...

"வாழ்க வளமுடன்"

13 மார்ச், 2011

அரிய சுவையான தகவல்கள் ( பொது அறிவு சில )



விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்

***

இல்லவே " இல்லாத" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் :

1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான்

2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா

3) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து

4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்

5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து

6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு

7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

8) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு

9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா

*

* ஈரான் மன்னராக இருந்த ஷா, தங்கத்தால் ஆன கத்திரிக்கோலை கொண்டு தான் ரிப்பன் வெட்டி எந்த திறப்பு விழாவையும் தொடங்கி வைப்பார்.

* வில்லியம் மார்கோனி என்ற அமெரிக்க நீச்சல்வீரர், நீச்சலில் 19 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

* முதலைகளால் இது நீல நிறம், அது பச்சை நிறம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. நிறக்குருடு தன்மை கொண்ட உயிரினம் இது.

* ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நபருக்கும் தலா 10 செம்மறி ஆடுகள் வீதம் இருக்கின்றன. அதனால் தான், அங்கு எங்கு பார்த்தாலும் மக்களைவிட ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன.

* அமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்ப் விளையாட்டு திடல்கள் உள்ளன. இங்கே, வயதானவர்கள் கோல்ப் விளையாடி தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.

* நெப்போலியனை வென்ற கடற்படை தளபதி நெல்சன் 5 அடி, 2 அங்குலம் உயரமே இருந்தார். அதேபோல், நெப்போலியனும் குட்டையானவரே!

* சாண்டி எனும் ஒருவகை சிவப்புக் கோழி பச்சை நிறத்தில் முட்டையிடும்!

* அன்னப்பறவை என்றாலே வெள்ளை நிறம்தான் நமக்கு நினைவு வரும். ஆனால், ஆஸ்திரேலியாவில் கருப்பு நிறத்தில் அன்னங்கள் வாழ்கின்றன!

* ஒரே மரத்தில் ராபின் பறவையும், அணிலும் சேர்ந்தே வாழும்.

* மைசூரிலுள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவிலுள்ள உயரமான நீர் வீழ்ச்சியாகும்.

* உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்கள் உள்ளன.

* இந்தியாவின் முதல் செல் தொலைபேசி சேவை 1995ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது.

* அங்குல அளவு முறையை கிரீஸ் நாட்டவர்களே முதன்முதலில்
கண்டுபிடித்தார்கள். கட்டை விரலின் அகலத்தைக் கொண்டு அளந்தார்கள். பிறகு ரோமானியர்கள் இதனை கணித முறையில் மாற்றி அங்குல அளவு முறையை முழுமைப்படுத்தினர்.

* திருமணத்தின்போது அட்சதை (அரிசி) தூவி வாழ்த்தும் முறை எகிப்திலும் இருந்தது. `உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு நீண்ட காலம் மணமக்கள் வாழ வேண்டும்' என்பதுதான் அரிசி தூவி வாழ்த்துவதன் பொருள்.

* இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான பேர், எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர்.

* மனிதனின் கண்ணீரில் சோடியம் குளோரைடு என்னும் உப்பு உள்ளது.

* லீவென் ஹாக் என்பவர் பாக்டீரியாவை 1682-ம் ஆண்டில் கண்டறிந்தார்.

* வில்லியம் ஹோவர்த் என்பவர் கார்ட்டூன் படங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

* மெக்சிகோ நகரம் ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட அளவு பூமிக்குள் இறங்குகிறது.

* அன்னத்தின் அறிவியல் பெயர்? - சிக்னஸ் அட்ராடஸ்.

* பிரமிடுகளில் மிகப்பெரியது? - குபு.

* சம்பா நடனம் புகழ்பெற்று விளங்கும் நாடு? - பிரேசில்.

* பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய உயிரினம்? - தும்பி.

* வாசனை பொருள்களின் ராணி? - ஏலக்காய்.
* ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரது
அணுகுமுறைகளும், ஆட்சிமுறையும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும், தனிப்பட்ட முறையில் நற்குணங்கள் பல நிரம்பியவர். ஹிட்லர், மாவீரன் நெப்போலியனின் தீவிர ரசிகர். பிரெஞ்சு மன்னான நெப்போலியனின் வெற்றி கண்டு வியந்தார். நெப்போலியன் உபயோகித்த அலங்கார நாற்காலியில் அமர்ந்துதான் ஹிட்லர் தனது பணிகளை கவனித்து வந்தாராம்.

* ஸ்காட்லாந்தில் உள்ள `போர்த்' என்ற ரெயில் பாலம், குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் சற்று அதிகம் நீண்டு காணப்படுகிறது.

* பூரண ஆயுள் 120 ஆண்டுகள் வாழ்வதைக் குறிக்கும்.

* ஒரு யுகம் என்பது பல லட்சம் ஆண்டுகளைக் கொண்டது.

* வானவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற 7 பிறவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.

* மாபெரும் விஞ்ஞானியான ஐசக் நியுட்டன் தீவிரமாக சிந்திக்கும் போது சில சமயம் உறங்கி விடுவார். அப்படி உறங்கிய போது கணிதப் பிரச்சினைகள், இயற்கை அமைப்பு சம்பந்தமான சில பிரச்சினைகளுக்குரிய விடைகளை கனவுகள் மூலம் அறிந்து கொண்டாரம்.

* மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் ராணுவ வீரர்கள் போல் அணிவகுத்து செல்வதற்கான காரணம் என்ன? என்று கேட்டால், விடை plarukku
தெரிவதில்லை. எறும்புக்கு பார்வைத்திறன் குறைவு. எனவே
எறும்புகளின் உடலில் சுரக்கும் அமிலங்களின் வாசனையை நுகர்ந்தபடி ஓர்
எறும்பு மற்றொரு எறும்பினை பின்தொடர்கிறது.

*ஆசியா கண்டத்தில் பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு சீனா. 44.5 சதவீத பெண்கள் இங்கு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆசியாவில் படித்த பெண்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா.

* அமெரிக்கர்களுக்கு தொலைபேசி இல்லையென்றால் ஏதோ இழந்தது போல் ஆகி விடுகிறார்கள். அங்கு 100-ல், 90 பேர் தொலைபேசி வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலோ 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.

* ஒரு கனமில்லி லிட்டர் ரத்தத்தில் 50 லட்சம் சிவப்பணுக்கள் உள்ளன. ஒரு சிவப்பணு இறந்ததும் புதிய சிவப்பணு தோன்றிவிடும்.

* திமிங்கலத்தில் சுமார் 100 வகைகள் உள்ளன.

* திமிங்கலம் போடும் குட்டி சுமார் 8 டன் எடை கொண்டதாக இருக்கும்.

* சிறிய மீன்களையே இவை உணவாக உட்கொள்ளும்.

* திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் எண்ணை, ஐரோப்பிய நாடுகளில் விளக்கு எரிக்க பயன்படுகிறது.

* திமிங்கலங்கள் விலங்கினத்தை சேர்ந்தவை.

* பாலூட்டி இனங்களில், வாலில்லா டென்ரிக் என்னும் சிறிய உயிரினம், ஒவ்வொரு முறையும் 30-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுக்கிறது.

* நூறு வருடங்களுக்கு மேல் வாழும் உயிரினம்? - ஆமை.

* ஆயிரம் என்பதை கம்ப்யுட்டரில் குறிக்கும் ஆங்கில எழுத்து? - `கே'.

* தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் யாரால் கட்டப்பட்டது? - ராஜ ராஜசோழன்.

* விதையில்லாத பழ வகை? - அன்னாசி.

* உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கினம்? - முள்ளம் பன்றி.

* ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் காலம்? - 10 மில்லியன் ஆண்டுகள்.

* தமிழகத்தில் கல்வியறிவில் முதலிடம் பிடிக்கும் மாவட்டம்? - கன்னியாகுமரி.


***
thanks படித்ததில் பிடித்தது
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "