...

"வாழ்க வளமுடன்"

10 ஆகஸ்ட், 2011

இரத்ததானம் பற்றிய சில தகவல்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முதன் முதலில் 1667 - ஆம் ஆண்டு டெனிஸ் என்ற மருத்துவர் 15 வயது சிறுவனுக்கு இரத்தத்தைச் செலுத்தினார். ஆனால், பின்னர் 18 - ஆம் நூற்றாண்டு வரை இரத்ததானம் செய்யப்படவில்லை.


காரணம், இரத்தம் சிறிது நேரத்தில் உறைவதாகும். 1907 - ஆம் ஆண்டு ‘கிரில்’ என்ற மருத்துவர் Operation முறையில் இரத்தம் செலுத்தினார். பின்னர் ‘ஆகோட்’ என்பவர் இரத்தத்துடன் சோடியம் சிட்ரேட் சேர்த்தால் உறையாது எனக் கண்டறிந்தார்.

இறுதியாக, 1923 - ஆம் ஆண்டு ‘ஸ்டோரெர்’ ‘சோடியம் சிட்ரேட்’ சேர்க்காமல், பைப்ரினை நீக்கி இரத்தம் உறைதலைத் தடுக்கலாம் எனக் கண்டறிந்தார்.

இன்று, அறுவைசிகிச்சையின் போதும், விபத்துகளினால் ஏற்படும் அதிகபடியான இரத்தக் கசிவின் போதும் ஈடு செய்ய இரத்தம் செலுத்தப்படுகிறது.

&lsquoA’ இரத்த வகை மனிதனுக்கு, &lsquoB’ இரத்த வகையைத் தவறாக செலுத்தினால் &lsquoA’ இரத்தவகை மனிதனின் இரத்த செல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இரத்தம் கட்டியாகி மரணம் ஏற்படும். இதற்கு ‘அக்ளூடினேஷன்’ என்று பெயர்.

&lsquoO’ இரத்த வகையில் A,B ஆன்டிஜென்கள் இல்லை. அதனால், எவ்வகை இரத்த குரூப்பைச் சார்ந்த உடலில் செலுத்தினாலும், இரத்தச் செல்கள் ஒட்டிக் கொள்வதில்லை.


எனவே &lsquoO’ வகை இரத்தத்தை உடையோர் ‘யுனிவெர்செல்டோனர் (Universal Donor) எனப்படுகின்றனர். இவர்கள் எந்தவகை இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கும் இரத்ததானம் செய்யலாம்.

&lsquoAB’ வகையில் ஆன்டிபாடிகள் கிடையாது. எனவே, அவர்கள் பெறும் இரத்தவகையிலுள்ள ஆன்டிஜென்களுடன் வினைபுரிவதில்லை என்பதால் அவர்கள் ‘யுனிவெர்சல் ரெசிப்பியன்ட்ஸ்’ (Universal Receipients) எனப்படுகின்றனர். இவர்கள் எந்த வகை இரத்தம் உடையவர்களிடமிருந்தும் இரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.



இரத்தத்தானம் செய்யக் கூடாதவர்கள்:

- &lsquoAIDS’ நோயாளிகள் (HIV)

- மரபியல் நோயாளிகள் (ஹீமோபிலியா, நிறகுருடு)

- கர்ப்பிணிப் பெண்கள்

- பாலூட்டும் தாய்மார்கள்

- பால்வினை நோயுடையவர்கள் (கொனீரியா, சிஃபினிஸ்)

பொதுவாக ஒருவர் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இரத்ததானம் செய்யக்கூடாது. உடல் ஆரோக்கியம் உள்ளவரே தானம் செய்யலாம்!



***
thanks amudamtamil
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "