...

"வாழ்க வளமுடன்"

11 ஜனவரி, 2011

`அலர்ஜி’ இல்லாமல் ஆனந்தமாக இருக்க வழி…!

அலர்ஜி இருப்பவர்களுக்கு சில உணவுகள் ஆகாது. அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி, அவற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?



அறிகுறிகள்


1. உணவை வாயில் வைத்தவுடன் கூசும். முகச்சுளிப்பு கூட ஏற்படும்.


*

2. சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.


*

3. குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தி ஏற்படும்.


*

4. அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெருமூச்சு விடுதல், வயிற்றுபோக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.


*

4. சிலருக்கு நினைவு இழப்பும் நிகழ்வதுண்டு.


*

5. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக் கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உடாக்கும்.


*

6. அமெரிக்காவில் 30-ல் ஒருவருக்கு அலர்ஜி இருக்கிறது. பெற்றோருக்கு அலர்ஜி இருந்தால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட 75 சதவீதம் வாய்ப்பு உள்ளது.


*

7. அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவற்றை பாதிக்கும். நோய்த்தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகலாம்.


*

8. வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்னோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கச் செய்யும்.


*

9. முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை போன்ற 9 வகை உணவு பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள்.

*

10. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.


***

தடுப்பது எப்படி?


1. அலர்ஜியை தடுக்க சிறந்த வழி, அறிகுறிகளை அறிந்துகொண்டு அந்த வகை உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான்.


*

2. வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கபட்ட உணவுகள், வேகவைக்காமல் மேற்புறம் மாவு சேர்க்கபட்ட உணவுகள், சுவையை அதிகபடுத்த பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் பழவகைகளை உண்ண வேண்டாம்.


*

3. அலர்ஜி உடையவர்களுக்காக தனியாகத் தயாரிக்கபடும் அலர்ஜியற்ற உணவு, உணவு பொருட்களை உண்ணலாம்.


*

4. நண்பர்கள், விருந்தினர் வீடுகளில் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உங்களுக்கான உணவில் தவிர்க்க வேண்டியவை பற்றி கூறிவிடுங்கள். நீங்களாகவே தயார் செய்து எடுத்துச் சென்ற குழம்பை பயன்படுத்துவதும் சிறந்த வழிமுறை தான்.


*

5. பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யபட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டி பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.



***
thanks luxinfonew
***


"வாழ்க வளமுடன்"

ஒளி வீசும் தாவரங்களும் மீன்களும் !

ஒளி வீசும் தாவரங்களும் மீன்களும் (Lighting greens and fishes)



இந்தியாவிலும் இலங்கையிலும் கிராமப்புறங்களில் வாழ்வோர் இரவு நேரத்தில் ஒரு காட்சியைக் கண்டிருப்பீர்கள். சூரியன் மறைந்த பின்னர் மினுக்மினுக்கென்று அங்குமிங்கும் பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கண்டிருப்பீர்கள். கிராம மக்கள் நாள் தோறும் இதைக் காண்பதால் இதில் அதிசயம் ஏதுமில்லை.


ஆனால் இதே வகையில் பல தாவரங்களும், மீன்களும், நத்தைகளும் பூரான்களும் ஒளி வீசும் விந்தைச் செய்தி பலருக்கும் தெரியாது.


இயற்கை உருவாக்கிய விந்தைகளில் ஒன்று தான் இந்த மின்மினிகள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த காளிதாசன் என்னும் வடமொழிக் கவிஞன் இரவில் ஒளி வீசும் தாவரங்கள், மலைக் குகைகள் பற்றி வடமொழியில் கவி பாடியுள்ளான். அவனது காலத்தில் இப்படி ஓளி வீசும் தாவரங்கள் இந்தியாவிலும் இருந்தன போலும். ஆனால் இன்று உலகின் வேறு பகுதிகளில் மட்டுமே அவை உள்ளன.


தாவர வகைகளில் நாய்க்குடை என்றும் காளான் என்றும் அழைக்கப்படும் பூஞ்சன் FUNGI வகைத் தாவரங்களைப் பலரும் பார்த்திருப்பீர்கள். ஆஸ்திரேலியாவில் இத்தகைய காளான்கள் பல இரவு நேரத்தில் ஒளியை உமிழ்கின்றன.


இவற்றில் சில வீசும் வெளிச்சத்தில் புத்தகங்களைக் கூடப் படிக்கலாம்! விஷச் சத்துள்ள இக்காளான்களின் பெயர் PLEUROTUS NIDIFORMIS. மற்றொரு வகையின் பெயர் POROMYCENA MANIPULARIS. இவை தலைவலித் தைலம் தயாரிக்கப் பயன்படும் யூகலிப்டஸ் மரங்களுக்கு அருகில் வளருகின்றன. இவை இரவு நேரத்தில் ஏன் இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராக உள்ளது.


இன்னுமொரு சுவையான செய்தி உண்டு. நியூசிலாந்து நாட்டில் குகைகளில் ஒளி வீசும் பூச்சிகள் உள்ளன. இவைகளைப் பார்க்க ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் இவை மனிதச் சத்தத்தைக் கேட்டால் ஒளி வீசுவதை நிறுத்தி விடும்.


ஆகையால் சுற்றுலாப் பயணிகள் அமைதியாக நின்று இவைகளைப் பார்க்க வேண்டும். இவை நீல நிற ஒளியை வெளியிடுகின்றன. குகையின் மேல் புறத்திலிருந்து இந்தப் பூச்சிகள் ஒட்டடை, நூலாம்படை போலத் தொங்கும் இந்த வெளிச்சத்தை நோக்கி வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று விடும். இவைகளின் பெயர் ARACHNO CAMPA.


மின்மினிப் பூச்சிகளில் (FIRE FLIES, GLOW WORMS) 2000 வகைகள் உள்ளன. இவை தவிர 1500 வகை மீன்கள் கடலுக்கடியில் ஒளி வீசுகின்றன. மலேசியாவில் DYAKIA STRIATA என்ற ஒரு வகை நத்தை நீல நிற ஒளியை வீசுகின்றது. தன்னைச் சாப்பிட வரும் பிராணிகள் மிரட்டி விரட்டவே இவை இப்படி ஒளியைச் சிந்துகின்றன.


ஒரு வகைப் பூரான் ஒளியை உமிழும் திரவத்தைப் பயன்படுத்தி ஏனைய பிராணிகளின் உடலில் கொப்புளத்தைக் கூட உண்டாக்கி விடுமாம். LUMINO DESMUS என்ற வகை ரயில் வண்டிப் பூச்சி ஒளியைச் சிந்துவதோடு தன்னைத் தாக்கும் பிராணிகள் மீது சயனைடு வாயுவையும் வீசுமாம்.


கடலுக்கடியில் ஆழம் செல்லச் செல்ல இருள் மண்டி விடும். இங்கு வாழும் 1500 வகை மீன்கள் தங்களாக உடல் மூலம் விளக்கேற்றி இரை தேடுகின்றன.


ANGLER FISH எனப்படும் தூண்டில் மீன் தனது மூக்கின் மீதுள்ள மீன்பிடித் தூண்டிலில் ஒளியைக் தோன்ற செய்கிறது. மின்சார பல்பு போன்ற தோற்றமுள்ள இதை நோக்கி ஏனைய மீன்கள் வரும். அவ்வளவு தான் அவற்றைக் கபளீகரம் செய்து விடும் இந்த ANGLER FISH.


கலபகாஸ் என்னும் தீவுக்கருகில் கடலுக்கடியில் VIPER FISH என்ற வகை மீன்கள் வசிக்கின்றன. இவைகளின் வாயில் விளக்கு போல வெளிச்சம் தெரியும். வாயைத் திறந்தவுடன் இந்த ஒளியை நோக்கி வரும் மீன்களின் கதை முடிந்தது. இதை மரண விளக்கு என்று அழைத்தாலும் தவறில்லை.


இவை எல்லாவற்றையும் விட மிகவும் விந்தையான மீன் இனம் LANTERN EYE மீன் வகைகள் தான். மீன் வகைகளில் அதிகமான ஒளியை வீசுவதால் இவைகளுக்குப் பொருத்தமாக லாந்தர் விளக்கு மீன் என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இவை கண்களைச் சுற்றும் போது விளக்குச் சுற்றுவது போல ஒளியும் இடம் மாறும்.


HATCHET FISH என்ற மீன் வகை தன்னைச் சுற்றி எந்த அளவுக்கு வெளிச்சம் உள்ளதோ அதே அளவுக்கு உடலிலிருந்து ஒளியை வெளி விடுமாம். இப்படிச் சமமான ஒளியிருந்தால் இதை ஏனைய மீன்கள் காண முடியா. இது ஒரு தற்காப்பு உத்தி.


மனிதன் கண்ணாடிகளையும், லென்ஸ் எனப்படும் உருப் பெருக்காடிகளையும் கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே மீன்கள் கண்டுபிடித்து விட்டன போலும். REFLECTING FISH எனப்படும் பிரதிபலிப்பு மீனின் உடல் முழுவதும் கண்ணாடி போலும், லென்ஸ் போலும் செதில்கள் உள்ளன. இந்த மீன் உண்டாக்கும் வெளிச்சத்தை அவை பிரதிபலிக்கின்றன.


நியூசிலாந்தில் ஒன்றரை அடி நீளத்திற்கு வளரும் மண்புழு சுரக்கும் வழவழப்பான திரவம் கூடச் சிறிது நேரத்திற்கு ஒளியைக் கசியும். இந்த ஒளி மயமான பாதையைக் கொண்டே அவை சென்ற திசையை அறிந்து விடலாம்.


ஒளியைக் கசியக் கூடிய பூச்சிகளைப் பற்றிப் பேசினால் நியூசிலாந்து தான் நினைவுக்கு வரும். இவை திருவிழாக் காலங்களில் போடும் மின்சார விளக்குகள் போல ஒரே நேரத்தில் எரிந்தும், அணைந்தும் காடுகளையும், குகைகளையும் அலங்கரிக்கும். இந்தியாவில் மைசூரிலுள்ள பிருந்தாவன் அணையிலும், இங்கிலாந்தில் BLACK POOL என்னுமிடத்திலும் இரவு நேர மின்சார விளக்கு அலங்காரத்தைக் காண ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதே பணியை மின்மினிப் பூச்சிகளும் செய்கின்றன.


இறுதியாக, இந்தப் பூச்சிகளும் மீன்களும் எப்படி ஒளி வீசுகின்றன? ஏன் ஒளி வீசுகின்றன என்பதை பார்ப்போம்.


இந்த ஒளி வீச்சுக்கு அவை உடலிலுள்ள சில இரசாயனப் பொருட்களைப் பயன் படுத்துகின்றன. LUCIFERIN என்ற பொருள் ஆக்ஸிஜனுடன் கலந்து ஒளியை வீசும். இதற்கு LUCIFERASE என்ற என்ஸைமில் உள்ள ADENOSINE கிரியா ஊக்கியாக உதவி செய்கிறது. கிஜிறி என்று சுருக்கமாக அழைக்கப்படும் TRIPHOSPHATE என்ற புரதச் சத்தை இவை பயன் படுத்துகின்றன. இந்த வகையில் ஒளியைத் தயாரிக்க அவை தனது சக்தியில் 2 விழுக்காட்டை மட்டுமே பயன் படுத்துகின்றன.


தற்கால விஞ்ஞானிகள் இந்த உத்தியை அவர்களுடைய ஆராய்ச்சியில் பயன் படுத்துகின்றனர். LUCIFERIN, LUCIFERASE ஆகியவைகளை உற்பத்தி செய்யும் Gene எனப்படும் மரபணுக்களை clonning என்ற முறையில் காப்பி எடுத்து வேறு சில தாவரங்களில் ஏற்றுகின்றனர். இவ்வகையில் ஒரு புகையிலைச் செடியைக் கூட ஒளி வீசும் செடியாக மாற்றி விட்டார்கள். சில வகை பாக்டீரியாக்களில் இந்த ஒளி வீசும் ஜீனை ஏற்றினால் தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் எங்கு இருக்கின்றன என்றும் கண்டு பிடிக்கலாம். டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், மாமிசம் ஆகியவை கெட்டுப் போனால் கூட இந்த முறையில் கண்டு பிடித்து விடலாம்.


இன்னும் சிலர் சாலைகளில் உள்ள மின்சார விளக்குகளை எடுத்து விடலாம், மின்மினிப் பூச்சிகளின் ஜீன்களை மரத்தில் ஏற்றிச் செலவில்லாமலேயே வெளிச்சம் பெறலாம் என்று கூறுகின்றனர். செவ்வாய்க் கிரகத்திலிருந்து மண்ணை எடுத்து வந்து அதில் இந்த ஜீன்களை ஏற்றினால் அங்கு உயிரினம் உள்ளதா என்பதைக் கூடக் கண்டு பிடித்து விடலாம். ஏனெனில் ATP எனப்படும் ADENOSINE TRIPHOSPHATE புரதச் சத்து இல்லாமல் எந்த உயிரினமும் தோன்ற முடியாது LUCIFERIN, LUCIFERASE என்ற இரசாயனம் செயல் படவும் இவை தான் அடிப்படைப் பொருள்.


ஒரு விந்தையான விஷயம் என்னவென்றால் மனிதன் உண்டாக்கும் வெளிச்சத்துடன் உஷ்ணமும் உருவாகிறது. ஆனால் இயற்கை உயிரினங்கள் உமிழும் இந்த ஒளியில் வெப்பம் என்பதே இல்லை.


மீன்களும், மின்மினிப் பூச்சிகளும் ஒளியை வீசுவது ஏன்? மின்மினிப் பூச்சியின் இனப் பெருக்கத்திற்காக அதாவது ஆண் பூச்சிகளைக் கவர்வதற்காகப் பெண் பூச்சிகள் மினுமினுக்கின்றன. சில வகைப் பூச்சிகளில் ஆண், பெண் இரண்டும் ஒளி வீசுகின்றன. மீன்கள் இரையைப் பிடிப்பதற்காக இப்படிச் செய்கின்றன. பூரான், நத்தை போன்றவை எதிரிகளை மிரட்டி விரட்ட இப்படிச் செய்கின்றன. ஆனால் காளான் போன்ற கீழ்நிலத் தாவரங்கள் எதற்காக இப்படிச் செய்கின்றன என்று தெரியவில்லை.


அண்மைக் காலத்தில் இந்த மின்மினிகள் குறித்து இரண்டு அருமையான நூல்கள் வெளியாகியுள்ளன. HILDA SIMON என்பவர் எழுதிய LIVING LANTERNS என்ற புத்தகமும் JOHN TYLER என்பவர் எழுதிய GLOW WORMS என்ற புத்தகமும் சுவையான பல தகவல்களைத் தருகின்றன.


மத்தியஅமெரிக்காவில் மின்சார வெட்டுக் காரணமாக ஒரு மருத்துவ மனையில் விளக்குகள் இல்லாமற் போன போது ஒரு அவசர ஆப்ரேஷனை ஒளிவீசும் பூச்சிகளின் வெளிச்சத்திலேயே நடத்தி விட்டனர் டாக்டர்கள்.


மத்திய அமெரிக்காவில் CLICK BEETLE என்ற வண்டின் முன்புறம் 2 பச்சை நிற ஒளி விளக்குகளும், வால் புறத்தில் ஆரஞ்சு நிற ஒளி விளக்கும் உள்ளன. இதை AUTOMOBILE அதாவது கார் வண்டு என்பார்கள். தலைப் புறத்தில் பச்சை விளக்கும் வால் புறத்தில் சிவப்பு விளக்கும் உள்ளதல்லவா.


காடுகளில் வழியே நடப்போர் இவைகளைப் காலில் கட்டிக் கொண்டு அந்த வெளிச்சத்திலேயே நடப்பார்களாம் இன்னும் சிலர் இவைகளைக் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து வீட்டிற்கு விளக்குப் போல பயன்படுத்துவார்களாம்!


இயற்கையின் மாபெரும் விந்தைகளில் ஒன்றான மின்மினி, மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெறுகிறது.

**

ஒலியை வெளியிடும் தாவரங்கள், பூச்சிகள் மீன்களின் ஆங்கிலப் பெயர்கள்:

1. PHYROPHORUS NOCTILUCAS மத்திய அமெரிக்க வண்டு
2. PLATYURA சிலந்திவலை போல மின்னி ஒளி வீசும் பூச்சி
3. ARACHNO CAMPA நியூசிலாந்தில் ஒட்டடை போலத் தொங்கி ஒளி வீசும் பூச்சி
4. PHYROPHORUS LAGIOPTHALMUS/ AUTOMOBILE BEETLE/ CLICK BEETLE தலையில் 2 பச்சை விளக்கு, வாலில் ஆரஞ்சு விளக்கு
5. PLEUROTUS NIDIFORMIS ஆஸ்திரேலியக் காளான் வகை
6. POROMYCENA MANIPULARIS
7. JELLY FISH
8. BACTERIA
9. LANTERN EYE FISH
10. VIPER FISH
11. ANGLER FISH
12. HATCHET FISH
13. LUMINO DESMUS
14. DYAKIA STRIATA மலேசிய நத்தை


***
thanks சுவாமிநாதன் 2005
***


"வாழ்க வளமுடன்"

சண்டையை தவிர்த்தால் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகம் ஆகும் !

கணவன்-மனைவி சண்டை மனதுக்கு மட்டுமல்ல, உடம்புக்கும் நல்லத்தல்ல. மனைவி அடித்துவிடுவாளோ என்ற பயத்தினால் சொல்லவில்லை. இது அறிவியல் உண்மை. காதலுக்கு காயத்தை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.




கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கச்சரவு முற்றி சண்டையாகும் போது ரத்தத்தில் புரதம் சுரப்பது தாமதமாகிறதாம். உடம்பில் உள்ள காயங்கள் ஆறுவதற்கு இந்த ரத்தப்புரதம் இன்றியமையாதது என்று அமெரிக்காவின் ஓஹாயோ அரசு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



ஒரு பரிசோசனைக் கூடத்தில் ஒரு கணவன்-மனைவி தம்பதிக்கு வேக்குவம்பம் மூலம் கையில் காயத்தை ஏற்படுத்தி விட்டு, அவர்களுக்கு இடையே சண்டை மூட்டிவிட்டனர் விஞ்ஞானிகள்.



கணவனும் மனைவியும் வாக்குவாதம் செய்யும் போது எவ்வளவு விரைவாக புண் ஆறுகிறது என்பதை அளவிட்டு, அவர்கள் இயல்பாக அன்புகாட்டும் போது புண் ஆறும் வேகத்துடன் ஒப்பிட்டனர் போர்க்குணம் மிக்க தம்பதியை விட, சாந்தகுணமான தம்பதிக்கு 60 விழுக்காடு வேகமாக புண் ஆறியது. இதற்காக 22 முதல் 77 வயது வரையிலான 42 ஜோடி கணவன்-மனைவிகளிடையே இரண்டு தடவை பரிசோதனை நடத்தப்பட்டது. முதலில் அவர்கள் அமைதியாக இருக்கும் போதும் பின்னர் தகராறு செய்யும் போதும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.



சண்டை போடும் போது ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, காயம் ஆறுவதற்கு உதவக்கூடிய சைட்டோகின்ஸ் என்னும் புரத மூலகங்களை ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்யும் வேகம் குறைகிறது என்று, கண்டுபிடிக்கப்பட்டது.



ஆகவே இனிமேல் உங்கள் உடல்நலனுக்காக சண்டைச்சரவின்றி காதல் செய்வீர் :)

***
thanks tamilcnn
***

"வாழ்க வளமுடன்"

கொழுப்பை குறைக்க எரிப்பு சிகிச்சை

உடம்பில் சேர்ந்து விட்ட அளவுக்கு அதிகமான கொழுப்பை நெருப்பில் வாட்டி குறைக்கும் ஒரு புதுமையான சிகிச்சை முறை ஹாங்காங்கில் செய்யப்படுகிறது. வெப்பத்தின் மூலம் குணப்படுத்துவது என்பது சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் சுமார் 2000-3000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேலை நாடுகளில் கூட, உடம்பை ஒல்லியாக்குவதற்காக, சூடான களி மண் அல்லது சாக்லேட்டை உடம்பில் பூசி கட்டிவைக்கிறார்கள்.


ஆனால், உடம்பை எரிப்பது என்பது, புதுமையான சிகிச்சை முறை என்கிறார் ஹாங்காங்கில் உள்ள The life of life heating Spa என்னும் அழகுமையத்தின் உரிமையாளர் KAREN CHU முதலில் பெய்ச்சிங்கில் தான் இந்த சிகிச்சை பயன்படுத்தப்பட்டதாம்.



ராணுவ மருத்துவமனைகளில் தசை வலி கண்ட படைவீரர்களுக்கு இந்த உடம்பு எரிப்பு சிகிச்சை தரப்பட்டது. கொழுப்புச் சத்தைக் குறைப்பதற்கான 90 நிமிட சிகிச்சையின் துவக்கத்தில் உடம்பு முழுவதும் நன்றாகத் தேய்த்து, Spa எனப்படும் ஆவிக்குளியல் தரப்படுகிறது.



பிறகு, புரோட்டா மாவு பிசைவது போல கொழுப்புச் சேர்ந்துள்ள வயிறு, பிருஷ்டம் போன்றபாகங்கா பிசையப்படுகின்றன. தோலில் மூலிகை மருந்துகள் கலந்த களிம்பு பூசிப்படுகிறது. இந்தக் களிம்பில் எருமைக்கொம்பு பொடி, சீன ஆஞ்செலிகா, வின்செங், கம்பளிப்பூச்சி காளான் போன்ற மருந்துகள் கலந்துள்ளன. பிறகு வயிற்றைச் சுற்றிலும் செல்லோபோன் டேப் சுற்றப்பட்டு, அதன் மீது இரண்டு பெரிய ஈரமான துவாலைகளைச் சுற்றுகிறார்கள்.



துவாலை மீது எரிசாராயத்தை தெளிந்து, தீவைத்து விடுவிறார்கள். வயிற்றைச் சுற்றிலும் தீ கொழுந்து விட்டு எரிந்து, உடம்புக் கொழுப்பை குறைப்பதை படுத்தபடியே நாம்பார்க்கலாம் பயப்படாமல் இவ்வாறு ஒன்றரை நிமிடத்திற்கு அல்லது சூட்டை உடம்பு தாங்கும் வளர தீ எரிக்கப்படுகிறது. நீண்ட நேரம் தீ எரியுமானால் நல்ல பலன் கிடைக்குமாம், தீ எரியத்தொடங்கியதும் முதலில் வெப்பமே தெரிவதில்லை.



பிறகு, உடம்பைச் சுற்றியுள்ள ஈரமான துவாலை சூடாகி, செக்கச் செவேல் என்று எரியும் போது தான் நமது உடம்பு சூட்டை உணர்கிறது. சிகிச்சை முடிந்து துவாலையை அகற்றினால் கொப்புளமோ, தாயமோ இல்லை. வயிறு மட்டும் லேசாக சிவப்பாக இருக்கிறது. கொஞ்சம் வலியும் இருந்தது. ஆனால், 90 நிமிட சிகிச்சையில் 11 சென்டிமீட்டர் கொழுப்பு குறைந்து விட்டது. இவ்வாறு எரிக்கப்படும் கொழுப்பு எங்கே போகிறது? கொழுப்பு உருகி, நிண் நீர் சுரப்பி மூலம் வெளியேறி விடுகிறது என்கிறார் மருத்துவர்.


***
thanks tamilcn
***


"வாழ்க வளமுடன்"

முதல் மாதவிலக்கு ( வயதுக்கு வருவது ) ஏற்பட வில்லையா?

சரயுவின் அம்மாவுக்குத் தன் பெண்ணின் வளர்ச்சி பற்றிக் கவலை. சரயு ஒன்பதாவது படிக்கிறாள். நல்ல உயரம்.ஓல்லியான உடல் வாகு. அவளுக்கு மாதவிலக்கு இன்னமும் தொடங்கவில்லை. சரயுவின் பள்ளித் தோழிகள் தங்களது உரையாடல்களில் அவளைச் சேர்த்துக்கொள்வதில்லை.


இதனால் சரயு மிகவும் பாதிக்கப்பட்டாள். அவள் வகுப்பில் உள்ள வளர்ந்த பெண்கள் ஏதாவது விவாதித்துக்கொண்டிருக்கும்போது அவளை அங்கிருந்து போகும்படி சொல்லிவிடுவார்கள். அவள் எதிரில் எதுவும் பேச மாட்டார்கள். சில சமயம் ஒரு குழந்தையை நடத்துவதுபோல அவளை நடத்தி அவமானப்படுத்துவார்கள். சில சமயம் அவளை அலி என்று சொல்லிக் கேலி செய்வார்கள்.



*



இதையெல்லாம் பார்த்து சரயு மிகவும் நொந்துபோனாள். சரயுவுக்கு என்னதான் ஆயிற்று? 14 வயதான அவளுக்கு இன்னமும் மாதவிலக்கு ஏற்படத் தொடங்கவில்லை. அது கவலைப்பட வேண்டிய விஷயமா? பெண்கள் எட்டு முதல் 12 வயதிற்குள் பூப்பெய்துகிறார்கள். பூப்பெய்துதல் என்பது ஓரு பெண்ணுக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையை அவளுக்குள் உண்டாக்குகின்றன. இந்த மாற்றம் முழுமைபெற மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆகிறது.

*

முதல் மாற்றம் மார்புக் காம்புகளில் ஏற்படுகிறது. காம்புகள் புடைக்கின்றன. மார்புகள் மெல்ல மெல்லப் பெரிதாகின்றன. இந்த வளர்ச்சி ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை நடக்கிறது. மார்புத்திசுக்களின் அளவு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். ஆனால் மார்புகளின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அடுத்த மாற்றம் பிறப்புறுப்பைச் சுற்றி வளரும் ரோமங்கள்.

*

அடுத்தபடியாகப் பெண்ணின் உயரம். பூப்பெய்துவதற்கு முன் ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து சென்டி மீட்டர்வரை வளர்ச்சி இருக்கும். பூப்பெய்திய பிறகு இது எட்டு முதல் ஓன்பது சென்டி மீட்டர்வரை அதிகரிக்கும். அதிகபட்ச வளர்ச்சி தரும் பருவம் என்று இது குறிப்பிடப்படுகிறது. இந்த வளர்ச்சி மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நடக்கும். பெண்ணின் உயரம் பெற்றோரின் உயரைத்தைப் பொறுத்தது. உயரமான பெற்றோரின் பெண்களும் உயரமாக இருப்பார்கள்.

*

பெண்களுக்கு உடல் முழுவதிலும் கொழுப்புச் சத்து சேரும். இடுப்பு அகலமாகும். பிள்ளைப்பேறு நிகழும் சமயத்தில் கர்ப்பப் பை பெரிதாகிறது. அதற்கு வசதியாகவே இடுப்பு அகலமாகும். கால்களும் பெரிதாகும். முகத்தின் எலும்புகள் விரிவடையும்.முகத்திலும் மார்பின் மேல் பகுதியிலும் முதுகின் மேல் பகுதியிலும் கொழுப்புச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படுவதால் கட்டிகள் உண்டாகும். விடலைப் பருவத்தின் சங்கடங்களைப் பெண்கள் அனுபவிக்கும் காலம் இது. அவர்களது வகுப்புகளில் இருக்கும் பையன்களைவிட அவர்கள் பெரிதாக வளர்ந்திருப்பார்கள்.

*

அதன் பிறகு முதல் மாதவிலக்கு ஏற்படுகிறது. மாதவிலக்கு என்பது கர்ப்பப் பையிலிருந்து சினை முட்டைகள் வெளியேறுவது தான். புதிய முட்டைகள் 25-35 நாட்களுக்குள் வளர்ந்துவிடும். கருவுறும் சமயத்தில் ஆணின் உயிரணுக்களை ஏற்றுக்கொள்வதற்காகத்தான் இது நடக்கிறது. கருவுறாதபோது இந்த முட்டைகள் ரத்தத்துடன் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறும் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள்வரை இது நடக்கும்.

*

தொடக்கத்தில் இந்தச் சுழற்சி சீராக இருப்பதில்லை. இரண்டு ஆண்டுகளுகளுக்குப் பிறகு மாதவிலக்குச் சுழற்சி சீரடைகிறது. சில சமயம் ரத்தப் போக்குடன் இடுப்பு வலியும் இருக்கும்.சுழற்சி சீரான முறையில் நடக்க ஆரம்பித்த பிறகு பெண்கள் மேலும் ஐந்து அல்லது ஆறு சென்டி மீட்டர் வரை உயரமாவார்கள். அதன் பிறகு வளர்ச்சி நின்றுவிடும்.இதனால்தான் ஆண்களோடு ஓப்பிடுகையில் பெண்கள் ஆரம்பத்தில் அதிகம் வளர்வதில்லை.

*

சரயுவின் பெற்றோர் உயரமானவர்கள். பதினோரு வயதில் அவளுக்கு மார்புகள் வளர ஆரம்பித்தன. அவளைப் பரிசோதித்தபோது அவளுக்குப் பிறப்புறுப்பில் முடி வளர்ந்திருப்பதும் தெரியவந்தது. எனவே மேலும் ஆறு மாதங்கள் காத்திருக்கும்படி அவளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அவளுக்கு மாதவிலக்கு ஏற்படத் தொடங்கியது. எடையும் கூடியது.

*

ஆக, பெண்கள் வயதுக்கு வருவது மிக விரைவாகப் பத்து வயதிலும் நடக்கலாம். மிகத் தாமதமாகப் பதினைந்து வயதிலும் நடக்கலாம். ஆனால் மார்புக் காம்புகள் வளர்வது, பிறப்புறுப்பைச் சுற்றி முடி வளர்வது ஆகியவை 12 வயதிற்குள் நடந்தாக வேண்டும். விரைவில் பூப்பெய்பவர்களுக்கு உடல் வளர்ந்துவிடும். ஆனால் அந்த வயதிற்கேற்ற குழந்தைத்தனம் இருக்கும். ஆனால் ஹார்மோன்கள் அவர்களிடத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரும்.

*

பெற்றோர்களுடன் உரசல், ஆண்களின்பால் ஏற்படும் கவர்ச்சி ஆகியவை தாமதமாகப் பூப்பெய்துபவர்களைவிடச் சிறிய வயதிலேயே இவர்களுக்கு நிகழும். முடிவு எடுக்கும் திறன் வளரும் முன்பே பிறரிடமிருந்து வரும் ஆபத்துக்கள் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். பிறரது தொடுகையில் நல்ல நோக்கத்துடன் தொடுவது, கெட்ட நோக்கத்துடன் தொடுவது ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் பெண்களுக்கு எட்டு- ஒன்பது வயதிலேயே தெரிய வேண்டும்.

*

விரைவில் பூப்பெய்துவதே தற்போதைய போக்கு. குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் உடற்கூறு அளவில் பெண்களுக்கு விரைவில் வந்துவிடுகிறது. ஆனால் கருவுறுவதால் உண்டாகும் உடல், உண்ர்வு, பொருளாதாரம், உளவியல், சமூகம் ஆகியவை சார்ந்த விளைவுகளை எதிர்கொள்ள அவர்கள் அந்த வயதில் தயாராவதில்லை.

*

கட்டுரையாளர் சென்னையைச் சேர்ந்தவர். குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் நல மருத்துவர்.


***
thanks டாக்டர் எஸ்.யமுனா
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "