...

"வாழ்க வளமுடன்"

21 மார்ச், 2011

பத்மாசன விளக்கமும் பயன்களும்: பாகம் - 2 :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*

பத்மாசனம்:

அனைத்து ஆசனங்களுக்கும் அரியாசனம். எண்பத்து நாலாயிரம் ஆசனங்களின் தலையாசனம். தவத்துக்கோர் தனியாசனம். ஆன்மாவை ஈடேற்றவந்த அமராசனம். கர்மவினைகளைப் போக்கும் கமலாசனம். இதனைப் பத்மாசனம், பதுமாசனம், பங்கயவாசனம், பங்கஜவாசனம், தாமரையாசனம் என்றெல்லாம் யோகிகள் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.


அதுமட்டுமன்றி மனிதனை மானிடத் தன்மைகளோடு வாழ்வித்து, மானுடத் தன்மைகளிலிருந்தும் மேம்படுத்தி அவனைத் தேவனாக்கி வைக்கின்ற தேவாசனம் என்றும் இதன் புகழை ஞானிகள் போற்றுவார்கள்.

*

பத்மாசனம் செய்யும்முறை:-




தரையில் ஒரு நல்ல போர்வையை மடித்துப் போடவேண்டும். அல்லது ஒரு பாயைப் போட்டுக்கொண்டு அதன்மேல் போர்வையை உறுத்தாமல் மெத்தென்று இருக்கம்படியாகப் போட்டுக் கொள்ளலாம். போர்வையில் படிய அமர்ந்து கொண்டு வலது பாதம் இடது தொடையின்மேலும், இடதுபாதம் வலது தொடையின்மேலும் பொருந்தும்படியாக அமைத்துக் கொள்ளவேண்டும். பாதங்கள் மலர்ந்து தாமரை மலர்போலத் தோற்றம் தருவதால், இதனைப் பத்மாசனம், கமலாசனம், தாமரை ஆசனம் என்று அழைப்பார்கள். அமரும்போது எத்திசையை நோக்கி வேண்டுமானாலும் அமரலாம். ஆனாலும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது உத்தமம். வளையாமல் நிமிர்ந்து அமரவேண்டும். அதேசமயம் உடம்புக்குத் தேவையற்ற விறைப்பைத் தரவேண்டாம்.

***

சின்முத்திரை:-

பத்மாசனத்தில் அமர்ந்து கையின் கட்டைவிரலின் முதல் அங்குலாஸ்தியை ஆள்காட்டி விரலின் நுனி தொடுமாறு அமைத்துக் கொள்வதை சின்முத்திரை என்று சொல்லுவார்கள். இவ்வாறு இரண்டு கைகளையும் சின்முத்திரையிட்டு முழங்கால் முட்டிகளின்மேல் கைகளை நீட்டிப் பொருத்திக் கொள்ள வேண்டும். நமது கையினுடைய கட்டை விரலில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்கின்றது. சிந்தனையின் சலனங்களைக் கட்டுப்படுத்துவதால் இதற்குச் சின்முத்திரை என்று பெயரிட்டார்கள்.

*

பிரார்த்தனை:-

இப்படிப் பத்மாசனத்தில் கைகளைச் சின்முத்திரையிட்டு அமர்ந்து கொண்டு, கண்களை மூடி யோகாசனங்களை நமக்குக் கற்றுக் கொடுத்த குருவை தியானித்து நமஸ்கரிக்க வேண்டும். பொதுவாக யோகாசனங்களைப் பயிலுகின்றபோது அனுசரிக்கப்படும் பொதுவிதி இது. இதற்காக அதிகபட்சமாக ஒரு நிமிடநேரம் போதுமானதாகும். தெய்வநம்பிக்கை உடையவர்கள் தங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கிக் கொள்ளலாம்.


ஆக, யோகாசனங்களைப் பயிலத் தொடங்குவதற்கு முன்னால் முதலாவது ஆசனமாகப் பத்மாசனம் போட்டு, குருவணக்கமோ, கடவுள் வணக்கமோ முடித்துக் கொள்ள வேண்டும்.

*

சில மாற்றங்கள்

சிலருக்கு பத்மாசனம் போட்ட உடனேயே ஒரு சுகமான பரவசம் வந்துவிடும். இவர்கள் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ இப்படியே பத்மாசனத்தில் இருந்தபடி கடவுளைத் தியானத்தால் சுகமாக இருக்கும்போல் தெரிகிறதே, இன்னும் சிறிது நேரம் இதில் நீடித்து இருந்தாலென்ன என்று எண்ணுவார்கள். இப்படி நினைப்பவர்கள் ஆசனப்பயிற்சி முழுவதையும் முடித்துக்கொண்டு கடைசியாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், கால வரையறையின்றி பத்மாசனத்தில் அமர்ந்தபடி தியானம் செய்துகொண்டு இருக்கலாம். கால்கள் வலிப்பெடுக்க ஆரம்பிக்கின்றபொழுது பிரித்துக்கொள்ளலாம்.


இங்கே முதல் ஆசனமாகப் பத்மாசனத்தை விளக்கியிருக்கின்றேன். இதைப் பின்பற்றி ஆசனங்கள் செய்யத் தொடங்குபவர்களுக்குக் கற்பிக்கப்படும் முதல் ஆசனம் இதுதான். ஆகவே ஒரு நிமிடம் முதல் அரைமணிநேரம் வரையில்கூடப் பத்மாசனத்தில் இருந்து பழகலாம் என்றாலும் ஆசனப்பயிற்சிகளின் தொடக்கத்தில் பத்மாசனமிட்டு ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தால் போதும்.

அதற்காக முரட்டுத்தனமாகக் கால்கள் வலிக்க வலிக்க வலியைப் பொறுத்துக்கொண்டு பத்மாசனம் பயிலக்கூடாது. பத்மாசனம் மடடுமல்ல எந்த ஒரு யோகாசனத்தையும் கடினமாக உடலை வருத்திக்கொண்டு பயிலக்கூடாது. ஆகவே பத்மாசனம் போட்டுக் கொஞ்சநேரத்திலோ, அதிக நேரத்திலோ கால்கள் வலிக்கும்போது பிரித்துவிட வேண்டும்-

சிலருக்கு முதலில் வலது காலைத்தூக்கி இடது தொடைமேல் அமைத்துக்கொண்டு அதன் பின்னர் இடது காலைத்தூக்கி வலது தொடைமேல் பொருத்தமுடியாது சிரமப்படுவார்கள். அவர்கள் முதலில் இடது பாதத்தைத் தூக்கி வலது தொடைமேல் பொருத்திக் கொண்டு அதன்பின்னர் வலது பாதத்தைத் தூக்கி இடது தொடையின்மேல் பொருத்திக் கொள்ளலாம். இதில் பிழையேதுமில்லை. இருப்பினும் முதலில் வலது பாதத்தை எடுத்துச் செய்வது சுபமானது.


இன்னும் சிலர் ஒரு பாதத்தைத் தூக்கிப் பொருத்தி விடுவார்கள். மற்றப் பாதத்தைத் தூக்கிப் பொருத்த முடியாமல் போய்விடும். பொருத்த முயன்றால் முதலில் போட்ட கால் விசுக்கென்று கீழேநழுவி இறங்கிவிடும். எவ்வளவு முயன்றாலும் வராது.


அப்படிப் பட்டவர்கள் ஒரு காலைமட்டும் தூக்கிப் போட்டுக்கொண்டு வணக்கத்தைத் தொடங்கலாம். பின்னர் படிப்படியாக மற்றக் காலையும் தூக்கி அமைத்துக்கொண்டு பழகிக்கொள்ளலாம். சிலநாட்கள் பயிற்சிக்குப் பின்னர் இரண்டு கால்களும் சரியான இணக்கத்துக்கு வந்து பத்மாசனம் சரியாக அமைந்துவிடும். இப்படி ஒருகாலை மட்டும் போட்டுச் செய்வதால் அதற்கு அர்தத பத்மாசனம் என்று பெயர்.

இவ்வாசனத்தை ஆண், பெண் இருபாலரும் வயது பேதமில்லாமல் செய்யலாம். கருவுற்ற தாய்மார்கள்கூட இப்படிப் பத்மாசனத்திலோ அல்லது அர்த்த பத்மாசனத்திலோ இருந்து பழகுவதும்இ தியானம் செய்வதும் மிகவும் நல்லது.

*

பயன்கள்:-


பத்மாசனத்தில் இருக்கின்றபோது மனிதநரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சியைப் பெறுகிறது. நமது உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் ஒழுங்குபட்டு நடப்பதால் சுவாசம் சீரான இயக்கத்துக்கு வருகிறது. நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றிலுள்ள பிராணவாயு இரத்தத்தோடு பூரணமாக் கலக்கிறது. கரியமிலவாயு செம்மையாக வெளியேறுகிறது. இவ்வாறு சுவாசமும் இரத்த ஓட்டமும் சீரானகதிக்கு வருவதால் இரத்த அழுத்தமும் இயல்புநிலைக்கு வருகிறது.


மன அமைதியின்மையும் மனச்சஞ்சலங்களும் மறைகின்றன. மனத்தின் இறுக்கநிலை தளர்ந்து மனம் அமைதியைப் பெறுகிறது. மனோபலம் வருகிறது. முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், கால் எலும்புகள் ஆகியன வலிமை பெறுகின்றன. கூனல் விழுவது தடுக்கப்படுகிறது.

*

மானிடநரம்பு மண்டலமும் பத்மாசனமும்:-

பண்டைக்காலத்தில் ஞானிகள் மனித உடம்பின் இயக்கங்களை மிகத் துல்லியமாக அறிந்திருந்ததைப் போன்று தற்காலத்து அறிஞர்கள் மனித உடம்பின் இயக்கங்களை அறியமுடியவில்லை. அல்லது அறிந்து முடிக்கவில்லை. மானுட தேகம் ஒரு அதிஅற்புதமான இயந்திரமாகும். மனித உடம்பில் 72,000 நரம்புகள் பின்னிப் பிணைந்துள்ளன. இத்தனை நரம்புகளுக்கும் ஜீவ ஆதாரமாக இடை, பிங்கலை, சுஷூம்ணா (தண்டுவடம்) ஆகிய மூன்று நரம்பு இயக்கங்களும் இயங்கி மனிதனைச் செயல்பட வைத்துக் கொண்டுள்ளன.

மனித முதுகெலும்பும் பல எலுமபுகளால் அமைந்த ஒரு எலும்புத்தொடராகும். இதன் இடையேயுள்ள துளை வழியேதான் தண்டுவடம் மூளைக்குச் செல்கிறது. இதனை சுஷூம்ணாநாடி என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தண்டுவடம்தான் நமது உடம்பைப்பற்றிய எல்லாச் செய்திகளையும் மூளைக்கு அறிவிக்கிறது. மனித உடம்பில் வலதுகால் பெருவிரலில் இருந்து ஒரு நரம்பு ஆரம்பித்து, முழங்கால் தொடை வழியே சென்று தண்டுவடத்தைச் சுற்றியபடியே மேலேறிப் பின்பக்கமூளையில் இணைகிறது.


இந்த நரம்பை யோகிகள் பிங்கலை நரம்பு (Right Nerve) என்று குறிப்பிடுகிறார்கள். இதைப்போலவே இடதுகால் பெருவிரலில் இருந்து தொடங்கி ஒரு நரம்பு முழங்கால், தொடை வழியே சென்று தண்டுவடத்தைச் சுற்றியபடியே மேலேறிப் பின்பக்க மூளையில் இணைகிறது. இந்த நரம்பை இடைநரம்பு (Left Nerve) என்று யோகிகள் குறிப்பிடுவார்கள்.

*

ஆறுவகை இணையங்கள: (six plexus)

இந்த இடைநரம்பும், பிங்கலை நரம்பும் கடைசி முதுகெலும்பு (இடுப்புப்பகுதி), அடிவயிறு, தொப்புள், இதயம், தொண்டை, புருவமத்தி ஆகிய ஆறு இடங்களுக்கு நேர்பின்பக்கமாக முதுகெலும்பிலுள்ள தண்டுவடத்தோடு ஆறு இடங்களில் எதிர்எதிராகச் சந்தித்துக் கொள்கின்றன. இந்தச் சந்திப்புக்களை ஆறு ஆதாரகமலங்கள் என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். அவை

1. மூலாதாரம் - Pelvic Plexus

2. சுவாதிஷ்டானம் -- Hypogastric Plexus

3. மணிப்பூரகம் - Solar Plexus

4. அநாதகம் - Cardiac Plexus

5. விசுக்தம் - Pharyngeal Plexus

6. ஆக்ஞை – Commanding Plexus

ஆகும். இவைகளை யேயோகிகள் ஆதாரகமலங்கள் என்றும், உடற்கூற்று விஞஞானிகள் (Plexus) என்றும் குறிப்பிடுகிறார்கள். உடம்பில் இவற்றின் இயக்கங்களை ஜீவனாடிகள் என்று சொல்லலலாம். இவைகளின் இயக்கத்தை முறையே கணுக்கால்கள் அல்லது பாதங்கள், பிறப்புறுப்புக்கும் தொடைக்கும் இடையேயுள்ள மடிப்புக்கள், தொப்புள், இதயம், தொண்டை, கன்னப்பொட்டுக்கள் இவற்றில் விரல்களைப் படியவைத்துப் பார்த்தால் இங்கெல்லாம் நாடிகள் துடிப்பதை எவரும் உணரலாம்.

பெரும்பாலும் இடை, பிங்கலை நரம்புகள் ஆதாரகமலங்களில் இணைகின்ற இணைப்புக்களில் பலவீனம் நேர்வதால்தான் முதுகுவலி, இடுப்புவலி, கழுத்துப்பிடரி வலி, நரம்புத்தளர்ச்சி ஆகிய தொல்லைகள் ஏற்படுகின்றன. இதுமட்டுமன்றி புருவமத்தியில் (Commanding Plexus) நேருகின்ற கோளாறும் உண்டு. இதனால் பக்கவாதம், மாறுகால் மாறுகைவாதம், முகவாதம் ஆகிய வாதநோய்கள் தோன்றுகின்றன.

*

ஆறுவகை இணையத்தில் ஆடுகின்ற நாடிகள்:



1. ஆக்ஞை

2. விசுத்தம்

3. அநாதகம்

4. மணிப்பூரகம்

5. சுவாதிஷ்டானம்

6. மூலாதாரம்

7. முதுகெலும்புத்தொடர்

8. தண்டுவடம்

9. குண்டலினிசக்தி

10. இடைநரம்பு

11. பிங்கலைநரம்பு


பத்மாசனம் இந்தத் தொல்லைகளுக்கெல்லாம் ஒரு நல்ல தடுப்பானாகப் பயன்படுகிறது. புத்மாசனப் படத்தைப் பாருங்கள். வலதுகாலும், இடதுகாலும் எதிர் எதிராக அமையக் கால்களில் நாம் இன்னொரு புதிய இணையத்தை (Plexus) உருவாக்கி விடுகிறோம். இதனால் முதுகெலும்பிலுள்ள ஆறு ஆதாரஸ்தானங்களும் பரவசமும், சுறுசுறுப்பும் எய்தி நமது உடம்பின் நரம்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்கின்றன.

*

பத்மாசன நேரம்:-

பத்மாசனத்தின் நரம்பியல் ரீதியான விளக்கங்களையும், பயன்களையும் படிக்கும் வாசகர்களுக்கு, இவ்வளவு நல்ல ஆசனத்தை நீண்டநேரம் பழகினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வரலாம். பொதுவான மானுட உடல் நலத்துக்குப் பத்து அல்லது பன்னிரண்டு ஆசனங்கள் போதுமானவை.


இப்படி ஆசனங்களைப் பயிலுபவர்கள் பத்மாசனத்தில் ஒரு நிமிடம் இருந்து குருவணக்கத்தை முடித்துக்கொண்டு, அடுத்து எல்லா ஆசனப்பயிற்சிகளையும் முடித்துக்கொண்டு, கடைசியாக தியானம் செய்வதற்காகப் பத்மாசனத்தில் கால்கள் வலிக்காத வகையில் எவ்வளவுநேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

*

கமலசாதகன்:-

பத்மாசனத்தில் சாதாரணமாக ஒரு நிமிடம் முதல் அரைமணி நேரம்வரை இருக்கலாம். இதனால் மானுடஉடம்பும், மனமும் அற்புதமான இயற்கைப் பயன்களைப் பெற்றுக் கொள்கின்றன. இப்படி அரைமணி நேரம் பத்மாசனம் பழகும் சாதகனைக் கமலசாதகன் என்றும், ஒரு பெண் இப்படிப்பழகினால் அவளைக் கமலசாதகி என்றும் யோகாசாத்திரம் குறிப்பிடுகிறது.

இவனது உடம்பும் நரம்பு மண்டலமும் உன்னதமாக இயங்கும். அதுமட்டுமல்லாமல் இவனைச்சுற்றி ஒரு காந்தசக்தி வளையம் உருவாகி இவனுக்குத் தெய்வீக சக்திகளைத் தரும். இவனுக்கு வாழ்க்கiயில் துன்பங்கள் வரமாட்டா. வந்தாலும் இவை எளிதாக நசிந்து போய்விடும் என்றும் யோகசாத்திரம் வாக்களிக்கிறது.

*

கமலபீபத்சு:-

ஒரு கமலசாதகன் அரைமணி நேர பத்மாசன சாதகத்தில் தெய்வீக சக்திகளைப் பெற்றுக் கொள்ளுகிறான். இந்தப்பயிற்சிளை ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றரை மணிநேரம் பத்மாசனம் பழகி அதைக் காலை, மாலை தினசரிப் பழக்கமாக்கிக் கொண்டுவிட்டால் இவனைக் கமலபீபதச்சு என்று யோகசாத்திரம் போற்றுகிறது. இந்தக் கமலபீபத்சன் தெய்வத்துக்குச் சமமானவன். இவன் கைபட்டால் துயரங்கள் அகலும. இவன் பாதங்கள் பட்ட இடம் தோஷங்கள் அகன்று சுபம் பெறும்.


பெண்கள் இந்தப் பத்மாசனத்தைக் காலை, மாலை இரண்டு வேளையும் அப்பியாசம் செய்துவந்தால் அவள் எல்லாவிதப் பயன்களையும் அடைவதோடு, தெய்வீகசக்திகள் மிகுந்த தேவதைக்கு ஈடானவள் ஆவாள். இவளே ஒரு கன்னிப் பெண்ணாக இருந்தால் நல்ல கணவனும், நவநிதியங்களும், சற்புத்திரப் பேறும் உண்டாகும். இப்படிக் கமலசாதகம் செய்கின்ற பெண் எவளும் அமங்கலி ஆகமாட்டாள். இருக்கும் காலம்வரை மஞ்சள், குங்குமம், புஷ்ப பூஷணாதிகளோடு தீர்க்க சுமங்கலியாகவே இருப்பாள். கல்வியும், ஞானமும், ஒழுக்கமும், தேகசுகமும், நிறைஆயுளும் கொண்ட நல்ல சந்ததிகள் அவள் வயிற்றில் பிறப்பார்கள். இவர்களின் காந்த சக்தியானது கோள்களின் தீய சக்திகளை வென்றுவிடுவதால், ஜாதகரீதியான கிரகங்களின் தீய பலன்களும் மாறி விடுகின்றன என்று யோகசாத்திரம் கூறுகிறது.

*

ஒரு வேண்டுகோள்:-


ஏதோ பத்மாசனத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று கருதி நான் இவற்றையெல்லாம் ஜோடனை செய்து எழுதியிருப்பதாக யாரும் கருதவேண்டாம். இதைச் சோதனைக்காக எடுத்துக்கொண்டு பழகி எவரும் சோதித்துப் பார்க்கலாம். சில நாட்களிலேயே இதன் நிஜத்தை உணர்வீர்கள்.


மனித காந்தசக்தி என்பது அளப்பெரிய வல்லமையுடையது. பத்து அல்லது இருபதுபேர் சேர்ந்து இதை அப்பியாசம் செய்து, சொந்த அனுபவங்களையும் சுற்றுப்புற விளைவுகளையும் ஆய்வு செய்து பார்த்தால் அதன் உண்மைகள் வியப்பளிப்பனவாக இருக்கும்.


இந்த யோகாசன விளக்கத்தின் மூலமாச் சர்க்கரைநோயை அடியோடு தீர்த்துப் பூரண நலத்தைத் தரக்கூடிய ஆசனங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பயில இருக்கிறோம். ஆதலால் வாசகர்களின் ஆர்வத்தையும் வேகமான எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு இப்போது அடுத்த ஆசனப்பயிற்சிக்கு வருகிறோம். இந்த ஆசனத்தைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.


ஒரு ஆசனத்தைப்பற்றிய நம்பிக்கை வரவேண்டுமானால், அது உடம்பில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டியது அவசியமானதாகும். அவ்வாசனம் உடம்பில் செயற்படும் சிறப்பை விபரிக்கும்போது நமது உடம்பின் உள்ளுறுப்புக்களின் இயக்கத்தையும், அந்த இயக்கங்களில் யோகாசனத்தின் செயற்பாடுகள் என்ன என்பதையும் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ளுகின்ற போது பயிற்சியாளருக்குப் பூரணமான நம்பிக்கையும் உற்சாகமும் பிறந்துவிடுகிறது. இந்த நம்பிக்கைதான் அவர் பயிற்சியைக் கைவிடாமல் தொடர வழிவகுக்கும். இனி அடுத்த ஆசனம்பற்றிய விளக்கத்துக்கு வருவோம்.

***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "