...

"வாழ்க வளமுடன்"

09 ஜூலை, 2015

சம்பா ரவை லட்டு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நீரிழிவு நோய் இருப்ப‌வ‌ர்க‌ள் இனிப்பு சாப்பிட‌க்கூடாது என்று சொல்லும் போது நிறைய‌ வீட்டில் பொண்க‌ளுக்கு இது கொஞ்ச‌ம் ச‌ங்க‌ட‌ம்.


ஆம்! எல்ல‌ரும் இனிப்பு சாப்பிடும் போது அவ‌ர்க‌ள் சாப்பிட‌வில்லை என்று வ‌ருத்த‌ம் இருக்கும்.


அவ‌ர்க‌லுக்கா...


நாம் ர‌வா ல‌ட்டு சாப்பிட்டு இருப்போம். அதோ போல் ச‌ம்பா ர‌வையில் சேய்தால் நீரிழிவு நோயாளிக்கு இது நல்லது.


தேவையான‌ பொருட‌கள்:


ச‌ம்பா ர‌வை ( கோதுமை ர‌வை ) - 1 க‌ப்

ஈக்குவ‌ல் - 1/2 டீஸ்ப்பூன் ( உங்கலுக்கு தேவை எனில் சேர்த்துக் கொள்ளவும். )

முந்திரி - 6

நெய் - 1/2 டீஸ்ப்பூன்

பால் - தே. அள‌வு


செய்முறை:


1. க‌டாயில் 1 டீஸ்ப்பூன் நெய் சேர்த்து முந்திரியை வ‌றுக்க‌வும்.


2. முந்திரியை சிவ‌க்க‌ வறுத்த‌தும், அதில் ர‌வையையும் சேர்த்து வ‌றுக்க‌வும்.


3. சிறிது நேர‌த்தில் ர‌வை வ‌றுப‌ட்ட‌தும், அதில் ஈக்குவ‌ல் போட்டு உட‌னே இற‌க்க‌வும்.


4. த‌ட்டில் கொட்டி சூடும் ஆரும் முன்பு பால் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.


5. தட்டில் நெய் தடவி அதில் இந்த உருண்டையை வைத்து ஆரவிடவும்.அதற்க்கு மேல் ஒவ்வேரு முந்திரி வைத்து அழகு படுத்தவும்.


சம்பா ரவை லட்டு ரொடி.



குறிப்பு:


1. இந்த ரவா லட்டை அதிக நாள் வைத்துக் கொள்ள முடியாது.


2. இந்த உணவு சக்கரை நோயாளிகலுக்கு உகந்தது.


3. சம்பா
ரவை என்பது கோதுமை ரவை.

4. கடாயில் ரவையை இறக்கும் போது போடும் ஈக்குவல் பவுடர் போட்டதும் கீழே இறக்கமால் விட்டு விட்டால் ரவை நீர்த்து விடும்.


5. இந்த ரவா லட்டை 2 நாள் மேல் வைத்து இருந்தால் பூர்ணம் பூற்று விடும்.


***
படித்ததில் பிடித்தது,
***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "