...

"வாழ்க வளமுடன்"

17 மே, 2011

கிழமையில் என்ன இருக்கிறது?




1.இங்கிலாந்து அரசாண்ட எட்டாவது ஹென்றி இறந்தது வியாழக்கிழமை

2.அவருடைய மகன் ஆறாவது எட்வர்டு இறந்தது வியாழக்கிழமை

3.இவருடைய மகள் இளவரசி மேரி இறந்தது வியாழக்கிழமை

4.இவருடைய இன்னொரு மகள் கன்னி இளவரசியென அழைக்கப்பட்ட எலிஸபெத இறந்தது வியாழக்கிழமை

இது இப்படியிருக்க... கிழே படியுங்கள்

ஜாக செமென் என்பவருக்கு ஏழு குழந்தைகள்.அவர்கள் பிறந்த நாள்களை பாருங்கள்.

1.வில்லியம் - ஞாயிறு
2.பியர் -திங்கட்கிழமை
3.பெர்நாண்ட் -செவ்வாய்
4.அமண்ட் -புதன்
5.ராபர்ட் -வியாழன்
6.ஜோசப் -வெள்ளி
7.ஸ்தனிஸ்லாஸ்-சனி

*




***
thanks sleepingtiger
***



"வாழ்க வளமுடன்"

இரத்த நாளங்களைப் பாதிக்கும் உப்பு !


ஒரு வேளை உப்புச் சாப்பாடு இரத்த நாளத்தைக் கணிசமாகப் பலவீனப்படுத்தி உடல் முழுவதும் இரத்தம் பாய்ச்சப்படும் வேகத்தையும் குறைத்துவிடுகின்றது.

உப்புச் சாப்பாட்டை உட்கொண்ட 30 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலத்திற்கு குறுதிச்சுற்று தற்காலிகமாக பெருமளவில் தடைப்படுகிறது என்று ஆய்வோன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உப்பு உடன்பில் எந்தளவு விரைவாகப் பதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி ஆராய்ச்சி நடத்ட 16 ஆரோக்கியமான வளர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகளவு உப்புக் கலந்த உணவு கொடுக்கப்பட்டது. இது 4 கிராம் உப்புக் கலந்ததாக இருந்தது. பின்னர் மிகக் குறைவாக 0.3 கிராம் உப்புக் கலந்த உணவும் கொடுக்கப்பட்டது. இந்த ஒவ்வொரு உணவின் பின்னரும் உடம்பில் இரத்த ஓட்டம் எந்தளவு சுமுகமாக உள்ளது என்று பரிசீலிக்கப்பட்டது.

இரத்த ஓட்டத்தைப் பரிசோதிக்க வழ்மையாகத் தெரிவு செய்யப்படும் கையின் மேல் பகுதி நாளத்தில்தான் இந்தச்சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த இரத்த நாளம் இருதயத்திற்கு நேரடியாக பாய்ச்சிவிட்டாலுங்கூட இருதயம் சம்பந்தமான இரத்த ஒட்டக் குறியீட்டுக்கு இதுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

போசாக்கு சிகிச்சை சம்பந்தமான அமெரிக்க சஞ்சிகையொன்று வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம், அதிக உப்புக் கலந்த உணவை உட்கொண்ட 30 நிமிடங்களில் இரத்த நாளங்கள் கணிசமான அளவு நலிவடைகின்றன.

ஒரு மணித்தியாலம் ஆனதும் இது மிக மோசமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றது. பொதுவாக உண்ணும் உணவில் கலக்கப்படும் உப்பின் அளவும் ஆரோக்கியமானவர்கள் மத்தியில் குறுதிச் சுற்றோட்டத்தைப் பாதிக்கக் கூடியது என்று ஆய்வாளர்கள் முடிவுசெய்துள்ளனர். இந்தப் பொறிமுறை தொடர்பில் இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படவேண்டிய தேவை உள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவில் அதிக உப்புக் கலப்பது இரத்த நாளங்களை விறைப்பாக்குகின்றது. இது இருதயத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள், ஓஸ்டியோபோராசிஸ் (எலும்பு மூட்டுக்களைப் பாதிக்கும் நோய்) மற்றும் வயிற்றுப் புற்று நோய் என்பனவற்றுக்கும் இது காராணமாயிருக்கின்றது.


***
thanks FoodIndia
***



"வாழ்க வளமுடன்"

திருமணத்தில் "தாலி" - "வாத்திய இசை" பற்றி !!!!!



இன்று நெருங்கிய உறவினர் திருமணத்தில் மாப்பிளை கூடவே இருக்க வேண்டிய சூழ்நிலை.அங்கே வாசிக்கப்பட்ட வாத்திய இசையை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம். அதனால்,அந்த வித்திவான்களிடம் பேச்சு கொடுத்தேன்.

"ஏங்க.. ஒவ்வொரு தடவையும், ராகத்தை மாத்துவீங்களா?" எனது கேள்வி.அந்த ரோஷக்கார வித்வான் கூறியதை பேப்பரில் எழுதி, அப்படியே பதிவு செய்கிறேன்.

மாப்பிள்ளை அழைப்பிற்கு முன்னால் - கல்யாணி,
சங்கராப்ரணம்
மாப்பிள்ளை அழைப்பின் போது - கரகரப்பிரியா.
தோடி,காம்போதி
திருமண நாள் காலை - பிலகரி,கேதாரம்,பூபாளம்
நிச்சயதார்த்தம் - கானடா,அடனா,பேகடா
முகூர்த்தம் முன்பு - தன்யாசி,நாராயணி
முகூர்த்தத்தின் போது - நாட்டைக் குறிச்சி
மாங்கல்ய தாரணத்தின் போது - ஆனந்த பைரவி

என்று மட... மட..என ஒப்புவித்தார்.இனி இங்கு நமக்கு வேலையில்லை என மனதில் நினைத்து க்கொண்டு நானும் பேசாமல் மட... மட... என நட... நட..நடந்து இடத்தை காலி செய்தேன்.அங்கிருந்து தப்பித்து அமைதியாக மூகூர்த்தக்காக காத்திருந்தேன். அப்போது, "தாலி" க்கயிறு வாழ்த்து பெற சுற்றுக்கு வந்தது. அப்போதும், எனது கேள்வி ஞானம்(?) சும்மா இருக்க வில்லை,தட்டை ஏந்தி வந்த பெரியவரிடம் ஏன் "தாலி" என்று சொல்கிறோம் என கேட்டு தொலைக்க, அவரும் முறைத்தப்படி சென்றார்.


இன்றைக்கு நமக்கு நேரம் சரியில்லை,இந்த விஷயத்தை பதிவா போட்டு பதில் கேட்கலாம் என்ற நினைத்தவாறு நமது முக்கிய கடமையை நிறைவேற்றும் பொருட்டு சாப்பாட்டு பந்திக்கு சென்றேன்.


அங்கே.அதே பெரியவர் என்னை அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார். "தம்பி,நீங்க அப்போது ஒரு கேள்வி கேட்ட மாதிரி தெரிஞ்சுது '. இலையில் தண்ணீர் தெளிக்க ஆரம்பிக்கப்பட்டது. அவர் தொடர்ந்தார்:

"தாலி,தாலம் என்பன பனைமரத்தின் சினைப்பெயர்களாகும்.பனையின் ஒலையிலிருந்து செய்யப்பெறுவதால் தாலி என்ற பெயரை பெற்றிருக்கலாம்.ஆதிகாலத்தில் பனம்பூவே தாலியாக அணியப்பட்டு வந்தது அல்லது பனம்பூவின் வடிவில் பொன்னாலான தாலி செய்யப்பட்டதால் தாலி என்று பெயர் வந்து இருக்கலாம்"

இலையில் வைக்கப்பட்ட எனது வடையும், பாயாசமும் அப்படியே இருந்தது.அது சரி எதுக்கு " மொய்" வாங்கிறாங்க... என கேட்க தோன்றியது.அதற்குள் பந்தி காலியாகி இருந்தது. நானும் "மொய்" பற்றிய சிந்தனையில் மொய் வைக்க மறந்து போயிருந்தேன்.



***
thanks sleepingtiger
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "