...

"வாழ்க வளமுடன்"

04 ஜூலை, 2011

சில சந்தேகங்கள்... சில தீர்வுகள்... ( மருத்துவ ஆலோசனைகள் )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


என் குழந்தைக்கு பால் ஒவ்வாமை உண்டு. எனவே, சோயா பால் கொடுக்கிறேன். என் உறவினர், ஆட்டுப் பால் கொடுக்குமாறு கூறுகிறார். நான் இருதய நோயாளி. நானும் அந்தப் பாலை குடிக்கலாமா?

பால் ஒவ்வாமை என்பது, பாலில் உள்ள "லாக்டோஸ்' என்ற பொருளை, உடல் ஏற்றுக் கொள்ளாமையால் ஏற்படுவது.

ஆட்டுப் பால், மாட்டுப் பால் ஆகிய இரண்டிலுமே, "லாக்டோஸ்' உண்டு. ஒரு சில குழந்தைகளின் உடல், மாட்டுப் பாலை விட, ஆட்டுப் பாலை ஏற்றுக் கொள்ளும். ஆட்டுப் பாலில், கொழுப்புச் சத்து குறைவு.

ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளும், இந்த பாலில் குறைவு. எனவே, 2 - 3 நாட்களுக்கு, ஆட்டுப் பால் கொடுத்துப் பார்ப்பதில் தவறில்லை. வயிற்றுப்போக்கு ஏற்படாதவரை தொடரலாம். உபாதை ஏற்பட்டால், சோயா பாலே கொடுக்கலாம்.

***

என் மகனின் காதிலிருந்து பழுப்பு நிற ரத்தம் வெளியேறுகிறது. இதனால் வலியோ, காய்ச்சலோ ஏற்படுவதில்லை. இரவு நேரத்தில் தலையணை எல்லாம் ரத்தமாகிறது...

முதலில் அது ரத்தம் தானா என்பதை பரிசோதிக்க வேண்டும். காதிலிருந்து பழுப்பு நிறத்தில் மெழுகு போன்ற பொருள் சுரக்கும். அது காதில் நிறைந்து விட்டால், நீர்த்து போய், காதிலிருந்து வெளியேறும். எனவே, அதை கவனிக்கவும்.

காதிலிருந்து ரத்தம் வெளியேறினால், அது ஆபத்தின் அறிகுறி. காதில் தொற்றோ அல்லது காயமோ ஏற்பட்டிருக்கலாம். சிறு பையனாக இருப்பதால், காதில் ஏதாவது பொருளை போட்டு கொண்டிருக்கலாம்.

சுத்தம் செய்யும் போது, காயம் ஏற்பட்டிருக்கலாம். எந்த கசிவும் கவனிக்க வேண்டியதே. எனவே, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரிடம், உடனடியாக காண்பியுங்கள்



***
thanks luxinfonew
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "