...

"வாழ்க வளமுடன்"

23 மார்ச், 2011

மூச்சுப் பயிற்சி - நாடிசுத்தி : பாகம் - 10 :)

*


இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருப்பதற்கும், இந்த உலகத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தமது இயற்கைத்தன்மை வழுவாமல் இயங்கிக் கொண்டே இருப்பதற்கும், இந்தப் பூலோகத்திலே சகலவிதமான பலகோடி உயிரினங்களும் தோன்றியும், வாழ்ந்தும், மடிந்து கொண்டிருப்பதற்கும் ஆதாரமாக இருக்கின்ற சக்தி ஒன்று இருக்கின்றது. இந்தச் சக்தியைத்தான் பிராணசக்தி (Life Force) என்று கூறுகிறோம். மானுட தேகத்தின் இடையறாத இயக்கத்துக்கும் இதுவே காரணமாகிறது. இந்தப் பிராணசக்தி இரண்டு வகையான இயக்கங்களாக நமது உடம்பில் வினைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓன்று உள்ளிழுக்கும் இயக்கம், மற்றது வெளித்தள்ளும் இயக்கம். இவ்விரண்டு இயக்கங்களும் ஆங்கிலத்தில் Assimilation என்றும் Elimination என்றும் சொல்லப்படுகின்றன.

நமது சுவாசத்தை நெறிப்படுத்தி, நமக்கு நிறைந்த உயிர் வளியைக் கொடுத்து நமது பிராணனாகிய உயிரை வளப்படுத்துவதற்காகவும், நமது மூச்சுக் காற்றோடு தொடர்புடைய உள்ளிளுக்கும் மற்றும் வெளித்தள்ளும் இயக்கங்களை மேம்படுத்தி வைப்பதற்காகவும் மானுடர் எவருக்கும் ஏற்றவகையில் சில வகையான மூச்சுப்பயிற்சி முறைகளை நமது ஞானிகள் கண்டறிந்து போதித்தார்கள்.

இவை 1. நாடிசுத்தி 2. ஜிவசுத்தி 3. பிராணசுத்தி 4. பந்தனசுத்தி 5. கண்டசுத்தி 6. சோஹம்சுத்தி என்பனவாகும்.

இவை அனைத்தும் உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களை மேம்படுத்துவனவே என்பதை நாம் உணரவேண்டும். இந்த ஆறுவகை மூச்சுப் பயிற்சிகளும், பிராணாயாமம் என்ற அதி உன்னதமான உயிர்க்கலைக்கு அடிப்படைப் பயிற்சிகளாகும். இங்கே பிராணாயாமங்களைப் பற்றியோ, அவற்றின் அடிப்படை சுவாசப்பயிற்சிகளையோ நான் விபரிக்கவில்லை. என்றாலும் பொதுவான மனித உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு நாடிசுத்தி என்று மூச்சுப்பயிற்சியை மட்டும் விளக்கியிருக்கின்றேன்.

நாடிசுத்தி செய்யும் முறை:-

பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க நாசித்துளையை இடதுகைக் கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வெண்டும். வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும். நுரையீரல் காற்றால் நிறைந்ததும்இ இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும். இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும். இது ஒருசுற்று நாடிசத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.

பயன்கள்:-

சுவாசித்தல் என்ற காரியத்தில் காற்று மூக்குவழியாக உள்ளேபோய் அங்கே காற்றிலுள்ள பிராணவாயு எடுத்துக்கொள்ளப்பட்டுக் கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. இதைத்தான் சுவாசித்தல் என்று கூறுகிறோம்.

காற்று மூக்கு வழியாக உள்ளே நுரையீரலுக்குப் போய் மூக்கு வழியாக வெளியே வரவேண்டும். இவ்வளவு தானே, இதற்கு மூக்கிலே இரண்டு துவாரங்கள் எதற்காக இருக்கவேண்டும்? ஒரே துவாரமாக இருந்தால் போதாதா? போன்ற இப்படியான கேள்விகளை எடுத்துக் கொண்டு விஞ்ஞானம் இதுவரை இதற்கு விடை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. விஞ்ஞானம் இதனை விளங்கிக் கொள்ளாமலோ அல்லது விளக்கமளிக்காமலோ போனாலும் நமது ஞானிகள் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

*

இடை பிங்கலையும் சுவாசநடப்பும்:-

இடதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் இடைகலை, வலதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் பிங்கலை எனபப்படும். இடதுபக்க சுவாசம் உடலுக்கு சீதளத்தையும், வலதுபக்க சுவாசம் உடம்புக்கு உஷ்ணத்தையும் தருகின்றன. சாதாரணமாக நாம் நமது சுவாசத்தின் நடப்பைக் கவனித்தோமானால் யாருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பக்கமாகத்தான் சுவாசம் நடந்துகொண்டிருக்கும். அப்பொழுது மற்ற மூக்குத்துளை அடைத்துக் கொண்டிருக்கும். இன்னும் சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ஏற்கனவே சுவாசம் ஓடிக்கொண்டிருந்த பக்கம் அடைத்துக்கொண்டு மறுபக்கம் சுவாசம் மாறி நடப்பதை அறியலாம். எப்போதாவது ஒரு சமயம் சுவாசம் இரண்டு நாசித்துளைகள் வழியாகவும் தடை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும். இந்நிலை சுவாசம் ஏதோ ஒரு பக்கமாக மாறப்போகிறது என்பதன் அறிகுறியாகும். இவ்வாறு சுவாசம் ஒரு நாளில் சில தடவைகள் மாறிமாறி நடந்து நமது உடம்பின் உஷ்ண நிலையைச் சீராகவைத்துக்கொண்டு இருக்கிறது.

*

நுரையீரலும், சுவாசங்களும்:-

அறுபது கோடி காற்றறைகளால் ஆகி நூறு சதுரமீட்டர்கள் பரப்பளவையுடைய நுரையீரல்கள், சின்னச்சின்ன வாழைப்பூ வடிவத்தில் இரண்டுபக்க விலாஎலும்புகளுக்குள்ளே அமைந்து நமது சுவாசத்தை இரவும் பகலும் ஓயாது நடத்தி, நமது உடம்பிலுள்ள ஐயாயிரம் கோடி கலங்களுக்கும் பிராணவாயுவை விநியோகம் செய்துவருகிறது.

சாதாரணமாக நாம் சுவாசிக்கும் சுவாசங்களைக் கவனித்தால் இது சரியான சுவாசம் இல்லையென்பது விளங்கும். ஏதோ கொஞ்சம் காற்று உள்ளே போகிறது. உள்ளே வந்த காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரல்கள் அவசரம் அவசரமாக எடுத்துக்கொண்டு இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் கரியமில வாயுவை வெளிளேற்றுகின்றன. உள்ளே போகும் காற்றில் தூசும், வாகனங்களின் கரிப்புகையும், தூய்மையற்ற சுற்றுப்புறத்தின் மாசுகளும் மண்டிக்கிடக்கின்றன. இந்தக் காற்றையாவது நுரையீரல் நிரம்புமளவுக்கு சுவாசிக்கிறோமா என்றால் அதுவுமில்லை.

மனிதன் சுவாசிக்கின்ற ஒவ்வொரு சுவாசத்திலும் ஆழ்ந்து காற்றை இழுத்து நுரையீரல்களை நிரப்ப முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் நடைமுறையில் இல்லை. எப்போதாவது அபூர்வமாகப் பெருமூச்சு விட்டால் அப்போது ஓரளவு நமது நுரையீரல்கள் காற்றால் நிரம்புகின்றன. இந்த நடைமுறையினை நாம் அறிவோம்.

நாடிசுத்தி செய்கின்றபோது நன்கு ஆழ்ந்து காற்றை இழுத்து நரையீரல்களை நிரப்புவதால், நமது நுரையீரல்களிலுள்ள அறுபது கோடிக் காற்றறைகளும் விரிந்து காற்றால் நிறைகின்றன. இதுவரை காற்றில்லாமல் சுருங்கிக்கிடந்த நுரையீரல்களில் காற்றுப் புகுந்து, நிறைந்து அங்கே தேங்கிக்கிடந்த சளி, மாசு போன்றவற்றை வெளியேற்றுகிறது. பெருமளவில் கிடைத்த பிராணவாயு முழுமையாக இரத்தத்தில் கலக்கும் பொழுது இரத்த அணுக்களெல்லாம் புதிய உற்சாகம் பெறுகின்றன.

இதனால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது. நமது உடல் உறுப்புக்களிலேயே அதிகமான ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் பகுதி நமது மூளைதான். போதியளவு ஆக்சிஜன் இல்லாவிட்டால் மூளையின் கலங்கள் இறந்துபோய்விடும். இறந்துபோன மூளைக்கலங்களை உயிர்ப்பிக்க முடியாது. மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிட்டுவதால் நல்ல சிந்தனைத் தௌpவு உண்டாகும். மனக்கட்டுப்பாடு வரும். மொத்தத்தில் நாடிசுத்தியால் மனித உடம்பிலும், மனதிலும் மிகப்பெரிய வேதிவினையே நடைபெறகின்றது. மனிதன் தானாக உயர்கிறான். ஒரு சிறு மூச்சுப்பயிற்சி உயர்வான பயன்களைத் தந்து உதவுகிறது.

உயர்வான இந்தப்பயன்களோடு, மனித உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியமான தூக்கம்வரும். தலைவலி சளித்தொல்லைகள், காய்ச்சல் போன்ற உபாதைகள் வரமாட்டா. முகம் பொலிவு பெற்று விளங்கும். மூக்கில் சதை வளருதல்இ சைனஸ் போன்ற நாசித் தொல்லைகள் அகலுகின்றன. காசநோய் வராது. காசநோய்க் கிருமிகளை நாடிசுத்தியினால் கிடைக்கும் ஆக்சிஜன் உடனடியாகக் கொன்று அழிக்கும். ஆஸ்த்மா என்ற கொடிய நோயை அழிக்கின்ற அரக்கன் என்று நாடிசுத்தியைக் குறிப்பிடலாம். அவ்வளவு அற்புதமான பயிற்சி இது.

இந்த நாடிசுத்தி எச்சரிக்கை வேண்டாதது. எவருக்கும் ஏற்றது. குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை எவரும் செய்யலாம். செய்து பார்த்தால் இதன் பெருமை நமக்குப் புரியும். நமக்குள் நிகழுகின்ற உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களும் சீர்ப்படுகின்றன.
உள்ளிளுக்கும் இயக்கம் காரணமாக நமது உடம்புக்குள்ளே காற்று செல்கின்றது. இதயத்தினுள் இரத்தம் செல்லுகின்றது. நாம் உட்கொண்ட உணவு ஜீரணமாகி அதிலேயுள்ள சத்துக்கள் கிரகிக்கப்படுகின்றன. நாம் வலிமையோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

வெளித்தள்ளும் இயக்கத்தின் காரணமாக, உள்ளேபோன காற்று கரியமிலவாயுவாக வெளியே வருகிறது. இரத்தம் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது. எஞ்சிய கழிவுகள் திடநிலை, திரவநிலை, வாயுநிலை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இந்த இருவகை இயக்கங்களும் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும்இ நமது உடம்பிலும் சீராக வினைப்பட்டுக்கொணடு இருப்பதால்தான் இங்கே எல்லா உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களில் குழப்பங்கள் நேர்ந்தால் நாம் கருவிலேயே குன்றிப்போவோம். யோகாசனங்களாலும் நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியாலும் இந்த இருவகை இயக்கங்களும் ஒழுங்குபடுகின்றன.

பெண்கள் கருவுற்று இருக்கின்ற காலத்தில் யோகாசனங்களைச் செய்யக்கூடாது என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். முன்னரே ஆசனப்பழக்கமுள்ள பெண்களாக இருந்தால் நான்கு அல்லது ஐந்துமாத கர்ப்பகாலம்வரை தனக்குப் பழக்கமான ஆசனங்களைச் செய்துவரலாம். ஆதற்குமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியைப் பெண்கள் கர்ப்பகாலத்தில்கூட திடீரென்று ஆரம்பித்துச் செய்யலாம். கருவுற்ற பெண்ணுக்கு ஆசனப்பழக்கம் இல்லாதுபோனாலும், நாடிசுத்தியை ஆரம்பித்து பிரசவம் வரைக்கும் காலை மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம்.

இதனால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள்இ அங்கக் குறைபாடுள்ள குழந்தைகள் எல்லாம் தாயின் கருவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவ்வாறு பிறக்கின்றன. இவைகளையெல்லாம் நாடிசுத்தி சீர் செய்கின்றது. ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் அதற்கு மேலான தியானமும் எமது கைப்பழக்கத்திற்கு வந்துவிடுமானால் அப்போது இந்தப் பூலோகமே சுவர்க்கமாகிவிடும்.


தொகுப்பு:- பேரி.


*** முற்றும் ***



***
thanks sivasiva
***



"வாழ்க வளமுடன்"

ஓய்வாசனம் விளக்கமும் பயன்களும்: பாகம் - 9

*

பயன்கள்


யோகாசனங்களைச் செய்கின்றபோது ஜானுசீர்சாசனம் அதன்பின்னர் பச்சிமோஸ்தான் ஆசனம் என்று வரிசை மாறாமல்தான் செய்யவேண்டும். பயிற்சியாளர்கள் சீக்கிரம் யோகப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு அவசரமாகப் புறப்பட வேண்டியிருந்தால் அப்போது ஜானுசீர்சாசனத்தைச் செய்யாமல் பச்சிமோஸ்தான் ஆசனத்தை மட்டும் மூன்றுமுறை செய்துவிட்டுப் புறப்படலாம். ஆனால் ஜானுசீர்சாசனத்தை மட்டும் செய்துவிட்டுப் பச்சிமோஸ்தான் ஆசனத்தை ஒரு தடவையாவது செய்யாமல் விடக்கூடாது.

இரண்டு ஆசனங்களுக்கும் பொதுவான பயன்கள் ஒன்று தானென்றாலும் ஜானுசீர்சாசனத்தைச் செய்கின்றபோது உடம்பின் இடப் பக்கத்துக்கும், வலப்பக்கத்துக்கும் மாற்றி மாற்றிப் பயிற்சி கொடுக்கிறோம். அத்துடன் விட்டுவிட்டால் அது நிறைவளிக்க முடியாது. ஆகவே பச்சிமோஸ்தான் ஆசனத்தை அடுத்ததாகக் கட்டாயம் செய்தால்தான் வயிற்றின் உள்ளுறுப்புக்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியும், உள்ளுறுப்புக்களும் சமன்பாட்டுக்கு வரும்.

இவ்விரண்டு ஆசனங்களாலும் தொந்தி வேகமாகக் கரைகிறது. வயிற்றுத் தசைகள் வலிமை பெறுகின்றன. வயிறு, இடுப்பு, தொடைகள், கண்டக்கால்கள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தசைகள் திண்மை பெறுகின்றன. கால் நரம்புகளுக்கு வலிமை கிட்டுகிறது. தண்டுவடம் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறது. கணையம், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை ஆகிய உறுப்புக்கள் வளம்பெறுகின்றன.

மானுட தேகத்தில் கல்லீரல் ஒரு அற்புதமான உறுப்பு. அதிமுக்கியமாக நமது உடல்நலம் பேணிக் காக்கப்பட வேண்டுமானால், நமது உடம்பில் ஒவ்வொரு உறுப்பும் செம்மையாக இயங்கவேண்டும். அதிலும் கல்லீரலானது வளமாகவும் வலிமையாகவும் இருக்கவேண்டும். கல்லிரலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டால், நாம் அதைப் பேணிக்காக்க வேண்டியதன் அவசியத்தை நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

நமது உடம்பிலுள்ள உறுப்புக்களிலேயே கல்லீரலுக்கு மட்டும்தான் இரண்டு வழிகளில் இரத்தம் கிடைக்கிறது. மகாதமனியில் இருந்துவரும் கல்லீரல் தமனி, ஆக்சிஜன் சேர்ந்த இரத்தத்தைக் கல்லீரலுக்கு எடுத்துவருகிறது. குடல் பகுதியிலிருந்து ஊட்டச்சத்து மிகுந்த இரத்தம் போர்ட்டல் சிரைவழியாகக் கல்லீரலுக்கு வருகிறது. இப்படி வரும் இரத்தத்தைக் கல்லீரல் ஒரு நிமிடத்துக்கு ஏறத்தாழ ஒன்றரை லீட்டர் அளவுக்கு வடிகட்டி அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. அப்போது இரத்தத்திலுள்ள ஊட்டச் சத்துக்களில் உடம்பின் அன்றைய பணிக்கு வேண்டியதுபோக உபரியாக உள்ள ஊட்டச்சத்துக்களைத் தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்கிறது. எப்போதாவது நமது உடம்பில் ஏதேனும் ஒருவகை ஊட்டச்சத்துக் குறையுமானால், அப்போது கல்லீரல் தன்னகத்தே சேமித்து வைத்துள்ள ஊட்டச்சத்தைக் கொடுத்து ஈடுசெய்கிறது.

நமது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் ஆயட்காலம் ஏறக்குறைய 120 நாட்களாகும். அதுவரை அவை இரத்தத்தோடு சுழன்றுகொணடு இருக்கும். நாட்பட்ட, தளர்ந்த சிவப்பணுக்களை நமது வயிற்றிலுள்ள மண்ணீரல் சிதைத்து அழித்துவிடுகிறது. ஓவ்வொருநாளும் நமது உடம்புக்குள்ளே கோடிக்கணக்கில் சிவப்பணுக்கள் இறக்கின்றன. இந்த சிவப்பணுக்களிலே உள்ள ஹிமோகுளோபினைக் கல்லீரல் சிதைமாற்றம் செய்து பிலிரூபினாக மாற்றுகிறது. இந்தப் பிலிரூபின்தான் பித்தத்தக்கு நிறத்தைத் தருகிறது. கல்லீரல் பணியாற்றுகின்றபோது இதன் செல்கள் இயற்கையாகவே சேதமாகின்றன. இவ்வாறு சேதமடைகின்ற செல்களுக்குப் பதிலாகப் புதிய செல்களைக் கல்லீரலே படைத்துக்கொள்ளும் அபாரசக்தியைக் கல்லீரல் இயற்கையிலே பெற்றிருக்கிறது.

*

பித்தப்பை:-

கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கின்றன. ஒரு நாளைக்குச் சராசரியாக நமது தேவைக்கு ஏற்றபடி வேண்டியளவு பித்தநீரைக் கல்லீரலின் செல்கள் சுரக்கின்றன. பித்தநீர் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் பித்தநீரிலுள்ள நிறமியான பிலிரூபினின் அளவு அதிகரிக்கும். இந்த அளவானது இரட்டிப்பாகின்றபோது மஞ்சட்காமாலை வருகிறது. மஞ்சட்காமாலை வருவதற்குப் பலகாரணங்கள் இருந்தாலும் அதற்கான தலையாய காரணம் கல்லீரல் பலம் குன்றுவதேயாகும. மகோதரம் என்ற நோயின் காரணத்துக்கும் கல்லீரலே முக்கியமானதாகும். ஆகவே கல்லீரல், பித்தப்பை இரண்டும் அத்துடன் அவற்றின் இயக்கமும் சீராக இருக்கவேண்டியது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

*

கணையமும் சர்க்கரைநோயும்:-

இன்று உலகிலே ஏராளமானவர்கள் சர்க்கரை நோயினால் கஷ்டப்படுகிறார்கள். விஞ்ஞானமும், மருத்துவமும் எவ்வளவு வளர்ந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் இன்னமும் விடிவு பிறக்கவில்லை. இனீமேலாவது மருத்துவம் ஏதாவது ஒரு முறையைக் கண்டறிந்து சொல்லுமென்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஏனென்றால் சர்க்கரை நோயென்பது கணையம் என்ற சுரப்பி செய்ல் குன்றுவதால் வருகின்றது. எனவே இதற்கு யார்தான் என்னசெய்ய முடியும்.

நமது உணவுப் பொருட்களில் அவற்றின் இயற்கைத் தன்மைக்கு ஏற்பக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சர்க்கரை அடங்கியிருக்கிறது. உட்கொள்ளுகின்ற உணவு இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்குச் செல்லுகின்றபோது கணையம் கணையநீரைச் சுரந்து உணவிலுள்ள அமிலத்தன்மைகளை மாற்றுகிறது. கணையத்திசுக்கள்(லங்கர்காண்) இன்சுலின் என்னும் ஹார்மோனைச் சுரந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையை ஜீரணிக்கச் செய்கிறது. கணையம் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, சுரக்காதுபோனாலோ அதற்கேற்றபடி இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூடுகிறது. இந்தக் கூடுதல் சர்க்கரையைச் சிறுநீரகங்கள் பிரித்துச் சிறுநீர்மூலம் வெளியேற்றுகின்றன.

ஜானுசீர்சாசனம், பச்சிமோஸ்தான் ஆசனம் இரண்டும், பக்கத்துக்குப் பக்கமாகவும், நேர்படவும் பித்தப்பை, கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புக்களுக்குச் செயல் வேகத்தையும் ஆரோக்கியத்தையும் தருகின்றன. இதனால் கல்லீரல், பித்தப்பை சம்மந்தப்பட்ட நோய்களும் சர்க்கரை நோயும் அடியோடு அகலுகின்றன. சில சமயங்களில் பித்தப்பையில் பித்தக்கற்கள் உருவாவதுமுண்டு. பித்தக்கற்கள் சிலவோ, பலவோ அல்லது ஒரே கல்லாகவோ உருவாகும். இப்பித்தக்கற்களை இவ்விரண்டு ஆசனங்களும் இலகுவாகப் பிதுக்கிப் பித்தப்பையிலிருந்து வெளிளேற்றிச் சிறுகுடலுக்குள் தள்ளிவிடும். சிறுகுடல் அந்தக் கற்களை நகர்த்திக் கொண்டேபோய், மலக்குடலுக்குள் தள்ள, பித்தக்கல்லானது மலத்துடன் வெளியேறி விடுகிறது. எனவே ஆப்பரேசன் இல்லாமலே பித்தக்கற்களை வெளியேற்றுவதற்கு இவ்வாசனங்கள் எவ்வளவு துணைபுரிகின்றன என்பது புலனாகின்றது.

இதைப்போலவே சர்க்கரைநோய் சம்மந்தப்பட்ட வகையிலும் இவ்வாசனங்கள் செயலிழந்துபோன கணையத்தை இதமாகப் பிசைந்து, நல்ல இரத்த ஓட்டத்தைக்கொடுத்து மெல்லத்தட்டி எழுப்பி அதன் பணியான இன்சுலின் சுரப்பை அதற்கு நினைவுட்டிப் பணியாற்ற வைத்து சர்க்கரை வியாதியை அடியோடு போக்குகின்றன. அத்துடன் கணையத்துக்கு வரக்கூடிய கணையக்கட்டிகள், கணையப்புற்று, கணையஅழற்சி போன்ற இடர்களிலிருந்து கணையத்தைக் காப்பாற்றி நம்மையும் காப்பாற்றுகின்றன. பெண்களுக்கும் மேலே குறிப்பிட்ட எல்லாப் பலன்களும் கிட்டுவதோடு, பிரத்தியேகமாக அவர்களுக்கு அடிவயிற்றுச் சரிவையும், குடல் பிதுக்கத்தையும் தடுத்து உதவுகின்றன. கருப்பை, ஓவரி, ஓவரிக் குழாய்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகள் அகன்று மாதவிலக்கு சம்மந்தமான உபாதைகள் தவிர்க்கப்படுகின்றன. பெண்மலட்டுத் தன்மை அகலுகிறது. வெள்ளை வீழ்தல் என்று சொல்லப்படும் கொடிய நோய் அடியோடு அகலுகிறது.

இந்த ஆக்கத்தின் மூலமாக சர்க்கரை நோயை அடியோடு தொலைத்து, பூரண ஆரோக்கியத்தைத் தருகின்ற ஆசனங்களை விபரித்துள்ளேன். இதுவரை சொல்லப்பட்ட பன்னிரெண்டு ஆசனங்களையும் இனிச் சொல்லவிருக்கும் ஒரு ஆசனத்தையும் சேர்த்து பதின்மூன்று ஆசனங்களையும் ஒரு சர்க்கரை நோயாளி பயிலத் தொடங்கிவிட்டால் அவரது நோய் பூரணமாகக் குணமாகிவிடும் என்பது உறுதி. சர்க்கரைநோய் இல்லாதவர்கள் கூட இந்தப் பதின்மூன்று ஆசனங்களையும் செய்துவந்தால் இதுவரை கண்டறியாத ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் பெறுவார்கள்.

***

ஓய்வாசனம்:-

ஆசனப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுகின்ற இந்த ஆசனத்துக்கு ஓய்வாசனம் என்று பெயர் வந்தது. யோக சாஸ்திரத்தில் இந்த ஆசனம் சாந்தி ஆசனம் என்று சொல்லப்படுகிறது. சிலர் இதைச் சவாசனம் என்று கூறுவார்கள். சவம் என்றால் பிணம் என்று அர்த்தம். சவத்தைப்போல கைகால்களை அசைக்காமல் இருப்பதால் இதனை இப்பெயர் கொண்டு அழைக்கிறார்கள் போலும். சவம் என்ற சொல்லைப் பாவித்து அமங்கலமாக உபபோகிக்க வேண்டாம் என்று கருதியே ஓய்வாசனம் என்று குறிப்பிட்டிருக்கின்றேன்.

மனிதன் நோய்நொடி இல்லாமல் பூரண நலததோடும், பூரண ஆயுளோடும் வாழவேண்டும் என்பதற்காக இதுவரை யோகாசன விளக்கங்களை எழுதிவிட்டு, அவன் ஓய்வுகொண்டு சுறுசுறுப்போடு எழுந்திருக்கவேண்டிய இந்த ஆசனத்தை ஓய்வாசனம் என்றோ சாந்தியாசனம் என்றோ எழுதுவதுதான் பொருத்தமானது.

செய்முறை:-




யோகாசனங்களைச் செய்து முடித்துவிட்டு அப்படியே மல்லாந்து படுக்கவேண்டும். தலைக்கோ காலுக்கோ தலையணை எதுவும் வைத்துக்கொள்ளக் கூடாது. யோகாசனங்களைச் செய்த அதே விரிப்பில் மல்லாந்து படுத்துக் கண்களை மூடி உடம்பைத் தளர்வாக வைத்திருந்தால் போதும். சுவாசம் சௌகரியப்படி இயல்பான கதியில் இருக்கலாம். இந்த நிலையில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களோ, இன்னும் கொஞ்சம் கூடுதலாகவோ அவரவர் சௌகரியப்படி ஓய்வெடுத்துக் கொண்டு எழுந்து கொள்ளலாம்.

பயன்கள்:-

யோகாசனங்களைச் செய்கின்றபோது விரைவாக ஓடிய இரத்தம் இப்போது சுகமான ஆறுதலைப் பெறுகின்றது. பயிற்சியினால் வினைபட்ட உள்ளுறுப்புக்களும், வெளியுறுப்புக்களும் சாந்தி பெறுகின்றன. முக்கியமாக சுவாசமும் இதயத்துடிப்பும் சமப்படுகின்றன. இதயப்பிணிகள் உள்ளவர்களுக்கு இவ்வாசனம் நல்லதொரு மருந்தைப் போன்றதாகும் இதனால் இதயம் வளம்பெறுவதாகவும் இதயத்துடிப்பு சீர்படுவதாகவும் யோக சாஸ்திரம் கூறுகிறது. யோகாசனப் பயிற்சிக்குப் பின்னர் செய்யும் ஓய்வாசனத்தால் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் நலம்பெறுகின்றன.

***


"வாழ்க வளமுடன்"

உத்திஷ்ட பந்தாசனம் விளக்கம் பயன்களும்: பக்கம் - 8

*

உத்திஷ்ட பந்தாசனம்:-

செய்முறை:


மல்லாந்து படுத்துக்கொண்டு இரண்டு முழங்கால்களையும் சேர்த்து மடித்துப் பாதங்கள் இரண்டையும் இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது முடிந்தவரை இரண்டு கால்களையும் மேலே உயர்த்தி மூச்சு முழுவதையும் வெளியேற்றிவிட்டு முகத்தையும், முதுகையும் உயர்த்தி இரண்டு முழங்கால் முட்டிகளிலும் முகத்தைப் பொருத்த வேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் ஆசனநிலையிலிருந்து கலைந்து இளைப்பாறிக் கொண்டு மீண்டும் இம்மாதிரியே செய்யவேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நான்குமுறை செய்தால் போதும்.

இவ்வாசனத்தை ஆரம்பத்தில் பழகுகின்றபோது கால்களை மேலே உயர்த்திப் பற்றிக்கொண்டு முகத்தை முழங்காலுக்குக் கொண்டுவர முடியாது. அவ்வாறு முயலுகின்றபோது பின்னால் சாய்ந்துவிட நேரும். மீண்டும் முயன்றாலும் முன்னும் பின்னுமாக கடல் அலையில் ஆடுகின்ற தோணியைப்போல ஆடவேண்டியிருக்கும்.

இதனால் இந்த ஆசனத்தைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று மனதில் தளர்வு தோன்றும். இதற்காகச் சோர்வடைய வேண்டாம். அவ்வாறு ஆடுவதும் முதுகெலும்புக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்துவிடும். ஆனாலும் ஆசனத்தைச் சரியாகச் செய்ய வேண்டுமல்லவா, அப்போது தானே திருப்தியாக இருக்கும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும்.

இதற்காக ஒரு சின்ன முயற்சி செய்தால்போதும். ஆசனம் சரியாகவும், மிகவும் சுலபமாகவும் வந்துவிடும். சுவரின் ஓரமாக அமர்ந்துகொண்டு பிருஷ்டத்தைச் சுவரிலிருந்து சுமார் ஒரு சாண் அளவு இடைவெளி கொடுத்து முன்னால் நகர்த்தி முதுகைச் சுவரில் சாய்த்துக்கொள்ள வேண்டும். இப்போது இரண்டு பாதங்களையும் இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு கால்களை மேலே உயர்த்தவும். படத்தில் காட்டியுள்ளதுபோல் முழங்கால்களை வசதிப்படி கொஞ்சமாக வளைத்துக்கொண்டு மூச்சை வெளியேற்றி விட்டு முகத்தை முழங்கால்களில் பொருத்திவிடலாம். இதனால் பின்னால் சாய்ந்துவிடமாட்டோம். அப்படிச் சாய்ந்தாலும் சுவரில்தான் சாய்வோம். இப்போ ஆசனம் சரியாக வந்தவிடும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். கால்களை நீட்டிக் கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டு மறுபடியும் செய்யலாம். இப்படி இவ்வாசனத்தை மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம். பழகப்பழகச் சுவரின் ஆதரவு இல்லாமலே ஆசனம் சரியாகச் செய்ய வந்துவிடும். இப்படியும் இவ்வாசனத்தைச் செய்வது சிலருக்குக் கடினமாகவோ அசௌகரியமாகவோ இருக்கலாம். அவர்கள் இன்னொரு முயற்சியைச் செய்துபார்க்கலாம். இந்த முயற்சி உத்திஷ்ட பந்தாசனத்தை இன்னும் எளிமையாக்கும்.

செய்முறை:-

மல்லாந்து படுத்துக்கொண்டு இரண்டு முழங்கால்களையும் மடித்துப் பாதங்களை இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது வசதிப்படி கால்களை உயர்த்தி எளிமையாகச் செய்யும் அளவுக்கு முழங்கால்களை வளைத்துக்கொண்டு மூச்சை வெளியேற்றிவிட்டு முகத்தை இரண்டு முழங்கால் முட்டிகளிலும் பொருத்தவேண்டும். இந்த நிலையில் பத்துநொடிகள் இருந்தால்போதும். பின்னர் கால்களை நீட்டி இளைப்பாறிக்கொண்டு மறுபடியம் இம்மாதிரியே செய்யலாம்.




இப்படி நான்கு அல்லது ஐந்துமுறை செய்தால்போதும். இவ்வாசனம் செய்வதற்குச் சுலபமாக இருக்கும். இவ்வாசன நிலையில் கால்களை நெட்டுக்குத்தாக உயர்த்த உயர்த்தக் கடினம்இ கால்களை மடித்துத் தாழ்த்தத் தாழ்த்த எளிமை. இதுதான் இதிலுள்ள நுணுக்கம். உத்திஷ்ட ஆசனத்தைப் பயிலும் உங்களுக்கு இந்த இரண்டு செய்முறைகளும் நன்கு விளங்கும். இந்த இரண்டு முறைகளின் பயன்களும் ஒன்றுதான்.
***

உத்திஷ்ட ஆசனங்களின் பயன்கள்:-

இவ்வாசனத் தொகுப்பு பிரம்மாஸ்திரம் என்று கருதப்படுகிறது. ஆகவே இவை ஐந்து ஆசனங்களின் பயன்களும் பிரமிக்க வைக்கத்தக்கனவாகும். இவற்றால் கால்கள், பாதங்கள், கைகள் ஆகியவற்றின் எலும்புகள், முதுகெலும்பு, முதுகறை எலும்புகள், விலாஎலும்புகள் என்று சகலவிதமான எலும்புகளும் வலிமைபெறுகின்றன. எலும்பு மஜ்ஜை வளம்பெறுகிறது. ஊடம்பிலுள்ள எல்லாத்தசைகளும் இறுக்கமும் திண்மையும் பெறுகின்றன. எனவே உடம்பிலுள்ள ஊளைச்சதைகள் கரைந்து அகலுகின்றன. முக்கியமாக வயிற்றிலுள்ள உள்ளுறுப்புக்களைக் காக்கும் வேதாளம் என்று இவை யோகசாஸ்திரத்தால் போற்றப்படுகின்றன.

பருத்துப் புடைத்திருக்ககும் வயிற்றுத் தொந்தியைக் கரைக்கிறது. வயிறு சம்பந்தமான மகோதரம் என்ற நோய்க்கு இவ்வாசனம் அருமருந்து போன்றது. கல்லீரல, மண்ணீரல், கணையம், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை, கருப்பை, ஓவரி ஆகிய அனைத்து வயிற்று உள்ளுறுப்புக்களும் வலிமையும்இ செயலாக்கமும் சுறுசுறுப்பும் பெறுகின்றன. இவ்வாசனத் தொகுப்பால் சிறுநீரகங்கள் சம்மந்தமான எல்லா நோய்களையும் தகர்த்துவிடலாம். செயலிழந்துபோன சிறுநீரகங்களைச் செயற்படவைக்கலாம்.

கணையம் செயலிழந்து போவதாலோ, செயல் குன்றுவதாலோ நமக்கு இன்குலின் ஹார்மோன் கிடைக்காமல் சர்க்கரைநோய் வருகிறது. ஒரு மாதகாலப் பயிற்சியிலேயே இந்தச் சர்க்கரைநோயை இருந்த இடம் தெரியாமல் அடித்துவிரட்டிவிட இவற்றால்முடியும். இவ்வாசனங்கள் நேரிடையாகக் கணையத்தில் இயங்கிக் கணையத்தைத் தூண்டுகின்றன. சிறுநீரகத்தில் உருவாகியுள்ள கற்களை உடைத்து இலகுவாக வெளியேறச் செய்கின்றன. கல்லீரல் உபாதைகளைப் போக்குகின்றன. மஞ்சட்காமாலை நோய்க்கு இவ்வாசனங்கள் அற்புதமான நிவாரணியாகும். கணையம், கல்லீரல், சீறுநீரகங்கள் போன்றவற்றில் இவற்றின் இயக்கம் அபாரமானாது.

இவ்வாசனங்களை நாள்தோறும் பயின்றுவந்தால் எந்தவிதமான நோய்களும் வரமாட்டா. மலச்சிக்கலை அடியோடு குணப்படுத்துவதில் இந்த ஆசனத்தொகுப்பு தலையாய இடத்தை வகிக்கிறது. ஓய்வில்லாமல் பணிபுரிந்து கொண்டேயிருக்கும் நமது வயிற்றின் உள்ளுறுப்புக்கள், இப்பயிற்சிகளினால் களைப்பைப் போக்கிக்கொண்டு சுறுசுறுப்படைந்து ஒவ்வொரு நாளும் தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்ளுகின்றன.
*

ஒரு வேண்டுகோள்:-

உத்திஷ்ட ஆசனங்களைத் தொடங்குவதற்கு முன்னால் உத்திதபாதாசனத்தை நான்குமுறை செய்கிறோமல்லவா? அதைப்போலவே உத்திஷ்ட ஆசனங்களைச் செய்துமுடித்த பின்னரும் நான்குமுறை உத்திதபாதாசனத்தைச் செய்யவேண்டும். சரியான ஆசனப்பயிற்சி இல்லாதவர்கள் எடுத்த எடுப்பிலே இவ்வாசனங்களைப் பயிலவேண்டாமென்று மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன்.

சர்க்கரைநோய் என்ற பெரும் துன்பத்திலிருந்து இனி பூரணவிடுதலை கிட்டிவிட்டது. எல்லோரையும ;போல வாயாரச் சாப்பிடலாம். சர்க்கரை, இனிப்பு, பழங்கள் இவற்றையெல்லாம் பார்த்து அஞ்சவோ ஏங்கவோ தேவையில்லை. என்றாலும் இவ்வாசனத்துக்கு உபசாந்தமாக இன்னும் இரண்டு ஆசனங்களையும் சேர்த்து விவரிப்பது நிறைவளிப்தாக இருக்கும்.

இந்த இடத்தில் வாசகர்கள் நலம் கருதி சிலவிடயங்களைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உத்தித பாதாசனத்துக்குப் பின்னால் விவரிக்கப்பட்டுள்ள உத்திஷ்ட ஆசனங்கள் பயிலுவதற்குச் சிரமமாக இருக்குமென்று நீங்கள் கருதினாலோ அல்லது இவ்வாசனங்களுக்காகத் தரப்பட்டுள்ள எச்சரிக்கைகளைப் படித்து உத்திஷ்ட ஆசனங்களைச் செய்வதற்குத் தயங்கினாலோ, நீங்கள் உத்தித பாதாசனத்தைச் செய்துவிட்டு உத்திஷ்ட ஆசனங்களை அடியோடு விட்டுவிட்டு, அப்படியே இனி அடுத்துச் சொல்ல விருக்கின்ற ஜானுசீர்சாசனம், பச்சிமோஸ்தான்ஆசனம், ஓய்வாசனம் ஆகிய மூன்று ஆசனங்களையும் உத்தித பாதாசனத்துக்குப்பின் சேர்த்துக்கொண்டு செய்யலாம்.

இடையில் உத்திஷ்ட ஆசனங்களைச் செய்யாமல் விட்டுவிட்டோமே இதனால் நோய் சீக்கிரம் குணமாகுமா ஆகாதா என்ற ஐயமோ, கவலையோ உங்களுக்கு வேண்டாம். சர்க்கரைநோயை முற்றாகக் குணப்படுத்த இந்த மூன்று ஆசனங்களே போதுமானவை. உங்கள் உடல்நலம் தேறி உங்களுக்கு சுயநம்பிக்கையும்இ உடலில் தெம்பும் வருகின்றபோது, இனி உத்திஷ்ட ஆசனங்களைச் செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணம் மேலிடுகின்றபோது, நீங்கள் விரும்பினால் உத்திஷ்ட ஆசனங்களை உத்தித பாதாசனத்துக்குப் பின்னால் நம்பிக்கையோடு சேர்த்துப் பயிற்சி செய்யலாம். அதனால் உங்கள் உடல்நலம் மேலும் உறுதிபெறும்.
***

ஜானுசீர்சாசனம்:-

ஜானு என்றால் முழங்கால் முட்டி என்று பொருள். சிரசு என்றால் தலை. முழங்கால் முட்டியோடு தலையைப் பொருத்தி இந்த ஆசனத்தைச் செய்வதால் இதற்க ஜானுசீர்சாசனம் என்று பெயரிட்டார்கள்.

செய்முறை:-

படிய உட்கார்ந்துகொண்டு படத்தில் காட்டியபடி இடதுகாலை நீட்டி வலது காலை மடித்து தொடையோடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு உள்ளே இழுத்து மூச்சு முழுவதையும் வெளியேற்றிவிட வேண்டும். வயிற்றைக் கொஞ்சம் உள்ளே எக்கிக்கொண்டு இரண்டு கைகளையும் நீட்டி இடது பாதத்தைப் பற்றிக்கொண்டு, அப்படியே படியக் குனிந்து நெற்றியை முழங்கால் முட்டியோடு பொருத்தவேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் நிமிர்ந்து சற்று இளைப்பாறிக்கொண்டு வலதுகாலை நீட்டி இடது பாதத்தை வலது தொடையோடு சேர்த்து வைத்துக்கொண்டு முன்பு செய்ததைப்போலவே செய்யவேண்டும்.



இப்போது ஒரு சுற்று ஜானுசீர்சாசனம் செய்ததாக ஆகிவிடுகிறது. இவ்வாறு கால்களை மாற்றிமாற்றி மூன்று அல்லது நான்கு சுற்றுக்கள் செய்தால் போதும். ஒரே காலை நீட்டி மூன்று முறையும்இ பின்னர் மற்றக்காலை நீட்டி மூன்றுமுறையும் செய்யக்கூடாது. கால்களை மாற்றிமாற்றித் தான் செய்யவேண்டும். கருவுற்ற பெண்கள் இவ்வாசனத்தைச் செய்யவேண்டாம்.

பயன்கள்:-

இவ்வாசனத்தால் இடுப்பு வலிமை பெறுபிறது. கால்களிலுள்ள இடை, பிங்கலை நரம்புகள் வலிமை பெறகின்றன. கால்களில் உண்டாகும் வலிகள்இ இடுப்புவலி போன்றவை அகலுகின்றன. வயிற்றிலுள்ள தசைகள் இறுகித் திண்மை பெறுகின்றன. வயிற்றின் உள்ளுறுப்புக்கள் சுறுசுறுப்படைந்து சீரான இயக்கத்துக்கு வருகின்றன. மலச்சிக்கல் அகலுகிறது.

இடதுகாலை நீட்டிச் செய்கின்றபோது, வயிற்றின் இடது பக்கத்திலுள்ள கணையம் நல்ல பயிற்சிபெற்று இயங்குவதால் சர்க்கரைநோய் அடியோடு அகலுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வாசனம் அற்புதமான பயன்தரக்கூடியது. இதற்கு முன்னால் விபரிக்கப்பட்ட உத்திஷ்ட உபாங்கபாதாசனம், உத்திஷ்ட பாதாசனம் ஆகிய ஆசனங்களின் பயனை விபரித்தபோதும் கணையம் என்ற சுரப்பியின் இயக்கத்தை விபரித்திருக்கிறேன்.

வலது காலை நீட்டிச்செய்கின்றபோது கல்லீரல் பித்தப்பை ஆகியவை வளம்பெறுகின்றன. இதனால் உடம்பின் ஆரோக்கியம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாசனத்தோடு இதற்கடுத்து பச்சிமோஸ்தானாசனம் என்ற ஆசனத்தையும் சேர்த்துச் செய்யவேண்டுமாதலால் அதைப்பற்றியும் இங்கே விபரித்துவிட்டு இரண்டு ஆசனங்களுக்குமான பயன்களைப் பார்க்கலாம்.
***

பச்சிமோஸ்தான் ஆசனம்:-

இரண்டு கால்ளையம் நன்கு நீட்டி உட்காரவேண்டும். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தியபடி மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுக்கவேண்டும். இழுத்த காற்று முழுவதையும் வெளியேற்றிவிட்டு, வயிற்றைக் கொஞ்சமாக உள்ளே எக்கிக்கொண்டு இரண்டு கைகளையும் நீட்டி இரண்டு பாதங்களையும் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது அப்படியே முன்னால் குனிந்து நெற்றியை முழங்கால் முட்டிகளில் பொருத்த வேண்டும். இந்நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் நிமிர்ந்து மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ளலாம். சற்று இளைப்பாறிய பின்னர் மேலும் மூன்றுமுறை இவ்வாசனத்தைச் செய்யலாம்.





நான்கு அல்லது ஐந்து முறைகள் இவ்வாசனத்தைச் செய்தால்போதும். சர்க்கரை நோயாளிகள் மற்றும கல்லீரல் தொல்லைகள், மலச்சிக்கல் பிரச்சினைகள் உள்ளவர்கள் பயிற்சி நன்றாகக் கைவந்த பின்னர் மேலும் இரண்டு தடவைகள் இதைக் கூடுதலாகச் செய்தால் போதும். கருவுற்ற பெண்கள் இதைச் செய்யக்கூடாது.

சிலருக்கு இவ்வாசனத்தைச் சரியாகச் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். அவர்கள் சிரமத்தைத் தாங்கிக்கொண்டு உடம்பை வருத்தி இதைச்செய்ய வெண்டாம். அவர்களால் முடிந்தவரை முயற்சி செய்தால் போதும். கீழேதரப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.



இந்த அளவுக்கு கைகளை நீட்டிக் கால் பாதங்களைத் தொட்டாலோ அல்லது தொட முயன்றாலோ அதுகூடப் போதுமானதாகும். புழகப்பழக உடல் இசைந்து வளைந்து ஆசனநிலை சரியாக வந்துவிடும்.

சிலருக்குக் கால்களை எட்டிப் பிடிக்கவே வராது. அப்போதெல்லாம் கை கொஞ்சம் குட்டை, அதனால் தான் கால் எட்டவில்லை என்று கூறுவார்கள். இதெல்லாம் சமாளிப்புக்காகச் சொல்லப்படும் கதைகளாகும். முதுகெலும்பு வளைந்து கொடுக்காமையும், வயிறு தொந்திவிழுந்து பருத்து இருப்பதுமே இதன் சரியான காரணங்களாகும். எப்படியிருந்தாலும் தங்களால் முடிந்தவரை இவ்வாசனங்களைச் செய்தால் அதற்கேற்ற பலன்கிட்டும். நாளடைவில் வயிறு, தொந்தி கரைந்து முதுகெலும்பும் இசைந்துகொடுக்க ஆரம்பித்து விட்டால் எல்லாம் சரியாக வந்துவிடும்.

***

"வாழ்க வளமுடன்"

உத்திஷ்ட உபாங்கபாதாசனம் விக்கமும் பயன்களும்: பாகம் - 7

*
உத்திஷ்ட உபாங்கபாதாசனம்

செய்முறை:-




மல்லாந்து படுத்துக்கொண்டு இடது காலை நன்றாக மேலே உயர்த்த வேண்டும். வலது கால் தரையில் நீட்டியபடி இருக்க வேண்டும். உயர்த்திய இடது காலைக் கொஞ்சம் வளைத்துஇ உயர்த்திய இடதுகாலின் பாதத்தை இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றிவிட்டு, முகத்தையும் இடுப்பையும் நிமிர்த்தி நெற்றியை இடது முழங்கால் முட்டியில் பொருத்தவேண்டும. இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் ஆசனத்தைக் கலைத்துவிட்டு மல்லாந்து படுத்தபடியே சற்று இளைப்பாறிக் கொள்ளவேண்டும்.

இப்போது இடது காலை நீட்டியபடி வலது காலை உயர்த்தி இம்மாதிரிப்பத்து நொடிகள் ஆசனநிலையில் இருக்கவேண்டும். ஒருமுறை இடது காலும் ஒருமுறை வலது காலுமாக இவ்வாறு செய்வது ஒரு சுற்று உத்திஷ்ட உபாங்கபாதாசனம் செய்ததாகும். இப்படி மூன்று சுற்றுக்கள் செய்தால் போதும். மலச்சிக்கல்இ கல்லீரல் தொல்லைகள், சிறுநீரகக் கோளாறுகள், சர்க்கரைநோய், நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகள் உள்ளவர்கள், பயிற்சி நன்கு கைவந்த பின்னர் கூடுதலாக இன்னுமொரு சுறு;று செய்தாலே மேலே குறிப்பிட்டுள்ள எல்லா உபாதைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

*


எச்சரிக்கை:-

இரத்த அழுத்தமுள்ளவர்கள், இதயக்கோளாறுகள் இருப்பவர்கள், கருவுற்ற பெண்கள், வயிற்றில் பெரிய ஆப்பரேசன் செய்துகொண்டு மூன்று அல்லது நான்கு மாதகாலமாவது ஆகாதவர்கள் இவ்வாசனத்தையோ, இதைத் தொடர்ந்துவரும் உத்திஷ்ட ஆசனங்களையோ செய்ய வேண்டாம். அத்துடன் உத்திஷ்ட ஆசனங்களைப் பயிலுவதற்கு முன்னால் இவ்வாசனங்களுக்கு முன் அறிமுகம் செய்து எழுதப்பட்ட பத்மாசனம், வஜ்ராசனம், ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா, சர்ப்பாசனம், சலபாசனம், உத்திதபாதாசனம் ஆகியவற்றைக் குறைந்த பட்சம் ஒருமாத காலமாவது செய்து பழகாதவர்களும் இந்து உத்திஷ்ட ஆசனத்தொகுப்பைப் பயில வேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்ளுகின்றேன். இந்த எச்சரிக்கையை இதற்கு முன்னாலும் எழுதியுள்ளேன். வாசகர்கள் தங்களின் நீடித்த நலம்கருதி இதைக் கவனத்தில் கொள்ளவேண்டுகின்றேன்.

***


உத்திஷ்ட உபாங்கபந்தாசனம்

உத்திஷ்ட ஜானுபந்தாசனம் என்பது இதன் சரியான பெயராகும். சுருக்கமாக உத்திஷ்ட உபாங்கபந்தாசனம் என்று சொல்வது வழக்கம்.


செய்முறை:-

முதலில் மல்லாந்து படுக்க வேண்டும். பின்னர் இரண்டு கால்களையும் மேலே தூக்கி வளைத்து இரண்டு பாதங்களையும் இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு வெளியேற்றிவிட்டு, முழங்கால் முட்டிகள் இரண்டையும் முகத்துக்கு அருகே கொண்டுவர வேண்டும். முகத்தை முழங்கால்களைத் தொடுவதுபோல் முன் நோக்கி வளைத்துத் தாழ்த்த வேண்டும். இந்நிலையில் முழங்கால்கள் இரண்டும், இரண்டு அக்குள்களுக்கு வந்து பொருந்தும். கால்கள் தலைக்குமேல் நீட்டிக்கொண்டு இருக்கும். முகம் இரண்டு முழங்கால்களுக்கும் இடையே இருக்கும். இதுதான் இவ்வாசனத்தின் நிலையாகும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் ஆசனத்தைக் கலைத்துவிட்டு மல்லாந்து படுத்துபடியே சற்று இளைப்பாறிவிட்டு, மீண்டும் இரண்டு அல்லது மூன்றுமுறை இவ்வாசனத்தைச் செய்தால் போதும். இதற்குமேல் வேண்டாம். இவ்வாசனம் உத்திஷ்ட உபாங்கபாதாசனத்தின் விளைவுகளைச் சமப்படுத்துகிறது. அதன் பலன்களை அதிகரித்துத்தருகிறது.

***

உத்திஷ்ட பாதாசனம்:-

செய்முறை:-

மல்லாந்து படுக்கவேண்டும். மெல்ல நிமிர்ந்து படத்தில் காட்டியுள்ளது போல வலது முழங்கையை மடித்து இடுப்புக்குப் பின்னால் ஊன்றிக்கொள்ள வேண்டும். அல்லது இடுப்பை ஒட்டிப் பக்கவாட்டிலும் நெட்டுக்குத்தாகக் கையை ஊன்றிக் கொள்ளலாம். வலது காலைத் தரையில் நீட்டிக்கொண்டு இடது காலைத் தூக்கிக் கொஞ்சம் வளைத்து இடது கையால் இடது பாதத்தின் விரல்களைப் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றிவிட்டு முகத்தைத் தாழ்த்தி இடது முழங்கால் முட்டியில் நெற்றியைப் பொருத்த வேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும்.

கொஞ்சம் இளைப்பாறிய பின்னர், மீண்டும் மெதுவாக இடுப்புவரை உடம்பை உயர்த்தி எழுந்திருக்க வேண்டும். இப்போது இடதுகையை மடித்து ஊன்றிக்கொண்டு இடது காலைத் தரையில் நீட்டிக்கொள்ள வேண்டும். வலது காலை உயர்த்திப் பாதத்தின் விரல்களை வலது கையால் பற்றிக்கொள்ள வேண்டும். மூச்சை வெளியேற்றிவிட்டு முகத்தை வலது முழங்கால் முட்டியயில் பொருத்தவேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தபின் ஆசனத்திலிருந்து கலைந்து இளைப்பாறிக் கொள்ளலாம். இப்படி இடதுகால் ஒருமுறையும், வலது கால் ஒருமுறையுமாகச் செய்வது ஒரு சுற்று உத்திஷ்ட பாதாசனம் செய்ததாகக் கொள்ளப்படும். இப்படி மூன்று அல்லது நான்கு சுற்றுக்கள் செய்தால்போதும்.

***

உத்திஷ்ட பிரதிபாதாசனம்:-

செய்முறை:

மல்லாந்து படுக்க வேண்டும். உத்திஷ்ட பாதாசனத்தைச் செய்தது போலவேதான் இதையும் செய்ய வேண்டும். ஆனால் இதிலிருந்து ஒரு சிறிய வித்தியாசத்தைப் பயிற்சியாளர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும். வலது கையை ஊன்றிக்கொண்டு இடதுகாலை உயர்த்தி இடது கையால் பற்றிக்கொண்டு முகத்தைப் பொருத்திச் செய்வதற்குப் பதிலாக, வலதுகாலை உயர்த்தி இடது கையால் பற்றிக்கொண்டு செய்கிறோம். பின்னர் இடது காலை உயர்த்தி வலது கையால் பற்றிக்கொண்டு செய்கிறோம். இதுதான் வித்தியாசம்.


மற்றப்படி மூச்சை வெளியேற்றுவதிலோ, பத்துநொடிகள் என்ற நேரக்கணக்கிலோ வித்தியாசமில்லை. இப்படிக் காலும் கையும் மாற்றிமாற்றி மூன்றுமுறைகள் இதைச்செய்தால் போதும். இதற்குமேல் வேண்டாம்.


***


"வாழ்க வளமுடன்"

உத்திதபாதாசனம் விளக்கமும் பயன்களும்: பாகம் - 6

*

மூவகைக் கழிவுகள்:- (இரண்டாம் பயன்)

இரண்டாவது பயனாக சலபாசனத்தில் கிட்டுகின்ற மாபெரும் பயன் நமது சிறுநீரகங்களைப் பற்றியதாகும். மானுடதேகத்தின் ஒட்டுமொத்மான நலனைக் காப்பதில் ஒவ்வொரு உறுப்பும் அயராது பணியாற்றி உழைத்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றுள் சிறுநீரகத்தின் பணியும்,அதன்பங்கும் தலையாய இடத்தை வகிக்கிறது. இரவும் பகலுமாக அற்புதமாக ஒரு ஆலையைப்போல் சிறுநீரகங்கள் இயங்கி வருகின்றன. நமது உடம்பிலுள்ள எல்லா உறுப்புக்களும் ஓய்வின்றி இயங்குவதன் காரணமாக நமது இரத்தத்திலும், குடலிலும் கழிவுகள் சேருகின்றன. இக்கழிவுகள் திடநிலைக் கழிவுகள், திரவநிலைக் கழிவுகள், வாயுநிலைக் கழிவுகள் என மூவகைக் கழிவுகளாக நமது உடம்பினின்றும் வெளியேறுகின்றன.

திடநிலைக் கழிவுகள் குதத்தின் வழியாகவும், திரவநிலைக் கழிவுகள் சிறுநீர்ப்புற வழியாகச் சிறுநீராகவும், தோல் வழியாக வியர்வையாகவும், வாயுநிலைக் கழிவுகள் மூக்கின் வழியே கரியமில வாயுவாகவும், குதத்தின் வழியே அபான வாயுவாகவும் வெளியேற்றப்படுகின்றன. இக்கழிவுகள் முறையாகவும் சீராகவும் வெளியேறாவிட்டால் நமது உடலின் ஆரோக்கியம் பாழாகிவிடும். இக்கழிவுகள் முறையாக வெளியேறுகின்ற போது நாம் அமைதி பெறுகிறோம்.

*

சிறுநீரகங்கள்:

நாம் உண்ணுகின்ற உணவு ஜீரணமாகி உணவிலுள்ள சாரங்கள் கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலக்கின்றன. இவ்வாறு இரத்தத்தோடு கலக்கின்ற போது இரத்தத்தில் நீரஇ உப்புஇ ய+ரியாஇ பலவகை அழுக்குகள்இ சர்கரைஇ அமிலங்கள், பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் இன்னும் பலவகைப் பொருட்கள் கலக்கின்றன. இந்தக்கலப்பான இரத்தம் சிறுநீகங்களுக்குச் செல்லுகின்றபோது சிறுநீரகங்கள் வேண்டாத பொருட்களையும், அதிகப்படியாக இருக்கின்ற நீரையும் வடிகட்டிப் பிரித்துச் சிறுநீராக்கி சிறுநீர்ப்பைக்கு அனுப்பி வைக்கின்றன.



இவைதவிர சிறுநீரில் சிலசமயம் வைட்டமின்களும், ஹார்மோன்களும் கல்லீரலால் மாற்றப்பட்டோ அல்லது மாற்றப்படாமலோ, நச்சுத்தன்மைகள் நீக்கப்பட்டோ நீக்கப்படாமலோ வெளியாவதுண்டு. சீறுநீரில் புரதங்கள் தொடர்ந்து அதிமாகக் காணப்பட்டால் அதை அல்புமினூரியா என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்வாறு சிறுநீரில் அல்புமின் அதிகமாக வெளிப்படுவது சிறுநீரக நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

சிறுநீரில் சர்க்கரை மிகுதியாகக் காணப்பட்டால் அது சரக்கரைநோயின் அறிகுறியாகும். இவ்வாறு ஜீரணத்தின்போது சரியான வேதிவினைக்கு உள்ளாகமலும், உள்ளாகித் தகுந்த மாற்றத்துக்கு உள்ளாகாமலும் இரத்தத்தோடு கலந்துவரும் பொருள்களை சிறுநீரகம் பிரித்து வெளியேற்றுகிறது.


பொதுவாகச் சிறுநீரை சோதித்துப் பாரப்பதன்மூலம் நமது உடம்பிலுள்ள பெருவாரியான குறைபாடுகளை மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். வேண்டாத பொருட்கள் பிரித்து அனுப்பப்படாமல் அவை நமது இரத்தத்தில் கூடுகின்றபோது நமது உடல்நலம் வெகுவாகப் பாதிககப்படுகிறது. உதாரணமாக இரத்தத்தில் பொட்டாசியத்தினுடைய அளவு கூடிவிட்டாலும் இதயம் நின்றுபோய் மரணம் சம்பவிக்கும். இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்துவிட்டாலும் கலங்கள் இயங்கமுடியாமல் போய்விடும். நீரின்அளவு இரத்தத்தில் குறைந்து விட்டால் கலங்கள் உலர்ந்து போய்விடும். இதேபோன்று அமிலங்கள் இரத்தத்தோடு கலந்து நிலைபெறுவதும் அபாயத்தைத் தரக்கூடியதாகும். இப்படியான தீமைகளைத் தரக்கூடியவைகள் நமது இரத்தத்தில் சேராமல் சிறநீரகங்கள் நம்மைக் காப்பாற்றுகின்றன.

*


இருவகை இடர்கள்:

இத்தகைய அற்புத உறுப்பான சிறுநீரகத்துக்கு இரண்டு வகையில் நோய்த் தாக்கங்கள் வருகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், சிறுநீரகக்காசம், சிறுநீரகக்கட்டிகள், சிறுநீரகப்புற்று ஆகியவை முதல்வகை இடர்களாகும். இரண்டாவது வகையில் சிறுநீரகத்துக்கு வருகின்ற இடர்பாடு சிறுநீரகத்தொற்று என்பதாகும். சிறுநீர் கழிக்கின்றபோது சிறுநீர் வெளியேறும் புறவழி மூலமாகக் கிருமிகள் உள்ளே புகுந்து சிறுநிரகங்களைப் பாதிக்கின்றன. இதனால் வலியோடு சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர்ப்பாதையில் எரிச்சல், சிறுநீர்ப் பாதையிலும் சிறுநீர்ப்பையிலும் கட்டிகள் உருவாதல், சிறுநீரகங்களிலும் சிறுநீர்க் குழாய்களிலும் ஒவ்வாமை (அலர்ஜிகள்) போன்றவை நேர்கின்றன. இவற்றில் ஓரிரண்டு காரணங்களால் வருகின்ற இடர்பாடுகள் தொடர்ந்து நீடித்து சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்வதுமுண்டு.

இரண்டு சிறுநீரகங்களில் ஏதேனும் ஒன்று செயலிழந்து போனாலும் ஒரு சிறுநீரகம் மட்டும் தனியாக எல்லாப் பணிகளையும் தடங்கல் இல்லாமல் செய்யும் திறமை கொண்டதாகும். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துபோனால் நமக்குப் பெரும்தீங்கு வருகிறது. அப்போது நவீனமுறையில் டயாலிசிஸ் செய்துகொள்வதும், மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக் கொள்வதும் அவசியமாகிறது.

*


சிறுநீரகக் கல்:-

இக்காலத்தில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி துயரப்படுபவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படடு சிறுநீரகக்கற்கள் அகற்றப்பட்டாலும் திரும்பவும் சிறுநீரகக்கற்கள் உருவாகிக் கொணடேயிருக்கும். ஆனால் யோகாசனங்கள் மூலமாக சிறநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுத்துவிடலாம். கற்கள் உருவாகி இருந்தாலும் ஆசனங்கள் மூலமாக அவற்றை வெளியே கொண்டு வந்துவிடலாம். இப்படி என் சொந்த அனுபவத்தில் சிலரை நலம்பெறச் செய்திருக்கிறேன்.


அத்துடன் செயலிழந்து போகும் தறுவாயிலுள்ள சிறுநீரகங்களை மீண்டும் செயல்படச் செய்துவிடலாம். சிறுநீரகங்கள் முற்றும் செயலிழந்துபோய், வாரத்துக்கு இரண்டு மூன்று டயாலிசிஸ் செய்துகொண்டுவரும் சிறுநீரக நோயாளிகளையும் டயாலிசிஸ் தேவைப்படாத அளவுக்கு ஆரோக்கியத்துக்கு மீட்டு வந்து விடலாம். சிறுநீரகங்களின் செயல்திறன், சிறுநீரக்கற்கள் போன்ற விடயங்களில் யோகாசனங்களின் வெற்றி நம்மை மலைக்க வைக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. அவற்றுள் முக்கியமான இடத்தை இந்தச் சலபாசனம் வகிக்கின்றது என்பது முக்கியமான விடயமாகும்.

*


இரண்டு ஹார்மோன்கள்:-

சிறு நீரகம் இரண்டுவகையான ஹார்மோன்களைச் சுரக்கிறது. ஒரு ஹார்மோனின் பெயர் எரித்ரோபொயட்டின் எனப்படும். நமது உடல் எலும்புகளுக்குள்ளே அமைந்திருக்கும் எலும்பு மச்சை என்ற பொருள் இரத்தத்துக்கு வேண்டிய சிவப்பு அணுக்களைப் படைக்கிறது. இந்தப் படைப்பாற்றலை சிறுநீரகம் சுரக்கும் எரித்ரோபொயட்டின் என்ற ஹார்மோன் தூண்டி ஊக்கப்படுத்துகிறது. சிறுநீரகம் சுரக்கும் மற்றொரு ஹார்மோன் ரெனின் என்பதாகும். இந்த ஹார்மோன் சிறுநீரில் உப்பு, நீர் இவற்றின் சமநிலையைப் பேணிக்காக்கிறது. சலபாசனத்தில் சிறுநீரகம் வளம்பெற்று இயங்கி நமது உடல் நலத்தைப் பாதுகாக்கிறது.

*


பெண்களும் சலபாசனமும் (மூன்றாம் பயன்)

பெண்ணின் கருப்பையைப் பேணிக் காப்பாற்றுவதில் சலபாசனம் ஓர் பெரும் துணைவன் என்று கூறலாம். இன்று நமது குடும்பத்திலுள்ள கன்னிப் பெண்களிடம் காணப்படும் துயரம், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி போன்ற இன்னோரன்ன துன்பங்களை சலபாசனம் மூலமாகத் தீர்த்துக்கொள்ளலாம்.


கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பை முன்பின்னாகவோ பக்கவாட்டிலோ சாய்ந்திருந்தால் இவ்வாறு மாதவிலக்கு நாட்களில் வயிற்றுவலி ஏற்படுமென்று யோகசாஸ்திரம் கூறுகிறது. கருப்பை, ஓவரி ஆகிய நுட்பமான உறுப்புக்களில் இந்த சலபாசனம் மென்மையாக இயங்கி மேற்சொன்ன குறைபாடுகளை அடியோடு தீர்த்துவைக்கிறது. இதனால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்றவலி அகன்று விடுகிறது. கருவுற்ற பெண்கள் தயவுசெய்து சலபாசனம் செய்ய வேண்டாம்.

***


உத்திதபாதாசனம்:-

உத்தி + இதம் + பாதம் + ஆசனம் என்று இது விரிவுபடும். உத்தி என்றால் தொப்புள், வயிறு என்று பொருள்படும். உத்தியாகிய தொப்புள் (உந்திக்கமலம்), வயிறு ஆகிய பகுதிகளுக்கு நலம் சேர்க்கின்ற ஆசனம் இது.

செய்முறை:-

படுக்கையில் மல்லாந்து படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் பக்கத்துக்கு ஒன்றாகக் கவிழ்த்து வைத்துக்கொண்டு மூச்சை உள்ளே இழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும் இப்போது இரண்டு கைகளையும் சேர்த்து மேலே தூக்கி 45 பாகை அளவில் நிறுத்த வேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் பொதும்.


பின்னர் மூச்சை மெதுவாக வெளியேற்றியபடியே கால்களை இறக்கித் தரையில் வைத்துக்கொள்ளலாம். கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டு பின்னர் மீண்டும் உத்திதபாதாசனம் செய்யவேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு முறைகள் இவ்வாசனத்தைச் செய்தால்போதும். இதற்குமேல் தேவையில்லை.

பயன்கள்:-

இவ்வாசனத்தில் நமது உந்திக்கமலம் சுறுசுறுப்படைகின்றது. வயிற்றிலுள்ள ஜீரண உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் ஜீரணம் துரிதப்படுகிறது. குடல் உறிஞ்சிகள் உணவிலுள்ள சாரத்தை சுத்தமாக உறிஞ்சிக் கொள்ளுகின்றன. இடைஇ பிங்கலை ஆகிய கால்நரம்புகள் வலிமை பெறுகின்றன. இடுப்பில் நளினமாக இயங்கி இடுப்பு வலியைப் போக்குகிறது. தொடைகள் கால்களிலுள்ள தொளதொளத்த தசைகள் கரைந்து வலிமை பெறுகின்றன. கால் பாதங்களிலுள்ள பித்தவெடிப்புக்கள் அகலுகின்றன. பாதங்களில் ஏற்படும் புண்களை இவ்வாசனம் அடியோடு களைகிறது. மூல நோயால் கஷ்டப்படுபவர்கள் இவ்வாசனத்தை ஆறுமுறை செய்தால் போதும். நோயின் கடுமை நீங்கிப் படிப்படியே பூரண நலம் கிடைக்கும்.

***

உந்திக்கமலம்:-

தொப்புளிலிருந்து மேலே இரண்டும், கீழே இரண்டுமாக நான்கு பிரதான இரத்தக் குழாய்கள் செல்வதாகவும், இவை பிரிந்து 700 இரத்தக குளாய்களாக விரிவடைவதாகவும் யோக நூல்கள் கூறுகின்றன. இவ்வாசனத்தைச் செய்கின்றபோது தொப்புளிலிருந்து இந்த 700 இரத்துக் குழாய்களுக்கும் சுகமான ஒரு அழுத்தம் பரவி இரத்த ஓட்டத்தத்தைத் துரிதப்படுத்தியும் சமநிலைக்குக் கொண்டுவந்தும் நமது உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் சமச்சீரான இரத்த ஓட்டம் கிடைக்கச் செய்கின்றது. வயிற்று இரைச்சல், அடிக்கடி பேதியாதல் போன்ற குடல் சம்பந்தமான குறைபாடுகளும் உத்திதபாதாசனம் செய்வதால் அகலுகின்றன.

இவ்வாசனம் பார்ப்பதற்கு மிக எளிமையானது. நல்ல உயர்வான பலன்களளைத் தரக்கூடியது. சும்மா ஏனோ தானோ என்று செய்யாமல் மெதுவாக இசைக்கு அசைவதுபோல நன்கு அனுபவித்து இவ்வாசனத்தைச் செய்யவேண்டும். அவ்வாறு செய்கின்றபோது உண்டாகும் சுகம் ரொம்ப அலாதியானதாக இருக்கும். சிலரால் பத்து நொடிகள்வரை இப்படிக் கால்களை வைத்திருக்க முடியாது. கால்கள் நடுங்கும், உடம்பு தடதடவென்று உதறும். அப்படிப்பட்டவர்கள் சகித்துக்கொண்டு இதைச் செய்யவேண்டியதில்லை. தங்களுக்குச் சிரமமில்லாத வகையில் ஐந்து அல்லது ஆறு நொடிநேரம் அளவுக்கு இருந்தாலும் போதும். பழக்கத்தில் சரியான காலஅளவைக் கொண்டுவந்துவிடலாம்.

இன்னும் சிலர் பழக்கத்தில்வர சுகமாக இருக்கிறது என்பதற்காக 15, 20 நொடிகள்வரை இவ்வாசனத்தில் கால்களை உயர்த்தி வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படியும் செய்யக்கூடாது. யோகாசனங்கள் சுகமாக இருக்கின்றன என்பதற்காக எந்த ஆசனத்தையும் பத்து நொடிகளுக்குமேல் நீடிக்கக்கூடாது. வேண்டுமானால் ஒன்றிரண்டு நொடிகள் மட்டும் கூட்டிக்கொள்ளலாம். அதற்குமேல் நேரத்தை அதிகரிக்கக்கூடாது. நான்கு முறை செய்வதை, ஐந்து அல்லது ஆறுமுறை செய்யலாமே தவிர பத்துநொடி நேரம் என்பதைப் பதினைந்து, இருபது நொடிகளென நீடிக்கக்கூடாது. தேவைப்பட்டால் நானே நேரத்தைக் கூட்டிச் சொல்லுவேன். அப்படிக் கூட்டிச்சொல்லியுள்ள ஆசனங்களில் மட்டும் கூடுதலான நேரம் இருக்கலாம். ஆகவே நான் குறிப்பிட்டுச் சொல்லுகின்ற கால அளவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். கருவுற்ற பெண்கள் யோகாசனங்களைச் செய்யக்கூடாது. ஆசனப்பயிற்சியுள்ள பெண்கள் கருவுற்றால் அவர்கள் இவ்வாசனத்தை நான்கு அல்லது ஐந்து மாதங்கள்வரை செய்யலாம்.
சிலருக்கு இரண்டு கால்களையும் சேர்;த்து உயர்த்தி இவ்வாசனத்தைச் செய்ய முடியாமலிருக்கும். அவர்கள் உத்திதபாதாசனத்தைச் செய்வது போலவே ஒவ்வொரு காலாக உயர்த்திப் படத்தில் காட்டியிருப்பது போலச்செய்யலாம். இதனை ஏகபாதஉத்தானாசனம் என்று கூறுவார்கள்.



சில நாட்கள் பயிற்சியின் பின்னர் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்திச் செய்யச் சுலபமாக வந்தவிடும். இரண்டுக்கும் பலன்கள் ஒன்றுதான். இருப்பினும் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்திச் செய்யும்போதுதான் இதன் முழுப்பயனையும் விரைவில் பெற்றுக்கொள்ளலாம்.

***

இதுவரை ஐந்து ஆசனங்களை அறிமுகம் செய்து எழுதியிருந்தேன். இனி இரண்டாவது கட்டத்துக்கு வருவோம். இந்த இரண்டாவது கட்டம்தான் சர்க்கரை நோய்க்கு ஒரு சரியான சாட்டை அடியாக இருக்கும். இந்தச் சாட்டைக்கு உத்திஷ்ட ஆசனங்கள் என்று பெயர். இவை

1) உத்திஷ்டபாதாசனம்

2) உத்திஷ்டபிரதிபாதாசனம்

3) உத்திஷ்டபந்தாசனம்

4) உத்திஷ்ட உபாங்கபாதாசனம்

5) உத்திஷ்டஉபாங்கபந்தாசனம்

என்று ஐந்து வகையாகப் பிரித்துப் பயிலப்படுகின்றன. இவ்வாசனங்களைப் பற்றிய செயல்முறை விவரிப்புக்களைத் தெரிந்து கொள்ளுவதற்கு முன்னால், இவ்வாசனங்களைப் பற்றிய எச்சரிக்கைகளைத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

மனித உடம்பில் இவற்றின் இயக்கம் அபூர்வமானது. வயிற்றிலும் வயிற்றின் உள்ளுறுப்புக்களிலும் மிகக் கடுமையாக இயங்கும் தன்மைகளைக் கொண்டவையாகவும், அஸ்திரங்களிலே பிரம்பாஸ்திரத்துக்கு ஒப்பானவையாகவும் இவை யோகசாஸ்திரத்தால் விமர்சிக்கப் படுகின்றன. சர்க்கரைநோய் என்ற அழிக்க முடியாத அரக்கனை அழித்து ஒழிக்கின்ற பிரம்மாஸ்திரம் தான் இந்த ஆசனங்கள். பொதுவாக இவை முரட்டு ஆசனங்களென்று கருதப்படுகின்றன. இவற்றை எடுத்த எடுப்பில் யாரும் பயிலக்கூடாது. இவ்வாசனங்களுக்கு முன்னால் சொல்லப்பட்ட ஐந்து ஆசனங்களையும் தினசரிப் பயிற்சி முறைக்குக் கொண்டுவராமல் இவற்றைப் பயிலவேண்டாம்;. சர்க்கரை நோய்க்கு பிரம்மாஸ்திரம் போன்றவையென்று சொல்லப்படுகிறதே என்று கருதி இவற்றை எடுத்த எடுப்பில் நீங்கள் பயிலத் தொடங்கக்கூடாது என்பதால் இந்த எச்சரிக்கையையும் எழுதவேண்டியுள்ளது. முதற்கட்டமாகச் சொல்லப்பட்ட ஐந்து ஆசனங்களையும் மட்டும் ஒருமாத காலமாவது காலை, மாலை இரண்டுவேளையும் பழகி உடம்பைத் தயார் செய்துகொண்ட பின்னர் இவ்வாசனங்களைப் பழகத் தொடங்குமாறு அன்போடு வேண்டிக் கொள்ளுகின்றேன். உங்கள் உடல்நலம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறுகின்றேன்.

யோகசாஸ்திரம் என்பது தேர்ந்து ஞானிகளால் அவர்களின் சொந்த அனுபவங்களோடு சீரியமுறையில் செப்பம் செய்யப்பட்ட ஒரு முறையான கல்வியாகும். இதன் படிகளும், மேல்நிலைப் பாடங்களும் மிகவும் முன்யோசனையோடு தயாரிக்கப்பட்ட கட்டுக்கோப்புக்களை உடையவையாகும். இதில் கடினமான ஆசனங்களென்று எவையுமில்லை. எல்லா ஆசனங்களும் மிகமிக எளிமையானவையே. பழகுவதற்கு மிக எளிமையாகக் கைவரக்கூடியவை. எளிமையாகப் பழகக் கூடியனவாக இருந்தாலும் சில ஆசனங்கள் கடினமான விளைவுகளைக் கொண்டவை. இம்மாதிரிக் கடினமான விளைவுகளைக் கொண்டதாகவோ, அல்லது பழகுவதற்குச் சிரமமானவைகளாகவோ உத்திஷ்ட ஆசனங்களைப்போல எவையேனும் சில ஆசனங்கள் இருக்கலாம். அவை பழகுவதற்குக் கடினமாக இருப்பதாக எண்ணி அவற்றை நாம் கைவிடக்கூடாது என்பதற்காக, அவற்றைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி மாறுதல் செய்து நமது யோகிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். யோகசாஸ்திர போதனையில் இருக்கும் எத்தனையோ சிறப்புக்களில் இது ஒரு தனிச்சிறப்பு.

இவை ஒருபக்கம் இருக்க என்னிடம் சர்க்கரை நோய்க்காக ஆசனங்கள் பயில வந்தவர்கள் யாருக்கும் இதுவரை இந்த உத்திஷ்ட ஆசனங்களைக் கற்பிக்காமலே, இவற்றைவிட இன்னும் எளிய ஆசனங்களைக் கொண்டே சர்க்கரைநோயை முற்றும் குணப்படுத்தியிருக்கின்றேன். இங்கே எளிய ஆசனங்களோடு உத்திஷ்ட ஆசனங்களையும் அறிமுகம் செய்திருப்பதால் நிச்சயமாக நீங்கள் நலம் பெறுவதில் எந்தத் தடையுமில்லை என்பது உறுதி.

பொதுவாக முரட்டு ஆசனங்கள் எனப்படுகின்ற உத்திஷ்ட ஆசனங்களிலே, உத்திஷ்டபாதாசனம், உத்திஷ்டபிரதிபாதாசனம், உத்திஷ்டபந்தாசனம் என்பவை கொஞ்சம் கடினமானவை. ஆகவே அதை இன்னும் கொஞ்கம் எளிமைப்படுத்தி உத்திஷ்டஉபாங்க பாதாசனமென்றும், உத்திஷ்டஉபாங்க பந்தாசனமென்றும் வகைசெய்து வைத்தார்கள். முதலில் இவ்வாசனத் தொகுப்பில் எளிமையை விளக்கிவிடுகிறேன். இதனால் இதனை அடுத்துவரும் கடினமாக வயிற்றின் உறுப்புக்களில் இயங்கி நலம்தரும் உத்திஷ்ட பாதாசனம், உத்திஷ்ட பந்தாசனம் ஆகியவை எளிமையாகிவிடும். அல்லது உத்திஷ்ட உபாங்கபாதாசனம், உத்திஷ்ட உபாங்கபந்தாசனம் ஆகிய இரண்டுமட்டுமே உங்களுக்கு நலம்தரப் போதுமானவையாகும


***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "