...

"வாழ்க வளமுடன்"

27 நவம்பர், 2010

சோற்றுக் கற்றாழை ( Aloevera ) மருத்துவ குணங்கள்

இது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை .




சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது


வேறு பெயர்கள்-

சோற்றுக் கற்றாழை,

கன்னி,

தாழை.

குமரி

*

தாவரப்பெயர்-

AloebarbadensisLinn,

Liliaceae,

Aloevera,

Aloeferox,

Aloeafricana,

Aloe,

spicata,

Aloe perji.



சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.

*

இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும்.


தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், ஏழு முறை கழுவுவது. அதை சுத்தி செய்யும் முறையாக சித்தர்களால் கூறப்படுகிறது .


சிறந்த மலச்சிக்கல் போக்கி.


ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும்.


கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது.


இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது.


அழகு சாதன பொருள்களின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.

*

சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.


எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.


தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.


இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.


முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.


ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.


இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.


கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.


நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.


உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.


வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.


மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.


மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.

சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை .அழகுதரும் மூலிகை .



***
by-திரு.அ.சுகுமாரன்
thanks இணையம்
***



"வாழ்க வளமுடன்"

அல்சர் நோய் குணப்படுத்தும் வழிமுறைகள் !

அசைவம்-கார உணவால் உருவாகும் அல்சர் நோய் குணப்படுத்தும் வழிமுறைகள்




வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-


இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

*

மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.


***

புண் எதனால் ஏற்படுகிறது?

புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

*

குடல் புண் வகைகள்:-

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

*

குடல்புண்:

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.


இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.


சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

***


நெஞ்சு எரிச்சல்:

சிலநேரங்களில் அமில நீரானது, வாëந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.


வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.


இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.


சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

***

ரத்தப் போக்கு:

சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.


இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.


ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.


இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

***


செய்ய வேண்டியவை:

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.


1. வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

*

2. மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

*

3. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

*

4. பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

*

5. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.

*

6. எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.


*

7. புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

***


நவீன சிகிச்சைகள்:

1. செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

*

2. வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

*

3. அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

*

4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

*

5. குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

*

6. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.


*

தொடர்புக்கு :

அல்சர் நோய இருப்போர் டாக்டர் வெங்கடேஷ் முனி கிருஷ்ணனை 9677000400 என்ற நம்பரிலும் 04442612803 என்ற நம்பரிலும் thodarpu கொள்ளலாம் .


***
by-டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்
thanks மாலைமலர்
***


"வாழ்க வளமுடன்"

உயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்:

வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர்.




இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

*

`இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள சென்னை கொலரக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-

*

`பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, எண்ணையில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ், ஐஸ் கிரீம் இதெல்லாம் நொறுக்குதீனி (ஜங்க்புட்) அயிட்டம் தான். இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடே இது தான். ஒவ்வொரு உணவும் இப்படித் தான் சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவது தான் நல்லது. மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும். சர்க்கரையும் அப்படித்தான்.

*

அமோனியா கலந்த பாக்கெட் உணவுகள்:

1. `ஜங்க் புட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்று நோயை வரவழைக்கக் கூடியது. இந்த மாதிரியான உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரை வைக்கணும். ஆனால், இதை எப்பவும் மெயின்டெயின் பண்ண முடியாது. இது போன்ற நேரங்களில் ஜங்க் புட்டில் நீர்க்குமிழிகள் உண்டாகும். இது உணவுப் பொருள் மீது படிந்து கெட்டித் தன்மையை ஏற்படுத்திவிடும்.

*

2. பட்டாணி பாக்கெட் வாங்கி ஆட்டிப் பார்த்தோம் என்றால் அது தனித்தனியாக ஆடும். ஆனால் நீர்க்குமிழி உண்டான பாக்கெட் அப்படி ஆடாமல் மொத்தமாக ஆடும். இது கெட்டுப் போன நிலையில் உள்ள பாக்கெட்.

*

3. அதே போல் புரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள் இந்த வண்ணங்களை ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் ரத்தத் திற்குக் கிடையாது. சிறு நீரகமும் இதை சுத்திகரிக்காது.

*

4. ஒரு பாக்கெட்டில் எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ அவ்வளவு குறைவான (100 கிராம்) அளவு தான் கலப்பார்கள். ஆனால், இதைச் சாப்பிடும் ஒரு குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடக் கூடாது.

*

5. ஆனால் இது பற்றி ஜங்க் புட் சாப்பிடுகிற யாருக்கும் தெரிவதே இல்லை. `வட இந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் எப்போது தயாரித்தது. அவை சுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது.


அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும் நறுக்கிய வெங்காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பார்கள். இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண் கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துல ஒருத்தர் தும்மினால் கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும் எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.



2. வெப்பநிலையில் மாறுதல்:

சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய நாகரிகத்தில் இருந்து வந்தவை தான். ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளின் தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபத்தவே கூடாது.

ஒன்றரை நிமிடத்தில் 150 டிகிரியில் சூடுபடுத்தும் போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம் உடலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட் பார்மேன்சன்' என்று சொல்லி உலக விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்கிறார்கள்.

*

வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி:

1. காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

*

2. பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.

*

3. ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.

*

4. இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

***


3. அசைவம்:

அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணையில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணை தடவி வறுத்து சாப்பிடலாம்.

*

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவை குடலை பதம் பார்க்கும். அவற்றை தவிர்ப்பது நல்லது. நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படுவது சர்வ நிச்சயம். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையென்றால் இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.


***

4. இதய நோய் ஆபத்து


ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும்.


இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம் என்கிறார் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.


*

தொடர்பு கொள்ளுங்கள:

டாக்டர் வெங்கடேஷ் போன் நம்பர் 9677000400 .
குடல் தொடர்பான எந்த சந்தேகம் இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள்

பதில் சொல்கிறேன்


***
by-டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்
thanks டாக்டர்
***




"வாழ்க வளமுடன்"

கோடை காலமும், குழந்தை பாரமரிப்பும்

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் குழந்தைகளை எவ்வகையான நோய்கள் பாதிக்கும்? அதில் இருந்து குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வது எப்படி? என்பது பற்றி இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன். படியுங்கள்! பயன்பெறுங்கள்!



கோடை வெயில் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?


குழந்தைகளின் வெப்பம் தாங்கும் தன்மை பெரியவர்களை விட குறைவு. குழந்தைகளின் வியர்வை சுரக்கும் தன்மையும் குறைவு. குழந்தைகளின் உடம்பு பரப்பளவு அதிகமாதலால் அதிகமான வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. மேற் சொன்ன காரணங்களால் கடுமையான வெயிலால் பல பாதிப்புகள் ஏற்படலாம்.

*

1. வெப்பத்தினால் கெண்டைக்கால் இழுத்துப் பிடித்தல் இதற்கு உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ். திரவம்) மெதுவாக காலை நீட்டி மடக்குதல் முதலுதவி சிகிச்சை ஆகும்.

*

2. வெப்பத்தால் மயக்கம், தலை சுற்றல் - நீண்ட நேர பயிற்சியால் இது ஏற்படலாம். இதற்கு நீராகாரம் குடித்தல், குளிர்ச்சியான சுற்றுச்சூழலில் படுக்க வைத்தல் ஆகியவை முதலுதவி சிகிச்சை ஆகும்.

*

3. வெப்பத்தால் நீர் கட்டுதல் இதன் அறிகுறி - வெப்பத்தில் இருக்கும்போது கை, கால் வீக்கம் வருதல் குளிர்ச்சியான சுற்றுச்சூழல் இதற்கு சிறந்ததாகும்.

*

4. மிதமான வெப்பம் தாக்கல் (99 டிகிரி - 104 டிகிரி பாரன்ஹீட் அளவு): இதற்கு தலைவலி, வாந்தி, தலைசுற்றல், வலுவிழத்தல், மயிர்கூச்செரிதல் போன்ற அறிகுறி ஏற்படும்.

*

5. குளிர்ச்சியான சுற்றுச் சூழலில் வைத்தல், காற்றாடி அல்லது குளிர்சாதனம் செய்யப்பட்ட அறையில் வைத்தல், அதிகப்படியான உடைகளை அகற்றுதல், உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ்) கொடுப்பது இதற்கு சிகிச்சை முறையாகும். உடனடியாக மருத்தவரை அணுகுவது நல்லது.



***


கடுமையான கோடை வெப்ப தாக்குதலை தடுக்கும் முறைகள்:


1. குழந்தைகள் விளையாடும் நேரம் அல்லது வெளியில் செல்லும் நேரத்தை காலை அல்லது மாலை நேரங்களில் வைத்துக்கொள்ளலாம்.

*

2. உடம்பில் குறைந்த நீர்சத்தை சமன் செய்ய போதிய அளவு நீர் உலக சுகாதார உப்பு சர்க்கரை நீர்:

இளநீர் பழச்சாறு போன்றவைகளை விளையாடும்போது அல்லது பயிற்சி செய்யும் முன்பும் மற்றும் பின்பும் குடித்தல், குளிர்ச்சியான நீர் அல்லது சுற்றுசூழல் பருத்தி துணிகளை அணிதல் சிறந்தது.


***

கோடை காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் நோய்கள் எவை?


கோடையில் வரும் நோய்:


1. வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு
2. சின்னம்மை
3. மணல்வாரி அம்மை
4. நீர்க்காமாலை
5. வியர்க்குரு

**

1. வாந்தி - வயிற்றுப்போக்கு

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வர முதல் காரணம் சுத்தப்படுத்தப்படாத நீரைக் குடித்தல், ஈ மொய்க்கும் பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல் காரணமாகும்.

**

2. நீர் சத்து குறைதலின் அறிகுறிகள்

படபடப்புடன் இருத்தல், அதிகப்படியான தாகம், சிறுநீர் குறைதல், சோர்வு, குழி விழுந்த கண்கள், வாய் உலர்ந்து இருத்தல், குழந்தையின் எடை குறைதல், இருதய துடிப்பு அதிகமாதல் ஆகிய அறிகுறிகள் தெரிய வரும்.

*
வயிற்றுப்போக்குடன் நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் தொடர்ந்து உணவு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறைவயிற்று போக்கின் போது ஈடுசெய்ய வழக்கமாக கொடுப்பவற்றைவிட அதிகப்படியான நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும். அதிகப்படியான நீர் ஆகாரம் என்பது உலக சுகாதார அமைப்பு சர்க்கரை கரைசல் நீர், சாதாரண தண்ணீர், அரிசி கஞ்சி, தயிர்.

*
இரண்டு வயதுக்கு குறைவாக 50-100 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப்போக்கின் போதும் ) கொடுக்க வேண்டும்.

*
இரண்டு வயதுக்கு மேல் இருந்தால் 100-200 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப் போக்கின் போதும்) கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவரை அணுகுவது நல்லது.



**

3. நீர்சத்து குறைந்தால்

வயிற்றுப்போக்குடன் மிதமான நீர்ச்சத்து குறைந்தால் மேற்சொன்ன முறையை கடைப்பிடிக்க வேண்டும்.


வயிற்றுப் போக்குடன் அதிகமா நீர்ச்சத்து குறைந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதுவரை மேற்சொன்ன முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.


**

4. சின்னம்மை என்றால் என்ன?

வரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் (விஜெட்வி) எனும் கிருமிகள் முதன் முதலாக வெளிப்படுத்தப்படுவதால் ஏற்படும் ஒரு வைரஸ் நோய் இது. உடல் முழுவதும் வரும் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் மூலம் இந்நோயை கண்டுபிடிக்கலாம்.

*

1. சின்னம்மையின் அறிகுறிகள் என்ன?

பொதுவான அறிகுறிகள் ஜூரம், குளிர் நடுக்கம், குமட்டல் மற்றும் வாந்தி ஆகும். வெளிப்படையாக இது தெரியும். நன்கு அறியப்பட்ட அறிகுறி ரணமாக மற்றும் அதிக அரிப்பு உள்ள கொப்புளங்களாக தோன்றும். பெரும்பாலான குழந்தைகளுக்கு 200-300 காயங்கள் இருக்கும். பின்னர் இது பொருக்காக மாறுகிறது.


*

2. சின்னம்மை பரவக்கூடியதா?

ஆம். பரவக்கூடியது. கொப்புளங்கள் வெளி வந்த சில தினங்களுக்கு முன்பு எல்லா காயங்கள் மீதும் பொருக்குத் தட்டும் வரை சின்னம்மை மிகவும் தொற்றிப் பரவும் நோய்.


அதாவது அவைகள் உலரும் வரை இது வழக்கமாக கொப்புளங்கள், வெளிவர ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் ஏற்படும். பொதுவாக இந்த வைரஸ் கிருமிகள் காற்றினால் எடுத்து செல்லப்படும் நீர்த்துளிகளால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர் சுற்றி இருக்கும் காற்றில் இருமினாலோ அல்லது தும்மினாலோ மற்றும் திரவங்களை வெளியிடுவதன் மூலம் இது நேரிடுகிறது.


மேலும், சின்னம்மை அல்லது ஹர்பிஸ் உள்ளவர்களுடன் நேரடி தொடர்பினாலும் இது பரவலாம். ஏனெனில் ஈரமாக உள்ள காயங்களில் தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பமாக உள்ள தாயிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் உஅல்லது பிறந்த குழந்தைக்கும் பரவக்கூடும்.


*

3. இந்த வைரஸ் கிருமி யாரை அதிகம் பாதிக்கும்?


சின்னம்மை குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் ஆண், பெண் என பாதிக்ககூடியது. பெரும்பாலானவர்க்கு சிறு பிராயத்தில் அல்லது எப்போதாவது சின்னம்மை வருகிறது. ஆனால் முன்பே பாதிக்கப்படாத சின்னம்மை உள்ளவருடன் தொடர்பு கொள்ளும்போது தொற்று பாதிக்கப்பட்டு குழந்தைகளை பாதிப்பபதால் ஆசிரியர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை நடத்துபவர்கள் போன்று குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பவர்களை சின்னம்மை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


அத்துடன் ஆரோக்கிய பராமரிப்பு அளிப்பவர்கள் (மருத்துவர்கள், நர்ஸ், மருத்துவமனை ஊழியர்கள்) தொற்று பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையை செய்யும்போது பாதிக்கபட்டவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். குழந்தை பிராயத்தில் சின்னம்மை வராத பெரியவர்களுக்கு இப்போது அது வந்தால் மிகவும் கடுமையாக விளங்கக்கூடும்.


*

4. குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கு வரும் சின்னம்மை வேறுபட்டதா?


குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கும் வரும் சின்னம்மை கடுமையாக இருக்கும். ஜூரம் அதிகமாகவும், நீண்ட காலத்திற்கும் இருக்கும். கொப்புளங்கள் அதிகமாகவும், ஆழமாகவும், அதிக தழும்புடனும் இருக்கும். வாழ்க்கைமயின் பிற்காலத்தில் சின்னம்மை வந்தால் சிக்கல்கள் மற்றும் உயிருக்கு அபாயம் இருக்கும்.


***

5. சின்னம்மை வருவதை எவ்வாறு தடுப்பது?

தொற்று பாதிக்கப்பட்டவர்களை பள்ளி அல்லது வேலை இடங்களில் தனித்து வைப்பதன் மூலம் இந்த வரைஸ் நுண் கிருமி பரவுவதை குறைக்க உதவும். சின்னம்மையால் அவதிப்படுவதை தவிர்க்க தடுப்பூசி திறன் மிக்க வழியாகும்.

*

தடுப்பூசி போட்டபின் சின்னம்மை வர வாய்ப்பு உள்ளதா?


தற்போது கிடைக்கும் வரிசெல்லா தடுப்பூசிகளின் மருத்துவ ஆய்வுகள் அவை சாதாரண சின்னம்மைக்கு எதிராக கிட்டத்தட்ட 100 சதவீதம் பயனுள்ளதாகவும், நல்ல சகிப்பு தன்மை உடையதாகவும் காட்டுகிறது. ஆனால் தடுப்பூசி பெற்றவர்களின் 1-4 சதவீதத்தினருக்கு தீவிரமற்ற இந்நோய் வரும் அறிகுறிகள் வந்திருப்பதாக இந்த தடுப்பூசியின் நீண்ட கால பாலோ அப் தெரிவிக்கிறது.


சுருக்கமாக சொன்னால் அந்தந்த வயதுகளில் தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும். பாதுகாக்கப்ப்ட்ட குடிநீர் மற்றும சுகாதாரமான வகையில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் குழந்தைகளை விளையாட மற்றும் வெளியில் கூட்டச் செல்லக்கூடாது.


மேற்சொன்ன முறைகளை கையாண்டால் கோடை காலத்தை இனிமையாகக் கழிக்கலா



***
by-டாக்டர். க. இராஜேந்திரன்
thanks டாக்டர்
***




"வாழ்க வளமுடன்"

சர்க்கரை நோயின்றி வாழ :)

தினமும் எளிய உடற்பயிற்சிகளை செய்து சர்க்கரை வியாதியில் இருந்து தப்ப முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.



இது தொடர்பாக இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*

காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.

*

தற்போதைய நிலையில் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களுக்கு, அரை மணி நேர நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

*

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடை பயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை.

*

ஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் 2 வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும்.

*

எனவே சர்க்கரை நோயின்றி வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், தினமும் குறைந்தது 15 நிமிடமாவது நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.


***
thanks இணையம்
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "