...

"வாழ்க வளமுடன்"

21 மார்ச், 2011

சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள். பாகம் - 1 :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


தம்மை நாடி வருவோருக்கு எவ்வித மருந்து முறையும் இல்லாமல் எல்லா வகையான நோய்களையும் யோகாசனங்கள் மூலமாகவே குணப்படுத்தியுள்ள ஸ்ரீ ஞானஜோதி சம்பங்கி அவர்களின் ”சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள்” என்ற படைப்பிலிருந்து முக்கியமானவற்றைத் தொகுத்து எமது வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.


பஞ்ச பூதங்களின் விகிதாசாரம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மனித உடல்நலம் இரண்டே வழிகளில் கெடுகிறது. ஒன்று வெளிப்புறத்தில் இருந்து வந்து நம்மைத் தாக்கும் கிருமிகளால் உடல்நலம் கெடுகிறது. இரண்டாவது நமது உடம்புக்குள்ளே அமைந்திருக்கும் ஜீவாதாரமான சுரப்பிகள் தமது பணியிலிருந்து குன்றுவதால் உடல்நலம் கெடுகிறது. இந்த இரண்டு காரணங்களும் நம் எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரிந்த காரணங்களாகும்.


இந்த இரண்டு காரணங்களில் முதல் காரணமான வெளிப்புறக் கிருமிகள் நீர், காற்று, உணவு வழியாக நமது உடம்புக்குள்ளே புகுந்துவிடுமானால் அவற்றை எதிர்த்துத் தாக்கி அழிக்க நமது உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியும், வெள்ளணுக்களும் வலிமையுள்ளனவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது கிருமிகள் நம்மை நோய்வாய்ப்படச்செய்து வீழ்த்தி விடுகின்றன.


இதற்கான சில எளிய யோகாசனங்களை தினசரி பழகிவருவதன் மூலம் நாம் நமது இரத்தத்தை இயற்கையான முறையில் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் சமசீராக இரத்தஓட்டம் செல்லுமாறு செய்து, போதிய பிராணவாயுவைப் பெற்றுக் கொண்டு நலம்பெறவும் முடியும். தூய இரத்தமும், உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் குறைவில்லாமல் செலுத்தப்படும் இரத்தஓட்டமும், போதியளவு பிராணவாயுவும் மானிட நலனுக்குப் பிரதானமானவை என்பது நாமெல்லாம் அறிந்த உண்மை. இவை மூன்றும் யோகப் பயிற்சியால் நமக்குக் கிட்டுகின்றன. நமது உடம்பிலுள்ள பஞ்சபூதங்களின் சமநிலை காக்கப்படுவதோடு, நமது உடம்பின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் நல்ல பயிற்சி கிட்டி அவை சீராகவும் நிலை மாறாமலும் தமது பணியைச்செய்ய யோகாசனங்கள் துணைபுரிகின்றன. ஆகவே யோகப்பயிற்சி செய்யும் ஒருவருக்கு உடல்நலம் கெடுவதற்கான வாய்ப்பு இல்லை. ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் அவை யோகப்பயிற்சியால் மிகத் துரிதமாக அகன்று ப+ரணநலம் கிட்டுகிறது.


***

யோகாசனங்கள் பற்றிய தவறான கருத்து:-

யோகாசனங்கள் என்றால் அவை பழகுவதற்கு மிக்க சிரமமானவை. எல்லோராலும் அவற்றைச் செய்ய முடியாது. அதற்கான தனி உடல்வாகு வேண்டும். அவர் இப்படித்தான் யோகாசனம் பழகி துன்பத்துக்கு .


யோகாசனங்களை இல்லறத்தில் இருப்பவர்கள் செய்யக்கூடாது, தாம்பத்திய சுகம் கெட்டுப்போகும், வாழ்க்கையில் பற்றற்ற விரக்திநிலை உண்டாகிவிடும் என்றும் சிலர் புழுகுவார்கள். இன்னும் சிலர் ஆசனப்பயிற்சிகளைப் பற்றி ரொம்பத் தெரிந்தது போல், யோகாசனங்களைப் பொழுது விடிவதற்குள் செய்துவிட வேண்டும், அதற்கென்று தனியான உணவு முறைகளைப் பழகிக்கொள்ள அசைவ உணவு அடியோடு ஆகாது, கணவன் மனைவி உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது, அப்படியே இருந்தாலும் உடலுறவு நாட்களில் ஆசனப்பயிற்சிகளைத் தவிர்த்துவிட வேண்டும், மொத்தத்தில் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒத்துவராது, இவற்றையெல்லாம் சன்னியாசிகள் தான் செய்யவேண்டும் என்றெல்லாம் கதைவிடுவார்கள். இவையனைத்தும் பொய்களே. அனுபவமின்மையாலும், அறியாமையாலும் சொல்லப்படும் கதைகளேயாகும்.


யோகாசனங்களைக் காலை, மாலை இரண்டு வேளையும் செய்யலாம். வயிறு காலியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஏந்த உணவும் சாப்பிடலாம். தாம்பத்திய உறவுக்கும் இதற்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. தாம்பத்தியக் குறைபாடுகள் இருந்தாலும் அவை யோகப்பயிற்சிகளால் தீர்ந்து நல்ல மனநிறைவு உண்டாகும். ஆகவே பொய்யான வதந்திகளுக்கு இடம்தராமல் நீங்கள் யோகப்பயிற்சிகளைத் தொடங்கலாம். அனுபவத்தில் அந்த அற்புத நலத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.

**
யோகாசனங்கள் என்ன செய்கின்றன:

யோகாசனங்கள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவை. ஆண், பெண் பேதமில்லாமல் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசனங்களை எவரும் பயிலலாம். ஒரு குழந்தையைத் தட்டிக் கொடுப்பதுபோல இவை மனித உள்ளுறுப்புக்களிலும் வெளிஉறுப்புக்களிலும் இயங்கி நமது நலத்தை காக்கக்கூடியவை. யோகாசனங்கள் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் வேண்டிய இரத்த ஓட்டத்தையும் பிராணவாயவையும் எடுத்துச் செல்ல உதவுகின்றன.


நமது உடம்புக்குள்ளே அமைந்துள்ள ஜீவாதாரமான சுரப்பிகள் சீராக இயங்கவும், அவை நீண்டநாட்கள் ஆரோக்கியத்தோடு உழைக்கவும் ஆசனப்பயிற்சி வகைசெய்கின்றது. தேவையில்லாத ஊளைச்சதைகள் கரைந்து உடம்பு அளவான தோற்றப் பொலிவோடு விளங்கும். நீடித்த இளமையைத் தரும். இதனால் முதுமை தடுக்கப்படுகிறது.


உடல்காந்தம், உடல்மின்சாரம் ஆகிய இரண்டையும் பேணிக்காப்பதோடு அவற்றை மேம்படுத்துகிறது. மூளைக்கு வேண்டியளவு இரத்த ஓட்டமும், பிராணவாயுவும் கிட்டுவதால் மனப்பதட்டம், எதிர்வினை நினைவுகள், தீயபழக்கங்கள், கோபம், பொறாமை, துர்சிந்தனை ஆகியன தொலைந்து நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள், நல்லபண்புகள் ஆகியவற்றோடு அசைக்கமுடியாத சுயகட்டுப்பாட்டையும் தருகிறது. அமைதியும் நிம்மதியும் மனதில் நிலைத்துpருக்கச் செய்கிறது.

இதற்குமேல் மனிதனுக்கு என்ன வேண்டும்?

இதற்காக நாம் தினசரி இருபது நிமிடமோ, அரைமணி நேரமோ ஒதுக்கிக் கொண்டு பயிற்சிகளை ஒழுங்காக செய்துவிட்டால் போதும். நமக்கு வேண்டிய நலத்தை அவை பார்த்துக்கொள்ளும். யோகாசனங்களை காலை ஐந்துமணி முதல் எட்டுமணிக்குள்ளாகவும், அதேபோல் மாலை ஐந்துமணி முதல் இரவு எட்டுமணிக்குள்ளாகவும் இரண்டு வேளையும் வயிறு காலியாக இருக்கும்போது செய்யவேண்டும்.


இரண்டு வேளையும் செய்ய முடியாதவர்கள் ஏதேனும் ஒருவேளை செய்தாலும்போதும். இதற்காக உணவுக்கட்டுப்பாடுகளோ, தாம்பத்திய உறவுக்கட்டுப்பாடுகளோ இல்லை. அதிகளவு சர்க்கரை உள்ள சர்க்கரை நோயாளிகள் மட்டும் பயிற்சிகள் முழுவதும் கைவருகின்றவரை கொஞ்சம் உணவுக் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது. சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் அல்லது இன்சுலின் போட்டுக் கொள்ளுபவர்களும் கொஞ்சக்காலம் முழுப்பயிற்சி முறையையும் பின்பற்றிச் செய்கின்றவரை சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம் பிறகு மருந்து மாத்திரைகளைக் கைவிட்டுவிடலாமா அல்லது அவற்றைக் குறைத்துக் கொள்ளலாமா என்பதை சிறுநீரிலோ இரத்தத்திலோ சர்க்கரையின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைச் சோதித்து அறிந்த கொள்ளலாம். ஆகையால் பயிற்சியாளருக்கு இதைப்பற்றிய துன்பம் இல்லை.


குளித்துவிட்டுத்தான் ஆசனங்கள் செய்யவேண்டும் என்பதில்லை. வசதிப்படி செய்யலாம். குளித்தபின்பு ஆசனங்கள் செய்வதானால் பத்தநிமிடமும், ஆசனங்கள் செய்தபின்னர் குளிக்க நேருமானால் இருபது நிமிடமும் இடைவெளி தரவும். யோகாசனங்களைச் செய்துமுடித்த உடனே அப்படியே போய்ச் சு+டாகவோ குளிர்ச்சியாகவோ சாப்பிட வேண்டாம்.


ஆசனப்பயிற்சிகளை முடித்துக் கொண்டு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இடைவெளி கொடுத்து அதன்பின்னர் தண்ணீரோ, காப்பி, தேநீர் போன்ற திரவ உணவுகளோ அல்லது சாப்பாடோ சாப்பிடலாம். பெண்கள் மாதவிலக்கின்போதும் கருவுற்றுள்ளபோதும் ஆசனங்கள் செய்யக்கூடாது. நீங்கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் இவ்வளவுதான். இனி ஆசனப்பயிற்சிகளைத் தொடங்கலாம். உங்களுக்கு மங்களம் உண்டாக வாழ்த்துக்கள்.

***

யோகாசனங்களை இனி வரும் பதிவில் பார்ப்போம் :)


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "