...

"வாழ்க வளமுடன்"

11 ஜூலை, 2011

ஒரு வரி மருத்துவ செய்தி!



ரோஜா அத்தர் : முக வசீகரம் கூடும்.

பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்

கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்

ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்

எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

பால் + கசகசா : தூக்கம் வரும்

கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்

கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்

மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்

ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்

வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்

வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்

ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்

மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்

ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்

புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்

சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்

குப்பை மேனி : மலேரியா தீரும்.

பேரிச்சை : கொழுப்பை நீக்கும்

டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்

கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்

செம்பருத்தி : உடல் சூடு தணியும்

காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.

முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்

மருதாணிப்பூ : சுகமான தூக்கம் தரும்


நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்


பேரீச்சம்பழம் : தினமும் இரவில் பாலில் வேகவைத்து உண்டால் மலச்சிக்கல் தீரும்


பொன்னாங்கன்னி கீரை : சருமம் பளபளப்பு பெறும், கண் பார்வை தெளிவு பெறும்


அகத்திக்கீரை : வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு ஏற்படாது


எலுமிச்சை பழம் + தேன் : வறட்டு இருமல் வராது



அத்திபழம் : தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மாதவிடாய்
காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்


மிளகு தூள் + மஞ்சள் தூள் : இரவில் காய்ச்சிய பாலில் போட்டு குடித்துவந்தால், தொண்டை கரகரப்பு நீங்கும்




***
நன்றி: தமிழ் ஆதாரம்
***





"வாழ்க வளமுடன்"

பிஸ்தா பருப்பின் ஸ்வீட்டு & சமையல் ( part - 3 )

பிஸ்தா ஜாமூன்






வண்ணங்கள், வட்ட வட்டமாக சுற்றிவரும் பிஸ்தா ஜாமூன் செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார் சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் பாலசுப்ரமணியன்.

தேவையானவை:




•இனிப்பில்லாத கோவா - 100 கிராம்

•பிஸ்தா 25 கிராம்

•சர்க்கரை - 200 கிராம்

•வெண்ணெய் அல்லது நெய் - ஒரு ஸ்பூன்.


செய்முறை:


•பிஸ்தா மற்றும் பாதியளவு சர்க்கரையை மிக்சியில் தனித்தனியாக மாவாக அரைக்க வேண்டும்.




•வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சர்க்கரையை சேர்த்தால் மெல்ல இளகும். சர்க்கரை நிறம் மாறக்கூடாது. இதனுடன் கோவாவை சேர்த்து கலவை கெட்டியாகும் வரை கிளறவேண்டும்.




•வாணலியின் ஓரத்தில் கலவையை ஒட்ட வைத்து, அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.




•பிஸ்தா, சர்க்கரை மாவை ஒன்றாக பிசையும் போது ஒன்றோடொன்று ஒட்டி பச்சை நிறமாக மாறும்.





•இதை சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும்.





•சமதளமான பரப்பில் நெய் தடவி, அதன் மேல் கோவா கலவையை பரப்பி சமமாக தேய்க்க வேண்டும்.





•அதன்மேல் பிஸ்தா கலவையை மெலிதாக பரப்பி, இரண்டையும் சேர்த்து இறுக்கமாக உருட்ட வேண்டும்.




•இதை அப்படியே நான்கு மணி நேரம் வைத்திருந்து, தேவைப்படும் வடிவத்தில் கத்தியால் வெட்டி பரிமாறலாம்.





•வெளியே இளமஞ்சள், உள்ளே பச்சைநிறம் என வித்தியாசமாக இருக்கும்.





•பிஸ்தாவை மெலிதாக சீவி மேலாக அலங்கரிக்கலாம்.



***
thanks தினமலர்
***


பிஸ்தா முந்திரி சாண்ட்விச் பிஸ்தா முந்திரி சாண்ட்விச்



தேவையானவை

பிஸ்தா - அரை கப்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்
புட் கலர் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
பாதாம், முந்திரி, வால்நட் போன்ற டிரை ஃப்ரூட்ஸ் - அரை கப்
குங்குமப்பூ - சிறிதளவு


செய்முறை

டிரை ஃப்ரூட்ஸை துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். பிஸ்தாவை அரை கப் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியவுடன் மேலே உள்ள தோலை உரித்து, பருப்பை மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும்.


சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் அரைத்த பிஸ்தா விழுது, ஏலக்காய் தூள் போட்டு, கடாயின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது தட்டில் கொட்டி, வட்ட வட்ட வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.


வேறு ஒரு பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் வரை நீர் ஊற்றி, கம்பிப் பதத்தில் பாகு வைத்து, அதில் பொடித்த டிரை ஃப்ரூட்ஸ், குங்குமப்பூ ஆகியவற்றைக் கலந்து ஆறவிடவும்.


இப்போது இரண்டு பிஸ்தா வில்லைகளுக்கு நடுவில் இந்த டிரை ஃப்ரூட்ஸ் கலவையை வைத்து, அரை மணி நேரம் வைக்கவும். நன்றாக செட் ஆனதும், எடுத்துப் பரிமாறவும்.


***
thanks tamilkurinji
***


பிஸ்தா கீர் - pista kheer






கீர் பல வகையாக தயாரிக்கலாம். இது சிம்பிளாக அரைத்து செய்யும் கீர் இதில் நெய் கூட சேர்க்கவில்லை. டயபட்டீஸ் உள்ளவர்கள் கூட இதை லோ பேட் பாலில் செய்து சுகர் பிரி சேர்த்து செய்து சாப்பிடலாம். இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு வெரும் பஞ்சி தோசைக்கு வைத்து கொடுக்க்லாம், மெயினாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை பிஸ்தா சேர்க்காமல் வெரும் பாலில் ரவை சேர்த்தும் செய்யலாம்.


தேவையானவை


பிஸ்தா – 25 கிராம்
அரி்ி - 1 மேசை கரண்டி
பிஸ்தா – பொடியாக அரிந்த்து (ஒரு மேசை கரண்டி)
பால் - அரை லிட்டர்
ரவை – ஒரு மேசை கரண்டி
ஏலக்காய் – 2
பிஸ்தா எஸன்ஸ் – ஒரு துளி
சர்க்கரை – 50 கிராம்
கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்


செய்முறை




அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும், பிஸ்தாவை வெண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து தோலை எடுக்கவும்.
பிஸ்தாவையும் , அரிசியையும் அரைத்து எடுக்கவும்।


பாலில் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து அரைத்த பேஸ்டை சேர்க்கவும்.




தீயின் தனலை குறைத்து ரவை தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.


கொதித்து திக்காகும் போது ஒரு துளி பிஸ்தா எஸன்ஸ் ஊற்றி பொடியாக




அரிந்த பிஸ்தாவை தூவி இரக்கவும்.



தோசை ,குட்டி பன்னுடன் சாப்பிட அருமையாக இருக்கும்



***
thanks rajendraa.blogspot.com
***




பிஸ்தா பருப்பின் ஸ்வீட்டு & சமையல் குறிப்புகளை எடுத்த தளத்திற்க்கு மிக்க நன்றி........


:)


***



"வாழ்க வளமுடன்"

பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள் part - 2



’அவன் பெரிய பிஸ்தாடா!’ என்று சொல்வது ஒரு வகை என்றால், ’அவன் பெரிய பிஸ்தாவாடா?‘ என்று கேட்பது மற்றொரு வகை. இவை இரண்டும் ஃபுல் அடிக்கும் பயில்வானாக இருந்தாலும், புல் தடுக்கி பயில்வானாக இருந்தாலும் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் சொற்களாகிப் போயின.







பிஸ்தாவுக்கும் ஆண்களுக்கும் அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு. அதிலேயும் பிஸ்தாவோடு மிகுந்த தொடர்புடையவர்கள் ரொம்ப நோஞ்சான் ரொம்ப பலசாலி இருவரும்தான்.








குடிக்கறது கூழாக இருந்தாலும் பெரிய பிஸ்தா மாதிரி உதார் விடுவதற்கு ஒரு குறைவும் இருக்காது. பாவம் இந்த நடுத்தரம் அவர்களை விட பாவம் பெண் தாதாக்கள். என்னதான் பலசாலிகளாய் இருந்தாலும் கண்டிப்பாக சொர்ணாக்கக்களுக்குப் இந்த பிஸ்தா ஜம்பம் எல்லாம் பொருந்தாது.


ஒருவருக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டால் போதும். அவனுக்கு இலவச அறிவுரை என்று வழங்குபவர்களின் வாய் உதிர்க்கும் முத்துக்களில் இந்த பிஸ்தா முக்கியமாக இடபெறும். `பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிட்டு, உடம்பை தேத்துபா…’ இப்படி...அப்படி என்னதான் உள்ளது இந்த பிஸ்தாவில்?.







ஒரு 100 கிராம் பிஸ்தாவில்




557 கலோரி உள்ளது. அதாவது 29%
கார்போஹைடிரேட்ஸ் 27.97 கிராம். இது 21.5%
புரதம் 20.60 கிராம். 37%
மொத்தக் கொழுப்பு 44.44 கிராம் 148%
கொழுப்பு 0.0 மிலிகிராம் 0%
நார்ச்சத்து 10.3 கிராம் 27%
விடமின் A -553, 18% விட்டமின் C -5. 12% விட்டமின் E-150% தியாமின் 72.5% சோடியம் 1 மி.கி..பொட்டாசியம் 1.025 மி.கி., கால்சியம் 107மி.கி. 11% காப்பர் 1.3 மி.கி. 144% இரும்புச்சத்து 4.15 மி.கி. 52% மக்னீசியம் 121மி. கி. 30% மாங்கனீசு 1.2 மி.கி. 52% பிராஸ்பரஸ் 376 மி.கி. 54% செலினியம் 7 மிசிகி. 13% சின்க் 2.20 மிகி. 20% இத்தனையும் நிறைந்து உள்ளது. இவை முக்கியமானவை. 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், உட்டச்சத்துக்கள் ஆகியவை பிஸ்தாவில் நிறைந்துள்ளன என்கின்றது. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய அது தானே பிஸ்தா.


மூடிய கிளிஞ்சல்கள் போலக் காணப்படும், இதன் உடபுறம் பச்சை நிறத்தில்காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோ’ (Pistachio)என்று உலக அளவில் அழைக்கிறார்கள்.



மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிகப் பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்று என்பர். சுமார் 7000 ஆண்டுகளுக்கும் முன்பே பிஸ்தா மரத்தைப் பயிரிட்டு வளர்த்துள்ளனர். பிஸ்தாவிலும் வளர்ப்பிலும் அமெரிக்காதான் பிஸ்தா. ஆம் உலகிலேயே அதிக அளவில் பிஸ்தாக்கள் (பிஸ்தா மரங்கள்) நிறைந்த நாடு அமெக்கா. 1903 முதலே கலிஃபோர்னியாவில் பிஸ்தா மரங்கள் பயிர் செய்யப்பட்டு வந்துள்ளன என்கிறது ஆய்வு. .


இனிப்பான சம்பவத்தைப் போல கசப்பையும் ஜீரணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த தமிழர்கள் தமிழ்ப் புத்தாணடில் வேப்பம்பூ பச்சடி செய்து கொண்டாடுகிறோம்.. அதுபோல சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் கொண்டாடும்போது, இந்த பிஸ்தா பருப்புகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள். உடல் நலம், மன நலம், ஒளிமயமான எதிர்காலம், மகிழ்ச்சி, துள்ளல் ஆகியவற்றின் அடையாளமாக பிஸ்தாவை நினைக்கின்றனர். அதனால் புத்தாண்டில் பிஸ்தாவே முதலிடம் பிடிக்கிறது. அதுமட்டுமல்ல அவர்கள் பிஸ்தாவை ”மகிழ்ச்சி பருப்பு (Happy nut), என்றே அழைக்கிறார்கள். உலகிலேயே அதிக அளவில் பிஸ்தா ஈட்டர் யார் என்றால் சீனர்களே. அவர்களின் நொறுக்ஸில் முக்கிய இடமும் பிஸ்தாவுக்கே.


ஈரானியர்களும் பிஸ்தாவை அதிகமாகப் பயன் படுத்துகின்றனர். இவர்கள் பிஸ்தாவை ”சிரிக்கும் பருப்பு (smiling nut)” என்று அழைக்கின்றனர்.


ரஷ்யாவில் கோடைக்காலத்தில் பிஸ்தா பருப்பு அதிகப் பயன்பாட்டில் உள்ளது என்கிறது ஒரு ஆய்வு. கோடைக்காலத்தில் அடிக்கும் பீருக்கு இது தான் உடன் துணையாம்.


ஒரு காலத்தில் சரியான செரிமானத்திற்காக சாப்பிடும்போது ரசம் ஊற்றி சாப்பிடுவோம். அந்த ரசத்தை இப்போது ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் சூப்பு என்று சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு கின்னியில் ஊற்றி கொடுக்கின்றனர். நாமும் ஸ்பூனால் உரிஞ்சி உரிஞ்சிக் குடிக்கிறோம். இது பசியைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கும். இதே போல பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரிக்கச் செய்ய மது அருந்துவார்களாம். அப்போது மதுவுடன் இசைக்கும் பக்க வாத்தியம் பிஸ்தாவாம்.


மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏழை நாடு இந்தியா, பிஸ்தா சாப்பிடுவதிலும் ஏழைதான். குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீராகவா இருக்க முடியும்? .ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அயல்நாட்டு டாலர் புழக்கம் நிறைந்த வீடுகளில் பிஸ்தாவும் இடபிடிக்கிறது. மற்றவர்கள் படம் போட்டுக் காட்டினால்தான் பிஸ்தா எப்படி இருக்கும் என்று அறியும் நிலையில் இன்றும் உள்ளனர்.


சரிங்க.. அப்படி என்னதான் இந்த பிஸ்தாவில் நம் உடலுக்கு நன்மை தரும் விஷயம் இருக்கிறது?


முக்கியமாக மூன்று நோய்கள் உலகில் உலா வந்து தன் இஷ்டம் போல மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. அவை புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய். இந்த மூன்று நோய்களும் பிஸ்தா என்றால் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு ஓடி நிற்குமாம். இதைக் கூறுவது அமெரிக்க ஆய்வறிக்கை.


தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் எந்த வகையான புற்று நோயும் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.


இந்தியாவில் மட்டும் நான்கு கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை. ரொட்டியுடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியைத் தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர்.


பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.


நாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளைச் சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமை செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இதைக் கூறுவது டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு. பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப்பொருளாக (சைட் டிஸ்ஸாக) பிஸ்தாவைச் சேர்த்துச் சாப்பிடும் போது, கார்போஹைட்ரேட்டை உடல் உள்ளிழுத்துக் கொள்வது மட்டுப்படுகிறது. கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ள பிரெட் சாப்பிட்டால்கூட, அது ரத்தத்தில் படியாமல் பார்த்துக் கொள்கிறது இந்த பிஸ்தா. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என ஆய்வு கூறுகிறது.


நாகரிக மோகம் நிறைந்த, வேக உணவு எங்கும் பரவி விட்ட நகர்ப்புறங்களில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் 4 சதவீததில் இருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிலும் இந்தியாவில் குறிப்பாக இளம் வயதினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் கேட்கக் கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை நிலை. பிஸ்தா பருப்பைச் சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறையும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓமேகா-3 வகை கொழுப்பு உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாமாம்.
.
கலர் பார்க்கும் ரோட்டோர ரோமியோக்களுக்கு மிகவும் நற்செய்தி இது. பிஸ்தாவைப் பச்சைப் பாதாம் என்றும் அழைக்கின்றனர். இதில் உள்ள பச்சை கண்களுக்கு ஒளியூட்டுவதை வெகு நேர்த்தியாகச் செய்கிறதாம். அப்பறம் என்ன கலர் பார்த்துக் கலக்க வேண்டியதுதானே.


செக்ஸ் உணர்வு குறைபாடு இக்காலத்தில் பரவலாக ஆண்களிடம் காண்ப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். இந்த உடலுறவு ஆர்வம் இன்மை உடல், உள நோய்களுக்கு பெரும்பாலும் காரணமாகி விடுகின்றது.


”காதலினால் மானிடர்க்குக் கலவி உண்டாம்
கலவியிலே மானிடர்க்கு கவலை தீரும்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே”
என்பார் பாரதி பெண் என்றால் அழகு, ஆண் என்றால் ஆண்மை. என்பது தொன்று தொட்டு நிலவி வரும் சமூகக் கட்டு. இதில் பெண்மையை ஒளிவீசச் செய்ய எந்த அளவு ஈஸ்ட்ரோஜன் பயன் படுகிறதோ அதே அள்வு ஆண்மையைக் கூட்டுவதில் டெஸ்ட்டோஸ்டீரான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டெஸ்ட்டோடிரானை மருந்துகளால் அதிகரிக்க முடியாதாம். . டெஸ்ட்டோடிரானை அதிகரிக்கச் செய்வதில் பிஸ்தாவின் வேலை படு சுத்தமாக இருக்குமாம். தன் ஐந்தாவது வயதில் பழுக்கத்தொடங்கி 200 வயது வரை ஓயாது கனி ஈனும் பிஸ்தா ஈடு இணையற்ற இயற்கை வயாகராவாகி அரிய பயனைத் தருகிறது..


இது செரிக்க சற்று கடினமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவைத் தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது சுலபமாகச் செரிக்கும்.
ஒரு சுவையான செய்தி.. பிஸ்தாவுக்கு என்றே ஒரு தினம் கொண்டாடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? ஆம் பைபிளில் இடம் பிடித்த(Genesis 43:11)இந்த வரலாறு படைத்த பருப்புக்குப் நன்றி சொல்லும் விதமாக பிப்ரவரி 26 உலக பிஸ்தா நாளாகக் கொண்டாடப் படுகிறது.
அப்பாடா.. இதுவரை நீங்கள் பிஸ்தாவோ, இல்லையோ இந்த மகிழ்ச்சிப் பருப்பைக் கையில் எடுத்து விட்டீர்கள் அல்லவா. இனிமேல் நீங்கள் பிஸ்தாதான்.. பிஸ்தா எடு!! கொண்டாடு....






***

நன்றி குமுதம் ஹெல்த்.

***









"வாழ்க வளமுடன்"

பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள் part - 1



சக்தி வாய்ந்தவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்களை, ` என்ன பெரிய பிஸ்தாவா?’ என்று கேட்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது. இந்த பிஸ்தாவைவிட, பருப்பு வகையைச் சேர்ந்த பிஸ்தாவுக்கு சக்தி நிறையவே உள்ளது.



இதனால்தான், புதிதாய் திருமணம் ஆனவர்களையும், திருமணம் முடிவானவர்களையும், `பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிட்டு, உடம்பை தேத்துபா…’ என்கிறோம்.


இப்படி சிறப்புமிக்க பிஸ்தாவுக்கு என்றே உலக அளவில் ஒரு தினம் கொண்டாடுவது எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று.


சிறிய முடப்பட்ட திண்ணமான ஓட்டிற்குள் பச்சை நிறத்தில் காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோ’ என்று உலக அளவில் அழைக்கிறார்கள்.


30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், பைடோ ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் பிஸ்தாவில் நிறைந்துள்ளன. மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிக பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்றாகும்.


கி.மு.7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இந்த பிஸ்தா மரத்தை பயிரிட்டு, அதன் பலனை அனுபவித்துள்ளது. அமெரிக்காவில் 1903 முதல் அங்குள்ள கலிபோர்னியா மாகாண பகுதிகளில் இந்த மரங்கள் அதிக அளவில் பயிர் செய்யபட்டன. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பிஸ்தா உற்பத்தி செய்யபடுகிறது.


சீனர்களும் பிஸ்தாவின் பலத்தை நிறையவே உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த பருப்பை `மகிழ்ச்சியான பருப்பு’ என்று அழைக்கிறார்கள். பிஸ்தா பருப்பின் வடிவத்தை வைத்தே, அதாவது அதுவாய் திறந்து பல்தெரிய சிரிப்பதுபோல் காணபடுவதால் இந்த பெயரை அவர்கள் அதற்கு சூட்டியுள்ளனர்.


சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் கொண்டாடும்போது, இந்த பிஸ்தா பருப்புகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள். ஆரோக்கியம், சந்தோஷம், ராசியான எதிர்காலம் ஆகியவற்றின் சின்னமாக அவர்கள் பிஸ்தாவை கருதுவதுதான் இதற்கு காரணம்.


கலிபோர்னியாவில் அதிக அளவில் பிஸ்தா உற்பத்தி செய்யபட்டாலும், அதை அதிக அளவில் சாப்பிடுபவர்களின் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் சீனர்கள் தான். தனி நபராக எந்த நாட்டினர் அதிக அளவில் பிஸ்தா சாப்பிடுகிறார்கள் என்று கணக்கெடுத்தால், அதில் முதலிடம் பிடிப்பவர்கள் இஸ்ரேலியர். இவர்களது நொறுக்குத் தீனிகளில் பிஸ்தாவும் முக்கிய இடம்பெறுகிறது.


இந்தியாவில் உஷ்ண பொருளாக பிஸ்தாவை பார்ப்பதால், அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவுதான். இந்தியாவில் பிஸ்தாவை அப்படியே சாப்பிடாவிட்டாலும், கேசர் பிஸ்தா சர்பத், ஐஸ் கிரீம், பிஸ்தா குல்பி ஆகியவற்றில் பிஸ்தா பயன்படுத்தபட்டு, இந்தியர்களால் சாப்பிடபடுகிறது.


ரஷ்ய நாட்டினர் கோடைகாலத்தில் பீர் குடிக்கும்போது, அதற்கு சைடு டிஷ் ஆக பிஸ்தா உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரித்துக் கொள்வதற்காக மதுபானத்துடன் சிறிதளவு பிஸ்தாவையும் எடுத்துக்கொள்கிறார்கள்.


பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் :

தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.


வெள்ளை ரொட்டிடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும்.


மேலும், பசியை தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர். பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள்.



ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும்பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.



***


சர்க்கரை நோயை குறைக்க உதவும் பிஸ்தா!

.சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இருதய நோய் தாக்குவதற்கான அபாயம் 4 மடங்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இருதய நோய் தலைநகராக இந்தியா உருவெடுத்து வருகிறது.



நாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமை செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.



பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது.உயர் கார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப்பொருளாக பிஸ்தாவைச் சாப்பிடும் போது, உடலுக்குள் கார்போஹைட்ரேட் கிரகிக்கப் படுவது குறைகிறது.


***


- பிஸ்தா பற்றி மேலும் தெரிந்துகொள்ள www.pistachiohealth.com என்ற இணையதளத்தை லாக் ஆன் செய்யவும்.




***
நன்றி: தினமலர்.
நன்றி: vayal

***





"வாழ்க வளமுடன்"

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்



சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது.



சுவைக்காக சேர்க்கப்படுவது சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.



சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதில் அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம்.


உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.




இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.



குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது.


சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.


உடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது. இது வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளி நீக்க வல்லது. குடலில் புண் இருந்தாலும் ஆற்றி விடும். மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கும். பசியை அதிகரிக்க செய்யும். உஷ்ண மிகுதியால் மூல நோய் ஏற்பட்டு அவதிபடுபவர்க்கு இது சிறந்த மூலிகையாகும். நீரிழிவு, நரம்பு தளர்ச்சிகு நல்லது.


முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது.





***
thanks google
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "