...

"வாழ்க வளமுடன்"

08 மார்ச், 2010

வசம்பு மருத்துவ குணங்கள்






இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

*

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.


அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.


***


வசம்பின் மருத்துவ குணங்கள்:








1. சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.





2. * வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.









*









3. இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.






*









4. கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.






*






5. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.









*












6. முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.







*









7. விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு




8. காக்காய் வலிப்பு, மன நோய்கள், தூக்க மின்மை, வயிற்றுக் கோளாறுகள் குணமாளிக்கிறது.









*









9. குழந்தைகளுக்கு நாக்குத் தடுமாற்றம், வாந்தி, பேதி, வயிற்றுவலி.












*









10. பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்குத் தொண்டையில் படியும் "அக்கரம்" நீங்க, தினந்தோறும் உள்நாக்கில் தேனில் குழைத்த வசம்பு பொடி தடவி வரலாம். இது உடனடியாக உடனே உறிஞ்சப்படுவதால் "அக்கரம்" நீங்கும்; மூளை தூண்டப்படும்; கபம் சேராது; நல்ல ஜீரணசக்தி வரும்; மந்தம், மலச்சிக்கலும் வராது.









*


















11. திருநீற்றுப் பச்சை இலைச்சாறு பருக்கள், வடுக்கள் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கிறது.இதன் சாறுடன் வசம்பு சேர்த்து, அரைத்து சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் குணம் தெரியும்.









*






12. வசம்பு, கொத்தமல்லிவிதை, லோத்திரப்பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூச முகப் பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகாக இருக்கும்.









*









13. பேரரத்தை, கொன்றைப்பட்டை, தேவதாறு, அதிமதூரம்,திராஷை, திப்பிலி, காட்டுமிளகு, நன்னாரிவேர், வெள்ளைச்சாரணை வசம்பு, ஜடாமாஞ்சி, சதாப்பிலை, கோரைக்கிழங்கு, நிலப்பனங்கிழங்கு, கோஷ்டம், இலவம்பிசின், கொத்தமல்லி, ஆலம்விழுது, அவுரிவேர், சுக்கு, இவைகளை கியாழம் வைத்து அதில் தேன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் வாதசுரம் நீங்கும்.










*












14. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்









*









15. மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.









*









16. வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம். இது ஞாபக சக்தி பெருக உதவும்.












************









நான் வசம்புக்கு தேடி எனக்கு கிடைத்த தகவல் வைத்து இதில் இட்டு உள்ளேன்.









*









நன்றி. மகலிங்கம் த












*****






மைக்ரோ வேவ் சமையல்- உஷார்

மைக்ரோ வேவ் இல்லத வீடு தற்ப்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது.



மைக்ரோ வேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாகDr.மெர்கோலா தெரிவிக்கிறார்.
அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.
***
புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனில் வேக வைக்கும் போது மிக அதிக அளவில் நஷ்டப்படுவதாக Dr Cristina Garcia-Viguera சோதித்து அறிவிக்கிறார்.
***
ஆன்டியாக்ஸிடென்டும் அதன் நஷ்ட விகிதமும்
*
ஆவியில் --- மைக்ரோ வேவ்அவனில்
***
flavonoids ----------- - 11% --- 97%
*
sinapics ----------- -- 0% --- 74%
*
caffeoyl-quinic derivatives--- 8% --- 87%
***
உணவில் ஏற்ப்படும் பாதிப்புக்கள்:
*
1. மைக்ரோ வேவ் அவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது .குறிப்பாக அதில் உள்ள lysozyme என்ற பொருள். இது பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாப்பது.
*
2. மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பனிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல்.
*
3. "குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது."1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார்.
*
4. ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இரண்டு பானைகளில் தாவர விதைகளைப்போட்டு ஒன்றில் சாதா தண்ணீரையும், மற்றொன்றில் மைக்ரோ வேவில் சூடாக்கியத் தண்ணீரையும் விட்டு விதைகள் முளைக்கிறதா என பாருங்கள்.
*
5. மைக்ரோ வேவ் தண்ணீரில் விதைகள் முளைக்காதாம். செடியானாலும் வாடிப் போய்விடும்.
***
மேலும் சில தகவல்:
*
சாதாரண அடுப்பில் எரிபொருள் எரியும் போது அது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து இன்னொரு மூலக்கூறாக மாறும்போது வெப்பம் வெளிவிடப்படுகிறது. இந்த வெப்பம வெப்ப அலைகளாக்ப் பரவி உணவை அடைந்து சூடாக்குகிறது.
*
சாதாரணமாக அடுப்பில் உணவு சூடாக்கப்படுவதற்கும் மைக்ரோ வேவ் உணவை சூடாக்கும் முறைக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. மைக்ரோ அலைகள் பாத்திரத்தை சூடாக்காமல் நேரடியாயாக உணவில் உள்ள மூலக்கூறுகளை அதிரச்செய்து சூடாக்குகின்றன்.குறிப்பாக நீர் மூலக்கூறுகளை.இந்த அதிரடியில் மூலக்கூறுகளிடையே எலெக்ட்ரான் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு மூலக்கூறுகள் மாற்றமடையலாம் புதிய மூலக்கூறு இணைப்புகள உண்டாகலாம் என்று நம்பத்தான் தோன்றுகிறது.
*
மைக்ரோ அவனில் மின்சார அலை உண்டாக்கும் அதிர்வுகளால் (சுமார் 2.5 gigahertz) நீர் ,கொழுப்பு, சர்கரை மூலக்கூறுகள் அதிர்வடைந்து உராய்வடைந்து வெப்பம் உண்டாகிறது. பிளாஸ்டிக் , கண்ணாடி,பீங்கான் பாத்திரங்களில் இந்த அலை பாதிக்காது. சமையலுக்கு இத்தகைய பாத்திரங்களையே உப்யோகிக்க வேண்டும்.மேலும் அறிய: How Microwave Cooking Works?
***
மைக்ரோ வேவும் உலோக பாத்திரமும்:
*
ஆனால் உலோகப் பாத்திரங்கள் ,அலுமினியம் ஃபாயில்கள் மைக்ரோ வேவ் அவனில் உபயோகப் படுத்தக்க்கூடாது. உலோகங்களில் மைக்ரோ வேவ் மின்சாரததை தூண்டுகிறது. இது மெல்லிய உலோகங்களில் ஸ்பார்க் (spark) ஐ உருவாக்கி எரியச் செய்கிறது.
***
மைக்ரோ வேவில் முட்டை வெடிக்குமா?
*
மைக்ரோ வேவ் அவனில் முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. முட்டை வெடித்து விடும்
***
மைக்ரோ வேவில் தண்ணீர் வெடிக்குமா?
*
சுத்தமான தண்ணீரை மைக்ரோ வேவ் அவனில் வைத்து அதிகமாக சூடாக்குவதில் ஆபத்து உள்ளது. ஏனெனில் பாத்திரம் சூடாகமல் தண்ணீர் மட்டும் சூடாவதால் தண்ணீர் அதன் கொதி நிலைக்கு மேல் அதிக வெப்பமடைகிறது. வெப்பம் 100°c க்கு மேல் போனால் கூட நீர் குமிழ்களோ நீராவியோ வெளியாகாது.இந்த நிலையில் அந்த தண்ணீர் கோப்பையை அவனிலிருந்து வெளியே எடுக்க முயன்றால் உண்டாகும் சிறு அதிர்வால் தண்ணீர் வெடித்தது போன்று கொதிநிலைக்கு மேல் வெப்பமடைந்த தண்ணீர் கொப்பளித்து சிதறும். இதை தவிர்க்க தண்ணீர் சூடாக்கும் போது ஒரு உலோகமற்ற கரன்டியை அதில் இட்டு வைக்கலாம். பீதி வேண்டாம் அபூர்வமான நிகழ்வு இது என்றாலும் இப்படி நடைபெறும் வாய்ப்பு உள்ளது உண்மை.மேலும் அறிய http://www.snopes.com/science/microwave.asp
*
மைக்ரோவேவில் பட்டர் தடவிய பாப் கார்ன் தயாரிக்கும் போது வெளியாகும் புகையில் Diacetyl என்ற வேதிப்பொருள் நுரைஈரலை மோசமாகப் பாதிக்கிறது. பால் பொருட்கள் , வைன் ஆகியவற்றிலும் இது உருவாகிறது.மேல் விபரம் இங்கே
***
Induction cooker :
*
Induction cookerன் செயல் பாடு அடிப்படையில் micro wave oven போல இருந்தாலும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. micro wave oven -ல் பாத்திரம் சூடாவதில்லை ,உணவின் நீர் மூலக்கூறு தான் சூடாகிறது.இதில் தான் மேற்கண்ட பாதிப்பு உள்ளது. ஆனால் Induction cooker-ல் அடுப்பு சூடாவதில்லை.ஆனால் அதன் மீது வைப்பட்ட இரும்பு அல்லது காந்ததால் ஈர்க்கப்படும் உலோக பாத்திரத்தை மின் காந்த அலைகள் வெப்பமடையச்செய்கின்றன. அதனால் சாதாரண அடுப்பில் சமைப்பது போலவே உள்ளே இருக்கும் உணவு சூடாவதால் மேலே சொன்ன மைக்ரோ வேவ் அவனுக்குள்ள பிரச்சனை இவனுக்கு இல்லை. ஆனால் இதயத்தில் பேஸ் மேக்கர் பொருத்தியவர்களும், அரிதாக மைக்ரோவேவுக்கு சென்சிட்டி உடையவர்களும் இண்டக்சன் ஸ்டவ் ஆனாலும் ,மொபைல் போன் ஆனாலும் பார்த்து ,கேட்டு உபயோகிக்கவும்.
***
நன்றி சாதிக் அலி.
http://sathik-ali.blogspot.com/2009/01/blog-post_5114.html
***

மகளிர் தின வாழ்த்துக்கள்!

பெண்கள் ஒவ்வெரு நிலையிலும் எவ்வளவு அவதாரம் எடுக்கிறாள்.

*


அதிகப்படியான மகிழ்ச்சியே குழந்தை பருவம். நாம் இப்பவும் இதுபோல் குழந்தையாக இருக்க முடியுமா என் ஏங்கும் குழந்தை பருவம்.




சிறிது வளந்ததும் விளையாடுகிறோம்!




சிறிது வளந்ததும் விளையாடுகிறோம்! பிறகு படிப்பு & கணிணி படிப்பும் தற்ப்போது சேர்ந்து விட்டது! படிப்பு வாழ்க்கைக்கு முக்கியம் என்று அப்போது உணராத நேரம்.




இன்னும் சிறிது வளந்ததும் மேல் படிப்பு, வாழ்க்கையில் படிப்பு முக்கியம் என்று அறிந்துக் கொள்ளும் பருவம்.




பிறகு இல்லறமே நல்லறமாக இருக்கும் திருமண வாழ்க்கை. வாழ்வில் இன்பமும், துன்பமும் அனுபவிக்கும் சில பொண்கள்.



பிறகு இல்லறமே நல்லறமாக இருக்கும் திருமண வாழ்க்கையில் கிடைத்த இன்பமான தருனம் இந்த தாய்மை ஆகப்போகும் பருவம்.


பிறகு இல்லறமே நல்லறமாக இருக்கும் திருமண வாழ்க்கையில் கிடைத்த இன்பமான தருனம் இந்த தாய்மை பருவமும் & குழந்தைக்கு என்று அனைத்தையும் விட்டு குடுக்கும் பருவம்.





நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற்ற தருனம் இது. பெண்கள் நினைத்தால் சாதிக்கும் குணம் உண்டு என்று அனைவரும் தெரியும்.


வாழ்வில் பெண்கள் சாதித்து இருக்காங்க. மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம். வாழ்த்துகள் பெண்களே!
********************************************************


ஆனால்
*
ஆனால் வெளி உலகத்துக்கு தெரியாத எவ்வளவு பெண்கள் உங்கள் வீட்டிலும், வெளி உலகத்திலும் இருக்காங்க என்று யோசிங்கள் பிள்ளைகளே! ( பிள்ளைகள் என்பது ஆண் & பெண்கள்லும் தான் )


***
உங்கள் ஒருவருக்கா எவ்வளவு தியாகம் செய்து எவ்வளவு கஷ்டம் ( ஒரு சில வீட்டில் உண்ண உணவு கூட இல்லாமல் இருக்கும் சமையம் பிள்ளைகளுக்கு அளித்து அவள் பட்டினி கிடக்கிறாள்.)

***
பிறகு வளந்ததும் நீங்கள் எங்கே போனிற்கள் பிள்ளைகளே!

இக் கவிதைக்கும் படத்துக்கும் நன்றி நண்பரே! நன்றி பாலுமுத்தையா.
***
உன்னை பெற்ற பாவத்திற்க்கா ( ஒரு சிலர் மட்டும் ) அவர்கள் பட்ட கஷ்டம் போதாது என்று தற்ப்போது முதியோர் இல்லமும் & அனாதை ஆசிரமும் கொண்டு போயி விடும் பிள்ளைகள் நாளை நீங்கலும் முதியோர் ஆவீர்கள் என்று மறந்து விட்டீகள்!
***
யோசித்து பாருங்கள்! பிற‌கு ஏன் முதியோர் இல்லமும் & அனாதை ஆசிரமும்!

***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "