...

"வாழ்க வளமுடன்"

16 செப்டம்பர், 2011

குளிருக்கு எதிராக உடம்பின் தற்காப்பு!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*
குளிர் என்பது இயற்கையாகத் தோன்றக்கூடிய ஒரு விளைவு. குளிர் காலத்தில் குளிர் உணர்ச்சி தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்தக் குளிர் தன்மை, தேசத்துக்குத் தேசம் வேறுபட்டிருக்கும்.

ஆண்டு முழுவதும் குளிராக உள்ள பல நாடுகள் உண்டு. அந்த நாடுகளில் குளிர் காலங்களில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். என்றாலும் அந்த நாட்டு மக்கள் குளிரைத் தாங்கும் உடைகளை அணிந்து சூழ்நிலையை எளிதாகச் சமாளித்துவிடு கிறார்கள்.

ஆனால் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்றால் அங்குள்ள கடும் குளிரைச் சமாளிப்பதற்கு அதிகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் பொதுவாக மனிதன் ஒரு வெப்பமண்டலப் பிராணிதான். மனித உடலுக்குப் பொதுவாகக் குளிர் பிடிக்காது.

குளிர் அதிகமாகும்போது உடல் தனது வெப்பநிலையை பராமரிக்கப் பாடுபடுகிறது.

தோலுக்கு அருகில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி அவற்றில் ரத்த ஓட்டம் குறைகிறது. அதன்மூலம், ரத்தத்தில் இருந்து வெப்பம் வெளியேறுவது குறைக்கப்படுகிறது. உடலின் உட்பகுதிகளில் சூடான ரத்தம் தங்கி, அவற்றைச் சேதப்படாமல் காக்கிறது.

பனிப் பிரதேசங்களில் நடமாடும்போது மேல் தோல் உறைந்து `செத்துவிடும்'. அதை `பனிக்கடி' என்கிறார்கள். இது, குளிரால் தோலுக்குப் போதுமான அளவில் ரத்தம் பாயாததால் ஏற்படுகிறது.

ஒரு வகையில் பார்த்தால், குளிரால் உள்ளுறுப்புகள் சேதம் அடையாமல் இருக்க மனிதன் கொடுக்க வேண்டியிருக்கும் விலையாகக் கூட அதைக் கூறலாம்.

குளிரான காலநிலையில் தோலுக்கு அதிக ரத்தம் பாய்ந்தால் உள்ளுறுப்புக்குத் தேவையான வெப்பம் உடலில் இருந்து வெளியே போய்விடும்.

எனவே, சுற்றுப்புறத்தில் குளிர் அதிகமாகிறது என்ற நிலை ஏற்பட்டவுடன் தோலில் உள்ள உணர்வுறுப்புகள் மூளைக்குத் தகவல் அனுப்புகின்றன. உடனே அனிச்சை நரம்பு மண்டலம் துரிதமாகச் செயல்படத் தொடங்குகிறது.

இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது. அட்ரினலின் சுரப்பி அதிக அளவில் சுரக்கத் தொடங்குகிறது. உடலில் வளர்சிதை மாற்றம் துரிதம் அடைந்து வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தத் தூண்டல்கள் எலும்புத் தசையை எட்டிவிடும். தசைகள் தாமாகவே வெடவெடக்கத் தொடங்குகின்றன. அதனால் உடற்செயலியல் மாற்றம் கணிசமாக அதிகமாகிறது. குளிர் மிக அதிகமாகிவிட்டால் உடல் தூக்கித் தூக்கிப் போடும். அப்போது உடலுக்குள் வெப்ப உற்பத்தி நான்கு மடங்காக அதிகரிக்கும்.

இவ்வாறு வெடவெடப்பது மட்டும் போதாது. ஏனெனில் அது புதிதாக வெப்பத்தை உற்பத்தி செய்வதில்லை. எனவே உடனடியாக தகுந்த தற்காப்பு முறைகளை நாம் நாட வேண்டும்.


***
thanks siva
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "