...

"வாழ்க வளமுடன்"

03 ஜூன், 2011

நுரை நுரையா பூந்திக்காய், பூந்திக் கோட்டையின் பயன் :)



மாறிவரும் நவீன யுகத்தில் என்னதான் ஆடம்பர வசதிகள் இருந்தாலும் சிலருக்கு பழமை தான் பிடிக்கும். வடித்த சாதம், செக்கில் ஆட்டிய எண்ணெய், வாழை இலை சாப்பாடு என்பதுபோல், நுரை பொங்கும் மூலிகை குளியலும் எல்லோருக்கும் பிடித்தமான விஷயமே.


அவசர கதியான ஓட்டத்தில் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்கள் நமக்கு உதவினாலும் கடலை மாவு, பாசிப்பயறு மாவு, அரைப்பு சீயக்காய் போன்றவற்றின் மகிமை அவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் தான் தெரியும்.


நாம் பயன்படுத்தும் பலவிதமான சோப்புகளில், சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் தோல் வறட்சி, வியர்வை கோளங்களில் அடைப்பு, ரோமக்கால்களில் அடைப்பு, ரோமங்கள் வெடித்து, தோலின் மென்மையான புற அடுக்கு தடித்து, வீங்கி நிறம் மாறல், நகமும், தோலும் இணையும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, அங்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் வளருதல் என பல தொல்லைகள் ஏற்படுகின்றன.


பெரும்பாலான சோப்புகள் கிருமிகளை நீக்கும் ஆசிட்களாகத்தான் செயல்படுகின்றன தவிர, தோலுக்கு எந்த நன்மையும் பயப்பது இல்லை. இவை தவிர பல்வேறு நிறத்திற்காக சோப்பில் சேர்க்கப்படும் சாயப்பொடிகளும், நுரைக்காக சேர்க்கப்படும் சல்பேட்டுகளும் தோல் வறட்சியை அதிகப்படுத்துவதுடன் அரிப்பையும், வறட்சியையும் உண்டாக்கிவிடுகின்றன. நாம் பலவகையான சோப்புகளை விரும்பி பயன்படுத்துவதற்கு காரணம் அவற்றின் நுரைப்புத்தன்மையே.


நுரை பொங்க குளித்துவிட்டு வந்தால்தான், குளித்தது போன்ற புத்துணர்ச்சி உண்டாகிறது என்ற மாயை அனைவரிடமும் நிலவிவருகிறது. பழங்காலத்தில் நுரை தரக்கூடிய பொருட்களை, குளியல் பொடியில் பயன்படுத்தினர். செம்பரத்தை பூ, துளசி, சுரை, பீர்க்கு குடுவைகள், வாழை மட்டை போன்றவை நுரை மற்றும் வழுவழுப்பு தருவதால், குளியல் பொடிகளில் இவற்றை பயன்படுத்தி குளித்து மகிழ்ந்தனர்.


ஆனால் இவற்றை உடனடியாக பயன்படுத்த வேண்டும். உலர்ந்தபின் பயன்படுத்தினால் இதன் நுரைப்புத்தன்மை மாறிவிடுவதுண்டு. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களால், இவற்றின் பயன்பாடு குறைந்து சோப்பின் ஆதிக்கம் அதிகரித்தது.


நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான், நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.
சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன.

இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் உண்டாக்குகின்றன.


உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதை நீரில் குழப்பி, சற்று நேரம் வைத்திருந்து, பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.

**

வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி

உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்துவரலாம்.

***

கேள்வி-பதில்

என் முகத்தில் பரு தழும்புகள் ஏராளமாக உள்ளன. அதுவும் கண்களுக்கு கீழ் கருவளையமும், சுருக்கமும் உள்ளது. எளிமையான வீட்டு மருத்துவம் கூறவும்.

தோலுரித்த உளுந்தை, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் நீரை வடிகட்டிவிட வேண்டும். அத்துடன் பாசிப்பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள் மற்றும் பசு வெண்ணெய் சேர்த்து, மைய அரைத்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவிவிட வேண்டும். இதுபோல் தினமும் செய்துவர முகம் பளபளப்படையும்.


***
thanks தினமலர்
***





"வாழ்க வளமுடன்"

உடலை பத்திரமாக பாதுகாக்க 10 வழிகள் :)


உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு.

அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.


தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.


தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் ஒருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.


சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.


நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.


மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.


உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.


உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.


இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே!


எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.


தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் வழிவகுக்கும்.


***
thanks ஞானமுத்து
***






"வாழ்க வளமுடன்"

அளவுச் சாப்பாடு நல்லதா?


மனித உடல், இறைவைனின் அற்புதப் படைப்பாகும். நல்ல கட்டுக் கோப்புடன் வளர்ச்சியடைந்த மனித உடலை விட அழகானதொரு பொருள் வேறெதுவும் இருக்க முடியாது. மனித உடலின் அமைப்பு அதிக நுட்பமும், மிக நுண்மையானதுமாகும். அது வியத்தகு முறையில் கூரிய அறிவாற்றலுடன் மிக நேர்த்தியாக தன் வேலையைச் செய்து கொள்கிறது.



அவ்வுடலுக்கு ஏதுவாக, பொருந்தும் உணவுகளை மருந்து போல நாம் உண்ண வேண்டும். நிறைவான அமைதியான வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பதில் உணவே முதலிடம் பெறுகிறது. அதனாற்றான், உண்டி முதற்றே உலகு, உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றார்கள் நம் முன்னோர்கள்.

**

எவ்வாறு உண்பது?

அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று என்று வைத்துள்ளனர். அளவுக்கு மேல் உண்பது உயிராற்றலைக் குறைக்கும். ஏனெனில், அந்த உணவைச் செரிமானம் செய்வதற்கே உயிராற்றல் அதிகமாகச் செலவாகும்.


அதிகமாக உண்ணத் தூண்டும் விருந்துகளை நாடி ஓடினால் மருந்துகள் நம்மை விரட்டும். நோய்கள் நம்மை மருட்டும். தாகம் தீர்க்கவும், உடலுக்கு ஊட்டந்தரவும், உடல் நலன், உடல் உரம், மகிழ்ச்சி, இவற்றைப் பேணவும் தான் உணவுண்பது.


தத்தம் பசியை ஆற்றிக் கொள்ள மக்களும் விலங்குகள் முதலிய ஏனைய உயிரினங்களும் உணவை எந்த முறையில் உட்கொள்ளவேண்டும் என்பதை அறியாமல் உணவு உண்டு வருகின்றனர்.

**

உணவின் இரகசியங்கள்.


மனிதன் உணவுண்ண பசி தேவை. பசி என்பதை விட, மெய்ப்பசி என்பதே சரியானது. அது என்ன மெய்ப்பசி? நன்றாக பசிஎடுத்து நாவில் சுவை ஊறியிருக்கும் நிலையே மெய்ப்பசி.

*

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல

துய்க்க துவரப் பசித்து. (குறள் :944)



முன்பு உண்ட உணவு செரித்த நிலைமைகளை அறிந்து நன்றாகப் பசித்த பின்பு, உடல் நிலைக்கும், கால நிலைக்கும் இடத்திற்கும் மாறுபாடு இல்லாத உணவுகளை உண்ண வேண்டும் என்கிறார் வாழ்வியல் முன்னோடி வள்ளுவப் பேராசான்.

**

அளவுக்கு மிஞ்சினால்...



அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (குறள்:943)


வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, அளவாகச் சாப்பிடுவதை நாம் அவசியம் கற்க வேண்டும். நம் உணவின் அளவை நாமே தீர்மானிக்க வேண்டும். பிறரின் அன்பிற்காகவோ, வற்புறுத்தலுக்காகவோ நாம் உண்ணுதல் கூடாது. அதிகச் சாப்பாடு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, நாம் உண்ணும் உணவின் அளவை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.


அதிக உணவு உண்டால், அஜீரணமும், மலச்சிக்கலும் ஏற்படும். இவை சுடுகாட்டுத் தேரின் இரு சக்கரங்கள் என்கிறார் சுவாமி சகஜானந்தா. செரிக்காத உணவால், சளி, நாக்கில் பதிவு, கண்ணில் பீளை, வாந்தி, புளிச்ச் ஏப்பம், ஏற்பட்டு இருதய நோய், சர்க்கரை வியாதி, மூலம் என நோய்களோடு நாம் வாழ்க்கையைக் கழிக்க வேண்டி இருக்கும்.


பசித்து, அதுவும் முன் உண்ட உணவு செரித்து விட்டதா என அறிந்து, துவரப் பசித்த பிறகே சாப்பிட வேண்டும். பசி நீங்கினால் அதுதான் அளவு. பசியோடு உட்கார்ந்து, பசியோடு எழுந்திருத்தல் கூடாது.

**

மிகு உணவை எப்படித் தவிர்ப்பது?


துணை உணவுகளான சாம்பார், ரசம், மோர்க்குழம்பு போன்றவற்றையும், தொடுகறிகளையும் தவிர்க்கலாம். மென்று சாப்பிட்டால் அதிக உணவு தேவைப்படாது. ஒரு உணவை, அதன் சுவை நாவில் மறையும் வரை சுவைக்க வேண்டும்.

*

உணவு ஒழுங்கு.

1. முளைக்க வைத்த தானியம் மற்றும் தேங்காய், பழங்கள்.

2. காய்கறிப் பசுங்கலவை.

3. இரண்டு வேளை மட்டுமே ஒரே வகையான உணவு.

4. இருட்டுவதற்கு முன் இரவு உணவு.

**

நன்மைகள்:


அஜீரணம், மலச் சிக்கல் இருக்காது. தொப்பை விழுந்து, இதய நோய் வராது.

உண்பதற்காக வாழ்கிறோமா அல்லது வாழ்வதற்காக உண்கிறோமா என்பதை சிந்தனையில் கொள்ள வேண்டும்.


நம் உடம்பே நமக்குச் சுமையாக ஆகக் கூடாது அல்லவா? இறந்தவன் கனமாக இருந்தாலும் கேலிக்கு ஆவான் அல்லவா?
ஆகவே நாம் உண்ணும் உணவை நாமே நிர்ணயம் செய்து கொள்வோம். நலமாக வாழ்வோம். !


(சிவகாசியில் நடைபெற்ற இயற்கை வாழ்வியல் மாநாட்டில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் திரு இர.இராமலிங்கம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து)

***

நன்றி:

இந்தக் கட்டுரையை அனுப்பித் தந்திருக்கும் கும்பகோணம், திரு மா.உலகநாதன், எம். ஏ, அவர்களுக்கு என் இதய நன்றி. திரு மா.உலகநாதன் அவர்கள் தற்போது வரலாற்றுத் துறை முனைவர் பட்ட ஆய்வாளராக, திருவிக அரசு கலைக்கல்லூரி, திருவாரூரில் செயலாற்றி வருகிறார். மேலும் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் துணை தலைவராகவும் இருக்கிறார். அவரது மின்னஞ்சல்: worldnath_131149@yahoo.co.in


இந்த அருமையான கட்டுரைக்கு உங்கள் பாராட்டுக்களை தெரிவிக்க விரும்பினால் அவருக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது இந்த வலைப்பூவில் பின்னூட்டமாகவோ தெரிவிக்கலாம்


***
thanks மா.உலகநாதன்
thanks Ashvinji
***



"வாழ்க வளமுடன்"

ஓ.கே ~ O.K என்கின்ற சொல் எவ்வாறு உருவாகியது?


நம்முடைய நாளாந்த வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ற ஒரு சொல்லாக O.K என்கின்ற ஆங்கிலச் சொல் விளங்குகின்றது. இன்று நாம் ஓகே என்கின்ற சொல்லினை பல்வேறு இடங்களில் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்துகின்றோம்.

O.K என்கின்ற சொல் எவ்வாறு தோற்றம் பெற்றது தெரியுமா?.......

அமெரிக்க சிவில் யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் போரின் பின் தமது முகாமுக்கு திரும்புகின்ற படைத்தரப்பினர், தமது மேலதிகாரிக்கு இந்தப் போரில் 0 (zero) killed ~ [ஒருவரும் கொல்லப்படவில்லை] என அறிக்கை சமர்ப்பிப்பராம்.

காலப்போக்கில் 0 (zero) killed என்பது O.K என்பதாக நிலைத்துவிட்டது.

***
thanks லோகநாதன்
***




"வாழ்க வளமுடன்"

'இதய ஆரோக்கியம்' ( மருத்துவ ஆலோசனைகள் )



2009ல் சென்னை - வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையில் 'இதய ஆரோக்கியம்' குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அதில், இதய நோய்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களையும், நமது வாழ்க்கை முறையினால் இதய பாதிப்பில் சிக்காமல் இருப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் பிரபல மருத்துவர்கள் விரிவாகவே விளக்கமளித்தனர்.
அதன் முக்கிய அம்சங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு...

நம் இதயத்தை பற்றி முதலில் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதயத்தின் பாதிப்புகளில் இருந்து சமாளிக்கத்தான் மருந்துகள் இந்த உலகில் உள்ளதே தவிர, அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது தான் முதல் உண்மை. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்... ஒவ்வொரு மருந்தும் நமக்கு உதவிகள்தான் செய்கிறதே தவிர, போரிட்டு அந்த நோயை வெள்ள முடியாது!

பைபாஸ் சர்ஜரி, ஏன்ஜியோ பிலாஸ்ட் ஆகிய சிகிச்சைகள் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கு உதவி செய்கிறது. இதயத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை தட்டிவிட்டோ அல்லது அந்த பாகத்துக்கு பதில் வேறு குழாயை வைப்பது என அனைத்தும் நம் இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு மருத்துவர்களால் செய்யப்படும் ஒரு சிறு உதவிகள் மட்டும் தான். இதில் பேஸ்மேக்கரும் விதிவிலக்கல்ல.


ஆண்டுதோறும் ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆசியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயது முதல் 26 வயதுக்குள் இருப்பவர்களும் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இதயக் கோளாறா என்று நீங்கள் ஆச்சரியபடுவது புரிகிறது. ஆயினும், இது நமது சமூகத்தில் புதிதல்ல என்கின்றனர், மருத்துவர்கள். ஆண்டுதோறும் பல்லாயிரம் குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது அண்மைப் புள்ளிவிவரம்.
'30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் மாரடைப்பு வரும்' என்று இன்றும் பல பேர் நம்புகிறார்கள். அது முற்றிலும் தவறு. தற்பொழுது சராசரி 26 வயதுக்குள் இருப்பவர்களும் வந்துவிடுகிறார்களாம். இந்த வயது எண்ணிக்கை மேலும் குறையலாம் என்பது வருத்தத்துக்குரிய மருத்துவர்களின் புதிய கணிப்பு.


நமது ரத்தக் குழாயில் எல்.டி.டி(Low Density Lipo) தான் நமக்கு இதய நோய் தொடர்பான குறைகளை எல்லாம் அழைத்துவரும் நண்பராக இருக்கிறது. இதைக் குறைக்கத்தான் முடியுமே தவிர, முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.


இதய நோய் பிரச்னையில் மிகவும் பரிதாப நிலை கொண்டவர்கள் யார் என்றால், சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான். இவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் கூட இவர்களுக்கு தெரிவதில்லை என்பது தான் உண்மை. காரணம்..? சர்க்கரை நோய் தாக்கியவர்களுக்கு நரம்புகள் பலகீனமடைவதால், அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்பொழுது வலி அதிக அளவில் இருக்காது. எதேச்சையாக பலவீனம், தலைசுற்று என்று பக்கத்தில் இருக்கும் மருத்துவர்களிடம் செல்லும் பொழுது மருத்துவருக்கு சந்தேகம் வந்து, இ.சி.ஜி. எடுத்துப் பார்க்கும்பொழுதுதான் அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது என அறிய முடிகிறது என்பது வேதனையான உண்மை. ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்றுக் களைப்படைந்தாலும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சாதாரண மனிதர்கள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுவே சர்க்கரை நோய் தாக்கியவர்களாக இருப்பின், கண்டிப்பாக 2 அல்லது 3 மாததுக்கு ஒரு முறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்துக்கான ஒரே மருத்துவரை தேர்ந்தெடுத்து, அவரிடமே சிகிச்சை செய்து கொள்வது மிக மிக அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்... நமது உடலில் கெட்ட ரத்தம் (Bad Blood), நல்ல ரத்தம் (Good Blood) என இரண்டு வகையாக ரத்தத்தை மருத்துவ நிபுணர்கள் பிரித்துக் கூறுகிறார்கள். உதாரணமாக, நமது கையின் மேல் இருக்கும் கருப்பான நரம்புகள் அனைத்தும் கெட்ட ரத்தத்தைதான் கொண்டு செல்கின்றது. இதை நீங்கள் தொட்டுப் பார்த்தால், உங்களால் ஒன்றுமே அரிய முடியாது. இந்தக் கெட்ட ரத்தம் முழுக்க முழுக்க குறைந்த அழுத்தம் (Low Pressure) வகையை சேர்ந்ததால் தான் உங்களால் இதன் தன்மையை உணர முடியா நிலை ஏற்படுகிறது.


நல்ல ரத்தம் எங்கேதான் ஓடுகிறது என கேட்கிறீர்களா? நம் உடலில் எல்லா பாகங்களிலும் இந்த இரண்டு வகை ரத்தங்கள் சென்று வந்து தான் கொண்டிருக்கிறது. நம் கை உள்ளங்கை கீழே இருக்கும் நரம்பின் இடையில் ரத்த ஓட்டத்தை தொட்டுப் பார்த்தால் இதன் துடிப்பை நீங்கள் நன்றாக உணரலாம். இதற்கு காரணம் இந்த ரத்த நரம்புகள் உயர் அழுத்தத்தை (High Pressure) சேர்ந்ததுதான். உங்கள் காய்ச்சலுக்கு டாக்டர்கள் உங்கள் கையைப் பிடித்து பல்ஸ் பார்ப்பதை அறிந்திருப்பீர்கள். அவர் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் இருக்கும் வாட்சைப் பார்ப்பார். இத்தனை வினாடிக்கு இத்தனை துடிப்புகள் என கணக்கு வைத்து உங்களின் உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு என்பது முதற் கொண்டு நன்கு அறிந்து, அதற்கு தகுந்த மருந்துகளை கொடுப்பதும் இந்த நல்ல ரத்தம் ஓட்டத்தை வைத்துதான்.

ஒரு மனிதனுக்கு சராசரி உயர் ரத்த அழுத்தம் 120/80 இருக்க வேண்டும். வயதுக்கேற்ற வகையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 40 வயதிலும் இதே அளவு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த வயத்துக்குப் பிறகு ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

நீங்கள் நடக்கும்பொழுது அதிகமாக மூச்சு வாங்கினாலோ அல்லது உங்கள் கண்கள் தலையை சுற்றுவது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டாலோ நீங்கள் உங்கள் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். (நடந்து கொண்டிருக்கும் போதே திடீர் இதய பாதிப்பால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து ஏற்படும் மரணம் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்க.)

இயன்றை வரையில் நெய் வகை இனிப்புகளை சுவைப்பதைத் தவிருங்கள். ஐ.டி. முதலிய துறைகளைச் சேர்ந்தவர்கள் நொறுக்குத் தீனியாக இனிப்பை மிகுதியாக சாப்பிடுவதால், எல்.சி.டி. கொழுப்பு அதிகரித்து, வயது வித்தியாசமினிறி இதயம் பலகீனமாக்கும் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

"நானெல்லாம் காலையில் எழுந்ததும் வாக்கிங் பொயிடுவேன். அப்பறம் தான் உடற்பயிற்சி," என்று அதிகாரமாக சொல்பவராக நீங்கள் இருந்தால்.... அது நோ யூஸ்! காலையில் எழுந்ததும் சிறிது வார்ம் அப் செய்ய வேண்டும். முதலில் தலையில் ஆரம்பித்து, அடுத்து தோள்கள், முக்கியமாக இடுப்பை முன்பும் பின்புமாக நன்றாக வளைத்து, இறுதியாக நமது பாதங்களுக்கு சிறு பயிற்சி கொடுத்த பிறகுதான் ஜாகிங் அல்லது வாக்கிங் செய்யவேண்டும். இப்படி செய்தால்தான் நீங்கள் நினைத்த மாதிரி உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடியும். இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

அதிகாலையில் எழுந்ததும் சுடச்சுட பால் ஆடையுடன் பாலோ அல்லது டி, காபி குடிக்கும் நபராக இருந்தால், தயவு செய்து அதை மறந்துவிடுங்கள். எருமைப் பாலை விட பசும்பால் குடிக்கலாம் அல்லது புரதச்சத்து குறைந்த பாலை தேர்ந்தெடுத்துப் பருகலாம். எதை குடித்தாலும் பாலாடையை எடுத்துவிட்டு, சற்று தண்ணீர் நிலையில் இருக்கும் பாலை குடிப்பதுதான் நல்லது. இதில் 18 வயது வரை இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் உட்கார்ந்த நிலையில் சில பயிற்சிகளை செய்யலாம். 3 மாதம் பிறகுதான் மற்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். உடலை வளைப்பது, குனிவது போன்ற பயிற்சிகளை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்.

ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டவருக்கு சலிப்பிடித்து இருமல் ஏற்பட்டால், இதயத்தில் சிறு கணம் கொண்ட தலையனையை இதமாக அனைத்துக் கொண்டுதான் இரும வேண்டும். அதேநேரத்தில், அதிகப்படியாக 1 கிலோ அல்லது 1 லிட்டர் கணத்தைத்தான் தூக்க வேண்டும். கண்டிப்பாக பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் சர்ஜரி முடிந்து, 3 மாதங்களுக்கு மட்டும்தான். 6 மாதம் வரை சரியாக கடைபிடித்துவிட்டால் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

அசைவ பிரியர்களுக்கு மீன் மட்டும் தான் இதயத்துக்கு பலம் கூட்டும் சக்தியாக இருக்கிறது. அதற்காக, எண்ணெய்யில் பொறித்த மீன்களை அள்ளி சாப்பிடுவதும் தவறு. குழம்பு மீன்களை பிளேட் பிளேட்டாக உள்ளே தள்ளுவதும் தப்பு. வாரம் இரண்டு முறை ஒரு மனிதன் 100 கிராம் அளவில் தான் மீன் உண்ண வேண்டும்.

வீட்டில் ஒரே எண்ணெய்யை சமைப்பதும் முற்றிலும் தவறு என்று கூறும் மருத்துவர்கள் நல்லெண்ணை, கடலெண்ணை, மற்றும் தேங்கா எண்ணையை சரி அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையை பாட்டிலுடன் சாய்த்து உபயோகப்படுத்துவதற்கு பதில் டீஸ்பூன்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்தது.

கொள்ளூ ரசம் மற்றும் அன்னாச்சிபழம் நம் இதயத்துக்கு உற்ற நண்பர்கள். இவற்றை வாரம் 2 தடவை சுழற்சி முறையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதே போல் வெந்தயம், ஆரேஞ்சு பழங்கள் மற்றும் எலுமிச்சை பழங்களும் எடுத்துக் கொள்ளலாம்.

"ஹலோ சார் நான் இதை எல்லாம் கரெக்டா செய்கிறேன், இதனுடன் டிரெட்மில்லில் தினமும் ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் சூப்பரா வேர்க்க வேர்க்க ஓட்டம் எடுப்பேன்," என்று மார்தட்டி சொல்கிறீர்களா?
சோ சாரி சார்... ஒரு மணி நேரத்துக்கு 6.5 கிலோமீட்டர் தான் உங்கள் நடை பயணம் இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் 35 வயதுக்குள் இருந்தால் தான் வெயிட்களை தூக்கி பழகலாம். 35 கடந்தவர்கள் வெறும் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது.

அதிகபடியான மகிழ்ச்சி மற்றும் துக்கங்களில் நம்மை நாமே ஆழ்த்திக் கொள்வது மிக மிக தவறு. எப்போதும் சாதாரண மனநிலையிலேயே இருக்க வேண்டும். எதிலும் 'டேக் இட் ஈஸி' பாலிஸிதான் பெஸ்ட்!

"ஹய்யோ எனக்கு பைபாஸ் சர்ஜரியா?!" என்று எல்லோரையும் திகிலில் ஆழ்த்தாதீர்கள். தற்பொழுது பச்சிளம் குழந்தைக்குக் கூட இதை சர்வசாதாரணமாக நடைபெற்று வெற்றி வாகை சூடிய மருத்துவர்கள் முக்கிய நகரங்களில் இருக்கிறார்கள்.

35 வயதுக்குள் இருக்கும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால், அவரது தொடையோ அல்லது கால் முட்டியின் கீழோ இருக்கும் நரம்புகள் எடுத்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சரி செய்திருப்பார்கள். அதனால் காலின் முட்டி முதல் உள்ளங்கால் வரை கட்டுகள் போட்டிருப்பார்கள். அதை அலட்சியமாக விட்டு விடுவதும் நல்லது அல்ல. 3 முதல் 6 மாதம் வரை காலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

நம் முன்னோர்கள் சரியான நடைபயிற்சி, துணி துவைப்பது, வீட்டை மொழுகுவது, மாவாட்டுவது, நேரம் தவறாமல் உண்டது, அந்த உணவுகளை சரியாக மென்று உண்பது ஆகியவற்றால் தான் திடமாக இருந்தார்கள். அதனால், எந்த பிரச்னையை அவர்களால் எளிதில் சமாளிக்க முடிந்தது. அது மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி, சங்கடத்தை கொண்டதாக இருந்தாலும் சரி அவர்களை அதிகமாக பாதித்தது இல்லை.
ஆனால் இன்றோ... இதை நாம் எதை முழுமையாக செய்கிறோம்? அதிவேக உலகமாகிவிட்டது. எதிலும் வேகம், அவசரம். நில்லுங்கள் சற்று சிந்தியுங்கள்.

கண்டிப்பாக குடி மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முதலில் முழுவதுமாக கைவிட வேண்டும். இது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். இவ்விரண்டும் தான் இதய பாதிப்புக்கு முக்கியக் காரணிகளில் முன்னிலை வகிப்பவை.

அதேபோல், மூன்று விஷயத்தை தவிர்த்துவிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. அவை... கறி (Meat), ஹர்ரி Hurry & ஸ்கேரி (Scary).


***
thanks வை.பாலாஜி
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "