவையில்லாமல் அடக்காமல் இருந்து, அதிகமாக நீரை அருந்திக்கொண்டு, நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, தகாத உடல்உறவு கொள்ளாமல் விழிப்புணர்வோடு இருந்தால், சிறுநீரகக் தொற்றுக்கிருமிகளிலிருந்தும் மற்றும் பல சிறுநீரகக் கோளாறுகளிலிருந்தும் தப்பிக்கலாம்.


***



சிறுநீரகத் தொற்று வியாதிகளின் அறிகுறிகள் என்னென்ன?



*

1.உடலில் தேவையில்லாமல் அரிப்பு.
*
2. சிறுநீர் சிறிது வலியுடன் (முன்பாகவோ, பிற்பாடோ) வெளியேறும்.
*
3. சிறுநீர் பிரிந்த பிறகும், சிறிது சிறிதாக சிறுநீர் வெளியேறும், (அதாவது முழுமையாக ஒரேயடியாக வெளியேறாது) அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல்.
*
4. குளிர்காய்ச்சல் (கட்டுப்படுத்த முடியாத நடுக்கம், வெகு சீக்கிரம் உடல் உஷ்ணம் 104_106 டிகிரிக்கு ஏறுதல், மூச்சுத்திணறல் இவை 30லிருந்து 45 நிமிடம் வரை இருக்கும். பிறகு அடுத்தடுத்து வரலாம்).
*
5. வாந்தி . சிறுநீர் பிரியும்பொழுது எரிச்சல், குத்தல், சிலசமயம் சிறுநீருடன் இரத்தம் கலந்து செல்லுதல், துர்நாற்றம், பாலியல் உறுப்பில் ஆறாத புண், வீக்கம் ஏற்ப்படும்.
*
6. விலா, அடிவயிறு போன்ற இடங்களில் தாங்க முடியாத வலி.
*
7. இரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உற்பத்தியில், சிறுநீரகமும் பெரும்பங்கு வகிக்கிறது.


***

ஆகவே, தொற்றுக்கிருமியால் செயல் இழந்த சிறுநீரகம் சிவப்பு அணுக்களைச் சரியாக உற்பத்தி செய்யத் துணைபுரிவதில்லை. ஆகவே, சிவப்பு அணுக்கள் குறைவாகி சோகை (Anemia) காணும். இது மேற்கொண்டு பல பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.


*

(கவனிக்கவும்: மேலே உள்ள அறிகுறிகளில் பல, நீரிழிவுக்குப் பொருந்தும். எதுவாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காட்டிவிட்டால் பிரச்னை இல்லை.)

***

by-vayal
நன்றி vayal

***

http://senthilvayal.wordpress.com/2008/04/14/
உங்களுக்காக.
நன்றி உங்களுக்காக.

***

"வாழ்க வளமுடன் "

கருவளையம் மறைய

ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்…

1. தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.
*
2. வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.
*
3. வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
*
4. பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.
*
5. தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.
*
6. வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
*
7. பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.
*
8. ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்து விடும்.
*
9. போதிய அளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.
*
10. இதுப் போல் செய்தும், மருத்துவரின் துணையுடனும் கருவளையத்தை மறைய செய்யலாம். கருவளையம் மறைந்தால், நீங்களும் அழகு ராணி தான்…
***
by-vayal
நன்றி vayal
***
உங்களுக்காக
நன்றி உங்களுக்காக.
***

"வாழ்க வளமுடன் "

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "