...

"வாழ்க வளமுடன்"

18 மார்ச், 2010

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

உணவு பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுவோம்.


*
1. உணவுப்பொருட்களில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டால் , அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.

*

2. கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது.

*

3. பழங்களைப் பழுக்க வைக்க கார்பைடு (அசிட்டிலின்) வாயுவைப் பயன்படுத்தக்கூடாது.

*

4. நெய்யை வெண்ணெயுடன் சேர்த்து விற்கக்கூடாது.

*

5. உணவுப்பொருட்களில் செயற்கையாக இனிப்புச்சுவை தரும் பொருட்கள் சேர்க்கப்பட்டால், அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.

*

6. உணவுப்பொருட்களில் பயன்படுத்த விற்பனை செய்யப்படும் செயற்கை வண்ணங்கள் ஐ.எஸ்.ஐ தர முத்திரை பெற்றிருக்க வேண்டும்.

*

7. உணவுக்கலப்படத்தடை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே, உணவுப்பொருட்களில் பயன்படுத்தும் செயற்கை வண்ணங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

*

8. உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது.

*

9. பால் பவுடர் குழந்தை உணவு போன்றவை ஐ.எஸ்.ஐ தர முத்திரையின்றி விற்பனை செய்யக்கூடாது.

*

10. ஒரு உணவுப்பொருளில், இரு வேறு வகையான கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பிரிசர்வேட்டிவ் பயன்படுத்தக்கூடாது.

*

11. உணவுப்பொருட்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது.

***

ஏன் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள விபரங்களை பார்க்கவேண்டும்?

*

1. ஒவ்வொரு பொட்டல பொருள் மீதும் அந்த உணவு பொருள் தயாரித்த தேதி அச்சிடப்பட்டிருக்கும். அந்த உணவு பொருளை தயாரித்த தேதி தெரிந்தால் தான், அந்த உணவு பொருளை எந்த தேதி வரை பயன்படுத்தலாம் என்ற விபரம் தெரியவரும்.

*

2. பாட்ச் எண் என்பது, ஒரு குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்படும் உணவு பொருளுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண் ஆகும். கடைகளில் விற்கப்படும் உணவு பொருளில் ஏதேனும் குறை காணப்பட்டாலோ, புகார் எழுந்தாலோ, கெட்டு போனாலோ அந்த பாட்ச் எண் உள்ள அனைத்து உணவு பொட்டலங்களை கடைகளில் இருந்து முழுமையாக அப்புறபடுத்த பாட்ச் எண் உதவும்.

*

3. சைவ அசைவ வகை உணவு குறியீடுகள், நாம் வாங்கும் உணவு பொருள் சுத்தமான சைவமா அல்லது அசைவ உணவா என தெரிந்து கொள்ள உதவும்.

*

4. எந்த தேதி வரை பயன்படுத்தலாம் (பெஸ்ட் பிபோர் டேட்) என்பது அந்த உணவு பொருளின் காலவதியாகும் நாளை குறிக்கும்.

*

5. தயாரிப்பாளரின் முழு விலாசம் இருந்தால்தான், அந்த உணவு பொருளில் ஏதேனும் குறையோ கலப்படமோ இருந்தால் அது பற்றி புகார் தெரிவிக்கவும், குறைகள் களையப்படாவிட்டால், தயாரிப்பளார் மீது உணவு கலப்படத் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உதவும் .


***


உணவு பொட்டலங்களில் என்ன பார்க்கவேண்டும்?

*

இன்று ஏதேனும் பொருள் வாங்க கடைக்கு சென்றால், பொட்டலங்களில் விற்கப்படும் பொருட்களே அதிகம். சரி, நாம் வாங்கும் பொட்டல பொருட்கள் தரமானதுதானா? என்ன பார்க்கவேண்டும் அவற்றில்?

*

1. அந்த உணவு பொருளை தயாரித்த தேதி.

*

2. அந்த உணவு பொருளின் பாட்ச் எண்.

*

3. எந்த தேதி வரை அந்த உணவு பொருளை பயன்படுத்தலாம்.

*

4. அந்த உணவு பொருளின் எடை.

*

5. உணவு பொருள் தயாரிப்பவரின் முழு விலாசம்.

*

6. அந்த உணவு பொருளில் உள்ள மூல பொருட்களின் பட்டியல்.

*

7. உணவு பொருளின் பெயர்.

*

8. உணவு பொருள் சைவ வகையா அசைவ வகையா என்பதை குறிக்கும் முத்திரை.


***

மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் சரிபார்த்து பொட்டல பொருட்களை வாங்கவேண்டும். அப்போதுதான் நாம் வாங்கும் பொருள் நல்ல பொருள் என்பதை உறுதி செய்ய முடியும்.

***

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் திரு. ஏ.ஆர். சங்கரலிங்கம் இவரை அனுகவும். அவருடைய தளம் தான் உணவு உலகம்.

*

by FOOD .

***

நன்றி உணவு உலகம்.

http://unavuulagam.blogspot.com/

***

சத்து மாத்திரைகள்

சத்து மாத்திரைகள் நம் உடலுக்கு நல்லது தான?



நம் உடலில் வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது நம் உடம்பிற்கு ஒவ்வாத சில பொருட்கள் உருவாகின்றன. அதை நாம் பிரீ ரேடிக்கல்(FREE RADICAL)-ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகள் என்கிறோம். நச்சுப்பொருட்கள் நம் உடம்பில் சோர்ந்தால் அவையும் ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகளின் அளவை அதிகாரிக்கின்றன.

*

ஆக்ஸிஜன் எனும் பிராண வாயுவே நம் உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். நம் உடலின் செல்கள் பிராண வாயு எடுப்பதை தடுப்பவை- இந்த ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகள். அவை நம் உடலில் உருவாக்கும் பாதிப்புகளே ஒரு மனிதனின் இளமையைக் கொன்று முதுமையைக்கொணர முதற்சங்கு ஊதுகின்றது. விரைவு படுத்துகின்றன.

*

இரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் தமனிகளில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. நம் செல்களில் அவை உருவாக்கும் பாதிப்புகள் புற்றுநோய் உருவாகவும் வழிவகுக்கும்.

***

இயற்கையாய் கிடைத்த வரத்தாள் கிடைத்த பயன்கள்:

*


1. நாம் இயற்கையாய் உண்ணும் உணவில் காணப்படும் வைட்டமின்-சி வைட்டமின்-இ செலீனியம் தாது மற்றும் கரோட்டினாய்ட்கள் பிராண வாயு எடுப்பதைத் தடுக்கும் ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகளை ஓட ஓட விரட்டும் தன்மை கொண்டவை.


2. தாவரங்கள், பழம் மற்றும் பூக்களுக்கு, சிகப்பு ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் நிறங்களைக் கொடுப்பது இந்த கரோட்டினாய்ட்கள். அடர் பச்சை நிறத்தாவரங்களிலும் கரோட்டினாய்ட்கள் அதிகம் காணப்படுகின்றது. கரோட்டினாய்ட்களில் பீட்டா கரோட்டின் அதிகம் அறியப்பட்ட ஒன்றாகும். இவையெல்லாம் இயற்கையாய் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைத்தால் நம் உடலும் ஏற்றுக்கொள்கிறது.

*

3. ஆனால் சத்து மாத்திரை சாப்பிடுகிறேன் என ஸ்டைலாய் செயற்கையான வைட்டமின்-இ மற்றும் கரோட்டினாய்ட்களை அதிகளவில் எடுப்பவா;களுக்கு ஆபத்து காத்திருக்குது கவனம். வைட்டமின் மாத்திரைகளை அதிகளவில் எடுத்துக்கொள்வது எதிh;மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக அண்மைய ஆராய்ச்சிகள் அம்பலப்படுத்துகின்றன. அலட்சியப்படுத்த வேண்டாம்.

***

புகைபிடிக்கும் பழக்கமுள்ளவாகள்:

1. செயற்கையாக பீட்டா கரோட்டின் செறிவூட்டப்பட்ட சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் அது புத்துயிரை ஊட்டுவதற்குப்பதில் புற்று நோயை அவருக்குள் புறப்படச்செய்யலாம். விஞ்ஞானிகளே வியக்கும் விந்தையிது. நித்தமும் விட்டமின்-இ மாத்திரைகள் 200 மில்லிகிராம் அளவில் உட்கொள்வது உடல்நலம் காக்கும்.

*

2. அதுவே தினசாரி நாம் உட்கொள்ளும் விட்டமின்-இ 400 மில்லிகிராமிற்கு மிஞ்சினால் இதய நோய்கள் உதயமாக உதவுமாம். விட்டமின்-சியும் செலீனியமும் விவகாரத்தில் சிக்கவில்லை. எனினும் செயற்கையாய் உருவாக்கப்பட்டவையெனில் குறைந்த அளவே எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.


*



3. கலர் கலரான‌ பழங்களும், சமைக்காத காய்கறிகளும் நம் உணவில் அதிக அளவில் இடம் பிடித்தால் விட்டமின்களும் பீட்டா கரோட்டினும் இயற்கையாய் உடலில் சேரும். முளைவிட்ட கோதுமை மற்றும் நவதானியங்களில் விட்டமின்-இயும் புளிப்புச் சுவையுள்ள பழங்களில் விட்டமின்-சியும் செறிந்துள்ளன. நாம் உண்ணும் உணவில் அதிக பழங்களும் காய்களும் இடம் பெற்றால் நம் வாழ்வும் பெற்றிடும் இனிமை. சத்து மாத்திரைகளை சற்றே தள்ளி வைப்போம்.


***


இப்போது சொல்லுங்கள் சத்து மாத்திரைகள் கட்டாயம் தேவைதானா? இதில் ஒரு சிலர் குழந்தைகளுக்கும் இதனை அளிக்கின்றனர்.

*

கேட்டால் என் குழந்தை பழம், பச்சை காய்கறிகள் சாப்பிட மாட்டார்கள் என்று பெருமை வேறு.

*

நல்ல விஷயத்தை குழந்தைகளிடம் தினிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லி விளையாட்டாக அளித்தாள் கட்டாயம் குழ்ந்தைகள் ஏற்றுக் கொள்ளுவார்கள்.

*

சில பெற்றோரே இந்த மாதிரி சத்தாக சாப்பிடாமல் அவர்கலும் மாத்திரை எடுத்துக் கொள்வதைப் பற்றி என்ன சொல்ல!

*

பக்க விளைவுகள் ஏற்ப்படும் மாத்திரைகளை தரும் பெற்றோரே! யோசிங்கள்! யோசித்து இனியாவது நல்ல முடிவுக்கு வாங்கள்.

***

நன்றி உணவு உலகம்.
http://unavuulagam.blogspot.com/

***

அஸ்பாரகஸ்

இவ்வகை காய்களை நாம் கட்டாயம் கடைகளில் பார்த்து இருப்போம். ஆனால் இதை ஏன் சாப்பிடனும், அதில் அப்படி என்ன சத்துக்கள் இருக்கு என்று நாம் நினைத்து விட்டு விடுமோம். ஆனால் இதில் உள்ள சத்துக்கள் ஏறாலம். இயற்க்கை நமக்கு குடுத்து இருக்கும் வரம் தறாலம் தறாலம்.


அஸ்பாரகஸின் மூன்று வகைகளும் ஒரு கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெள்ளை அஸ்பாரகஸ் கடைசியில் உள்ளது. பச்சை அஸ்பாரகஸ் நடுவில் உள்ளது.முதலில் வைக்கப்பட்டிருக்கும் தாவரம் ஆர்னிதோகாலம் பைரினாய்க்கம் ஆகும். இந்த வகை அஸ்பாரகஸ், பொதுவாக காட்டு அஸ்பாரகஸ் என்று அழைக்கப்படுகிறது. சிலநேரங்களில் "பாத் அஸ்பாரகஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.

***

அஸ்பாரகஸ் அஃபிஸினாலிஸ் என்பது அஸ்பாரகஸ் பேரினத்தில் உள்ள ஒரு பூக்குந்தாவர இனமாகும். இதிலிருந்து அஸ்பாரகஸ் என்று அழைக்கப்படும் காய்கறி கிடைக்கிறது.

*

இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது.

*

Wild Asparagus in Austria


அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத்தாவரமாகும். இது நீண்டகாலம் வாழும் தன்மையுடைய தாவரமாகும். இந்த தாவரம், 100–150 centimetres (39–59 in) உயரமாகவும், தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளை உடையதாகவும் உள்ளது.

*


இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும். ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து (அலி) பூக்களும் ஒரே தாவரத்தில் காணப்படும். இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு பெர்ரியை போன்று, 6 முதல் 10மிமி விட்டமுடையதாக இருக்கும்.


*

அஸ்பாரகஸை குறித்த ஜெர்மன் தாவரவியல் விளக்கப்படம்

ஆரம்ப காலங்களில் அஸ்பாரகஸ், ஒரு காய்கறியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனுடைய மென்மையான சுவைமணத்திற்காகவும் நீர்ப்பெருக்கி பண்பிற்காகவும் இந்த தாவரத்தை பயன்படுத்தினர். பழைய காலத்து உணவு செய்முறை புத்தகத்தில் அஸ்பாரகஸ்ஸை சமைப்பதற்கான சமையல் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

*


இந்த தாவரம், பண்டைய கால எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமர்கள் ஆகியோரால் பயிரிடப்பட்டு வந்தது. இந்த தாவரத்தின் பருவக்காலத்தின் போது, இதை அப்படியே உண்டனர். இந்த காய்கறி உலர்த்தப்பட்டு குளிர்காலத்திற்காகவும் எடுத்துவைக்கப்பட்டது. இடைக்காலத்தின் போது இந்த தாவரம் பிரபலமாக இல்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் மறுபடியும் பிரபலமாக ஆரம்பித்துவிட்டது.


***

அஸ்பாரகஸின் பயன்களும் & சமைக்கும் முறையும்:

*


1. அஸ்பாரகஸின் இளம் தளிர்கள் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அஸ்பாரகஸ், குறைவான கலோரியை உடையதாக உள்ளது. இதில் கொழுப்பு சத்து இல்லை மற்றும் இதில் மிகவும் குறைந்த அளவு சோடியம் இருப்பதனால், இது ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது.

*

2. அஸ்பாரகஸில், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார் சத்து உணவு வகை மற்றும் ரூட்டன் ஆகியவை உள்ளது. அஸ்பாரகஸிலிருந்து அமினோ அமில அஸ்பாரஜின் என்று பெயர் வந்தது. இது போன்ற சேர்மங்கள் அஸ்பாரகஸ் தாவரத்தில் மிகவும் அதிகமாக உள்ளன.

*


3. இந்த தாவரத்தின் தளிர்கள் பல வகைகளாக சமைக்கப்பட்டு வருகிறது. அஸ்பாரகஸ் வறுத்த பொறியலாக கோழி இறைச்சி, கூனிறால் அல்லது மாட்டிறைச்சி ஆகியவற்றுடன் சேர்த்து சமைத்து கொடுக்கப்படும். இந்த அஸ்பாரகஸ் பன்றி இறைச்சியினுள் வைக்கப்பட்டும் சமைத்து கொடுக்கப்படும். அஸ்பாரகஸ், அடுப்புக்கரி அல்லது வன்மர கறிநெருப்புகளிலும், சுடப்பட்ட முறையில் சீக்கிரமாகவே சமைத்திடலாம்.

*

4. ஒரு சில கஞ்சி வகைகள் மற்றும் சூப்புகளில் இந்த அஸ்பாரகஸ் ஒரு சமையல் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு பாணியில், இது கொதிக்கவைத்து அல்லது வேகவைக்கப்பட்டு, ஹாலண்டைஸ் (முட்டை, வெண்ணெய் மற்றும் எலுமிச்சை கலந்தது) சுவைச்சாறு, உருகிய வெண்ணெய் அல்லது ஒலிவ எண்ணெய், பார்மிசன் பால்கட்டி அல்லது மேயனைஸ் ஆகியவற்றுடன் சேர்த்து உணவாக வழங்கப்படும். உணவுக்குப் பின் கொடுக்கப்படும் இனிப்பு வகையிலும் இது பயன்படுத்தப்படலாம்.

*

5. அஸ்பாரகஸ் ஊறுகாய்களாகவும் தயாரிக்கப்படுகிறது. இதனை பல வருடங்களுக்கு சேமித்தும் வைக்கப்படுகிறது. சில தயாரிப்பு வகைகள், தளிர்கள் "மாரினேட்டட்" (உப்பு தடவப்பட்ட நிலை) முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது என்று விவரச்சீட்டில் குறிப்பிடலாம்.

*

6. அஸ்பாரகஸின் அடிப்பகுதியில் மண்ணும் அழுக்கும் இருக்கும். இதன் காரணத்தினால் அஸ்பாரகஸை சமைப்பதற்கு முன்னதாக நன்கு சுத்தம் செய்ய வேண்டும். உலகளவில், பச்சை அஸ்பாரகஸ் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

*

7. கண்டம் சார்ந்த வடக்கு ஐரோப்பா பகுதிகளில் விளையும் வெள்ளை அஸ்பாரகஸ், மிகவும் சிறந்த மற்றும் முக்கிய காய்கறியாக கருதப்படுகிறது. இதன் காரணத்தினால், இந்த வகை அஸ்பாரகஸை, "வெள்ளைத் தங்கம்" என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.


***

அஸ்பாரகஸ் 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்துக்க‌ள்:

*

ஆற்றல் 20 kcal 90 kJ
மாவுப்பொருள்கள் 3.88 g
- இனியம் 1.88 g
- நார்ப்பொருள் 2.1 g
கொழுமியம் 0.12 g
புரதம் 2.20 g
தையாமின் (உயிர். B1) 0.143 mg 11%
ரைபோஃவிளேவின் (உயிர். B2) 0.141 mg 9%
நையாசின் (உயிர். B3) 0.978 mg 7%
Pantothenic acid (B5) 0.274 mg 5%
உயிர்ச்சத்து B6 0.091 mg 7%
ஃவோலேட் (உயிர்ச்சத்து B9) 52 μg 13%
உயிர்ச்சத்து C 5.6 mg 9%
கால்சியம் 24 mg 2%
இரும்பு 2.14 mg 17%
மக்னீசியம் 14 mg 4%
பாசுபரசு 52 mg 7%
பொட்டாசியம் 202 mg 4%
துத்தநாகம் 0.54 mg 5%
Manganese 0.158 mg



***

அஸ்பாரகஸின் மருத்துவ குணங்கள்:
*

பச்சை அஸ்பாரகஸ்

1. இரண்டாம் நூற்றாண்டு மருத்துவரான காலென், அஸ்பாரகஸ்ஸை, "சுத்தப்படுத்தும் மற்றும் குணமாக்கும்" திறனுடையது என்று விவரித்துள்ளார்.

*
2. அஸ்பாரகஸில் குறைவான கலோரியும், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்தும் உள்ளது என்று ஊட்டச்சத்து ஆய்வுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தண்டுகளில் ஆக்ஸியேற்றிப்பகை (ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள்) அதிகமாக உள்ளது.
*
3. அஸ்பாரகஸ் முக்கியமான ஊட்டச்சத்துகளை கொடுக்கிறது: அஸ்பாரகஸின் ஆறு காய்களில், 135 மைக்ரோகிராம் ஃபோலேட்டு, ஒரு வயதுவந்தவரின் RDIல் பாதியளவு (பரிந்துரைக்கப்பட்ட தினசரி உணவு), 545 μg பீட்டா கரோட்டுன் மற்றும் 20மிகி பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது." இந்த குறிப்பு, 'ரீடர்ஸ் டைஜஸ்டில்' வெளியானது. இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டைனை, ஃபோலேட் மட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது.
*
4. ஃபோலேட் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், ஃபோலேட், குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால், உடலில் உள்ள கால்சியம் குறைபாடு குறைக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
*
5. "அஸ்பாரகஸ் அதனுடைய மருத்துவ குணங்களுக்காக பல காலங்களாக விசேஷமாக எண்ணப்பட்டு வருகிறது" என்று டி.ஆன்ஸ்டாட் எழுதப்பட்டது. ஆன்ஸ்டாட் என்பவர், 'ஹோல் ஃபூட்ஸ் கம்பானியன்: அ கைட் ஃபார் அட்வென்சரஸ் குக்ஸ், கியூரியஸ் ஷாப்பர்ஸ் அண்டு லவ்வர்ஸ் ஆஃப் நாட்சிரல் ஃபூட்ஸ்' என்ற நூலின் ஆசிரியராவார்.
*
6. "அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், நீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது; நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை நடுநிலைப்படுத்துகிறது; மற்றும் சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதனுடைய நார் சத்து மலமிளக்கியாகவும் செயல்புரிகிறது."
***
3 வித அஸ்பாரகஸ் பயன்கள்:
*
வெள்ளை அஸ்பாரக, ஸ்பார்ஜெல் என்று அழைக்கப்படுகிறது. இது பச்சையை வகையை விட கசப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும்.
*
ஊதா நிற அஸ்பாரகஸ், பச்சை மற்றும் வெள்ளையிலிருந்து சிறிது வேறுப்பட்டு காணப்படுகிறது. இதில் நார் சத்து குறைவாகவும் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் காணப்படுகிறது. ( வைலெட்டோ டி'அல்பெங்கா என்ற பெயர் வகையில் தான் வெளியிடங்களில் விற்கப்படுகிறது. )
*
குறிப்பாக, பச்சை அஸ்பாரகஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
இணைப்புத்திசு வெண்புரதம் உடலில் உற்பத்தியாவதற்கும், அதனை தக்கவைத்துக்கொள்வதற்கும் வைட்டமின் சி உதவியாக இருக்கிறது. உடலில் உள்ள எல்லா செல்கள் மற்றும் திசுக்களை ஒன்றுசேர்த்து பிடித்துக்கொள்ள இணைப்புத்திசு வெண்புரதம் உதவியாக இருக்கிறது. இதன் காரணத்தினால், இது அதிசய புரதம் என்று கருதப்படுகிறது.


***
இவை சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு உடலில் ஏற்ப்படும் வேதியல் மாற்றங்கள்:
*
1. அஸ்பாரகஸில் உள்ள சில சேர்மங்கள் வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீருக்கு ஒரு வித்தியாசமான நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பலவகையான சல்ஃபரை கொண்டுள்ள, சிறுமையாக்கம் செய்யும் பொருட்களே காரணமாக உள்ளன. இதில் பலவகையான தியோல்கள், தியோ-ஈஸ்ட்டர்கள் மற்றும் அம்மோனியா ஆகியவையும் அடங்கும்.
*
2. அஸ்பாரகஸை உண்ட பிறகு 15 முதல் 30 நிமிடங்களிலேயே சிறுநீரில் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்று கணக்கிடப்பட்டது. யூனிவர்சிட்டி ஆஃப் வாட்டர்லூவில், டாக்டர். ஆர்.மெக்கலெல்லன் என்பவரால், இந்த ஆராய்ச்சி சரிபார்க்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டது.
*
3. அஸ்பாரகஸை உண்டவர்களில் சிலர் மற்றவர்களை விட வித்தியாசமாக அது செரித்துக்கொள்ளப்பட்டது. இதன் காரணத்தினால் சிலருக்கு அஸ்பாரகஸை உண்ட பிறகு நாற்றத்துடன் கூடிய சிறுநீர் வெளியானது. சிலருக்கு அது போன்று வெளியாகவில்லை என்று கருதப்பட்டது. எனினும், 1980களில் பிரான்சு, சீனா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் செய்த மூன்று ஆய்வுகளில், அஸ்பாரகஸினால் ஏற்படும் நாற்றத்துடன் கூடிய சிறுநீர், உலகளவில் மனிதர்களுக்கு உள்ள பண்பியல்பாகும் என்று ஆய்வு முடிவில் வெளியிட்டது.
*
4. இஸ்ரேலில் 307 ஆய்வுக்குட்பட்டவர்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், 'அஸ்பாரகஸ் சிறுநீரை' மோப்பம் பிடிக்கும் திறனுடையவர்களாக இருந்தனர். அஸ்பாரகஸை உண்டவர்களுக்கே அவர்களுடைய சிறுநீரில் உள்ள நாற்றம் தெரியாமல் இருந்தாலும், இந்த ஆய்வுக்குட்பட்டவர்கள், மற்றவர்கள் கழிக்கும் சிறுநீரிலும் இருக்கும் அஸ்பாரகஸ் நாற்றத்தை கண்டுபிடிக்கும் திறனுடையவர்களாக இருந்தனர். இந்த ஆய்வின் மூலமாக தான் அஸ்பாரகஸை உண்கிற எல்லோருக்குமே நாற்றம் நிறைந்த சிறுநீர் வெளியாகும் என்பது கண்டறியப்பட்டது.

*
5. இதன் மூலம், அஸ்பாரகஸை உண்கிற பெரும்பாலான மக்களுக்கு நாற்றம் நிறைந்த சேர்மம் உடலில் உற்பத்தியாகிறது என்பது உண்மையாகிவிட்டது. ஆனால் 22 சதவீதம் மக்களுக்கு மட்டுமே, அந்த நாற்றத்தை மோப்பம் பிடிப்பதற்கு தேவையான தன்மூர்த்தம் சார்ந்த மரபணுக்கள் உள்ளன என்பதும் இந்த ஆய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
***
சிறுநீர் கட்டுரையில் அஸ்பாரகஸின் தாக்கம்.
***
இக்குறிப்புகள் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
***
நன்றி விக்கிபீடியா.
***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "