...

"வாழ்க வளமுடன்"

13 செப்டம்பர், 2015

இரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரை..!


இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு உண்டு. அதிலுள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா...

* வெந்தயக் கீரைகள் ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'.

* வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதீத அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

* 'வைட்டமின்-கே' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன.

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்.

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது.

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன.

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன.

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.

***
bookss
***



"வாழ்க வளமுடன்"

30 வகை அடுப்பில்லாத சமையல்..!


''வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் போன்ற சமையல் முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது... சமையலில் உபயோகிக்கப்படும் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள சத்துக்களில் பெரும்பாலானவை அழிந்துவிடுகின்றன'' என்று உணவியலாளர்கள் நெடுங்காலமாக எச்சரிக்கை மணி ஒலித்து வருகிறார்கள்.

அதேசமயம், ''சமைக்காமலே சாப்பிடுவது என்பதெல்லாம் சரிப்பட்டு வருமா?'' என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இந்தக் கேள்விக்கு ''சரிப்பட்டு வரும்'' என்று பதில் அளிக்கும் சமையல் கலை நிபுணர் , அடுப்பை பற்ற வைக்காமலே செய்யக்கூடிய 30 வகை உணவுகளுக்கான ரெசிபிகளை இங்கே வழங்குகிறார்.

''இந்த உணவுகளை அடிக்கடி செய்து கொடுத்தால்... உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்'' என்று அக்கறையுடன் கூறுகிறார்...


வேர்க்கடலை - பேபிகார்ன் புரட்டல்

தேவையானவை:

பேபிகார்ன் - அரை கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை வேர்க்கடலை - கால் கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், பூண்டு - 3 பல் உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

காய்ந்த மிளகாய், பூண்டு, தனியா மூன்றையும் நீர் சேர்க்காமல் அரைக்கவும். வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து, தோல் உரித்து, நறுக்கிய பேபிகார்ன், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றுடன் சேர்த்துக் கலக்கவும். அரைத்து வைத்த பொடியை மேலே தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.

திடீர் பஞ்சாமிர்தம்

தேவையானவை:

வாழைப்பழம் - ஒன்று (வட்டமாக நறுக்கவும்), பேரீச்சம்பழம் - 10 (கொட்டை நீக்கவும்), நறுக்கிய ஆப்பிள் - கால் கப், கமலா ஆரஞ்சு சுளை - 4 (தோல், கொட்டை நீக்கவும்), மாதுளை முத்துகள் - சிறிதளவு, டயமண்ட் கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - கால் கப், தேன் - சிறிய பாட்டில் ஒன்று.

செய்முறை:

அனைத்து பழங்களையும் பெரிய பேஸினில் போட்டுக் கலக்கி, கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தேன் ஊற்றிப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும்.

மசாலா மோர்

தேவையானவை:

கெட்டித் தயிர் - ஒரு கப், மிகப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு, தண்ணீர் - 5 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கெட்டித் தயிரை நன்றாகக் கடைந்து உப்பு, தண்ணீர் சேர்த்து மோராக்கவும். இதில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, மோரில் சேர்த்து நன்றாக ஆற்றி வைக்கவும்.

நெல்லிக்காய் அரிஷ்டம்

தேவையானவை:

நெல்லிக்காய் - அரை கிலோ, பனைவெல்லம் - அரை கிலோ, மண்பானை - ஒன்று (சுத்தமானது).

செய்முறை:

பனைவெல்லத்தைப் பொடி செய்யவும். ஈரம் இல்லாத மண்பானையில் ஒரு கை வெல்லம், ஒரு கை நெல்லிக்காய் என மாற்றி மாற்றிப் போட்டு, கடைசியாக மேல் பூச்சாக வெல்லம் போட்டு, சுத்தமான வெள்ளைத் துணியால் பானையை மூடி, வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும். 40-45 நாட்களுக்குப் பிறகு துணியில் கொட்டி நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி உபயோகப்படுத்தலாம். கண்ணாடி பாட்டில் அல்லது காற்றுப்புகாத டப்பாவில் வைத்து தினமும் சாப்பிடலாம்.


வாழைத்தண்டு சாறு

தேவையானவை:

சிறிய வாழைத்தண்டு - ஒன்று, பூண்டு - 2 பல், ஓமவல்லி இலை, வெற்றிலை - தலா ஒன்று, துளசி - சிறிதளவு, மிளகு - 3.

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கி... பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும்.

வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்... சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.


பருப்பு - காய்கறி கோசுமல்லி

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், வெள்ளரி துருவல், கேரட் துருவல், தேங்காய் துருவல், கோஸ் துருவல், பீட்ரூட் துருவல் - தலா கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்து பாசிப்பருப்புடன் அனைத்துத் துருவல்களையும் சேர்த்து... உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


பிஸ்கட் பேடா

தேவையானவை:

மேரி பிஸ்கட் - 6, ரஸ்க் - 2, பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு, பனங்கற்கண்டு (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், செர்ரி பழம் - சிறிதளவு.

செய்முறை:

மேரி பிஸ்கட்டையும், ரஸ்க்கையும் உடைத்து, மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைக்கவும். இதனுடன் பால் பவுடர், பனங்கற்கண்டு சேர்த்து தேன் விட்டு பிசைந்து உருண்டையாக பிடித்து, தட்டையாக்கினால்... பிஸ்கட் பேடா தயார். நறுக்கிய செர்ரி பழத்தை, இதன் மேல் வைத்து அலங்கரிக்கவும்.


அன்னாசி அச்சு இனிப்பு

தேவையானவை:

அன்னாசிபழச் சாறு - 50 மில்லி, பால் பவுடர் - 5 டேபிள்ஸ்பூன், பைனாப்பிள் ஆயில் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், ஐசிங் சுகர் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பால் பவுடர், ஐசிங் சுகரை சலித்துக் கொண்டு... அவற்றுடன் பைனாப்பிள் ஆயில், அன்னாசி பழச்சாறு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். சாக்லேட் அச்சு அல்லது பிஸ்கட் கட்டர் உதவியுடன் விருப்பமான வடிவம் கொடுத்து, ஃப்ரிட்ஜில் முக்கால் மணி நேரம் வைத்து எடுத்தால்... அசத்தலான சுவையில் அன்னாசி அச்சு இனிப்பு ரெடி.


தேங்காய் - மாங்காய் - சோள சுண்டல்

தேவையானவை:

முற்றிய தேங்காய் - முக்கால் மூடி, அதிக புளிப்பிலாத மாங்காய் (சிறியது) - ஒன்று, அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - முக்கால் கப், வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப், எலுமிச்சை பழம் - அரை மூடி, நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

தேங்காய், வெள்ளரி, மாங்காய் மூன்றையும் சிறுசிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கலந்து... உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும்.

மாலை நேர டிபனுக்கு சரியான சாய்ஸ் இந்த சுண்டல்.


இனிப்பு அவல் பொங்கல்

தேவையானவை:

தட்டை அவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத் துருவல் - கால் கப், பொடியாக நறுக்கிய பேரீச்சை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த திராட்சை - 10, செர்ரி பழம் - 5 (ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்).

செய்முறை:

அவலை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து, நீர் தெளித்து 5 - 10 நிமிடம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் துருவல், பொடியாக நறுக்கிய பேரீச்சை, செர்ரி பழம், காய்ந்த திராட்சை சேர்த்து... பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கினால், இனிப்பு அவல் பொங்கல் ரெடி.

இது ரத்த சோகையில் இருந்து நிவாரணம் அளிக்கும். குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும். காலை, இரவு நேர டிபனாக சாப்பிடலாம்.


மஞ்சள்பூசணி - தேங்காய்ப் பால் பாயசம்

தேவையானவை:

துருவிய மஞ்சள்பூசணி - அரை கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், பச்சைக் கற்பூரம் - மிளகளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தேங்காய்ப் பாலில், பால் பவுடர் சேர்த்துக் கலக்கி, துருவிய மஞ்சள்பூசணி சேர்க்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் தூவி, பொடித்த பச்சைக் கற்பூரம், துருவிய வெல்லம் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய முந்திரியைத் தூவலாம்.



பொட்டுக்கடலை மாவு உருண்டை

தேவையானவை:

பொட்டுக் கடலை மாவு - ஒரு கப், ஏலக் காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பனங் கற்கண்டு - கால் கப், முந்திரி துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேங் காய்ப் பால் - தேவையான அளவு.

செய்முறை:

பொட்டுக்கடலை மாவுடன் ஏலக்காய்த்தூள், பனங் கற்கண்டு, முந்திரி துருவல் சேர்த்து... தேங்காய்ப் பால் விட்டுப் பிசைந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

இந்த மாவு உருண்டை, குழந்தை களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கொண்டது.


பழம் - பனீர் யோகர்ட்

தேவையானவை:

தோல் சீவி நறுக்கிய அன்னாசிப்பழம் - 3 டேபிள்ஸ்பூன், கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் (ஸ்கிம்ட் யோகர்ட் - ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - ஒரு கப், துருவிய பனீர் - சிறிதளவு, மாதுளை முத்துகள் - 3 டேபிள்ஸ்பூன், அன்னாசி எசன்ஸ் - ஒரு துளி.

செய்முறை:

நறுக்கிய அன்னாசிப்பழம், மாதுளை முத்துகளை தயிருடன் சேர்த்து, பனீர் துருவல் போட்டுக் கலக்கவும். ஒரு துளி அன்னாசி எசன்ஸை கடைசியாகச் சேர்க்கவும்.



கொத்தமல்லி - புதினா மசாலா பொரி

தேவையானவை:

பொரி - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், நறுக்கிய புதினா - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு (நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய சதுரமாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலையைபொரியில் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், மாங்காய் சேர்த்து... உப்பு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் தூவிக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

விருப்பப்பட்டால்... ஓமப்பொடி (கார வகை), தட்டை, பொரித்த கார்ன் ஃப்ளேக்ஸை ரெடிமேடாக வாங்கி கலந்தும் சாப்பிடத் தரலாம்.


முளைகட்டிய பயறு சாலட்

தேவையானவை:

முளைகட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய கறுப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய காராமணி (சேர்த்து) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முளைகட்டிய பயறு வகைகளுடன்... உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைத்தால்... சத்தான சாலட் தயார்.


சுக்கு பானகம்

தேவையானவை:

வெல்லத் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு சிட்டிகை, பச்சைக் கற் பூரம் - கடுகளவு.

செய்முறை:

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டவும். கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளை வெல்லக் கரைசலில் சேர்த்து, பொடித்த பச்சைக் கற்பூரத்தை போட்டு, நன்கு ஆற்றி பருகவும்.

சுவையான, மணமான, இந்த பானகம் உடனடி எனர்ஜி தரும்.


பழப் பச்சடி

தேவையானவை:

ஆப்பிள் - பாதி, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - ஒரு கப், உலர்திராட்சை - ஒரு டீஸ்பூன், பாதாம் - முந்திரி துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பேரீச்சை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கவும். கடைந்த கெட்டித் தயிரில் சர்க்கரை சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த் துக் கலக்கினால்... மிகச் சுவையான பழப் பச்சடி ரெடி.

சர்க்கரைக்குப் பதில் துருவிய வெல்லம் சேர்த்தும் செய்யலாம்



தினை உருண்டை

தேவையானவை:

தினை மாவு - ஒரு கப், வெல்லத் துருவல் - கால் கப், காய்ந்த திராட்சை, பாதாம் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு.

செய்முறை:

தினை மாவுடன் வெல்லம், திராட்சை, பாதாம், தேங்காய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து, தேன் ஊற்றிப் பிசையவும். மாவை சிலிண்டர் வடிவில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

நார்ச்சத்து மிகுந்த உணவு இது.


காய்கறி பர்கர்

தேவையானவை:

பர்கர் பன் - 2 (பேக்கரியில் கேட்டு வாங்கிக் கொள்ள வும்), குடமிளகாய், தக்காளி - தலா ஒன்று, பெரிய வெங்காயம் - 2, கறுப்பு, வெள்ளை எள் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - இஞ்சி - பச்சை மிளகாய் - உப்பு சேர்த்து அரைத்த சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பன்னை இரண்டாக நறுக்கவும். ஒருபுறம் வெண்ணெய், மறுபுறம் அரை டேபிள்ஸ்பூன் கொத்த மல்லி சட்னி தடவவும் (உட்புறத்தில்). அதன் நடுவே பொடியாக நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைக்கவும். பன்னை மூடவும். அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவி, கறுப்பு, வெள்ளை எள் தூவி பரிமாறவும். மற்றொரு பன்னையும் இதேபோல் செய்யவும்.



உலர்பழம் - கோதுமை ரொட்டி அடுக்கு

தேவையானவை:

கோதுமை பிரெட் - 3 ஸ்லைஸ், மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - தேவையான அளவு, நறுக்கிய செர்ரி பழம், காய்ந்த திராட்சை, பதப்படுத்திய அத்திப்பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - தலா ஒரு டீஸ்பூன், உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, அக்ரூட் (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பிரெட் ஸ்லை ஸில்... செர்ரி, அத்திபழம், காய்ந்த திராட்சையை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் உடைத்த பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் மிக்ஸ்டு புரூட் ஜாம் தடவவும். 3 ஸ்லைஸ்களையும் ஒன்றன்கீழ் ஒன் றாக அடுக்கி, நடுவே வெட்டி பரிமாறவும்.


பப்பாளிப்பழக் கூழ்

தேவையானவை:

பப்பாளிப்பழம் - ஒன்று (நன்றாக பழுத்தது), மாதுளை முத்துகள் - கால் கப், உலர் திராட்சை - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

பப்பாளிப்பழத்தை தோல் சீவி நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இந்தக் கூழில் மாதுளை முத்துகள், காய்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

சத்தான இந்தக் கூழ், மலச்சிக்கலை குணப்படுத்தும்.



ஊட்டச்சத்து பழ பானம்

தேவையானவை:

தர்பூசணி - அரை பழம், புதினா - சிறிதளவு, டைமண்ட் கற்கண்டு - ஒரு டீஸ்பூன், நெல்லிக்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தோல் சீவி நறுக்கிய தர்பூசணியுடன் சிறிதளவு புதினா இலை, கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் நெல்லிக்காய் துருவல் கலந்து பருகவும்.

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பானம், ரத்த விருத்திக்கு நல்லது.


சிவப்பு அவல் - காய்கறி பிரியாணி

தேவையானவை:

சிவப்பு அவல் - ஒரு கப், முள்ளங்கி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - கால் கப், மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

தேங்காய்ப் பாலில் சிவப்பு அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, காய்கறிகளை சேர்த்து... உப்பு, மிளகு - சீரகப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


கோதுமைப் பால்

தேவையானவை:

முழு கோதுமை - 100 கிராம், தேங்காய் - அரை மூடி, அச்சு வெல்லம் - 2.

செய்முறை:

முதல்நாள் இரவே கோதுமையை ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் இதை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். தேங் காயை துருவி மிக்ஸியில் அடித்து தேங்காய்ப் பால் எடுத் துக் கொள்ளவும். இரண்டு பாலையும் வடிகட்டி, ஒன்றாக கலந்து கொள்ளவும். அச்சு வெல்லத்தை பொடித்து நீர் விட்டு வடிகட்டி, அதை பாலுடன் சேர்த்து நன்கு ஆற்றி அருந்தவும்.


ஓட்ஸ் அவியல்

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 6 பச்சை திராட்சை - 15, மாதுளை முத்துகள் - கால் கப், தயிர் - ஒரு கப், மிகவும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

ஓட்ஸை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். இதை பாதி தயிரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரியுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இதை ஊற வைத்த ஓட்ஸில் சேர்த்து, மீதி தயிரையும் சேர்த்துக் கலந்து வைக்கவும். நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியை அதனுடன் சேர்க்கவும். கடைசியாக, பச்சை திராட்சை, மாதுளை முத்துகள் சேர்த்து, கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் போட்டு, சாப்பிடக் கொடுக்கவும்



கலர்ஃபுல் அவல் உப்புமா

தேவையானவை:

அவல் - ஒன்றரை கப், கேரட் துருவல், பொடி யாக நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் - தலா அரை கப், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அவலை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து, மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளவும். கேரட் துருவல், பொடியாக நறுக்கிய தக்காளியை ஒன்று சேர்த்து, இதை ஒரு பாகம் அவலுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

தேங்காய் துருவல், பனீர் துருவல், உப்பு, வெள்ளை மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்து, இதனை இரண்டா வது பாக அவலில் கலக்கவும். மூன்றா வது பாக அவலில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உப்பு, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறவும்.

விருப்பமான சுவையுள்ள அவலை தனித்தனியாக சாப்பிடலாம். அல்லது, கப் அல்லது பவுலில் கீழே கொத்த மல்லி அவல், அடுத்து தேங்காய் - பனீர் அவல், அதன்மேல் கேரட், தக்காளி அவலை வைத்து அழுத்தி... கீழே கவிழ்த்தால், கலர்ஃபுல் அவல் உப்புமா ரெடி.


சௌசௌ தயிர் பச்சடி

தேவையானவை:

தோல் சீவி துருவிய சௌசௌ - 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கெட்டித் தயிர் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கெட்டித் தயிரை கடைந்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். சௌசௌ, வெள்ளரி, வெங்காயத்தைப் பிழிந்து இதனுடன் சேர்த்து, உப்புப் போட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி பரிமாறவும்.


காய்கறி ஊறுகாய்

தேவையானவை:

மாங்காய், கேரட்- தலா ஒன்று, சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மாங்காய், கேரட்டை சிறிய சதுரங்களாக நறுக்கவும். இவற்றுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்க்கவும். மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும்.

இந்த ஊறுகாயை சப்பாத்தி, தயிர் சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.



பழ லஸ்ஸி

தேவையானவை:

தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், நன்றாகப் பழுத்த கொய்யாப்பழம் - ஒன்று (சீஸனுக்கு தகுந்த பழங் களைப் பயன்படுத்தலாம்), கறுப்பு திராட்சை - 10.

செய்முறை:

கெட்டித் தயி ருடன் சிறிதளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய கொய்யாவை சேர்த்து மிக்ஸி யில் அடிக்கவும். இதில், விதை நீக்கிய கறுப்பு திராட் சையை இரண்டாக நறுக்கிப் போட்டு பருகவும்.



பச்சை வேர்க்கடலை துவையல்

தேவையானவை:

பச்சை வேர்க்கடலை - அரை கப், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

எல்லா வகை டிபனுக்கும் சிறந்த சைட் டிஷ் இது.


***
a vikatan
***



"வாழ்க வளமுடன்"
      

எடை குறைப்பு சம்பந்தமாக 15 கற்பனைகள். உண்மை .!


அதிக உடற்பயிற்சியும் குறைவாக உணவு உட்கொள்ளும் பழக்கமும் எடை குறைப்பிற்கு வழிவகுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! எனினும் உடல் எடையை குறைக்க விரும்பும் ஒருவர், எளிமையான ஆனால் தவறான பழக்கங்களை மேற்கொள்வதில் பொழுதை கழிப்பாரேயானால், அவர் அதே நிலையிலேயே தொடர நேரிடும்.

கட்டுக்கோப்பான உடல்தகுதியை பெற விரும்பும் ஆர்வலர்களான நாம், எடை குறைப்பின் கற்பனைக்கும், எடை குறைப்பின் உண்மைக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டினை புரிந்து கொள்ள வேண்டும்.உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவும் 14 சிறந்த வழிகள்!

ஸ்கெட்ச் க்ளினிக்ஸின் எடை குறைப்பு மேலாண்மை குறித்த ஆலோசகர் ரிட்டேஷ் ஜேனி, எடை குறைப்பு சம்பந்தமான நடை முறையில் நாம் கொண்டிருக்கும் 15 கற்பனைகளை தகர்த்து கருத்து தெரிவிக்கிறார்.



கற்பனை: 1

உணவினை தவிர்ப்பது, எடை குறைப்பிற்கு சிறப்பான டயட் முறையாகும்

உண்மை

உணவினை தவிர்ப்பது நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் போக்கை மெதுவாக்குகிறது. உணவினை தவிர்க்கும் போது அது வளர்ச்சிதை மாற்றத்தின் தேவையை மெதுவாக்குவதன் மூலம் சேமிக்கப்பட்ட கலோரிகளை பாதுகாத்து உடலிலேயே தக்க வைக்கிறது. ஒரு வேளைக்கான உணவினை தவிர்த்து விட்டு, அடுத்த வேளை உணவினை எடுத்து கொள்ளும் போது, அதிக அளவிலான உணவினை உட்கொள்ள வாய்ப்பு அதிகம். ஒரு நாளில் சீரான இடைவெளியில் மூன்று முறை உணவருந்த வேண்டும். எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் உணவினை சிறு சிறு பகுதிகளாக பிரித்து கொண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக உணவருந்துதல் சிறந்தது.


கற்பனை: 2

உடற்பயிற்சி தேவை இல்லை. உணவு கட்டுப்பாடு மட்டும் போதுமானது.

உண்மை

எடையை குறைக்க விரும்பும் ஒருவர் உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியையும் சேர்ப்பது அவசியமாகிறது. நமது பசியையோ அல்லது நமக்கு விருப்பமான அனைத்து உணவினையும் உண்ணும் ஆவலையோ நம்மால் தடை செய்ய முடியாது. ஆனால் உணவினை உண்பதால் கிடைக்கும் கலோரிகளை உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க நம்மால் முடியும். நமது தினசரி பழக்கங்களில் உடற்பயிற்சியை சேர்த்து கொள்வதன் மூலம், முயற்சி செய்து அடையக்கூடிய எடை குறைப்பினை நம்மால் பெற முடியும். இதய துடிப்பினை அதிகமாக்கும் வேகமான நடைபயிற்சியை தினமும் 30 நிமிடங்கள் மேற்கொள்வதன் மூலம் வியக்கத்தக்க அளவு எடையினை நம்மால் குறைக்க முடியும். உடற்பயிற்சியை முறையாக தொடர்ந்து மேற்கொள்ளும் போது ,நல்வாழ்வுக்கான சிறந்த உணர்வுகளையும் இதயம் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ஆகியவற்றை நாம் கூடுதல் பலன்களாக பெறலாம்.



கற்பனை: 3

கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தீமை செய்வன.

உண்மை

உடல் என்கிற இயந்திரத்திற்கு முதன்மையான எரிபொருள் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். கொழுப்பை போலவே, கார்போஹைட்ரேட்டுகளும் ஒவ்வொரு கிராமிலும் பாதி அளவு கலோரிகளை கொண்டுள்ளன. மக்களின் இன்றைய உணவு பழக்கத்தில் உள்ள சிக்கல் யாதெனில் அவர்கள் தங்கள் உணவினில், எளிமையான கார்போஹைட்ரேட்டுகளான சர்க்கரை மற்றும் உயர்ந்த ஃபுருக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் ஆகியவற்றை எடுத்து கொள்கின்றனர். குறைந்த கார்போஹைட்ரேட்கள் கொண்ட உணவினை எடுத்து கொள்ளும் போது, அவை மிக உயர்ந்த கலோரி கார்போஹைட்ரேட்களை அவை குறைக்கின்றன மற்றும் எடை குறைப்பிற்கும் வழி வகுக்கின்றன.

இந்த மாதிரியான எடை குறைப்பு நீடித்து நிலைப்பதில்லை. எனினும் குறைந்த கொழுப்பு மற்றும் பல பகுதிகளை கொண்ட சிக்கலான கார்போஹைட்ரேட்கள் கொண்ட உணவு பொருட்களான முழு தானியங்கள் மற்றும் ஸ்டார்ச் உணவு பொருட்கள் உடலுக்கு நன்மை செய்வன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



கற்பனை: 4

குறைவான கொழுப்பு மற்றும் கொழுப்புகளற்ற உணவுகளில் குறைவான கலோரிகள் காணப்படுகின்றன.

உண்மை

குறைவான கொழுப்பு அல்லது கொழுப்புகளற்ற உணவுப்பொருள் குறைந்த அளவு கலோரிகளை கொண்டோ அல்லது கலோரிகளே அல்லாத உணவு பொருளாகவோ தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குறைவான கொழுப்பினை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிற பல உணவு பொருட்களிலுள்ள, கார்போஹைட்ரேட்கள் மற்றும் சர்க்கரை ஆகியன, கொழுப்புகள் நிறைந்த உணவு பொருட்களிலுள்ள, கலோரிகளையோ அல்லது அதற்கும் அதிகமான கலோரிகளையோ தரலாம். உதாரணமாக ஆப்பிளில் குறைவான கொழுப்பே உள்ளது. எனினும் அது குறைந்த அளவு கலோரிகளை கொண்டிருக்கும் என்று அர்த்தமில்லை. எனவே சாப்பிடும் முன் உணவிலுள்ள கலோரிகளை சோதித்து அறிந்து பின் சாப்பிட வேண்டும்.



கற்பனை: 5

உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரே நேரத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் பயிற்சி செய்தல் அவசியம்.

உண்மை

வெறும் 30 நிமிட நடைபயிற்சியே கலோரிகளை எரிக்க போதுமானது. தினமும் 30 நிமிடங்கள் பொழுதுபோக்குடன் கூடிய உலாவினை தினமும் 5 முறை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். உடற்பயிற்சி வேடிக்கையுடன் கூடிய வகையில் அமைந்தால், அதில் ஆனந்தமாக ஈடுபடலாம். நாளடைவில் நேரத்தை அதிகப்படுத்தி, விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.



கற்பனை: 6

இரவில் தாமதமாக உணவருந்துதலோ அல்லது படுக்கைக்கு செல்லும் சற்று முன் உணவருந்துதலோ, எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.

உண்மை

கலோரிகள் என்பவை எப்பொழுதும் கலோரிகளே! உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் அதிகமான உணவினை மேற்கொள்ளும் போது எடை அதிகரிப்பு உண்டாகிறது. தாமதமாக உணவினை உட்கொண்ட பின் படுக்கைக்கு செல்வது என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல! நாம் அதிகமாக உணவினை உண்ணும் போது நாம் உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை கொழுப்புகளாக சேமித்து வைக்கும் அற்புத ஆற்றல் படைத்தது. உடலுக்கு தேவைப்படும் கலோரிகளை விட அதிகமான கலோரிகளை உணவாக எடுத்து கொள்ள நேரிடுகிறது என்பதால் தான் பெரும்பாலான மக்கள் இரவில் தாமதமாக உணவருந்தக் கூடாது என்கின்றனர்.




கற்பனை: 7

குறைவான வளர்ச்சிதை மாற்றத்தால் உடல் எடை அதிகரிக்கிறது.

உண்மை

எடை அதிகரிப்பதால் உடலில் கொழுப்பு மட்டுமே அதிகரிப்பதில்லை அந்த கொழுப்பிற்கு உறுதுணையாக தசையும் உடலில் அதிகமாகிறது. உடல் எடையில் தோராயமாக 20% முதல் 30 % வரை வரை தசை ஆகும். தசை திசுக்கள் கலோரிகளை எரிக்கின்றன. எனவே அதிக எடையை கொண்டவரின் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே அதிக உடல் தசையை கொண்டவர் சிறப்பான வளர்ச்சிதை மாற்றத்தை கொண்டவர் ஆவார். உடலின் இயக்க செயல்பாடுகளால் எரிக்கப்படும் கலோரிகளை இது உள்ளடக்கியது அல்ல.




கற்பனை: 8

ஃபேட் டயட் நிரந்தர எடை இயல்பிற்கு சிறப்பான துணை புரிகிறது.

உண்மை

ஃபேட் டயட்கள் (சௌத் பீச் டயட், ப்ளட் க்ரூப் டயட், அட்கின்ஸ் டயட், கிளிசெமிக் டயட் போன்றவை). எடையை குறைக்கவும் மேலும் அதிகரிக்காமல் தடுக்கவும் சிறந்தது அல்ல. இந்த டயட்களினால் நாம் உடல் எடையை சிறிது இழக்கலாம். எனினும் இந்த வகையான டயட் அட்டவணைகள் கொண்டிருக்கும் குறைவான கலோரிகள் கொண்ட உணவினை தொடர்ந்து பின்பற்றுவது கடினமானதாகும். ஆரம்பத்தில் ஆர்வத்துடன் பின்பற்றும் மக்கள் நாளடைவில் களைப்படைந்து, மீண்டும் தங்கள் பழைய உடல் எடையை பெறுகின்றனர். நாள் ஒன்றுக்கு 800 கலோரிகளுக்கு குறைவான கலோரிகளை கொண்ட உணவினை உட்கொள்ளும் போது, அது இதய துடிப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம். இது அபாயகரமானதாகும். ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை மிதமான பகுதி உணவாக உண்டு, உடல் இயக்க செயல்பாடுகளை தினசரி வாழ்க்கை முறைக்கு பழக்கப்படுத்துவதன் மூலம் உடல் எடையை வாரத்திற்கு ½-2 கிலோ வரை குறைக்க முயற்சி செய்வதே உடல் எடையை குறைத்து, மேலும் அதை அதிகரிக்காமல் தொடரும் சிறந்த வழி என்று ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் போது, டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது.




கற்பனை: 9

அதிக புரதம் கொண்ட உணவு வகைகளை உண்பது, உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும்.

உண்மை

தினமும், அதிக புரதங்கள் கொண்ட இறைச்சி, முட்டை, சீஸ் போன்ற உணவு வகைகளிலிருந்து தேவையான கலோரிகளை பெறுவது என்பது சமச்சீரான உணவு திட்டம் அல்ல. அதிகமான கொழுப்பு நிறைந்த உணவினை உட்கொள்ளும் போது, இதய நோய் ஏற்படலாம். மலச்சிக்கலை ஏற்படுத்தும் குறைந்த அளவு நார்ச்சத்தினை கொண்ட சில காய்கறிகளையும், பழங்களையும் நாம் அதிகமாக உண்ணலாம். இதனால் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் குறைபாடு ஏற்படலாம். இதே போல உயர்ந்த அளவு புரதம் கொண்ட டயட் அட்டவணையை நாம் பின்பற்றும் போது, களைப்பு, பலவீனம், குமட்டல் ஆகிய குறைபாடுகள் தோன்றலாம்.




கற்பனை: 10

எடை அதிகரிப்பு மரபு சம்பந்தப்பட்டது, பெற்றோர் வழியாக அது குழந்தைகளை அடைகிறது.

உண்மை

கொழுப்பு ஜீன் என்று எந்த ஒரு ஜீனும் கிடையாது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களை மேற்கொள்ளும் பருமனான பெற்றோரிடமிருந்து. அவர்களின் குழந்தைகளும் அவற்றை கற்கின்றனர். இதனால் ஆரோக்கியமற்ற கேடு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள் குடும்பம் என்கின்ற மரத்தில் கடத்தப்படுகின்றன.




கற்பனை: 11

உடல் எடையயை குறைக்க விரும்புபவர் ஏரோபிக் என்று அழைக்கப்படும் கார்டியோ உடற்பயிற்சியை அதிக அளவு மேற்கொண்டாக வேண்டும்.

உண்மை

எடையை இழக்க முயற்சி செய்யும் போது நாம் உடலுக்கு ஏதேனும் அதிர்ச்சியை தர வேண்டும். அதாவது ஏதேனும் உடற்பயிற்சியை நம் உடல் மேற்கொள்ள வேண்டும். எந்த உடற்பயிற்சியும் செய்திருக்காத நிலையில் தினமும் ஓடுவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் பயிற்சி நிச்சயம் நம் உடலை அதிர்ச்சிக்கு ஆட்படுத்தும். இதன் காரணமாக ஆரம்பத்தில் நாம் எடையையும் இழக்கலாம். எனினும் இழந்த எடையை எத்தனை நாளைக்கு தக்க வைக்க முடியும் என்பது கேள்வி குறியாகிறது. நாளடைவில் நாம் எடை குறைப்பின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதன் பின்னர் தொடர்ச்சியான ஒரே மாதிரியான உடற்பயிற்சியின் காரணமாக மீண்டும் நமது பழைய எடையயை நாம் அடைய தொடங்குவோம். இவ்வாறு செய்வதற்கு பதிலாக யோகா, எடை தூக்கும் பயிற்சி மற்றும் கார்டியோ ஆகிய பல வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நமது எடை அதிகரிப்பதை கொண்டு, உடற்பயிற்சி செய்யும் முறையை சரி செய்யலாம். அதாவது நீடித்த எடை மேலாண்மையின் பொருட்டு செய்யும் உடற்பயிற்சியில் தேவைப்படும் மாறுதல்களை செய்வது அவசியமாகிறது.




கற்பனை: 12

வறுக்கப்படாத ஆனால் வேக வைத்த சிற்றுண்டிகளை எவ்வளவு வேண்டுமானாலும் விருப்பம் போல உண்ணலாம்.

உண்மை

பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியமானவை என்று சொல்லப்பட்டு, சந்தையில் அவை அளவிற்கு அதிகமாகவே கிடைக்கின்றன. மக்களும் தங்கள் அறியாமையில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இன்றி, வறுக்கப்பட்ட உணவு வகைகளை தாங்கள் உண்ணவில்லை என்ற மகிழ்ச்சியில் இந்த வகையான பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுகின்றனர். மேலோட்டமாக பார்க்கும் போது இந்த முறை சரியானதே!

ஆனால் அது எந்த மாதிரியான பேகிங் செய்யப்பட்ட உணவு வகையை நாம் உண்கிறோம் என்பதை பொறுத்தது. உதாரணமாக எண்ணெயில் பொறித்த சிக்கனுக்கு பதில் பேக்கிங் செய்யப்பட்ட சிக்கனை நாம் உண்ணலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகப்படியான எண்ணெயை நம்மால் தவிர்க்க முடிகிறது.

இது ஆரோக்கியமான உணவு தேர்வாகும். ஆனால் மாறாக நாம் பேக்கிங் செய்யப்பட்ட சக்ரீஸ் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட பக்கர்வாடிஸ் ஆகியவற்றை உண்ணும் போது அவை கொண்டிருக்கும் உயர்ந்த அளவிலான சோடியம் மற்றும் மைதா ஆகியவற்றின் காரணமாகவும், மிக அதிகமாக பதப்படுத்தப்படுவதன் காரணமாகவும் அவை ஆரோக்கியமான உணவுகள் என்று சொல்வதற்கில்லை. நாம் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கையில் இது போன்ற உணவு வகைகளை எடுத்து கொள்வோமேயானால், இவை நமது உடல் எடையை அதிகப்படுத்தவே செய்யும்.




கற்பனை: 13

எடையை இழக்க விரும்பும் போது, கூடுதல் ஊட்டச்சத்து துணைப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

உண்மை

எடையை குறைக்க ஊட்டச்சத்து துணை பொருட்களை எடுத்து கொள்வது பரிந்துரைக்கப்படுவதில்லை. முதலாவதாக எடை இழப்பு துணை பொருட்கள். நமது குடலின் இயக்க அதிர்வுகளை அதிகப்படுத்துகின்றன. இதனால் நம் உடலின் இயல்பான குடல் இயக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் மூலம் நம் உடலில் வறட்சி மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாடுகள் தோன்றுகின்றன. இரண்டாவதாக இன்னும் பிற ஊட்டச்சத்து துணை பொருட்கள் மலத்தை வெளியேற்றுவதன் மூலம், நாம் உண்ணும் டயட் உணவிலுள்ள அனைத்து கொழுப்புகளையும் அழிக்கின்றன. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து கொழுப்பு அமிலங்களையும் நாம் இழக்க நேரிடுவதால், இது பரிந்துரைக்கபடுவதில்லை.



கற்பனை: 14

வாழைப்பழங்கள் எடை குறைப்பில் பங்கு கொள்ள முடியாது.

உண்மை

ஆரோக்கியமான உணவு அட்டவணையில் வாழைப்பழங்களும் இடம் பெறுகின்றன. மேலும் இது எடை குறைப்பில் நாம் ஈடுபட்டிருக்கும் போது கொழுப்பினை குறைக்கவும் செய்கின்றன. எனினும் எந்த ஒரு உணவு பொருளும் தானாகவே ஒருவருக்கு எடையை இழக்க துணை புரிவது இல்லை. எடையை இழக்கக் விரும்பும் ஒருவர் பற்றாக்குறையான கலோரியை கொண்டவராக இருக்க வேண்டும் அதாவது ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளை விட அதிகமாக பெறப்பட்ட கலோரிகளை எரிக்க வேண்டும். 10% முதல் 15% வரையிலான கலோரி பற்றாக்குறை சிறந்த முறையில் எடை குறைப்பில் செயலாற்றுகிறது. சிறந்த கலோரி பற்றாக்குறையை கொண்டவர், கொழுப்பை இழப்பதை விட தேவைக்கு அதிகமாக உள்ள தசையை இழக்கிறார்.



கற்பனை: 15

போதை உணவு நீக்கப்பட்ட உணவு திட்டமே எடை குறைபிற்கு சிறந்தது.

உண்மை

தொடர்ச்சியாக பல வாரங்கள் இரவில் பணி புரிந்து ஜங்க் ஃபுட், கூடுதலான செயற்கை உணவுகள் என்று சொல்லப்படுகிற உணவு வகைகளை உட்கொள்ளும் போது ஏற்படுகிற களைப்பினால் மனதளவில் நீங்கள் எடையை இழந்து விட்டது போல உணர்வீர்கள். திட்டமிடப்பட்ட சமசீரான போதை நீக்க உணவு திட்டம் உங்களில் தந்திரம் புரிந்திருக்கிறது. இங்கே சமசீரான போதை நீக்க உணவு திட்டம் என்பது வெறும் பழரசமோ அல்லது சிறந்த தூய்மை மற்றும் நீர் போன்ற நம்மை பலவீனமாக்கும் போதை நீக்கும் உணவுகளல்ல. சமசீரான உணவு திட்டம் என்பது பதப்படுத்தப்பட்ட ட்ரான்ஸ்பரண்ட் கொழுப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அடங்கிய உணவு வகைகளை தவிர்ப்பதாகும்

***
net
***



"வாழ்க வளமுடன்"

கொலஸ்ட்ராலை கரைக்கும் 20 உணவுகள்



உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.

ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

பார்லி :

தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.

கத்திரிக்காய் :

கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ் :

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஓட்ஸ் :

ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை :

பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

சோயா பொருட்கள் :

சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பூண்டு :

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

வெண்டைக்காய் :

கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ரெட் ஒயின் :

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

பீன்ஸ் :

அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

மார்கரைன் :

இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

அவகேடோ :

இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

***
a vazvu
***


"வாழ்க வளமுடன்"
      

சீரகத்தை வாயில் போட்டு



Baskar Jayaraman's photo.


சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
...
மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது
***
fb
***

"வாழ்க வளமுடன்"

      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "