...

"வாழ்க வளமுடன்"

08 பிப்ரவரி, 2010

அறிஞர்களின் பொன்மொழிகள்



* துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
- பெஞ்சமின்.
* கடலில் முழ்கினால் முத்து எடுக்கலாம்: கடனில் முழ்கினால் சொத்தை இழக்கலாம்.
* உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
* நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கொட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.
- பெர்னாட்ஷா.
* செய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள் அனைத்தும் செய்ய‌ முடியாத‌வைக‌ள் என்று முத‌லில் ப‌ல‌ரால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வைதான்.
- கால்லைல்.
* யார் ஒருவ‌ன் த‌னக்கு உள்ள‌ கெள‌ர‌வ‌மும், ம‌ரியாதையும் போய் விடுமே என்று ப‌ய‌ந்தப‌டி இருக்கிறானோ, அத்த‌கைய‌வ‌ன் அவ‌மான‌த்தைத்தான் அடைகிறான்.
- விவேகான‌ந்த‌ர்.

ஓட்ஸ்ஸில் உள்ள சத்துக்கள்


காடைக்கண்ணி (ஓட்ஸ்)







காடைக்கண்ணி (ஓட்ஸ்) தானியம்


நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம். இதன் தானியம் ஓட்ஸ். இதன் தாவரவியல் பெயர் அவைனா சடைவா(Avina sativa).



இதில் மதம் (Gluten) கிடையாது. ஆகையால் பாண் (ரொட்டி) தயாரிப்பது இயலாதது. ஆனால் ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி (Oatmeal Porridge) ஓர் ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது.





ஓட்ஸ் ஈரட்டி (OAT COOKIES) ஒரு பிரபலமான இனிப்பு வகை ஆகும். இது கொழுப்புச்சத்து குறைவானது.ஓட்ஸின் பாரம்பரிய தமிழ் சொல் "காடைக்கண்ணி" ஆகும்.





நன்றி தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)






1. ஓட்ஸ் பீற்ற குளுக்கான்கள் ஓரளவு நீரில் கரைய கூடியதாக இருப்பதால் உடல் கொலஸ்திரோலை குறைக்கும், இதய நோய்களை குறைக்கவும் உதவுகிரது.






2. மாவு பொருட்கள், இனிப்பு சம்மந்தமான‌ பொருட்கள் உண்டதும் உடலில் ஏற்படும் கிளைக்காமிக் விளைவை (Glycaemic response)பீற்றா குளுக்கான்கள் குறைக்கிறன. நீரிழிவு நோய் இருப்பவர்கள் ( டைப் 1, டைப் 2 ) சர்க்கரை வகை 2 வியாதி உள்ளவர்களுக்கு இது சிறப்பான ஒரு தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.






3. ஓட்ஸ் காலை உணவாக எடுத்து கொண்டால் சீக்கிரம் பசிக்காது. இதனால் அதிகம் உண்ணாமல் உடல் எடை கூடாது.






4. வைட்டமின் ‘இ’ மற்றும் ‘பி’ காம்ளக்ஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீஷியம் போன்ற தாது உப்புகளும், தமனிகளின் சுவர்களை வலுப்படுத்தும் சிலிக்கான் என்னும் தாதும் நிறைந்து காணப்படுகிற‌து.






5. இருதயத்திற்கு ஓட்ஸ் லேசான பலமூட்டியாக உள்ளது. கொலஸ்டிராலை கட்டுப்படுத்துகிறது. மூளைக்கும், நரம்புக்கும் ஊட்டம் தருவதால் நல்ல தூக்கம் தரக்கூடியது.






6. இதில் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் ‘பி’யும், தாது உப்புக்கள், பொட்டாசியம், பாஸ்பரசும் உள்ளன.






7. ஆங்கிலேயர்கள் அந்த காலத்தில் ஓட்சை குதிரைக்கு உணவாக வழங்கினார்களாம். இதில் இதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் வைட்டமின் தாதுக்களால் கால்நடைகள் மிகவும் வனப்பாக வளர்க்கப்பட்டன.



உடல் அழகுக்கும் ஓட்ஸ் மிகவும் நல்லது.



எனக்கு தெரிந்த சில இதோ...





9. ஓட்ஸ்சில் இருக்கும் வைட்டமின் ‘இ’ சத்து சருமத்திற்கு நல்லது.





10. ஓட்ஸ் மீலை நீரில் நன்கு கலந்து பசை போல் முகத்தில் தடவி உலர விடவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.



11. ஓட்ஸ் என்பது ஜவ்வரிசியைப் போல அரிசி வகையைச் சேர்ந்த ஒரு தானியம். இதில், துரித செரிமானத்திற்கு உதவும் ‘ஃபைபர்’என்ற நார்ச்சத்து உள்ளது.



*


12. எழுந்து நடமாட முடியாமல், வேலை பார்க்க முடியாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு சாப்பிடும் உணவுப் பொருட்கள் எளிதில் ஜீரணமாகாது.



*



13. ‘ஓட்ஸ்’ ஜீரணத்திற்கு உதவியாவதோடு, வயிற்றைச் சுத்தமாக்கிவிடும். தவிர உடல் வலுப்பெற தேவையான சத்துக்களும் உள்ளன.



*



14. கேன்சர் நோயாளிகள், சீறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஓட்ஸ் கஞ்சிக் குடிப்பது நல்லது.



*



15. பால், சர்க்கரை சேர்த்தும் பருகலாம். கூடுதல் சுவையுடன் இருக்கும்.

எழுத்தாளர் சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி?

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு. சுஜாதா அவர்களின் ஏன்? எதற்கு? எப்படி? என்ற பதிவுகள் மிகவும் என்னை கவந்தது.

நான் படித்து அறிந்த தகவல்களை இதில் இடுகிறேன்.

இது திரு. சுஜாதா அவகளுக்கு சமர்ப்பணம்.


1. 'கடல் சூறாவளி'களிலேயே மிகப் பெரியது 'ட்ஸூனமி' என்பது ஜப்பானியச் சொல். மிகப்பெரிய அலை என்று அர்த்தம்.


2. இமயமலையின் உச்சி பகுதியில் 'கடல் வாழ் தாவரங்கள்' - உள்ளதாகப் படித்தேன் - இது பற்றி...
இருபத்திரண்டரைக் கோடி வருஷங்களுக்கு முன் ஆஸ்திரேலியா பக்கத்தில் ஒரு பெரிய தீவாக இந்தியா இருந்தது. மெல்ல அது வடமேற்காக நகர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒன்பது மீட்டர். ஒரு காலகட்டத்தில், தற்போதைய ஆசியாவிலிருந்து 6400 கிலோமீட்டர் தெற்கில் இருந்தோம். ஆசிய ஐரோப்பிய கண்டத்துடன் நாளடைவில் முட்டி மோதி ஒட்டிக்கொண்டபோது, அந்த மோதலில் எழுந்ததுதான் இமயமலை. அதனால்தான் இமயத்தின் உச்சியில் கடல் வாழ் தாவரங்களின் ஃபாசில்கள் கிடைத்தன. இன்றைய கணக்கின்படி எவரெஸ்ட் சிகரம் வருஷத்துக்கு 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. 27 மில்லி மீட்டர் வடகிழக்காக நகர்கிறது.


3. பூனை, நாய்க்கெல்லாம் நம்மைவிட இரண்டு லட்சம் மடங்கு அதிக மோப்பசக்தி; ந‌ம்மைவிட 50 மடங்கு அதிக அளவில் 'ரிசெப்டர்' செல்கள் உள்ளன். நாயின் மோப்பசக்தி ரொம்ப நுட்பமானது.


4. ஒரு மலைப்பாம்பு எலியை விழுங்க முதலில் அந்த எலியை ஒரு சுருட்டுச் சுட்டி அழுத்தும். அப்போதே எலி மயக்கம் ஆகிரது. பிறகு பாம்பு வாயை 140 டிகிரி திறந்து எலியை வயிற்றுக்கு அனுப்பும்.19 மணி நேரம் எலி ஜீரணமாகமல் இருக்கும். ( எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கண்டு பிடித்து இருக்கிரார்கள் )

a. எலியின் தலை ஜீரணம் ஆக 2 நாள் ஆகும்.
b. 4 நாள் கழித்து அதன் ரோமங்கள் உரியும்.
c. 6 நாள் கழித்து எலும்பு மட்டும் தான் பாக்கி.
d. குடலுக்கு சென்று அதுவும் முழுவதும் ஜீரணமாக 2 வாரம் ஆகும்.

படிக்கும் போது நமக்கு சும்மா அதிருது இல்ல....


5. பூமியின் வயது என்ன தெரியுமா? சுமார் நானூறு கோடி வருஷங்கள்!( இவை ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் 2ம் பாகத்தில் 29ம் பக்கம்.)


6. கொசுக்கலில் பெண் கொசுதான் மனிதனை கடிக்கும். அதற்க்கு முட்டையிடும் சக்திக்கு புரோட்டீன் கலந்த ரத்தம் தேவை. அதனால் மனிதன் வெளியிடும் மூச்சில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வைத்தே 50 அடி தூரத்தில் கண்டு பிடிக்கும்.நம் சருமத்தில் இருந்து வரும் 'லாக்டிக்' அமிலம் அதற்க்கு பரிச்சியம். அந்தா ரத்தம் அதற்க்கு ஒரு வாரம் தாங்கும். அதுபோல் 3 மடங்கு மூக்கு ஸ்ட்ராவால் ஜிவ்வும்.
உலகில் மொத்தம் 3000ம் வகை கொசுக்கள் உள்ளன்.


7. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாலில் CMC - யை ( Carboxy methyl cellulose )கெட்டியாக்குவதற்க்கும், நிலைப்படுத்துவதற்கும் சேர்க்கப்படும் பொருள்.


8. தங்க நகையை விட பிளாட்டினம் விலை அதிகம்.பிளாட்டினத்தை விட ரேடியம் தான் இன்னும் விலை அதிகம். ஒரு கிராம் 50,000 ரூபாய் கிட்ட விற்க்கிரது. ( இது 2004 வருடம் இடப்படது. )அப்போதே. பிளாட்டினம் மிகவும் உறுதியானது. பார்க்க சிம்புலானது.


9. தங்கத்தை விட பாம்பின் விஷம் விலை மதிப்பு அதிகறிக்க காரணம், பாம்பின் விஷத்தில் இருந்து எடுக்கப்படும் ஸீரம், பாம்பு கடிக்கு மாற்று மருந்து. அந்த விஷத்தில் இருந்து தயாரித்த ரிஸர்பின் போன்ற மருந்து ரத்த அழுத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஒரு துளி விஷம் தங்கத்தின் விலையை விட அதிகம் தான்.

நல்ல பாம்பின் விஷம் ந்யூரோபாக்ஸின் வகைப்பட்டது. கட்டு விரியானின் விஷத்தில் ஹீமோடாக்ஸின் உள்ளது. இது ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றுக்கு குணமாக்க உகந்தது.


10. ஜரோப்பாவின் மாமியார் என்று டென்மார்க் நாட்டை அழைப்பதுக்கு காரணம் டென்மார்க் நாடு ஜரோப்பிய ஒன்றியத்தில் மிக முக்கியமான நாடாக அதன் பொருளாதாரத்தைக் கட்டுப்பத்தவல்ல சாம்ராஜ்யமாக உருவெடுத்துக் கொண்டிருப்பதே.
( இவை ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் 2ம் பாகத்தில் 137ம் பக்கம்.)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "