...

"வாழ்க வளமுடன்"

06 ஏப்ரல், 2011

வேலூர் பிரியாணி சாப்பிடலாமா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேவையான பொருட்கள் ஆட்டிறைச்சி - 1 கிலோ வெங்காயம் - கால் கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி விழுது - 50 கிராம் பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மில்லி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்துமல்லித் தழை நறுக்கியது - 6 மேஜைக்கரண்டி புதினா - 4 தேக்கரண்டி எ லுமிச்சை - 1 பழத்தின் ஜூஸ் ரிஃபைண்டு கடலை எண்ணெய் - கால் லிட்டர் அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாசுமதி) - 1 கிலோ உப்பு - தேவையான அளவு * செய்முறை: ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணைய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும். இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும். மிளகாய்த்தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும். தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் அரை டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் ப்ரஷர் குக் செய்ய வேண்டும். அரிசியை ஒரு முறை அலசி விட்டு. அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும். அதில் அரிசியை சேர்த்து, கூடவே அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேகவிட வேண்டும். எலுமிச்சை சாறு விடுவதால் அரிசி உடையாது இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சை சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணையை மேலே வரும்வரை சூடாக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் சன்னமாக கிளற வேண்டும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில் ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும். தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம். 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும். அப்புறம் என்ன, வெட்ட வேண்டியதுதான்! * குறிப்பு: 'மைக்ரோவேவ் அவன்' உள்ளவர்கள் 'தம்' போடுவதற்கு பதிலாக, மைக்ரோவேவ் பாத்திரத்தில் கலவையைப் போட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் 'குக்' செய்தால் சுவையான, நறுமணம் கமழும் வேலூர் பிரியாணி தயாராகி விடும். *** thanks tamizharuvi *** "வாழ்க வளமுடன்"

2 comments:

GEETHA ACHAL சொன்னது…

சூப்பராக இருக்கு பிரியாணி...

prabhadamu சொன்னது…

/// GEETHA ACHAL கூறியது...
சூப்பராக இருக்கு பிரியாணி...
////


நன்றி கீதா அக்கா :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "