...

"வாழ்க வளமுடன்"

04 ஜூலை, 2011

நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது.

இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு(amniotic membrane) உள்ளது. இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று கேழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.



இதன் அறிகுறிகள்

திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்) இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடிரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.



மருத்துவ முறை

34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் வைத்திய சாலையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும். ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும். இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.


***
thanks luxinfonew
***




"வாழ்க வளமுடன்"

2 comments:

சாகம்பரி சொன்னது…

இது போன்ற பனிக்குடம் உடைந்தபின் குழந்தை உடனடியாக வெளியேற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. High rupture ,சில சமயம் வலிகூட ஏற்படாது. முதல்முறை தாயாகும் பெண்கள் இதனை தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் இந்த காலத்தில் தனித்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் இது போன்ற சிம்ப்டம்ஸ்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

prabhadamu சொன்னது…

//// சாகம்பரி கூறியது...
இது போன்ற பனிக்குடம் உடைந்தபின் குழந்தை உடனடியாக வெளியேற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. High rupture ,சில சமயம் வலிகூட ஏற்படாது. முதல்முறை தாயாகும் பெண்கள் இதனை தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் இந்த காலத்தில் தனித்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் இது போன்ற சிம்ப்டம்ஸ்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
/////



thanks சாகம்பரி :)


உங்களுடைய டிப்ஸ்ஸையும் ஆழ்கடலில் பகிர்ந்துக் கொண்டதுக்கு மிக்க நன்றி :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "