...

"வாழ்க வளமுடன்"

23 மார்ச், 2010

இந்தியா உருவானது கதை

இந்தியா உருவானது கதை உங்கலுக்கு தெரியுமா?
அப்பரம் எப்படி இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தது , என்பது பற்றி நாம் யோசித்தது உண்டா?

***

இந்தியா உருவானது எப்படி?



ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது.

*

மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.

*

மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.

*

13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன.

*

இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்! மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான்.

*

முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் ‘இந்து’ என்று கூறியதும், ‘இந்து’ என்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை.

*

அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது.

*

இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார் களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக் காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள்.

*

பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளி யேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப் படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது. ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத் தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர்.

*

வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.

*

அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய ‘இந்தியா’ தான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை.ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.


***
இக்கருத்து திரு. தனபால் அவர்கலுடையது.
கீற்று தளத்தில்.

*

ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மன்னர் வம்சத்தினர் ஆண்டிருக்கலாம், ஆனால், காஸ்மீர் முதல், கன்னியாகுமரி வரை ஆன்மிகம், பண்பாடு போன்றவற்றால் வேதகாலம் முதல் ஒரேதேசமாக இருந்தது இந்திய தேசம்.மற்ற எந்த நாகரிகமும் தோன்றாத காலத்தில்,அதாவது உலகில் மற்ற பகுதியில் உள்ளவர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தபோது வேதகால இந்தியர்கள் மட்டுமே மிகச்சிறந்த நாகரீகத்தை வாழ்ந்திருந்தனர்.அந்த மிகச் சிறந்த நாகரீகத்திற்கு சொந்தமானவர்கள் என்று இமயம் முதல் குமரி வரையில் உள்ள அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்வோம்.

***

விடுதலை இராசேந்திரன் .
www.keetru.com
நன்றி கீற்று.

***

என்ன நண்பர்களே படித்தீர்கலா? உங்கள் கருத்து என்ன என்று சொல்ல முடியுமா?





***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.

*

சுனாமி (Tsunami)

சுனாமி நாம் ஆயுட்காலம் முழுவதும் மறக்க முடியாத நினைவுகள். அதனை பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.



சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை.சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

***

சுனாமி எப்படி உருவாகிறது?

*
பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின.

*

இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.




எப்படியெல்லாம் வரும் சுனாமி?
*
1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
*
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்
*
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
*
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
*
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
*
6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.
***
சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது:
*
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
*
1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.
*
2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
*
3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.

சுனாமி எச்சரிக்கை அமைப்பு:
*
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.
*
அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது.
*
அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி'.1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
*
ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

***
சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்:
*
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.
*
இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும்.
*
இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்

***
நன்றி ஆக்கம்: viggie
www.kalanjiam.com
***




***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

சைக்கிள் பாகங்கள் பற்றி பொது அறிவு

என்னங்க இதுல போய் என்ன இருக்கு. நமக்கு சைக்குல பத்தி தெரியாதா அப்படின்னு நினைக்கிறிங்கலா? நானும் அப்படி தான் நினைச்சேன். ஆனா இந்த தளத்தில் பார்த்ததும் தான் இவ்வளவு விஷயம் இருக்கு என்று தொரிந்து கொண்டேன். அதனால் நம் தளத்தில் பதித்தேன்.

***

சைக்கிள் பாகங்களின் பெயர்கள் தமிழில்:

*

Tube - மென் சக்கரம்
Tyre - வன் சக்கரம்
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்
Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்

*


Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்
Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

*

Chain - சங்கிலி

Chain link - சங்கிலி இணைப்பி

Chain pin - இணைப்பி ஒட்டி

Adjustable link - நெகிழ்வு இணைப்பி

Circlip - வட்டக் கவ்வி

Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்

Handle bar - பிடி செலுத்தி

Gripper - பிடியுறை

Cross Bar - குறுக்குத் தண்டு

*

Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை

Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி

Head light - முகப்பு விளக்கு

Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி

Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி

Front Carrier Basket - பொதி ஏந்தி

Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்

Side box - பக்கவாட்டுப் பெட்டி

*

Stand - நிலை

Side stand - சாய்நிலை

Speedo meter (Odo meter) - வேகம்காட்டி

Fender - வண்டிக் காப்பு

Derailleurs - பற்சக்கர மாற்றி

Peg - ஆப்பு

Air pump - காற்றழுத்தி

Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி

Break shoes - நிறுத்துக்கட்டை

*

Break wire - நிறுத்திழை

Break Lever - நிறுத்து நெம்பி

Front break ankle - முன் நிறுத்துக் கணு

Back break ankle - பின் நிறுத்துக் கணு

Disc brake - வட்டு நிறுத்தி

Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை

Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை

Pedal cover - மிதிக்கட்டை உறை

Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்

*

Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு

Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை

Seat Post - இருக்கை தாங்கி

Baby Seat - குழந்தை இருக்கை

Seat cover - இருக்கை உறை

Leather Seat - தோல் இருக்கை

Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை

Tension washer - மிகுநெருக்கு வில்லை

*

Screw - திருகுமறை

Nut - ஆணி இறுக்கி

Bolt - திருகாணி

Spring - சுருள்

Bush - உள்ளாழி

Lever - நெம்பி

Rust - துரு

Balls - பொடிப்பந்துகள்

Crank - வளைவு அச்சு

Rivet - கடாவு ஆணி

Axle - அச்சு

Spring chassis - சுருள் அடிச்சட்டம்

Nose spring - சுருள் முனை

Fork - கவை

Horn - ஒலியெழுப்பி

Cable - கம்பியிழை

Knuckles - மூட்டுகள்

Clamp - கவ்வி

Ring - வளையம்

Hole - ஓட்டை

Hook - கொக்கி

Spokes - ஆரக்கால்கள்

Spoke guard - ஆரக் காப்பு

Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி

Spanner - மறைதிருகி

Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி

Screw driver - திருப்புளி

Tools - கருவிகள்

Pocket tools - பையடக்கக் கருவிகள்

*

Front Mud Guard - முன் மணல் காப்புறை

Back mud guard - பின் மணல் காப்புறை

Chain Guard - சங்கிலிக் காப்புறை

Dress Guard - ஆடைக் காப்புறை

Gloves - கையுறை

Head set - தலைக்கவசம்

Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி

Bell lever - மணி நெம்பி

Bell cup - மணி மூடி

Bell spring - மணிச் சுருள்

Bell frame - மணிச் சட்டகம்

Bell rivet - மணி கடாவி

Bell fixing clamp - மணிப் பொருத்தி

*

Lock - பூட்டு

Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி

Key - சாவி

Key chain - சாவிக் கொத்து

Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை

Electrical parts - மின்னணுப் பாகங்கள்

Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்

Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்

Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி

Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி

Water bottle - தண்ணீர்க் குடுவை

*

Racing cycle - பந்தய மிதிவண்டி

Mini cycle - சிறு மிதிவண்டி

Mountain cycle - மலை மிதிவண்டி

Foldable cycle - மடக்கு மிதிவண்டி

Wheel chair - சக்கர நாற்காலி

Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி

One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி

High-tech bike - அதிநுட்ப வண்டி

Kid cycle - சிறுவர் மிதிவண்டி

Ladies cycle - மகளிர் மிதிவண்டி

Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி

Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்

Patch - பட்டை

Patching - பட்டை வைத்தல்

Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை

*

Over hauling - முழுச் சீரமைத்தல்

Painting - வண்ணம் தீட்டல்

Lubrication - எண்ணெய் இடல்

Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை

Puncture closure - துளைமூடல்

Puncture lotion - துளைமூடு பசை

Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)

Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை

Lubricant oil - உயவு எண்ணெய்

Waste oil - கழிவு எண்ணெய்



***

நன்றி லோடுக்கு பாண்டி.
http://lodukkupandi.blogspot.com/


***



****


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.

*

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "