...

"வாழ்க வளமுடன்"

06 ஏப்ரல், 2011

எவரெஸ்ட் சிகரம் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே புவியில் மிக உயர்ந்த சிகரமாகும். இது நேபாள மற்றும் திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது.இச்சிகரத்தை 1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் முதன் முதலாக எடுமண்டு இல்லரி என்னும் நியூசிலாந்துக்காரரும் டேன்சிங் நார்கே என்னும் நேபாளத்து செர்ப்பக்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே சரித்திர சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கொடுதனையே மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணி உலகம் பெருமைப்பட்டது. மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெஸ்ட் உச்சியை எட்ட முடியும். என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர். எவரெஸ்டுக்கு பல பழம் பெயர்கள் வழக்கில் உள்ளன. தேவகிரி, தேவதுர்கப என்று வடமொழியில், திபெத்திய மொழியில் கோமோலுங்குமா(அண்டங்களின் தாய்) என்றும் அழைக்கப்படுகின்றன. இம்மலை ஆண்டொன்றுக்கு 4 மில்லி மீட்டர் உயரம் கூடுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பெருமலைத்தொடர் எவ்வாறு உருவாகியது என்பது பெரு வியப்பான செய்தி. உயர அளவீடும் பெயர் சூட்டும் இராதானாத் சிக்தார் (1813-1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ. தொலைவில் இருந்து கொண்டே தியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்று மட்டும்தான் குறித்திவைத்தருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெஸ்ட் (george everest)என்பாரின் பெயரை இச்சிகரத்துக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு(andrew waugh) என்பார் சூட்டினார். *** தேங்க்ஸ் தமிழ் *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "