...

"வாழ்க வளமுடன்"

19 ஜூலை, 2015

சீரான எடைக்கு சத்தான டயட்







டல் எடையும் அதிகரிக்கக் கூடாது. வயிறும் நிரம்ப வேண்டும். அது எப்படி முடியும்? சத்தான உணவுகளை, குறிப்பிட்ட அளவில் உண்டால், சாத்தியமே. அதற்கான டயட் சார்ட் இங்கே...





"வாழ்க வளமுடன்"
      

நோய்க்கு வேண்டாமே பர்த்டே பார்ட்டி!




கேக் இல்லாமல் கொண்டாட்டம் இல்லை. கேக்கை பார்த்தவுடனே தான் பிறந்தநாள் மூடே வருகிறது. பலூன், கலர் கலர் தோரணங்கள், வாழ்த்துக்கள் எனத் தொடங்கும் பிறந்த நாள், சாக்லெட், கேக், பரிசு பொருட்களுடன் சந்தோஷத்தின் சிகரத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும்.


ஆனால், கேக் வெட்டுவதற்கு முன்பு அதன் மேல் இருக்கும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும் கலாச்சாரத்தால், பல்வேறு நோய்களை நாமே வலிய வரவழைத்துக் கொள்கிறோம் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்!

பணத்தைச் செலவழித்துக் கொண்டாட்டத்தைத் தொடங்குகிறோம். ஆனால் அதனுடன் சேர்த்து வைர‌ஸையும், பாக்டீரியாவையும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குழந்தை தன் வாயால் ஊதி அனைத்த மெழுகுவர்த்திப் பொருந்திய கேக்கின் மேல் பரப்பில், சுமார் 3000 கிருமிகள் உள்ளன என்கிறது ஆஸ்திரேலியா நேஷனல் ஹெல்த் அண்ட் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில். அதில், ஒரு பகுதியாகக் கட் பண்ணும் ஒரு கேக் பீஸில் குறைந்தது 189 கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தும்மல், இருமல் பிரச்னை இருந்தால் எப்படி அது கிருமிகள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவுமோ அதுபோலப் பிறந்தநாள் கேக்கின் மூலமாகவும் பரவுகிறது என்கிறது அந்த ஆராய்ச்சி..

சுவாச வால்வில் தொற்று, வைரஸ், ப்ளூ, நோரோ வைரஸ் போன்றவை சில நிமிடங்களில் மற்ற குழந்தைகளுக்குப் பரவிவிடும். மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு நோய் சட்டெனத் தாக்கும். எனவே, பிறந்தநாளை கேக் வைத்து கொண்டாடும்போது, அதன் மீது மெழுகுவர்த்தி வைத்து ஊதாதீர்கள். 'கட்டாயம் மெழுகுவர்த்திகளை ஊதிதான் கொண்டாடுவேன்' என்றால் அந்தக் கேக்கை மற்றவர்களுக்குச் சாப்பிட கொடுக்காதீர்கள். கப் கேக்குகளை வாங்கி வைத்துக் கொண்டு, அதை மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.



- ப்ரீத்தி


"வாழ்க வளமுடன்"
      

பெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல!

குழந்தைகளிடம் நமக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால், குழந்தைகள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்கிற அக்கறையும் கேள்வியும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு எழுவதில்லை என்கிறார் விழியன்.

குழந்தைகள் நலன் குறித்து தொடர்ந்து எழுதி வரும் விழியன், குழந்தைகளுக்கு கதைகள் கூறுவதுடன், அவர்களை பாடபுத்தகம் தாண்டியும் வாசிக்க வைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

கடந்த வருடம் வெளியான இவரின் ‘மாகடிகாரம்’ எனும் சிறுவர் நாவல் புத்தகம், இதுவரை சிறுவர் இலக்கிய விருதுகள் மூன்றினைப் பெற்றுள்ளது.

‘பென்சில்களின் அட்டகாசம்’, ‘டாலும் ழீயும்’, ‘அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை’ போன்றவை பரவலாகப் பேசப்படும் இவரின் பிற புத்தகங்கள். இவரின் ‘உச்சி முகர்’ புத்தகம், குழந்தை வளர்ப்பின் மெல்லிய தருணங்களை விவரிக்கும் அழகிய பதிவு.

சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கட்டுரைகளையும், தன் மகள் குழலியுடன் நடக்கும் உரையாடல் மூலமாக பகிர்ந்து வருகிறார் விழியன்.

சென்னை, தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியல் வல்லுனராக பணியாற்றி வரும் விழியன், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கருத்தில் வைக்க வேண்டிய முக்கிய நான்கு விஷயங்கள் சொல்கிறார் இங்கு!

அதுவும் தவறு, இதுவும் தவறு

‘‘கணவன், மனைவி என இருவரும் பணிக்குச் செல்லும் வீடுகளில் வேலைச் சுமையால், குழந்தைகளை பணியாள் அல்லது வீட்டுப் பெரியவர்களிடம் மொத்தமாக ஒப்படைத்துவிட்டு, படிப்பு, நண்பர்கள், தோழிகள், பாக்கெட் மணி எவ்வளவு, இன்டர்நெட்டில் என்ன செய்கிறார்கள் என அவர்களைப் பற்றிய தற்காலக் கவலையை மறந்து, அவர்களின் எதிர்காலத்துக்காகச் சேமிக்கும் பெற்றோர் ஒரு வகை. இப்படிக் கட்டுப்பாடற்று வளரும் குழந்தைகளால் சின்னச் சின்னக் கண்டிப்புகளைக் கூட தாங்க முடியாமல் போகிறது.

கண்டிப்பான பெற்றோராக இருக்க எண்ணி, அத்தியாவசிய சுதந்திரத்தைக்கூட அவர்களுக்கு வழங்காமல், குழந்தையின் ஒவ்வொரு விஷயத்தையும் ஏதோ டிடெக்டிவ் ஏஜன்ட் போல கண்காணித்து, இயல்பான குறும்புகளையும் குற்றமாக பாவித்து தண்டனை கொடுக்கும் பெற்றோர் மற்றொரு வகை.

இப்படியான கட்டுப்பாடுகளால் இறுக்கப்படும் குழந்தைகள் அனைவருமே, 'சந்தோஷம்' என்கிற வார்த்தையுடன் 'பெற்றோர்' என்கிற வார்த்தையை எப்போதும் பொருத்திப் பார்க்காக சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எனவே, உங்களின் கண்டிப்பு என்பது, குழந்தைகளை எல்லா விஷயத்திலும் உங்களுக்கு அடங்கிப் போகிறவர்களாக வளைப்பதாக அல்லாமல், அவர்களின் நன்வளர்ச்சிக்கானதாக இருக்கட்டும். அதேபோல, சுதந்திரம் என்பது அவர்களுக்குத் தேவையான அளவுக்கு, தேவையான விஷயங்களுக்கு மட்டுமே வழங்கப்படட்டும்.

குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன?


பரிபூரண அன்பு! அது நிச்சயம் எல்லா பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால், அதனை செலுத்தும் விதத்தில்தான் தவறுகள் நிகழ்கின்றன அல்லது குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை சந்திக்க முடியாமல் போகிறது. குழந்தைகளிடம் நீண்ட நேரம் பேசவேண்டும். அவர்களின் சின்னச் சின்ன வெற்றிகளைப் பாராட்ட வேண்டும், தோல்விகளின்போது தட்டிக்கொடுக்க வேண்டும். அவர்களின் நண்பர்களைப் பற்றி அவர்களாகச் சொல்ல வைக்க வேண்டும். அன்றைய தினத்தின் நிகழ்வுகளை அவர்களாகப் பகிர வைக்க வேண்டும். பெற்றோர்களை ஒரு தோழன், தோழி என குழந்தைகள் பாவிக்க வேண்டும். இது எல்லாம் எப்போது சாத்தியம்?

அவர்களுடன் ‘குவாலிட்டி டைம்’ செலவழிக்கும்போது. குழந்தைகளுக்கு நீண்ட காலம் தன் பயங்களையும் ரகசியங்களையும் பாதுகாக்க முடியாது. தொடர் உரையாடல்கள் மூலம் அந்த பயங்களையும், ரகசியங்களையும் நீக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ‘இதனை நம் பெற்றோரிடம் பகிர்ந்தால், எந்த பிரச்னையும் இருக்காது ’ என்கிற நம்பிகையை அவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு!
குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல!

பெற்றோர்கள், தங்களின் நீட்சியாகவே குழந்தைகளைப் பார்க்கிறார்கள். தாங்கள் சிறுவயதில் தவறவிட்ட விஷயங்களை குழந்தைகள் மீது தங்களுக்கே தெரியாமல் திணிக்கிறார்கள். எந்தத் திணிப்பும் கசப்பாகத்தான் முடியும். குழந்தைகள் பெற்றோரின் அங்கம் அல்ல. அவர்கள் தனி ஜீவன்கள். அவர்களுக்கு என்று ஆசைகள், வெறுப்புகள், கனவுகள் இருக்கும். அதனைப் புரிந்து கொண்டு, அவர்களின் இலக்குகளை அடைய துணை நிற்பதே பெற்றோரின் கடமை.

உங்களின் கனவை அவர்கள் மூலமாக நிறைவேற்றும் எண்ணம், தவறு.

ஜனநாயகக் குடும்பம்!

குடும்பத்தில் அமைதியை குழந்தைகள் விரும்புகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு மத்தியில் நடக்கும் முறையற்ற, தேவையற்ற விவாதங்கள், குழந்தைகளை அச்சுறுத்துகின்றன.

இதைத் தவிர்த்திட வேண்டும். மேலும் குடும்ப முடிவுகளில் அவர்களின் ஆலோசனைகளையும் அவர்கள் கூற விரும்புவார்கள். குறைந்தபட்சம் விவாதங்களில் அவர்களை பங்குகொள்ளவாவது செய்யுங்கள்.

இது ஒரு ஜனநாயகக் குடும்பத்தை நோக்கிய நகர்வு. இதுதான் தற்கால குழந்தைகளின் விருப்பமும் கூட!’’

நிறைவேற்றுவோமா குழந்தைகளின் விருப்பங்களை !

- வே.கிருஷ்ணவேணி



"வாழ்க வளமுடன்"
      

ஆரோக்கியத்துக்கு அவகேடோ!


ரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன.

ஹெல்தி ஹார்ட்

வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.


குறையும் கொழுப்பின் அளவு

பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.

ரத்தக் கொதிப்புக்குப் பை பை

வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.

அதிகரிக்கும் பார்வை திறன்

லுடீன் (lutein) என்ற ஆண்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு அருமருந்து

ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஃபோலிக் அமிலங்கள் அவகேடோ பழத்தில் 23 சதவிகிதம் உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும்.
புற்றுநோயை தடுக்கும் ஆன்டிஆக்சிடன்ட்

ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.

நேசர் மவுத் வாஷ்

இயற்கையான முறையில் வாயை சுத்தம் செய்வதால் இதனை ‘நேசர் மவுத் வாஷ்’ எனச் சொல்லலாம். குடலை சுத்தம் செய்யும் அதோடு நாக்கின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

உடல் எடையைக் கூட்டும்

100 கிராம் பழத்தில் 200 கலோரிகள் உள்ளன. இதனால், உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்போருக்கு அவகேடோ ஒரு சிறந்த உணவு. நல்ல கொழுப்பும், சர்க்கரையும் இதில் அதிக அளவில் உள்ளன.

அழகுக்கும் அவகேடோ

தொடர்ந்து அவகேடோ சாப்பிட்டு வர, சருமம் பளபளப்பாகும். கூந்தலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வறட்சி நீங்கும். எரிச்சல், சிவந்து போகுதல், சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் குணமாகும்.

***
- ப்ரீத்தி

***


"வாழ்க வளமுடன்"
      

கொள்ளு ரசம்:


மைலாஞ்சி ( Mylanchi )'s photo.
 
 
 
 
 
 
 



"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "