...

"வாழ்க வளமுடன்"

01 ஜூலை, 2011

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? = part - 1

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


சாறி கட்டுமுன் கவனத்தில் கொள்ளவும்


1. சில சாறிகளில் உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்கவேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்றப் பக்கம் மங்கலாக இருக்கும். இதனை அவதானித்துக் கொள்ளவும்.


2. சாறியின் ஒரு முனையில் முகதலையும் மறுமுனையில் சில சாறிகளில் சட்டைக்கான துணியும் இருக்கும். சட்டை தைப்பதற்கான் துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் கூடியதாக இருக்கும்.

3. சாறி கட்டுவதற்கு முன் அதனை அயன் செய்து கொள்ளுங்கள்.

சாறி கட்டுவது எப்படி?

சாறி பல விதமாக கட்டுகிறார்கள். ஆனால் பொதுவான ஒரு முறை பற்றி இங்கே விளக்கம் தரப்படுகின்றது.






சாறியின் வெளிப்பக்கம்(அழகான பக்கம்) வெளியே தெரியக்கூடியதாக, சாறியின் முகதலை அற்ற முனையைப் வலது கையால் பிடித்து (அகலமான கரை கீழே இருக்கக் கூடியதாக) மேல் கரைத்தலப்பில் இரண்டு மூன்றுமுறை கொய்து சிறிய மடிப்புகள் மடித்து அதனை கட்டியிருக்கும் உள்பாவாடைக்குள் வலது பக்க இடுப்போரமாக செருகுங்கள். (செருகும்போது சாறியின் கீழ் உயரத்தை அவதானித்துக் கொள்ளுங்கள்) அனேகமானோர் நுனியில் ஒரு சிறு முடிச்சுப் போட்டு அதனைச் செருகுவர்.

2. அதன்பின் சாறியின் மேல்கரைப் பகுதியை சுருக்கிப் பிடித்து இடப்பக்கமாக எடுத்து உடம்பை ஒருமுறை சுற்றியபின் சாறியின் மேல்கரையைப் பிடித்து திரும்பவும் வலது வயிற்ரடியில் உள்பாடைக்குள் இறுக்கமாகச் செருகுங்கள். சாறியின் உயரத்தைக் கவனித்து அதற்கு ஏற்றாப்போல் உயர்த்தியோ இறக்கியோ செருகி விடுங்கள். இப்போது உடம்பைச் சுற்றிய சாறியின் மேல் விளிம்பு பாவாடைக்கு மேல் தெரியலாம். அவற்றையும் உடம்பைச் சுற்றிவர பாவாடைக்குள் செருகி விடுங்கள்.

3. இப்போது மிகுதியாக இருக்கும் சாறியை திரும்பவும் இடது பக்கமாகச் எடுத்து உடம்பை மீண்டும் ஒருமுறை சுற்றி இடது தோழின்மீது போட்டுவிடுங்கள். இம் நிலையில் நீங்கள் விரும்பும் உயரத்தில் தாவணி தொங்கக் கூடியதாக உயரத்தை (உயரமாகவோ, பதிவாகவோ) சரிசெய்து கொள்ளுங்கள்.

இப்போது சேலையின் முன் பக்கத்தில் சேலையின் ஒரு பகுதி தொய்வாக தொங்கிக்கொண்டு இருக்கும். அதில்தான் கொய்யகம் அமைக்க வேண்டும். சேலையை முதல் சுற்று சுற்றி இடுப்பில் செருகிய இடத்தில் இருந்து சுமார் நான்கு விரல்கள் அகலத்திற்கு மடிப்புகளாக மடித்து (தொய்ந்த சாறி இறுக்கமாகும்வரை) கொய்து கொண்டு அதனை வலது பக்க வயிறரடியில் முதல் செருகிய இடத்தில் ஒழுங்காகாகவும் இறுக்கமாகவும், கரைகள் வெளியில் தெரியாதபடி, முழுமடிப்பும் உள்ளே ஒழுங்காக இருக்கக்கூடியதாக செருகுங்கள்.(இல்லையேல் அவ்விடம் முன்னுக்கு தள்ளி அசிங்கமாக இருக்கும்).


இப்போது கொய்து செருகிய இடத்தில் இருந்து மேல்கரையை உடம்பைச் சுற்றி அணைத்துப் பிடித்து (நெஞ்சை மறைத்து) கொஞ்சம் இறுக்கமாக தோழ்மூட்டடியில் வைத்து ப்ளவ்சுடன் பின் செய்து விடுங்கள்

இப்போது சாறியின் கீழ்க்கரை சுற்று ஒழுங்காக இருக்கின்றனவா என பார்த்துக் கொள்ளுங்கள். சில வேளைகளில் ஒருபக்கம் உயர்ந்தும் பதிந்தும் காணப்படும். அப்போது கரையைக் கொஞ்சம் கீழ் இழுத்து சரிப்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டாவது சுற்றில் பின்பக்கச் சாறி வலதுபக்கமாக உயந்து சென்று வலது கமக்கட்டுக்குக் கீழால் நெஞ்சை மூடிக்கொண்டு இடது தோழ்மூட்டுவரை சென்றிருக்கும். இந்த நிலையில் இளம் பெண்கள் தாவணியயை பின்னால் தொங்க விடாது இடது கையில் முழங்கையில் ஏந்தி பரவி விட்டு பிடித்திருப்பார்கள்.

வயது வந்தோர் தாவணியின் மேல்கரை தோழின் உட்பகுதியிலும், கீழ்க்கரை மேற்பக்கமாகவும் வருமாறு மடித்து ப்ளவ்சுடன் பின் பண்ணி பின்னால் தொங்க விடுவார்கள். இவ்வாறு செய்யும்போது சாறியின் மேற்கரை நெஞ்சின் உள்பக்கத்தில் மறைக்கப்பட்டுவிடும்.

அத்துடன் கொய்து முன்னுக்ககு செருகப்பெற்ற மடிப்புகள் ஒழுங்காகவும், நீற்ராகவும் இருக்கின்றனவா என பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள். அவற்றின் மடிப்புகள் விலகாது இருப்பதற்காக மடிப்புகளின் உள்புறமாக ஒரு சேவ்ரி பின்னால் வெளியே தெரியாதபடி பின் செய்து கொள்ளுங்கள்.

முன்னால் எடுத்து இடது தோழில் இடப்பெற்ற (தாவணியை) முகதலையை எடுத்து கீழ்க் கரை மேல் பக்கமாக இருக்கக் கூடியதாக் சுமார் ஒரு சாண் அகலத்தில் அடுக்காக மடித்து விட்டு இரண்டு மூன்று இடத்தில் விலகாது இருக்க பின் செய்யுங்கள்.

இப்போது தாவணியை இடது தோழில் போட்டு கீழே தூங்கும் உயரத்தை சரிசெய்யுங்கள்.

தாவணி சரியாக அமைந்தால் மடிக்கப் பெற்ற தாவணியை தோழ்ப்பகுதியில் வைத்து ப்ளவ்சின் உள்பகுதியின் கீழ் ஊசியைக் குடுத்தி வெளியே ஊசி தெரியாதபடி பின்பண்ணி விடுங்கள்.

தோழில் பின் செய்யப்பெற்ற மடிப்புகளுக்கு ஏற்றவாறு நெஞ்சுப் பகுதியில் இருக்கும் சாறியின் சுருக்கங்கள் ஒழுங்காக உள்ளனவா என்பதனையும் கவனித்து கொள்ளுங்கள். ப்ளவ்சோடு அமைந்திருக்கும் மடிப்பு விலகாது இருப்பதற்காக ப்ளவ்சின் நெஞ்சுப்பகுதில் உள்பக்கமாக பின் செய்து விடுங்கள். கீழே உள்ள படங்கள் சிலவற்றில் மேல்கரை வெளியே தெரிவதையும் மற்றையவற்றில் கீழ்க்கரை வெளியே தெரிவதையும் அவதானிக்கலாம்.

குறிப்பு:
சாறி கட்டுவதற்கு முன் அதனை உடம்பில் சுற்றி அளவிட்டு மடிப்புகள் வரும் இடங்களை குறிப்பெடுத்து அவ்விடங்களில் முன் கூட்டியே பின்பண்ணி வைத்தால் சாறி கட்டுவது சுலபமாக இருக்கும்.

முகதலைப்பகுதியை மடிக்கும்போது முகதலை விளிம்புகள் ஒழுங்காக இருக்குமாறு பாத்து மடித்து மூன்று நான்கு இடங்களில் பின்பண்ணி வைத்திருங்கள். சாறி கட்டியபின் தேவையில்லாதவற்றைக் கழற்றிவிடலாம்.


*

ஆள் பாதி... ஆடை பாதி என்பது பழமொழி. இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஒருவரை பார்க்கும்போது அவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே நாம் அவரை மதிப்பிடுகிறோம்.

கோடைகாலம் பிறந்தாச்சு கொண்ட்டாட்டங்களுக்கும் கோயில் திருவிழாக்களுக்கும் குறைவே இல்லை. தங்கள் அழகை எடுப்பாக காட்ட இதுதான் நல்ல சந்தற்பம் என சொப்பிங் செல்லும் பெண்கள் கூட்டம். இதுவே நாட்டு நடப்பகிவிட்டது.

சில பெண்கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடைவையாக இருந்தாலும் அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மொடர்ன் உடைகளாக இருந் தாலும் உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப் பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும் கவரலாம்.

அதாவது கந்தையான ஆடையாக இருந்தாலும் அதை துவைத்து, அயர்ன் செய்து அணிந்தால் அழகாகவே இருக் கும். நிறத்திற்கும், தோற்றத்திற்கும், உயரத் திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம். ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. முடியை கழுத்துக்கு மேல் தூக்கி முடி அலங்காரம் செய்யவும் கூடாது.

சிறிய போர்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம். சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும் போட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும் இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு நிறங்களில் அணியலாம்.

உயரமான ஒல்லியான பெண்கள் கறுப்பு அல்லது மாநிறமாக உள்ளவர்கள் கடும் நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத் தாலும் அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறிமாறி வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ அணியவேண்டும். உயரமானவர்கள் கழுத்தில் நீளமாகத் தொங்கும் ஆபரணங்கள் அணியாமல் கழுத்தை ஒட்டி இருக்கும் சிறிய நெக்லஸ் அணியலாம்.

நல்ல நிறமான சிகப்பாக இருப்பவர்கள், குட்டையாக, ஒல்லியாக இருந்தால் பிளேனாக டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது ஜாக்கெட் அடர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம். கருப்பாக, குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய சரிகை போர்டர் வைத்தோ அல்லது மெல்லிய போர்டருடனோ சேலை அணிய லாம். பெரும்பாலும் போர்டரும், சேலையின் தலைப்பும் உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். கடும் நிறத்தில் உள்ள சேலைகளை கறுப்பாக இருப்ப வர்கள் அணிய வேண்டாம்.

அப்படி அணியும்போது அதில் சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக இருக்கும். குண்டாக இருப்பவர்கள் உடலுடன் ஒட்டியவாறு ஆடைகளை அணியக் கூடாது. டொப்பும், பொட்டமும் வெவ் வேறு நிறத்தில் இருக்குமாறு சுடிதார் அணியலாம். துப்பட்டாவை தவிர்க்க லாம். அல்லது கணுக்கால் வரை மிடி அணிந்து நீண்ட கைகளை உடைய டொப்ஸை இன் செய்து அணியலாம்.

மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து அதில் அடி நுனி வரை பூவேலை அமைந்திருந்தால் தோற் றத்தை சிறிது உயரமாகக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும். முடிந்த அளவு உயரமான செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.

குட்டையான கழுத்து இருந்தால், அதை இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது. நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும்படியாக அணியலாம். மெல்லிய நீளமான சங்கிலி அணிய லாம். கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில் நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம்.

காதைத் தாண்டி முடியில் மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம். ஒல்லியாக இருப்பவர் கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகத் தெரிவார்கள். இறுகிய உடைகளையும் தவிர்க்க வேண்டும்.

பேண்ட், டீ ஷேர்ட் அணிபவர்கள் டீ ஷேர்ட்டை இன் செய்யாமல் அணியவும். பேண்ட், ஷேர்ட் அணிபவர்கள் ஷேர்ட்டில் டிசைன்கள் இருந்தால் இன்னும் அழகாகக் காணப்படுவார்கள்.

சீசனுக்கு தகுந்த மாதிரி துணிகளை தேர்வு செய்வது எப்படி?
இப்போதெல்லாம் குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி பிரான்டட் ஆடைகளை வாங்குவது வழக்கமாகி விட்டது. அது நல்லதுதான். தரம் இருக்கும். ஆனால் அது சீசனுக்கு ஏற்ற உடையா என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை விற்கும் போது சீசனுக்கு பொருத்தமில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து தேவையில்லாமல் கஷ்டப்படுகிறோம்.

ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப் பொறுத்தவரை இரண்டு சீசன்களாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து வசந்த காலம் வரை (மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) ஒரு சீசனாகவும், இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை (செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) இன்னொரு சீசனாகவும் பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த காலம் வரையிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம் வரைக்கும் பொருந்துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்.



***



வெயில் காலம் முதல் வசந்த காலம் வரைக்கும் பொருத்தமானவை:

பிரைட் கலர்களில் பெரிய பிரின்ட் போட்ட டிசைன்களில் மிருதுவான துணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்டனில் கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம்.


காஞ்சி காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க் காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி சுடிதார், சல்வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ளலாம்.


ஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக்கும்.




வெயில் காலங்களில் ஏற்படும் கசகசப்பை மீறி கல்யாண வீடுகளுக்கு, பார்ட்டிகளுக்கு போகும்போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப் புடவையை விட அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.


ஆண்களுக்கு காட்டன் வேட்டி, அரைக்கை சட்டை அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்கு காட்டன் பேன்ட், சட்டை வசதி, கை வைக்காத, ஓப்பன் நெக் பனியன் போடலாம்.


காட்டன் குர்தா, பைஜாமாவும் பொருத்தமாக இருக்கும்.


***



உயரமானவர்களுக்கான உடை அலங்காரங்கள்


புடவை:



பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.


அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.


பெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.



பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.


பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.


பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "